Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் சிங்கள இணையத்தளம் ஒன்றில் போடபட்டிரிந்தது

சிங்களவன் எம்மை அழித்துகொண்டிருகிறான் ஆனால்

இவர் சிங்கள தமிழ் ஒற்றுமை பற்றி படிகொண்டிருக்கிறார்கள்

http://www.lankanewspapers.com/news%5C2008...e_headline.html

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
:lol:அதானே உவை ஒற்றுமை பற்றி பாடினால் போல, நாங்க ஒற்றுமையாய் போயிடுவமா என்ன?? அறிக்கை விட்டு அசத்திடுவோமில்ல :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

அரசியல் ரீதியாக சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகள் கெட்டனதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

அரசியல் ரீதியாக சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகள் கெட்டனதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol:

நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்த பாடலை வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்

ஆனால் புலிகள் தான் இதை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பரப்புரைக்கு இந்த பாடலை

பயன்படுத்தலாம்

அதுவும் ஒரு பிரபல தமிழ் பாடகர் சேர்ந்து பாடுவது மிகவும் வருத்தத்துக்குரியது

இதை புரியாத யாழ் கள அங்கத்தவர்கள் கூறும் பதில்கள் மிகவும் வருத்தத்துக்குரியது

சில நலன்களுக்காக எமது தமிழ் இனத்தை அளிக்க முயலும் இப்படி பட்ட தேச துரோகிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே என் ஆசை

Link to comment
Share on other sites

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

வசம்பு அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

என்ன வசம்பு மனோகரன் உமக்கு வேண்டியவர் போல கிடக்கு

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் அந்த சிங்கள இணைய பக்கம் போன பிறகு தான், இந்த பாடல் பற்றி அவர்களின் கருத்துக்களை எழுதி இருந்தார்கள் அதில் இருந்தே இது ஒரு ஒற்றுமையாக நாம் வாழலாம். என்பது பற்றி அறிந்துகொண்டேன்

சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழலாம் போல காட்டி கொள்ள ஓட்டுகுளுகளும் முனைகின்றன. கருணா MP ஆகியது, மகிந்த தமிழ் கொண்டண்டங்களுக்கு செல்வது, டக்லஸ் தமிழ் பெண்களை மகிந்தவின் கொண்டண்டங்களுக்கு ஆடவிடுவது.

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

பாடலின் தமிழாக்கம்

ருகுணு - யாழ்

மனோ:

துரை நாங்க இருவரும் சந்திக்கிறம்

வெகு காலத்துக்கு பின்னே

நாடும் ஊரும் மாறிப்போச்சு

புதுமை அய்சே

டெஸ்மன்:

முன்னபோல பார்க்க முடியாது போனாலும்

இந்த வயசிலே

பழைய நட்பு மாறாது ஒரு போதுமே

மனோ:

டெஸ்மன் அன்று யாழ்பாணம் வந்து

பாடினாய் தமிழில் சூடாமாணிக்கே

டெஸ்மன்

அதைக் கேட்டு ஆடினாங்க உங்க ஆட்கள் அப்பப்பா

நினைத்தாலே பரவசமடா மனதுக்குள்ளே...

மனோ:

நம்ம சந்திப்பை

பகிர்ந்து கொள்வோம் மனமகிழ்வோடே

வாயும் வயிறும் நிறைய சாப்பிடணும் - இந்தா

நம்ம தோசை

டெஸ்மன்

எங்க ஆக்கள் திட்டினாலும் பகிரங்கமா மனோ

திருட்டுதனமா முழுங்குறாங்கடா

தோசை வடையெல்லாம்.....

மனோ:

சின்ன வயசில

அம்மா தந்த பால்

அது தமிழா - சிங்களமா என யாருக்கும் புரியல்லடா

என்ன சரியா?

டெஸ்மன்

உன் வாயில போடணும்டா சக்கரை - இருந்தாலும்

டெஸட்டா எடுத்துக்கடா நம்ம தயிர்

டெஸ்மன்

அமைதிப் பேச்சு தொடங்கினாலும் பெரும் வீராப்பாய்

இன்னும் கேட்குதடா அந்த யுத்த சத்தம் பெரு நெருப்பாய்

எப்படா நிற்கும் இந்த விசர் யுத்தம்?

மனோ:

ஐயோ...அவங்க எல்லாம் கயிறுழுக்கிறாங்க வெடி ஓசைக்குள்ளே

விலை வாசி ஏறும்போதுதான் இங்கு தொடங்கும் யுத்தம்

டெஸ்மன்

அடிமையாய் இருந்தாலும்

வெள்ளையனுக்கு கீழே

நாங்க

சந்தோசமாய் இருந்தோம் ஐயா

அந்த சின்ன வயசிலே

யார் யார் குத்தி குதறினாலும்

ஒவ்வொரு தாளத்தில்

சகோதரராக வாழ்வமடா

வாழும் குறுகிய காலத்தில்....

டெஸ்மன் குறித்து

http://en.wikipedia.org/wiki/Desmond_de_Silva

ஆங்கிலம் கலந்த பாடல் ஒன்று

http://www.youtube.com/watch?v=NWpRDW0KqWs...feature=related

Link to comment
Share on other sites

என்ன வசம்பு மனோகரன் உமக்கு வேண்டியவர் போல கிடக்கு

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் அந்த சிங்கள இணைய பக்கம் போன பிறகு தான், இந்த பாடல் பற்றி அவர்களின் கருத்துக்களை எழுதி இருந்தார்கள் அதில் இருந்தே இது ஒரு ஒற்றுமையாக நாம் வாழலாம். என்பது பற்றி அறிந்துகொண்டேன்

சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழலாம் போல காட்டி கொள்ள ஓட்டுகுளுகளும் முனைகின்றன. கருணா MP ஆகியது, மகிந்த தமிழ் கொண்டண்டங்களுக்கு செல்வது, டக்லஸ் தமிழ் பெண்களை மகிந்தவின் கொண்டண்டங்களுக்கு ஆடவிடுவது.

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

எப்படீங்கண்ணா இப்படி?? நீங்களும் உட்காந்து யோசிப்பீங்களோ?? :lol:

எனக்கு உங்க அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியுமுங்கோ!! நீங்கள் இணைத்த இணைப்பில் மற்றவர்கள் எழுதிய கருத்தையும் பார்த்தேனுங்க. அதிலை சில கருத்துக்கள் (உங்களைப் போல் அங்கும் சிலர் இருக்கலாம் தானே) தவிர மற்றவை நல்லபடியாகத் தானே இருக்குதுங்க. அங்கே சில தமிழர்களும் கருத்தெழுதி இருக்காங்க பார்த்தீங்களா??

ஏனுங்கண்ணா இப்ப எனக்கொரு சந்தேகம். அஜீவன் சிங்களப் பாடலை மொழி பெயர்த்து தமிழில் தந்துள்ளார். ஒருவேளை அஜீவனுக்கு டெஸ்மன் வேண்டப்பட்டவராய் இருப்பாரோ?? :lol:

அட ...சீ.... உங்கள் பதிலுகளை பார்த்துப் பார்த்து எனக்கும் உங்களைப் போலவே யோசிக்கத் தோணுது. :):unsure:

Link to comment
Share on other sites

மனிதனாக இருந்தால் என்றோ ஒருநாள்

இன்னொரு மனிதனை தேவைப்படும் வசம்பு.

அன்றைக்கு இந்தியாவை

எப்படியெல்லாம் வசை பாடினார்கள்?

இன்று நிலை.............?

அதுபோல

மாற்றங்கள் என்பதும்

தேவைகள் என்பதும்

எந்நேரமும் மாறலாம்.

சிங்களவர்கள் அனைவரும்

தமிழருக்கு எதிரானவர்கள் அல்ல.

பல சிங்கள திரைப்பட இயக்குனர்களும்

கலைஞர்களும்

தமிழர் சார்பானவர்கள் என

இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்

என்பதை பலரும் அறிவர்.

காலம்தான் பதில் சொல்ல வேணும். :lol:

Link to comment
Share on other sites

வசம்பு அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

நன்றி சோழியான் உங்கள் கருத்திற்கு. நீங்களும் ஒரு கலைஞன் என்ற ரீதியில் ஏனைய கலைஞர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.

மனிதனாக இருந்தால் என்றோ ஒருநாள்

இன்னொரு மனிதனை தேவைப்படும் வசம்பு...............

நன்றி அஜீவன்

தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் டெஸ்மனின் பாடல் இணைப்பிற்கும், உங்கள் கருத்திற்கும். அதே பக்கத்தில் பல வருடங்களின் பின் டெஸ்மனின் சூடமானிக் பாடலும் கேட்டு இரசிக்க முடிந்தது

http://www.youtube.com/watch?v=LB82EksWZzI...feature=related

Link to comment
Share on other sites

இதை எல்லாம் பெரிதாக எடுக்க கூடாது

தமிழ்நாட்டில புல்களின் பெயரால் ஈழத்தமிழரை அழிப்பதை கண்டும் காண்மல் இஒருக்கும் ஜெயலலிதத புலிகளள அழிக்க வேண்டும் என்று காட்டு கத்துறால் ஆனால் நாங்fகள் புலத்தில தமிழ்த் தேசியயாஅதரவு தொல்லைக்காட்சி என்று ஆரம்பித்து ஜெயலலிதாவின் ஜெயா ரிவில இருந்து நிகழ்ச்சி போடுறாம் .......

அப்போ தேவைக்கு ஏற்ற மாதிரி தான் எல்லாம்?

அஜீத் வரவில்லை அர்ஜீன் வரவில்லை என்றி புறக்கணிப்பு ஆனால் ஜெயா செய்யுர கொடுமைக்கு அவரோட ரிவி நிகழ்ச்சி தேவையா??

புது விளக்கம் வேண்டாம் அஜீத் எங்கட காசில படம் ஓட்டுரார்ன் எறு

இன்றைக்கு மனோகரனை திட்டுவது என்றால் என்றைக்கும் முரளியை மன்னிக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

இதை எல்லாம் பெரிதாக எடுக்க கூடாது

தமிழ்நாட்டில புல்களின் பெயரால் ஈழத்தமிழரை அழிப்பதை கண்டும் காண்மல் இஒருக்கும் ஜெயலலிதத புலிகளள அழிக்க வேண்டும் என்று காட்டு கத்துறால் ஆனால் நாங்fகள் புலத்தில தமிழ்த் தேசியயாஅதரவு தொல்லைக்காட்சி என்று ஆரம்பித்து ஜெயலலிதாவின் ஜெயா ரிவில இருந்து நிகழ்ச்சி போடுறாம் .......

அப்போ தேவைக்கு ஏற்ற மாதிரி தான் எல்லாம்?

அஜீத் வரவில்லை அர்ஜீன் வரவில்லை என்றி புறக்கணிப்பு ஆனால் ஜெயா செய்யுர கொடுமைக்கு அவரோட ரிவி நிகழ்ச்சி தேவையா??

புது விளக்கம் வேண்டாம் அஜீத் எங்கட காசில படம் ஓட்டுரார்ன் எறு

இன்றைக்கு மனோகரனை திட்டுவது என்றால் என்றைக்கும் முரளியை மன்னிக்கவும் முடியாது.

சசி

ஜெயலலிதாவின் இவ்வளவு காட்டமான அறிக்கைகளின் பின்னும் TRO ஜெயா ரீவியுடன் கைகோர்த்து "ராகமாலிகா"வை ஐரோப்பாவில் நடாத்த முடியுமென்றால், ஜெயா ரீவியின் நிகழ்ச்சிகளை GTV ஒளிபரப்புவதில் என்ன தவறு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் மொழிபெயர்ப்புக்கு நன்றி அஜீவன் அண்ணா.

Link to comment
Share on other sites

பாவம் ஜெயலலிதா

தன் வாயால் தன் ஆதரவாளர்களையே

உள்ளே தள்ளிவிட்டார் :lol:

கலைஞர் அரசியல் ஞானிதான்.

சிலரை தள்ள முடியாது

அது அந்த இனத்தின் பலம்.

அது அகன்ற தமிழகம் என்பதைவிட

பாரிய விளைவுகளை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

நானும் எத்தனையோ சிங்கள களங்களை வாசிச்சிருக்கிறன், அதில எழுதிற ஆக்கள மட்டும் வச்சுக் கொண்டு எல்லாரையும் எப்பிடி எடை போட முடியும்? நீங்கள் எதோ ஒரு வெளிநாட்டில இருந்து கொண்டு ஆளையாள் சுட்டுத் தள்ளுங்கோ எண்டு வீரம் பேசுவியல், கொழும்பில, ஊரில இருக்கிற எங்கட சனம் தான் பாவம்... :unsure: தெரியாமல் தான் கேக்கிறன் சீலன் அண்ணை, நீங்கள் மனோகரன் மாதிரி இருந்தால் பாடியிருப்பீங்களோ? :) அப்பிடி பாடுற ஒரு பெடியனையும் எனக்குத் தெரியும்.

முடிவா இப்ப என செய்யோணும், மனோகரனையும் புறக்கணிக்கோணுமா? :lol: ஏற்கனவே கனபேரை புறக்கணிச்சுப்போட்டம் அதுதான் கேக்கிறன்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கிற அனுபவத்தை வைத்துக் கொண்டு தான் சிங்கள தமிழ் ஒற்றுமையைப் பார்க்கிறார்கள். அந்தக் குறுக்கு வெட்டுத் தான் இங்கே இருக்கிற கருத்துகளிலும் தெரிகிறது. ஆனால் சீலன் சொன்ன கருத்து நியாயமானது. பல இடங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரே மாதிரித் தான் இருக்கிறது. ஒரு அமைப்பில், அரசியல் நோக்கத்திற்கு அப்பாற் பட்டு சிங்களவர்களுடன் உறுப்பினராயிருந்தால், திடீரென்று "புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலைக் கண்டிக்கிறோம்" என்று சிங்கள உறுப்பினர்கள் அறிக்கை விடுவார்கள். புலிகளைப் பயங்கர வாதிகளாக நோக்காத தமிழனும் அந்த அறிக்கையில் பங்கெடுத்துக் கொண்டதாக வெளியே தெரிகிறது, இன்றைக்குப் புலிகளுக்கு உள்ள பெரிய தடையே அவர்கள் நூறு வீதமான, ஏன் பெரும்பான்மையான தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என்று தமிழின எதிரிகள் செய்யும் பிரச்சாரம் தான். அந்தப் பிரச்சாரத்திற்கு உடந்தையாக நாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். எல்லாச் சிங்களவர்களும் இனவாதிகள் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதனால் ஏதாவது நன்மை கஷ்டப் படும் தமிழனுக்குக் கிடைத்ததா என்பது தான் முக்கியமான கேள்வி. தமிழர் கஷ்டம் புரிந்த சிங்களவர்கள் குறிப்பிடத்தக்களவு இலங்கையிலோ வெளிநாடுகளிலோ இருந்தால் எப்படி 60 வீத அல்லது 80 வீத சிங்களவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு என்று கருத்துக் கணிப்புச் சொல்கிறது என்பதும் ஒரு பெரிய கேள்வி தான். அஜீவனுக்கும் வசம்புவுக்கும்: பல சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர், ஆனால் செஞ்சோலையில் சிறிலங்கா குண்டு போட்ட போது இறந்தது யாவரும் புலிப் பயங்கர வாதிகள் என்று நம்பும் சிங்களவர்கள் தான் இந்த இனவாதமற்ற சிங்களவர்கள். இவர்களோடு ஒற்றுமை என்றால் நாமும் இது மாதிரியான கருத்துக்களை ஆதரித்த மாதிரித் தான் ஆகும்.

Link to comment
Share on other sites

சீலன் கேட்ட கேள்வியில ஓரளவு நியாயம் இருக்கிது. ஊரில சனத்தை சாக்காட்டிக்கொண்டு சிங்களவரும், தமிழரும் ஒற்றுமைய இருக்கிறதா காட்டுற பார்த்தால் எங்களுக்கு பத்தி எரியும்தான். பாதுகாப்பு இணையத்தளத்திலயும் உப்பிடி தமிழ் - சிங்கள ஒற்றுமை பற்றி ஏதோ ஒண்டு போட்டு இருக்கிது.

ஆனால்.. அடிப்படையில ஒரு விசயம் என்ன எண்டால் விடுதலைப் புலிகளே சொல்ல் இருக்கிறார்கள் இந்த தாயக போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று. அதாவது சிங்கள-தமிழ ஒற்றுமை பற்றிய இந்தப்பாடல் பிழையானது எண்டு விடுதலைப் புலிகள் சொல்லுவார்களா என்பதே சந்தேகம்.

ஊரில பிரச்சனைகள் துவங்க முன்பே பல்லாயிரம் தமிழ் சனங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கு தவிர்ந்த இதர பகுதிகளில வாழ்ந்து வருகிதுகள். இவர்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கை இல்லையா? இவர்களிற்கு எப்போதும் சிங்கள இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிது. ஏன் எண்டால் அவர்கள் தனித்தமிழ் பகுதியில இல்ல.

அப்படி எண்டால் இவர்கள் சிங்களவர்களுடன் எப்படி வாழவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்? குறிப்பிட்ட பாடகர் மனோகரன் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சிலது இவர் பிறந்து வளந்தது எல்லாமே கொழும்பிலையோ தெரியாது. அப்பிடி எண்டால் உதுக்கு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்?

தமிழர் எண்டால் அவர்கள் தாயகபோராட்டம் சம்மந்தமாக ஆதரவு தரவேண்டும், தாயக போராட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பாப்பது தவறானது. நாங்கள் அப்படி இருக்கலாம். ஏன் எண்டால் நாங்கள் சிறீ லங்கா இனவாத அரசுமூலம் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆனால் அப்படியான அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சது எண்டு சொல்லிறதுக்கு இல்ல.

நாங்கள் செய்யக்கூடியது தாயக மக்கள் படும் துன்பங்களை பிரச்சாரம் செய்வது, அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எங்களால முடியுமான எதையாவது செய்வது ஒழிய... இப்பிடி அவர் அப்பிடி பாடி இருக்ககூடாது எண்டு சொல்லிறது நியாயபூர்வமானது இல்ல. சரி ஒரு காலத்தில தமிழீழம் கிடைக்கிது எண்டு வையுங்கோ. அதுக்கு பிறகும் தமிழீழம் அல்லாத பகுதிகளில தமிழர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அப்பிடி எண்டால் அந்த நேரத்தில தமிழர்கள் எப்பிடி இருக்கவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கீறீங்கள்?

நாங்கள் எங்கட வசதி, சூழ்நிலைகள் பற்றி மாத்திரம் கவலைப்படுறம். ஆனால்.. சிங்கள பிரதேசங்களில வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சிங்களவர்களுடன் சினேகபூர்வமான உறவை வச்சு இருக்காட்டிக்கு வீட்டுக்கு வெளியில ஒரு அடி எடுத்தும் வைக்க ஏலாது. உந்தப் பாட்டுக்கள் எமக்கு பிழையாக தெரியலாம். ஆனால் சிங்கள இன மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்கின்ற, வாழப்போகின்ற தமிழ் மக்களுக்கு இது தேவையான ஒரு பாடல்.

அரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் பாரியார் ஒரு சிங்களவர் என்று எங்கையோ வாசிச்சதாக ஞாபகம். அப்பிடி எண்டால் அவர்கள் எப்பிடி வாழவேண்டும் எண்டு நினைக்கீறீங்கள்? சிங்களத்தில கதைக்ககூடாதா?

சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.

Link to comment
Share on other sites

முன்பு 'சாது ஜன ராவிய' எனும் சிங்கள பாடகர் குழு தமிழ் - சிங்கள ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றி சிங்கள கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது. 'கப்புகே', நந்த மாலினி போன்ற பெரும் புகழ் கொண்டவர்கள் கூட அதில் பாடல்கள் பாடி வந்தனர். சிகல உறுமயவின்(Sihala Urumaya) உண்மையான தீவிர இராணுவ முகம் கொண்ட அமைப்பான 'சிங்கள வீர விதான' (Sinhala Veera Vithana)அமைப்பால் நையப்புடைக்கப் பட்டும் இருந்தனர்.

அதே போல, எப்பவுமே தமிழர்களின் பால் நிற்கும் சினிமா கலைஞர் பிரசன்ன விதானகே (புர கந்த களுவற (Death on a Full Moon Day) எடுத்தவர்), ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய (நிமலராஜன் கொலையில் இருந்து, சிவராம் கொலை வரை ஒவ்வொரு தமிழ் ஊடகவியளர் படுகொலைகளையும் உலக அரங்குக்கு கொண்டு போனவர், புலிகளின் குரல் நிலையம் மீதான தாக்குதலை எதிர்த்த ஒரே ஒரு சிங்கள ஊடகவியலாளர்) போன்றவர்களும் உள்ளனர்

ஆனால், இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்பது தான் யதார்த்தம். பெளத்த சிங்கள கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட சிங்கள அதிகார மையமும், அதனை வழிமொழியும் அதன் கலைவடிவங்களும், அரசு இயந்திரமும், பெரும்பான்மை ஊடகங்களும் இவர்களை கோமாளிகள் போல ஆக்கிவிட்டன.

Link to comment
Share on other sites

முன்பு 'சாது ஜன ராவிய' எனும் சிங்கள பாடகர் குழு தமிழ் - சிங்கள ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றி சிங்கள கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது. 'கப்புகே', நந்த மாலினி போன்ற பெரும் புகழ் கொண்டவர்கள் கூட அதில் பாடல்கள் பாடி வந்தனர். சிகல உறுமயவின்(Sihala Urumaya) உண்மையான தீவிர இராணுவ முகம் கொண்ட அமைப்பான 'சிங்கள வீர விதான' (Sinhala Veera Vithana)அமைப்பால் நையப்புடைக்கப் பட்டும் இருந்தனர்.

அதே போல, எப்பவுமே தமிழர்களின் பால் நிற்கும் சினிமா கலைஞர் பிரசன்ன விதானகே (புர கந்த களுவற (Death on a Full Moon Day) எடுத்தவர்), ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய (நிமலராஜன் கொலையில் இருந்து, சிவராம் கொலை வரை ஒவ்வொரு தமிழ் ஊடகவியளர் படுகொலைகளையும் உலக அரங்குக்கு கொண்டு போனவர், புலிகளின் குரல் நிலையம் மீதான தாக்குதலை எதிர்த்த ஒரே ஒரு சிங்கள ஊடகவியலாளர்) போன்றவர்களும் உள்ளனர்

ஆனால், இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்பது தான் யதார்த்தம். பெளத்த சிங்கள கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட சிங்கள அதிகார மையமும், அதனை வழிமொழியும் அதன் கலைவடிவங்களும், அரசு இயந்திரமும், பெரும்பான்மை ஊடகங்களும் இவர்களை கோமாளிகள் போல ஆக்கிவிட்டன.

இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்றால், இப்படியான பாடல்கள் பற்றிய கருத்துக்களை சிங்கள மக்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். சிங்கள அரசுகளோ அல்லது இனவாத சிங்களக் கட்சிகளோ எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை கோமளிகளாக்கலாம். அதற்காக நாங்களும் அவர்களை கோமாளிகளாக்கி, அவர்களோடு இணைந்து குரல் கொடுக்கும் தமிழர்களையும் துரோகிகள் என்று சிறப்பித்து கொடி பிடித்தால், அந்த இனவாதச் சிங்களவர்களை விட கேவலமானவர்களாக நம்மை அடையாளப் படுத்துகின்றோம் என்பது தான் உண்மை.

Link to comment
Share on other sites

இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்றால், இப்படியான பாடல்கள் பற்றிய கருத்துக்களை சிங்கள மக்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். சிங்கள அரசுகளோ அல்லது இனவாத சிங்களக் கட்சிகளோ எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை கோமளிகளாக்கலாம். அதற்காக நாங்களும் அவர்களை கோமாளிகளாக்கி, அவர்களோடு இணைந்து குரல் கொடுக்கும் தமிழர்களையும் துரோகிகள் என்று சிறப்பித்து கொடி பிடித்தால், அந்த இனவாதச் சிங்களவர்களை விட கேவலமானவர்களாக நம்மை அடையாளப் படுத்துகின்றோம் என்பது தான் உண்மை.

மன்னிக்கவும்

...நான் எங்கே அப்படி கூறினேன்? எவரையும் இங்கு நான் துரோகி என்று எப்போதும் கூறவில்லை/கூறுவதும் இல்லை.

உண்மையாக தமிழ் மக்கள் வாழ்வை விரும்பும் சிங்கள கலைஞர்களை சிங்கள பேரினவாதம் இன்று கோமாளிகளாகவே பெரும்பான்மை சிங்கள் மக்கள் முன்பாக காட்டி விட்டிருகின்றது. இது கசப்பான உண்மை. இன்று இவர்கள் எந்த குரலும் எழுப்ப முடியாத நிலையில் தான் உள்ளனர்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்

...நான் எங்கே அப்படி கூறினேன்? எவரையும் இங்கு நான் துரோகி என்று எப்போதும் கூறவில்லை/கூறுவதும் இல்லை.

உண்மையாக தமிழ் மக்கள் வாழ்வை விரும்பும் சிங்கள கலைஞர்களை சிங்கள பேரினவாதம் இன்று கோமாளிகளாகவே பெரும்பான்மை சிங்கள் மக்கள் முன்பாக காட்டி விட்டிருகின்றது. இது கசப்பான உண்மை. இன்று இவர்கள் எந்த குரலும் எழுப்ப முடியாத நிலையில் தான் உள்ளனர்.

எப்போதும் நீங்கள் அவசரப்பட்டு விடுகின்றீர்கள். நீங்கள் சொன்னதாக எங்காவது நான் குறிப்பிட்டுள்ளேனா?? உங்கள் கருத்தையும் இணைத்துத் தான் பதிலளித்துள்ளேன். அதனால் பார்பவர்களும் அப்படி நீங்கள் சொன்னதாக நினைக்க மாட்டார்கள். ஆனால் எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை சிங்கள அரசும் இனவாத சிங்களக் கட்சிகளும் கோமாளிகள் ஆக்கும் போது, நாமும் அவ்வாறு செய்வது தவறென்பதை விளக்கவே நான் முனைந்தேன். அதுபோல் இந்தப் பக்கத்தை இணைத்தவர் எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களோடு சேரும் தமிழர்களும் துரோகிகள் என்று குறிப்பிட்டிருந்ததையே பதில்க் கருத்தில் சுட்டிக் காட்டினேன். மற்றும் படி நீங்கள் கூட இந்தச் செய்தியை இணைத்தவரின் கருத்திற்கு சரியான பதிலை தரவுமில்லை.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஓற்றுமை

புலிகள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகள் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைத் தமிழர்களுக்கும் புலிகளை அழிக்க வேண்டும் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைச் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம் விஜி!

Link to comment
Share on other sites

என்ன ஓற்றுமை

புலிகள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகள் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைத் தமிழர்களுக்கும் புலிகளை அழிக்க வேண்டும் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைச் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம் விஜி!

ஓ...ஓ....ஓ..... அதனால்த் தான் அது ற்றுமை ஆனதோ?? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.