Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் தமிழர் சும்மாதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் எண்டுறவை,ஆனா சிங்கள்வன் அப்பிடியில்லை எண்டு சொல்லவாறியளோ,அதுவும் சரிதான் அடிக்கிற கைதான் அணைக்கும் ஆனாப்பிறகு வலிக்குது அழுதிடுவன் எண்டெல்லாம் சொல்லக்கூடாது!

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

யாரையாவது அழவைக்கிறதில குறியாயிருங்க. அதுதான் நம் இனமே அழுதே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( இந்திய தமிழருக்கு இந்த கொடுமை ஏற்பட முக்கிய காரணமானவர்கள் யாழ்பாண தமிழர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை)

இதில் தாங்கள் கூறுவது இனவாத கருத்து தானே.அது என்ன யாழ்பாண தமிழர் அப்படி ஒரு பிரிவை நீங்கள் தான் உருவாக்கிறீர்கள்..இதை விட வேறு இனவாத (பிரதேசவாத) கருத்து வேண்டுமோ.? இதுவும் வெட்கபட வேண்டிய நிலை தான்.

இலங்கை அரசு பிறப்பு சான்றிதழை இலங்கை தமிழர்,இந்திய தமிழர்,மலே,இலங்கை சோனகர்,இந்திய சோனகர் என்று வேறுபடுத்தி காட்டியதன் காரணம் என்ன.?.சிங்களவர்களை மட்டும் சிங்களவர் என்று போட்டிருக்கிறார்கள்.மேலும் இந்திய தமிழர் இலங்கை தமிழர் என்று பிரித்ததிற்கு யாழ்பாண தமிழர் காரணம் என்று குறிபிட்டீருந்தீர்கள் இலங்கை சோனகர்,இந்திய சோனகர்,மலே என்று பிரித்து குறிப்பிடுவதிற்கு யார் காரணம் என்று தங்களாள் கூற முடியுமா?

தமிழ் பேசும் சோனகரையே சிங்களமாக்கும்

இனவாதக் கருத்து தங்களது எழுத்துகளில் இருப்பது கொடுமை.

அப்படி நினைப்பது அல்லது எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.

"சோனகர்" சிங்கள சோனகராக வருவதை பற்றி எழுதியதில் என்ன இனவதா கருத்து இருக்கிறது? இனி வரும் காலங்களிள் சிங்கள சோனகர் உருவாகல் சந்தர்ப்பம் இருக்கிறது என்று தான் எழுதி இருந்தேன்.

தெற்காசியாவில் சகல (தேசிய இனங்கள்) மொழி பேசுபவர்களிள் சோனகர்கள் உண்டு அதாவது மலையாளம் - கன்னடம் -துளு - மராட்டி - குஜாராத்தி - வங்காள என்று பல மொழி பேசுபவர் மத்தியில் சோனகர் உண்டு.ஆனால் சிங்கள மொழி பேசுபவர் மட்டும் இல்லை.இனி மேல் அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட சோனகர்கள் உருவாக சந்தர்ப்பம் உண்டு.

சிங்கள சோனகர் உருவாகாமல் விட்டதிற்கு காரணம் இதுவாக இருந்திருக்கலாம்.அந்தியர் (போர்துகேயர்,ஒல்லாந்தர்,ஆங்க

Link to comment
Share on other sites

புத்தன் தலையிடியென்றால் தைலம் தேயும். எங்களை விசராக்காதீர். :)

Link to comment
Share on other sites

வசபண்ணா..ணா..!!. :D

கருணா அங்கிள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தன் போக்கில் மாறவில்லை எண்டு குறிபிட்டிருந்தீர்கள்..ள் எனக்கு வெளங்கவில்லை எத்தகைய போக்கில் இருந்து மாறவில்லை எண்டு ஒருக்கா தெளிவுபடுத்துறீங்களோ..ளோ..??. :)

இன்றைய ரீதியில் அவர் சிங்கள பேரினவாதிகள் தான் கதி என இருக்கிறார்..ர் அப்படி பட்ட அவரின் போக்கு மாறவில்லை எண்டு கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது எண்டு சொல்லாம்..ம். :D

மற்றது..து..!!

அவரை தூற்றுவதால்..ல் எமக்கு எத்தகைய பிரயோசனமும் இல்லை..லை மாறாக அவரை "ஸ்டார்" ஆக்கிறோம்..ம்..(அது எங்கடையளுக்கு வெளங்க வேண்டுமே).. :D

ஜம்மு

உங்களுக்கு வாழைப் பழத்தைத் தந்தால் உரித்துத் சாப்பிடுவியள் என்று நினைச்சன். ஆனால் உரித்துத் தரச் சொல்லி அடம் பிடிக்கிறியள்.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போதும் சரி, தற்போதும் சரி பொதுமக்களைப் பற்றி எந்தவித கவலைகளும் இல்லாது தன் சுயலாபத்தில் தான் கண்ணாயிருந்தார். அப்போதும் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றைச் செய்து கொண்்டுதானிருந்தார். இப்போதும் அவற்றைத் தொடருகின்றார். இதனைத் தான் அவரின் குணம் இன்னும் மாறவில்லை என்பதாகக் குறிப்பிட்டேன். சுயலாபத்தின் அடிப்படையில் செயற்படுபவர் சிங்கள அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லையே:.....

ஆனால் இதே தவறுகளை புலிகள் இயக்கத்திலிருந்து செய்த போது எம்மவர் எவரும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் கருணா அம்மான், கருணா அம்மான் என்று அழைத்து மகிழ்வதிலேயே குறியாகவிருந்தனர். கருணா புலிகளை விட்டு விலகுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிபிசி வானொலி கருணா பற்றிய குற்றச் சாட்டுகள் பற்றி தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, அவர் கருணா தவறொன்றும் செய்யவில்லை. அவர் மீது வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார்களைச் சொல்லுகின்றார்கள் என்றார். அதே தமிழ்ச்செல்வனை கருணா விலகியவுடன் பிபிசி பேட்டி கண்டது, அப்போது தமிழ்ச்செல்வன் கருணா கடந்த 3 வருடங்களாக பல தவவறுகளைச் செய்துள்ளார். அது பற்றி விசாரிக்கவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம். அவர் வரவில்லையென்று கூறினார். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகின்றது??

முதலில் எம்மவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதையும், தூக்கிப் பிடித்தலையும், தூற்றுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்பவனுக்கும் ஒரு பயம் இருக்கும். இல்லையேல் இப்படியே தொடர வேண்டியது தான்.

சிங்கள சோனகர் உருவாகாமல் விட்டதிற்கு காரணம் இதுவாக இருந்திருக்கலாம்.அந்தியர் (போர்துகேயர்,ஒல்லாந்தர்,ஆங்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தலையிடியென்றால் தைலம் தேயும். எங்களை விசராக்காதீர். :D

தலைவா தலையிடி வந்தால் நான் யாழிற்கு தான் வாரனான் தைலம் தெய்பதில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சில சிங்களப் பேரினவாதிகள் போல் நீங்களும் அடுத்தவன் காதிலை நன்றாப் பூ சுற்றுகின்றீர்களா?? எந்தச் சரித்திரத்தில் படித்தீர்கள் போர்த்துகேயர்,ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையின் முன்பு தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்ததென்று. உங்களுக்கென்று தனியாக ஏதாவது சரித்திரம் வைத்திருக்கின்றீர்களா?? போர்த்துகேயர்,ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையின் முன்பு இலங்கை பல இராசதானிகளாகவே இருந்தது. அதில் தமிழர்களின் இராசதானிகளும் அடக்கம். அடுத்தவரின் கருத்துக்களை முறியடிப்பதாக எண்ணிக் கொண்டு தவறான கருத்துக்களை பரப்ப முயலாதீர்கள்.

வசம்பு நான் எழுதியுள்ளேன் இலங்கையில் கரையோரபகுதிகளிளும்,தென்னிந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

deleted

ஹலோ ஜீவன் சார்,

தயவு செய்து கீழே இணைப்பில் உள்ள சிங்கள பாடலுக்கான மொழி பெயர்ப்பை தர முடியுமா?

http://au.youtube.com/watch?v=Cxp5WsuaMUo

என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

உங்கள் ரசிகன் கள்ளச்சாமி

Link to comment
Share on other sites

தலைவா தலையிடி வந்தால் நான் யாழிற்கு தான் வாரனான் தைலம் தெய்பதில்லை. :)

மற்றவர்களுக்கு அந்த தலையிடியை கொடுத்துவிட்டு போறீங்கள்? :D

Link to comment
Share on other sites

வசம்பு நான் எழுதியுள்ளேன் இலங்கையில் கரையோரபகுதிகளிளும்,தென்னிந்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இங்க ஏதோ பாட்டுக்கச்சேரியாக்கும் என்று வந்து பார்த்தால் சரித்திரம் போகுது :D

Link to comment
Share on other sites

சரித்திரம் தெரியாமல் பொய்களை அள்ளி விட போய் , உண்மைகளும் பொய்களாகிவிடும். :D

Link to comment
Share on other sites

deleted

ஹலோ ஜீவன் சார்,

தயவு செய்து கீழே இணைப்பில் உள்ள சிங்கள பாடலுக்கான மொழி பெயர்ப்பை தர முடியுமா?

http://au.youtube.com/watch?v=Cxp5WsuaMUo

என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

உங்கள் ரசிகன் கள்ளச்சாமி

சரணம் சாமியாரே

இங்கே உள்ள இணைப்பில் 4வது பாடல் அது.

பாடகர் ஆத்மா லியனகே

http://www.sinhalajukebox.org/cgi-bin/song...amp;artist=A247

லியதம்பரா என்பது ஒரு மலர்.

லிய என்பது பெண் என அர்த்தப்படும்.

லியதம்பரா

பெண் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட மலர் என சொல்லக்கேட்டதுண்டு.

நான் பார்த்ததில்லை.

ஓக்கிட் மலர் போல் இருக்குமாம்.

எப்போதும் மலர்வதில்லையாம்.

இப்பெயர் சில பெண்களுக்குமுண்டு.

மலர் : தாமரை என அழைப்பது போன்று....... :D

இதோ அதன் கருத்துகள்:

லியதம்பரா மலர் போல நீயா பெண்ணே

என்னை கவர்ந்தாய்

விசம் தரும் மதுத்துளி போல

என் உடலுக்கு நீயா ஓய்வு தந்தாய்

அப்பாவியான என் கண்ணீரைக்கூட

சட்டை செய்யாத - உன்னை

நண்பர்கள் சொல்லியும் கேட்காமல்

பல கோடி கனவுகளோடு

உன்னை எண்ணி வாழ்ந்தேனே

நீ தந்த அன்பு

மரணித்த போதுதானே

நான் உன்னோடு மோதிக் கொண்டேன்

ஒருவர் கெடுதல் செய்தாரேன

மற்றொரு உறவை நாடிச் செல்வது சரிதானா

இதயத்தில் மலர்ந்த உறவை மறந்து - என்னை

வருத்தி விட்டு செல்வதும் முறைதானா

உன் மேல் கொண்ட அன்பினாலேயே

கோபம் கொள்ளும் என் மனம் கூட - உன்னில்

இரங்கம் காட்டவே சொல்கிறதே...

Link to comment
Share on other sites

நான் சந்தித்த பல சிங்களவர்கள் மிகவும் நட்புடன் இருந்திருக்கிறார்கள். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சிங்களவன் தான் மிகவும் துவேசியாக இருந்தான். அவனுக்கு பல உண்மைகள் இராணுவதத்தில் திரித்துக் கூறப்பட்டுள்ளன. சரி அதைவிடுவோம். கஸ்டப்புடுகின்ற எங்களையெல்லாம் ஏமாற்றிப்பிழைப்பவன் எமது தமிழன்தான். நம்பிக்கைத்துரோகி எமது தமிழன்தான்.

Link to comment
Share on other sites

எமது போராட்ட ஆரம்பத்தில் இப்படிப்பட்ட சில தவறான எண்ணங்களால் பலரை பலியெடுத்தார்கள். அதையெல்லாம் நாங்களும் மௌனமாக ஆதரித்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்த பாடலை வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்

ஆனால் புலிகள் தான் இதை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பரப்புரைக்கு இந்த பாடலை

பயன்படுத்தலாம்

அதுவும் ஒரு பிரபல தமிழ் பாடகர் சேர்ந்து பாடுவது மிகவும் வருத்தத்துக்குரியது

இதை புரியாத யாழ் கள அங்கத்தவர்கள் கூறும் பதில்கள் மிகவும் வருத்தத்துக்குரியது

சில நலன்களுக்காக எமது தமிழ் இனத்தை அளிக்க முயலும் இப்படி பட்ட தேச துரோகிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே என் ஆசை

விக்கிரமபாகு கருணாரட்ன, செனிவரட்ன.. போன்றவர்களும் சிங்களவர்கள் தான். நாம் அவர்களை அரவணைக்கவில்லையா. அவர்கள் எம்மை அரவணைக்கவில்லையா. எத்தனையோ சிங்கள நண்பர்கள் எமது போராட்டத்துக்கு உதவவில்லையா. உதவிக் கொண்டும் இருக்கின்றனர் தானே.

நாளை தமிழீழம் மலர்ந்தால் கூட சிங்கள மக்கள் தமிழீழத்தில் சுதந்திரமாக சம உரிமைபெற்று வாழ விரும்பின் நிச்சயம் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படும். தமிழீழ அரசு.. ஒரு இனவாத அரசாக இருக்காது. அதே நேரம் சிங்களப் பேரினவாதத்திற்கு இடமளிப்பதையோ.. அதன் தமிழர் விரோதப் போக்கையோ ஆதரிப்பதாக இதனை அர்த்தப்படுத்தக் கூடாது.

மனோகரன்.. சாதாரண தமிழ் - சிங்கள மக்களிடையேயான புரிந்துணர்வை வளர்க்க நிச்சயம் உதவ வேண்டும். சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாய பூர்வ எதிர்பார்ப்பை தெளிவாக பகையுணர்வை வளர்க்காத வகையில் எடுத்துச் சொல்ல முனைய வேண்டும். அதற்காக அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் தமிழர் விரோத செயற்பாடுகளை மறைக்கும் பிரச்சாரத்துக்கு உதவ முனையக்கூடாது. அது தவறானதே.

எமது தமிழீழம் சிங்கள மக்களுக்கோ அவர்களின் தேச இருப்புக்கோ எதிரானதல்ல. எமக்கு எமது பூர்வீகமும் தேசமும் அதன் இருப்பும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சிங்கள மக்களின் தேசத்தையும் இருப்பையும் நாம் அங்கீகரிக்கவே செய்கிறோம். அதை சிங்கள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் இனவாதிகளின் பேச்சைக் கேட்டு.. இனவாத சிந்தனைக்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதாலும் கூடத்தான் இப்பிரச்சனை எமக்கு ஒரு விடிவைப் பெற்றுத்தராது நீள்கிறது. சிங்கள மக்களின் மனங்களிலும் நல்ல மாறுதல்கள் வர வேண்டும்.

தமிழீழம் உருவானால் கூட எல்லையில் சண்டை போட்டுக் கொண்டு வாழ முடியாது. எல்லோரும் அமைதியாக வாழ வேண்டும். அதற்கு சிங்கள - தமிழ் மக்களிடையே புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம். அதற்கு இரண்டு இன மக்களிடையேயும் உள்ள ஒற்றுமையை காண்பிக்கும் கலை கலாசார பண்பாட்டு அம்சங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

நாளைய தமிழீழம் சிறீலங்காவோடு நட்புரிமை பாராட்டுமே அன்றி ஒருபோதும் பகை பாராட்டாது. அதேவேளை சிங்கள பேரினவாதத்தின் வெறியாட்டத்துக்கு தமிழ் மக்களோ அல்லது எந்த மனிதனோ (சிங்கள மக்கள் உட்பட) பலியாவதை அங்கீகரிக்காது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு

முன்பு கருணாவை கருணா அம்மான், கருணா அம்மான் என்று தூக்கிப் பிடித்தவர்களும் எம்மவர் தான். பின்பு கருணா துரோகி என்று தூற்றித் தெரிபவர்களும் நம்மவர் தான். ஆனால் கருணா அன்றும் சரி இன்றும் சரி என்றும் ஒரே மாதிரித் தான் தன் போக்குகளை மாற்றவில்லை. இடம் மாறியதை வைத்துத் தான் போற்றுதலும், தூற்றுதலும் நடக்கின்றது. கருணாவின் வழமையான குணத்தை வைத்தல்ல.

வசம்பண்ணன்.. போராளியாக இருக்கும் வரை ஒருவருக்கு அதற்குரிய மரியாதை வழங்குவது மக்களின் பெருந்தன்மை. அவரே மக்கள் விரோதியாக மாறும் போது மக்கள் தொடர்ந்தும் அவரைப் போராளி என்று எண்ணிக் கொண்டிருப்பின் அந்த மக்களே முட்டாள்கள். நீங்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். மக்களுக்கு எவரவர் தமக்காகக் கொண்ட கொள்கைக்காக இறுதிவரை தியாக உணர்வு கொண்டு களத்தில் நிற்கின்றனர் என்ற உண்மை தெரியும் வசம்பண்ண. என்ன தான் சொன்னாலும் முன்னர் போராளிகளாக இருந்து பின்னர் மக்கள் விரோத துரோகிகள் ஆனவர்கள்.. துரோகிகள் தான். அதை மக்கள் மறக்கத் தயாரில்லை..! சிங்களவனை மன்னிச்சாலும்.. துரோகிகளை மன்னிக்கவே கூடாது. கூட இருந்து குழிபறித்தது அவர்களே..! சிங்களவனுக்கு உசுப்பேத்தி குளிர்காய்ந்ததும் அவர்களே..! :D

முதலில் எம்மவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதையும், தூக்கிப் பிடித்தலையும், தூற்றுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்பவனுக்கும் ஒரு பயம் இருக்கும். இல்லையேல் இப்படியே தொடர வேண்டியது தான்.

வசம்பண்ணா.. தமிழ்செல்வன் அண்ணா சொன்னதில் தவறில்லை. குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒரு போராளி மீது குற்றம் சுமத்த முடியாது. சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் உண்மைகள் இனங்காணப்பட்ட பின்னரே தமிழ்செல்வன் அண்ணா கூட ஊடகங்களுக்கு இதுதான் உண்மை என்று கூற முடியும். ஆக.. தமிழ்செல்வன் அண்ணா அன்ற சூழலில் அப்படித் தெரிவிக்க வேண்டியது அவசிமான ஒன்றே அது தவறல்ல. அதுதான் இயக்கத்தின் ஒழுங்குவிதிக்கு கட்டுப்பட்ட செயற்பாடு. அவரவர் தன்ர இஸ்டத்துக்கு அறிக்கை விடுறது என்றால்... புளொட்.. ஈபி.. ஈபிடிபி போலத்தான் புலிகள் இயக்கமும்.. கொள்கை தொலைத்து போராட வந்த பெட்டையளோடும்.. சோத்துப் பார்சல்களோடும்.. ஓடி வெளிநாட்டில பதுங்கி இருக்க வேணும்.. மாற்றுக் கருத்தென்று மக்கள் விரோத ஜனநாயகம் பேசிக் கொண்டிருக்க வேணும். உமா மகேஸ்வரன்ர ஆக்கள்.. தாசனும்.. தம்பாவும் யாழ் கோட்டைக்குள் இருந்து படை முன்னேற இவர்கள் யாழ் வைத்திய சாலையில் நின்று தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் கிட்டண்ண வந்துதான்... ஆமியையும் கலைச்சு.. இவையையும் கலைச்சு விட்டது. அப்படிப்பட்ட ஆக்களை எல்லாம்.. மக்கள் மதிப்பினமோ அண்ண..??! :unsure::(

Link to comment
Share on other sites

வசம்பண்ணன்.. போராளியாக இருக்கும் வரை ஒருவருக்கு அதற்குரிய மரியாதை வழங்குவது மக்களின் பெருந்தன்மை. அவரே மக்கள் விரோதியாக மாறும் போது மக்கள் தொடர்ந்தும் அவரைப் போராளி என்று எண்ணிக் கொண்டிருப்பின் அந்த மக்களே முட்டாள்கள். நீங்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். மக்களுக்கு எவரவர் தமக்காகக் கொண்ட கொள்கைக்காக இறுதிவரை தியாக உணர்வு கொண்டு களத்தில் நிற்கின்றனர் என்ற உண்மை தெரியும் வசம்பண்ண. என்ன தான் சொன்னாலும் முன்னர் போராளிகளாக இருந்து பின்னர் மக்கள் விரோத துரோகிகள் ஆனவர்கள்.. துரோகிகள் தான். அதை மக்கள் மறக்கத் தயாரில்லை..! சிங்களவனை மன்னிச்சாலும்.. துரோகிகளை மன்னிக்கவே கூடாது. கூட இருந்து குழிபறித்தது அவர்களே..! சிங்களவனுக்கு உசுப்பேத்தி குளிர்காய்ந்ததும் அவர்களே..! :D

நெடுக்குத் தம்பி

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒரு போராளி, போராளியாக இருக்கும் போது எந்தத் தவறையும் செய்யலாம். ஆனால் அதே தவறை போராளியாக இல்லாமல் இருந்து செய்தால்த் தான் தவறென்பது போல் உள்ளது. கருணாவை போராளியாக மதிக்கவில்லை என்ற அர்த்தத்தில் நான் எழுதவில்லை. கருணா புலிகளிலிருந்த போதும் சரி பின்பும் சரி அவரின் நடத்தைகள் ஒன்றென்பதையே நான் குறிப்பிடுகின்றேன். ஆனால் கருணாவை அன்று கருணா அம்மான் என்றும் இன்று துரோகி என்றும் நம்மவர்கள் தான் குறிப்பிடுகின்றார்கள் என்றால் அதில் எம்மவர் பக்கத் தவறுகள் இல்லையா?? அதைப் புரியாமல் நீங்கள் ஏதேதோ எழுதுகின்றீர்கள். கருணா போராளியாக இருந்த போது கிழக்கு மாகாணத்தில் செய்த பல தவறுகளை, விடுதலைப்புலிகள் கண்டும் காணாமல் விட்டதால் தான் பல பிரைச்சினைகள் உருவாகின. அதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

வசம்பண்ணா.. தமிழ்செல்வன் அண்ணா சொன்னதில் தவறில்லை. குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒரு போராளி மீது குற்றம் சுமத்த முடியாது. சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் உண்மைகள் இனங்காணப்பட்ட பின்னரே தமிழ்செல்வன் அண்ணா கூட ஊடகங்களுக்கு இதுதான் உண்மை என்று கூற முடியும். ஆக.. தமிழ்செல்வன் அண்ணா அன்ற சூழலில் அப்படித் தெரிவிக்க வேண்டியது அவசிமான ஒன்றே அது தவறல்ல. அதுதான் இயக்கத்தின் ஒழுங்குவிதிக்கு கட்டுப்பட்ட செயற்பாடு. அவரவர் தன்ர இஸ்டத்துக்கு அறிக்கை விடுறது என்றால்... புளொட்.. ஈபி.. ஈபிடிபி போலத்தான் புலிகள் இயக்கமும்.. கொள்கை தொலைத்து போராட வந்த பெட்டையளோடும்.. சோத்துப் பார்சல்களோடும்.. ஓடி வெளிநாட்டில பதுங்கி இருக்க வேணும்.. மாற்றுக் கருத்தென்று மக்கள் விரோத ஜனநாயகம் பேசிக் கொண்டிருக்க வேணும். உமா மகேஸ்வரன்ர ஆக்கள்.. தாசனும்.. தம்பாவும் யாழ் கோட்டைக்குள் இருந்து படை முன்னேற இவர்கள் யாழ் வைத்திய சாலையில் நின்று தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் கிட்டண்ண வந்துதான்... ஆமியையும் கலைச்சு.. இவையையும் கலைச்சு விட்டது. அப்படிப்பட்ட ஆக்களை எல்லாம்.. மக்கள் மதிப்பினமோ அண்ண..??! :unsure::(

நெடுக்குத் தம்பி

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. உண்மை. அதுபோல் இரு பக்க விசாரணைகளையும் கேளாதும் குற்றம் சுமத்த முடியாது. தமிழ்ச்செல்வனின் பிபிசியில் வந்த இரு பேட்டிகளுக்குமிடையில் சில வாரங்களே இடைவெளி. 3 வருடக் குற்றங்களை யாரிடம் விசாரித்து இவர் குற்றவாளி தான் என்று இலகுவாகச் சொல்ல முடியும். ஒரு வேளை கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளயேறாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் கருணா அம்மான் தான். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களும் காணாமல் போயிருக்கும். இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

இப்போது கனடா வந்தபின்னரா இப்படி சிங்கள-தமிழ் ஒற்றுமை பற்றிய கருத்து எனக்கு ஏற்பட்டது என்று கேட்கின்றீர்கள்? சிங்களவனுடன் சேர்ந்து பியர் அடிப்பது பற்றி கதைக்கிறீர்கள்.

முரளி அங்கிள்,

ம்ம்..அதை பற்றி தான் கதைக்கிறன்..ன்..முதலில உங்களுக்கு விளங்கவில்லை போல..ல சரி எனி நீங்க குறிப்பிட விசயதிற்கு வருவோம்..ம்.. :)

நீங்கள் சிங்கள நண்பர்கள் வீட்டிற்கு சென்றும் சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறியள்..ள் அந்த விசுவாசத்தில அதாவது அந்த நட்பின் அடிப்படையில்..ல் நீங்கள் மேல சொன்ன மாதிரி சிந்திக்கிறீங்கள்..ள் ஆனால் எல்லாரும் வந்து சிங்களவையிண்ட வீட்டிற்கு போய் சாப்பாடு சாப்பிட்டு இருப்பீனமோ..மோ..??.. :)

இல்லை..லை..

அப்படி இருக்கையில்..ல் அவர்களின் எண்ணவோட்டம் வேற மாதிரி தான் இருக்க கூடும்..ம் அதில் மறுப்பதிற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து..து..எங்களிண்ட சகோதரர்கள் அடி வாங்கி பல கஷ்டத்தை எதிர் நோக்கக்க..க சிங்கள கலாச்சாரத்தை வெறுக்க கூடாது..து அவர்களிண்ட ஒற்றுமைய வெறுக்க கூடாது எண்டு அவையளை தூக்கி பிடிக்கிறதும் ஒண்டு தான்..ன்

டக்கிள்ஸ் மாமா மாதிரி வெளிபடையாவே இருப்பதும் ஒண்டு என் பார்வையில்..ல்.. :D

ஓமுங்கோ. பலர் இப்ப இப்பிடித்தான் சொல்லுறீனம். காயத்தை ஏற்படுத்தவேண்டியது. பின்னர் காயத்துக்கு மருந்துபோடுறன் எண்டு சொல்லவேண்டியது.

மற்றவையள் காயம் அடைந்திருக்கும் போது..து அந்த காயத்தில் ஏதும் சம்பாதிக்கலாமோ எண்டு நெனைக்கிறவைய விட காயத்தை ஏற்படுத்தி மருந்து போடுறவன் பாராட்ட பட வேண்டியவன் தான்.. :D அப்படி அவன் காயத்தை ஏற்படுத்தாட்டி சிலரின் பிழைப்பு என்னாவாகிறது.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

உங்களுக்கு வாழைப் பழத்தைத் தந்தால் உரித்துத் சாப்பிடுவியள் என்று நினைச்சன். ஆனால் உரித்துத் தரச் சொல்லி அடம் பிடிக்கிறியள்.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போதும் சரி, தற்போதும் சரி பொதுமக்களைப் பற்றி எந்தவித கவலைகளும் இல்லாது தன் சுயலாபத்தில் தான் கண்ணாயிருந்தார். அப்போதும் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றைச் செய்து கொண்்டுதானிருந்தார். இப்போதும் அவற்றைத் தொடருகின்றார். இதனைத் தான் அவரின் குணம் இன்னும் மாறவில்லை என்பதாகக் குறிப்பிட்டேன். சுயலாபத்தின் அடிப்படையில் செயற்படுபவர் சிங்கள அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லையே:.....

ஆனால் இதே தவறுகளை புலிகள் இயக்கத்திலிருந்து செய்த போது எம்மவர் எவரும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் கருணா அம்மான், கருணா அம்மான் என்று அழைத்து மகிழ்வதிலேயே குறியாகவிருந்தனர். கருணா புலிகளை விட்டு விலகுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிபிசி வானொலி கருணா பற்றிய குற்றச் சாட்டுகள் பற்றி தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, அவர் கருணா தவறொன்றும் செய்யவில்லை. அவர் மீது வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார்களைச் சொல்லுகின்றார்கள் என்றார். அதே தமிழ்ச்செல்வனை கருணா விலகியவுடன் பிபிசி பேட்டி கண்டது, அப்போது தமிழ்ச்செல்வன் கருணா கடந்த 3 வருடங்களாக பல தவவறுகளைச் செய்துள்ளார். அது பற்றி விசாரிக்கவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம். அவர் வரவில்லையென்று கூறினார். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகின்றது??

முதலில் எம்மவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதையும், தூக்கிப் பிடித்தலையும், தூற்றுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்பவனுக்கும் ஒரு பயம் இருக்கும். இல்லையேல் இப்படியே தொடர வேண்டியது தான்.

வசபண்ணா..ணா..!!.. :)

ம்ம்..வாழைபழத்தை உரித்து சாப்பிட்டிடுவன் தான் ஆனால் இப்ப வாழைபழத்தில கூட எதிர் பிரசாரம் செய்யீனம்..ம் ஆனபடியா வாழைபழத்தை தந்தவையளிட்டையே உரிக்க கொடுத்திட்டா பிரச்சினை இல்லை அது தான் மற்றமபடி நாம உரிக்காத வாழைபழமா..மா..?? .. :D

மன்னிகவும்..ம்..

விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோட்பான இயக்கம் அது யாவருக்கும் தெரிந்தது..து களவு,கொள்ளை அடிப்பவர்கள் நிலை என்னவெண்டு அதில் இருந்தவர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறன்..ன் அப்படி இருக்கையில் தாங்கள் ஏதோ எழுந்தமானமாக கூறுவது..து பற்றி..??.. :(

ஆகவே..வே

இலங்கை அரசால் கொள்வனவு செய்யபட்ட கருணா அம்மான் சுய இலாபதிற்காக வேலை செய்கிறார் என்றால் அதனை ஏற்று கொள்ள முடியும்..ம் அதை விடுத்து..

ஏன் எம்மவர்களை குறி கூறிகிறீர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதங்களை குவித்த மரிஜன் ஜோன்ஸிஸ்கு கூட அவரின் ஆதரவாளர்கள் கை தட்ட தான் செய்தார்கள்..ள் அவர் போதை மருந்து பாவித்து தங்க பதக்கம் பறிமுதலான பின்னர் நிலை என்ன..ன..??.. :)

ஏன் அவரை ஆதரவாளர்கள் உற்சாகபடுத்தினர்..ர் தங்கள் நாட்டு பிரதிநித்துவ படுத்த அவர் ஒலிம்பிக்கில் பங்கு பற்றியமை தான் ஒரு காரணம்..ம் தற்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டும்..ம் ஆகவே இதனை தாங்கள் எந்த ரீதியில் பார்கிறீர்கள்..ள்..??..

அவர் போதைவஸ்து பாவித்தமை ரசிகர்களின் பிழையா அல்லது பயிற்சியாளரின் பிழையா எண்டு வாதாடுகிறோமே தவிர அது அவரின் பிழை எண்டு ஏன் உங்களுகு புரியவில்லை..லை.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. உண்மை. அதுபோல் இரு பக்க விசாரணைகளையும் கேளாதும் குற்றம் சுமத்த முடியாது. தமிழ்ச்செல்வனின் பிபிசியில் வந்த இரு பேட்டிகளுக்குமிடையில் சில வாரங்களே இடைவெளி. 3 வருடக் குற்றங்களை யாரிடம் விசாரித்து இவர் குற்றவாளி தான் என்று இலகுவாகச் சொல்ல முடியும். ஒரு வேளை கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளயேறாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் கருணா அம்மான் தான். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களும் காணாமல் போயிருக்கும். இதுதான் உண்மை.

புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறாத போதும் இயக்கத்தின் ஒழுங்கு விதியை மீறியோர் மற்றும் துரோகத்தனத்துக்காக தண்டனை பெற்றவர்களை தெரியாதோ வசம்பண்ணா. கருணாவின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைக்கு வலுவான காரணங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான்.. அவர் இயக்கத்தை விட்டே வெளியேறி.. தன்னை யார் என்று இனங்காட்டிக் கொண்டார். அதன் பின் விடுதலைப்புலிகளுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய தேவையை அவர் விட்டுவைக்கவில்லை. தானே அதை நிரூபித்துக் கொண்டார். அது தமிழ்செல்வன் அண்ணாவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது. அண்டன் அண்ணாவும் அதையே சொல்லி இருந்ததை மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதுபோல் பார்த்தாலும் தென்னிலங்கையில் கரையோரப் பகுதிகள் இல்லையா?? அதுபோல் அந்நியர் வருகையின் போது தென்னிந்தியா என்ற அடைமொழி பாவிக்கப்பட்டதாகவோ அங்கு தமிழ் தான் ஆட்சிமொழியாக இருந்ததென்றொ எங்கே படித்தீர்கள்??

அந்நிய காலத்தில் தென்னிந்திய அடைமொழி பாவிக்கபட்டதா என்று கேட்டிருந்தீர்கள் தென்னிந்திய திருசபை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் இருந்தது கிறிஸ்தவ மக்களின் மத நடவடிக்கைகளை அந்த திருசபை மூலம் தான் இலங்கையில் நடைபெற்றது.

சங்கிலிய மன்னன் போர்துகேயரால் சிறை பிடிகபட்ட போது தென்னிந்தியாவிற்கு சென்றதாக தான் கூறுகிறார்கள்.சில நாயன்மார்கள் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடி இருக்கிறார்கள்.இன்னுமொரு நாயனார் தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று பாடி இருக்கிறார் ஆகவே தென்பகுதி அதிகாரம் செலுத்துபவரின் பிரதேசமாக திகழ்ந்து இருக்கிறது.

எங்கு படித்தீர்கள் என்று கேட்டபடியால் சொல்கிறேன் படித்து நான் எழுதவில்லை நான் கண்ட பார்த்த சில விடயங்களை வைத்து தான் எழுதினேன் அந்த சம்பவங்களை கீழே எழுதுகிறேன்.

மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்க்கும் போது ஒரு இஸ்லாமிய மத நிறுவனதிற்கு வேலை நிமிர்த்தமாக சென்றேன் அப்பொழுது அங்கு பல மொழிகளிள் இஸ்லாம் பற்றிய விளக்க நூல்கள் வைத்திருந்தார்கள் பல புத்தகங்கள் சிங்கள மொழியிலும் இருந்தன.அங்கு நின்ற சில இளைஞர்கள் அங்கிருந்த புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள் அவர்கள் எல்லோரும் இலங்கை முஸ்லீம்கள்.தமிழ் மொழி புத்தகங்கள் இருந்தும் அவர்கள் அதை எடுக்கவில்லை காரணம் அவர்களாள் அதை வாசிக்க முடியாது ஒரு சில வயோதிப முஸ்லீம்கள் தமிழி மொழி புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள்.

இன்னுமொரு சம்பவம் என்னோடு வெலை பார்த்த ஒரு முஸ்லீம் இளைஞன் தனது தாயாருக்கு கடிதம் எழுதுவதிற்கும்,தாயாரிடம் இருந்து கடிதம் வந்தாலோ என்னிடம் வந்து படித்து காட்டும்படி கேட்பார் அதை போல் பதில் கடிதம் தாயருக்கு தமிழில் எழுதி தரும்படியும் கேட்டு கொள்வார் இவர் ஒரு கொழும்புவாசி நடுதரவர்க்க முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் சிங்கள மொழியில் படித்தபடியால் தனது தாயாருக்கு கடிதம் எழுத முடியாத நிலை தாயார் தமிழ் மொழியில் கல்வி கற்றிருக்கா.

இந்த முஸ்லிம் இளைஞனை பொறுத்தவரை தனது குழந்தையுடன் நிச்சயமாக சிங்களத்தில் தான் உரையாட போறார் சிங்கள மொழியில் தான் கல்வியும் புகட்ட போறார்.

(மேலே கூறிய சம்பவங்கள் மூலம் அவர்கள் செய்தது பிழை என்று கூற வரவில்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன் அவர்களின் இருப்பிற்கு அவர்கள் செய்தது சரியே)..

ஆகவே தான் நான் இன்னும் பல வருடங்களுக்கு பிறகு சிங்கள மொழி பேசும் சோனகர் உருவாகுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிங்கள பகுதியில் வாழும் சோனகரை தொடர்ந்தும் தமிழ் பேசும் சோனகர் என்று சிங்களவர்களும்,தமிழர்களும் சொல்வார்களாயின் சிங்களவர்களும் தமிழர்களும் தங்களை தாமே ஏமாத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா உங்கள் திறமை அற்புதமானது!

இது போன்றே தமிழில் இருந்து சிங்களமும் உங்களுக்கு கைவந்தகலையாக இருக்கக்கூடும்.

நீங்கள் ஏன் தமிழீழ செய்திகளை உடனுக்கு உடன் தரும் ஒரு சிங்கள இணையத்தளம் ஆரம்பிக்கக்கூடாது!

நீண்டகால நோக்கில் அது பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும்!

Link to comment
Share on other sites

இதில் ஈழதமிழ் சிங்கள இளைஞர்களால் புலத்தில் உருவாக்கப்பட்ட பல பாடல்கள் உண்டு கேட்டுமகிளுங்கள்.

http://worldtv.com/eelamboys

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய கமினியூஸப்போராளிகளின் புரட்சி உணவுப்பொதிகளலால் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட

Link to comment
Share on other sites

வசபண்ணா..ணா..!!.. :(

ம்ம்..வாழைபழத்தை உரித்து சாப்பிட்டிடுவன் தான் ஆனால் இப்ப வாழைபழத்தில கூட எதிர் பிரசாரம் செய்யீனம்..ம் ஆனபடியா வாழைபழத்தை தந்தவையளிட்டையே உரிக்க கொடுத்திட்டா பிரச்சினை இல்லை அது தான் மற்றமபடி நாம உரிக்காத வாழைபழமா..மா..?? .. :)

மன்னிகவும்..ம்..

விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோட்பான இயக்கம் அது யாவருக்கும் தெரிந்தது..து களவு,கொள்ளை அடிப்பவர்கள் நிலை என்னவெண்டு அதில் இருந்தவர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறன்..ன் அப்படி இருக்கையில் தாங்கள் ஏதோ எழுந்தமானமாக கூறுவது..து பற்றி..??.. :)

ஆகவே..வே

இலங்கை அரசால் கொள்வனவு செய்யபட்ட கருணா அம்மான் சுய இலாபதிற்காக வேலை செய்கிறார் என்றால் அதனை ஏற்று கொள்ள முடியும்..ம் அதை விடுத்து..

ஏன் எம்மவர்களை குறி கூறிகிறீர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதங்களை குவித்த மரிஜன் ஜோன்ஸிஸ்கு கூட அவரின் ஆதரவாளர்கள் கை தட்ட தான் செய்தார்கள்..ள் அவர் போதை மருந்து பாவித்து தங்க பதக்கம் பறிமுதலான பின்னர் நிலை என்ன..ன..??.. :D

ஏன் அவரை ஆதரவாளர்கள் உற்சாகபடுத்தினர்..ர் தங்கள் நாட்டு பிரதிநித்துவ படுத்த அவர் ஒலிம்பிக்கில் பங்கு பற்றியமை தான் ஒரு காரணம்..ம் தற்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டும்..ம் ஆகவே இதனை தாங்கள் எந்த ரீதியில் பார்கிறீர்கள்..ள்..??..

அவர் போதைவஸ்து பாவித்தமை ரசிகர்களின் பிழையா அல்லது பயிற்சியாளரின் பிழையா எண்டு வாதாடுகிறோமே தவிர அது அவரின் பிழை எண்டு ஏன் உங்களுகு புரியவில்லை..லை.. :D

இங்கே விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோப்பானதோ இல்லையா என்பது பற்றி நான் வாதம் செய்ய வரவில்லை. அவர்களின் கட்டுக்கோப்புக்களை மீறியும் பல தவறுகள் நடந்து தான் உள்ளன. தவறுகள் செய்த பலர் எவ்வித தண்டனைகளையும் பெறாது தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வாழத்தான் செய்கின்றார்கள். இவற்றை இங்கே எழுதுவதென்றால் அதுவே பல பக்கங்களைத் தாண்டும். அதுவல்ல எனது நோக்கமும். இதனால் இப்பகத்தின் கருத்தும் திசை மாறி எங்கோ சென்றுவிடும். ஆனால் 3 வருடங்களாக கருணா தொடர்ந்து தவறு செய்ய அதில் கவனமெடுக்காத விட்ட விடுதலைப்புலிகளின் தவறையே நான் சுட்டிக்காட்டினேன். போதைவஸ்து பாவித்த ஒரு விளையாட்டு வீரரையும் ஒரு போராளியையும் எப்படி உங்களால் ஒப்பிட முடிகின்றதோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விளையாட்டுவீரர் அவரின் பயிற்சியாளருக்குத் தெரியாது போதைவஸ்து பாவித்திருக்க முடியாதென்பதும் உங்களுக்கு புரியுமோ தெரியாது. பலநேரங்களில் பயிற்சியாளர்களே வீரரை போதைவஸ்து பாவிக்க வைத்த உண்மைகளும் தான் வெளியாகியுள்ளது.

மேலே இணைக்கப்பட்ட பாடலே யுத்தத்தை கண்டித்தே பாடப்பட்டுள்ளது. ஆனால் எவரும் பாடலின் கருத்தை ஆராயாமல் (தமிழில் மொழி பெயர்த்து போடப்பட்ட புின்பும்) இப்பாடலை வைத்து அரசு தமக்கு சாதகமாக பிரச்சாரதத்தை மேற்கொள்ளலாம் என கருத்துக் கூறும் புத்திசாலிகள் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறாத போதும் இயக்கத்தின் ஒழுங்கு விதியை மீறியோர் மற்றும் துரோகத்தனத்துக்காக தண்டனை பெற்றவர்களை தெரியாதோ வசம்பண்ணா. கருணாவின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைக்கு வலுவான காரணங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான்.. அவர் இயக்கத்தை விட்டே வெளியேறி.. தன்னை யார் என்று இனங்காட்டிக் கொண்டார். அதன் பின் விடுதலைப்புலிகளுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய தேவையை அவர் விட்டுவைக்கவில்லை. தானே அதை நிரூபித்துக் கொண்டார். அது தமிழ்செல்வன் அண்ணாவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது. அண்டன் அண்ணாவும் அதையே சொல்லி இருந்ததை மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். :D

மேலே ஜம்முவிற்கு இணைத்த பதிலே உங்களுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.