Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

அந்நிய காலத்தில் தென்னிந்திய அடைமொழி பாவிக்கபட்டதா என்று கேட்டிருந்தீர்கள் தென்னிந்திய திருசபை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் இருந்தது கிறிஸ்தவ மக்களின் மத நடவடிக்கைகளை அந்த திருசபை மூலம் தான் இலங்கையில் நடைபெற்றது.

சங்கிலிய மன்னன் போர்துகேயரால் சிறை பிடிகபட்ட போது தென்னிந்தியாவிற்கு சென்றதாக தான் கூறுகிறார்கள்.சில நாயன்மார்கள் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடி இருக்கிறார்கள்.இன்னுமொரு நாயனார் தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று பாடி இருக்கிறார் ஆகவே தென்பகுதி அதிகாரம் செலுத்துபவரின் பிரதேசமாக திகழ்ந்து இருக்கிறது.

எங்கு படித்தீர்கள் என்று கேட்டபடியால் சொல்கிறேன் படித்து நான் எழுதவில்லை நான் கண்ட பார்த்த சில விடயங்களை வைத்து தான் எழுதினேன் அந்த சம்பவங்களை கீழே எழுதுகிறேன்.

மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்க்கும் போது ஒரு இஸ்லாமிய மத நிறுவனதிற்கு வேலை நிமிர்த்தமாக சென்றேன் அப்பொழுது அங்கு பல மொழிகளிள் இஸ்லாம் பற்றிய விளக்க நூல்கள் வைத்திருந்தார்கள் பல புத்தகங்கள் சிங்கள மொழியிலும் இருந்தன.அங்கு நின்ற சில இளைஞர்கள் அங்கிருந்த புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள் அவர்கள் எல்லோரும் இலங்கை முஸ்லீம்கள்.தமிழ் மொழி புத்தகங்கள் இருந்தும் அவர்கள் அதை எடுக்கவில்லை காரணம் அவர்களாள் அதை வாசிக்க முடியாது ஒரு சில வயோதிப முஸ்லீம்கள் தமிழி மொழி புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள்.

இன்னுமொரு சம்பவம் என்னோடு வெலை பார்த்த ஒரு முஸ்லீம் இளைஞன் தனது தாயாருக்கு கடிதம் எழுதுவதிற்கும்,தாயாரிடம் இருந்து கடிதம் வந்தாலோ என்னிடம் வந்து படித்து காட்டும்படி கேட்பார் அதை போல் பதில் கடிதம் தாயருக்கு தமிழில் எழுதி தரும்படியும் கேட்டு கொள்வார் இவர் ஒரு கொழும்புவாசி நடுதரவர்க்க முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் சிங்கள மொழியில் படித்தபடியால் தனது தாயாருக்கு கடிதம் எழுத முடியாத நிலை தாயார் தமிழ் மொழியில் கல்வி கற்றிருக்கா.

இந்த முஸ்லிம் இளைஞனை பொறுத்தவரை தனது குழந்தையுடன் நிச்சயமாக சிங்களத்தில் தான் உரையாட போறார் சிங்கள மொழியில் தான் கல்வியும் புகட்ட போறார்.

(மேலே கூறிய சம்பவங்கள் மூலம் அவர்கள் செய்தது பிழை என்று கூற வரவில்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன் அவர்களின் இருப்பிற்கு அவர்கள் செய்தது சரியே)..

ஆகவே தான் நான் இன்னும் பல வருடங்களுக்கு பிறகு சிங்கள மொழி பேசும் சோனகர் உருவாகுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிங்கள பகுதியில் வாழும் சோனகரை தொடர்ந்தும் தமிழ் பேசும் சோனகர் என்று சிங்களவர்களும்,தமிழர்களும் சொல்வார்களாயின் சிங்களவர்களும் தமிழர்களும் தங்களை தாமே ஏமாத்துகிறார்கள்.

நீங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்தியா என. பாரசீகமாக இருந்த பல நாடுகள் ஒன்றாகி இந்தியாவாக எப்போது உருப்பெற்றதோ அதன் பின்பு தான் தென்னிந்தியா என்ற சொல் உருவாக்கமும் வரும். ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் தான் நீங்கள் சொல்லும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பழைய சரித்திரங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் எழுத்து வடிவமாக எமக்கு குறிப்பாக வந்தபோது அப்போது நடைமுறையில் இருந்த தென்னிநதியா என்ற சொற்பதத்தையே பாவித்தார்கள். (காரணம் அதற்கு முன்பிருந்த சொற்பிரயோகத்தைப் பாவித்தால் பின் தற்போது அது என்ன என்ற விளக்கத்தையும் புறிம்பாக எமக்கு தந்திருக்க வேண்டும்.) இதற்கு உதாரணம் இன்று நாம் பயிலும் திருக்குறள். திருக்குறளை திருவள்ளுவர் எழுதிய காலத்தில் இருந்த எழுத்து வடிவங்களில் அப்படியே தந்திருந்தால் நாம் முழி பிதுங்கி புரியாது தான் நின்றிருக்க வேண்டும். அதனால் அறிஞர்கள் அதனை தற்போதய நடைமுறையில் மாற்றி எமக்குத் தந்தார்கள். அதனால் இது தெரியாதவர்கள் திருவள்ளுவர் தற்போதய நடைமுறையில் தான் எழுத்தக்களை கையாண்டார் என்று தற்போதுள்ள திருக்குறளை வைத்து வாதாட முடியுமா?? தென்னாடு, தென்பாண்டி என்பன தென்பகுதி நாடு, தென்பகுதி பாண்டிய ஆட்சியையுமே குறிக்கின்றன. அவை எப்படித் தென்னிந்தியா என்ற அடைமொழியாகிவிடும்.

நீங்கள் குறிப்பிடும் கொழும்பு முஸ்லீம் மக்களில் வயதானவர்கள் மட்டும் தமிழை உச்சரிக்கின்றார்கள். இளைஞர்களால் முடியவில்லை என்பதால் கொழும்பில் முன்பு தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்தது என்று அர்த்தமாகி விடுமா?? ஏன் அந்த முஸ்லீம் குடும்பத்தினர் முன்பு தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்து பின்பு வேலை நிமித்தமாக கொழும்பில் வந்து குடியேறியிருக்க முடியாதா?? இதற்கு நல்லதொரு உதாரணம் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் குடும்பம். இவர்கள் வடமராச்சியை சேர்ந்தவர்கள் அரசியலாலும், தொழில் நிமித்தத்தாலும் கொழும்பிற்கு இடம் பெயர நேரிட்டது. அதனால் பின்னாளில் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் மகனான அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கூட ஆரம்பத்தில் தமிழ் பேச முடியாதவராகத் தான் இருந்தார். பின்பு அரசியலிற்கு வந்தபின் தான் தமிழை படிப்படியாக பேசக் கற்றுக் கொண்டார்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

இங்கே விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோப்பானதோ இல்லையா என்பது பற்றி நான் வாதம் செய்ய வரவில்லை. அவர்களின் கட்டுக்கோப்புக்களை மீறியும் பல தவறுகள் நடந்து தான் உள்ளன. தவறுகள் செய்த பலர் எவ்வித தண்டனைகளையும் பெறாது தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வாழத்தான் செய்கின்றார்கள். இவற்றை இங்கே எழுதுவதென்றால் அதுவே பல பக்கங்களைத் தாண்டும். அதுவல்ல எனது நோக்கமும். இதனால் இப்பகத்தின் கருத்தும் திசை மாறி எங்கோ சென்றுவிடும். ஆனால் 3 வருடங்களாக கருணா தொடர்ந்து தவறு செய்ய அதில் கவனமெடுக்காத விட்ட விடுதலைப்புலிகளின் தவறையே நான் சுட்டிக்காட்டினேன். போதைவஸ்து பாவித்த ஒரு விளையாட்டு வீரரையும் ஒரு போராளியையும் எப்படி உங்களால் ஒப்பிட முடிகின்றதோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விளையாட்டுவீரர் அவரின் பயிற்சியாளருக்குத் தெரியாது போதைவஸ்து பாவித்திருக்க முடியாதென்பதும் உங்களுக்கு புரியுமோ தெரியாது. பலநேரங்களில் பயிற்சியாளர்களே வீரரை போதைவஸ்து பாவிக்க வைத்த உண்மைகளும் தான் வெளியாகியுள்ளது.

மேலே இணைக்கப்பட்ட பாடலே யுத்தத்தை கண்டித்தே பாடப்பட்டுள்ளது. ஆனால் எவரும் பாடலின் கருத்தை ஆராயாமல் (தமிழில் மொழி பெயர்த்து போடப்பட்ட புின்பும்) இப்பாடலை வைத்து அரசு தமக்கு சாதகமாக பிரச்சாரதத்தை மேற்கொள்ளலாம் என கருத்துக் கூறும் புத்திசாலிகள் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வசபண்ணா..ணா..!!.. :)

ம்ம்..நீங்கள் மேலே குறிப்பிட்டிருந்தீர்கள்..ள் கருணா அங்கிள் விடுதலை புலிகள் இயக்கத்தில்..ல் இருக்கும் போது கொலை மற்றும் கொள்ளைகளை மேற்கொண்டார் எண்டு..டு அதற்கு பதிலளிக்கும் முகமாகவே..வே விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோப்பான இயக்கம்..ம் எண்டு சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது..து.. :D

அதற்கு தாங்கள் உணர்ச்சிவசபட வேண்டிய தேவை இல்லை..லை விடுதலை புலிகள் இயக்கம் தோன்றிய காலத்தில் பல ஆயுத இயக்கங்கள் தோன்றி மறைந்ததிற்கான காரணம்..ம் கட்டுபாடின்மையே..யே..அதனை தங்களுக்கு விளக்கும் விதமாகவே அதனை கூற முயன்றேன்..ன்.. :(

மற்றது..து..!!

தாங்கள் விடுதலை புலிகல் இயக்கத்தில்..ல் ஏதாவது பொறுப்பில் இருந்தனீங்களோ..ளோ இல்லை ஏன் கேட்கிறன் எண்டா அவன் தண்டனை செய்திட்டு அங்க இருக்கிறான்..ன் இங்க இருக்கிறான் எண்டு எப்படி உங்களாள் சொல்ல முடியும்..ம்..??

மற்றது..து..

கருணா அங்கிள் 3 வருடமாக தவறு செய்திருக்கலாம்...ம் ஒருவரை குற்றவாளி எண்டு சும்மா சொல்ல ஏலாது தானே அவர் செய்த சிறு தவறுகளை கண்டறிய முடியாம இருந்திருக்கலாம்..ம் பிற்பட்ட காலத்தில் அவர் மேலும் தவறுகள் செய்ய முற்படுகையில்..ல்

அதனை இணம் கண்டது..ம் அவர் உடனடியாக தாவிவிட்டார்..ர்..ஆகவே உயரதிகாரியாக இருந்த கருணா அங்கிளிற்கு கூட தண்டனை கிடைத்திருக்கும்..ம் ஆனா அவர் தன் குணத்தை வெளிபடுத்திவிட்டார்..ர் அவ்வாறு இருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை பற்றி..றி..நீங்கள் வேண்டுமென்றே குறை கூறுவதை என்ன சொல்ல முடியும் பாருங்கோ..கோ.. :)

மன்னிகவும்..ம் நான் போராளியை ஒரு விளையாட்டு துறை வீரரோடு ஒப்பிடவில்லை..லை நீங்கள் கேட்டீர்களே அன்னைக்கு கருணா எண்டு புகழ்பாடிய நாம் அவரை இகழ்கிறோம்..ம் இன்று எண்டு அதற்கு பதில் அளிக்கும் முகமாகவே அவ் உதாரணத்தை காட்டினேன்..ன். :)

அதற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை..லை மாறாக பயிற்சியாளர் பற்றிய கேள்வியை எழுப்பி உள்ளீர்கள்..ள் இறுதி நேரத்தில் ஒரு வீரர் ஊக்கமருந்து அருந்தினால்..ல் அது பயிற்சியாளருக்கு தெரிய வாய்பில்லை..லை அத்தகைய ஒரு வீரரா தான் நான் கருணா அங்கிளையும் பார்க்கிறேன்..ன்..

கடசியா நான் இவ் பாடலை பற்றி எதுவுமே கூறவில்லை..லை அப்படி இருக்கையில்..ல் அந்த கருத்தையும் தாங்களே சொல்லி விட்டு செல்கின்றீர்கள்..ள் ஆனபடியா எனி நான் அந்த கருத்தையும் சொல்கிறேன்..ன் அதாவது பாருங்கோ வசபண்ணா..ணா..

இந்த பாட்டில யுத்தத்தை கண்டித்து..து இரு நட்புள்ளங்கள் பாட்டு பாடீனம் நட்பாக..கா ஆனா அவையளுக்கே தெரியாம அரசாங்கம் என்ன செய்யும்..ம் கொழும்பில தமிழர் கைது மற்றும் கடத்தல் போன்றன இல்லை எண்டும் குறிப்பிட்ட அதாவது யாழ்பாணத்தில் தான் யுத்தம் நடக்கிற மாதிரியும்..ம் வடிவாக திரிப்பார்கள்..ள்.. :D

இது உங்களுக்கு தெரியாதா..??..இல்லாட்டி தெரிந்தும் கேட்கிறீங்களோ..ளோ..??.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இதில் ஈழதமிழ் சிங்கள இளைஞர்களால் புலத்தில் உருவாக்கப்பட்ட பல பாடல்கள் உண்டு கேட்டுமகிளுங்கள்.

http://worldtv.com/eelamboys

உங்கள் இணைப்பிற்கு நன்றிகள்.

உண்மையில் பிரித்தானியாவில் மார்கழி 31ந் திகதி இரவு நடைபெறும் புதுவருடக் கொண்டாட்டங்களில் சென்று பார்க்க வேண்டும் எமது தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களப் இளைஞர்களோடு இணைந்து அடிக்கும் கூத்துக்களை. இவர்களில் பலர் இந்துக்கள். இதில் பல புதுவருடக் கொண்டாட்டங்கள் சிங்கள இளைஞர்களால் ஒழுங்கு படுத்தப் பட்டதே. இங்கே பதியும் கருத்தக்களை பார்த்தவிட்டு இந்தக் கொண்டாட்டங்களைப் பார்த்தால் தான் புரியும் நம்மவரின் உண்மையான நிலைப்பாடுகள்.

பி.கு : தயவு செய்து இனி இங்கே வந்்து அவர்களைத் துரோகிகள் என்று வசைபாட வேண்டாம். அப்படி வசை பாடுவதென்றால் பிரித்தானியாவிலுள்ள முக்கால்வாசி தமிழ் இளைஞர்கள் துரோகிகள் ஆகிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா உங்கள் திறமை அற்புதமானது!

இது போன்றே தமிழில் இருந்து சிங்களமும் உங்களுக்கு கைவந்தகலையாக இருக்கக்கூடும்.

நீங்கள் ஏன் தமிழீழ செய்திகளை உடனுக்கு உடன் தரும் ஒரு சிங்கள இணையத்தளம் ஆரம்பிக்கக்கூடாது!

நீண்டகால நோக்கில் அது பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும்!

நன்றி சாணக்கியன்.

இதில் சற்று பிரச்சனை உண்டு.

தமிழ் எழுத்துகளைப் போல

சிங்களத்தில் தட்டச்சு செய்வது இலகு அல்ல.

அதோடு மல்லுக்கட்டவும் நேரமில்லை. :)

எழுதுவது - வாசிப்பது - பேசுவதோடு சரி.

உதாரணத்துக்கு BBC சிங்கள சேவையாலேயே

அதைச் செய்ய முடியவில்லை.

இலங்கை தினசரி : இணையதளங்களில் மட்டுமே

சிங்களம் உண்டு.

இலங்கையில் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.

இதுமாதிரி வேலைகள் செய்ய அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

இருந்தாலும்

தேவையானவர்கள் தொடர்பு கொண்டால்

அதற்கான முயற்சிகளில் உதவ யோசிக்கலாம்?

Link to comment
Share on other sites

வசபண்ணா..ணா..!!.. :)

மற்றது..து..!!

தாங்கள் விடுதலை புலிகல் இயக்கத்தில்..ல் ஏதாவது பொறுப்பில் இருந்தனீங்களோ..ளோ இல்லை ஏன் கேட்கிறன் எண்டா அவன் தண்டனை செய்திட்டு அங்க இருக்கிறான்..ன் இங்க இருக்கிறான் எண்டு எப்படி உங்களாள் சொல்ல முடியும்..ம்..??

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கருத்துக் கூற முடியும் என்றால் பலருக்கு அது முடியாத காரியம். என்னிடம் நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் திரும்பி உங்களிடமும் கேட்க முடியும்.

இப்போதுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால வரலாறுகள் கூடத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். காரணம் ஆரம்பகாலத்திலிருந்து எனது மாமாமார்,அண்ணாமார் நேரடியாக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அப்போது நான் மிகவும் சிறுவன். அதனால் எனக்கு நேரடியாக தொடர்புகள் இருந்தில்லை. இதைக்கூட நான் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் உங்களைப் போன்ற இயக்கங்களின் வரலாறுகளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களைக் கேள்வி கேட்போரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனைப் பதிகின்றேன்.

Link to comment
Share on other sites

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கருத்துக் கூற முடியும் என்றால் பலருக்கு அது முடியாத காரியம். என்னிடம் நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் திரும்பி உங்களிடமும் கேட்க முடியும்.

இப்போதுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால வரலாறுகள் கூடத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். காரணம் ஆரம்பகாலத்திலிருந்து எனது மாமாமார்,அண்ணாமார் நேரடியாக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அப்போது நான் மிகவும் சிறுவன். அதனால் எனக்கு நேரடியாக தொடர்புகள் இருந்தில்லை. இதைக்கூட நான் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் உங்களைப் போன்ற இயக்கங்களின் வரலாறுகளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களைக் கேள்வி கேட்போரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனைப் பதிகின்றேன்.

வசபண்ணா..ணா..!!.. :)

மன்னிகோனும் எனக்கு அரைகுறை அறிவு தான் இருக்கின்றது..து ஏற்று கொள்கிறேன்..ன் முழுவதும் தெரிந்த தாங்கள் தேவையானவற்றை மறைத்து..து அநாவசியமற்ற விடயங்களை..ளை உட் செலுத்துவது தான் ஏனோ..??. :) .மற்றது ஒரு விடயத்தில் இருக்கிறவை தான் அது பத்தி கூற வேண்டும் எண்டு நான் கூறவில்லை..லை..

நான் கூறியது என்னவெண்டால்..ல்

அவ் இயகத்தில் உள்ளவர்களாளேயே..யே அவ் இயகத்தை பற்றி..றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தாங்கள் உங்களுக்கு..ம் எல்லாம் தெரியும் எண்டு..டு எடுத்தவுடன் கருத்தை வீசியதிற்கு தான்..ன் நான் அவ்வாறு வினாவினேன் வசபண்ணா..ணா.. :(

மற்றது..து நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றுக்கு தெளிவான விளக்கம் தரவில்லை..லை மாறாக சிறு தவறை மட்டும் சுட்டி காட்டி இருக்கிறீர்கள்..ள்..மற்றது எனக்கு அரைகுறை வரலாறு தெரியலாம் ஆனா என் மாமாமார் மற்றும் அண்ணாமார்கள் அப்படி இல்லை நன்றி..றி.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கும் தெரிய கனடாவிலும், லண்டனிலும் இப்படி தவறு செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். :) போராட்ட ஆரம்ப காலங்களில் பல வங்கிகளுக்கு நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு அச்சுவேலியில் உள்ள ஒரு வங்கி. யாழ் இணையம் பலரும் பார்க்கும் ஒரு மூலம் என்பதால் பல விடயங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை... :)

Link to comment
Share on other sites

வசபண்ணா..ணா..!!.. :)

மன்னிகோனும் எனக்கு அரைகுறை அறிவு தான் இருக்கின்றது..து ஏற்று கொள்கிறேன்..ன் முழுவதும் தெரிந்த தாங்கள் தேவையானவற்றை மறைத்து..து அநாவசியமற்ற விடயங்களை..ளை உட் செலுத்துவது தான் ஏனோ..??. :) .மற்றது ஒரு விடயத்தில் இருக்கிறவை தான் அது பத்தி கூற வேண்டும் எண்டு நான் கூறவில்லை..லை..

நான் கூறியது என்னவெண்டால்..ல்

அவ் இயகத்தில் உள்ளவர்களாளேயே..யே அவ் இயகத்தை பற்றி..றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தாங்கள் உங்களுக்கு..ம் எல்லாம் தெரியும் எண்டு..டு எடுத்தவுடன் கருத்தை வீசியதிற்கு தான்..ன் நான் அவ்வாறு வினாவினேன் வசபண்ணா..ணா.. :(

மற்றது..து நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றுக்கு தெளிவான விளக்கம் தரவில்லை..லை மாறாக சிறு தவறை மட்டும் சுட்டி காட்டி இருக்கிறீர்கள்..ள்..மற்றது எனக்கு அரைகுறை வரலாறு தெரியலாம் ஆனா என் மாமாமார் மற்றும் அண்ணாமார்கள் அப்படி இல்லை நன்றி..றி.. :D

மொட்டந் தலையையும் முழந்தாலையும் முடிச்சுப் போடாதீர்கள். ஏதோ விடயமாக ஆரம்பித்த பாடல்த் தலைப்பை உங்களைப் போன்றோர் திசை மாற்றி எங்கோ கொண்டு சென்றீர்கள். அதனால் சில உண்மையான தவறுகளையும் நான் சுட்டிக் காட்டினேன். அதற்காக எதை வைத்து நான் எல்லாம் தெரிந்தவன் போல் வாதாடுகின்றேன் என்கின்றீர்கள். அப்படியாயின் நீங்களும் எல்லாம் தெரிந்து தான் என்னோடு வாதம் செய்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்ளச் சொல்கின்றீர்களா?? மன்னிக்கவும் உங்களைப் போல் தவறாக எதையும் நான் புரிந்து கொள்பவனல்ல.

Link to comment
Share on other sites

எனக்கும் தெரிய கனடாவிலும், லண்டனிலும் இப்படி தவறு செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். :) போராட்ட ஆரம்ப காலங்களில் பல வங்கிகளுக்கு நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு அச்சுவேலியில் உள்ள ஒரு வங்கி. யாழ் இணையம் பலரும் பார்க்கும் ஒரு மூலம் என்பதால் பல விடயங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை... :(

:)கவனம். உங்களைளயும் பிறகு இயக்கத்தில் இருந்தனீங்களோ என்று கேட்டு விடப் போகின்றார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரிய கனடாவிலும், லண்டனிலும் இப்படி தவறு செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். :) போராட்ட ஆரம்ப காலங்களில் பல வங்கிகளுக்கு நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு அச்சுவேலியில் உள்ள ஒரு வங்கி. யாழ் இணையம் பலரும் பார்க்கும் ஒரு மூலம் என்பதால் பல விடயங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை... :)

போராட்ட ஆரம்ப காலத்தில் பலபேரும் தவறு செய்துவிட்டு ஒருவரில் ஒருவர் குற்றம் சாட்ட வெளிக்கிட்டுத்தான்.. இறுதியில்.. ஆளையாள் அடிபட்டுக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடினார்கள். இன்று அவ்வாறல்ல. இன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் சக்தியாக விளங்குகின்றது மட்டுமன்றி மற்றைய இயக்கங்களோடு ஒப்பிடும் போது விடுதலைப்புலிகள் எப்போதும் கொள்கை.. ஒழுக்கம் என்பதற்கு முக்கியமளிப்பவர்களாக இருந்துள்ளனர். அன்றைய காலத்தில் வெளிநாட்டுக்கு (குறிப்பாக இந்தியாவுக்கு) ஓடிவந்தவர்களில் அநேகர்.. மாற்றுக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி.. புலிக்கு வால்பிடித்தவர்களும்.. புலிகள் என்ற பெயரை பயன்படுத்திக் கொண்டு குளிர்காய்ந்தவர்களும் (கருணா போன்றவர்கள்). உண்மையான புலிகள்.. நிச்சயம்.. தலைமைக்கு எதிராக இயங்கமாட்டார்கள்.. மக்களுக்கு எதிராக செயற்படமாட்டார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கருத்துக் கூற முடியும் என்றால் பலருக்கு அது முடியாத காரியம். என்னிடம் நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் திரும்பி உங்களிடமும் கேட்க முடியும்.

இப்போதுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால வரலாறுகள் கூடத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். காரணம் ஆரம்பகாலத்திலிருந்து எனது மாமாமார்,அண்ணாமார் நேரடியாக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அப்போது நான் மிகவும் சிறுவன். அதனால் எனக்கு நேரடியாக தொடர்புகள் இருந்தில்லை. இதைக்கூட நான் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் உங்களைப் போன்ற இயக்கங்களின் வரலாறுகளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களைக் கேள்வி கேட்போரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனைப் பதிகின்றேன்.

எல்லாம் தெரிந்த ஏகம்பரமா நீங்கள், அட எனக்கு தெரியாமல் போயிட்டுதே

:):):(

Link to comment
Share on other sites

இன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

நெடுக்ஸ்... சிலவேளைகளில் நீங்கள் நன்றாக பகிடி விடுகின்றீர்கள் !! :)

மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டம் என்றால் என்ன என்று கொஞ்சம் என்றாலும் தெரிந்தவர்கள் நிச்சயம் யாழில் உள்ளனர் ஐயா. சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்

ஏற்கனவே இந்த உரையாடல் தலைப்பை மீறி எங்கோ போய்விட்டது... தேவையில்லாத பதங்களை போட்டு, மேலும் நன்றாக திசை திருப்புகின்றீர்கள்... நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்... சிலவேளைகளில் நீங்கள் நன்றாக பகிடி விடுகின்றீர்கள் !! :):(

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்று கொஞ்சம் என்றாலும் தெரிந்தவர்கள் நிச்சயம் யாழில் உள்ளனர் ஐயா. சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்

ஏற்கனவே இந்த உரையாடல் தலைப்பை மீறி எங்கோ போய்விட்டது... தேவையில்லாத பதங்களை போட்டு, மேலும் நன்றாக திசை திருப்புகின்றீர்கள்... நன்றி

20,000 போராளிகளும் இன்னும் மக்களும் செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்து போராடியதால் தான் நீங்கள் 4 இலட்சம் பேர் ரொரண்டோ ஊசியிலைக் காடுகளுக்குள் குடியமர முடிந்ததோ..???! ஏன் இந்த 4 இலட்சம் பேரும் அவர்களின் வாரிசுகளும்.. வல்லைவெளி வடலிக்குள் குடியமர மறந்தார்கள்.. மறுக்கிறார்கள்..??! வல்லைவெளியில் இன்று ஜனநாயகம் பேசும் தரப்புக்கள் தானே நிற்கிறார்கள். மீளப் போய் குடியமரலாமே.. ஏன் யோசிக்கிறார்கள்..??! :D

இன்று உலகெங்கும் எமது விடுதலைப்போராட்டம் தடைசெய்யப்பட்டிருப்பினும்.. மக்கள் தான் அந்தத் தடைகளையும் மீறி போராடிக் கொண்டிருக்கின்றனர். விடுதலைக்கான பயணத்தை மக்கள் தான் தொடர்கின்றனர்.

போர்க்காலம் என்பது உலகெங்கும் நெருக்கடியான காலம் தான். உலகப் போர்களின் போதெல்லாம் மக்கள் விரும்பி போர்க்களம் போவதில்லை. அவர்கள் எதிரிகளால் போராட நிற்பந்திக்கப்பட்டதால் தான்.. போராடி வென்றார்கள். யாரும் சாவை விரும்பி அணைக்க போர்களம் போவதில்லை. சாவிலும்.. பெரிதாக தமது உரிமைகளை.. தாய் மண்ணை நேசித்ததால் தான் அவ்வாறு போராடி மடிந்தனர். அது உங்களால் முடியாது என்பதற்காக எல்லோரும் அப்படியன்று. இரண்டாம் உலகப் போரில் வெற்றி முழக்கமிட்டுச் சென்ற ஜேர்மனியப் படைகளை பல தோல்விகளின் பின்னும் சளைக்காமல் போராடியதால் தான் ரஷ்சியா வெற்றி கொண்டது. போராட்டக் காலங்களில் மக்கள் போராட்ட உணர்வூட்டப்பட்டவர்களாகவே வைத்திருக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அங்கு அதுவே சரியான வழிமுறை எதிரியை எதிர்கொள்வதற்கு.

அமெரிக்காவின் ஒருமைப்பாட்டையும் தான் எதிர்த்தும் தான் பேச முடியாது.. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தான் எதிர்த்துப் பேச முடியாது.. அங்கெல்லாம் சன நாய் அகம் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதை அச்சிப்பிசகாமல் ஏற்றுக் கொள்ளும் பங்குவம் படைத்த நீங்கள் எல்லாம் எதிரியின் சர்வதேச சக்திகளின் பல நெருக்கடிகளுக்கும் மத்தியில் போராடும் மக்களின் குரல் அடைக்கப்பட்டிருப்பதாக கொக்கரிக்கிறீர்களே தவிர... அதுவல்ல உண்மை. வன்னியில் இருந்து சொல்லக் கூடிய கருத்தை.. கொழும்பில் இருந்தோ.. ரொரண்டோவில் இருந்தோ நியூயோர்க்கில் இருந்தோ சொல்ல முடியாது. இதற்குள்.. சாப்பிட மட்டும் தான் வாய் திறக்கிறார்கள் மக்கள் எங்கிறீர்கள்.

அமெரிக்காவில் மட்டும் உரிமைக்காக திறக்கின்றனரோ. அங்கும் மக்கள் அடக்கித்தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிலையில் தான்.. அமெரிக்கா சர்வ வல்லரசார திகழுகிறது. அந்த மக்கள் அதை உணராத வகைக்கு அங்கு அடக்குமுறை இருக்கிறது. அது உணரப்படும் போது அமெரிக்காவும் சிதறிச் சின்னாபின்னமாகும்..! ஆனால் ஈழத்தில் வன்னியில் எம்மக்கள் இன்று தமது சுதந்திர வேட்கையை சிங்கள அரசை நோக்கி பிரயோகிக்கின்றனர். காரணம் அந்த மக்களுக்கு உரிமை பற்றி சிந்திக்க இடமளிக்கப்பட்டிருப்பதால் :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்... சிலவேளைகளில் நீங்கள் நன்றாக பகிடி விடுகின்றீர்கள் !! :):(

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்று கொஞ்சம் என்றாலும் தெரிந்தவர்கள் நிச்சயம் யாழில் உள்ளனர் ஐயா. சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்

ஏற்கனவே இந்த உரையாடல் தலைப்பை மீறி எங்கோ போய்விட்டது... தேவையில்லாத பதங்களை போட்டு, மேலும் நன்றாக திசை திருப்புகின்றீர்கள்... நன்றி

20,000 போராளிகளும் இன்னும் மக்களும் செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்து போராடியதால் தான் நீங்கள் 4 இலட்சம் பேர் ரொரண்டோ ஊசியிலைக் காடுகளுக்குள் குடியமர முடிந்ததோ..???! ஏன் இந்த 4 இலட்சம் பேரும் அவர்களின் வாரிசுகளும்.. வல்லைவெளி வடலிக்குள் குடியமர மறந்தார்கள்.. மறுக்கிறார்கள்..??! வல்லைவெளியில் இன்று ஜனநாயகம் பேசும் தரப்புக்கள் தானே நிற்கிறார்கள். மீளப் போய் குடியமரலாமே.. ஏன் யோசிக்கிறார்கள்..??! :D

இன்று உலகெங்கும் எமது விடுதலைப்போராட்டம் தடைசெய்யப்பட்டிருப்பினும்.. மக்கள் தான் அந்தத் தடைகளையும் மீறி போராடிக் கொண்டிருக்கின்றனர். விடுதலைக்கான பயணத்தை மக்கள் தான் தொடர்கின்றனர்.

போர்க்காலம் என்பது உலகெங்கும் நெருக்கடியான காலம் தான். உலகப் போர்களின் போதெல்லாம் மக்கள் விரும்பி போர்க்களம் போவதில்லை. அவர்கள் எதிரிகளால் போராட நிற்பந்திக்கப்பட்டதால் தான்.. போராடி வென்றார்கள். யாரும் சாவை விரும்பி அணைக்க போர்களம் போவதில்லை. சாவிலும்.. பெரிதாக தமது உரிமைகளை.. தாய் மண்ணை நேசித்ததால் தான் அவ்வாறு போராடி மடிந்தனர். அது உங்களால் முடியாது என்பதற்காக எல்லோரும் அப்படியன்று. இரண்டாம் உலகப் போரில் வெற்றி முழக்கமிட்டுச் சென்ற ஜேர்மனியப் படைகளை பல தோல்விகளின் பின்னும் சளைக்காமல் போராடியதால் தான் ரஷ்சியா வெற்றி கொண்டது. போராட்டக் காலங்களில் மக்கள் போராட்ட உணர்வூட்டப்பட்டவர்களாகவே வைத்திருக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அங்கு அதுவே சரியான வழிமுறை எதிரியை எதிர்கொள்வதற்கு.

அமெரிக்காவின் ஒருமைப்பாட்டையும் தான் எதிர்த்தும் தான் பேச முடியாது.. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தான் எதிர்த்துப் பேச முடியாது.. அங்கெல்லாம் சன நாய் அகம் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதை அச்சிப்பிசகாமல் ஏற்றுக் கொள்ளும் பங்குவம் படைத்த நீங்கள் எல்லாம் எதிரியின் சர்வதேச சக்திகளின் பல நெருக்கடிகளுக்கும் மத்தியில் போராடும் மக்களின் குரல் அடைக்கப்பட்டிருப்பதாக கொக்கரிக்கிறீர்களே தவிர... அதுவல்ல உண்மை. வன்னியில் இருந்து சொல்லக் கூடிய கருத்தை.. கொழும்பில் இருந்தோ.. ரொரண்டோவில் இருந்தோ நியூயோர்க்கில் இருந்தோ சொல்ல முடியாது. இதற்குள்.. சாப்பிட மட்டும் தான் வாய் திறக்கிறார்கள் மக்கள் எங்கிறீர்கள்.

அமெரிக்காவில் மட்டும் உரிமைக்காக திறக்கின்றனரோ. அங்கும் மக்கள் அடக்கித்தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிலையில் தான்.. அமெரிக்கா சர்வ வல்லரசார திகழுகிறது. அந்த மக்கள் அதை உணராத வகைக்கு அங்கு அடக்குமுறை இருக்கிறது. அது உணரப்படும் போது அமெரிக்காவும் சிதறிச் சின்னாபின்னமாகும்..! ஆனால் ஈழத்தில் வன்னியில் எம்மக்கள் இன்று தமது சுதந்திர வேட்கையை சிங்கள அரசை நோக்கி பிரயோகிக்கின்றனர். காரணம் அந்த மக்களுக்கு உரிமை பற்றி சிந்திக்க இடமளிக்கப்பட்டிருப்பதால் :)

நெடுக்ஸ் ஐயா,

நான் ஏற்கனவே கூறியது போல இந்த உரையாடல் தலைப்பை விட்டு வேண்டும் என்றே திசை திருப்பப் பட்டாச்சு... ஒரு புது திரியை ஆரம்பியுங்கல், உங்களின் அரசியல் மிகையுணர்ச்சி பதில்(களுக்கு) பதிலளிக்கின்றேன். ஆனால் நான் சொன்னதாக நீங்கள் கற்பனை பண்ணிய விடயங்கள் சிலவற்றை எழுதுகின்றேன்

1. வல்லை வெளியிலும் அல்லது அதனைப் போன்ற இராணுவ, அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும், சனநாயகம் இருக்கு என்றோ அல்லது அப் பிரதேசங்களை துப்பாக்கியி பிடிக்குள் வைத்து வெறியாட்சி நடாத்துபவர்கள் மக்கள் மயப் படுத்தப் பட்ட ஆட்சி முறையை கையாள்கின்றனர் என்றோ நான் எந்த இடத்தில் குறிப்பிட்டேன்?

2. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சனநாயகம் இருக்கு என்று அச்சிப்பிசகாமல் நான் ஏற்றுக்கொண்டதாக எந்த இடத்தில் குறிப்பிட்டு உள்ளேன்? அல்லது அவை பற்றி எனது கருத்து என்ன என்றாவது எங்காகினும் யாழில் முன்பு குறிப்பிட்டேனா?

ஒருவர் சொல்லாத, எவற்றிலுமே குறிப்பிடாதவற்றை குறிப்பிட்டதாக சொல்லி, கற்பனையாக கதையாடாதீர்கள். உங்களின் கருத்துகளை நியாயபடுத்துவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கும் அதே நேரத்தில் அதனை நேர்மையாக செய்யுங்கள். விவாதத்திற்கு நீங்கள் பதிலெழுத கூடியவாறு நான் எழுதாவிடின், உங்களின் விவாதத்திற்கு வசதிக்கேற்றவாறு நான் கூறியதாக கற்பனை செய்யாதீர்கள்

மற்றும் படி, மக்கள் மயபடுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்பதிலும், அவை உலகெங்கும் எவ்வாறு நடாத்தப்பட்டது, நடந்து வருகின்றது என்பதிலும், எனக்கு தெளிவான பார்வை இருக்கின்றது. அப்பார்வை உங்களின் பார்வையிலிருந்து அனேக விடயங்களில் வேறுபடுகின்றது. அந்த வேறுபாட்டை முன்வைப்பதற்கான எனது உரிமையை, நான் ரொரன்டோவின் ஊசியிலை காடுகளிற்கு இடம்பெயர்ந்ததாலோ, அல்லது வன்னியிலிருந்து போராடததனாலயோ இழக்கவில்லை என உறுதியாக நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

எல்லாம் தெரிந்த ஏகம்பரமா நீங்கள், அட எனக்கு தெரியாமல் போயிட்டுதே

:):(:D

:)நீங்கள் சித்தனா அல்லது பித்தனா?? இப்ப தெரிந்து கொண்டு என்ன "சிங்" "சொய்ங்" போடப் போகின்றீர்களா?? :D:D

Link to comment
Share on other sites

இன்னும் பாடி முடிக்கேல்லை போல பக்கங்கள் கூடுது.. :)

என்ன நடக்குது? என்னென்னவோ நடக்குது. :)

Link to comment
Share on other sites

ஹலோ ஜீவன் சார்,

தயவு செய்து கீழே இணைப்பில் உள்ள சிங்கள பாடலுக்கான மொழி பெயர்ப்பை தர முடியுமா?

http://au.youtube.com/watch?v=Cxp5WsuaMUo

என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

உங்கள் ரசிகன் கள்ளச்சாமி

மன்னிக்கணும் சாமியாரே

இது உங்களைப் போன்ற முனிவரைப் பத்திதான் பாடியிருக்கார் :)

நான் முன்னர் இணைத்த பாடல் தவறானது.

அதுவும் நீங்கள் இணைத்த பாடல் போன்றதே.

இருந்தாலும்

இதுதான் நீங்கள் இணைத்த சரியான பாடல் .... சாரி

கருத்தும் பாடலும் இதோ:-

லியதம்பரா மிருதுவான மலர் நீ

முனிவர்களின் மனதையும் மாற்றுவாய்

//யாருமில்லை உலகத்தில் அவள் போல்//

மாயை மாயை உலகத்தை ஏய்க்கும்

கனவே கனவே இருளின் கண்ணுக்குள் மிதக்கும்

வீணயின் நரம்புகளில்

மிருதுவான சுவரமே அவள்தான்

என் மனதுக்கு இனிமை தரும்

மதுவும் நீதான்

லியதம்பரா..../

கானல்தான் கானல்தான் எமை ஏய்க்கும்

தூரத்தில் வானும் கடலும் இணைவது போல்

முடிவு இல்லாது தட்டும் தரை போல நீ

தேன் கூடு போன்ற உன் விழியின்

கண் இமையே மிருதுதான்

என் கானகம் போன்ற வாழ்விற்கு

நீர் துளியே நீதான்

லியதம்பரா//

http://www.sinhalajukebox.org/cgi-bin/song...45&compose=

இங்கே உள்ள இணைப்பில் 1வது பாடல் அது.

பாடகர்: ஆத்மா லியனகே

சிங்களத்தில்:

லிய தம்பரா முது குசுமக்கி ஆஏ

தவ்சன் கே தெகனே சம பிந்தினா

நே லோக்கே ஜீவே அயய்

மாயாவ மாயவ லொவ ரவட்டணா

சிகினயக்கி சிகினயகி அந்துரே பாவெனா

வீணாவே தத் அத்தரே

முது சுவரய அயமய்

மா ஹதட்ட ரச கெனெனா

லியதம்பரா....

மிரிங்குவகி மிரிங்குவகி அப ரவட்டணா

துற ஏத்த சித்திஜயகி

நிம நொபெனா

நில் நயண பிங்கு தெலகி

நெத் சரய சுமுதுய்

மகே ஜீவே வெலிகத்தரே

திய பிந்து எயய்

லியதம்பரா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்.

மற்றும் படி, மக்கள் மயபடுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்பதிலும், அவை உலகெங்கும் எவ்வாறு நடாத்தப்பட்டது, நடந்து வருகின்றது என்பதிலும், எனக்கு தெளிவான பார்வை இருக்கின்றது. அப்பார்வை உங்களின் பார்வையிலிருந்து அனேக விடயங்களில் வேறுபடுகின்றது. அந்த வேறுபாட்டை முன்வைப்பதற்கான எனது உரிமையை, நான் ரொரன்டோவின் ஊசியிலை காடுகளிற்கு இடம்பெயர்ந்ததாலோ, அல்லது வன்னியிலிருந்து போராடததனாலயோ இழக்கவில்லை என உறுதியாக நம்புகின்றேன்.

எவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அவ்வாறே எங்களுக்கு எமது சமூகத்தில் போராடப்புறப்பட்டு.. அதே போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி ஊசியிலைக்காடுகளிடையே குடியேறியுள்ள.. கனடா வாழ் தமிழ் அடிமைகள் பற்றி நாமும் கற்பனை செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களிடம் தனி அனுமதி பெற வேண்டும் என்ற அவசியத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லையே..!

நாங்களும் போராட்ட பூமியில் வாழ்ந்தவர்கள் தான். அங்குள்ள சுதந்திரத்தை சுவாசித்தவர்கள் தாம். நாம் சாப்பிடமட்டும் வாய் திறக்கவில்லை. எமது ஐயங்களை தெளிவுறுத்த கேள்வி எழுப்பக் கூடிய சூழ்நிலைகளை விடுதலைப்புலிகள் பல தடவைகள் எமது பாடசாலைச் சூழலிலும் சரி.. பிற இடங்களிலும் சரி ஏற்படுத்தி தந்திருந்தனர். எனவே உங்களால் கற்பனை ரீதியாக ஒட்டுமொத்த சமூகத்தையும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை எம்முன் எழுப்ப முடியாது. இருந்தும் நீங்கள் எழுப்பும் போது.. பதிலுக்கு நாமும் கற்பனைகளுக்கு எதிரான உண்மைகளைச் சொல்வதில் தவறிருக்க வாய்ப்பில்லை.

எமது சமூகம் என்று விளித்துக் கொண்டதன் மூலம் பிற சமூகங்களில் பேச்சுக்கும் மக்கள் வாய்திறக்கினம் என்பதாக நீங்கள் ஏற்றுக் கொண்டுதானே கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது நாம் பிறசமூகங்களில் உள்ள பேச்சுச் சுதந்திரத்தின் போலித் தன்மையை இனங்காட்டி உங்களுக்கு வலியுறுத்த வேண்டியவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதற்கு எம்மைத் தூண்டியது தங்கள் ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு நிறைந்த கருத்தே ஆகும்.

எமது போராட்டம் தனி ஒரு குழுவினதல்ல. எமது போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அது 100% நடக்காமல் இருக்கலாம். ஆனால் ஆரம்பம் தொட்டு மக்களின் பங்களிப்பின்றி எமது போராட்டம் வளர்த்தெடுக்கப்படவில்லை. இது மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம். அதற்கு விலையாய் 80,000 மேற்பட்ட மக்கள் தம் இன்னுயிரை அளித்துள்ளனர். 20,000 இற்கும் மேற்பட்ட தங்கள் பிள்ளைகளைப் போராளிகளாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமன்றி இன்று சர்வதேச அளவில் புலம்பெயர் மக்கள் தம்மையும் போராட்ட சக்தியாக மாற்றிச் செயற்படத் தொடங்கி இருப்பது போராட்டம் மேலும் மேலும் மக்கள் மயமாவதையே எடுத்துக்காட்டுகிறது. 1987 இல் திலீபன் அண்ணா சொன்ன மக்கள் போராட்டமாக எமது போராட்டம் இன்று கணிசமான அளவுக்கு மாறி இருக்கிறது என்பது மறுதலிக்க முடியாத உண்மை. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அவ்வாறே எங்களுக்கு எமது சமூகத்தில் போராடப்புறப்பட்டு.. அதே போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி ஊசியிலைக்காடுகளிடையே குடியேறியுள்ள.. கனடா வாழ் தமிழ் அடிமைகள் பற்றி நாமும் கற்பனை செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களிடம் தனி அனுமதி பெற வேண்டும் என்ற அவசியத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லையே..!

உங்கள் மொழியில் கூறுவதானால், நீங்கள் இங்கிலாந்தில் (அல்லது வேறொரு வெளி நாடில்) போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி குடியேறியுள்ளதற்காக எல்லோரும் அப்படி என்று நினைத்தால் அது உங்களின் அறிவீனம். நான் கனடாவிற்கு புள்ளிகளின் அடிப்படையில் நிரந்தர வதிவுடமை அனுமதி பெற்று, குடும்பத்துடன் குடியேறியவன். எக் காலத்திலும் எனக்கு அகதி அந்தஸ்து கோர வேண்டிய தேவை வராது. இது ஒன்றும் பெருமை படக்கூடிய விடயம் அல்ல, ஆனால் நீங்கள் எல்லாரையும் எவ்வாறு உங்களைப் போன்றே பார்கின்றீர்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இது. கோபம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை பிரயோகங்களை போட்டு உங்களின் தரத்தை மட்டுமே உங்களால் குறைக்க முடியும். யுத்த அனர்த்தங்களால் வெளி நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி குடிபெயர்ந்த தமிழ் மக்களை இந்தளவிற்கு மட்டமாக கருதும் நீங்கள் தமிழ் இனத்தின் தேசிய விடுதலை பற்றி பேசுவது நகைப்புக்கிடமானது

நாங்களும் போராட்ட பூமியில் வாழ்ந்தவர்கள் தான். அங்குள்ள சுதந்திரத்தை சுவாசித்தவர்கள் தாம். நாம் சாப்பிடமட்டும் வாய் திறக்கவில்லை. எமது ஐயங்களை தெளிவுறுத்த கேள்வி எழுப்பக் கூடிய சூழ்நிலைகளை விடுதலைப்புலிகள் பல தடவைகள் எமது பாடசாலைச் சூழலிலும் சரி.. பிற இடங்களிலும் சரி ஏற்படுத்தி தந்திருந்தனர். எனவே உங்களால் கற்பனை ரீதியாக ஒட்டுமொத்த சமூகத்தையும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை எம்முன் எழுப்ப முடியாது. இருந்தும் நீங்கள் எழுப்பும் போது.. பதிலுக்கு நாமும் கற்பனைகளுக்கு எதிரான உண்மைகளைச் சொல்வதில் தவறிருக்க வாய்ப்பில்லை.

இதற்கு என்னால் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க முடியும். இப்படி கேள்வி கேட்ட எத்தனை பேர் எங்கு போனார்கள் என்றும் சொல்ல முடியும். ஆனால் யாழ் நிர்வாகம் என்னை தூக்கி வெளியே போட்டு விடும். அத்துடன் இந்த திரி அதற்கானதும் அல்ல.ஆனால் உங்கள் சப்பைக்கட்டை எல்லோரும் நம்பாது உண்மை தெரிந்த பலர் யாழிலும் உள்ளனர் மற்றும் உங்களை போன்ற மிகையுணர்சி தேசியவாதிகளால் யாழில் எழுதாமல் விட்டும் பலர் உள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக இந்த திரியில் இனி பதில் எழுதப் போவதும் இல்லை.

எமது சமூகம் என்று விளித்துக் கொண்டதன் மூலம் பிற சமூகங்களில் பேச்சுக்கும் மக்கள் வாய்திறக்கினம் என்பதாக நீங்கள் ஏற்றுக் கொண்டுதானே கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது நாம் பிறசமூகங்களில் உள்ள பேச்சுச் சுதந்திரத்தின் போலித் தன்மையை இனங்காட்டி உங்களுக்கு வலியுறுத்த வேண்டியவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதற்கு எம்மைத் தூண்டியது தங்கள் ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு நிறைந்த கருத்தே ஆகும். :icon_mrgreen:

ஆம் பேச்சுரிமை நன்கு உள்ள எத்தனையோ சமூகங்கள் இன்னமும் உள்ளன, நாடுகள் உள்ளன. ஆனால் நிச்சயம் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ அல்ல. ஆனால் உங்களின் கருத்து வங்குரோத்தனத்தை காட்ட நான் கூறாது விடயங்களை புகுத்தி உங்களின் வசதிகான போக்கில் உரையாடல்களை திசை திருப்ப முயல்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='னெடுக்கலபோவன்' டடெ='ணொவ் 3 2008, 03:20 PM' பொச்ட்='458146']

எமது போராட்டம் தனி ஒரு குழுவினதல்ல. எமது போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அது 100% நடக்காமல் இருக்கலாம். ஆனால் ஆரம்பம் தொட்டு மக்களின் பங்களிப்பின்றி எமது போராட்டம் வளர்த்தெடுக்கப்படவில்லை. இது மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம். அதற்கு விலையாய் 80,000 மேற்பட்ட மக்கள் தம் இன்னுயிரை அளித்துள்ளனர். 20,000 இற்கும் மேற்பட்ட தங்கள் பிள்ளைகளைப் போராளிகளாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமன்றி இன்று சர்வதேச அளவில் புலம்பெயர் மக்கள் தம்மையும் போராட்ட சக்தியாக மாற்றிச் செயற்படத் தொடங்கி இருப்பது போராட்டம் மேலும் மேலும் மக்கள் மயமாவதையே எடுத்துக்காட்டுகிறது. 1987 இல் திலீபன் அண்ணா சொன்ன மக்கள் போராட்டமாக எமது போராட்டம் இன்று கணிசமான அளவுக்கு மாறி இருக்கிறது என்பது மறுதலிக்க முடியாத உண்மை. :icon_mrgreen:

[/ஃஉஒடெ]

ஐயா.. மக்களால் வளர்த்தெடுக்கப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும், மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும் நிறைய வேறு பாடு உண்டு.

மற்றும், நேற்றும் கனடாவின் இளையோர் சமூகத்தினரால் ஏற்பாடு பத்தப்பட்ட நிகழ்விற்கு போனேன். அங்கு வந்து இருந்த எம்மவர்களின் எண்ணிக்கை நிச்சயம், நிச்சயம் நம்பிக்கை தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மொழியில் கூறுவதானால், நீங்கள் இங்கிலாந்தில் (அல்லது வேறொரு வெளி நாடில்) போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி குடியேறியுள்ளதற்காக எல்லோரும் அப்படி என்று நினைத்தால் அது உங்களின் அறிவீனம். நான் கனடாவிற்கு புள்ளிகளின் அடிப்படையில் நிரந்தர வதிவுடமை அனுமதி பெற்று, குடும்பத்துடன் குடியேறியவன். எக் காலத்திலும் எனக்கு அகதி அந்தஸ்து கோர வேண்டிய தேவை வராது. இது ஒன்றும் பெருமை படக்கூடிய விடயம் அல்ல, ஆனால் நீங்கள் எல்லாரையும் எவ்வாறு உங்களைப் போன்றே பார்கின்றீர்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இது. கோபம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை பிரயோகங்களை போட்டு உங்களின் தரத்தை மட்டுமே உங்களால் குறைக்க முடியும். யுத்த அனர்த்தங்களால் வெளி நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி குடிபெயர்ந்த தமிழ் மக்களை இந்தளவிற்கு மட்டமாக கருதும் நீங்கள் தமிழ் இனத்தின் தேசிய விடுதலை பற்றி பேசுவது நகைப்புக்கிடமானது.

இதற்கு என்னால் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க முடியும். இப்படி கேள்வி கேட்ட எத்தனை பேர் எங்கு போனார்கள் என்றும் சொல்ல முடியும். ஆனால் யாழ் நிர்வாகம் என்னை தூக்கி வெளியே போட்டு விடும். அத்துடன் இந்த திரி அதற்கானதும் அல்ல.ஆனால் உங்கள் சப்பைக்கட்டை எல்லோரும் நம்பாது உண்மை தெரிந்த பலர் யாழிலும் உள்ளனர் மற்றும் உங்களை போன்ற மிகையுணர்சி தேசியவாதிகளால் யாழில் எழுதாமல் விட்டும் பலர் உள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக இந்த திரியில் இனி பதில் எழுதப் போவதும் இல்லை.

ஆம் பேச்சுரிமை நன்கு உள்ள எத்தனையோ சமூகங்கள் இன்னமும் உள்ளன, நாடுகள் உள்ளன. ஆனால் நிச்சயம் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ அல்ல. ஆனால் உங்களின் கருத்து வங்குரோத்தனத்தை காட்ட நான் கூறாது விடயங்களை புகுத்தி உங்களின் வசதிகான போக்கில் உரையாடல்களை திசை திருப்ப முயல்கின்றீர்கள்.

சொந்த தேசத்தை விட்டு.. பொருளாதார அகதியானதை.. கனடாவில் புள்ளி அடிப்படையில் வந்தேன் என்று சொல்லி.. உங்களின் அடிமை வாழ்வை மறைக்க முற்படும் போதே தெரிகிறது.. உங்களின் தேசப்பற்றும்.. தேச விடுதலைப்போராட்டம் பற்றிய புரிதலும் எந்தளவுக்கு விசாலமானது என்பது.

வெளிநாட்டுக்கு எவர் புள்ளி அடிப்படையில் வருகிறார். ஊரில் உழைப்பதால் போதிய வருமானம் இல்லை என்று பேராசை கொண்டவர்களே அதிகம் வருகின்றனர். எம் பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.. கனடிய பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர்களாக விளங்கிக் கொண்டும்.. ஊரோடுதான் இருந்தனர். அவர்களுக்கு புள்ளி அடிப்படையில் பொருளாதார அகதி அந்தஸ்துத் தேட வழிதெரியாமல் இருக்கவில்லை. அது அவர்களின் தேசப்பற்றுக்கு அடையாளம்.

கேள்வி கேட்ட எனக்கே எதுவும் நடக்காத போது.. எவர் என்னென்ன காரணத்துக்காக போனார்கள் என்பதை ஆராய வேண்டும். அதை ஆராயாமல் கேள்வி கேட்டதற்காக விசாரிக்கப்பட்டனர் என்பது சரியானதல்ல. அப்படி என்றால் நான் கூட விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் விடுதலைப்புலிகள் மக்களின் பேச்சுரிமையை எப்போதும் மறுதலிக்கவில்லை. மக்கள் கருத்துச் சொல்ல பல வழிகளை கையாண்டிருந்தனர். மக்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட தகவல் பெட்டிகளைக் கூட திறந்திருந்தனர். வசதி படைத்த நாடுகளில் கூட அரசிடம் ஒரு பொதுமகன் தன் குறையைச் சொல்ல போதிய வசதி கிடையாது. ஆனால்.. பேச்சுரிமை என்ற போர்வையில்.. எதிரிக்கு போராட்டத்தை மக்களைக் காட்டிக் கொடுக்க முனைந்தவர்கள் பலர். அவர்கள் தண்டனைக்குரியவர்களே. அவர்கள் சாதாரண மக்களாகக் கருதப்பட முடியாதவர்கள். எந்த தேசத்திலும் தேசத்துரோகிகளுக்கு தண்டனை ஒன்றுதான்.

பேச்சுரிமையில் மற்றைய நாடுகளை ஒப்பிட முதல்.. தமிழீழம் வழங்கும் பேச்சுரிமை மற்றவையை விட சிறப்பு என்பதை உணர்ந்தவர்கள் நாம். நாங்கள் பொதுமக்கள். எங்களுடைய கருத்துக்கள் பொதுமக்கள் சார்ந்தது. தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் சார்பில்.. பேச்சுரிமை என்ன வாழ்வுரிமையைக் கூட எதிர்பார்ப்பது கடினம்..!

இங்கு கருத்துதான் பகரப்படுகிறதே தவிர.. அதில் உணர்ச்சி வெளிப்படுவதாக எண்ணிக்கொண்டு.. ஒதுங்கிறார்கள் என்று கவலைப்படுவது மோசமான கருத்துக்கள நாகரிகமற்ற சிந்தனையின் வெளிப்பாடு. கருத்தைக் கருத்தால் நாகரிகமான முறையில் சொல்ல.. நிறுவ இங்கு எவருக்கும் எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.. மக்களால் வளர்த்தெடுக்கப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும், மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும் நிறைய வேறு பாடு உண்டு.

மற்றும், நேற்றும் கனடாவின் இளையோர் சமூகத்தினரால் ஏற்பாடு பத்தப்பட்ட நிகழ்விற்கு போனேன். அங்கு வந்து இருந்த எம்மவர்களின் எண்ணிக்கை நிச்சயம், நிச்சயம் நம்பிக்கை தரவில்லை.

நம்பிக்கையை எதிர்பார்க்கக் கூடாது. மாறாக நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மக்கள் போராட்டத்தில் மக்கள் தான் போராளிகள்.. பங்காளிகள். எவர் ஒதுங்கி இருக்கிறாரோ அவரைப் பார்த்து திட்டிக் கொண்டு.. நம்பிக்கை வரவில்லை என்று அபிப்பிராயம் சொல்வதல்ல.. மக்கள் போராட்டத்தின் தன்மை. ஒதுங்கி இருப்பவர்களை அரவணைத்துக் கொண்டு போராட்டப் பாதை வழி செல்வதுதான் ஒவ்வொரு தமிழ் பொதுமகனினதும்.. மகளினதும் போராட்டக்கடமையே தவிர.. அவன் வரவில்லை.. இவன் வரவில்லை.. என்று விமர்சனம் செய்து கொண்டு.. போராட்டத்தில் ஒருங்கிணையும் மக்களின் நம்பிக்கை மீது அவநம்பிக்கையை விதைப்பதல்ல போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதன் படிநிலை.

மக்கள் போராட்டத்தில் அடிப்படையைக் கூட கடைப்பிடிக்காமல்.. மக்கள் மயம் என்பதன் அர்த்தம் புரியும்.. அது தெரியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தெரிந்தால்.. பங்காளியாகி.. மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை வழிநடத்துங்கள். எமது போராட்டப் பாதையில் அதன் வெற்றி இலக்கை துரிதப்படுத்த. அதுதான் எமக்குத் தேவை இப்போ. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சொந்த தேசத்தை விட்டு.. பொருளாதார அகதியானதை.. கனடாவில் புள்ளி அடிப்படையில் வந்தேன் என்று சொல்லி.. உங்களின் அடிமை வாழ்வை மறைக்க முற்படும் போதே தெரிகிறது.. உங்களின் தேசப்பற்றும்.. தேச விடுதலைப்போராட்டம் பற்றிய புரிதலும் எந்தளவுக்கு விசாலமானது என்பது.

வெளிநாட்டுக்கு எவர் புள்ளி அடிப்படையில் வருகிறார். ஊரில் உழைப்பதால் போதிய வருமானம் இல்லை என்று பேராசை கொண்டவர்களே அதிகம் வருகின்றனர். எம் பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.. கனடிய பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர்களாக விளங்கிக் கொண்டும்.. ஊரோடுதான் இருந்தனர். அவர்களுக்கு புள்ளி அடிப்படையில் பொருளாதார அகதி அந்தஸ்துத் தேட வழிதெரியாமல் இருக்கவில்லை. அது அவர்களின் தேசப்பற்றுக்கு அடையாளம்.

1. நான் நிச்சயம் கனடாவில் நன்கு உழைக்க முடியும், என் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெற முடியும், குடும்பத்தை நன்றாக நிம்மதியாக வைத்திருக்க முடியும் என்ற காரணத்தினால் தான் வந்தேன். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.அத்துடன் நிச்சயம், நிச்சயம் போர் அற்ற சூழலை விரும்பினேன். இழப்புகள் என்னுடன் மட்டுமே போகட்டும் என் பிள்ளைக்கு வேண்டவே வேண்டாம் என விரும்பினேன். என்னால் முடிந்தால் இன்னும் எல்லோரையும் இப்படி கூப்பிட முயல்வேன்

2. இவ்வளவு பேசும் நீங்கள், எவ்வளவு சுதந்திரத்தை அனுபவித்த நீங்கள் ஏன் இங்கிழாந்து வந்தீர்கள்? சுதந்திர வாழ்கை வேண்டாம், அடிமை வாழ்க்கை வேண்டும் என்ற ஆவலினாலா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. நான் நிச்சயம் கனடாவில் நன்கு உழைக்க முடியும், என் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெற முடியும், குடும்பத்தை நன்றாக நிம்மதியாக வைத்திருக்க முடியும் என்ற காரணத்தினால் தான் வந்தேன். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.அத்துடன் நிச்சயம், நிச்சயம் போர் அற்ற சூழலை விரும்பினேன். இழப்புகள் என்னுடன் மட்டுமே போகட்டும் என் பிள்ளைக்கு வேண்டவே வேண்டாம் என விரும்பினேன். என்னால் முடிந்தால் இன்னும் எல்லோரையும் இப்படி கூப்பிட முயல்வேன்

2. இவ்வளவு பேசும் நீங்கள், எவ்வளவு சுதந்திரத்தை அனுபவித்த நீங்கள் ஏன் இங்கிழாந்து வந்தீர்கள்? சுதந்திர வாழ்கை வேண்டாம், அடிமை வாழ்க்கை வேண்டும் என்ற ஆவலினாலா?.

நான் என் தேசத்தில் போர் அதனால் என் உறவுகள் வாழ முடியவில்லை என் வாழ்க்கை தான் போனது போயிட்டுது எனியாவது நான் வெளிநாட்டுக்குப் போய் பெட்டை ஒன்றைக் கட்டி.. அதன் மூலம் சந்ததி பெருவிருத்தி செய்து நான் வாழும் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் அதனை என் உழைப்பால் முன்னேற்றலாம் என்று வந்திருக்கிறேன்.. என்று சொல்ல முடியாது.

நான் என் தேசத்தின் எதிர்காலத்தில் அதற்கு எவ்வாறு என்னால் உபயோகமாக சேவை செய்ய முடியும் என்ற ரீதியில் இங்கு வாழ்கிறேனே தவிர.. வெள்ளையனிடம் என் தேசத்தை.. அதன் விடுதலைப் போராட்டத்தை.. அதை வேண்டி நிற்கும் மக்களைக் காட்டிக் கொடுத்து.. எனது வாழ்க்கைதான் போச்சுது.. என் பிள்ளையாவது குண்டுச் சத்தம் கேட்காமல் வாழட்டும் என்று வரவில்லை.

எமது மக்கள் சொந்த பூமியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போது அவர்களுடன் கூட வாழ்ந்து அவர்களின் தேவைகளை குறைவின்றி நிவர்த்தி செய்ய எம்மாலான பட்டறிவைப் பயன்படுத்த அறிவைப் பெற்றுக் கொள்ள முனைகின்றோமே தவிர.. எமது தேசத்துக்கு வெளியில் எமக்கு சுதந்திர வாழ்வில்லை என்பதில் நாம் தெளிவாயே இருக்கின்றோம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.