Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

நான் என் தேசத்தில் போர் அதனால் என் உறவுகள் வாழ முடியவில்லை என் வாழ்க்கை தான் போனது போயிட்டுது எனியாவது நான் வெளிநாட்டுக்குப் போய் பெட்டை ஒன்றைக் கட்டி.. அதன் மூலம் சந்ததி பெருவிருத்தி செய்து நான் வாழும் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் அதனை என் உழைப்பால் முன்னேற்றலாம் என்று வந்திருக்கிறேன்.. என்று சொல்ல முடியாது.

நான் என் தேசத்தின் எதிர்காலத்தில் அதற்கு எவ்வாறு என்னால் உபயோகமாக சேவை செய்ய முடியும் என்ற ரீதியில் இங்கு வாழ்கிறேனே தவிர.. வெள்ளையனிடம் என் தேசத்தை.. அதன் விடுதலைப் போராட்டத்தை.. அதை வேண்டி நிற்கும் மக்களைக் காட்டிக் கொடுத்து.. எனது வாழ்க்கைதான் போச்சுது.. என் பிள்ளையாவது குண்டுச் சத்தம் கேட்காமல் வாழட்டும் என்று வரவில்லை.

எமது மக்கள் சொந்த பூமியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போது அவர்களுடன் கூட வாழ்ந்து அவர்களின் தேவைகளை குறைவின்றி நிவர்த்தி செய்ய எம்மாலான பட்டறிவைப் பயன்படுத்த அறிவைப் பெற்றுக் கொள்ள முனைகின்றோமே தவிர.. எமது தேசத்துக்கு வெளியில் எமக்கு சுதந்திர வாழ்வில்லை என்பதில் நாம் தெளிவாயே இருக்கின்றோம்..! :icon_mrgreen:

சரி நெடுக்கு

உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். எப்போது உங்கள் பட்டறிவுப் படிப்பை முடிச்சு. அதன் மூலம் நாட்டுக்குச் சேவையாற்ற செல்லப் போகின்றீர்கள். அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அதனால் மற்றயவர்களும் அறிந்து உங்களைப் போல் சேவையாற்ற முன் வரலாமல்லவா!!

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக்கு

உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். எப்போது உங்கள் பட்டறிவுப் படிப்பை முடிச்சு. அதன் மூலம் நாட்டுக்குச் சேவையாற்ற செல்லப் போகின்றீர்கள். அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அதனால் மற்றயவர்களும் அறிந்து உங்களைப் போல் சேவையாற்ற முன் வரலாமல்லவா!!

பட்டறிவு தேறின உடன போறதுதான். என் தேசத்தில் படிந்த இரத்தக்கறைக்குப் பயந்து நான் ஓடி ஒளிக்கமாட்டன். எத்தனையோ கரும்புலிகள் தங்கள் வாழ்க்கையையே முழுமையாக மக்களுக்காக அர்ப்பணிக்கும் போது அற்பம்.. எங்கள் வாழ்வில் ஒரு பகுதியை என்றாலும் அர்ப்பணிக்க முன் வர வேண்டும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பட்டறிவு தேறின உடன போறதுதான். என் தேசத்தில் படிந்த இரத்தக்கறைக்குப் பயந்து நான் ஓடி ஒளிக்கமாட்டன். எத்தனையோ கரும்புலிகள் தங்கள் வாழ்க்கையையே முழுமையாக மக்களுக்காக அர்ப்பணிக்கும் போது அற்பம்.. எங்கள் வாழ்வில் ஒரு பகுதியை என்றாலும் அர்ப்பணிக்க முன் வர வேண்டும். :icon_mrgreen:

பட்டறிவு தேறிய பின் என்பது எனக்குப் புரியவில்லை. படிப்பதற்கு ஒரு எல்லையில்லை. வாழ்நாள் முழுக்க படித்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஒரு எல்லையை தீர்மானித்திருப்பீர்கள். அந்த எல்லை என்ன. அப்படிப்பட்ட படிப்பு எப்போ முடிகின்றது?? இது தெரிந்தால் தானே உங்கள் வார்த்தையின் உண்மைகளையும் புரிந்து கொள்ள முடியும். மற்றும்படி "படித்தேன்", "படித்துக் கொண்டிருக்கின்றேன்", "படிப்பேன்" என்பதெல்லாம் எல்லோராலும் எழுத முடிந்த ஒன்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டறிவு தேறிய பின் என்பது எனக்குப் புரியவில்லை. படிப்பதற்கு ஒரு எல்லையில்லை. வாழ்நாள் முழுக்க படித்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஒரு எல்லையை தீர்மானித்திருப்பீர்கள். அந்த எல்லை என்ன. அப்படிப்பட்ட படிப்பு எப்போ முடிகின்றது?? இது தெரிந்தால் தானே உங்கள் வார்த்தையின் உண்மைகளையும் புரிந்து கொள்ள முடியும். மற்றும்படி "படித்தேன்", "படித்துக் கொண்டிருக்கின்றேன்", "படிப்பேன்" என்பதெல்லாம் எல்லோராலும் எழுத முடிந்த ஒன்றே.

இவ்வளவு விபரமா விடுப்புக் கேட்கிறீங்களே.. எங்களோடு இணைந்து தாயகத்துக்கு வரத்தயாராக இருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். மிச்சம் மீது தேவை என்றால் சொல்லலாம். நீங்கள் விடுப்புக் கேட்டுவிட்டு.. சுவிஸ்லாந்தில் பதுங்கி இருந்திடுவீர்கள்.. நாங்கள் மக்களுக்காக தொண்டு செய்ய விரும்பி.. உங்களிடம் சொல்லிவிட்டு கட்டுநாயக்காவில் இறங்கவே ஒட்டுக்குழுவினர் சகிதம்.. சிறீலங்காப் படையினர் காத்திருப்பர் வரவேற்க. எமக்கும் தற்பாதுகாப்பு அவசியம். இங்கும் பல ஒட்டுக்குழுவினரும்.. அரச உளவாளிகளும் அங்கத்தவர்களாக இருக்கலாம் இல்லையா..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இவ்வளவு விபரமா விடுப்புக் கேட்கிறீங்களே.. எங்களோடு இணைந்து தாயகத்துக்கு வரத்தயாராக இருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். மிச்சம் மீது தேவை என்றால் சொல்லலாம். நீங்கள் விடுப்புக் கேட்டுவிட்டு.. சுவிஸ்லாந்தில் பதுங்கி இருந்திடுவீர்கள்.. நாங்கள் மக்களுக்காக தொண்டு செய்ய விரும்பி.. உங்களிடம் சொல்லிவிட்டு கட்டுநாயக்காவில் இறங்கவே ஒட்டுக்குழுவினர் சகிதம்.. சிறீலங்காப் படையினர் காத்திருப்பர் வரவேற்க. எமக்கும் தற்பாதுகாப்பு அவசியம். இங்கும் பல ஒட்டுக்குழுவினரும்.. அரச உளவாளிகளும் அங்கத்தவர்களாக இருக்கலாம் இல்லையா..! :rolleyes:

உங்களை நான் விடுப்புப் புடுங்கவில்லை. உங்கள் உண்மையான முகம் என்வென்பதை நானும் மற்றவர்களும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது அல்லவா. நீங்கள் ஒரு ஆண்டைக் குறிப்பிட்டு அந்த ஆண்டு படிப்பு முடிகின்றது அதன் பின் தாயகத்தில் சேவையாற்றப் போகின்றேன் என்று கூறியிருந்தால் உங்கள் வார்த்தையில் உண்மை இருந்திருக்கும். நீங்கள் என்ன திகதி தாயகம் செல்கின்றீர்கள் என்றா நான் கேட்டேன். உங்கள் குட்டு உடைபடுவதை உணர்ந்து எத்தனை நொண்டிச் சாட்டுகளை வைக்கின்றீர்கள். உண்மையான சேவை மனப்பாண்மை உள்ளவர் எப்போது வேண்டுமென்றாலும் செல்லலாம். என்னையும் வருவீர்களா என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளீர்கள். ஏன் என்னையும் உங்கள் தம்பட்டத்ிற்கு துணை சேர்க்கவா?? அதற்கு உங்களைப் போல் நானும் இங்கு தம்பட்டம் அடித்து மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொதுவாகவே "செய்பவர்கள் சொல்வதில்லை", "சொல்பவர்கள் செய்வதில்லை". :lol: இது உங்களுக்கும் நன்கு பொருந்துகின்றது. :icon_mrgreen:

இந்த விடயத்தில் நிழலியின் வார்த்தையைப் பாராட்டலாம். அவர் நினைத்திருந்தால் கூட உங்களைப் போல் வாய்ச்சவடால் விட்டிருக்கலாம். ஆனால் அவர் தனது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்தே தான் வெளிநாடு வந்ததாக உண்மையை எழுதினார்.

Link to comment
Share on other sites

http://www.sinhalajukebox.org/cgi-bin/song...45&compose=

இங்கே உள்ள இணைப்பில் 1வது பாடல் அது.

பாடகர்: ஆத்மா லியனகே

சிங்களத்தில்:

அஜீவன், அண்ணா எனக்கு மதுர வசந்தே எண்டுற சிங்களப்பாடல் மிகவும் பிடிக்கும். சூப்பரான ஒரு பாடல். இணையத்தில கனகாலமா தேடிப்பாத்தன். கிடைக்கவில்ல. உங்களிட்ட அந்தப்பாடல் இருந்தால் கேட்கிறதுக்கு இணைச்சுவிடுவீங்களோ? மதுர வசந்தே.. மல்வல்... எண்டு ஆரம்பிக்கும். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen:நீங்கள் சித்தனா அல்லது பித்தனா?? இப்ப தெரிந்து கொண்டு என்ன "சிங்" "சொய்ங்" போடப் போகின்றீர்களா?? :rolleyes::lol:

முன்பே தெரிந்திருந்தால் எனக்கு நேற்று ஒர் இடத்தில் அரித்தது(கடித்தது) எங்கே என்று கேட்டு உங்களை டெஸ்டு பண்ணி பாத்திருப்பேன், உங்களுக்கு உண்மையிலேயே எல்லாம் தெரியுமா என்று. :D:D:D

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

ம்ம்ம்... 33 வயதெல்லாம் இப்போது 'வயது போனவர்கள்' பட்டியலில் சேர்த்தாச்சா?

30 வயதுக்கு மேற்பட்டா ஈழத்தமிழர்கள் எல்லோரும் எம் போராட்டம் ஆயுதப்போராட்டமாக ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கு ஒரு சாட்சியாக இருப்பவர்கள். இயக்கங்கள் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்று வரை போராட்டத்தினை அவதானிப்பவர்கள் அல்லது அதன் பங்காளிகளாக இருந்தவர்கள்/இருப்பவர்கள். அதனால் அனுபம் அதிகம் அது சொல்லும் பாடங்களும் அதிகம்

உங்களின் வயது சிறிதென்றால், உங்களின் அப்பா அம்மாவிடம் கேட்டு பாருங்கள்... அவர்களில் அனேகர் ஈழ போராட்டம் தொடர்பாக பல ஆழமான கருத்துகளை இலகுவாக சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

முன்பே தெரிந்திருந்தால் எனக்கு நேற்று ஒர் இடத்தில் அரித்தது(கடித்தது) எங்கே என்று கேட்டு உங்களை டெஸ்டு பண்ணி பாத்திருப்பேன், உங்களுக்கு உண்மையிலேயே எல்லாம் தெரியுமா என்று. :rolleyes::lol::D

:icon_mrgreen:நல்ல வேளை உங்கள் அரிப்புகளுக்கெல்லாம் நான் தான் காரணமென்று சொல்லாமல் விட்டீர்கள். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen:நல்ல வேளை உங்கள் அரிப்புகளுக்கெல்லாம் நான் தான் காரணமென்று சொல்லாமல் விட்டீர்கள். :D:rolleyes:

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு அது தெரியாமல் இருக்குமா? இப்படி டபுள் மீனிங்கில் எடுக்ககூடியவர் என்பதால்தான் அடைப்பு குறிக்குள் கடி என போட்டேன், :lol:

Link to comment
Share on other sites

நான் யாழ் குடாவில் மூன்று காலப் பகுதிகளிலும் இருந்துள்ளேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலம், அரச கட்டுப்பாட்டுக் காலம், சமாதான காலம். இம் மூன்று காலங்களிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகள் இருந்தன. கேள்விகேட்ட பலருக்கு நடந்ததை இங்கு சொன்னால் வெட்டி விடுவீனம் :lol: . உதாரணத்திற்கு ஒன்று. சமாதான காலத்திலே அரசியல் பணிக்காக போராளிகள் யாழ் வந்த காலமது. எமது பள்ளிக்கூட உயர்தர வகுப்பு பெடியளையும் அரசியல் துறை சந்திக்க விரும்பி, அமுதாப் அண்ணா (இப்போ சாள்ஸ் அன்டனி சிறப்புப் படைத்தளபதியாக இருக்கிறார், நன்கு பேசக்கூடியவர்), லோரன்ஸ் அண்ணா தலைமையில ஒரு குழுவாக வேரூர் இடத்தில் சந்தித்தார்கள். அப்போது குழுவாக பிரித்து எல்லோரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொழுது எனது குழுவிலிருந்த எனது இரண்டு நண்பர்கள் மிகச் சிறந்த, சாதுரியமான இரு கேள்விகளை, கலந்துரையாடலை நடத்தியவரைக் கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இருவரையும் தனியக் கொண்டுபோய் வெருட்டு வெருட்டு எண்டு வெருட்டினார்கள். இங்கு இருக்கும் கணணி போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள். போராட்டம் 80, 90 2000 என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஆரம்பித்தது வேறு விதம், நடந்தது வேறுவிதம், இப்போது வேறுவிதம். வேறு ஒரு திரியிலும் இந்தக் கேள்வியக் கேட்டனான், உங்களில எத்தின பேர் வன்னிக்கு பொய் ஆயுதமெடுத்து அடிபடத் தயார்? இப்ப அங்க இருக்கிற நிலையில காசு பணம் தேவையில்லை, அனுப்பினாலும் கிடைக்காது, ஆயுதங்களும் கனக்க வச்சிருக்கீனம், ஆக்கள் தான் தேவை. இங்க நிண்டுகொண்டு ஆரோ ரெண்டு பேர் எதையோ பற்றிப் பாட எதையோ சொல்லி கருத்து எழுதுகிறீர்கள். :rolleyes: நான் 1990-2006 காலப் பகுதியில் யாழ்குடாவில் இருந்தேன், அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கூறுகிறேன். எனது கருத்துப்படி அக்கருத்துக்களே இப்போது மாறியிருக்கும். நீங்கள் யாராவது 80, 90 களில் யாழில் இருந்துவிட்டு இப்போதும் மக்களின் மனநிலை, செயற்பாடு எல்லாம் அப்பிடியே இருக்கும் என நினைப்பது அறிவீனம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

:icon_mrgreen:அட கைக்குழந்தை ஒண்டு கருத்துச் சொல்லுது. அது தான் ஒண்ணும் புரியவில்லை. செல்லம் முதலிலே வாயிலை இருக்கிற சூப்பியை ஏடுத்து விட்டு கதையுங்கோ. அப்பவாவது ஏதாவது புரியுதா பார்ப்பம். :lol::D

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு அது தெரியாமல் இருக்குமா? இப்படி டபுள் மீனிங்கில் எடுக்ககூடியவர் என்பதால்தான் அடைப்பு குறிக்குள் கடி என போட்டேன், :D

:rolleyes:அட நானும் உங்க மீனிங்கில தான் பதில் தந்தனான். நீங்கள் ஏன் அதை டபுள் மீனிங்காய் பார்க்கிறீங்க. உங்களுக்கு எதையும் ஒழுங்காய் பார்க்க வராதோ?? :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நான் விடுப்புப் புடுங்கவில்லை. உங்கள் உண்மையான முகம் என்வென்பதை நானும் மற்றவர்களும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது அல்லவா. நீங்கள் ஒரு ஆண்டைக் குறிப்பிட்டு அந்த ஆண்டு படிப்பு முடிகின்றது அதன் பின் தாயகத்தில் சேவையாற்றப் போகின்றேன் என்று கூறியிருந்தால் உங்கள் வார்த்தையில் உண்மை இருந்திருக்கும். நீங்கள் என்ன திகதி தாயகம் செல்கின்றீர்கள் என்றா நான் கேட்டேன். உங்கள் குட்டு உடைபடுவதை உணர்ந்து எத்தனை நொண்டிச் சாட்டுகளை வைக்கின்றீர்கள். உண்மையான சேவை மனப்பாண்மை உள்ளவர் எப்போது வேண்டுமென்றாலும் செல்லலாம். என்னையும் வருவீர்களா என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளீர்கள். ஏன் என்னையும் உங்கள் தம்பட்டத்ிற்கு துணை சேர்க்கவா?? அதற்கு உங்களைப் போல் நானும் இங்கு தம்பட்டம் அடித்து மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொதுவாகவே "செய்பவர்கள் சொல்வதில்லை", "சொல்பவர்கள் செய்வதில்லை". :rolleyes: இது உங்களுக்கும் நன்கு பொருந்துகின்றது. :icon_mrgreen:

இந்த விடயத்தில் நிழலியின் வார்த்தையைப் பாராட்டலாம். அவர் நினைத்திருந்தால் கூட உங்களைப் போல் வாய்ச்சவடால் விட்டிருக்கலாம். ஆனால் அவர் தனது குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்தே தான் வெளிநாடு வந்ததாக உண்மையை எழுதினார்.

உங்களுக்கோ அல்லது நிழலிக்கோ நான் எனது சொந்த வாழ்க்கையில் உள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அறிவித்து விளம்பரத் தேடிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் உங்கள் போன்றோரிடம் இருந்து எழக்கூடிய ஆபத்துக்களையும் வலிய விலைக்கு வாங்க வேண்டிய தேவையும் இல்லை. என்னை உங்களுக்கு இனங்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

வாய்ச்சவாடல்.. இயலாதன்.. குட்டு உடைத்தல்.. இப்படி எம் தமிழர்களின் இயலாமையில் வெளிப்படும் வார்த்தைகளை நான் உங்கள் போன்றவர்களிடம் கேட்டுக் களைத்துப் போய்விட்டேன்.

இப்ப வரைக்கும்.. எனது தேசத்தின் மீது எனது கருசணையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தும்.. நீங்கள் ஏதோ சுவிஸ்லாந்தின் பூர்வீகக் குடிமகன் என்ற தோறனையில் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். எனது நிகழ்ச்சித்திட்டங்களை சொல்லக் கேட்கிறீர்கள். இத்தனைக்கு வசம்பு என்ற பெயரில் எழுதப்படும் கருத்துக்களைத் தவிர நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. உண்மையில் நீங்கள் சுவிஸில் இருந்துதானா வருகிறீர்கள் என்ற எதுவுமே தெரியாத ஒரு போலிச் சூழலுக்குள் உங்களை வைத்துக் கொண்டு என்னிடம் உண்மையை.. அரிச்சந்திர காண்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்.

அதற்கு வசம்பண்ண.. ஏமாற யாராவது இருந்தா இருந்தி வைச்சுக் கருத்தெழுதுங்கோ.. அவன் கேணத்தனமா உங்களோடு வீராப்பென்று சொந்த சோகக்கதையை அள்ளிவிடுவான்.

நீங்கள் வெறும் கருத்தாளன். அந்த எல்லையில் நானும் வெறும் கருத்தாளன். ஊரில் சொல்வார்கள்.. கரடி சண்டை இடும் போது எதிராளியின் பலத்துக்கு நிகராக தன்னை பாவனை செய்து கொண்டுதான் சண்டை இடுமாம். சாச்சா.. அந்தக் கரடிக்கே அவ்வளவு புத்தி இருக்கேக்க.. கதைவிட்டு கதையளந்து.. கணணியோட உங்கள் பிரச்சாரம் முடிந்திட்டுது என்று மகிழ என்மீது.. வாய்ச்சவாடல்.. குட்டு உடைந்தது போன்ற இயலாமைக்குரிய பதங்களை தெளிக்கும் போதே உங்களின் நியாயம் புரிகிறது வசம்பண்ணன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் குடாவில் மூன்று காலப் பகுதிகளிலும் இருந்துள்ளேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலம், அரச கட்டுப்பாட்டுக் காலம், சமாதான காலம். இம் மூன்று காலங்களிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகள் இருந்தன. கேள்விகேட்ட பலருக்கு நடந்ததை இங்கு சொன்னால் வெட்டி விடுவீனம் :lol: . உதாரணத்திற்கு ஒன்று. சமாதான காலத்திலே அரசியல் பணிக்காக போராளிகள் யாழ் வந்த காலமது. எமது பள்ளிக்கூட உயர்தர வகுப்பு பெடியளையும் அரசியல் துறை சந்திக்க விரும்பி, அமுதாப் அண்ணா (இப்போ சாள்ஸ் அன்டனி சிறப்புப் படைத்தளபதியாக இருக்கிறார், நன்கு பேசக்கூடியவர்), லோரன்ஸ் அண்ணா தலைமையில ஒரு குழுவாக வேரூர் இடத்தில் சந்தித்தார்கள். அப்போது குழுவாக பிரித்து எல்லோரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொழுது எனது குழுவிலிருந்த எனது இரண்டு நண்பர்கள் மிகச் சிறந்த, சாதுரியமான இரு கேள்விகளை, கலந்துரையாடலை நடத்தியவரைக் கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இருவரையும் தனியக் கொண்டுபோய் வெருட்டு வெருட்டு எண்டு வெருட்டினார்கள். இங்கு இருக்கும் கணணி போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள். போராட்டம் 80, 90 2000 என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஆரம்பித்தது வேறு விதம், நடந்தது வேறுவிதம், இப்போது வேறுவிதம். வேறு ஒரு திரியிலும் இந்தக் கேள்வியக் கேட்டனான், உங்களில எத்தின பேர் வன்னிக்கு பொய் ஆயுதமெடுத்து அடிபடத் தயார்? இப்ப அங்க இருக்கிற நிலையில காசு பணம் தேவையில்லை, அனுப்பினாலும் கிடைக்காது, ஆயுதங்களும் கனக்க வச்சிருக்கீனம், ஆக்கள் தான் தேவை. இங்க நிண்டுகொண்டு ஆரோ ரெண்டு பேர் எதையோ பற்றிப் பாட எதையோ சொல்லி கருத்து எழுதுகிறீர்கள். :rolleyes: நான் 1990-2006 காலப் பகுதியில் யாழ்குடாவில் இருந்தேன், அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கூறுகிறேன். எனது கருத்துப்படி அக்கருத்துக்களே இப்போது மாறியிருக்கும். நீங்கள் யாராவது 80, 90 களில் யாழில் இருந்துவிட்டு இப்போதும் மக்களின் மனநிலை, செயற்பாடு எல்லாம் அப்பிடியே இருக்கும் என நினைப்பது அறிவீனம். :icon_mrgreen:

நானும் 1990 இல் இருந்து 2000க்கு அப்பாலும் ஊரில தான் வாழந்தனான் பாருங்கோ. இன்னும் எனது உறவினர்கள் பலரும் ஊரில் தான் வாழினம். அவர்களோடு வாரத்தில் கதைத்துத்தான் கொள்கிறேன். அவர்கள் சொல்வதெல்லாம் முன்னர் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசி இணைப்பை வழங்க மறுத்தார்கள் கதைக்க முடியல்ல.. இப்ப யாழ்ப்பாணத்தில ரெலிபோன் இருக்குது.. ஆனால் கதைக்க முடியாது. காரணம் எல்லாம் ஒட்டுக்கேட்கப்படுகுது என்று. வன்னிக்கு இணைப்பை வழங்கிட்டு.. அதையும் ஒட்டுக்கேட்கினம். அதுவும் ஒரு அரசு செய்கிறது. இதுதான் அடக்குமுறை. எம்மின மக்களில் பலர் இராணுவ ஒடுக்குமுறையின் தன்மையை உணர்ந்திருக்கும் அதேவேளை.. இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் பொருளாதார நலிவடைந்த மக்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள அவர்களுக்கு ஆசையூட்டி வருவதும் தெரிந்த விடயமே. அதற்குப் பலியான மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அது பொதுவாக உலகில் ஆக்கிரமிப்பாளர்கள் கையாளும் தந்திரமே.

நானும் பல்வேறு காலக்கட்டங்களில் பல கேள்விகளைக் கேட்டனான் தான் பாருங்கோ. ஆனால் என்னை ஒருத்தரும் தனியக் கூட்டி வைச்சு வெருட்டவும் இல்ல. அல்லது பாஸ் ஒபீஸில மறிச்சு வைச்சுக் கேள்வி கேட்கவும் இல்ல. கேள்வி கேட்கப்பட்ட பொதுமக்கள் வெருட்டப்படேல்ல. ஆனால்.. சந்தேகத்துக்குரிய வகையில் நடந்தவர்கள் விசாரிக்கப்படுவது வழமை. அது போராட்ட காலத்துக்கு அவசியமும் கூட. நான் அதிகம் கேள்வி கேட்கப்பட்டது.. வவுனியாவில் நின்ற ஒட்டுக்குழுவினராலும்.. ஜோசப் படைமுகாம் அதிகாரிகளாலும் தான்.

என்னால் அவர்களிடம் ஒரு கேள்வியைத்தானும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. கேட்டால் ஒட்டுக்குழுவினர் என்னை வவுனியாக் காட்டுக்குள் மரங்களுக்கு உரமாக்கி இருப்பர். குறிப்பாக புளொட் எனும் சிங்களக் கூலிக்கு மாரடிக்கும் ஒட்டுக்குழுவினர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் எல்லா மாற்றுக்கருத்தாளர்களும் வயது போன்வர்களாகவே இருக்கின்றனர் ஏன் வயதுக்கும் மாற்றுக்கருத்துக்கும் ஏதாவது நேர் விகிதசமன் எண்டு உண்டோ?

ஏன்னா அவர்களே போராடப் போறம் என்று ஆயுதம் தூக்கி.. பெட்டையளுக்கு கலேர்ஸ் காட்டிட்டு.. அவ்வளவையையும் இழுத்துக் கொண்டு கொள்ளையடிச்ச காசுகளில சுவிஸ்லாந்து.. ஜேர்மனி.. கனடா... லண்டன்... போன்ற நாடுகளுக்கு ஆரம்பத்தில் பறக்க ஆரம்பித்திருந்தார்கள். இப்போ அவர்கள் தான் அதிகம் உங்க சாமத்தியச் சடங்குகள் செய்து கொண்டு.. புளித்துப்போன.. புலி எதிர்ப்பு சன நாய் அகம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். :icon_mrgreen:

நான் ஒரு காலத்தில் சகோதர யுத்தம் என்பதைக் கேட்டு வரத்தப்பட்டனான். ஆனால் இவர்களையெல்லாம் குரங்கு கூட சகோதரரா நினைக்காது. அந்தளவுக்கு கொண்ட கொள்கைக்கே மோசம் செய்தவர்கள். :rolleyes:

(மாற்றுக்குழுக்களின் தலைமைகளின் தவறான வழிநடத்தலில் திசைமாறிப் போனோம் என்று ஒத்துக்கொண்டு திருந்தி தமிழ் மக்களின் கொள்கையோடு அதில் ஒரு பிடிப்போடு வாழும் மக்களும் உள்ளனர். அவர்களை எப்போதும் நாம் மதிக்க வேண்டும்.)

Link to comment
Share on other sites

நெடுக்கு அண்ணை, இப்போது எனக்கு பல்கலைக்கழக பரீட்சைகள் இருப்பதால் அதிகம் எழுத முடியாதுள்ளது, முடிந்த பின்னர் நிச்சயம் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமுதாப் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தாரே தவிர, யாழ்ப்பாணத்துக்கு அல்ல..

Link to comment
Share on other sites

அமுதாப் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தாரே தவிர, யாழ்ப்பாணத்துக்கு அல்ல..

அமுதாப் யாழ் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தார் என நான் எங்கும் கூறவில்லை :icon_mrgreen: . இளம்பரிதி தான் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார். ஆனால், அமுதாப், லோரன்ஸ், பாப்பா போன்றவர்களும் மாணவர் அமைப்பிற்கு தயா, ஆதவன், ஆதி போன்றவர்களும் பிரச்சாரப் பணி போன்றவரிற்காக வந்து போனார்கள். பாப்பா பின்னர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக வன்னியில் இருந்தார். ஆதி வடமராச்சி கிழக்கிலே சுடப்பட்டு வீரமரண மடைந்ததாக அறிந்தேன். அதுசரி, உங்களுக்கு அமுதாப் அண்ணய நல்லாத் தெரியுமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ எனக்கு நல்லாதெரியும்! இந்த இந்தி படங்கள்ல நடிச்சவர்தானே?

Link to comment
Share on other sites

அப்போது குழுவாக பிரித்து எல்லோரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொழுது எனது குழுவிலிருந்த எனது இரண்டு நண்பர்கள் மிகச் சிறந்த, சாதுரியமான இரு கேள்விகளை, கலந்துரையாடலை நடத்தியவரைக் கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இருவரையும் தனியக் கொண்டுபோய் வெருட்டு வெருட்டு எண்டு வெருட்டினார்கள்.

தும்பளையான்.. உங்கள் சக மாணவர்கள் கேட்ட அந்தக் கேள்விகள் என்ன? நிர்வாகம் வெட்டாத முறையில் எழுதுங்கள். நீங்கள் அதை எழுதினால்தான் உங்கள் கருத்தின் ஆழம் மற்றவர்களையும் சென்றடையும்.

Link to comment
Share on other sites

நான் 1990-2006 காலப் பகுதியில் யாழ்குடாவில் இருந்தேன், அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கூறுகிறேன். எனது கருத்துப்படி அக்கருத்துக்களே இப்போது மாறியிருக்கும். நீங்கள் யாராவது 80, 90 களில் யாழில் இருந்துவிட்டு இப்போதும் மக்களின் மனநிலை, செயற்பாடு எல்லாம் அப்பிடியே இருக்கும் என நினைப்பது அறிவீனம். :wub:

Thumpalayan,

எனது தனிப்பட்ட கருத்து இது, இந்த காலப்பகுதியில் வாழ்ந்தவன் எண்ட வகையிலும் , எனது சிந்தனைக்கு எட்டிய வகையிலும், மக்களது மனநிலை, செயற்பாடு என்றுமே மாறவில்லை, மனித இயல்பு நான் தப்பவேண்டும், நல்லாய் இருக்க வேண்டும், இதை யாருமே குறை கூறமுடியாது, குறிப்பிட்ட சிலருக்கு தான் தம்மை அர்பணிக்கும் இயல்பு இருக்கும்.

உதாரணமாக, 90 களில் உதவி கேட்டபோது , எம்மில் எத்தனை பேர் மனமுவந்து கொடுத்தோம், எனது குடும்பம் உட்பட, ஆனால் ஏதாவது சம்பவம் இடம் பெற்றால் முதலாவதாய் பேப்பர் வாங்கி வா எண்டு அனுப்புவார்கள். மொத்தத்தில் குளிர்காய நினைப்பவர்கள் அதிகம், நான் உட்பட, குறை கூறமுடியாது, தியாக மனப்பாங்கு எல்லோரிடமும் இல்லை, பொதுவான மனித இயல்பு.

உங்கள் கருத்துகளை வைத்து கேட்கிறேன்( ஆரம்பத்தில் இருந்து), நீங்கள் யாராலாவது பாதிக்கபட்டீர்களா?

Link to comment
Share on other sites

உங்களுக்கோ அல்லது நிழலிக்கோ நான் எனது சொந்த வாழ்க்கையில் உள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அறிவித்து விளம்பரத் தேடிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் உங்கள் போன்றோரிடம் இருந்து எழக்கூடிய ஆபத்துக்களையும் வலிய விலைக்கு வாங்க வேண்டிய தேவையும் இல்லை. என்னை உங்களுக்கு இனங்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

வாய்ச்சவாடல்.. இயலாதன்.. குட்டு உடைத்தல்.. இப்படி எம் தமிழர்களின் இயலாமையில் வெளிப்படும் வார்த்தைகளை நான் உங்கள் போன்றவர்களிடம் கேட்டுக் களைத்துப் போய்விட்டேன்.

இப்ப வரைக்கும்.. எனது தேசத்தின் மீது எனது கருசணையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தும்.. நீங்கள் ஏதோ சுவிஸ்லாந்தின் பூர்வீகக் குடிமகன் என்ற தோறனையில் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். எனது நிகழ்ச்சித்திட்டங்களை சொல்லக் கேட்கிறீர்கள். இத்தனைக்கு வசம்பு என்ற பெயரில் எழுதப்படும் கருத்துக்களைத் தவிர நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. உண்மையில் நீங்கள் சுவிஸில் இருந்துதானா வருகிறீர்கள் என்ற எதுவுமே தெரியாத ஒரு போலிச் சூழலுக்குள் உங்களை வைத்துக் கொண்டு என்னிடம் உண்மையை.. அரிச்சந்திர காண்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்.

அதற்கு வசம்பண்ண.. ஏமாற யாராவது இருந்தா இருந்தி வைச்சுக் கருத்தெழுதுங்கோ.. அவன் கேணத்தனமா உங்களோடு வீராப்பென்று சொந்த சோகக்கதையை அள்ளிவிடுவான்.

நீங்கள் வெறும் கருத்தாளன். அந்த எல்லையில் நானும் வெறும் கருத்தாளன். ஊரில் சொல்வார்கள்.. கரடி சண்டை இடும் போது எதிராளியின் பலத்துக்கு நிகராக தன்னை பாவனை செய்து கொண்டுதான் சண்டை இடுமாம். சாச்சா.. அந்தக் கரடிக்கே அவ்வளவு புத்தி இருக்கேக்க.. கதைவிட்டு கதையளந்து.. கணணியோட உங்கள் பிரச்சாரம் முடிந்திட்டுது என்று மகிழ என்மீது.. வாய்ச்சவாடல்.. குட்டு உடைந்தது போன்ற இயலாமைக்குரிய பதங்களை தெளிக்கும் போதே உங்களின் நியாயம் புரிகிறது வசம்பண்ணன். :wub:

உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி யார் கேட்டது. ஆரம்பத்திலிருந்தே களத்தில் விளம்பரம் தேடுவதே உங்கள் வேலை. அது எல்லோருக்கும் தெரியும். முன்பு குருவியாக வந்தீர்கள். பின்பு வீராப்பு பேசி வெளியேறி தற்போது நெடுக்காக மீண்டும் சுயதம்பட்டம் அடிக்கின்றீர்கள். நீங்கள் தான் குருவி என்று பலர் ஆதாரத்தடன் சுட்டிக் காட்டிய போதும். நான் அவனில்லை என்பது போல் கதையளந்தீர்கள். குருவிக்கு மட்டுமே தெரிந்த சில விடயங்கள் உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று சிலர் கேட்டபோது குருவி உங்களுக்குச் சொன்னதாக அதற்கும் கதை அளந்தீர்கள். :wub: எல்லாவற்றிற்கும் மேலாக, சமீபத்தில் ஒருவர் கரும்புலி வீரனாகச் செல்வதை தன் நண்பிக்கு சொல்வதாக உங்கள் கற்பனையில் தோன்றியதாக ஒரு கதை அளந்தீர்களே. அது காசியானந்தன் கவிதை வரிகள் என்பது சில நாட்களின் முன் ஐரோப்பிய வானொலி ஒன்றில் ஒரு நேயர் வாசித்த போது அறிந்து கொண்டேன். எனி அதற்கும் கதை அளக்காதீர்கள் காசியானந்தன் உங்களைக் காப்பியடித்து விட்டாரென்று. :)

இந்த இலட்சணத்தில் அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி உண்டு. நான் சுவிற்சர்லார்ந்திலா அல்லது வேறு நாட்டிலா இருக்கின்றேனென்பது என்னோடு நேரடித் தொடர்புள்ள அத்தனை கள உறவுகளுக்கும் தெரியும். நான் வந்ததிலிருந்தே ஒரே ஐடியும் ஒரே அவாட்டரும் தான் பாவிக்கின்றேன். உங்களைப் போல் ஐடியையும் அவாட்டரையும் அடிக்கடி மாத்திக் கொண்டிருக்கவில்லை.

பாடல் பற்றிய கருத்தாக தொடங்கிய இந்தப் பக்கத்தை உங்கள் சுயநலத்திற்காக திசைமாற்றி தேவையில்லாத விமர்சனங்களை புகுத்தியது நீங்கள். களத்திலே எல்லோரும் ஏமாளிகள் என்று எண்ணித் தானோ இப்படிக் கேணைத் தனமான கருத்துக்களை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். எனியும் அடுத்தவரை முட்டாள்கள் என்று எண்ணிக் கருத்தை வைக்காதீர்கள். இறுதியில் நீங்கள் முட்டாளாகி விடுவீர்கள்.

Link to comment
Share on other sites

சுத்துமாத்துக்கள் எண்டுற இணையத்தில யாழ் இணையம் தாங்கள் தமிழ்த்தேசியத்தை வளர்த்ததாகவும், வளப்பதாகவும் கூறுகின்றார்கள். தமிழ்த்தேசியம் யாழ் இணையம் மூலம் எப்படி வளர்ந்தது எண்டு கொஞ்சம் விளங்கப்படுத்த ஏலுமா எண்டு கேட்டு இருந்தார்கள். இஞ்ச இருக்கிற கருத்துக்களை பார்க்க தமிழ்த்தேசியம் யாழ் இணையத்தில வளர்க்கப்பட்ட, வளர்க்கப்படுற இலட்சணம் தெரியுது.

ஆக மொத்தத்தில... மனோகரன் சிங்களவனுடன் தமிழர்-சிங்களவர் ஒற்றுமைய பற்றி பாடினது இல்ல பிழை எண்டு தெரியுது. ஆனால் அவர் அந்த சிங்களவனோட சேர்ந்து தமிழர்-தமிழர் ஒற்றுமை பற்றி ஒரு பாடல் பாடாமல் விட்டதுதான் பிழையாக இருக்கிது.

Link to comment
Share on other sites

சுத்துமாத்துக்கள் எண்டுற இணையத்தில யாழ் இணையம் தாங்கள் தமிழ்த்தேசியத்தை வளர்த்ததாகவும், வளப்பதாகவும் கூறுகின்றார்கள். தமிழ்த்தேசியம் யாழ் இணையம் மூலம் எப்படி வளர்ந்தது எண்டு கொஞ்சம் விளங்கப்படுத்த ஏலுமா எண்டு கேட்டு இருந்தார்கள். இஞ்ச இருக்கிற கருத்துக்களை பார்க்க தமிழ்த்தேசியம் யாழ் இணையத்தில வளர்க்கப்பட்ட, வளர்க்கப்படுற இலட்சணம் தெரியுது.

ஆக மொத்தத்தில... மனோகரன் சிங்களவனுடன் தமிழர்-சிங்களவர் ஒற்றுமைய பற்றி பாடினது இல்ல பிழை எண்டு தெரியுது. ஆனால் அவர் அந்த சிங்களவனோட சேர்ந்து தமிழர்-தமிழர் ஒற்றுமை பற்றி ஒரு பாடல் பாடாமல் விட்டதுதான் பிழையாக இருக்கிது.

முரளி,

நீங்கள் சொல்லியதை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

யாழ் களத்தில் தமிழ் தேசியம் பற்றியும், விடுதலை போராட்டத்தின் போக்குகள் பற்றியும் தமிழ் தேசிய ஆதரவாளர் என்று காட்டுவதற்காக கண்ணை மூடிக்கொண்டு, மிகை உணர்ச்சியில் மற்ற எல்லோரையும் பற்றி கேவலமாக விமர்சித்து கொண்டு ஆதரவு தருபவர்களுடன் விவாதித்தால் அது தமிழ் தேசிய போராட்டத்தை வளர்பதற்கு எதிரானதாக போய்விடுமா?

எனக்கு தெரிந்த அரசியல் சித்தாந்ததில், விவாதம் செய்வது ஆரோக்கியமான வளர்ச்சியை கொடுக்கும் என நம்புகின்றேன். யாழில் இதனை கொஞ்சமாவது (பல வெட்டுக்களுடனாவது) அனுமதிக்கின்றனர். அது தவறு என நம்புகின்றீர்களாயின், தயவு செய்த் ஏன் தவறு என விளக்குங்கள்

(மீண்டும் சொல்கின்றேன், நீங்கள் சொல்லியதை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.ஆகவேதான் விளக்கம் பெற விரும்புகின்றேன். தவறாக நான் கற்பிதம் செய்திருந்தால் மன்னிக்கவும்)

-நிழலி-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.