Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

உங்களோட சேர்ந்து :lol:

ஆமாங்க... இஞ்ச கடைசியில கருத்து எழுதுற தாங்களும் போராளிகள் எண்டுகூறி கடைசியில தங்களுக்கே தாங்கள் மாமனிதன், நாட்டுப்பற்றாளர் விருது எல்லாம் குடுப்பாங்கள் போல இருக்கிது. நம்மோளுக்கும் இப்பிடி கிளுகிளுப்பாக கருத்து எழுதுறது கஸ்டமான வேலை இல்லை. ஆனால் நாம மற்றவன் தியாகத்தில குளிர்காய்ஞ்சு எம்மை பிரபலப்படுத்த முயற்சிக்க இல்லை. நாம சாதாரண மனிதர்களாக இருந்துவிட்டு போகின்றோம்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பழைய சுத்துமாத்து வரலாறுகளை நிழலி என்பவர் தலைகீழாக்கி விடுதலைப்புலிகள் மீது சேறு பூச நினைக்கிறார்.

அற்புதன் காலத்து தினமுரசில் (இன்று அது ஈபிடிபி ஒட்டுக்குழுவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் அதன் சமூகவிரோத தேசவிரோதப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது). அற்புதன்.. விஜிதரன் கொலை.. ஆலாலசுந்தரம் கொலை.. முரசொலி அதிபர் மகன் கொலை, உமாமகேஸ்வரன்.. கே எஸ் ராஜா.. என்று அனைத்துக் கொலைகளுக்கும் பின்னால் இருந்த தேசத்துரோகிகளை இனங்காட்டியதற்காக கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை காரணமின்றி யாருக்கும் மரணதண்டனை வழங்கியது கிடையாது.

இந்தியப்படை காலத்தில் தமிழ் மக்களையும் தமிழ் தேசியவாதிகளையும் வேட்டையாடிய மண்டையன் குழு பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் அமைச்சராகவும்.. இன்னும் சிலர் இந்தியாவிலும் பதுங்கி இருக்கின்றனர்.

அதுவும் பல எச்சரிக்கைகளின் பின்னரே வழங்கப்பட்டன படுகின்றன. பல் வேறு ஆயுதக்குழுக்கள் யாழ் குடாவில் செயற்பட்ட காலத்தில் கூட விடுதலைப்புலிகள் அவர்களை தம்மிடம் சரணடைந்து கொண்ட கொள்கைக்காகப் போராட இணையும் படிக் கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமன்றி 90களில் இரண்டு தடவைகள் ஒட்டுக்குழுவினருக்கு பொதுமன்னிப்பும் அளித்தனர். ஆனால் அதையெல்லாம் நிராகரித்த ஒட்டுக்குழுவினர்.. தேசத்துரோக.. போராட்ட விரோத செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு எதிரிக்கு காட்டிக் கொடுத்து வருவாய் பார்க்கலாயினர். அதனால் பல பொதுமக்கள் உட்பட போராளிகளை தமிழீழம் இழக்க நேரிட்டது.

ரஜனி திரணகமவைச் சுட்டது பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதைச் செய்தது.. றோவின் உத்தரவின் பெயரில் வரதராஜப்பெருமாள் என்பதை தெளிவாக எழுதி இருந்தார். ஆனால் பழிகள் எல்லாம் புலிகள் மீதே போடப்பட்டன. இந்தக் காரணங்களாலும் தான் பல்வேறு ஆயுதக்குழுக்கள் தடைசெய்யப்பட்டு எல்லோரும் ஒரே இயக்கமாகப் போராட அழைக்கப்பட்டனர். உண்மையில் அது தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை நிலைத்து நிற்க உதவி இருக்கிறது. தலைவரின் அன்றைய கோரிக்கைகளை.. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுப் போராடி இருப்பின்.. ஒரே கொள்கையான தமிழீழத்தை என்றோ வென்றெடுத்திருக்க முடியும். எனினும்.. தமிழீழம் நாளை கிடைப்பெறினும்.. தலைவரின் அன்றைய அந்த தீர்க்கதரிசனமான முடிவே இன்றைய பலம்பொருந்திய தமிழ் மக்களின் சேனையை உருவாக்கக் காரணமானது என்பதை பலரும் ஒரு நாள் விளங்கிக் கொள்வர். :lol:

Link to comment
Share on other sites

மிஸ்ரர் நெடுக்ஸ்

1. ராஜினியை சுட்டவர்கள் யாரெண்டு நான் இங்கு குறிப்பிடவில்லை. அவரினை இந்திய படையின் கைகூலிகள் கொல்வதற்கான முழு காரணங்களும் இருந்தன. எனவேதான் அந்த குழப்பம் இன்று வரை இருக்கின்றது. முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனான அகிலனை (எனது பாடசாலை) கொன்றது ஈ.என்.டி.எல். எப் எனும் கொலை குழு என்பதும் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களின் கொலையை யார் யார் செய்தது என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். வழக்கம் போல சொல்லாத விடயங்களை புகுத்தி வெற்று வீராப்பு பேசுகின்றீர்கள்.

2. அற்புதன், எனக்கு ஒன்று விட்ட அண்ணன். அவரையும், அவரின் அரசியல் பம்மாத்துகளையும் உங்கள் பலரை விட எனக்கு நன்கு தெரியும். ஈ.பி.டி.பி கும்பலின் சித்திரவதை பொறுப்பாளராக இருந்து கொண்டு, ஒவ்வொரு தடவையும் அந்த கும்பலின் பாராளுமன்ற பிரதிநிதியாக அவசரகாலச்சட்டத்திற்கு கை உயர்த்தி கொண்டு தன் பத்திரிகை வியாபாரத்திற்காக புலிகள் ஆதரவு, போராட்ட ஆதரவு கோஷம் போட்டவர் அவர். இன்று போல் தினமுரசிற்கு சிங்கள அரசு நிதியுதவியினை அன்று செய்யாததால் அப்படி அவருக்கு நடக்க வேண்டி வந்தது. மிக நெருங்கிய உறவாக இருந்தும் அவரின் மரண வீட்டிற்கு கூட போகாமல் இருந்தவர்கள் நாம். உட்கட்சி பிரச்சனையில் தான் டக்ளஸ் போட்டு தள்ளினார். அவரின் மரணத்துடன், லண்டனிற்கு அவரின் சகபாடி சந்திரமோகன் ஒடி ஒளிந்து கொண்டார். இது தொடர்பாக முந்த நாளும் யாழில் எழுதி இருந்தேன்

3. வரலாறு என்பதற்கு வயதில்லை, அதனை பழசு புதுசு என கட்டம் கட்ட. அது ஒரு கால ஓட்டம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.