-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Maruthankerny · Posted
லங்காபுவத் பக்கம் போனால் இன்னும் நிறைய கிடைக்குமே ? இது என்ன எல்லாத்தையும் கூட்டினாலும் ஒரு ஆயிரம் கூட சேரவில்லை. பச்ச பயங்கரவாதிகள் எனும்போது ஒரு லட்ஷமாவது வேண்டாமா? லங்காபுவத் போங்கள் -
By Maruthankerny · Posted
10 ஆயிரம் வருட மனித நாகரீகத்துக்குள்ள நிண்டு குப்பை கொட்டுற கோஸ்ட்டி இனிதான் இந்த திரிக்கு வரும்போல ..... -
http://www.sinhaya.com/Sinhaya.com/Massacres_by_LTTE.html
-
By Maruthankerny · Posted
"84இல் என்று நினைக்கிறேன். புலிகள் அநுராதபுரத்தில் சாதாரண சிங்கள மக்களைக் கொலை செய்தார்கள் அல்லவா? அதேபோல எல்லைப் பகுதிகளில் எல்லாம் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பிக்குகளைக் கொலை செய்த சம்பவங்களும் நடந்தன. இவற்றைப் பற்றி ராஜினியிடம் கேட்டால் அவர் சொல்வார். ‘சண்டை என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்று. நான் சொன்னேன்; ‘தேவையில்லாமல் இறப்பது போர் அல்ல. அது Atrocity. போரில் முன்னுக்கு நின்று சண்டை பிடித்து இறப்பது வேறு. இது சிங்களவர் செய்ததைத்தான் நாங்களும் செய்வதைப் போன்றது. மட்டக்களப்பில் ஆமிக்காரர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மக்கள் எனக்கு சொல்வார்கள். காலத்துக்குக் காலம் அங்கு என்ன கொடுமைகள் செய்யப்படுகின்றன எனறு இப்போதும் மக்கள் எனக்குச் சொல்லுகின்றார்கள். ஊர்காவல் படையில் இணைக்கப்பட்டிருந்த சில முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், யார் யார் புலிகள்? எந்த ஏரியாவில் புலிகள் இருக்கிறார்கள் என்று உண்மையாகவும், பொய்யாகவும் இராணுவத்திடம் தகவல் சொல்ல, பிறகு நடந்த கொடுமைகள் விபரிக்க முடியாதவை! எவ்வளவு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டார்கள் தெரியுமா? எவ்வளவு ஆண்கள் கொலை செய்யப்பட்டார்கள் தெரியுமா? நினைத்தாலே நடுங்குகிறது. என்னுடைய சின்னம்மாவின் மூன்று பையன்கள் இறந்தனர். என்னுடைய அக்காவினுடைய மகன் இறந்தார். என்னுடைய அக்கா 51 வயதில் அந்தக் கொடுமை தாங்க இயலாமல் செத்துப் போனார். என்னுடைய தம்பி விமல் கைது செய்யப்பட்ட போது, என்னுடைய அம்மா அந்த அதிர்ச்சியில் இறந்தார். என்னுடைய அம்மா இறக்கும் போது 61 வயது. இப்படி ஆயிரக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டக்களப்பு முழுவதும் துன்பப்பட்டார்கள். இதையேதான் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நாம் திருப்பிக் கொடுக்கப்போகிறோமா…?" எல்லாம் முடிய எல்லோரும் இறந்த பின்னர் நான்தான் அர்ச்சுனனுக்கு தேர் செய்தேன் என்று அப்ப அப்ப நிறைய பேர் கிளம்பி கொண்டே இருப்பார்கள். உங்கள் கூத்துக்களை ஆளில்லா மேடைகளில் அரங்கேற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை சந்தடி சாக்கில் இந்த ஆட்டுக்குள் மாட்டை விடுற வேலையை கைவிட்டு தெரியாதவைகளை அறிந்துவிட்டு பேசுங்கள். நெடுந்தீவு குமுதினி படகை சிங்கள காடைகள் மறித்து அனைவரையும் வெட்டியதுக்கு பழிவாங்க வெலியோயா சிங்கள கிராம பகுதிக்குள் புகுந்து 30 வரையான சிங்கள மக்களை சுட்டு கொன்றார்கள். அதுக்கு உத்தரவு கொடுத்தவர் புலிகளின் அப்போதைய திருகோணமலை பொறுப்பாளர் புலேந்திரன் (அம்மான்) அவர்கள். அதை உடனடியாகவே புலிகள் கண்டித்து இருந்தார்கள் புலேந்திரன் அவர்கள் பதவி நீக்கம் செய்து யாழுக்கு அனுப்பபட்டார் அதில் பங்கு கொண்ட அனைவரும் ஆயுதங்கள் களையப்பட்டு சமையல் பணியில் அமர்த்த பட்டார்கள். பின்பு ஓயாத அலைகள் 2இன் போது இராணுவ வழங்கு பாதையை குறிவைத்து புலிகள் ஆட்லறி தாக்குதல் செய்தார்கள் அது சிங்கள எல்லை கிராமங்களில் சென்று வெடித்து அந்த கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றார்கள் அந்த சண்டை முடிந்ததும் அவர்கள் திரும்பி சென்று விட்டார்கள். நாம்தான் ஷத்தாத் மனித நேயர்கள் என்ற பட்டங்களை உங்களுடனே வைத்து கொள்ளுங்கள் அதில் யாருக்கும் எந்த வில்லங்கமும் இல்லை.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.