Jump to content

அன்றுமுதல் சிரித்து கொண்டேயிருக்கின்றாள்..


Recommended Posts

'இஞ்சரப்பா இவ போன்வீட்டக்கா குரல் போல கிடக்கு. என்னென்டு ஒருக்கா போய் பாருங்கோவன்' பக்கத்தில் நித்திரையிலிருந்த கணவனை எழுப்பினார் லதா. லதாவிற்கு பக்கத்து வீட்டு அக்காவின் மேல் எப்போதுமே தனி அன்பு.

லதாவிற்கு தென்மராட்சியில் பிறந்த வீடு, வாழ வந்ததோ வடமராட்சியில். வந்த புதிதில் தங்கை போல அனைத்து கொண்டவர் தான் இந்த போன் வீட்டு அக்கா. வசதியில் எந்தவொரு குறையும் இல்லாத குடும்பம். ஊரிலேயே முதன் முதலில் தொலைபேசி வைத்திருந்தவர்கள் என்பதால் 'போன்வீட்டுக்காரர்' ஆகிப்போன குடும்பம்.

'இவன் ராஜாவையும் எழுப்பணை. ராத்திரில வந்து கூப்பிடுறா என்ன பிரச்சனையோ' என மகனையும் எழுப்ப சொன்னபடி படி படுக்கையில் இருந்து எழும்பி வாசலுக்கு வந்தார் லதாவின் கணவர் திருநாவுக்கரசு.

'என்னக்கா ஏதும் பிரச்சனையோ? அத்தான் எங்கே' என வாய் கேட்க போன்வீட்டக்காவின் கணவரை திருநாவுக்கரசரின் கண்கள் தேடுகின்றன.

'அத்தான் சந்திப்பக்கமா போயிருக்கார் தம்பி..இவள் பிள்ளை..' அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் போன்வீட்டக்காவிற்கு குரல் அடைக்கின்றது.

பிள்ளை என சொன்னதுமே அவரின் ஒரே புதல்வி சாந்தனாவின் பிரச்சனை தான் என திருநாவுக்கரசுக்கு புரிந்தது.

'லதா இஞ்ச, அக்காவை வந்து கூட்டிகொண்டு உள்ளுக்கு வச்சிருங்கோ. தம்பி ராஜா சைக்கிள எடுடா'

அரைமணித்தியாலத்திலேயே மூன்று ஆண்களும் சாந்தனாவுடன் வீடு திரும்பினார்கள். மகளை கண்டதும் போன்வீட்டக்கா 'ஒண்டை பெத்து போட்டு நான் படுறபாடு..' என ஆரம்பிக்க,

'சரியக்கா காலையில கதைப்பம். பிள்ளைய கூட்டிக்கொண்டு போய் முதல்ல சாப்பாட்டை குடுத்து படுக்க வையுங்கோ' என திருநாவுக்கரசு கூற பெண்கள் அவரவர் வீட்டுக்குள் செல்கின்றனர்.

'குமாரண்ணை, நடுச்சாமத்தில் ஏற்கனவே பயந்து போன பிள்ளையை இன்னும் பேசி பயப்படுத்தாதிங்கோ. நாளைக்கு மத்தியாணம் பயணம் வேற' என சாந்தனாவின் தந்தைக்கு சமாதானம் சொன்னபடி தன் வீட்டுக்குள் நுழைந்தார் திருநாவுக்கரசு.

குமாரண்ணைக்கு திருமணமாகி பல வருடங்களுக்கு பின்னர் பிறந்த பெண் தான் சாந்தனா. காத்திருந்ததுக்கு கைமேல் பலனாக அழகும், அறிவும் உள்ள பெண்ணாக சாந்தனா பிறந்து வளர்ந்தாள். உயர்பள்ளியில் முதன்மை மாணவியாக பரீட்சையில் தேறும் வரை சாந்தனா சாதாரணமாக தான் இருந்தாள். கொழும்பிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு இடம் கிடைத்திருந்தது. அங்கு போய் தங்கள் பெண் சீரழிவதற்கு படிப்பே வேண்டாம் என முடிவு பண்ணியிருந்தார்கள் அவளை பெற்றவர்கள். அடுத்து சாந்தனாவின் திருமண பேச்சு எழுந்தது.

ஜெர்மனியில் உள்ள அத்தை மகனை சாந்தனா மணப்பதாக பெரியவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

பெரியவர்களின் முடிவு இப்படியிருக்க. சாந்தனாவின் முடிவோ நாட்டை பற்றியதாக இருந்தது. தன்னுடன் படித்த சீதா ஆசையாக கொழும்பிற்கு திருமணத்திற்கு வெளிக்கிட்டதும், பைத்தியமாக திரும்பி வந்ததும் சாந்தனாவை அதிகம் பாதித்துவிட்டிருந்தது. சீதாவின் மன அழுத்ததிற்கு காரணம் பலதும் ஊரில் சொல்லப்பட்டது. வவுனியாவில் உள்ள இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாமில் தான் தன் தோழிக்கு பிரச்சனை நடந்திருக்கு என சாந்தனாவுக்கு புரிந்தது.

புரிந்த நாள் முதல், சாந்தனாவின் மனம் வெகுவாக பாதிக்க ஆரம்பித்திருந்தது. தோழியை போல் ஆகுவதற்கா இந்த பயணம்? என் தோழியின் நிலைக்கு நியாயம் யார் தருவார்கள்? பூவாக இருப்பதால் தானே இத்தனை பிரச்சனை? புலியாக மாறிவிட்டால்? அம்மா, அப்பாவில் நிலை?; இப்படி பலதும் சாந்தனாவை குளப்பத்தில் ஆழ்த்தி என்ன செய்கின்றோம் எங்கு இருக்கின்றோம் என்பதையே மறக்க வைத்திருந்தது.

அன்றும் அப்படித்தான் வீட்டிற்கு பின் இருக்கும் கிணற்றடி ஒட்டில் உட்கார்ந்திருக்க, இவர்கள் ஊரெல்லாம் சாந்தனாவை தேடியிருக்கின்றார்கள்.

அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து, மதியமளவில் கொழும்பை நோக்கி சாந்தனாவின் பயணம் ஆரம்பிக்கின்றது. தடையேதும் இல்லாத பயணம் மெதுவாக இலங்கை இராணுவத்தினரின் முதல் தடுப்பு பகுதியில் தடுமாறுகின்றது.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் உடல்பரிதோதனை செய்வதற்கு வெவ்வேறு பகுதிகள் ஆண்களை ஆண் இராணுவத்தினரும், பெண்களை பெண் இராணுவத்தினரும் பரிசோதனை செய்தார்கள். புலிகள் குண்டோடு வந்துவிடுவார்களாம். கையால் ஒவ்வொருத்தரின் உடலை தொட்டு பார்த்தால் குண்டை கண்டு பிடித்துவிடலாமாம். சாந்தனாவின் முறை வந்த போது இருபகுதியும் ஒன்றாக்கப்பட்டிருந்தது. பரிசோதனை செய்து கொண்டிருந்தவர்கள் ஆண் இராணுவத்தினர். பரிசோதனை முடிந்த போது சாந்தனா எதுவும் பேசவில்லை, ஊருக்கு பைத்தியமாய் திரும்பிய தோழியை நினைத்து கொண்டார், பாவம் அவள் அன்னை தான் ஏனோ அழுது கொண்டிருந்தார்.

ஒவ்வொரு தடை முகாங்களாக கடந்து வவுனியாவில் இருக்கும் பூந்தோட்டம் அகதிமுகாமில் தஞ்சம் புகுந்தார்கள். கொழும்பிற்கு புகையிரதம் பிடிப்பதற்கு முன்னர் உள்ள தடை. சிலரின் நல்ல நேரம் இரு நாட்களில் "பாஸ்/Pass" என அழைக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் கிடைத்துவிடும். சிலருக்கும் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிவிடும். பெயர் தான் பூந்தோட்டம், ஆனால் பலருக்கு அது மயானதோட்டம் தான்.

சாந்தனாவின் குடும்பமும் பூந்தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அடுத்த நாள் சோதனை என சொல்லி சிலரை அழைத்து சென்றார்கள். அதில் சாந்தனாவும், சாந்தனாவின் தந்தையும் அடங்குவார்கள்...

'இஞ்சரணை குமாரண்ணை வீட்டு பக்கம் சத்தமா கிடைக்குது..' இன்னொரு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த திருநாவுக்கரசு..

ஊரே போன்வீட்டக்கா வீட்டின் முற்றத்தில் கூடியிருந்தது. சீதாவும் வந்திருந்தாள். வீட்டின் முன் தாழ்ப்பாரத்தில் அழகாய் தூங்கி கொண்டிருந்த சாந்தனாவை பார்த்து சிரித்தாள்...சிரித்தாள்...அன்ற

Link to comment
Share on other sites

தமிழ்ப்பெண்கள் மீதான இத்தகைய கொடுமைகள் தொடர்கின்றனவே தவிர குறைவில்லை. ஊரில் இராணுவத்தால் வெளிநாடு பெயரும் பெண்களுக்கு வரும் வழிகளில் புலத்தில் என கதைகளின் நீட்சி முடிவின்றித் தொடர்கிறது தூயா. ஊர்வாசம் கமழும் உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுறட்டும்.

நன்றி.

Link to comment
Share on other sites

'இஞ்சரணை குமாரண்ணை வீட்டு பக்கம் சத்தமா கிடைக்குது..' இன்னொரு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த திருநாவுக்கரசு..

ஊரே போன்வீட்டக்கா வீட்டின் முற்றத்தில் கூடியிருந்தது. சீதாவும் வந்திருந்தாள். வீட்டின் முன் தாழ்ப்பாரத்தில் அழகாய் தூங்கி கொண்டிருந்த சாந்தனாவை பார்த்து சிரித்தாள்...சிரித்தாள்...அன்ற

Link to comment
Share on other sites

நான் வந்து தலைப்பை பார்த்திட்டு..டு ஏதோ சிரிப்பு கதை எண்டு வாசிக்க தொடங்கினால்..இவளின் சிரிப்பை அறிந்த போது என்னால கொஞ்ச நேரம் சிரிக்க ஏலாம போச்சு..சு.. :)

அன்று முதல் சிரிக்கும் அவ்பாவையின் சிரிப்பை..பை...கதையாக்கி அதனை நகர்த்திய விதம் அருமை..மை. :lol: ம்ம் லோகத்தில சிரிக்கிற பலர் சந்தோஷமா இருக்கீனம் எண்டு நெனைத்து கொண்டிருந்தன்..ன் இந்த கதையை வாசித்தா பெறகு தான் அவைகுள்ளையும்..ம்.

பல கஷ்டங்கள் இருக்கிறது விளங்குது..து.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தமிழ்ப்பெண்கள் மீதான இத்தகைய கொடுமைகள் தொடர்கின்றனவே தவிர குறைவில்லை. ஊரில் இராணுவத்தால் வெளிநாடு பெயரும் பெண்களுக்கு வரும் வழிகளில் புலத்தில் என கதைகளின் நீட்சி முடிவின்றித் தொடர்கிறது தூயா. ஊர்வாசம் கமழும் உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுறட்டும்.

நன்றி.

புலம் பெயர் நாட்டிலும் என் பெண்கள் படும் அவலத்தை பற்றிய உங்கள் ஆக்கத்தை படித்தேன்.

மனது கனத்துவிட்டது.

Link to comment
Share on other sites

உண்மைக்கதைக்கு நன்றி தூயா. அரச படைகளின் பெண்கள் மீதான அட்டூளியங்கள், பலாத்காரங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஒரு தேர்ந்த கதையாயினி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இரு சோதனை நிரைகள் ஒன்றாக்கி சாவடிக்கும் சாவடிகளை சாடிய நீங்கள் அந்த இடத்தில் சாந்தனாவுக்கு சீதாவின் நினைவுதான் வந்தது என்று சொல்லி விட்டு சொல்லாமல் விட்ட சங்கதிகள் காய்ச்சிய ஈயங்கள். அப்போதே தெரிந்து விடுகிறது முடியாத நிஜங்களின் நிழல்கதையின் முடிவு.

பூந்தோட்டத்தை காதல் ரசமும் காம ரசமும் கலந்து பாயும் இடமாக சித்தரித்துள்ளன எங்கள் சங்ககால இலக்கியங்கள். அவை இன்று வல்லூறுகளின் பசிக்கு உணவு கொடுக்கும் வல்லுறவுகளுக்கு களமானது. கனக்கிறது மனது. சில காலங்களுக்கு என்னை எடுத்து சென்ற கதை. பாராட்டுகள் தூயா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.