Jump to content

சொல்லியழுதிட்டன். (31.10.2008 ஒருபேப்பர்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையில் சமூக சமச்சீர் நிலையற்ற கைடால் மிகுந்திருக்கிறது. ஆண்கள் மீது மட்டும் திட்டமிட்ட பழிசுமத்தல் மிகவும் கீழ்த்தரமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

1. புலம்பெயர்நாடுகளில் பொருளாதாரம் என்பதில் ஆண் - பெண் என்ற பிரிவினைகள் இல்லை. எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. பெண்கள் தரந்தாழ்த்தப்படுகின்றனர் என்றோ.. அல்லது அவர்களிடம் பணம் பறிக்கப்படுகிறதோ என்றோ சொல்ல முடியாது. அப்படி சொல்ல வேண்டின் அந்தந்த நாட்டு அதிகாரிகளிடமே சொல்ல வேண்டும். கதைகளில் அல்ல.

2. புலம்பெயர் சமூகத்தில் ஆண்களே அதிகம் தாம் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்துக்கும் ஊரில் உள்ளோருக்கும் அனுப்பி வருகின்றனர். இந்த இடத்தில் பெண்களின் பங்களிப்பு வெகு குறைவே. அவர்கள் தங்களின் சொந்த ஆடம்பரத்துக்கே அதிகம் செலவு செய்கின்றனர்.

உதாரணத்துக்கு இக்களத்தையே எடுத்துப் பாருங்கள். நேசக்கர அமைக்குக்கு பங்களிப்புச் செய்தவர்களில் எத்தனை சதவீதம் பேர் ஆண்கள்.. எத்தனை சதவீதம் பேர் பெண்கள்..??! பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமின்மையால் அப்படி செய்ய முன்வரவில்லையா.. அல்லது.. செய்யத் தோன்றவில்லையா. உண்மையில் பொருளாதார சுதந்திரம் மேற்குலகில் பெண்களுக்கு இல்லை என்பது அத்துணை பொருத்தமானதல்ல. ஒரு சில விதிவிலக்கான சம்பவங்கள் ஒரு சமூகத்தின் பொதுமைப்பாடாக அமையாது.

3. புலம்பெயர்ந்த நாடுகளில்.. சந்தேகம்.. புரிந்துணர்வின்மை என்பதும் அதன் பொருட்டான செயற்பாடுகளும் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் தாராளமாக இருக்கின்றன. அதற்கு அந்தந்த நாடுகளின் சமூகச் செயற்பாடுகளோடு ஒன்றிக்காமை.. கல்வி அறிவின்மை.. மொழிப் பிரச்சனை.. என்று பல காரணிகள் இருக்கின்றன.

ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் தோழிக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுப்பதையே சந்தேகிக்கும் பல பெண்கள் இருக்கின்றனர். எமது குறும்பட உலகில் கூட இவ்வாறான கதைகளைச் சொல்லும் சில குறும்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி.. சந்தேகத்தின் பெயரில்.. அதிகம் குடும்பப் பிரிவினைகளைத் தூண்டுபவர்களாக ஆண்களை விட பெண்கள் இருக்கின்றனர். எமது சமூகத்தில் நடந்திருக்கும் விவாகரத்துக்கான காரணங்களை ஆராயின் இந்த நிலை தெளிவாகத் தெரிய வரும்.

4. அகதிகளாக அல்லது அகதிகளைத் திருமணம் செய்து வந்துள்ள பல பெண்கள் கல்வி அறிவின்மை.. மொழிப் பிரச்சனை.. காரணமாக வேலைக்குச் செல்லாமல்.. அரச பணத்தில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்கள் தங்கள் குடும்பத்தலைவரின் வருமானத்தையே ஊருக்கு அனுப்பியும் வருகின்றனர்.

5. உழைக்கும் பெண்கள் தங்களின் குடும்பத்துக்குரிய செலவைக் கவனிக்காது.. ஆடம்பரச் செலவையும்.. ஊருக்கு அனுப்புவதையும் அதிகம் செய்வதால் குடும்ப நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக வீடு வாகனம் போன்றவற்றுக்கு ஆணின் உழைப்பே அதிகம் செலவு செய்யப்படுகிறது. அதனால் பல ஆண்கள் தமக்கு விரும்பிய வடிவில் வாழ முடிவதில்லை. ஓயாமல் உழைப்பதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றனர்... பல புலம்பெயர் சமூக தமிழ் இளைஞர்கள். குறிப்பாக திருமணமானவர்கள்.. இரவு பகல் என்று களைத்துச் சோர்ந்து நோய்வாய்ப்பட்டு உழைப்பதை நான் அதிகம் கண்டிருக்கிறேன்.

6. அதிகம் படித்த பெண்களும்.. மேற்குலக நாகரிக ஒழுங்கில் கலந்துவிட்ட பெண்கள்.. குடும்பம்.சுயகட்டுப்பாடு என்ற எல்லைகளைத் தாண்டி.. தாந்தோன்றித்தனமாக வாழ்வதையே சுதந்திரம் என்று சிந்திக்க தூண்டப்படுகின்றனர். இதனால் பல வசதியான கல்வி கற்ற குடும்பங்களில் கூட நிம்மதியில்லாத நிலை இருக்கிறது.

7. குழந்தைகளைக் கவனிப்பதில் ஆண்களுக்கு உள்ள பங்களிப்பு குறைவு. ஆண்கள் அதிக நேரம் குடும்பத்துக்காக உழைக்க வேண்டி இருப்பதால்.. குழந்தைகள் பற்றிய அல்லது குழந்தைகளிடம் அவர்களின் நெருக்கம் குறைவாகிறது. இது பற்றி பல பெண்கள்... சிந்திப்பதில்லை. அந்த ஆண்களின் ஏக்கங்களைப் புரிந்து கொள்வதும் இல்லை.

பல ஆண்களுக்கு தனது குழந்தையின் பள்ளி விபரங்கள் கூடத் தெரியாமல் இருக்கிறது. காரணம் கேட்டால் வேலை என்று அவர்களின் மனைவிமார் பதிலிறுக்கிறார்கள்.

நான் கண்டிருக்கிறேன்... தமிழ் குழந்தைகளை வைத்தியசாலைக்கோ அல்லது மைதானத்துக்கோ அழைத்துச் செல்வதில் தாய்மாரே அதிகம் பங்கெடுக்கின்றனர். ஆண்கள் வருவதில்லை. வேலைக்கு போய்விடுவதாகச் சொல்கின்றனர். ஆனால்.. பிற மொழி பேசுகின்ற மக்கள் குழந்தைகளோடு பெற்றோர் இருவரும் அதிகம் பிரச்சன்னமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறு எமது பெண்கள் ஆண்களை இன்னும் உழைக்கும் இயந்திரமாக பாவித்து வருகின்றமையே அதிகம் நிகழ்கிறது. உழைக்கும் பெண்கள் கூட ஆண்களின் உழைப்பை சரி நிகராக மதிப்பதில்லை. தமது உழைப்பே சிறந்தது என்பதாக எண்ணிக் கொண்டு.. தமது உழைப்பு தம்மை வாழ வைக்கும் என்ற இறுமாப்பை வளர்த்துக் கொள்கின்றனரே தவிர தமது உழைப்பை குடும்பத்துக்கு பொதுவில் சேர்க்க மறுக்கின்ற தன்மையே அதிகம்.

இவையெல்லாம் இக்கதையில் வசதியாக மறைக்கப்பட்டு.. ஆண்கள் மீது மட்டும் பழிசுமத்தல் செய்திருக்கிறார்கள். இது மிகத்தவறான அணுகுமுறையாகும். இதனால் பெண்கள் பொருளாதார சுதந்திரமடையமாட்டார்கள். அவர்களின் தாந்தோன்றித்தனமான செயற்பாடுகளே கட்டுப்பாடின்றித் தொடரும். அது மொத்தக் குடும்பத்திற்கும் பாதிப்பாக அமையும். இவ்வாறான கதாசிரியர்கள்.. சற்று சமூகம் பற்றி கல்வி அறிவைப் பெற்ற பின் கதைகளை எழுத வருவது நன்று. :)

Link to comment
Share on other sites

இப்படி பல விடயங்கள் நாட்டில் இடம்பெறுகின்றன.

அதற்கு ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. ஆண்களை போலவே பெண்களும் தவறிழைக்காமலில்லை.

இக் கதை ஒரு பக்கத்தை மட்டுமே பேசுகிறது. அல்லது ஒரு பக்கம் சார்ந்து மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இதன் மறுபக்கம் என்ன?

அந்த ஆண் குறித்த பகுதியும் இணைக்கப்பட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்.

கதை கூட என்னவோ போலிசில் புகார் செய்த மாதிரி எழுதப்பட்டிருக்கு?

கதாசிரியர்கள் உணர்ச்சிகளை விட : யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக எழுதினால் இன்னும் கதை மெருகேறும்.

பாராட்டுக்கள் சாந்தி

இருந்தாலும் அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் நீங்கள்

உங்களையும் விமர்சனம் செய்ய அடுத்தவரையும் அனுமதியுங்கள்.

அதற்காக குரைப்பதாக எழுதுவதெல்லாம் டூமச் :lol:

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் படைப்பாளிகளுக்கு தேவை.

(கடந்த காலத்தில் தங்கள் விமர்சனங்களை வாசித்தவன் என்பதால் இதை எழுத வேண்டி ஏற்பட்டது.)

அக்கோய் குரைக்கமாட்டன் என்று சொல்லி சொல்லியே பல தரம் குரைக்கிறீங்கள். :)

நல்லாயிருக்கு :o

Link to comment
Share on other sites

இங்கு தனித்து ஆண்களில் தவறென்று ஆண்களை குற்றம் சுமத்திக் கதையில் எந்த ஆரூடமும் இல்லை. மருண்ட கண்ணுக்கு இருண்டதெல்லாம் கணக்கில் சிலர் தங்கள் அரியண்டம் மிக்க எண்ணங்களை இங்கு கொட்டி திருப்திப்படுகிறார்கள்.

கதாசியரே இது ஆண்களை குற்றம் சுமத்துவதாக எழுதவில்லை என்று எழுதிய பின்பும் தேவையற்ற விவாதங்கள் ஏன் என்று புரியவில்லை. ஆண் சமூகத்தை குற்றம் சுமத்த எழுதப்பட்டதாக எனக்கும் படவில்லை.

எல்லாம் அவரவர் பார்வையில் தான் இருக்கிறது. ஆண், பெண் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, ஒரு மனிதனுக்கு நடந்த பிரச்சினையாக நோக்குவதே ஆரோக்கியமானது. :)

Link to comment
Share on other sites

கதாசியரே இது ஆண்களை குற்றம் சுமத்துவதாக எழுதவில்லை என்று எழுதிய பின்பும் தேவையற்ற விவாதங்கள் ஏன் என்று புரியவில்லை. ஆண் சமூகத்தை குற்றம் சுமத்த எழுதப்பட்டதாக எனக்கும் படவில்லை.

எல்லாம் அவரவர் பார்வையில் தான் இருக்கிறது. ஆண், பெண் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, ஒரு மனிதனுக்கு நடந்த பிரச்சினையாக நோக்குவதே ஆரோக்கியமானது. :lol:

அவவ கலியாணம் செய்தது அப்ப பெண்ணே? :o மன்னிக்கவும் :)

நாங்க அவ சொல்லியழுத கதைக்குதான் கருத்து எழுதுறம். அவ பின்னால சொன்ன கதைகளுக்கில்ல பாருங்கோ? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.