Jump to content

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்?


Recommended Posts

கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?

-விமல்

இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம். ‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

***

அமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

-வே. மதிமாறன்

http://www.tamilseythi.com/kaddurai/vethim...2008-11-07.html

குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு எழுதப்பட்டது அல்ல!

Link to comment
Share on other sites

புஷ், அப்துல்கலாம், ஒhபமா! ம் நல்ல கற்பனை!

யதார்த்தம் இது தான்!

முதல் கறுப்பர் என்ந தகமை மட்டும் வைத்து ஜனாதிபதியாக முடியாது!

அமரிக்க வரலாற்றில் மிகவும் சிறந்த ஒரு அறிவாளி தற்போது தான் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்!

அப்துல்கலாம் ஜனாதிபதி பதவி வெறும் ஆமா போடும் ஒரு வெற்றுப்;பதவி!

புஷ் ஒரு அறீவினம் அற்ற மரமண்டை!

கிளின்டன் அமரிக்காவில் ஏற்படுத்திய மாற்றத்தை விட பல மாற்றங்கள் ஒபாமாவால் செய்யமுடியும்! அதற்கான சான்று தற்போது அவர் அமைத்துள்ள அவரின் ஆட்சியதிகார அணி!

18 மாத காலத்துள்ள ஈராக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்!

ஆப்கானிஸ்தானில் தேவைப்படும் கூடுதல் படையணி!

அமரிக்க பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயம்!

இவை தான் ஒபாமாவின் ஆட்சி வெற்றிக்கான அடிக்கற்கள்!

மீதியை பொறுத்தழருந்து பார்ப்போம்!!!

Link to comment
Share on other sites

வேதிமாறன் என்ற பூதம் கிணத்தை விட்டு இன்னும் தலையை தூக்கி பார்க்க இல்ல போல :D என்ன முட்டாள்தனமான கருத்துகள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா, அமெரிக்காவின் அண்மைய ஜனாதிபதிகளில் மிகுந்த அறிவுத் திறனுள்ளவர். மிகச் சிறந்த திட்டமிடலாளர், ஒருங்கிணைப்பாளர், கொள்கைப் பிடிப்பாளர்.

இளைய வயதினரையும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களையும் வெளி நீரோட்டத்துக்கு இழுத்து வந்தவர்.

மக்கள் சார்பாகப் பேசும் உணரும் திறனுள்ளவர்.

இன்றுல்ல உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியிலிருந்து மீளும் ஏணியாகத்தான் சர்வதேசம் அவரைப் பார்க்கிறது.

அவரின் வெற்றி சர்வதேசத்துக்குக் கிடைத்த வெற்றி.

அப்துல் கலமா...?யாரது ?அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இருக்குமிடத்திலிருந்து ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியுமா? பிரதம மந்திரி ஆணையிடும் இடத்தில் கையொப்பமிடும் அப்துல் கலாம் எங்கே, 140 மில்லியன் மக்களின் எகோபித்த அதரவைப் பெற்றுக் கொண்டு இனி உலகை ஆளப்போகும் ஒபாமா எங்கே ?!

கடந்த 8 வருடங்களாக அமஎரிக்காவில் நடந்து வந்த சரித்திரத்திலேயே மிகவும் முட்டாள்த்தனமான ஆட்சி என்று எல்லாராலும் கருதப்படும் ஜார்ஜ் புஷ் எனும் கோமாளியின் ஆட்சிக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கும், உலகத்துக்கு மூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பெயருக்காக கதிரையில் அமர்ந்து பிரதம விருந்தினராக மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு அட்டைக் காகிதத்தை பராக் ஒபாமா எனும் செயல் வீரனுடன் ஒப்பிட வேண்டாம் !

Link to comment
Share on other sites

இந்தியரை ஆலோசகராக நியமித்தார் ஒபாமா!

வெள்ளி, 7 நவம்பர் 2008( 05:02 IST )

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது ஆலோசகராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார வல்லுநர் சோனல் ஷாவை தேர்வு செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் குழுவில் சோனல் ஷா இடம்பெறுவார். கூகிள் நிறுவனத்தின் பிலந்த்ரோபிக் பிரிவிற்கு சோனல் தலைமை வகித்து வந்துள்ளார்.

40 வயதாகும் சோனல் ஷா, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று அனுபவம் பெற்றவர். இவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.webdunia.com/newsworld/news/i...081107013_1.htm

Link to comment
Share on other sites

ஒபாமா, அமெரிக்காவின் அண்மைய ஜனாதிபதிகளில் மிகுந்த அறிவுத் திறனுள்ளவர். மிகச் சிறந்த திட்டமிடலாளர், ஒருங்கிணைப்பாளர், கொள்கைப் பிடிப்பாளர்.

இளைய வயதினரையும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களையும் வெளி நீரோட்டத்துக்கு இழுத்து வந்தவர்.

மக்கள் சார்பாகப் பேசும் உணரும் திறனுள்ளவர்.

இன்றுல்ல உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியிலிருந்து மீளும் ஏணியாகத்தான் சர்வதேசம் அவரைப் பார்க்கிறது.

அவரின் வெற்றி சர்வதேசத்துக்குக் கிடைத்த வெற்றி.

அப்துல் கலமா...?யாரது ?அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இருக்குமிடத்திலிருந்து ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியுமா? பிரதம மந்திரி ஆணையிடும் இடத்தில் கையொப்பமிடும் அப்துல் கலாம் எங்கே, 140 மில்லியன் மக்களின் எகோபித்த அதரவைப் பெற்றுக் கொண்டு இனி உலகை ஆளப்போகும் ஒபாமா எங்கே ?!

கடந்த 8 வருடங்களாக அமஎரிக்காவில் நடந்து வந்த சரித்திரத்திலேயே மிகவும் முட்டாள்த்தனமான ஆட்சி என்று எல்லாராலும் கருதப்படும் ஜார்ஜ் புஷ் எனும் கோமாளியின் ஆட்சிக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கும், உலகத்துக்கு மூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பெயருக்காக கதிரையில் அமர்ந்து பிரதம விருந்தினராக மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு அட்டைக் காகிதத்தை பராக் ஒபாமா எனும் செயல் வீரனுடன் ஒப்பிட வேண்டாம் !

சரியாகச் சொல்லியிருக்கீங்க.

ஆனா இன்னொரு தலைப்பாய் வைத்த தலையாட்டியை பற்றி சொல்ல மறந்தீட்டீங்க! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபி அன்னன் என்பவரை மறந்து விட்டீர்களே.....அவர் என்ன செய்து விட்டார்........? அமெரிக்க ஜனாதிபதியை விட ஐ.நா தலைவர் அதிகாரம் மிக்கவர் என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபி அன்னன் என்பவரை மறந்து விட்டீர்களே.....அவர் என்ன செய்து விட்டார்........? அமெரிக்க ஜனாதிபதியை விட ஐ.நா தலைவர் அதிகாரம் மிக்கவர் என்பது என் கருத்து

உண்மைதான்... ஆனால் ஐநாவின் அதிகாரங்கள் தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகளின் அதிகாரங்களுக்குள் கட்டுப்பட்டே இயங்குகின்றது.

Link to comment
Share on other sites

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

வேதிமாறன் என்ற பூதம் கிணத்தை விட்டு இன்னும் தலையை தூக்கி பார்க்க இல்ல போல என்ன முட்டாள்தனமான கருத்துகள்

அப்துல் கலமா...?யாரது ?அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இருக்குமிடத்திலிருந்து ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியுமா? பிரதம மந்திரி ஆணையிடும் இடத்தில் கையொப்பமிடும் அப்துல் கலாம் எங்கே, 140 மில்லியன் மக்களின் எகோபித்த அதரவைப் பெற்றுக் கொண்டு இனி உலகை ஆளப்போகும் ஒபாமா எங்கே ?!

இங்கே ஒபாமாவுடன் அப்துல்கலாம் ஒப்பிடவில்லை. பா ஜ க மற்றும் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்கள் , அதன் அடுத்த கட்ட நீட்சிகள் இனம்காணப்படுகின்றது.

ஒபமாவின் வெற்றி என்பதை இன வெறி அல்லது நிறவெறி எனபதற்கு எதிரான புரட்சி தீர்மானிக்கவில்லை மாறாக ஏகாதிபத்தியம் சந்தித்த பொருளாதாரத தோல்வி தீர்மானிக்கின்றது.

ஒபமா உள்நாட்டு பொருளாதரத்தை கட்டியெழுப்ப ஈராக்கில் இராணுவ நடவடிக்கைக்கு செலவிடும் தொகையை திருப்ப போவதாக சொல்கின்றார் தவிர ஈராக் மக்கள் மீது உள்ள மனிதாபிமானம் படைகளை மீளப்பெறுவதற்கு முதற்காரணம் அல்ல.

ஏகாதிபத்தியம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் ஈராக் என்னும் நாடே சிதைவடைந்து விட்டது. பத்துலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து விட்டார்கள். இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக வடிவமாக ஒபாமா காட்சி தருகின்றார். தவிர ஒபமா ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டுவர ஆட்சிபீடத்தில் ஏற்றப்பட்டவரும் இல்லை, ஏறியவரும் இல்லை. ஆனால் மிதமிஞ்சிய ஏகாதிபத்தியத்தின் போக்குக்கு ஒபாமாவின் வரவு ஒரளவாவது தடுப்பாக அமையும் என்று உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தங்களின் போக்கு மிகத்தவறானது, திருத்தங்கள் கொஞ்சம் வேண்டும் என்பதை ஒபாமவை தேர்ந்தவர்கள் உணர்ந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. சில மாற்றங்களுக்கு முதற்படியாக இது அமையலாம்.

Link to comment
Share on other sites

சிறந்த பார்வை.

சமூகத்தின் அடிப்படையில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல், அதன் போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியவே முடியாது. அதே அமெரிக்க முதலாளித்துவ அமைப்பில் ஒபாமா இன்னுமொரு சனாதிபதி. அவரின் கருத்த நிறமும், கவார்ட் பல்கலைகழக (Howard university) பட்டமும் உலகில் பெரும் மாற்றத்தினை கொண்டு வரும் என நம்ப எந்த அடிப்படையும் இல்லை. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் ஏனைய சனாதிபதிகளை போன்ற கருத்தை வைத்துள்ள இவரால், மற்றைய விடயங்களில் முக்கியமாக தேசிய இனங்களின் விடுதலை தொடர்பாக பெரிய மாற்றத்தினை கொண்டு வர முடியும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இஸ்ரேலின் இருப்பை முற்று முழுதாக மறுக்கும் ஈரானுடனும், கமாஸ்(Hamas)/கிஸ்புள்ளா (Hizbullah ) இயக்கங்களுடன் அமைதி முயற்சியில் ஈடுபட்டு எவ்வாறு மத்திய கிழக்கில் நிரந்திர அமைதியினை ஏற்படுத்த முடியும்?

இவரின் கையாளும் முறை, புஷ்களின் முறையில் இருந்து வேறு படலாம். சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும், அமெரிக்க முதலாளித்துவ முறையில் புதிய நுட்பங்களை புகுத்தி முன்னெடுக்கலாம், ஆனால் ஒபாமாவின் இறுதி இலக்கு, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்கத்தினை மேலும் உறுதிப் படுத்துவதாகவே அமையும்

-நிழலி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பார்வை.

இவரின் கையாளும் முறை, புஷ்களின் முறையில் இருந்து வேறு படலாம். சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும், அமெரிக்க முதலாளித்துவ முறையில் புதிய நுட்பங்களை புகுத்தி முன்னெடுக்கலாம், ஆனால் ஒபாமாவின் இறுதி இலக்கு, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்கத்தினை மேலும் உறுதிப் படுத்துவதாகவே அமையும்

-நிழலி-

ஒபாமா அமெரிக்காவின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவரேயன்றி உலக மக்களுக்குக் கடமைப் பட்ட தலைவரல்லவே. அமெரிக்காவின் நலனைப் புறந்தள்ளி உலக சமாதான புருஷராக வருவார் என எதிர் பார்ப்பது அறிவீனம். ஆனால் அமெரிக்க நலனை புஷ் போல மோட்டுத் தனமான வழிகளில் முன்னெடுத்து பகை வளர்க்க மாட்டார் என்று மட்டும் எதிர் பார்க்கலாம். இஸ்ரேலைத் தாண்டி பலஸ்தீனத்தை ஆதரித்த முன்னாள் ஜனாதிபதியும் இருக்கிறார்: ஜிம்மி கார்ட்டர். அவரைப் போல ஒருவராக ஒபாமா வருவார். ஆனால் அதற்காக யூதர்ளிடமிருந்து விலகிக் கொள்வார் என்று எதிர் பார்ப்பது முட்டாள்தனம்.

Link to comment
Share on other sites

வேதிமாறன் போன்ற அரைவேக்காடுகளின் பதிவு சிரிக்கவேவைக்கிறது :(

கிணத்து தவளை :(

Link to comment
Share on other sites

விமர்சிக்கும் நன்பர்கள் மதிமாறன் எழுதியிருப்பதில் எது தவறு என்பதை சுட்டிக்காட்டாமல் பொதுவாக சொல்வது சரியல்ல. ஊடகங்கள் உறுவாக்கும் மாயத்தோற்றத்தில் நாம் யதார்த்த்ததை மறக்க கூடாது. இந்தியா அப்துல் கலாமை கொன்டாடியதும், உலகம் கோஃபி அன்னானை கொண்டாடியதும் அவர்களின் நிறம், இனம், மதம் இவற்றை வைத்துத்தான், (கலாமுக்கு அறிவாளி என்ற ஒளிவட்டம் வேறு) . புஷ்ஷை விட 'அதிகாரமிக்க' பதவியில் இருந்த கனடலீசா ரைஸ் கருப்பர் இனம் தானே அவர் காலத்தில் தான் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மீது பொருளாதாரம் மற்றும் இராணுவ அடக்குமுறை ஏவப்பட்டது...ஒபாமாவைப் பற்றிய எனது கருத்துக்களை இரு பதிவுகளாக . இட்டுருக்கிறேன். படித்துப்பாருங்கள் ....

http://vinavu.wordpress.com/2008/11/06/obama2/ மற்றும்

http://vinavu.wordpress.com/2008/11/05/obama1/

Link to comment
Share on other sites

ஒருவர் பதவிக்கு வருவதற்கு முன்னமே , இந்திய அதிபரையும் அமெரிக்க அதிபரையும் ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்து வேதிமாறனின் உலக அறிவு தெரிகிறது.

எந்த அதிபர் வந்தாலும் பாதுகாப்பு துறைகளில் பெரிய மாற்றம் உலகத்தில் எந்த நாட்டிலும் ஏற்படாது. அது ஒரு புரட்சியாலன்றி...

இந்திய அதிபர்கள் முன்னைய இலங்கை அதிபர் வில்லியம் கொபல்லாவ போன்றவர்கள்.

இவர்கள் நீட்டும் பைலில் கையெழுத்திட , விருந்துகளுக்கு தலைமைதாங்க ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு தேவையானவர் ஒருவரே தேர்வாகிறார். மக்களால் தேர்வுசெய்யப்படுபவர் அல்ல.......

அமெரிக்க அதிபர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர். அவருக்கு மாற்றங்களை கொண்டு வர சக்தியுண்டு.

இந்திய அதிபருக்கு அந்த சக்தி உள்தென்றால் இலங்கை அதிபர் மகிந்த , இந்திய பிரதமர் சிங்கோடு ஏன் பேசவேண்டும். இந்திய அதிபரோடு பேசலாமே?

இந்திய பிரதமர் போர் நிறுத்தம் செய்ய சொல்லி இலங்கை பிரதமரோடல்லவா பேசவேண்டும்?

அவர் ஏன் மகிந்தவோடு பேசுகிறார்?

இதையே புரியாத ஒரு அரைவேக்காடு வேதிமாறன் :(

இந்திய அதிபர் இலங்கை பிரதமரைவிட சக்தியில்லாதவர் :(

ஐநா செயலாளர் நாயகம் என்பது பலம் பொருந்திய நாடுகள் தேர்வு செய்யும் ஒருவர்.

அதிகமாக அவர்கள் சொல்வதற்கு அதிகம் கட்டுப்படுவார்கள். அதுவே தெரியும் யதார்த்தம்.

வல்லரசுகள் சொல்வதை இவர்கள் சொல்வார்கள் அவ்வளவுதான்? :(

கொண்டலிசா ரைசென்பவர் யார்? அவர் அமெரிக்க அதிபரல்ல? அமெரிக்க அதிபர் சொல்லவேண்டியதை சொல்லச் செல்லும் பணியாளர்.

மறைந்த தமிழ்செல்வன் , பாலசிங்கம் போன்றோர் பேச்சு வார்த்தைகளுக்கு போனாலும் எதையும் முடிவெடுக்க முடியாது. முடிவு தமிழீழ அதிபர் கையில். இதுதான் நிசம்.

நாயைவிட கேவலமான ஒரு நிலையில் இருந்த நீக்ரோ இன கறுப்பின அடிமைகளின் வழி வந்த ஒருவர் இன்று அவர்களுக்கே அதிபராகி உலகமே வியக்கும் நிலையில் இருக்கும் போது கோபி அண்ணாவையும் கொண்டேலிசாவையும் அப்துல் காலமையும் ஒப்பிடுவதில் தெரிவது என்ன?

அபதுல்கலாம் அறிவாளியிலை என்பதல்ல பொருள். அவர்களுக்கு அந்த தகுதி மரியாதையின் நிமித்தம் கிடைப்பதேயன்றி அவர்களால் எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது.

ஒபாவை மேற்கோள் காட்டி இலங்கையிலும் ஒரு தமிழரோ ஒரு முஸ்லீமோ அதிபராகும் நிலை வரும் என்று ரொபெட் பிளேக் கூறியதிலிருந்து இது ஒரு முன்மாதிரி என்பதே உண்மை.

உலகத்தில் பெரும்பாலான வெள்ளை இன மக்களே பாரக் ஒபாவின் வரவையொட்டி மகிழும் ஒரு நேரத்தில் வாழ்த்த மனசு கூட இல்லாமல் இந்த கரிஅமில வாயுவுக்கு என்ன பதிவு வேண்டியிருக்கு?

Link to comment
Share on other sites

முதலில் கட்டுரையாளர் அப்துல்கலாமையும், ஒபாமாவையும் ஒப்பிடுவதே தவறு. காரணம் இந்தியாவில் ஜனாதிபதியை விட பிரதமருக்கே கூடுதலான அதிகாரம் உள்ளது. முன்பு ஜே.ஆர் காலத்திற்கு முன்புவரை இலங்கையிலும் இதே நிலைமையே இருந்தது. பின்பு ஜே.ஆரால் இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது.

மேலும் ஐ.நாவில் செயலாளராக யார் வரலாம் என்பதை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளே தீர்மானிக்கின்றன. காரணம் ஐ.நாவிற்கு தேவையான நிதியின் பெரும் பகுதிகளை இவ்விரு நாடுகளுமே வழங்கி வருகின்றன. அந்தத் தைரியத்தில் தான் ஐ.நா செயலாளரை தமது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றபடி ஆட்டிப் படைக்கின்றார்கள்.

மேலும் ஒபாமாவின் தெரிவானது இன்று உலகில் வாழும் பெரும்பாண்மையான கறுப்பின மக்களை ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அதனால் அவர்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்களா?? ஒபாமாவின் தெரிவென்பது பெரிதாக உலகில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரா விட்டாலும் நிச்சயமாக புஸ்ஸைப் போல் போர் வெறி பிடித்து அலையும் ஆட்சியாக இருக்க மாட்டாது. புஸ்ஸின் போர் வெறி தான் இன்று அமெரிக்காவின் பொருளாதார பாதிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளதை அமெரிக்க மக்களும் தற்போது உணரத் தொடங்கி விட்டார்கள். அதனால் அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கைகளில் சில மாற்றங்களை நிச்சயம் செய்தே ஆக வேண்டிய சூழ்நிலை தற்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் பதவிக்கு வருவதற்கு முன்னமே , இந்திய அதிபரையும் அமெரிக்க அதிபரையும் ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்து வேதிமாறனின் உலக அறிவு தெரிகிறது.

எந்த அதிபர் வந்தாலும் பாதுகாப்பு துறைகளில் பெரிய மாற்றம் உலகத்தில் எந்த நாட்டிலும் ஏற்படாது. அது ஒரு புரட்சியாலன்றி...

இந்திய அதிபர்கள் முன்னைய இலங்கை அதிபர் வில்லியம் கொபல்லாவ போன்றவர்கள்.

இவர்கள் நீட்டும் பைலில் கையெழுத்திட , விருந்துகளுக்கு தலைமைதாங்க ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு தேவையானவர் ஒருவரே தேர்வாகிறார். மக்களால் தேர்வுசெய்யப்படுபவர் அல்ல.......

அமெரிக்க அதிபர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர். அவருக்கு மாற்றங்களை கொண்டு வர சக்தியுண்டு.

இந்திய அதிபருக்கு அந்த சக்தி உள்தென்றால் இலங்கை அதிபர் மகிந்த , இந்திய பிரதமர் சிங்கோடு ஏன் பேசவேண்டும். இந்திய அதிபரோடு பேசலாமே?

இந்திய பிரதமர் போர் நிறுத்தம் செய்ய சொல்லி இலங்கை பிரதமரோடல்லவா பேசவேண்டும்?

அவர் ஏன் மகிந்தவோடு பேசுகிறார்?

இதையே புரியாத ஒரு அரைவேக்காடு வேதிமாறன் :lol:

இந்திய அதிபர் இலங்கை பிரதமரைவிட சக்தியில்லாதவர் :D

ஐநா செயலாளர் நாயகம் என்பது பலம் பொருந்திய நாடுகள் தேர்வு செய்யும் ஒருவர்.

அதிகமாக அவர்கள் சொல்வதற்கு அதிகம் கட்டுப்படுவார்கள். அதுவே தெரியும் யதார்த்தம்.

வல்லரசுகள் சொல்வதை இவர்கள் சொல்வார்கள் அவ்வளவுதான்? :)

கொண்டலிசா ரைசென்பவர் யார்? அவர் அமெரிக்க அதிபரல்ல? அமெரிக்க அதிபர் சொல்லவேண்டியதை சொல்லச் செல்லும் பணியாளர்.

மறைந்த தமிழ்செல்வன் , பாலசிங்கம் போன்றோர் பேச்சு வார்த்தைகளுக்கு போனாலும் எதையும் முடிவெடுக்க முடியாது. முடிவு தமிழீழ அதிபர் கையில். இதுதான் நிசம்.

நாயைவிட கேவலமான ஒரு நிலையில் இருந்த நீக்ரோ இன கறுப்பின அடிமைகளின் வழி வந்த ஒருவர் இன்று அவர்களுக்கே அதிபராகி உலகமே வியக்கும் நிலையில் இருக்கும் போது கோபி அண்ணாவையும் கொண்டேலிசாவையும் அப்துல் காலமையும் ஒப்பிடுவதில் தெரிவது என்ன?

அபதுல்கலாம் அறிவாளியிலை என்பதல்ல பொருள். அவர்களுக்கு அந்த தகுதி மரியாதையின் நிமித்தம் கிடைப்பதேயன்றி அவர்களால் எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது.

ஒபாவை மேற்கோள் காட்டி இலங்கையிலும் ஒரு தமிழரோ ஒரு முஸ்லீமோ அதிபராகும் நிலை வரும் என்று ரொபெட் பிளேக் கூறியதிலிருந்து இது ஒரு முன்மாதிரி என்பதே உண்மை.

உலகத்தில் பெரும்பாலான வெள்ளை இன மக்களே பாரக் ஒபாவின் வரவையொட்டி மகிழும் ஒரு நேரத்தில் வாழ்த்த மனசு கூட இல்லாமல் இந்த கரிஅமில வாயுவுக்கு என்ன பதிவு வேண்டியிருக்கு?

அப்போ இலங்கையில் தமிழர் ஒருவர் இலங்கை அதிபரானால் தமிழர் பிரச்னை தீர்ந்துவிடுமா???

Link to comment
Share on other sites

அப்போ இலங்கையில் தமிழர் ஒருவர் இலங்கை அதிபரானால் தமிழர் பிரச்னை தீர்ந்துவிடுமா???

:lol: உலக மக்களின் பிரச்சனையே தீர்ந்து விடும் .தமிழன் அமேரிக்காவுக்கு ஜனாதிபதியானால் பிறகு பிரச்சனை என்ற வார்த்தையே உலகில் இருக்காது. :)

Link to comment
Share on other sites

வே. மதிமாறன் அவர்களின் பதிவுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

நல்ல கருத்துகளை ஆதரிப்பதில் தவறில்லை.

இந்த பதிவு ஒரு மட்டமான பதிவு :rolleyes: மட்டுமல்ல

உலக அறிவே இல்லாத பதிவு

Link to comment
Share on other sites

நல்ல கருத்துகளை ஆதரிப்பதில் தவறில்லை.

இந்த பதிவு ஒரு மட்டமான பதிவு :rolleyes: மட்டுமல்ல

உலக அறிவே இல்லாத பதிவு

இது ஒரு மட்டமான பதிவு என்று நீங்கள் கருதினால், அது ஏன் என்று உங்களின் கருத்துகளை கூறி விவாதியுங்கள். அவ்வாறு செய்யாமல் வெறும் தட்டையாக சொன்னதை திருப்பி திருப்பி சொல்வதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. உங்களைப் போல எல்லோரையும், கண்ணை மூடிக்கொண்டு, அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்

Link to comment
Share on other sites

நான் கறுப்பன் அதனால் ஆதரிக்கிறேன். போதுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபி அன்னன் என்பவரை மறந்து விட்டீர்களே.....அவர் என்ன செய்து விட்டார்........? அமெரிக்க ஜனாதிபதியை விட ஐ.நா தலைவர் அதிகாரம் மிக்கவர் என்பது என் கருத்து

எங்கே இருக்குறீர்கள்

காலைத்தொட்டு கும்பிடணும்போல இருக்கு..............?????

இதுதான் இந்த நூற்றாண்டுக்கான பகிடி

Link to comment
Share on other sites

விமர்சிக்கும் நன்பர்கள் மதிமாறன் எழுதியிருப்பதில் எது தவறு என்பதை சுட்டிக்காட்டாமல் பொதுவாக சொல்வது சரியல்ல. ஊடகங்கள் உறுவாக்கும் மாயத்தோற்றத்தில் நாம் யதார்த்த்ததை மறக்க கூடாது. இந்தியா அப்துல் கலாமை கொன்டாடியதும், உலகம் கோஃபி அன்னானை கொண்டாடியதும் அவர்களின் நிறம், இனம், மதம் இவற்றை வைத்துத்தான், (கலாமுக்கு அறிவாளி என்ற ஒளிவட்டம் வேறு) . புஷ்ஷை விட 'அதிகாரமிக்க' பதவியில் இருந்த கனடலீசா ரைஸ் கருப்பர் இனம் தானே

அடடா அப்படியா??

Link to comment
Share on other sites

யாரெல்லாம் உலக அனுபவம் உள்ளவர்கள் என்பதை பதிவுகள் : பதில்கள் மூலம் இப்போதுதான் தெரிகிறது :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.