Jump to content

கவலை இல்லாத மனிதன் ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.கவலை இல்லாத மனிதன் ...........

வாழ்கையிலே கவலை இல்லாத மனிதனை காட்ட அழைத்து செல்கிறேன். அவர் எண்பத்து மூன்று வயது வரை வாழ்ந்தது இது தான் காரணமோ ? வாசித்து பாருங்கள்

. .

.........இவர் ந்ம்ம பக்கத்து வீடு . அதனால் இன்னும் மறக்க முடியவில்லை ...........செல்லத்தம்பிக்கு வாய்த்த மனைவி குணமணி ........பெயருக்கேற்ற குணமான மணி தான் ,சரி ந்ம்ம கதைக்கு வருவோம் .செல்ல தம்பியர் தலை நகரிலே ஒரு வீதி கண்காணிப்பு கந்தொரிலெ வேலை பார்த்தார் மூன்று மாதமொரு முறை தன் வீடுக்கு வருவார். அழகிய அமைதியான சிறு ஊர் . .நாடு இரவில் யாழ் பட பஸ் மூலம் வீட்டு வாயில் கேற் கொழுவி சத்தம் கேட்டும் . நாய் குரைத்து பின் நட்பாக ஒலி எழுப்பும் , கிணற்றடியில் முகம் கழுவி காறித்துப்பி சத்தம் கேட்கும் அப்ப ந்ம்ம செல்லர் வந்து விடார் ..

மறுநாள் , ஆரம்பமாகும் காலையில் பிள்ளைகள் எழும்பி அப்பா கொண்டு வந்த சொக்கா பிக்கா , ரம்புட்டான் , மங்குஸ்தான் என்பவற்றுக்கு பிச்சல் பிடுங்கல் நடக்கும் ஒரு வாறு பிள்ளைகள் பள்ளிக்கூடம் போனபின் நம்ம கதாநாயகன் . சைக்கிள் இல் இரண்டு கள்ளு போத்தல் ,(அந்த கால சுத்தமான் வ்டித்த அசல் சாராயம் என்ற போத்தல் ) போத்தல்களுடன் தவறணை என்ற நிலையத்துக்கு செல்வார் . அங்கு ஐயா வந்துடீங்களா ?...........என்ற வரவேற்புடன் வாங்கி கொண்டு வீடு வந்து விடுவார் .பின் , குணமனிக்கு , மா இடித்து கொடுப்பார் . காலையில் முட்டை கோப்பி கிடைக்கும் ,விறகு கொத்தி கொடுப்பார் .அருகில் உள்ள ,வளவு எல்லாம் வெட்டி துப்பரவு பண்ணுவார் . சும்மா சொல்ல கூடாது , பிள்ளை களுடனும் மிகவும் பாசமாக தான் . மனைவி குணமனியுடனும்தான் . பாசமில்லாமலா பத்து பெத்து பெரு வாழ்வு வாழ்ந்தவர் .வந்த சந்தோசம் முடிய ஒரு வாரமாகிவிடும்

மறு வாரம் திங்கள் கிழமை அதி காலை எழுந்து குளித்து எண்ணை பூசி..... படத்துக்கு விளக்கு கொழுத்தி கும்பிட்டு ,(prayer )பயணம் வெளிக்கிடுவார் .

காலை பத்து மணியிருக்கும் போனமச்சான் திரும்பி விடுவார் ...என்னப்பா ? அது ட்ரைன்(ரயில்) போட்டுது , நாளைக்கு போகிறேன் . என்பார் . பின்பு ஒரு வாரம் செல்ல அதே பல்லவி பயணம் போய் பன்னிரண்டு மணி சென்றால் தான் நம்ம செல்லர் உண்மையாகவே பயணம் போட்டார் என்று சொல்லலாம் .சிலசமயம் பிள்ளைகளும் அப்பா ,அடுத்த கிழமை போங்கோ ,என்றுசொல்வார்கள் ........... அவர்களை கிணற்றில் இறைத்து குளிப்பாடுவார் , டொம்மி நாய்க்கும் வெறியில் முசுப்பாதியில் கையில் சாப்பாடு கொடுப்பார் இந்தா நீயும் சாபிடு என்று . பழைய சினிமா பாட்டு பாடி கேட்கும் ,தங்கத்திலே ஒரு ..........நான் பெற்ற செல்வம்...என்பன . பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம் ",சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ "...................என்று வரும் போது கையின் புயம் புடைக்கும் (muscles )செய்து காட்டுவார் ....... .இந்த காட்சிக்காக நான் வேலி பொட்டுக்கால போய் நின்று வேடிக்கை பார்ப்பேன் ,எனக்கும் சொக்கா பிக்கா எல்லாம் கிடைக்கும்

.மணியக்காவும் முகம் கோணாமல் சகித்து கொள்வா . அவர்களுக்கு கடல் உணவு தவிர வேறு சமையல் பொருட்கள் வாங்கவேண்டிய தேவை இல்லை .இவர் தாய்க்கு ஒரே ஒரு பிள்ளை.என்பதால் உறவுகளின் பிக்கல் பிடுங்கல் இல்லை .குனமணிக்காவின் சீதன காணியில் இருந்து தேங்காய் மாங்காய் , பனை பொருட்கள் என்ன்பன கிடைத்ததால் ஒரு செலவும் இல்லை இவ்வாறு வாழ்ந்தமனிதன் , மனைவி நோய்வைபட்டு காலமாகிவிட ...பிள்ளைகள் வெளிநாடு போய்விட..... தன் ஓய்வு ஊதியத்தில் காலத்தை ஓட்டிசென்ற மாதம் என்பது மூன்று வயதில் காலமாகினார் . எனக்கு தாயக நினைவு வரும் போதெலாம் இவரை நினைப்பேன் . எண்பத்து மூன்று வயதில் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன் .........செல்லத்தம்பி .இந்த இயந்திர உலகில் ந்ம்ம வாழ்வு எங்கே ...தாயக வாழ்வு எங்கே ..

.அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் . ...........i

,

Link to comment
Share on other sites

இந்தக்கதையின் நாயகள் போல என் ஊருக்குள்ளும் உறவுகாளயும் வாழ்ந்த பலரது வாழ்வை நினைவுபடுத்தியுள்ளீர்கள். மறக்கப்பட முடியாத ஞாபகங்கள் எவரது எழுத்திலிருந்து வந்தாலும் எல்லோருக்குள்ளும் அதுவொரு தாக்தக்தை உண்டுபண்ணித்தான் போகும். அதுவே அந்த எழுத்தின் பலன். அது உங்களுக்கும் கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஊரிலிருந்தது போல நிம்மதியான, இயற்கையுடன் ஒன்றிய, வாழ்வு எங்களுக்கு எப்போது திரும்பவும் கிடைக்கும்? செயற்கைத்தனமான வாழ்க்கை, மனிதர்கள் இவற்றிலிருந்து எப்போ விடுதலை? :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுனா ......சாந்தி.... மல்லிகை வாசம் ....,கருத்து பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.