Jump to content

ஞாபகம் சொல்ல எவருமில்லாமல் துர்க்கையம்மன் வீதி.


shanthy

Recommended Posts

ஞாபகம் சொல்ல எவருமில்லாமல் துர்க்கையம்மன் வீதி.


ஞாபகங்கள் தாங்கிய கையெழுத்துக்கள் சேர்த்து வைப்பதிலும் ஒவ்வொருவரின் ஞாபகமாக எதையாவது சேர்ப்பதில் பெரியதொரு நிறைவு.அப்படிச் சேர்த்து வைத்த கையெழுத்துக்களும் , ஞாபகப்பொருட்களும் நாட்டுக்குள்ளேயே தொடர்ந்த இடப்பெயர்வுகளுடனும் , புலப் பெயர்தல்களுடனும் ஒவ்வொன்றாய் தொலைந்து போய் விட்டது.

அது 1991ஜனவரி மாதம் வாணி கல்வி நிலையத்தில் கால் வைத்த போது முதல் அறிமுகம் மதி, அவன்தான் முதல் அறிமுகமாய் மேசையொதுக்கி இடம் தந்தவன். அதன் பின்னர் துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா என அடுத்தடுத்து வந்த உறவுகள்.

எல்லோரின் நினைவுகளும் நெஞ்சுக்குள் அழியாமல்....பள்ளிக்கூடத்துக்க�
�� அப்பால் 17வயதில் நட்பாய் கிடைத்த இவர்களுக்குள் நானும் நிச்சயம் நினைவு கொள்ளப்படுவேன். அப்போது அந்த நாளைய எங்கள் அட்டகாசங்கள் , கோபம் , நேசம் என எல்லாமே அவர்களையும் நினைக்க வைக்கும்.

எனது மகனுக்கு இவ்வருட கோடைவிடுமுறையுடன் 5ம் வகுப்பு அடுத்த தரப்பள்ளிக்கு அனுமதி கிடைத்ததையடுத்து அவனது நண்பர்கள் ஒவ்வொருவரும் எழுதிய என் மகனது நினைவேட்டில் எழுதிய வாசகங்களும் அவர்களின் வேண்டுதல்களும் என்னை ஒரு தரம் அதிர்த்து விட்டுள்ளது. 'அம்மா" இதெல்லாம் எறியப்படாது எனக்கு ஞாபகமா வைச்சிருக்க வேணும் பிறகு நான் வளந்தாப்பிறகு பாப்பன் என்றதும் என் அம்மா ஒரு தரம் எழுதிய கடிதம் தான் நினைவு வந்தது.

'உனது ஓட்டோகிராப்பும் புத்தகம் கொப்பிகளும் நாங்கள் இடம்பெயர்ந்த போது வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டோம். எங்களை காப்பதா உனது சாமான்களை எடுப்பதா என அந்த நேரம் நினைக்கேல்ல நாங்கள். பள்ளிச் சினேகிதம் படலை மட்டும் அதை ஞாபகம் வைச்சிரு". என்ற அம்மாவின் கடிதத்துடன் எனது ஞாபகச் சேமிப்புகளையெல்லாம் இப்போதும் நினைத்து ஏங்குவதுண்டு.

இப்படி எத்தனையை எனது மகனைப்போலவும் அவனது நண்பர்களைப் போலவும் நானும் எனது நண்பர்களும் எழுதினோம்.....! 15வருடங்கள் சென்ற பின்னும் அவர்களில் யாரையும் காணவுமில்லை ஒரு கடிதத் தொடர்பு கூட இல்லாமல்....யார் யார் எப்படி எங்கு என்ன செய்கிறார்கள் என்று எதுவும் தெரியாமல் எப்போதாவது நினைவுகளில் வந்து போவார்கள். எப்போதாவது சந்திக்கலாம் என்ற நம்பிக்கைகள் இன்னமும் மீதமாக....

1991 மருதடி தேருக்கு தாவணிகட்டி தலையில் கனகாம்பரம் வைத்து வீட்டாருடன் வீதியில் போக.... சைக்கிளில் அரைப்பாவாடை சட்டையுடன் கண்ட முகம் தாவணியில் வந்தது பார்த்து 'வடிவாயிருக்கு , தாவணி சைக்கிளுக்கை சிக்கப்போகுது கவனம்" என அக்கறை கலந்த சைகையால் எச்சரித்த அந்த நண்பர்கள்....துர்க்கையம்மனுக்�
��ு செவ்வாய் தவறாமல் நீ வாறியா நீ வாறியா ? என கேட்டு சொல்லி வைத்து பெடியளும் பெட்டையளும் அம்மன் தரிசனம் செய்து கடலை , ஐஸ்கிறீம் , பொரிவிளாங்காய் பங்கிட்டு பெனாக்காய் குளக்கரையிலும் போன பொழுதுகளும் சுன்னாகம் ஐயனார் , பழனி ஆண்டவர் என அடுத்தடுத்து கோவில்களும் தரிசனமும் அதுவொரு அழகிய காலம் என்பதை விட வேறெந்த வார்த்தை சொல்ல......?

கிளைக்காலியள் வெளிக்கிட்டுதுகள் என பெரிசுகள் புறுபுறுக்க காதலிக்கினம் போல என கன கண்கள் பார்த்திருக்க சத்தியமாய் யாருக்கும் யார் மீதும் காதலில்லை நட்பிருந்தது என்று சொன்னால் நம்ப யாரும் தயாரில்லை. பதின்ம வயதென்றால் ஆணும் பெண்ணும் அருகருகாய் போனாலே அதில் ஏதோ உண்டென்ற அர்த்த்படுத்தும் அந்த நாட்களில் பாட்டுக்குப் பாட்டு , நாடகம் , கவிதை , எழுத்தென்று மாணவர் மன்றம் வைத்து ஆண்களும் பெண்களுமாய் நட்பை வளர்த்தோம். அங்கங்கு சில காதல் துளிர்ப்பிற்கு தூதுவராய் நானும் துணைபோனதை எண்ணி இன்றும் சிரிப்பதுண்டு.

அந்த வருடத்தில் ஒருநாள் பல்கலைக்கழக சமூகம் மேற்கொண்ட ஊர்வலத்தில் ரியூசன் சென்ற நாங்களும் பல்கலைக்கழக சமூகத்துடன் சேர்ந்து ஊர்வலமாய் கச்சேரி வரையும் உரக்கக்குரல் கொடுத்து பதாகைகள் தாங்கிய நாளன்று.....சைக்கிளை வாங்கி வைத்து என்னைக் காதலிக்கிறேன் எனச்சொல்லென்று மிரட்டிய யாழ்பல்கலைக்கழக மாணவர் சிலரின் பகிடி வதையில் அழுது அச்சமுற்ற நிமிடங்களில்...... அழுகை நிறுத்தி ஆறுதல் தந்தவர்களுள் மதி , மனோ , தயா வரிசையில் அன்று துணைநின்ற அத்தனை பேரின் ஞாபகமும் அவர்களுக்கு நன்றியறிதலை என்றும் சொல்லியபடியேதானிருக்கிறது. அன்றுதான் எங்கள் குழுவில் ஒருவன் ஒருத்தியை காதலிப்பதாக தகவல் மதியின் வாயிலிருந்த எங்கள் காதுகளை வந்தடைகிறது.

இதென்ன புதுக்கதை ? அதெப்பிடி மதி ஒருதருக்கும் ஒருதர் மீதும் வராத காதல் உவை ரண்டு பேருக்கும் வந்ததாம் ? கேட்ட எனக்கு மதி சொன்னான். சரி உமக்கும் எனக்கும் காதல் வரேல்லயெண்டதுக்காக அதுகள் ஏன் காதலிக்கப்படாது ? கிளிஞ்சுது யாவாரம் இது நான். இப்ப நீரென்ன செய்யிறீரெண்டா உம்முடை தோழி தாற கடிதத்தை வாங்கி வந்து எங்களிட்டைத் தாறீராம் அதை நாங்கள் அவனிட்டை குடுப்பமாம்...துர்க்கையம்மனு�
�்கும் அவளை அவளிடை வீட்டை அனுமதி வாங்கி கூட்டிவாறியளாம்..., சரியோ ? சொல்லிக்கொண்டு கே.கே.எஸ் வீதியால் வந்து கொண்டிருந்த அவன் முதுகில் எட்டி ஒரு குத்து....ஐயோ என்றவனை எல்லாரும் திரும்பிப்பார்க்க வந்தவர்கள் சிரிப்புடனும் கும்மாளத்துடனும் அன்றைய நாள் கழிகிறது. அன்றிலிருந்த அந்தக் காதல் ஜோடிக்கு தபால்காரியாக நானும் அம்பாளும்.

காதலித்தவர்களின் விடயம் இருவீட்டுக்கும் போய் காதல் முறிந்து காதலிக்கப்பட்டவள் அந்தநாளில் பரபரபரப்பாயிருந்த படப்பாடலொன்றை கேட்டபடி 4மாதம் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு ரியூசன் நிறுத்தப்பட்டாள். காதலித்தவன் கொஞ்சநாள் சோககீதம் பாடி பிறகு அவனும் அமைதியாகிவிட்டான். ஆனால் காதலிக்கப்பட்டவளின் அண்ணன்காரன் எங்களைக் கண்டால் எரிக்கிறமாதிரித்தான் பார்ப்பான். ஆனால் அவனுக்கு மட்டும் அவனது வகுப்பில் ஒருத்தி மீது காதல் இருந்தது.

நல்லகாலம் எனக்கு அண்ணனில்லை....ஏன் ? கேட்ட நண்பர்களுக்குச் சொன்னேன்....வீணா ஒரு கொலை விழவேணுமோ ? ஏன் நீர் அவ்வளவு துணிச்சலான ஆளோ ? எங்கள் குழுவில் ஒருவன் எனது வீரத்தைச் சீண்டியது ஒரு பொழுது......அப்படிப் பல பொழுதுகள் ஓடி சிரித்தபடி திரியும் மதிக்கும் ஒருத்தி மீது காதல் வந்து அவன் சோகமாகி அவனது ஒருதலைக்காதல் ஒருதலைராகம் பாடி.... தயாவின் காதல் தோற்றதென செய்திகள் வந்து நட்பென்பது பொய்யென்ற சமயவாத்தியின் நக்கலும் போய் மறுபடியும் காதலில் தேறி வழமையாகிவிட்டனர் எல்லோரும். ஆயினும் துர்க்கையம்மன் தரிசனம் தொடர்ந்தபடி தான். காதலில் விழுந்த நண்பர்களிடம் சுளட்டியம்மன் தரிசனம் கிடைச்சுதோ என்ற சீண்டல்களும் தொடர்ந்தபடிதான்....

அது சுட்டெரிக்கும் வெயில் மாதம். ஆனையிறவில் ஆகாயகடல்வெளிச்சமர் ஆரம்பமான நாட்கள். களத்தில் நிற்போருக்கான உதவிகளாக உலர் உணவுகள் தயாரிப்பு , மண்மூடைகள் கட்டுதல் என எங்கும் மும்முரமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. எங்களது பங்குக்கு நாங்களும் அந்தப்பணிகளில் ஒரு வாரத்தை எடுத்து கொண்டோம். மணல் மூடைகட்டுதல் ஒரு வளத்தில் உலர் உணுவத்தயாரி;ப்பு ஒருவளத்தில் நடக்க.....பன்னீரின் இனிய குரலில் எல்லோரையும் இசைக்குள் இழுக்கும் குரலும் கதிர் , மதி , மனோ , தயாவின் தாளமும் சேர அந்த வாரம் இசைக்கச்சேரிக்கு குறைச்சலிருக்கவில்லை.

அந்த நாளொன்றில் வீட்டில் பிசகு மனசு சரியில்லாமல் சோhந்து போய் வேலையில் ஈடுபட்டிருந்த என்னை அடிக்கடி மதி தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தான். என்ன பிரச்சனை ? ஏன் முகம் சரியில்லை....பழையமாதிரி நீரில்லை.....அது எல்லாருக்கும் மதியின் மூலம் போய் எல்லாரும் என்ன என்ன என்று கேட்க உள்ளிருந்த துயரெல்லாம் அவர்கள் முன்னிலையில் உடைந்து நொருங்க.....பன்னீரின் பாடலொன்றுடன் அந்தத் துயர்களையெல்லாம் தொலைத்து வழமையாக்கியது......

மண்மூடை கட்டியபடி மதிதான் சொன்னான். இப்ப இப்பிடியெல்லாம் எவ்வளவு சந்தோசமா இருக்கிறம். இனி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியில போகேக்க என்னெண்டு தாங்கப்போறம் என்றான். இவளவை துர்க்கையம்மனிலை தங்கடை பிள்ளையளைக் கூட்டிவந்த எங்களை அறிமுகப்படுத்தேக்க பாப்பம் என்றான் தயா. மதி நானென்னண்டு உங்களையெல்லாம் என்ரை பிள்ளையளுக்கு சொல்லுவேன் தெரியுமா ? எல்லோரின் பார்வையும் எனது பதிலுக்கு காத்திருக்க....துர்க்கையம்மனு�
��்கு கூட்டிவந்து இஞ்சேர் பிள்ளை இதுதான் அம்மாவோடை படிச்ச மதிமாமா , தயாமாமா , மனோமாமா , சுதன்மாமாவெண்டு சொல்லுவன் என்றேன். அந்த நிமிடம் அதை நான் சொன்ன தொனி எல்லோரையும் சிரிக்க வைத்தது. என்ன வெளிநாடோ போப்போறம் இந்த யாழ்மாவட்டத்துக்கைதான இருக்கப்போறம் எப்ப வேணுமெண்டாலும் சந்திக்கலாம் கதைக்கலாம் என்ற துசிக்கு மதிதான் சொன்னான். ஆரார் பாசலில் பரிசுக்கோ சுவிசுக்கோ யேர்மனிக்கோ போறியள் தெரியாது. அவன் சொன்னது போல பரிசுக்கோ சுவிசுக்கோ சொன்னபடி பயணமாகும் முதல் ஆள் நானாகி புலம் பெயர்ந்து போனதை யாருக்கும் தெரியாமல் அந்தப்பயணம் அமைந்ததை இன்றும் எண்ணி வருந்துவதுண்டு.

சர்மிலா , மல்லிகாவுடன் மட்டுமே தொடர்ந்த கடிதத்தொடர்பில் அடிக்கடி துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா கேட்கும் போதெல்லாம் அவர்களை வீதியில் கண்டால் கதைப்பேன் அவ்வளவே என எழுதும் சர்மிலாவின் தொடர்பும் 1995 சூரியக்கதிருடன் அறுபட்டுப்போனது அதன்பின்னும் சில கடிதம் எழுதிக் கொண்டிருந்த மல்லிகாவின் தொடர்பும் விடுபட்டுப்போய்விட்டது.

புலம்பெயர்ந்து 12 ஆண்டின் பின் ஊர் போன போது எனது குழந்தைகளுடன் ஒரு செவ்வாய் துர்க்கையம்மனுக்கும் போயிருந்தேன். இது அம்மாவோடை படிச்ச மாமா , இது அம்மாவோடை படிச்ச அன்ரியென்று அடையாளம் சொல்லும்படி அங்கு யாரும் இருக்கவில்லை. நாங்கள் கூட்டமாக நின்று கதைத்த மரநிழலும் , துர்க்கையம்மன் வெளிவீதியும் அன்றைய அடையாளங்களில் சில தாங்கி அப்படியே இருந்தது. யாராவது அன்றைய நண்பர்கள் வருவார்களா என துர்க்கையம்மன் வீதியிலும் கே.கே.எஸ் வீதியையும் உற்றுப்பார்த்தேன். எங்கும் புது முகங்கள். எவரும் ஞாபகம் சொல்ல என்னை நினைவில் வைத்திருக்க இருக்கவில்லை.

அண்மையில் அசின் , லைலா , ஷாம் , ஆர்யா நடிப்பில் வந்திருந்த படமொன்று (படத்தின் பெயர் நினைவில்லை) பார்க்கக் கிடைத்தது. அந்தப்படத்தில் உலவியவர்கள் எங்கள் அன்றைய நாள் நண்பர் போலிருந்தார்கள். அவர்கள் ஞாபகங்கள் மட்டும் மீதமாக இன்னும் ஞாபகப் பெட்டகத்தில் பத்திரமாய்......அப்பப்போ அவர்களின் ஞாபகமாய் சேமித்த அவர்கள் கையெழுத்துக்களும் நினைவுப் பொருட்களும் தொலைந்து போக....அவர்கள் மட்டும் என் இதயக்கூண்டில் ஒரு மூலையில் வசிக்கிறார்கள். என்றும் இல்லாமல் எப்போதாவது அவர்களை நினைவுபடுத்தும் வகையில் வரும் படங்களோ , பாடல்களோ , கவிதைகளோ , கதைகளோ பார்க்கும் போது பழைய நாட்களுக்குள் போய் விழுந்து விடுகிறது மனசு.....

Link to comment
Share on other sites

1991 மருதடி தேருக்கு தாவணிகட்டி தலையில் கனகாம்பரம் வைத்து வீட்டாருடன் வீதியில் போக....

கோவில்களும் தரிசனமும் அதுவொரு அழகிய காலம் என்பதை விட வேறெந்த வார்த்தை சொல்ல......?

மருதடி தேரன்று அப்பப்பாவுடனும், தங்கைகளுடனும் சுதுமலை தோட்டவெளியூடாக நடந்து செல்லும் பசுமையான நினைவுதான் வருகிறது. என்ன இனிய நாட்கள் அவை. :D அதுவும் அனேகமாக வருடபிறப்பு தினங்களில் வருவதால் பண்டிகை கோலமும் களை கட்டும். அந்த வாழ்க்கை திரும்பவும் கிடைக்காதோ என ஏங்குகிறேன்.

புலம்பெயர்ந்து 12 ஆண்டின் பின் ஊர் போன போது எனது குழந்தைகளுடன் ஒரு செவ்வாய் துர்க்கையம்மனுக்கும் போயிருந்தேன். இது அம்மாவோடை படிச்ச மாமா , இது அம்மாவோடை படிச்ச அன்ரியென்று அடையாளம் சொல்லும்படி அங்கு யாரும் இருக்கவில்லை. நாங்கள் கூட்டமாக நின்று கதைத்த மரநிழலும் , துர்க்கையம்மன் வெளிவீதியும் அன்றைய அடையாளங்களில் சில தாங்கி அப்படியே இருந்தது. யாராவது அன்றைய நண்பர்கள் வருவார்களா என துர்க்கையம்மன் வீதியிலும் கே.கே.எஸ் வீதியையும் உற்றுப்பார்த்தேன். எங்கும் புது முகங்கள். எவரும் ஞாபகம் சொல்ல என்னை நினைவில் வைத்திருக்க இருக்கவில்லை.

என்றும் இல்லாமல் எப்போதாவது அவர்களை நினைவுபடுத்தும் வகையில் வரும் படங்களோ , பாடல்களோ , கவிதைகளோ , கதைகளோ பார்க்கும் போது பழைய நாட்களுக்குள் போய் விழுந்து விடுகிறது மனசு.....

அப்போது மனதில் ஏற்படும் ஏமாற்றத்தை உணரமுடிகிறது. தினம் தினம் பழகிய உறவுகளின் தொடர்பையும் நாட்டுப்பிரச்சினையால் இழந்துவிட்டோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..............இனிக்கும் நினைவுகள் . பள்ளி வாழ்வை நினைவு படுத்தி விடீர்கள் இன்றும் என்னுடன் படித்த , உயிர் நண்பி . இடையில் புலப்பெயர்வில் தொடர்பின்றி மீண்டும் தொடர்கின்றது. இருபதுக்கு மேற்பட்ட வருடங்களாக . .......... .பிரியும் போது படித்த பாடல் ...." பசுமை நிறைந்த நினைவுகளே ......" இன்றும் பசுமையாக .மீண்டும் வராதா ? மறுபடி அந்த பருவத்துக்காக பிறக்கவேண்டும் . நல்ல பதிவு

நன்றி சாந்தி .......... .

Link to comment
Share on other sites

மருதடி தேரன்று அப்பப்பாவுடனும், தங்கைகளுடனும் சுதுமலை தோட்டவெளியூடாக நடந்து செல்லும் பசுமையான நினைவுதான் வருகிறது. என்ன இனிய நாட்கள் அவை. :) அதுவும் அனேகமாக வருடபிறப்பு தினங்களில் வருவதால் பண்டிகை கோலமும் களை கட்டும். அந்த வாழ்க்கை திரும்பவும் கிடைக்காதோ என ஏங்குகிறேன்.

அப்போது மனதில் ஏற்படும் ஏமாற்றத்தை உணரமுடிகிறது. தினம் தினம் பழகிய உறவுகளின் தொடர்பையும் நாட்டுப்பிரச்சினையால் இழந்துவிட்டோம். :(

மருதடித் தேரும் அதன் நினைவுகளும் நாங்கள் உலவிய தெருக்களும் ஞாபகங்களில் மட்டுமே எங்களோடு மிஞ்சிக்கிடக்கிறது மல்லிகைவாசம்.

இழந்துவிட்டோம் எல்லாம் இனியெப்போ அவையென்ற கனவும் மெல்ல மெல்ல இனியில்லை என்றாகிவிட்டது.

நன்றி கருத்திட்டமைக்கு.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..............இனிக்கும் நினைவுகள் . பள்ளி வாழ்வை நினைவு படுத்தி விடீர்கள் இன்றும் என்னுடன் படித்த , உயிர் நண்பி . இடையில் புலப்பெயர்வில் தொடர்பின்றி மீண்டும் தொடர்கின்றது. இருபதுக்கு மேற்பட்ட வருடங்களாக . .......... .பிரியும் போது படித்த பாடல் ...." பசுமை நிறைந்த நினைவுகளே ......" இன்றும் பசுமையாக .மீண்டும் வராதா ? மறுபடி அந்த பருவத்துக்காக பிறக்கவேண்டும் . நல்ல பதிவு

நன்றி சாந்தி .......... .

புலப்பெயர்வு ஊருக்குள் இடப்பெயர்வென்று இழந்தவை ஏராளம். பசுமை நிறைந்த நினைவுகள் இன்னும் பச்சையம் உலராமல் மனசுக்கள் பதிந்து கிடக்கிறது. இடையில் தொடர்பறுந்த உறவுகள் நட்புகள் இனியென்று ?

மிஞ்சும் துயரோடு நினைவுகளை மீட்டுப்பார்ப்போம்.

கருத்திட்டமைக்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.