Jump to content

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலமும் - மாநாடு


Recommended Posts

கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனித்தில் எடுக்க வேண்டுமா? ஆட்டிசம் போன்ற உளநலக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , புலம்பெயர்ந்து கனடா போன்ற நாடுகளில் வாழும் லற்றின் அமெரிக்க ,சோமாலிய ,சூாடானிய மற்றும் தமிழ் மக்கள் உளநலக்குறைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்தது இம்மாநாடு.

Centre for Addiction and Mental Health ஐச் சேர்ந்த Dr.Laura Simich பேசும்போது ஆண்டுக்கு 220 000 வரையான மக்கள் கனடாவில் குடியேறுகிறார்கள். இவர்களில் 50% மக்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேறுகிறார்கள். ரொரன்டோ போன்ற மக்கள் செறிந்து வாழும் நகரங்களில் வாழும் மக்களில் தாய் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றைய மக்களோடு ஒப்பிடும்போது அதிகளவான மனவழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் ஆனால் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் உளநலம் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை பெறுவதிலும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்நாட்டு போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலோடு சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் புலம்பெயர்ந்து தாம் குடியேறும் நாடுகளில் தொடர்ந்தும் மனவுளைச்சலுக்குள்ளாக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறார்

Link to comment
Share on other sites

சிநேகிதி உங்களுடன் தொலைபேசியவருக்குத்தான் முதலில் உள நல உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடமாக சூடான் நாட்டில் நடந்துவரும் போர் காரணமாக ரொரன்ரோ போன்ற நகரங்களில் வாழும் மக்களில் அரசாங்க சமூக நல உதவிப்பணம் பெற்று வாழும் மக்களில் 77% ஆனோர் அந்தப் பணம் தங்களுக்குப் போதவில்லை என்று கூறியிருக்கிறார்கள் ஏனெனில் அந்தப் பணத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து சூடான் நாட்டில் இன்னலுறும் தங்கங் மக்களுக்குத் தேவைாயான பண உதவிகளைத் தங்களால் செய்ய முடியாதுள்ளதென்று தெரிவித்துள்ளார்கள்.

90களில்கிட்டத்தட்ட 1000-1500 டொலர் வரையிலான அரசாங்கப்பணம் கொடுக்கப்பட்டிருந்தாகச் சொல்கின்றார்கள். பின்னர் தான் அவை குறைக்கப்பட்டனவாம். முதலில் வழங்கப்பட்ட பணத்தினைத் துஸ்பிரயோகம் செய்ததாலும், ரொரன்ரோ மாநகரசபைக்கு ஏற்பட்டசெலவீனங்களைக் குறைக்கவும் தான் இவ்வவை நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஒரு வகையில் சூடான் மக்கள் போல, நாங்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், கனடா அரசின் செயற்பாடு சரியானது என்பேன். ஒரு புலம்பெயர்ந்த ஒரு தனிமனிதனைத் தான், அவனின் நிலை கருதி, காப்பாற்றுமே தவிர, அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரரை எல்லாம் காப்பாற்ற வேண்டிய அவசியம் அதற்கில்லையே!

சிநேகிதி உங்களுடன் தொலைபேசியவருக்குத்தான் முதலில் உள நல உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

அது என்றால் உண்மை. சினேகிதியோடு பேசிய பின்னர் அவ்வாறன உதவி எல்லோருக்கும் தேவைப்படுகின்றதாம்.. :unsure::o .(சும்மா பகிடிக்கு.. கோவிக்கின்றதில்லை)...

Link to comment
Share on other sites

மிக நல்ல இணைப்பு..

இந்த மாநாட்டைப்பற்றிய ஏனைய தகவல்களை தொடர்ந்தும் எழுதுவேன்.ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.இன்று Canadian Multicultural Radio (CMR) ல் சமூக நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :

ஒருவர் : நீங்களா இப்ப CMR ல் உளநல ஆய்வு பற்றி கதைச்சனீங்கள்

நான் : ஓம் சொல்லுங்கோ.

ஒருவர் : கனடாக்கு பிள்ளையளைக் கூப்பிடத் தெரிஞ்ச எங்களுக்கு எங்கட பிள்ளையயளை எப்பிடி வளர்க்கிறதென்டும் தெரியும். எங்கட பிள்ளையை எப்பிடி வளர்க்கிறதென்டு நீங்கள் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டாம் சரியோ. உங்கட உளநலத்தை எப்பிடிப் பாதுகாக்கிறதென்டதைப் பற்றி மட்டும் நீங்கள் கவலைப்படுங்கோ.

என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் சொன்னதற்குப் பதில் சொல்லும் வாய்ப்பும் இல்லையெனக்கு.நான் சொன்ன உடல் உள நல ஆய்வுக்கும் பிள்ளை வளர்ப்புக்கு துளியளவும் தொடர்பில்லை அப்பிடியிருந்தும் அவர் என்ன விளங்கி அவர் அப்படிச் சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

அதுசரி சினேகிதி... உங்கட தொலைபேசி இலக்கம் இவருக்கு எப்படி தெரிஞ்சது? உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌வ‌ரோ? :unsure:

இதே தொலைபேசியவர் உங்களிடம் கேட்டதை டொக்ரர் லோறாவிடம் கேட்கச்சொன்னால் தலை தெறிக்க ஓடியிருப்பார். எங்கட ஆக்களின்ர வீரமெல்லாம் எங்கட வட்டத்துக்குள்ளதான். :o

Link to comment
Share on other sites

32% மக்கள் மிகவும் குறைந்தளவு ஆங்கிலம் பேசுபவர்கள்.33% மக்கள் மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். 36%மக்கள் PTSD ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
Link to comment
Share on other sites

மிக நல்ல இணைப்பு..

அதுசரி சினேகிதி... உங்கட தொலைபேசி இலக்கம் இவருக்கு எப்படி தெரிஞ்சது? உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌வ‌ரோ? :unsure:

இதே தொலைபேசியவர் உங்களிடம் கேட்டதை டொக்ரர் லோறாவிடம் கேட்கச்சொன்னால் தலை தெறிக்க ஓடியிருப்பார். எங்கட ஆக்களின்ர வீரமெல்லாம் எங்கட வட்டத்துக்குள்ளதான். :o

\\ஒரு உடல் உள நல ஆய்வு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார் :\\

ஆய்வுக்கு ஆக்கள் தேவை என்று சொல்லி தொடர்புகளுக்கு ஒரு தொலைபேசி இலக்கம் குடுத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

90களில்கிட்டத்தட்ட 1000-1500 டொலர் வரையிலான அரசாங்கப்பணம் கொடுக்கப்பட்டிருந்தாகச் சொல்கின்றார்கள். பின்னர் தான் அவை குறைக்கப்பட்டனவாம். முதலில் வழங்கப்பட்ட பணத்தினைத் துஸ்பிரயோகம் செய்ததாலும், ரொரன்ரோ மாநகரசபைக்கு ஏற்பட்டசெலவீனங்களைக் குறைக்கவும் தான் இவ்வவை நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஒரு வகையில் சூடான் மக்கள் போல, நாங்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், கனடா அரசின் செயற்பாடு சரியானது என்பேன். ஒரு புலம்பெயர்ந்த ஒரு தனிமனிதனைத் தான், அவனின் நிலை கருதி, காப்பாற்றுமே தவிர, அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரரை எல்லாம் காப்பாற்ற வேண்டிய அவசியம் அதற்கில்லையே!

அது என்றால் உண்மை. சினேகிதியோடு பேசிய பின்னர் அவ்வாறன உதவி எல்லோருக்கும் தேவைப்படுகின்றதாம்.. :unsure::o .(சும்மா பகிடிக்கு.. கோவிக்கின்றதில்லை)...

இங்குள்ள ஒரு உளவியல் நிபுணரிடம் போய் என்னால தாய்நாட்டில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. அவர்களைப் பற்றி கவலையே எனக்குப மனவழுத்தத்தை தருகிறது என்று சொன்னாராம் அதறக்கு அந்த உளவியல் ஆலோசகர் என்னால் உங்களை மட்டும்தான் குணப்படுத்த முடியுமென்று சொன்னாராம். அதைப்போலத்தான் கனடா அரசாங்கம் ஊhரிலுள்ளவைக்கெல்லாம் சேர்த்து சமூகநல உதவித்தொகையை வழங்க முடியாதென்பது. டொக்டர் லோரா இதைச் சொன்னதற்கான காரணம் ஒரு நாட்டில் அகதிகளாக வந்திருக்கும் மக்களுக்கு உளநல ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள் மேம்போக்காக விட்டேற்றித்தனமாக உங்களை மட்டும்தான் குணப்படுத்த முடியும் என்று சொல்லாமல் நோயாளிகளின் சிந்தனையோட்டத்தை புரிந்துகொண்டு அவர்கள் என்ன மாதிரியான சூழலில் நாட்டை விட்டு வந்திருக்கிறார்கள் ஏன் அவர்கள் அங்குள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் அவர்களுடைய பின்புலம் போன்றவற்றை அறிந்துகொண்டு ஆலோசனை வளங்கவேண்டும் என்று அறிவுறுத்தவே அப்படிச்சொன்னார்.

சிநேகிதி உங்களுடன் தொலைபேசியவருக்குத்தான் முதலில் உள நல உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

வசியண்ணா தூயவனண்ணா சொல்லியிருக்கிறதையும் ஒருக்கா வாசியுங்கோ.

நல்ல இணைப்பு சினேகிதி. மக்கள் உதவி பெறாமைக்கு காரணம் நோய் பற்றிய அறிவின்மை. அத்தோடு மொழியும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

நுணாவிலான் மொழி ஒரு தடையாக இருக்காதென்று நம்புகிறேன் ஏனெனில் அநேகமான உளவியல் ஆலோசனை மற்றும் தன்னார்வுத்தொண்டர் அமைப்புகளில் தமிழ் மொழியில் சேவையாற்றுவோர் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் மக்களிடையே ஆலோசனைக்குச் செல்பவர்கள் எல்லாரும் பைத்தியம் என்ற ஒரு எண்ணம்(taboo) இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆனால் எங்கள் மக்களிடையே ஆலோசனைக்குச் செல்பவர்கள் எல்லாரும் பைத்தியம் என்ற ஒரு எண்ணம்(taboo) இருக்கிறது.

இப்பிடிச் சொல்லியே ஆக்களைப் போகவிடாமல் பண்ணி, கடைசியில பெத்த பிள்ளையளையே கொல்லுற அளவுக்கு எல்லாம் முத்திப் போகுது..! :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.