Jump to content

''இன்ர நெட்'' லவ்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''இன்ர நெட்'' லவ்.....

கவிதை....

பலகோடி ''லவ் பேட்ஸ்''கள்

இணையத் தளங்களிலே

வலங்கள் வரும்....

அதில் சிலகோடி தங்களுக்காய்

ஜோடிகள் தேடி நிற்கும்....

ஜோடிகள் கிடைத்தவுடன்

ஜோராக சேர்ந்து கொண்டு

தங்கள் உணர்வெல்லாம்

''மொனிட்டரிலே'' உண்மையாய்

கொட்டி நிற்கும் ....

அழுவதற்கும் கை விரல்கள்

அழகாக ரைப் அடிக்கும்...

கோபப் படுவதற்கு

''கீ போட்''டை கொதிப்புடன்

உடைத்தெறியும்.....

அழுவதும் எழுத்தில் தான்...

சிரிப்பதும் எழுத்தில் தான்...

முகம் பார்க்க முன்னர்

''என் கேஜ்'' ஐ முடிவு செய்வதும்

எழுத்தில் தான்....

இரண்டும் பார்த்திராது

ஒன்று இக்கரையில் நின்று

நீதான் என் ''பியூட்டி'' எனும்....

மறுகரையில் மற்றொன்று

நீ தான் என் ''கான்ட்சம்'' எனும்....

உண்மையில் காதலர்க்கு

உலகமே சிறு பந்தாகும்....

இந்தக் காதலர்க்கோ

கணனியே உலகாகும்.....

பறவை ரெண்டும் செக்ஸியாய்

பகலில் கூட ''சட்'' கொள்ளும்.....

பசித்தாலும் பசிதாங்கி

செக்ஸ் ஜோக்குக்கள்

கதைத்து நிற்கும்.....

சில நேரம் சில பறவை

உணவு நேரம் வந்தவுடன்

காதலைக் ''கட்'' பண்ணிவிட்டு

தன் உணவுக்காய் சென்றுவிடும்....

குடும்பம் தூங்கியதும்

குதூகலம் அடைந்துகொண்டு

தன் உறவுடன் இணைவதற்கு

''இன்ர நெட்'' சென்றுவிடும்.....

சாதிமத பேதமில்லை

சண்டைகளும் ஏதுமில்லை

''இன்ரர் நெட்'' லவ்வென்று

தங்களை அறிமுகம் செய்துகொன்டு

ஒன்றாகச் சேர்ந்து

மகிழ்ச்சியுடன் வாழ்ந்து நிற்கும்....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

puspaviji

நாங்கலெல்லாம் இதுக்குப்போய்...... நாட்டு நடப்ப சொன்னேன் ..., அவ்வளவுதான்....

வாசித்ததற்கு நன்றி...

இளங்கவி

Link to comment
Share on other sites

வணக்கம் இளங்கவி, நீங்கள் கவிதையில சொன்ன பல விசயங்களோட எனக்கு உடன்பாடு இல்லை எண்டாலும், மிக அருமையாக அழகிய கவிதை ஒண்டை எழுதி இருக்கிறீங்கள். முந்தாநாள் இதை இஞ்ச வாசிச்சு இருந்தன். உடனடியாக கருத்து சொல்ல முடிய இல்லை. வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளிக்கு

மிக்க நன்றி என் கவிதையையும் வாசித்துக் கருத்துச் சொன்னதற்கு

எனக்குத் தெரிந்த வட்டத்துக்குள் நடந்துகொண்டிருக்கும் மற்றும் நடந்து முடிந்துவிட்ட 'இன்ர நெட் லவ்'' போன்ற சம்பவங்களையும் மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களைப் பற்றியும் சிந்தித்த பொழுது தோன்றிய கவிதையிது. நான் மேல் குறிப்பிட்ட காரணங்களால் இதில் சொன்ன விடயங்கள் பலபேருக்கு ஒத்துப்போகாமலும் இருக்கலாம் அதில் துளியளவேனும் தவறேதும் இருக்க முடியாது.

எனவே நான் உங்கள் உண்மையான விமர்சனத்தை மிகவும் வரவேற்கிறேன் அத்துடன் எனது கவிதைப் பொருளில் முழுதும் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கவிதை எழுதிய நடைக்கு உங்கள் வாழ்த்து எனது தமிழுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.

''இவனெல்லாம் இப்படிக் கவிதை எழுதுகிறான்...ஏன் நான் எழுதக்கூடாது'' என்று நாலுபேர் தமிழை எழுத பேனாவைப் பிடித்தாலும் அது தமிழை வளர்க்கும் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றிதானே...!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி முரளி...

இளங்கவி

Link to comment
Share on other sites

ம் அற்புதமான கவிதை. இதைவிடப்பாராட்ட வார்த்தைகள் தேடினேன் கிடைக்கவில்லை. வேலைக்குப்போகிற அவசரம். மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் எழுத மறந்ததை இங்கே நான் எழுத ஆசைப்படுகின்றேன். மன்னியுங்கள்.

ஒரு குருவி நிசவாழ்வில் சோடி கிடைக்க பறந்துவிடும். மறுகுருவி அதைக்காணாமல் சோகத்தில் இணையத்தில் பைத்தியமாய் வலம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவோலை வேலிக்கருகிலும்

தென்னைமர நிழலிலும்

வடலி மறைவிலும்

வைரவர் கோவில் கிணத்தடியிலும்

குளக்கரையில் நீராடும் போதும்

கோவில் திருவிழாவில் சாமி கும்பிடும் போதும்

நேருக்கு நேர் முகம் பார்த்து காதல் செய்வதில் உள்ள சுகம் வேறு எங்கே?

நிலையானது உறுதியானது நிலைத்து நீடிப்பது

இளங்கவி உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

இளங்கவி வாழ்த்துக்கள்... எழுத எழுத கையெழுத்து அழகாவது போல பழகப் பழக தமிழும் அழகாகும்... அதனால தொடர்ந்து எழுதுங்கோ... நல்லா வருவீங்க...

அது நிற்க... அடியேனுக்கு ஒரு விடயத்தில் உடன்பாடில்லை...

அது ...

//

அழுவதும் எழுத்தில் தான்...

சிரிப்பதும் எழுத்தில் தான்...

முகம் பார்க்க முன்னர்

''என் கேஜ்'' ஐ முடிவு செய்வதும்

எழுத்தில் தான்....

//

மேலே நீங்க சொன்னது பற்றியது... இப்ப யார் தட்டச்சு செய்கிறாங்க... குரல் வழி உரையாடல், முகம் பார்த்து உரையாடல் இப்படிக் கலக்கிறாங்களே... (சும்மா என்னால் முடிந்த உதவிக் குறிப்பு... ;-))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி aathipan

உங்கள் கற்பனைக்கு தோன்றிய வரிகள் என் கற்பனைக்கு எட்டவில்லையே....! என்ன செய்வது.... ? இனி உங்கள் வரிகளை என் கவிதையில் சேர்த்தால் உங்கள் கற்பனையைத் திருடிய குற்றவாளியாவேன் அல்லவா....?

வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் என் வரிகளை ரசித்து கருத்துச் சொன்னதுக்கு மீண்டும் நன்றிகள்...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா...

நீங்கள் சொன்ன காதல் இயற்கை போன்றது.. என்றும் அழிவில்லாதது...

'' இன்ர நெட் லவ் '' எல்லாம் செயற்கை அண்ணா.... ஏதோ முடிந்தவரைக்கும் போகட்டுமே...!

என் வரிகளுக்கு கருத்துச் சொன்னதற்கு நன்றிகள் குமாரசாமி அண்ணா..

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம்.... kavi_ruban....

நீங்கள் சொன்ன மாதிரி இப்ப '' வெப் காம் ''எல்லாம் வச்சு கலக்கிறாங்கள்... '' நியூ ரெக்னோலொஜி '' எல்லாம்

சேர்க்கப் போனால் கவி நீளும் என்ற காரணத்தினால் தான் நிறுத்திவிட்டேன்.... இன்ர நெட் லவ் பாகம் 2இல் இனி வரப்போகும் '' நியூ ரெக்னோலொஜி '' யும் சேர்த்து எழுதிவிடுகிறேன்...

வரிகளை ரசித்து கருத்துச் சொன்னதற்கு உங்களுக்கு மிக்க நன்றி.....

இளங்கவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.