Jump to content

உயிரை உருக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிரை உருக்கி

நெய்யாக வார்த்தவர்கள்!

மாவீரர்கள்! யார் இவர்கள்?

தன்னலம் கருதாத தியாகிகள்!

தமிழ்நலம் கருதிய ஞானிகள்!

எங்களுக்காக தங்கள்

உயிரையே துறந்த துறவிகள்!

தமிழர் இதயங்களில் என்றும்

நிலைத்து வாழும் தெய்வங்கள்!

கடலிலும் தரையிலும் காற்றிலும்

கலந்து இருப்பவர்கள்!

எங்கள் சுவாசத்தினூடக

எம் உதிரத்தில் கலந்து

எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!

விடுதலைத் தீ அணைந்து போகாமல்

தம் உயிரை உருக்கி

நெய்யாக வர்த்தவர்கள்!

தாம் உருகி உலகத்திற்கு

ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!

கல்லறைக்குள் உறங்குகின்ற

கார்த்திகைப் பூக்கள்!

சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!

தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்

துயில் எழுப்பி!

துயிலும் இல்லங்களில்

மீளாத் துயில் கொள்பவர்கள்!

தமிழர் இதயங்களில்

ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்

அணையாத நந்தா விளக்குகள்!

உலகத்தின் மனச்சாட்சியை

உலுப்பி விட்ட உத்தமர்கள்!

சாவுக்கு தேதி குறித்த

சாகா மறவர்கள்!

தமிழன் என்றொரு இனமுண்டு!

தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று

தரணிக்கு உணர்த்திய

தாயகப் புதல்வர்கள்!

உலகத் தமிழனை உயர்த்தி வைத்த

உன்னத மறவர்கள்!

இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்

முடிவில்லை………..

ஆம் மாவீரன் சங்கரிலே

தொடங்கியது தியாகம்!

ஈழம் விடிந்த பின்பும்

முடியுமா இவர்களின் ஈகம்!

காத்து நிற்பார்கள் ஈழத்தின்

எல்லையை காலாகாலம்!

மாவீரர்களே! உங்கள்

கல்லறைகள் கருத்தரிக்கும்!

அதில் இருந்து ஆயிரமாயிரம்!

வேங்கைகள் தோன்றுவார்கள்!

அவர்களால் உங்கள்

தாகங்கள் தீர்க்கப்படும்!

உங்கள் தியாகத்திற்கு!

நீங்கள் நிர்ணயித்த

விலைதான் பேசப்படும்!

தமிழர் உரிமைகளைப் பேரம் பேச

நாங்கள் தயாரில்லை!

உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!

இது உங்கள் கல்லறைகள் மேல்

நாம் செய்யும் சத்தியம்!!!

தினமும் உங்கள் உணர்வுகளோடு

பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்

இதைச் சாதித்தே தீருவார்!

ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!

உங்கள் துயிலும் இல்லங்களுக்கு

பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!

மிக விரைவில் வருவோம்!

வெற்றிச் செய்தியோடு!

ஐக்கிய நாடுகள் சபையிலே!

புலிக்கொடி பறக்கும்!

தமிழ் குடி சிறக்கும்.

“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

நாரந்தனையூர் கவிநயன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரை உருக்கி ...........நல்லதொரு ,ஆக்கம் .தொடருங்கள் மேலும் .வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பரே

உங்கள் கவிதையினை மாவீரர் நாளன்று நோர்வே தமிழ்முரசம் வானொலியில் ஓலிபரப்பும் சந்தாப்பம் கிடைத்தது. உங்கள் பெயருடன் அந்த கவிதையை ஒலிபரப்பினேன். அதற்கு நன்றிகள். . .

நட்புடன் பரணீதரன்

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்கு வித்தாகி வீழந்த மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.காலத்தின் தேவை கருதி மீண்டும் இந்தக் கவிதைப் பூக்களைக் காணிக்கையாக்குகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னகம் காக்க பாடுபடுவோர் பலரிங்கு

தாயகம் காக்கப்புறப்பட்ட வீரரே!

உங்களை வணங்குகின்றோம்

உயிரை உருக்கி வார்த்த வரிகள்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இது மாவீரர் வாரம்!!!!!!!!!!!காலத்தின் தேவை கருதி மீண்டும் இக் கவிதை புதுப்பிக்கப்படுகிறது.

காலத்தால் அழியாத மாவீரர் இலட்சியம் நிச்சயம் வெல்லும்.

மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான எண்ணங்கள் அழுதழுது நனைகிறேன், வாழ்த்துக்கள் புலவர்!

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி இத் திரி மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், புலவரே!

மாவீரர் தினங்கள், வருடா வருடம் வந்து போகின்றன!

நிஜங்கள் மட்டும், தினம் தினம், மாவீரர்களின் இல்லாமையை, நினைவு படுத்துகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தோழர் புலவர்..

Link to comment
Share on other sites

நன்றி புலவரே!

மாவீரர்கள் பெருமையை வரிகளில் உதிர்த்த வார்த்தைக்கள் அத்தனையும் அருமை!

மிக்க நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் எழுதிய அனைவருக்கும் நன்றிகள்!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!!

காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

Link to comment
Share on other sites

  • 11 months later...

உயிரை உருக்கி

நெய்யாக வார்த்தவர்கள்!

மாவீரர்கள்! யார் இவர்கள்?

தன்னலம் கருதாத தியாகிகள்!

தமிழ்நலம் கருதிய ஞானிகள்!

எங்களுக்காக தங்கள்

உயிரையே துறந்த துறவிகள்!

தமிழர் இதயங்களில் என்றும்

நிலைத்து வாழும் தெய்வங்கள்!

கடலிலும் தரையிலும் காற்றிலும்

கலந்து இருப்பவர்கள்!

எங்கள் சுவாசத்தினூடக

எம் உதிரத்தில் கலந்து

எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!

விடுதலைத் தீ அணைந்து போகாமல்

தம் உயிரை உருக்கி

நெய்யாக வர்த்தவர்கள்!

தாம் உருகி உலகத்திற்கு

ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!

கல்லறைக்குள் உறங்குகின்ற

கார்த்திகைப் பூக்கள்!

சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!

தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்

துயில் எழுப்பி!

துயிலும் இல்லங்களில்

மீளாத் துயில் கொள்பவர்கள்!

தமிழர் இதயங்களில்

ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்

அணையாத நந்தா விளக்குகள்!

உலகத்தின் மனச்சாட்சியை

உலுப்பி விட்ட உத்தமர்கள்!

சாவுக்கு தேதி குறித்த

சாகா மறவர்கள்!

தமிழன் என்றொரு இனமுண்டு!

தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று

தரணிக்கு உணர்த்திய

தாயகப் புதல்வர்கள்!

உலகத் தமிழனை உயர்த்தி வைத்த

உன்னத மறவர்கள்!

இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்

முடிவில்லை………..

ஆம் மாவீரன் சங்கரிலே

தொடங்கியது தியாகம்!

ஈழம் விடிந்த பின்பும்

முடியுமா இவர்களின் ஈகம்!

காத்து நிற்பார்கள் ஈழத்தின்

எல்லையை காலாகாலம்!

மாவீரர்களே! உங்கள்

கல்லறைகள் கருத்தரிக்கும்!

அதில் இருந்து ஆயிரமாயிரம்!

வேங்கைகள் தோன்றுவார்கள்!

அவர்களால் உங்கள்

தாகங்கள் தீர்க்கப்படும்!

உங்கள் தியாகத்திற்கு!

நீங்கள் நிர்ணயித்த

விலைதான் பேசப்படும்!

தமிழர் உரிமைகளைப் பேரம் பேச

நாங்கள் தயாரில்லை!

உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!

இது உங்கள் கல்லறைகள் மேல்

நாம் செய்யும் சத்தியம்!!!

தினமும் உங்கள் உணர்வுகளோடு

பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்

இதைச் சாதித்தே தீருவார்!

ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!

உங்கள் துயிலும் இல்லங்களுக்கு

பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!

மிக விரைவில் வருவோம்!

வெற்றிச் செய்தியோடு!

ஐக்கிய நாடுகள் சபையிலே!

புலிக்கொடி பறக்கும்!

தமிழ் குடி சிறக்கும்.

“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

நாரந்தனையூர் கவிநயன்!

 

அற்புதமான படைப்பு, நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!! காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற நல்லதொரு கவிதை. மாவீரர் காலத்தால் அழியாதவர்கள். நன்றிகள் புலவர்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!! காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காக தமதுயிரை ஆகுதியாக்கிய அனைத்துப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும் !!!!

 

உங்களின் தியாகங்கள் வீண்போய்விடக் கூடாது என்று இறைவனை இறைஞ்சுகிறேன் !

 

உங்களின் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.