Jump to content

மும்பாய் தாக்குதல் எதிரொலி: இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல்- எம்.கே.நாராயணன் பதவி விலகல்


Newsbot

Recommended Posts

இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: ஒரு வழியாக ராஜினாமா செய்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அதே போல மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று தெரிகிறது.

பாட்டீல் ராஜினாமைவையடுத்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகிறார்.

நாட்டில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் என்று மீண்டும் மீண்டும் உறுதியான நிலையில் அந்தப் பிரிவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் தனது பதவியைக் காப்பதிலேயே தீவிரமாக இருந்தார்.

தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தில் முன்னிலையில் நிற்க வேண்டிய இந்தத் துறை பெரும் தோல்வியை அடைந்த நிலையில் பாட்டீல் மீதான கோபம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது.

ஆனாலும் சோனியா காந்தி குடும்பத்துடனான தனது நல்லுறவை பயன்படுத்திக் கொண்டு பதவியை தக்க வைத்து வந்தார் பாட்டீல்.

இந் நிலையில் வந்தது மும்பை தாக்குதல். இதுவரை இந்தியா கண்டிராத மிகப் புதிய வகையிலான தாக்குதல் இது. கடல் வழியே வந்து தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் கடல் வழியே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து போவது குறி்த்தும், ஆயுதங்கள் வருவது குறித்தும் மகாராஷ்டிர, குஜராத் மீனவர்கள் அந்த மாநிலங்களின் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.

ஆனால், இரு மாநில அரசுகளும் செயல்படத் தவறியுள்ளன.

இந்த மாநிலங்களின் செயல்படும் மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவும் இந்த தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டத் தவறியுள்ளது. இவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர்களை உளவு பார்க்கவே நேரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கடலோரக் காவல் படையும் (கடற் படை அல்ல) இந்த விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து உள்துறைக்கு தலைமை வகிக்கும் பாட்டீலுக்கு எதிரான கோபம் மீண்டும் வெடித்தது. தாக்குதல் நடந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் அவரை மும்பையிலும் பார்க்க முடியவில்லை, டெல்லியிலும் வெளியில் தலை காட்டவில்லை.

மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு வந்தது.

ஆனால், நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர். அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல்.

அதில் மும்பை தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் பெயர் பரிசீலனை:

இதையடுத்து நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோரில் ஒருவர் உள்துறை அமைச்சராக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பெயரும் அடிபட்டது. ஆனால், பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமாகியுள்ள நிலையில் அவரை மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

சிதம்பரத்திடமே அந்தப் பொறுப்பை வழங்கலாம் என சோனியாவும் கூறிவிட்டார்.

ஏற்கனவே ராஜிவ் காந்தியின் ஆட்சியில் உள்துறை இணையமைச்சராக இருந்த சிதம்பரம் உள்நாட்டு பாதுகாப்பை கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் உள்துறை அமைச்சரானால் நிதித்துறையை பிரதமரே கையாள்வார் என்று கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

சிதம்பரம் உள்துறை அமைச்சரானால் இலங்கை தமிழர்கள் மேல் கடுப்போக்கை கடைப்பிடிக்க சாத்தியமுண்டு. அவர் ராஜீவ் மற்றும் சோனியா குடும்பத்தினரின் விசுவாசத்தை வெளிக்காட்ட முயலலாம்.

Link to comment
Share on other sites

சிதம்பரம் உள்துறை அமைச்சரானால் இலங்கை தமிழர்கள் மேல் கடுப்போக்கை கடைப்பிடிக்க சாத்தியமுண்டு. அவர் ராஜீவ் மற்றும் சோனியா குடும்பத்தினரின் விசுவாசத்தை வெளிக்காட்ட முயலலாம்.

பொதுத்தேர்தல் ஒன்று நெருங்கி வரும் காலகட்டத்தில் தமிழக மக்களின் அதிருப்திக்கு ஆளாகும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய சிதம்பரம் துணிய மாட்டார். இதை சோனியாவுக்கும் சிதம்பரம் விளக்கி இருக்கக் கூடும்

காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் (?) நிதித்துறைக்கு சிதம்பரம் மீண்டும் செல்லும் வாய்ப்புகளே அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PM snubs Shivraj Patil and Narayanan

Comment Print Email A A A Share Facebook! Digg it! Newsvine! Reddit! Del.icio.us! Technorati! StumbleUpon! RSS Feed

CloseIndia Today expert view on PM snubs Shivraj PatilPrime Minister Manmohan Singh rebuffed Home Minister Shivraj Patil and National Security Adviser M. K. Narayanan on Saturday by not inviting them to an emergency meeting on the Mumbai terror attack. The meeting discussed lapses in internal security, even as various security agencies pointed fingers at each other for letting the terrorists through.

http://indiatoday.digitaltoday.in/index.ph...82&Itemid=1

எம்.கே. நாராயணன் புலிகள் மீதுள்ள கோபம் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் தனது கவனத்தைச் செலுத்தி இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பில் கோட்டை விட்டிருப்பார்.. வெளியே போகத்தானே வேண்டும்..

Link to comment
Share on other sites

National Security Advisor M. K. Narayanan resigns: Report

ITGD Bureau

New Delhi, November 30, 2008 15.37 pm

==============================================================

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே.நாராயணன் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார் என 'டைம்ஸ் நவ்' செய்தி சேவை தெரிவிக்கிறது

NSA M K Narayanan resigns: Report

30 Nov 2008, 1558 hrs IST, TIMES NEWS NETWORK & AGENCIES

NEW DELHI: National Security Adviser MK Narayanan has submitted his resignation over the attacks in Mumbai that killed nearly 200 people, news

channel Times Now said on Sunday.

Earlier in the day, Home minister Shivraj Patil, under tremendous criticism over a spate of terrorist attacks in the country since last year, has resigned in the wake of the Mumbai terror strikes. Patil has said that he felt obliged to take "moral responsibility" for the brutal attacks in Mumbai, an official government source said.

Prime Minister Manmohan Singh has accepted resignation of Home minister Shivraj Patil and has forwarded it to the President.

Finance minister P Chidambaram will take over as the new home minister and the finance ministry will now be under the direct charge of Prime Minister Manmohan Singh. The CWC, which met here on Saturday night, gave the marching orders to Shivraj Patil.

http://timesofindia.indiatimes.com/India/N...how/3776113.cms

Link to comment
Share on other sites

M K Narayanan resigns over Mumbai terror

Sunday, 30 November , 2008, 16:11

New Delhi: National Security Adviser (NSA) M K Narayanan on Sunday submitted his resignation to Prime Minister Manmohan Singh following the terror attacks in Mumbai, sources in the Prime Minister's Office (PMO) said.

மும்பை பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து திரு.எம்.கே.நாராயணன் பதவி விலகல்

புதுடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு எம்.கே.நாராயணன் தனது பதவி விலகல் கடிதத்தை

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார் என பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன

http://sify.com/news/fullstory.php?id=14808645

Link to comment
Share on other sites

நேற்று பிபிசி தொலைக்காட்சி செய்தியில் பிரித்தானியாவிற்கான பாக்கிஸ்தான் தூதுவர் Wajid Shamsul Hasan கூறினார் மும்பை தாக்குதலை சந்தேகிக்க பல தரப்புகள் இருக்கு என்று. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நிறம் சற்று கறுப்பு என்றும் இது பொதுவாக தென் ஆசிய பகுதியினரின் தன்மை என்றும் சொன்னார். தமிழ் புலிகள் முதலமைச்சர் ராஜீவ் காந்தியை கொலை செய்திருந்தார்கள் என்றும் சொன்னார். எனவே தாக்குதலை நடத்தியவர்களாக பலதரப்பட்டவர்களையும் சந்தேகிக்க வேண்டும் என்றார்.

பி ராமன் கரிகரன் போன்றவர்கள் தமது ஆய்வுகளின் பல முறை குறிப்பிட்டிருந்தவர்கள் புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கு எண்டு. ISI ஓடு சேர்ந்து புலிகளும் போதைப் பொருள் ஆயுதங்கள் கடத்திறவை, இந்தியாவுக்குள்ளை இயங்கிற தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி கொடுக்கினம் எண்டு.

மும்பை தாக்குதல் இந்தியாவின் 9-11 போன்றது என்று வருணிக்கப்படுது. அமெரிக்கா தனது 9-11 இற்கு காரணம் என ஆப்கானிஸ்தானையும் பின்னர் சம்பந்தம் இல்லாது ஈராக்கையும் தாக்கிய மாதிரி இந்தியாவும் பாக்கிஸ்தானையும் பின்னர் புலிகளையும் தாக்குமா?

தாக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அப்பொழுது தான் 20 ஆம் நூற்றாண்டு சிந்தனைகளில் சிக்கித் தவிக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் black humour ஆலோசைகளோடு இந்தியா 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசாக வடிவம் பெறும்.

Link to comment
Share on other sites

நாராயனின் விலகல் நற்செய்தியே!! கடந்த கலைஞரின் ஆட்சிக்கலைப்பிற்கும் இவரே சூத்திரதாரி!!!

ஆனால் நாரயணன், சிதம்பரம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!

பார்ப்போம் .... மாற்றம் வருமா???? இல்லை புலியை பூதமாக்கும் பிராமணத்துவ வேதாளம் முருக்கை மரத்தில் மீண்டும் ஏறுமா????? .............. என்று ...............

Link to comment
Share on other sites

டெல்லி: இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

ஆனால்இ வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை இவரது ராஜினாமா கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலாளராக இருந்து பிரதமர் ராஜிவ் காந்தி உள்பட பல பிரதமர்களை இலங்கைஇ காஷ்மீர்இ அமெரிக்க உறவு உள்ளிட்ட பல விஷயங்களில் தவறாக வழி நடத்திய ஜே.என்.தீட்சித் இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வழக்கம் போலவே பிரதமர் மன்மோகன் சிங்கையும் தவறாகவே வழி நடத்தி வந்தார். திடீரென அவர் மறையவே 2005ம் ஆண்டு இந்தப் பொறுப்பு எம்.கே.நாராயணனிடம் வழங்கப்பட்டது. இது நிலைமையை இன்னும் மோசாக்கியது.

இந்திரா காந்தி குடும்பம்இ காங்கிரஸ் கட்சி ஆகியோரின் ஜால்ரா என்பதைத் தவிர நாராயணனுக்கு பெரிய தகுதி ஏதும் இருந்ததில்லை

இந்திரா குடும்பத்துக்கு நெருக்கம் என்பதால் இருமுறை இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992ம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். 2004ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கி்ன் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தீட்சித் மறைந்த பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்.

பாலக்காட்டைச் சேர்ந்தவரான இவர் தான் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உதவி வந்தவர். இருவரும் சேர்ந்து காட்டிய பொறுப்பின்மையும் செயலின்மையும் தான் நாட்டை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

மீண்டும் வருவாரா பிரிஜேஷ் மிஸ்ரா?:

நாராயணன் மீது சமீப காலமாவே பிரதமர் நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் பாஜக ஆட்சியில் பிரதமர் வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ராவுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்தி வந்தார்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்த விஷயத்தில் இவர் பிரதமருக்கு பெரும் உதவியாக இருந்தார்.

மேலும் பாஜக ஆட்சியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மிகுந்த தீவிரம் காட்டியவர். யாருக்கும் அஞ்சாதவர்இ வாஜ்பாயோ-அத்வானியோ.. யாருக்கும் ஜால்ரா போட மாட்டார். மனதில் பட்டதை சொல்லிவிடுவார். இதனால் இவர் மீது வாஜ்பாய்க்கு அதீத மரியாதை உண்டு.

குறிப்பாக ஐபி மற்றும் ரா அதிகாரிகளை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மிஸ்ரா.

நேற்று கூட நாராயணனுடன் மிஸ்ராவையும் உடன் வைத்துக் கொண்டு தான் முக்கிய ஆலோசனையை நடத்தினார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே நாராயணனுக்குப் பதிலாக வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை அவரையே பதவியில் நீடிக்குமாறு பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மிஸ்ராவையே மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐபி தலைவரும் பதவி இழக்கிறார்?:

அதே போல இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி. ஹல்தர்இ உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தா ஆகியோரும் ராஜினாமா செய்யுமாறு பிரதமரால் உத்தரவிடப்படுவார்கள் என்று தெரிகிறது.

செய்தி : தற்ஸ்தமிழ் இணையம்.

Link to comment
Share on other sites

அலுமினிய குண்டு சைக்கிள் களில் பயன்படுத்தப்படும் ‘பால்ரசு கடத்தல் வழக்குகளை சோடித்து மினக்கட்டதில் உண்மையான தீவிரவாதிகளை நாட்டுக்குள்ளே விட்டுவிட்டார்கள் இனியாவது சரியானவர்கள் பதவிக்கு வருவார்களோ? தமிழ்நாட்டு கடற்கரையில் ஊசியை தேடின நேரத்துக்கு மும்பைக்கடற்கரையில் தேடியிருந்தாலாவது உவங்களை உள்ளவிடமால் பிடிச்சிருக்கலாம்.

இவர்களின் பதவிவிலகலால் மட்டும் இறந்தவர்கள் வந்துவிடுவார்களோ? நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

புதுடெல்லி

உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இலாக்கா மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து சிவராஜ் பாட்டீல் வகித்து வந்த உள்துறை இலாக்கா, நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்திடம் உள்ள நிதித்துறை இலாக்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

எம்.கே. நாராயணன் ராஜினாமா

சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மகராஷ்டிரா மாநில முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக்கும், மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

நன்றி :தமிழ்யாகூ(மூலம் - வெப்துனியா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

அறிவு குறைந்தவர்களுக்கு பொறுப்பான பதவி கொடுத்தால் ,

அநியாயமாக அப்பாவி உயிர்கள் தான் பலியாகும் என்பதற்கு ,

இவர் நல்ல உதாரணம் .

Link to comment
Share on other sites

பெரும் நன்மைகளுக்கான சிறு தொடக்கம். இந்தியா தமிழர்களின் நண்பனாக மாறது என்ற போகொல்லாகமவின் கொக்கரிப்புக்கு நல்ல பதில். எனினும் வலியும், வேதனையும், இழப்புகளும் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணர்ந்த நாம் இந்தியாவின் சோகத்துக்கு ஆறுதல் செய்தி அனுப்புவோம்.

Link to comment
Share on other sites

அலுமினிய குண்டு சைக்கிள் களில் பயன்படுத்தப்படும் ‘பால்ரசு கடத்தல் வழக்குகளை சோடித்து மினக்கட்டதில் உண்மையான தீவிரவாதிகளை நாட்டுக்குள்ளே விட்டுவிட்டார்கள் இனியாவது சரியானவர்கள் பதவிக்கு வருவார்களோ? தமிழ்நாட்டு கடற்கரையில் ஊசியை தேடின நேரத்துக்கு மும்பைக்கடற்கரையில் தேடியிருந்தாலாவது உவங்களை உள்ளவிடமால் பிடிச்சிருக்கலாம்.

இவர்களின் பதவிவிலகலால் மட்டும் இறந்தவர்கள் வந்துவிடுவார்களோ? நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்.

நான் சொதப்ப வந்ததையே நீங்க சொல்லிடிங்க.... அதனால உங்களை நான் காப்பியடிச்சுகிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: தமிழர்களுக்கு இதுவரை காலமும் இருந்து வந்த ஏழரைச் சனிகளில் ஒன்று தொலைந்தது ! நல்ல விடயந்தான் !!!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா வியாழன் மாறுவதற்கு முதல் சனி மாறிட்டுதே :lol:

Link to comment
Share on other sites

உண்மையில் ஒரிஜினல் இந்தியனாக இருந்திந்தால் சார்க் மகாநாட்டில் கலந்துகொண்டபோது இலங்கை அரசு நடுவீதியில் தவிக்கவிட்டு அவமானபடுத்தியபோதே இராஜிணாமா செய்துஇருக்க வேண்டும். இப்போதாவது புத்தி வந்ததே அதுவேபோதும்.

Link to comment
Share on other sites

இது எல்லாம் ஒரு நாடகம் ! பாருங்கள் நாராயணன் வந்து திரும்பி பதவி ஏற்காவிட்டால். ஜனங்கள் முந்த முன் நாராயணன் முந்திவிட்டார். எம்மால் அரசியல்

Link to comment
Share on other sites

தேசியத்தலைவருக்கும் எம்ஜீஆருக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்க அயராது பாடுபட்டு கையும் மெய்யுமாக பிடிபட்டவர்தான் இந்த சிதம்பரம்

Link to comment
Share on other sites

நாடகம் முடிந்தது.....................நாராயணன் ராஜினாமை ஏற்க மன்மோஹன் சிங் மறுப்பு............ தொடர்ந்து அவரை பதவியில் நீடிக்க வலியுருத்தல்....

Link to comment
Share on other sites

பாட்டீல் பதவிவிலகல்

20081130054938shivraj_patil203.jpg

இந்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவராஜ் பாட்டீல்

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்.

இதுவரை நிதியமைச்சராக இருந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகலில் சிவராஜ் பாட்டீல் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார்.

தற்போது இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல், சிவராஜ் பாட்டீல் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல், சிதம்பரத்தை புதிய உள்துறை அமைச்சராக நியமித்திருக்கும் உத்தரவையும் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை சிதம்பரம் கவனித்து வந்த நிதியமைச்சகத்தின் பொறுப்பை, பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் ஐந்து ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விவாதிக்க நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோல்வியடைந்திருப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீதும் விமர்சனம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காரியக் கமிட்டி என்ன முடிவெடுத்தாலும், அதன்படி செயல்படத் தயாராக இருப்பதாக பாட்டீல் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்துக்கு, நிதியமைச்சர் சிதம்பரமும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போதே சிதம்பரத்துக்கு உள்துறை கொடுக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

அதன்பிறகு, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சிதம்பரம், மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

74 வயதான சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதை அடுத்து, புதிய உள்துறை அமைச்சராகியிருக்கும் 63 வயதான சிதம்பரம், 1980-களின் பிற்பகுதியில் மறைந்த ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான இணை அமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் பெற்றவர்.

இதனிடையே, மும்பை சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் பிரதமர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

BBC Tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.