Jump to content

இப்பவென்றாற் போல....


Recommended Posts

இப்பவென்றாற் போல....

அழுகையாய் வந்தது. யாரிடமும் கதைக்கவோ சிரிக்கவோ முடியாத நிலையில் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. காடுகள் மலைகள் தண்ணீர் நிரம்பிய கடல் கிணறுகள் என நிறையவே என்னை அங்குமிங்குமாய் அலைத்து இழுத்துக் கொண்டு ஓடுமாப்போல அலைகளும் கடல்களும் என்னை உள்ளிழுப்பது போலிருந்தது. கண்களுக்குள் எட்டிய பிள்ளைகளின் கைகள் என்னைவிட்டுத் தொலைவாகின.....நான் தனியனாய் எல்லாவற்றையும் எல்லோரையும் தொலைத்து....

கோழியின் கூவலும் மெல்லிய இசையுமாக மணிக்கூடு தனது இருப்பை உறுதிப்படுத்தி எழுப்புகிறது. நேரம் அதிகாலை 4.20. வேலைக்குப் போகும் அவசரத்தில் என்னவன் எழுந்து போகிறான். அட இதுவரையும் கண்டது கனவா ? பிள்ளைகள் உறக்கம் கலையாமல் தங்கள் படுக்கைகளில்....கதவு இடுக்குகளால் உறுதி செய்து கொள்கின்றேன்.

மறுபடி 6.00மணிக்கு எனது துயில் கலைத்தலுக்கு மணிக்கூட்டை சரி செய்து கொள்கிறேன். தடம்...தடம்....என மாடிப்படிகளில் ஏறி அறைக்குள் வந்தவன் தொலைபேசியை என்னிடம் நீட்டுகிறான். அதிகாலைத் தொலைபேசி அழைப்புக்கள் ஏனோ இதயத்துடிப்பை அந்தரத்துடிப்பாக்கி விடுகின்றன. கையில் வாங்கிய தொலைபேசியை காதுக்கருகில் கொண்டு செல்கிறேன்.

தொலைபேசிக்குள்ளால் வந்த அழுகையொலி என் இதய நாளங்களில் பயத்தை ஏற்றிவிடுகிறது. யாருக்கோ ஏதோ என்ன என்பதை சொல்லாத அழுகைநெஞ்சுக்கூட்டுக்குள் ஆயிரம் அதிர்வுகள். இதயம் தனது சாதாரண துடிப்பை விரைவாக்கியது.

என்ன.....என்ன...என் கேள்விக்கான பதிலாய் என் தங்கையின் உதடுகளிலிருந்து அழுகையூடு வெளிவருகின்றன....அப்பா.....அப்பா..

..அதற்கு மேல் அவளால் எதையும் தெளிவுபட எனக்குக் கூறமுடியவில்லை. அவள் பெலத்து அழுதாள். அப்பாக்கென்ன ? அப்பாக்கு மாரடைப்பு வந்து அதற்குமேல் அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. ஒப்பாரியால் உயிரை உலுக்கியெடுத்தாள். நேற்று முன்தினம் வரை அப்பா ஐரோப்பா வருவதற்கான அவசரமாக இருந்ததும் இதற்கிடையில் இதயம் நின்று அப்பா இறந்தது என்றதும் ஏதோவொரு கனவு காண்பது போலிருந்தது.

வெளிநாடு வருவதற்கான ஒழுங்குகள் செய்து கொண்டிருந்த அப்பாவுக்கு மாரடைத்து மரணம் என்பதை நம்பவா முடியும் ? மறுத்து ஒரு வார்த்தை வரவில்லை. விக்கித்து விழிகள் நிரம்பி வழிகிறது. அது ஒரு கனவாக இல்லையொரு கற்பனைக் கதையாக இருக்காதா ? நோய் பிடித்துப் படுக்கையில் விழுந்து போய்விடு போய்விடு என்று மற்றவர் சொல்லாமல் பொட்டென்று போய்விடுவேன். மரணம் பற்றிப் பேசிய நேரங்களில் அப்பா சொன்ன வார்த்தைகள் மெய்யாகி அப்பா இறந்துவிட்டதாய் அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புக்கள்.......

என்ன செய்ய எவருடன் பேச எதுவும் முடியாமல்....மனசு அப்பாவின் நினைவுகளையே சுற்றிக் கொள்கிறது. ஓவென்று கத்தியழ வேண்டுமாப்போல் ஒருவருமற்ற வெளியில் போய் இருந்துவிடலாம் போல....கண்களில் கண்ணீரைத் தவிர வேறு எதையும் உதிர்க்கத் தெரியாத நாளது. துயர் பகிர வந்த அழைப்புக்களைக்கூடத் துண்டித்து விட்டு ஒரு அமைதியான வெளிக்குப் போய்விட வேண்டும் போல மனசு அந்தரித்துக் கொண்டிருந்தது.

அப்பாவை எல்லோரும் ஊருக்குள் ஒரு குடிக்கு அடிமையான காதலில் தோற்ற சங்கக்கடை மனேஜராகவே தெரியும். ஆனால் அப்பாவுக்குள்ளிருந்த மனிதத்தை எங்களுக்கு மட்டுமே தெரியும்.

அப்பா குடித்து விட்டு வசந்தமாளிகை வசனம் சொல்லியபடி வரும் அரவம் வடக்கே கேட்டாலென்ன மேற்கே கேட்டாலென்ன நாங்கள் வரிசையாய் வீதிக்குப்போய் சைக்கிளை ஒருவர் கள்ளுப்போத்தல்களை ஒருவரென அப்பாவைத் தாங்கியபடி வீட்டுக்குக் கொண்டு வருவோம்.

'குடிப்பதற்கு ஒரு மனமிருந்த அவளை மறந்துவிடலாம் அவளை மறப்பதற்கென ஒரு மனமிருந்தால் குடித்து விடலாம் ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்" என வசந்தமாளிகையில் சிவாஜி கணேசன் பேசிய அத்தனை வசனங்களையும் பேசிப்பேசி இடைக்கிடை எங்கள் பெயர்களையும் அழைத்து அத்தனைக்குள்ளும் அப்பாவின் முதற்காதலியின் பெயரையும் அழைத்து வசந்தமாளிகையை நாங்கள் திரையில் காணாமலேயே எம் மனங்களில் பதிய வைத்தவர்.

மழைநாட்களென்றால் ஊர் வயிரவர் கோவிலடி முதல் சமாதிகோவிலடியெங்கும் வெள்ளம் நிறைந்துவிடும். அம்மா அறியாமல் அந்த வெள்ளத்தில் கால் வைத்து குஞ்சியப்பு வாசலிலிருந்து சமாதிகோவிலடி வரையும் ஓடிப்போய் வந்து விடுவோம். நாகம்மா வீட்டில் கசிப்படித்துவிட்டு முறியல் செட்டியும் அப்பாவும் வெள்ளைச்சேட்டும் வேட்டியும் வெள்ளத்தில் செம்பாடாக ஆளையாள் தாங்கியபடி வருவதை விறாந்தை யன்னல்களுக்கால் கண்டதுமே மழையில் நனைந்து வெள்ளத்தில் அப்பா விழுந்துவிடாமல் நானும் தங்கைகளும் கையில் தாங்கி வருவோம். இரவிரவாக எங்கள் வீட்டு டேப்றெக்கோடரில் நாங்களும் அயல்வீட்டு சிறுவர்களுமாக வைக்கும் சங்கீதக் கச்சேரி அப்பாவின் கச்சேரியை மீறிவிடும். அந்த நாட்களில் 10மணி 11மணியென அயல்வீடுகளெல்லாம் விளக்குகளை நூர்த்துவிட்டு எங்கள் வீட்டைத்தான் புதினம் பார்க்கும். அதையெல்லாம் அப்போது வெறுப்பாகவே பார்த்த நான் இப்போது அப்பாவுடனான இனிய நினைவுகளாகவே நினைவுகளில் சேமித்துக் கொள்கிறேன்.

மறுநாள் காலையில் அம்மாவின் அம்மம்மாவின் திருவாசகம் தொடங்க அப்பா போர்வையால் தலையை மூடிக்கொண்டு சிரிப்பதும் 'இனிமேல் உந்தச் சனியனைக் கையாலையும் தொடுறேல்லயென்ற" சத்தியங்களும் பொய்த்து மறுபடியும் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனி சிலவேளை ஞாயிறுகளிலும் தொடரும் வசந்தமாளிகை வசனமும் வசந்தமாளிகை பாடல்களும் கதைவசனமும் இப்போ மீளவும் அனுபவிக்க விரும்பும் தருணங்கள்.

சனிக்கிழமை விடியப்பறம் நாள் வைத்து அப்பாவின் அப்புச்சயிக்கிளில் முன்னுக்கு இருவர் பின்னுக்கு ஒருவர் என மயிலிட்டிக் கடற்கரைக்கு மீன்வாங்கப் போகும் அப்பாவுடன் போவோம். மயிலிட்டிக்கடற்கரை மணலில் கால்புதையக் கால்புதைய சோழிபொறுக்கி பெரிய பெரிய மீன்களையெல்லாம் தொட்டுப் பார்த்து அதிகாலையில் நீலக்கடலில் அழகை நெஞ்சுக்குள் இருத்திய நாட்கள் தான் முதல் கடல்பார்த்த அனுபவம். கடற்கரை மணலில் குவிந்திருக்கும் மாம்பழங்கள் தந்த சுவையென அப்பாவின் நினைவுகள் நிறையவே....

எங்கள் சிறுவயது ஞாபகங்களைத் தேடினால் அப்பா எங்கள் கண்களில் ஒரு வேடிக்கையான மனிதர். என்றோ கரைந்துபோன அப்பாவின் காதல். அப்பாவை மறந்து இன்னொருவரின் காதலியாகிய அந்தக்காதலி அப்பாவுக்குள் உயிர் இருந்தவரை மறக்கமுடியாத வடுவாகவே இருந்தது. ஏன் அந்தக்காதலி இன்னொருவரின் காதலியானாள் ? சின்னவயதில் அப்பா தன் காதலியின் பெயரை வெறியில் உச்சரித்த போதெல்லாம் அது வெறிப்பாட்டென்று அக்கம்பக்கத்தில் சொல்வார்கள். அடிச்சனியன் தும்புக்கட்டையாலை தும்புபறக்கப்பறக்க வெழுக்க வேணுமென அப்பப்பா பேசும் போது சிரிக்கும் அப்பாவின் சிரிப்பு எல்லாம் அந்தநாட்களில் புதிராகத்தான் இருந்தது.

60தடவைகள் அப்பா பார்த்த வசந்தமாளிகை படத்தில் அப்படி என்னதான் அற்புதம் இருந்ததோ ? சாவீட்டில அழுறமாதிரி உதில என்ன கிடக்கு ? அப்பா வசந்தமாளிகை பாடல்களைப் போட்டு உரே கேட்கும்படியாக ஒலியைக்கூட்டி விட்டபோதெல்லாம் ஊர்கூடி நின்று அப்பாவின் குரலைத்தான் கேட்டது. அப்போதெல்லாம் வசந்தமாளிகை வசனமோ பாடலோ தராத பாதிப்பு அப்பா இல்லாது போன இந்த நாட்களில் அதையெல்லாம் கேட்க வேண்டும் போல் மனசுக்குள் அப்பாவின் குரல் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

நான் புலம்பெயரும் போது 43வயதில் காலடிவைத்திருந்து அப்பாவுக்கு 59வயதாகிவிட்டது. 13.03.2008 மாரடைத்து மரணம் என்பதை நம்ப மறுக்கிறது மனசு. நான் செத்தா வருவியோ ? 5ஆண்டு முன் ஊர் போனபோது அப்பா கேட்டதும்...விமான நிலையத்தில் இறுதிக் கடiவையில் நின்று அப்பா என் கைகளைப்பற்றி அழுததும்.....ஆருக்குத் தெரியுமப்பா....உங்களுக்கு முன்னம் நான் போறனோ தெரியாது என்றதும் இப்பவென்றாற் போல....

(ஒருபேப்பர்)

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, வீட்டு விசயங்களை அப்பிடியே கதையாக சொல்லி இருக்கிறீங்கள். பெண் பிள்ளைகளுக்கு அம்மாவை விட அப்பாமாரில கூட விருப்பம்தானே. உங்கட அப்பா எவ்வளவு ஆழமாக ஒருத்தியை முன்பு மனதார நேசித்து இருக்கிறார் எண்டு அறியக்கூடியதாக இருக்கிது. உண்மையாக அவளை ஆழமாக நேசித்து இருந்தபடியாலதான் அப்பாவால அப்பிடி வெளிப்படையாக பாடல் எல்லாம் பாடி தண்ட பழைய காதலியை நினைவுபடுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்து இருக்கிது எண்டு நினைக்கிறன்.

காதலில தோற்கிறது ஒருபுறம் இருக்க... தோற்ற காதலை வெளிப்படையாக எல்லார் முன்னிலையிலும் சொல்லிறது எண்டால் அதுக்கு கொஞ்சம் துணிவு, அத்தோட நல்ல மனமும் வேண்டும். தண்ணி அடிச்சுப்போட்டு உங்கட அப்பா அப்படி கதைச்சு இருந்தார் எண்டு நீங்கள் சொன்னாலும், சிலது அவர் வெறிமாதிரி நடிச்சுக்கொண்டு தனது மனக்கவலைகளை, மனப்பாரத்தை இறக்கினாரோ யாருக்கு தெரியும். அவரிண்ட காதல் தோற்றபடியாலதானே நீங்கள் அவருக்கு பிள்ளைகளாக பிறக்க முடிஞ்சது. இந்தவிதத்தில சந்தோசப்படுங்கோ. ஒவ்வொரு செயலுக்கு பின்னாலையும், ஒவ்வொரு தீமைக்கு பின்னாலையும் சில நன்மைகளும் இருக்கக்கூடும்.

உங்கள் அப்பாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். வாழ்க்கை எண்டால் இப்பிடித்தானே நாங்கள் தனியாக இந்த உலகத்துக்கு வந்து பிறகு பலருடன் கூட்டமாக சேர்ந்து கும்மாளம் எல்லாம் போட்டு, பிறகு போகேக்க மீண்டும் தனியாக போகவேணும். எனக்கு அம்மா, அப்பா என்னுடன் இருக்கின்றார்கள். நான் தினமும் அவர்களுடன் அன்பாக இருக்கிறது. ஒரு சின்ன அலுவலாக கடைக்கு, பள்ளிக்கூடத்துக்கு எண்டு வீட்டுக்கு வெளியில போகேக்க ரெண்டுபேருக்கும் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துபோட்டுத்தான் போறது. நாளைக்கு அவர்கள் இல்லாத நிலையில கவலைப்படாமல் இப்பவே இருக்கிற காலத்திலயே அவையுக்கு மதிப்பு கொடுத்து அன்போட இருக்கிறது நல்லதுதானே.

மயிலிட்டிக்கு மீன் வாங்க எல்லாம் போய் இருக்கிறீங்கள். நீங்களும் எங்களுக்கு கிட்டக்கிட்டத்தான் இருந்து இருக்கிறீங்கள் போல. உங்கட ஊர் எது? நாங்கள் சுமார் ஆறு, ஏழு வருசங்கள் சொந்த ஊரில இருந்தது பிறகு அகதியாக ஓடத்துவங்கின மரதன் ஓட்டம் கடைசியில ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோற்ற காதலை மறக்க முடியாது ஆண்களால்............

சாந்தி அக்கா நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருக்கா நித்திரையில் ஒரு நடிகையின் பெயரை சொல்லி புலம்பினதுக்கு என்ற மனுசி இப்பவும் இடைக்கிட சண்டை பிடிப்பா ...........உங்களுடைய அம்மா சரியான முற்போக்கு வாதி போல கிடக்குது....

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, உங்கள் நிஜக் கதையை வாசித்த போது நெஞ்சம் கனத்தது.

Link to comment
Share on other sites

கருத்திட்ட முரளி , சின்னக்குட்டித்தாத்தா , முனிவர் , புத்தன் மற்றும் மல்லிகைவாசம் அனைவருக்கும் நன்றிகள்.

மயிலிட்டிக்கு மீன் வாங்க எல்லாம் போய் இருக்கிறீங்கள். நீங்களும் எங்களுக்கு கிட்டக்கிட்டத்தான் இருந்து இருக்கிறீங்கள் போல. உங்கட ஊர் எது? நாங்கள் சுமார் ஆறு, ஏழு வருசங்கள் சொந்த ஊரில இருந்தது பிறகு அகதியாக ஓடத்துவங்கின மரதன் ஓட்டம் கடைசியில ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டிது.

மயிலிட்டியிலிருந்து சில மைல்கள் தள்ளியிருக்கும் குப்பிளான் தான் எனது ஊர். உங்களுக்கு மரதன் ஓட்டம் ஆறு ஏழு வருடங்களில் முடிந்திருக்கிறது. நாங்கள் 84இல் இருந்து 93வரையுமே யாழ்ப்பாணத்தில் அலையாத ஊரில்லை. நாய் குட்டிகாவுவது போல என்பார்களே அதே நிலையில். :rolleyes:

அப்பாவின் அந்தநாள் நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை.

அம்மா அப்பா மீது நீங்கள் காட்டும் பாசத்தை மனதார பாராட்டுகிறேன்.

தோற்ற காதலை மறக்க முடியாது ஆண்களால்............

சாந்தி அக்கா நன்று

அட முனிவருக்கும் காதலை மறக்க முடியாதா ? :lol: முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். :D

நினைவுகளை ஆணென்ன பெண்ணென்ன எல்லாராலும் தான் நினைவுபடுத்திப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் காதலென்ன நண்பர்களென்ன எல்லாருக்கும் பொதுவானது ஞாபகங்கள்.

Link to comment
Share on other sites

நான் ஒருக்கா நித்திரையில் ஒரு நடிகையின் பெயரை சொல்லி புலம்பினதுக்கு என்ற மனுசி இப்பவும் இடைக்கிட சண்டை பிடிப்பா ...........உங்களுடைய அம்மா சரியான முற்போக்கு வாதி போல கிடக்குது....

கனவில நடிகையின்ரை பேரைச் சொன்னா உங்களைப் பேசாமல் பின்னையென்ன செய்வா மனிசி ? :rolleyes: நான் நினைக்கிறேன் நீங்கள் சினேகாவை கனவு கண்டிருப்பியள். சிலவருசங்கள் முதல் ரீரீஎன்னில் ஒரு விளம்பரம் வந்தது. அப்ப சினேகா லண்டனுக்கு வரவிருந்தவா. ஒரு இளைஞன் கனவிலை சினேகாவோடை உலாத்திற மாதிரி பொடி நித்திரையில சினேகா சினேகா எண்டு புலம்பினது. நீங்கள் அந்த விளம்பரத்தை பாத்திட்டுத்தான் புலம்பினியளோ தெரியேல்ல. :lol:

இதில் என்ன முற்போக்கு இருக்கு. ஒருவர் தனக்குள் இருப்பதை வெளிப்படையா சொல்வது நல்லம் தானே. குடும்பம் என்றால் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம் என்பதன் அர்த்தம் இதுதானோ தெரியாது. எதற்கும் அம்மாவிடம் கேட்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட முனிவருக்கும் காதலை மறக்க முடியாதா ? :rolleyes: முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். :huh:

நினைவுகளை ஆணென்ன பெண்ணென்ன எல்லாராலும் தான் நினைவுபடுத்திப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் காதலென்ன நண்பர்களென்ன எல்லாருக்கும் பொதுவானது ஞாபகங்கள்.

என்ன சாந்தியக்கா இப்படி ஒரு கேள்வி கேட்டு போட்டயல் யாரால்தான் காதலை மறக்கமுடியும்

என்னது முற்றும் துறந்தவரா?? துறக்கமுடியாது இங்கே சில ஜந்துக்கள் உள்ளன காந்து போட்டு விடும் எல்லாத்தையும் :lol::lol:

இந்த காதல் நினைவுகளை மீட்கும் போது என்னையறியாமலேயே ஒரு ஆனந்தம் அதனால் தான் அப்படி எழுதினேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதை சோகத்தை தந்தாலும் நீங்களும் உங்கள் சகோதரங்களும் அப்பாவின் மேல் வைத்திருந்த,வைத்திருக்கிற பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது.

Link to comment
Share on other sites

ஓ சாந்தி அக்கா குப்பிளானோ? நான் ஏழாலைக்கு வந்து இருக்கிறன் சின்னனில. எனக்கு குப்பிளான் எண்டு ஊர் தெரியும். அங்க வந்து நினைவு இல்ல. ஏழாலையிலதான் நாங்கள் மாடு வாங்கினது. மாடு வாங்க வரேக்க அப்பாவோட வந்தது சின்னனில சைக்கிளில. குப்பிளான் எங்க இருக்கிது எண்டு அப்பாவை இப்ப கேட்டன். அவர் ஏழாலைக்கு கிட்ட இருக்கிறதாய் சொன்னார். அப்பிடியோ?

நாங்கள் மரதன் ஓடினது பதின்நாலு வருசம். ஊரில நிம்மதியா இருந்தது ஆக ஐஞ்சு ஆறு வருசங்கள் தான். அதுக்கு பிறகு அகதியா ஓடித்திறிஞ்சு பட்ட கஸ்டங்கள், அவமானங்கள், இழிவுகள், வேதனைகள் சொல்லில அடங்காது. எங்கட வாழ்க்கை, படிப்பு எல்லாம் பதின்நாலு வருச மரதன் ஓட்டத்தில சீரழிஞ்சு போச்சிது. பிறகு கனடாவுக்கு வந்து ஒருமாதிரி வாழ்க்கையை நிலைநிறுத்தி மூச்சுவிடக்கூடியதாக இருந்திச்சிது சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா , உங்கள் உண்மை கதை சோகமாக உள்ளது.அதிலும் உங்கள் அப்பாவின் அடையமுடியா காதல், பின்னர் அவரின் இழப்பு.

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :)

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பதிவை இன்று தான் வாசித்தேன். என்ன செய்வது , ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் எல்லா இடங்களும் ஓடி உலகின் பல் வேறு நாடுகளில் பிரிந்து எல்லோரும் வாழ்கிறோம். பெற்றோர்கள் ஒரிடம், பிள்ளைகள் ஒரிடம், சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்கள். அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாத வாழ்க்கை. இடையிடையே வரும் அவர்களின் நிரந்தரப் பிரிவுச் செய்திகள். சிலருக்கு தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத்தெரியாமல் ஒரு வாழ்க்கை. சிலரின் உறவுகள் வன்னித் தடுப்பு முகாம்களில். அவர்களை இனி எப்பொழுது பார்க்கலாம் என்று கூடத் தெரியாத அவல நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :(

கந்தப்புவின்ரை புண்ணியத்தில நானும் இண்டைக்குதான் இந்த பதிவைப் பார்த்தேன்.

சாத்திரிக்கும் எல்லாம நினைவிருக்கோ....என்ரை மரமண்டைக்கு தான் எதுவும் நினைவில்லாமல் இருக்கு. :(

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :D

அழகான அந்தப் புளியமரம் அதோடை சேந்த அந்தப் பனைமரம் சாத்திரிக்கு அடிக்கடி நினைவில் வரும் :lol:

இப்ப பதிவை இன்று தான் வாசித்தேன். என்ன செய்வது , ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் எல்லா இடங்களும் ஓடி உலகின் பல் வேறு நாடுகளில் பிரிந்து எல்லோரும் வாழ்கிறோம். பெற்றோர்கள் ஒரிடம், பிள்ளைகள் ஒரிடம், சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்கள். அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாத வாழ்க்கை. இடையிடையே வரும் அவர்களின் நிரந்தரப் பிரிவுச் செய்திகள். சிலருக்கு தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத்தெரியாமல் ஒரு வாழ்க்கை. சிலரின் உறவுகள் வன்னித் தடுப்பு முகாம்களில். அவர்களை இனி எப்பொழுது பார்க்கலாம் என்று கூடத் தெரியாத அவல நிலை.

நினைவுகளுக்குள்ளே வாழும் உறவுகளும் ஊரும்...... :(

சாத்திரிக்கும் எல்லாம நினைவிருக்கோ....என்ரை மரமண்டைக்கு தான் எதுவும் நினைவில்லாமல் இருக்கு. :lol:

உங்களுக்கு சேது படத்தில வாற விக்ரமின் நிலைமைமாதிரி ஏதூவது நடந்ததூ ? :(

ஞாபகம் வருதே என பாடிப்பாடி ஞாபகப்படுத்திப் பாருங்கோ.....

எங்கள் ஊர் பனங்கூடல்....இலுப்பைமரம்.....புள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

அடிக்கடி உங்களின் அப்பா குறிப்பிடும் வசனம் ஒண்டு எண்டு ஒன்றை எழுதியுள்ளீர்கள்....முற்றிலும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.