Jump to content

இப்பவென்றாற் போல....


Recommended Posts

இப்பவென்றாற் போல....

அழுகையாய் வந்தது. யாரிடமும் கதைக்கவோ சிரிக்கவோ முடியாத நிலையில் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. காடுகள் மலைகள் தண்ணீர் நிரம்பிய கடல் கிணறுகள் என நிறையவே என்னை அங்குமிங்குமாய் அலைத்து இழுத்துக் கொண்டு ஓடுமாப்போல அலைகளும் கடல்களும் என்னை உள்ளிழுப்பது போலிருந்தது. கண்களுக்குள் எட்டிய பிள்ளைகளின் கைகள் என்னைவிட்டுத் தொலைவாகின.....நான் தனியனாய் எல்லாவற்றையும் எல்லோரையும் தொலைத்து....

கோழியின் கூவலும் மெல்லிய இசையுமாக மணிக்கூடு தனது இருப்பை உறுதிப்படுத்தி எழுப்புகிறது. நேரம் அதிகாலை 4.20. வேலைக்குப் போகும் அவசரத்தில் என்னவன் எழுந்து போகிறான். அட இதுவரையும் கண்டது கனவா ? பிள்ளைகள் உறக்கம் கலையாமல் தங்கள் படுக்கைகளில்....கதவு இடுக்குகளால் உறுதி செய்து கொள்கின்றேன்.

மறுபடி 6.00மணிக்கு எனது துயில் கலைத்தலுக்கு மணிக்கூட்டை சரி செய்து கொள்கிறேன். தடம்...தடம்....என மாடிப்படிகளில் ஏறி அறைக்குள் வந்தவன் தொலைபேசியை என்னிடம் நீட்டுகிறான். அதிகாலைத் தொலைபேசி அழைப்புக்கள் ஏனோ இதயத்துடிப்பை அந்தரத்துடிப்பாக்கி விடுகின்றன. கையில் வாங்கிய தொலைபேசியை காதுக்கருகில் கொண்டு செல்கிறேன்.

தொலைபேசிக்குள்ளால் வந்த அழுகையொலி என் இதய நாளங்களில் பயத்தை ஏற்றிவிடுகிறது. யாருக்கோ ஏதோ என்ன என்பதை சொல்லாத அழுகைநெஞ்சுக்கூட்டுக்குள் ஆயிரம் அதிர்வுகள். இதயம் தனது சாதாரண துடிப்பை விரைவாக்கியது.

என்ன.....என்ன...என் கேள்விக்கான பதிலாய் என் தங்கையின் உதடுகளிலிருந்து அழுகையூடு வெளிவருகின்றன....அப்பா.....அப்பா..

..அதற்கு மேல் அவளால் எதையும் தெளிவுபட எனக்குக் கூறமுடியவில்லை. அவள் பெலத்து அழுதாள். அப்பாக்கென்ன ? அப்பாக்கு மாரடைப்பு வந்து அதற்குமேல் அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. ஒப்பாரியால் உயிரை உலுக்கியெடுத்தாள். நேற்று முன்தினம் வரை அப்பா ஐரோப்பா வருவதற்கான அவசரமாக இருந்ததும் இதற்கிடையில் இதயம் நின்று அப்பா இறந்தது என்றதும் ஏதோவொரு கனவு காண்பது போலிருந்தது.

வெளிநாடு வருவதற்கான ஒழுங்குகள் செய்து கொண்டிருந்த அப்பாவுக்கு மாரடைத்து மரணம் என்பதை நம்பவா முடியும் ? மறுத்து ஒரு வார்த்தை வரவில்லை. விக்கித்து விழிகள் நிரம்பி வழிகிறது. அது ஒரு கனவாக இல்லையொரு கற்பனைக் கதையாக இருக்காதா ? நோய் பிடித்துப் படுக்கையில் விழுந்து போய்விடு போய்விடு என்று மற்றவர் சொல்லாமல் பொட்டென்று போய்விடுவேன். மரணம் பற்றிப் பேசிய நேரங்களில் அப்பா சொன்ன வார்த்தைகள் மெய்யாகி அப்பா இறந்துவிட்டதாய் அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புக்கள்.......

என்ன செய்ய எவருடன் பேச எதுவும் முடியாமல்....மனசு அப்பாவின் நினைவுகளையே சுற்றிக் கொள்கிறது. ஓவென்று கத்தியழ வேண்டுமாப்போல் ஒருவருமற்ற வெளியில் போய் இருந்துவிடலாம் போல....கண்களில் கண்ணீரைத் தவிர வேறு எதையும் உதிர்க்கத் தெரியாத நாளது. துயர் பகிர வந்த அழைப்புக்களைக்கூடத் துண்டித்து விட்டு ஒரு அமைதியான வெளிக்குப் போய்விட வேண்டும் போல மனசு அந்தரித்துக் கொண்டிருந்தது.

அப்பாவை எல்லோரும் ஊருக்குள் ஒரு குடிக்கு அடிமையான காதலில் தோற்ற சங்கக்கடை மனேஜராகவே தெரியும். ஆனால் அப்பாவுக்குள்ளிருந்த மனிதத்தை எங்களுக்கு மட்டுமே தெரியும்.

அப்பா குடித்து விட்டு வசந்தமாளிகை வசனம் சொல்லியபடி வரும் அரவம் வடக்கே கேட்டாலென்ன மேற்கே கேட்டாலென்ன நாங்கள் வரிசையாய் வீதிக்குப்போய் சைக்கிளை ஒருவர் கள்ளுப்போத்தல்களை ஒருவரென அப்பாவைத் தாங்கியபடி வீட்டுக்குக் கொண்டு வருவோம்.

'குடிப்பதற்கு ஒரு மனமிருந்த அவளை மறந்துவிடலாம் அவளை மறப்பதற்கென ஒரு மனமிருந்தால் குடித்து விடலாம் ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்" என வசந்தமாளிகையில் சிவாஜி கணேசன் பேசிய அத்தனை வசனங்களையும் பேசிப்பேசி இடைக்கிடை எங்கள் பெயர்களையும் அழைத்து அத்தனைக்குள்ளும் அப்பாவின் முதற்காதலியின் பெயரையும் அழைத்து வசந்தமாளிகையை நாங்கள் திரையில் காணாமலேயே எம் மனங்களில் பதிய வைத்தவர்.

மழைநாட்களென்றால் ஊர் வயிரவர் கோவிலடி முதல் சமாதிகோவிலடியெங்கும் வெள்ளம் நிறைந்துவிடும். அம்மா அறியாமல் அந்த வெள்ளத்தில் கால் வைத்து குஞ்சியப்பு வாசலிலிருந்து சமாதிகோவிலடி வரையும் ஓடிப்போய் வந்து விடுவோம். நாகம்மா வீட்டில் கசிப்படித்துவிட்டு முறியல் செட்டியும் அப்பாவும் வெள்ளைச்சேட்டும் வேட்டியும் வெள்ளத்தில் செம்பாடாக ஆளையாள் தாங்கியபடி வருவதை விறாந்தை யன்னல்களுக்கால் கண்டதுமே மழையில் நனைந்து வெள்ளத்தில் அப்பா விழுந்துவிடாமல் நானும் தங்கைகளும் கையில் தாங்கி வருவோம். இரவிரவாக எங்கள் வீட்டு டேப்றெக்கோடரில் நாங்களும் அயல்வீட்டு சிறுவர்களுமாக வைக்கும் சங்கீதக் கச்சேரி அப்பாவின் கச்சேரியை மீறிவிடும். அந்த நாட்களில் 10மணி 11மணியென அயல்வீடுகளெல்லாம் விளக்குகளை நூர்த்துவிட்டு எங்கள் வீட்டைத்தான் புதினம் பார்க்கும். அதையெல்லாம் அப்போது வெறுப்பாகவே பார்த்த நான் இப்போது அப்பாவுடனான இனிய நினைவுகளாகவே நினைவுகளில் சேமித்துக் கொள்கிறேன்.

மறுநாள் காலையில் அம்மாவின் அம்மம்மாவின் திருவாசகம் தொடங்க அப்பா போர்வையால் தலையை மூடிக்கொண்டு சிரிப்பதும் 'இனிமேல் உந்தச் சனியனைக் கையாலையும் தொடுறேல்லயென்ற" சத்தியங்களும் பொய்த்து மறுபடியும் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனி சிலவேளை ஞாயிறுகளிலும் தொடரும் வசந்தமாளிகை வசனமும் வசந்தமாளிகை பாடல்களும் கதைவசனமும் இப்போ மீளவும் அனுபவிக்க விரும்பும் தருணங்கள்.

சனிக்கிழமை விடியப்பறம் நாள் வைத்து அப்பாவின் அப்புச்சயிக்கிளில் முன்னுக்கு இருவர் பின்னுக்கு ஒருவர் என மயிலிட்டிக் கடற்கரைக்கு மீன்வாங்கப் போகும் அப்பாவுடன் போவோம். மயிலிட்டிக்கடற்கரை மணலில் கால்புதையக் கால்புதைய சோழிபொறுக்கி பெரிய பெரிய மீன்களையெல்லாம் தொட்டுப் பார்த்து அதிகாலையில் நீலக்கடலில் அழகை நெஞ்சுக்குள் இருத்திய நாட்கள் தான் முதல் கடல்பார்த்த அனுபவம். கடற்கரை மணலில் குவிந்திருக்கும் மாம்பழங்கள் தந்த சுவையென அப்பாவின் நினைவுகள் நிறையவே....

எங்கள் சிறுவயது ஞாபகங்களைத் தேடினால் அப்பா எங்கள் கண்களில் ஒரு வேடிக்கையான மனிதர். என்றோ கரைந்துபோன அப்பாவின் காதல். அப்பாவை மறந்து இன்னொருவரின் காதலியாகிய அந்தக்காதலி அப்பாவுக்குள் உயிர் இருந்தவரை மறக்கமுடியாத வடுவாகவே இருந்தது. ஏன் அந்தக்காதலி இன்னொருவரின் காதலியானாள் ? சின்னவயதில் அப்பா தன் காதலியின் பெயரை வெறியில் உச்சரித்த போதெல்லாம் அது வெறிப்பாட்டென்று அக்கம்பக்கத்தில் சொல்வார்கள். அடிச்சனியன் தும்புக்கட்டையாலை தும்புபறக்கப்பறக்க வெழுக்க வேணுமென அப்பப்பா பேசும் போது சிரிக்கும் அப்பாவின் சிரிப்பு எல்லாம் அந்தநாட்களில் புதிராகத்தான் இருந்தது.

60தடவைகள் அப்பா பார்த்த வசந்தமாளிகை படத்தில் அப்படி என்னதான் அற்புதம் இருந்ததோ ? சாவீட்டில அழுறமாதிரி உதில என்ன கிடக்கு ? அப்பா வசந்தமாளிகை பாடல்களைப் போட்டு உரே கேட்கும்படியாக ஒலியைக்கூட்டி விட்டபோதெல்லாம் ஊர்கூடி நின்று அப்பாவின் குரலைத்தான் கேட்டது. அப்போதெல்லாம் வசந்தமாளிகை வசனமோ பாடலோ தராத பாதிப்பு அப்பா இல்லாது போன இந்த நாட்களில் அதையெல்லாம் கேட்க வேண்டும் போல் மனசுக்குள் அப்பாவின் குரல் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

நான் புலம்பெயரும் போது 43வயதில் காலடிவைத்திருந்து அப்பாவுக்கு 59வயதாகிவிட்டது. 13.03.2008 மாரடைத்து மரணம் என்பதை நம்ப மறுக்கிறது மனசு. நான் செத்தா வருவியோ ? 5ஆண்டு முன் ஊர் போனபோது அப்பா கேட்டதும்...விமான நிலையத்தில் இறுதிக் கடiவையில் நின்று அப்பா என் கைகளைப்பற்றி அழுததும்.....ஆருக்குத் தெரியுமப்பா....உங்களுக்கு முன்னம் நான் போறனோ தெரியாது என்றதும் இப்பவென்றாற் போல....

(ஒருபேப்பர்)

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, வீட்டு விசயங்களை அப்பிடியே கதையாக சொல்லி இருக்கிறீங்கள். பெண் பிள்ளைகளுக்கு அம்மாவை விட அப்பாமாரில கூட விருப்பம்தானே. உங்கட அப்பா எவ்வளவு ஆழமாக ஒருத்தியை முன்பு மனதார நேசித்து இருக்கிறார் எண்டு அறியக்கூடியதாக இருக்கிது. உண்மையாக அவளை ஆழமாக நேசித்து இருந்தபடியாலதான் அப்பாவால அப்பிடி வெளிப்படையாக பாடல் எல்லாம் பாடி தண்ட பழைய காதலியை நினைவுபடுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்து இருக்கிது எண்டு நினைக்கிறன்.

காதலில தோற்கிறது ஒருபுறம் இருக்க... தோற்ற காதலை வெளிப்படையாக எல்லார் முன்னிலையிலும் சொல்லிறது எண்டால் அதுக்கு கொஞ்சம் துணிவு, அத்தோட நல்ல மனமும் வேண்டும். தண்ணி அடிச்சுப்போட்டு உங்கட அப்பா அப்படி கதைச்சு இருந்தார் எண்டு நீங்கள் சொன்னாலும், சிலது அவர் வெறிமாதிரி நடிச்சுக்கொண்டு தனது மனக்கவலைகளை, மனப்பாரத்தை இறக்கினாரோ யாருக்கு தெரியும். அவரிண்ட காதல் தோற்றபடியாலதானே நீங்கள் அவருக்கு பிள்ளைகளாக பிறக்க முடிஞ்சது. இந்தவிதத்தில சந்தோசப்படுங்கோ. ஒவ்வொரு செயலுக்கு பின்னாலையும், ஒவ்வொரு தீமைக்கு பின்னாலையும் சில நன்மைகளும் இருக்கக்கூடும்.

உங்கள் அப்பாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். வாழ்க்கை எண்டால் இப்பிடித்தானே நாங்கள் தனியாக இந்த உலகத்துக்கு வந்து பிறகு பலருடன் கூட்டமாக சேர்ந்து கும்மாளம் எல்லாம் போட்டு, பிறகு போகேக்க மீண்டும் தனியாக போகவேணும். எனக்கு அம்மா, அப்பா என்னுடன் இருக்கின்றார்கள். நான் தினமும் அவர்களுடன் அன்பாக இருக்கிறது. ஒரு சின்ன அலுவலாக கடைக்கு, பள்ளிக்கூடத்துக்கு எண்டு வீட்டுக்கு வெளியில போகேக்க ரெண்டுபேருக்கும் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துபோட்டுத்தான் போறது. நாளைக்கு அவர்கள் இல்லாத நிலையில கவலைப்படாமல் இப்பவே இருக்கிற காலத்திலயே அவையுக்கு மதிப்பு கொடுத்து அன்போட இருக்கிறது நல்லதுதானே.

மயிலிட்டிக்கு மீன் வாங்க எல்லாம் போய் இருக்கிறீங்கள். நீங்களும் எங்களுக்கு கிட்டக்கிட்டத்தான் இருந்து இருக்கிறீங்கள் போல. உங்கட ஊர் எது? நாங்கள் சுமார் ஆறு, ஏழு வருசங்கள் சொந்த ஊரில இருந்தது பிறகு அகதியாக ஓடத்துவங்கின மரதன் ஓட்டம் கடைசியில ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோற்ற காதலை மறக்க முடியாது ஆண்களால்............

சாந்தி அக்கா நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருக்கா நித்திரையில் ஒரு நடிகையின் பெயரை சொல்லி புலம்பினதுக்கு என்ற மனுசி இப்பவும் இடைக்கிட சண்டை பிடிப்பா ...........உங்களுடைய அம்மா சரியான முற்போக்கு வாதி போல கிடக்குது....

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, உங்கள் நிஜக் கதையை வாசித்த போது நெஞ்சம் கனத்தது.

Link to comment
Share on other sites

கருத்திட்ட முரளி , சின்னக்குட்டித்தாத்தா , முனிவர் , புத்தன் மற்றும் மல்லிகைவாசம் அனைவருக்கும் நன்றிகள்.

மயிலிட்டிக்கு மீன் வாங்க எல்லாம் போய் இருக்கிறீங்கள். நீங்களும் எங்களுக்கு கிட்டக்கிட்டத்தான் இருந்து இருக்கிறீங்கள் போல. உங்கட ஊர் எது? நாங்கள் சுமார் ஆறு, ஏழு வருசங்கள் சொந்த ஊரில இருந்தது பிறகு அகதியாக ஓடத்துவங்கின மரதன் ஓட்டம் கடைசியில ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டிது.

மயிலிட்டியிலிருந்து சில மைல்கள் தள்ளியிருக்கும் குப்பிளான் தான் எனது ஊர். உங்களுக்கு மரதன் ஓட்டம் ஆறு ஏழு வருடங்களில் முடிந்திருக்கிறது. நாங்கள் 84இல் இருந்து 93வரையுமே யாழ்ப்பாணத்தில் அலையாத ஊரில்லை. நாய் குட்டிகாவுவது போல என்பார்களே அதே நிலையில். :rolleyes:

அப்பாவின் அந்தநாள் நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை.

அம்மா அப்பா மீது நீங்கள் காட்டும் பாசத்தை மனதார பாராட்டுகிறேன்.

தோற்ற காதலை மறக்க முடியாது ஆண்களால்............

சாந்தி அக்கா நன்று

அட முனிவருக்கும் காதலை மறக்க முடியாதா ? :lol: முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். :D

நினைவுகளை ஆணென்ன பெண்ணென்ன எல்லாராலும் தான் நினைவுபடுத்திப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் காதலென்ன நண்பர்களென்ன எல்லாருக்கும் பொதுவானது ஞாபகங்கள்.

Link to comment
Share on other sites

நான் ஒருக்கா நித்திரையில் ஒரு நடிகையின் பெயரை சொல்லி புலம்பினதுக்கு என்ற மனுசி இப்பவும் இடைக்கிட சண்டை பிடிப்பா ...........உங்களுடைய அம்மா சரியான முற்போக்கு வாதி போல கிடக்குது....

கனவில நடிகையின்ரை பேரைச் சொன்னா உங்களைப் பேசாமல் பின்னையென்ன செய்வா மனிசி ? :rolleyes: நான் நினைக்கிறேன் நீங்கள் சினேகாவை கனவு கண்டிருப்பியள். சிலவருசங்கள் முதல் ரீரீஎன்னில் ஒரு விளம்பரம் வந்தது. அப்ப சினேகா லண்டனுக்கு வரவிருந்தவா. ஒரு இளைஞன் கனவிலை சினேகாவோடை உலாத்திற மாதிரி பொடி நித்திரையில சினேகா சினேகா எண்டு புலம்பினது. நீங்கள் அந்த விளம்பரத்தை பாத்திட்டுத்தான் புலம்பினியளோ தெரியேல்ல. :lol:

இதில் என்ன முற்போக்கு இருக்கு. ஒருவர் தனக்குள் இருப்பதை வெளிப்படையா சொல்வது நல்லம் தானே. குடும்பம் என்றால் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம் என்பதன் அர்த்தம் இதுதானோ தெரியாது. எதற்கும் அம்மாவிடம் கேட்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட முனிவருக்கும் காதலை மறக்க முடியாதா ? :rolleyes: முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். :huh:

நினைவுகளை ஆணென்ன பெண்ணென்ன எல்லாராலும் தான் நினைவுபடுத்திப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் காதலென்ன நண்பர்களென்ன எல்லாருக்கும் பொதுவானது ஞாபகங்கள்.

என்ன சாந்தியக்கா இப்படி ஒரு கேள்வி கேட்டு போட்டயல் யாரால்தான் காதலை மறக்கமுடியும்

என்னது முற்றும் துறந்தவரா?? துறக்கமுடியாது இங்கே சில ஜந்துக்கள் உள்ளன காந்து போட்டு விடும் எல்லாத்தையும் :lol::lol:

இந்த காதல் நினைவுகளை மீட்கும் போது என்னையறியாமலேயே ஒரு ஆனந்தம் அதனால் தான் அப்படி எழுதினேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதை சோகத்தை தந்தாலும் நீங்களும் உங்கள் சகோதரங்களும் அப்பாவின் மேல் வைத்திருந்த,வைத்திருக்கிற பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது.

Link to comment
Share on other sites

ஓ சாந்தி அக்கா குப்பிளானோ? நான் ஏழாலைக்கு வந்து இருக்கிறன் சின்னனில. எனக்கு குப்பிளான் எண்டு ஊர் தெரியும். அங்க வந்து நினைவு இல்ல. ஏழாலையிலதான் நாங்கள் மாடு வாங்கினது. மாடு வாங்க வரேக்க அப்பாவோட வந்தது சின்னனில சைக்கிளில. குப்பிளான் எங்க இருக்கிது எண்டு அப்பாவை இப்ப கேட்டன். அவர் ஏழாலைக்கு கிட்ட இருக்கிறதாய் சொன்னார். அப்பிடியோ?

நாங்கள் மரதன் ஓடினது பதின்நாலு வருசம். ஊரில நிம்மதியா இருந்தது ஆக ஐஞ்சு ஆறு வருசங்கள் தான். அதுக்கு பிறகு அகதியா ஓடித்திறிஞ்சு பட்ட கஸ்டங்கள், அவமானங்கள், இழிவுகள், வேதனைகள் சொல்லில அடங்காது. எங்கட வாழ்க்கை, படிப்பு எல்லாம் பதின்நாலு வருச மரதன் ஓட்டத்தில சீரழிஞ்சு போச்சிது. பிறகு கனடாவுக்கு வந்து ஒருமாதிரி வாழ்க்கையை நிலைநிறுத்தி மூச்சுவிடக்கூடியதாக இருந்திச்சிது சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா , உங்கள் உண்மை கதை சோகமாக உள்ளது.அதிலும் உங்கள் அப்பாவின் அடையமுடியா காதல், பின்னர் அவரின் இழப்பு.

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :)

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பதிவை இன்று தான் வாசித்தேன். என்ன செய்வது , ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் எல்லா இடங்களும் ஓடி உலகின் பல் வேறு நாடுகளில் பிரிந்து எல்லோரும் வாழ்கிறோம். பெற்றோர்கள் ஒரிடம், பிள்ளைகள் ஒரிடம், சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்கள். அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாத வாழ்க்கை. இடையிடையே வரும் அவர்களின் நிரந்தரப் பிரிவுச் செய்திகள். சிலருக்கு தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத்தெரியாமல் ஒரு வாழ்க்கை. சிலரின் உறவுகள் வன்னித் தடுப்பு முகாம்களில். அவர்களை இனி எப்பொழுது பார்க்கலாம் என்று கூடத் தெரியாத அவல நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :(

கந்தப்புவின்ரை புண்ணியத்தில நானும் இண்டைக்குதான் இந்த பதிவைப் பார்த்தேன்.

சாத்திரிக்கும் எல்லாம நினைவிருக்கோ....என்ரை மரமண்டைக்கு தான் எதுவும் நினைவில்லாமல் இருக்கு. :(

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :D

அழகான அந்தப் புளியமரம் அதோடை சேந்த அந்தப் பனைமரம் சாத்திரிக்கு அடிக்கடி நினைவில் வரும் :lol:

இப்ப பதிவை இன்று தான் வாசித்தேன். என்ன செய்வது , ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் எல்லா இடங்களும் ஓடி உலகின் பல் வேறு நாடுகளில் பிரிந்து எல்லோரும் வாழ்கிறோம். பெற்றோர்கள் ஒரிடம், பிள்ளைகள் ஒரிடம், சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்கள். அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாத வாழ்க்கை. இடையிடையே வரும் அவர்களின் நிரந்தரப் பிரிவுச் செய்திகள். சிலருக்கு தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத்தெரியாமல் ஒரு வாழ்க்கை. சிலரின் உறவுகள் வன்னித் தடுப்பு முகாம்களில். அவர்களை இனி எப்பொழுது பார்க்கலாம் என்று கூடத் தெரியாத அவல நிலை.

நினைவுகளுக்குள்ளே வாழும் உறவுகளும் ஊரும்...... :(

சாத்திரிக்கும் எல்லாம நினைவிருக்கோ....என்ரை மரமண்டைக்கு தான் எதுவும் நினைவில்லாமல் இருக்கு. :lol:

உங்களுக்கு சேது படத்தில வாற விக்ரமின் நிலைமைமாதிரி ஏதூவது நடந்ததூ ? :(

ஞாபகம் வருதே என பாடிப்பாடி ஞாபகப்படுத்திப் பாருங்கோ.....

எங்கள் ஊர் பனங்கூடல்....இலுப்பைமரம்.....புள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

அடிக்கடி உங்களின் அப்பா குறிப்பிடும் வசனம் ஒண்டு எண்டு ஒன்றை எழுதியுள்ளீர்கள்....முற்றிலும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.