Jump to content

கடவுள் தந்த அழகிய வாழ்கை ,,,,,,,,,,,,,,


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த அழகிய வாழ்கை ,,,,,,,,,,,,,,,,,

அதிகாலை ஐந்து மணியிருக்கும் அலாரச்சத்தம் கேட்டு கோமதி எழுந்து தன் காலைக்கடன் முடித்து கோப்பி குடித்து

,இரவு பெட்டியில் போட்டு வைத்த் மதிய உணவையும் எடுத்து கொண்டு ,பஸ் தரிப்பு நோக்கி நடந்தாள் .

கனடா தேசத்தின் மார்கழி குளிரில் தன்னை பாது காக்க காலுறை கையுறை, தடித்த அங்கி ,காதுகளை

மூடிய "மபிலேர்" என்று தன்னை ஒரு துணி மூடை யாகவே ,போர்த்தியிருந்தாள் . பஸ் வண்டி வரவே

ஏறி அமர்ந்தவளின் எண்ணம் தாயகம் நோக்கி சென்றது . அம்மாவும் அப்பாவும் தன் இரு தங்கைகளும்

என்ன பாடோ ? நான் இந்த குளிரில் உழைத்து அனுப்பும் காசில் தான் அவர்கள் சீவியம் .அப்பாவுக்கும்

வயதாகிறது இனி பாடசாலை ஆசிரியார் பதவியிலிருந்து அடுத்தவருடம் ஓய்வு பெற்றுவிடுவார். பெரிய தங்கையும் .

யாழ்( திறந்த வெளி சிறைக்கூடத்தில்) உள்ள பல் கலை கழகத்தில் படிக்கிறாள். ஒவ்வொருநாளும் படிக்கபோய்

வீடு வரையும் அம்மா மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதாக் எழுதுவார். சிறியவளும் அருகில் உள்ள

பாடசாலயில் பன்னிரண்டாம் வகுப்பு. அங்கு பாடசாலையும் ஒழுங்காக் நடப்பதில்லயாம் .அப்பா போனில்

கதைத்த போது சொன்னார்

கோமதி நீ ,எங்களை பாராதே ,நீயும் ஒரு வாழ்கையில் இறங்கி விடு ,ஒரு நல்லவனாக பார்த்துவிடு,மகளே

எதுவுமே நிலை இல்லை ,குணம் தான் முக்கியம் என்று .அடிக்கடி கடிதம் வரும் இங்கும் உறவுகள் மூலமாக சில பேசி

வந்தும் ,தங்கை மாரை படிபிக்க , கவனிக்கவேண்டுமென்று தட்டிக்களித்துவிடாள்

வயதும் முப்பதாக போகிறது, பெரியவள் ஒரு வேளையில் சேரும் வரயாவது கொண்டு இழுப்போம்

என்று எண்ணிக்கொண்டு இருக்கிறாள். அவள் இறங்குமிடம் வரவே ,இறங்கி ,தன் காப்பகத்துக்கு செல்கிறாள்.

அங்கு இவளை கண்டதும் பிள்ளைகள் ஓடி வந்து கையை நீடுகின்றனர். இது கொஞ்சம் வித்தியாசமானது.

உடல் வலு சற்று குறைவானவர்கள். பிரத்தியேக பாடசாலை. மன நிலையும் . . மற்றவைய விட வித்தியாசமானவர்கள்.

ஒவ்வொருவருக்கும் தனிதனி கவனம் செலுத்த வேண்டும்.நேர அட்டவனை படி இயங்க வேண்டும் .

கை வினை பொருட்கள், பேனா பென்சில் ,என்று எடுத்தவற்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும் ,

ஏதும் விசடமாக் தெரிவிக்க வேண்டி இருப்பின் மேலதிகாரி வருவார். இவளுடன் ,எழு பேர் வேலை செய்கிறார்கள்.

இயல்பாகவே இரக்க குணம் கொண்ட இவளுடன் ",காட்டர் ",நன்றாக சேர்ந்து கொண்டான். இவளது

அன்புக்கு கட்டுபடுவான் ,எந்நேரமும் வாய்நீர் ஓடிக்கொண்டு இருக்கும். வாய் சற்று ஒரு பக்கத்துக்கு இழுத்தது

போன்ற ஒரு மெல்லிய உருவம். பதினோரு வயது . நேரம் போவதே தெரியாமல் ,இருக்கும் .மாலையானதும்

.அவர்களுக்கென பிரத்தியேக வண்டி வ்ரும் ஓட்டுனர் உதவியுடன் ,ஏற்றி செல்வர் ., சிலர் ,தாய் தகப்பன் வந்து

கூடி செல்வர். பொதுவாக அவள் காணும் நம் தாயக உறவுகளின் பிள்ளைகள் ஒழுங்காக் இருக்கிறார்கள், இவர்கள் மட்டும்.....

ஏன் இப்படி பிறந்தார்கள். .கடவுளின் தண்டனையா , ? அந்த ஆண்டவன் என்னையும் என் குடும்ப உறவுகளையும்

,நல்ல முறையில் படைததுக்கு என்றாவது நன்றி சொன்னேனா ? அண்மையில் ஒரு நிறைமாத குழந்தை ,கழுத்தில் கொடி

சுற்றி ,இறந்து பிறந்தது. இளம் குடும்பம்,முதல் பிள்ளை,அவர்கள் விட்ட கண்ணீரை எழுத வார்த்தையில்லை

. வாங்கிய உடைகளை பார்க்க பார்க்க துயரத்தின் மேல் துயரம். . இனிமேலும் இப்படி துயரங்கள் வேண்டாம்.

நமக்கு கடவுள் தந்த அழகிய வாழ்கை ................

Link to comment
Share on other sites

இது கதையல்ல நிஜம் என்றே நினைக்கிறேன்.

அப்பா வருவாரா.... என்பதையும் இன்று தான் வாசித்தேன்.( இன்று தான் இப்பகுதிக்கே வந்தேன்)

சம்பவங்களை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

நிலாமதி அக்ககா, இது கதை என்பதை விட நிஜம் என்றே எண்ணுகிறேன்.

இக்கதையில் வரும் நாயகிக்கு விரைவில் எல்லாம் கைகூட வாழ்த்துக்கள்.

தொடருங்கள்... :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.