Jump to content

காதலில் கவிதையில்லை...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் கவிதையில்லை...

திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 12:53

-ரிஷி சேது

உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்

நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்

நீ காதலைச் சொன்னாய்-

நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...

நீ கொஞ்சம் கொஞ்சமாய்

உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்

உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை

காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை

அதுவும் தேவைப்பட்டது-

நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..

நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்

சிறுகுஞ்சாய்....

ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்

பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்

ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து

நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..

நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல

என் பலவீனம் உன் பலமாய்

நீ என்னிலிருந்து விலகிப்போனாய்

நான் துடுப்பிழந்த படகானேன்

வெகு நாள் கழித்து

திடீரென ஓர் கவிதை

பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த

மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்

கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....

காதல் எல்லையில்லா பிரபஞ்சம்

கவிதை காதலிலிருந்ததது

காதல் கவிதையில்லை...

thatstamil

கவிதைத்தலைப்பு என்னை ஈர்த்தது.

கவிதையை வாசித்தேன்.

கவிதையும் அழகு.

அதையே பகிரவும் நினைத்தேன்.

Link to comment
Share on other sites

அழகான வரிகள்தான்...

இது அனுபவத்தில் எழுதியமாதிரி இருக்குது...

எனக்கும் இதுக்கும் வெகுதூரம்... :lol:

அனுபவித்தால்தான் இதன் அர்த்தங்கள் புரியும்...

புரிந்துகொண்டால் இதை எண்ணிப்பார்க்கிறேன்... :lol:

இணைப்பிற்கு நன்றி கறுப்பி.

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா..கா..!!.. :lol:

"காதலில் கவிதையில்லை" அழகான தலைப்பு வித்தியாசமான சிந்தனை ஆனா நான் உங்க கவிதை எண்டு அல்லோ நெனைத்தனான்..ன் எண்டாலும் கவிதையை இணைத்தமைக்கு நன்றிகள்.. :lol: அது சரி தங்களின் கவிதை எப்போது மலரும் கறுப்பி அக்கா..கா..??.. :lol:

சரி எனி இந்த கவிதைக்கு வருவோம்..

இந்த தலைப்போட நான் ஒத்து போக மாட்டன் ஏன் எண்டா இப்ப யாரோ எழுதின கவிதையை தான் தன் கவிதை எண்டு இன்னொருத்தன் கொடுப்பான் அதை போல் தான் காதலும்..ம் பல பேரிட்ட கை மாறுது ஆனபடியா கறுப்பி அக்கா காதல் ஒரு கவிதை தான் இந்த ரீதியில்..ல்.. :lol:

ஆனால் ரசிக்க தான் முடியாது... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து

நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..

நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல

என் பலவீனம் உன் பலமாய்

இணைப்புக்கு நன்றி கறுப்பி!

காதலில் கவிதை இல்லாவிட்டால் என்ன

கைகளில் கவிதை வரலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.