Jump to content

நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி


Recommended Posts

நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி

Vasugi012.jpg

திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர்.

அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன்

பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்......

கேட்பதற்கு அழுத்துங்கள்:

http://www.radio.ajeevan.com/

அல்லது

http://www.zshare.net/audio/52427630f98a0b40/

நன்றி

Link to comment
Share on other sites

மேல நீங்கள் இணைச்ச இந்தப்படத்தில கவிஞர் ஜெயபாலன் அண்ணா இருக்கிறாரா?

மேலே உள்ள படத்தில் இல்லை.

jayabalanrs2.jpg

இப்படத்தில் வலது பக்கத்தில் தாடியுடன் இருப்பவர் கவிஞர் ஜெயபாலன் அண்ணா.( சுவிசுக்கு வந்திருந்த போது.......)

ஏனைவர்கள் தரிசனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சிலர்....ஒருவர் ஆணிவேர் தயாரிப்பாளர் பிரபா. (இடமிருந்து வலமாக இரண்டாவது)

Link to comment
Share on other sites

வணக்கம்,

பேட்டியை முழுமையாக கேட்டன். நல்லாய் இருந்திச்சிது. சூப்பர்..! A+ :) அதில வாற ஹய் ஹய் எண்டுற குழந்தைகளிண்ட பாடல் கேட்க மிகவும் நல்லாய் இருந்திச்சிது. ஜெயபாலன் அண்ணா எழுதின வேறு சில அழகிய பாடல்களையும் கேட்கக்கூடியதாக இருந்திச்சிது.

வழமையா சங்கீதம் நல்லா படிச்ச ஆக்களிட்ட குறை ஒண்டும் இல்லை மறைமூர்த்தி கண்ணா எண்டுற பாடலை பாடிக்காட்டுமாறு கேட்கிறது வழமயாப் போச்சிது. நானும் எனது அக்காமாரோட தொலைபேசிக்கால கதைக்கேக்க அந்தப்பாடலை சிலது பாடச்சொலி கேட்கிறது. நல்லாய் இருக்கும்.

வாசுகி அக்காவிண்ட பாடல்கள் கேட்க சூப்பராய் நல்லாய் இருக்கிது. குறிப்பாக..

“கள்ளென கொட்டுதடி வள்ளி..!

காலை வெளியினில் போதைநிலா...

அள்ளுது வா வா என..!

அழைத்திடும் பூங்குயில் கவிமனசை...!”

இந்த பாட்டு சூப்பரோ சூப்பர். அதை நான் மூண்டு நாலு தரம் திருப்பித்திருப்பி கேட்டது. இந்த “கள்ளென கொட்டுதடி வள்ளி..!” பாடலை குறுந்தட்டாக வாங்கலாமோ அஜீவன் அண்ணா?

ஜெயபாலன் அண்ணா அண்மையில யாழில தனது பாடல்களை இணைச்சு பிறகு அதால நட்டப்பட்டு போனதாய் வேதனைப்பட்டு சொல்லி இருந்தார். நான் இவ்வளவு இனிமையான பாடல்களாக இருந்து இருக்கும் எண்டு நினைச்சு இருக்க இல்லை. இதால அவற்றை கேட்க இல்லை. ஆனால் விரைவில அவற்றை ஒன்லைன் மூலம் பெறக்கூடியதாக வசதி இருந்தால் பெற்றுவிட்டு அதற்குரிய காசை/அன்பளிப்பை விரைவில அனுப்பி வைக்கிறன்.

எனது ஒரு அக்காவுக்கும் பெயர் வாசுகிதான். வாசுகி எண்டுற பெயர் உள்ள ஆக்கள் நல்லாய் பாடுவீனம் போல. அவவுக்கும் நல்ல குரல்வளம். அவவும் இராமநாதன் நுண்கலை, தமிழ்நாட்டில இசை படிச்சவ.

மற்றது, குழந்தைகளுக்காக ஆக்கங்கள் வாறது நல்லாய் குறைஞ்சு போட்டிது எண்டுறது உண்மைதான். இப்ப குழந்தைகள் எல்லாம் பெரிய ஆக்களிண்ட விசயங்களைதான் பெரிய ஆக்களோட சேர்ந்து பார்கிதுகள். இணையத்திலையும் இதுதான் நடக்கிது. இதால அதுகள் பிஞ்சில முத்திப்போய் இருக்கிதுகள். குழந்தைகள் சிறுவயதிலேயே நாசமாய் போறதுக்கு இதுவும் ஒரு காரணம். முந்தி எண்டால் குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமா படங்கள் எண்டு இருக்கும். இப்ப தணிக்கைகள் ஒண்டும் இல்லாமல் எல்லாத்தையும் அதுகள் பார்க்கிதுகள். சீரியல் சாப்பிடிற குழந்தைகள் தொலைக்காட்சியில சீரியல்கள் பார்க்கிதுகள்.

ஜெயபாலன் அண்ணா போல அவரது துணைவியாரும் தனது துறையில சிறந்து விளங்குகின்றார். வாழ்த்துகள்! வாசுகி அக்கா தனது எதிர்கால விருப்பங்கள் எண்டு சொல்கின்ற விசயங்களும் கைகூட பிரார்த்தனைகள்! அஜீவன் அண்ணாவுக்கும் வாழ்த்துகள்! நாங்கள் அறியாத மிகுந்த ஆற்றல் படைச்ச ஒரு கலைஞரைப்பற்றி அறியத்தந்தீங்கள். மிகவும் பயனுள்ள பேட்டி. நன்றிகள்!

மேலும்... நேரம் தற்போது இரவு ஏதோ பத்துமணி சொச்சம் எண்டு சொல்லுறீங்கள். உங்கட வானொலி இரவிலையோ போறது அஜீவன் அண்ணா? :) அடுத்த நிகழ்ச்சியை ப்துவருடத்தில கொடுக்கிறதாய் சொல்லி இருக்கிறீங்கள். அதையும் ஒரு கலக்கு கலக்கிவிடுங்கோ.

கடைசியாக, கு.போ அண்ணா முயலும், சிங்கமும் காணொளியை இணைச்சு கிணத்துக்க சிங்கத்தை விழுத்துற கதை எல்லாம் சொல்லி இருகிறார். அதற்கும் நன்றிகள்! என்னமோ புலியை முயலாக மாத்தி உவமிச்சு கதைக்கிறது கிண்டல் பண்ணுறமாதிரி இருக்கிது. அப்பிடி எண்டால் சிங்கத்தையும் யானை எண்டு மாத்தி இருக்கலாம். யானையை முயல் பொறிக்கிடங்கில விழுத்துறமாதிரி கதையை சொல்லி இருக்கலாம். :(

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்காக ஆக்கங்கள் வாறது நல்லாய் குறைஞ்சு போட்டிது எண்டுறது உண்மைதான். இப்ப குழந்தைகள் எல்லாம் பெரிய ஆக்களிண்ட விசயங்களைதான் பெரிய ஆக்களோட சேர்ந்து பார்கிதுகள். இணையத்திலையும் இதுதான் நடக்கிது. இதால அதுகள் பிஞ்சில முத்திப்போய் இருக்கிதுகள். குழந்தைகள் சிறுவயதிலேயே நாசமாய் போறதுக்கு இதுவும் ஒரு காரணம். முந்தி எண்டால் குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமா படங்கள் எண்டு இருக்கும். இப்ப தணிக்கைகள் ஒண்டும் இல்லாமல் எல்லாத்தையும் அதுகள் பார்க்கிதுகள். சீரியல் சாப்பிடிற குழந்தைகள் தொலைக்காட்சியில சீரியல்கள் பார்க்கிதுகள்.

முதற்கண் நம் கலைஞர்களை வெளிக்கொணர முடிந்ததை பாராட்டியதற்கு நன்றி முரளி.

குழந்தைகள் தொடர்பாக நமது படைப்பாளிகள் பெரிதாக ஒன்றும் செய்ய முயலவில்லை என்றே நினைக்கிறேன்.

அதை ஜெயபாலன் அண்ணாவும் வாசுகி அக்காவும் செய்திருக்கிறார்கள். அதற்கு நன்றிகள்.

நாம் நமது குழந்தைகளுக்கு எதைக் கொடுக்க முயல்கிறோம்?

நாம் குழந்தைகளோடு எதைப் பார்க்கிறோம்?

எதைக் கேட்கிறோம்?

எதை பேசுகிறோம்?

என்று சற்று சிந்தித்தால்

குழந்தைகள் கெடுவதற்கு பெரியவர்கள்தான் காரணம் என்று உணர்வீர்கள்.

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தொலைபேசியில் எம்மவர் பேசுவதை பாருங்கள்.

இதுபோன்ற சிறு நிகழ்வுகள் பிஞ்சுகளின் அடி மனங்களில் பதிகின்றன.

வேற்று மொழிக் குழந்தைகளுக்கு தேவையான கார்டூன்கள் மற்றும் திரைப்்படங்கள்

மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் உண்டு.

நாம் இன்னமும் தேவாரம் : ஆத்திசூடி மற்றும் திருக்குறள் போன்ற எதையாவது ஒன்றை மட்டும்

இன்னமும் குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு மேல் நம்மவருக்கு கேட்க தெரிவில்லையோ என எண்ணத் தோன்றும்?

பெரியவர்கள் குறைகளை செய்துகொண்டு

குழந்தைகள் மேல் பழி போடுவது தவறென கருதுகிறேன்.

அடுத்து நம் கலைஞர்களை நாம் வாழ்த்துவது கூட இல்லை.

அதற்குரிய மனம் நம்மவரிடம் இல்லை என்பதை அச்சமின்றி சொல்வேன்.

அப்படி ஏதாவது செய்தால் அது வேண்டிய ஒருவராகவே இருக்கும்.

அல்லது

எல்லோரும் வாழ்த்துகிறார்கள் நாமும் வாழ்த்தவேணும் என்று இருக்கும்.

அப்படியல்லாது உண்மையாக செய்வோர் வெகு அரிது.

நம் தோட்டத்து மல்லிகை நமக்கு மணப்பதில்லை என தொடர்ந்து

பேசுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மாயா போன்ற கலைஞர்களை

ஆரம்பத்தில்

நாம் ஏற்றுக்கொள்ளாததால்

நம்மைவிட்டு ஆங்கில மொழி பாடல்களை பாடி

உலக தரத்தை எட்டியிருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் அவர் குறித்த நம்மவர் விமர்சனங்களும்

உலக விருதுக்கான பரிந்துரைக்கு பின் நான் காணும் விமர்சனங்களும்

என்னை வியக்க வைக்கவில்லை?

நாம் ஏற்றுக்கொண்டிருந்தால்

அவர் ஒரு தமிழ் பாடலையாவது பாடியிருப்பார்?

இதுவே எதிர்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும்

குழந்தைகளிடம் இடம்பெற்று தொடரப்போகிறது.

இதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை.

அனைவரிடமும் அனைத்து திறமைகளும் இருப்பதில்லை.

ஒவ்வொருவரிடம் ஏதோ ஒரு திறமை இருக்கும்.

அதை அவரவர் வளர்த்துக் கொள்ள முனையவேண்டும்.

அது வெற்றிக்கு வழி வகுக்கும்.

வாசுகி அக்கா பேட்டியில் கூறியது போல x செய்வது போல y யும் செய்ய முற்படுவது

போன்ற நிலைகளே நம் கண்முன் நடப்பவையாக இருக்கின்றன.

தம் குழந்தைகளிடம் என்ன திறன் உண்டு என புரிந்து

அதை வளர்க்க பெற்றோர் அவர்களுக்்கு உறுதுணை புரிய வேண்டும்.

அதைவிடுத்து பெற்றோர் விருப்பங்கள் எதையும் திணிக்க முற்படலாகாது.

அது தொடராது.

அடுத்து பாலை தொடர்பாக வாசுகி அக்காவை 15 - 20 நிமிடம் பேட்டியை எடுப்பதென்று தொடங்கினேன்.

ஆனால் அது முழு நிகழ்சியையும் ஆக்கிரமிக்க வைத்ததற்கு காரணம்

அவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த விடைகளும்

அவர் மனம் சலிக்காது கொடுத்த பதில்களும் அணுகுமுறையுமே.

அவரோடு எனக்கு பெரிதாக நட்போ அல்லது

பெரிதாய் அவர் குறித்தோ அறிந்திருக்கவில்லை.

எனவே நான் அவரிடம் என்ன கேட்பதென்று யோசித்து வைத்திருக்கவுமில்லை.

எனது தயார்படுத்தல் போதாது என நான் கருதுகிறேன்.

இருந்தாலும் சுவிசில் நிகழ்சியை கேட்ட பலர்

நன்றாக இருந்தது என சொன்னதும்

வாசுகி அக்கா நல்லா கேள்வி கேட்டு

தேவையானதை வாங்கத் தெரிகிறது எனக் கூறியதும்

மகிழ்வாய் இருந்தது. முரளியின் பாராட்டிலும் அதையே உணர்கிறேன்.

வாசுகி அக்காவின் தொலைபேசி இலக்கத்தையும் மின்அஞ்சல் முகவரியையும் தருகிறேன்

தொடர்பு கொண்டு பாட்டு சீடியை பெறலாம்.

+4722162235 அல்லது +4798403067

vasukijaya@yahoo.com

நன்றி

ஏனைய கலைஞர்கள்

அல்லது

ஏதாவது ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள்

விரும்பினால்

எம்மோடு தொடர்பு கொள்ளலாம்.

உலகத்தில் எங்கு இருந்தாலும்

எதிர்காலத்தில் வானோலி வாயிலாக

அவர்கள் குறித்த தகவல்கள் மற்றும்

பேட்டிகளை கொண்டு வர முயல்வோம்.

உங்களைப்பற்றியும்

உங்கள் தகமைகள் பற்றியும் அறியத்தாருங்கள்.

மின்அஞ்சல் : info@ajeevan.com

எமது தொடர்புகளுக்கு : +41792091249

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குழந்தைகளுக்கான ஆக்கங்கள் வருவது குறையவில்லை . புலம் பெயர் நாடுகளில் எத்தனையோ அழகிய தமிழ் பாடல்கள் மக்களின் உணர்வுடன் வருகின்றன.

யார் அதை வாங்கி கேட்கிறார்கள்? யார் ஆதரவு கொடுக்கிறார்கள்? எந்த வீடியோ கடையிலாவது போய் கேளுங்கள் ஈழதமிழரின் பாடல் இசைத்தட்டு இருக்கா என்று இல்லை என்பார்கள் , அல்லது சிரிப்பார்கள் . இதுதான் ஈழத்தமிழரின் ஆக்கங்களின் நிலமை.

தமிழர் பாடசாலைகளில் கலையை வளர்க்கிறோம் என்று வியாபாரம் நடத்தும் கலை ஆசிரியர்கள் ஒரு ஈழத்தமிழரின் ஆக்கத்தில் வெளிவந்த இசையை அல்லது பாட்டை பாடுகிறார்களா நடனம் ஆட பயன்படுத்டுகிறார்களா என்றால் இல்லை.

எல்லாரும் எங்கோயோ உக்கி போன இராமன் சீதை, கண்ணன் போன்ற எங்களுக்கு இன்று தேவை இல்லாதவற்றையே வைத்து பிழைப்பை நடாத்தி கொண்டு இருக்கிறார்கள்.

பிறகு எப்படி எங்கள் ஆக்கங்கள் முன் வரும்.? அதன் பயன்பாடுதான் எங்கே?

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கான ஆக்கங்கள் வருவது குறையவில்லை . புலம் பெயர் நாடுகளில் எத்தனையோ அழகிய தமிழ் பாடல்கள் மக்களின் உணர்வுடன் வருகின்றன.

யார் அதை வாங்கி கேட்கிறார்கள்? யார் ஆதரவு கொடுக்கிறார்கள்? எந்த வீடியோ கடையிலாவது போய் கேளுங்கள் ஈழதமிழரின் பாடல் இசைத்தட்டு இருக்கா என்று இல்லை என்பார்கள் , அல்லது சிரிப்பார்கள் . இதுதான் ஈழத்தமிழரின் ஆக்கங்களின் நிலமை.

தமிழர் பாடசாலைகளில் கலையை வளர்க்கிறோம் என்று வியாபாரம் நடத்தும் கலை ஆசிரியர்கள் ஒரு ஈழத்தமிழரின் ஆக்கத்தில் வெளிவந்த இசையை அல்லது பாட்டை பாடுகிறார்களா நடனம் ஆட பயன்படுத்டுகிறார்களா என்றால் இல்லை.

எல்லாரும் எங்கோயோ உக்கி போன இராமன் சீதை, கண்ணன் போன்ற எங்களுக்கு இன்று தேவை இல்லாதவற்றையே வைத்து பிழைப்பை நடாத்தி கொண்டு இருக்கிறார்கள்.

பிறகு எப்படி எங்கள் ஆக்கங்கள் முன் வரும்.? அதன் பயன்பாடுதான் எங்கே?

உங்கள் கருத்தில் சற்று உடன்பாடு உண்டு.

ஆனால் முழுதாக இல்லை நேசன்.

புலம்பெயர் நாடுகளில் பல கலைஞர்களது பாடல்கள் உண்டு.

ஆனால் அவற்றுக்கு ஆதரவளிக்க பலர் விரும்புவதில்லை.

அதற்கு காரணம்

புலத்தில் நாம் அனைவரும் ஒன்று

இவன் என்ன

என்னை விட மேலே போறது

எனும் மனப்பான்மை.

அந்த கலைஞனை மட்டம் தட்டுவதற்கு உள்ள உணர்வில்

ஒரு சத வீதமாவது அவனை பாராட்ட அல்லது

அவனுக்கு ஆதரவளிக்க முன் வருவதில்லை.

இதில் ரிஷி மூலம் நதி மூலம் தேடுவோர்தான் அதிகம்.

புலத்தில் உள்ள ஒரு படைப்புக்கு ஆதரவு கொடுக்கலாமே என்றால்

இவனை வளர விடக்கூடாது எனும் மனப்போக்கிலேயே பலர் இருக்கிறார்கள்.

தன்னால் முடியாவிட்டாலும்

தன் இனத்தவனை வளர விடக்கூடாது எனும் மனநிலையையே காண முடிகிறது.

ஒரு படைப்பாளியையோ கலைஞனையோ அல்லது ஒரு விஞ்ஞானியையோ

அதிகமாக வளர்த்து பிரயோசனப்படுத்த

வளர்ந்த நாடுகள் அவர்களது ரிஷி மூலம் நதி மூலத்தை தேடுவதில்லை.

தமிழகத்தில் கூட திறமையானவர்களை தேடி

திறமை கொண்ட ஒருவனை அவர்கள் பாவிக்கவே முற்படுகிறார்கள்.

அதனால் அவனும் உயர்கிறான்.

அந்த சமூகமும் உயர்கிறது.

அமெரிக்கா

யாராவது திறமையானவனாக இருந்தால்

அவனை அரவணைத்து

அவனது திறமையை பாவித்து

அந்த நாட்டை பொருமைப்பட வைத்துக் கொள்கிறது.

இதில் சுயநலம் இருந்தாலும்

அந்த திறமைசாலி

அந்த வாய்ப்பால் அவனையும் வளர்த்துக் கொள்கிறான்.

என்றும் அமெரிக்கா உலகில் முதன்மையாக பேசப்படுவதற்கு இதுவே காரணம்.

இஸ்ரேலியரை போல திறமையானவர்கள் ஈழத் தமிழர்கள் எனச் சொல்கிறோம்.

ஆனால் உண்மை என்ன?

நம் கலைஞர்களில் ஒரு உதாரணத்துக்கு இவரை எடுத்துக்கொள்ளலாம்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் பாடகியின் பெயர் ஜெர்மனிய இசை விருதிற்காக பரிந்துரை

2mhy7m0.jpg

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய ரெப் பாடகி மாதங்கி அருள் பிரகாசத்தின் பெயர் ஜெர்மனிய இசை விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐ.ஏ. பிரபல்யமாக அழைக்கப்படும் குறித்த பாடகியின் பேபர் பிலேன் என்ற பாடல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிலிடிங் லவ், ப்ளீஸ் ரீட் த லெட்டர், விவ லா விடா மற்றும் சேசிங் பேமன்ட் ஆகிய பாடல்களும் இந்த விருது வழங்கல் விழாவிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச விருது வழங்கும் விழாவொன்றில் இலங்கைத் தமிழ் யுவதியொருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக இசை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் போன்ற பலர்

பலவித திறமைகளோடு புலத்தில் இருக்கிறார்கள்.

நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தவிரவும் அவர் போன்றவர்களை நாம் வளர்பதை விட்டு

அழிக்கவே முனைப்பாக ஆரம்பத்தில் நின்றோம்.

இப்போது உலகம் ஏற்றுக்கொண்ட போது

நாமும் ஏதோ செய்தி போடுகிறோம்.

அவ்வளவுதான்.

ஆதரவளிப்பதை விட அவதூறு சொல்வதற்கே நேரத்தை எடுத்துக்கொள்கிறோம்.

என்று

நம் தமிழ் சமூகம்

நம் கலைஞரது ரிஷி மூலம் நதி மூலத்தை தவிர்த்து

திறமைகளை மட்டும் பார்க்குமோ?

அன்றுதான் அதிக கலைஞர்கள்

புலத்தில் கூட உருவாக வாய்ப்பு ஏற்படும்?.

அல்லாவிடில்

சில ஜால்ராக்கள் மட்டும்

மின்மினிப்பூச்சுகள் போல் வந்து மடியும்.

வேதனைதான்

இருந்தாலும்

சொல்லவேண்டியதை சொல்லாமல் இருத்தல் ஆகாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.