Jump to content

புதினம் இணையம்


Recommended Posts

puthinamhz7.jpg

ஆரம்ப காலம் தொட்டு ஈழச்செய்திகளை சுடச்சுட படங்களோடு தத்துரூபமாக வெளியிட்டு வந்த புதினம் இணையம் இப்பொழுது அப்படி இல்லை போல் தெரிகின்றது. மிகவும் பழைய செய்திகளையே நாட்கள் கடந்தும் பார்க்ககூடியதாய் உள்ளது. இப்பொழுது தமிழ் வின் இணையம் செய்திகளை வெளியிடுவது போல் தான் அன்று புதினம் இருந்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை....

Link to comment
Share on other sites

puthinamhz7.jpg

ஆரம்ப காலம் தொட்டு ஈழச்செய்திகளை சுடச்சுட படங்களோடு தத்துரூபமாக வெளியிட்டு வந்த புதினம் இணையம் இப்பொழுது அப்படி இல்லை போல் தெரிகின்றது. மிகவும் பழைய செய்திகளையே நாட்கள் கடந்தும் பார்க்ககூடியதாய் உள்ளது. இப்பொழுது தமிழ் வின் இணையம் செய்திகளை வெளியிடுவது போல் தான் அன்று புதினம் இருந்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை....

ஏனெனில்... தமிழ் தேசியவாதம், தமிழ் குறும் தேசியமாக மாறுதலை கண்டு கொள்ளாமல், அது இன்னொரு இனவாதமாக உருப்பெடுப்பதனை எதிர்வு கொள்ளாமல் இருந்தமையால்.

... இவற்றினை புரிந்து புலிகளின் தலைமை நடக்கும் போதும் அதற்கு ஏற்றபோல் தம்மை மாற்றிக் கொள்ள முடியாமல் போனதாலும்... அச் சொட்டாக சொல்வதனால், பலரின் + உங்களினதும் "ஸ்கோர் பசியினை" தீர்க்க முடியாமல் போனதாலும் அப்படி தெரிகின்றது

...எதுக்கும் தமிழ் நெட்டிஉன் அண்மைய செய்திகளை புரிந்து கொள்ள பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வின் போல் புதினம் செய்திகளை ஓடி ஓடி எல்லாத்தளங்களிலும் பிரதி செய்யாமையாலும் தாயகத்தில் தமக்கான செய்தியாளர்களைக் கொண்டிருந்தமையாலும், இன்றும் செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதாலும் அவர்களின் செய்தி தாமதாமாக வருகின்றது. தமழ் வின், மற்றும் புதிதாய் முளைத்த பல தளங்கள் சிறிலங்கா அரசை மிஞ்சிய புளுகு செய்திகளை கொண்டு வருவதை நீங்கள் அவதானிக்க வில்லை என்று நினைக்கின்றேன்.

ஆனாலும் தமிழ் வின் ஒரு வியாபாரம் நோக்கம் கொண்ட தனிநபர் இணையத்தளம் என்பதையும், புதினம் செய்திச் சேவையை ஓரு சேவையாக வழங்கும் ஒரு பொது ஊடகம் என்பதையும் கவனத்தில் கொள்க..!

அதனடிப்படையில் தனது இணையத்தளத்தில் வளர்ச்சிக்கா, அல்லது அதன் பார்வையாளர்கள் வரவை அதிகரிப்பதற்காக, செய்திகளை பிரதி செய்தி போடுதல் என்பது தமிழ் வின்னைப் பொறுத்தரை இன்றி அமையாதது. ஆனால் புதினம் அப்படியல்ல...!

Link to comment
Share on other sites

அச் சொட்டாக சொல்வதனால், பலரின் + உங்களினதும் "ஸ்கோர் பசியினை" தீர்க்க முடியாமல் போனதாலும் அப்படி தெரிகின்றது

இது சொல்ல தானா வந்தீங்கள். சரி :D:D:D

Link to comment
Share on other sites

தமிழ் வின் போல் புதினம் செய்திகளை ஓடி ஓடி எல்லாத்தளங்களிலும் பிரதி செய்யாமையாலும் தாயகத்தில் தமக்கான செய்தியாளர்களைக் கொண்டிருந்தமையாலும், இன்றும் செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதாலும் அவர்களின் செய்தி தாமதாமாக வருகின்றது. தமழ் வின், மற்றும் புதிதாய் முளைத்த பல தளங்கள் சிறிலங்கா அரசை மிஞ்சிய புளுகு செய்திகளை கொண்டு வருவதை நீங்கள் அவதானிக்க வில்லை என்று நினைக்கின்றேன்.

ஆனாலும் தமிழ் வின் ஒரு வியாபாரம் நோக்கம் கொண்ட தனிநபர் இணையத்தளம் என்பதையும், புதினம் செய்திச் சேவையை ஓரு சேவையாக வழங்கும் ஒரு பொது ஊடகம் என்பதையும் கவனத்தில் கொள்க..!

அதனடிப்படையில் தனது இணையத்தளத்தில் வளர்ச்சிக்கா, அல்லது அதன் பார்வையாளர்கள் வரவை அதிகரிப்பதற்காக, செய்திகளை பிரதி செய்தி போடுதல் என்பது தமிழ் வின்னைப் பொறுத்தரை இன்றி அமையாதது. ஆனால் புதினம் அப்படியல்ல...!

சரியாகச் சொன்னீர்கள்.

இன்றுவரை புதினம் சரியாகச் செய்திகளைத் தர வேண்டுமென்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றது. சில செய்தி ஊடகங்கள் போல் தம்மைப் பிரபலப்படுத்த மட்டும் பரபரப்பாக செய்திகளை தருவதுமில்லை. இது ஒரு ஊடகத்தருமமும் கூட. அது போல் புலத்தில் பல ஊடகங்களும் இன்றுவரை புதினத்தின் செய்திகளையே தமது செய்திகளாக்குகின்றாார்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் தளங்களிலிலேயே புதினம் தனித்துவமாக செய்திகளைத் தருகிறது என்பது 100 வீதம் உண்மையே. மற்றைய எந்தத் தளத்திலிருந்தும் செய்திகளை பிரதி பண்ணாமல் தனித்துவமாக செய்திகளை எழுத்துப்பிழை கருத்துப்பிழைகளின்றி வழங்குகிறார்கள்.

ஆனால் அண்மைய நாட்களில் புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது நேரம் கடந்தாகவே இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் எந்த புதிய செய்தியும் பதியப்பட்டதாகத் தெரியவில்லை. புதினம் தொடர்ந்து இப்படி தாமதமாக செய்திகளைப் பதிவு செய்வது ஊடக அறிவே இல்லாதவர்களினால் *** நடத்தப்படும் தளங்களை வளர்க்க உதவியாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் இணையத்தளத்துக்கு செய்திகள் அனுப்புபவர்களில் சிலர் இராணுவக் கட்டுப்பாட்டுள்ள பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். இராணுவத்தினாலும், ஒட்டுப்படைகளினாலும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மத்தியில் செய்திகள் வெளியிடுகிறார்கள். அத்துடன் செய்திகள் உண்மையா என்று உறுதிப்படுத்தியபின்பு செய்திகளைப் புதினம் தருகிறது. இதனால் செய்திகள் வருவதில் நேரம் ஏற்படுகிறது. தாங்கள் வழங்கிய செய்திகளில் சில தவறுகள் ஏற்பட்டால் புதினம் அச்செய்தியில் திருத்தம் என்ற அறிவித்தலுடன் செய்திகளை மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ஆனால் மற்றைய சில ஊடகங்கள் தவறுகள் விட்டால் திருத்தம் என்ற அறிவித்தலை வெளியிடுவதில்லை. தமிழ்வின் இணையத்தளத்தில் வரும் சில செய்திகள் புதினத்தில் வரும் செய்திகளை ஒரு எழுத்தும் மாறாமல் அப்படியே பிரதி பண்ணி வெளியிட்டும் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது...

எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கப் போகிறது...

ஆத்தா சொன்னா நடக்கும்... :D:D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.