Jump to content

புதினம் இணையம்


Recommended Posts

puthinamhz7.jpg

ஆரம்ப காலம் தொட்டு ஈழச்செய்திகளை சுடச்சுட படங்களோடு தத்துரூபமாக வெளியிட்டு வந்த புதினம் இணையம் இப்பொழுது அப்படி இல்லை போல் தெரிகின்றது. மிகவும் பழைய செய்திகளையே நாட்கள் கடந்தும் பார்க்ககூடியதாய் உள்ளது. இப்பொழுது தமிழ் வின் இணையம் செய்திகளை வெளியிடுவது போல் தான் அன்று புதினம் இருந்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை....

Link to comment
Share on other sites

puthinamhz7.jpg

ஆரம்ப காலம் தொட்டு ஈழச்செய்திகளை சுடச்சுட படங்களோடு தத்துரூபமாக வெளியிட்டு வந்த புதினம் இணையம் இப்பொழுது அப்படி இல்லை போல் தெரிகின்றது. மிகவும் பழைய செய்திகளையே நாட்கள் கடந்தும் பார்க்ககூடியதாய் உள்ளது. இப்பொழுது தமிழ் வின் இணையம் செய்திகளை வெளியிடுவது போல் தான் அன்று புதினம் இருந்தது. ஏன் இப்படி என்று தெரியவில்லை....

ஏனெனில்... தமிழ் தேசியவாதம், தமிழ் குறும் தேசியமாக மாறுதலை கண்டு கொள்ளாமல், அது இன்னொரு இனவாதமாக உருப்பெடுப்பதனை எதிர்வு கொள்ளாமல் இருந்தமையால்.

... இவற்றினை புரிந்து புலிகளின் தலைமை நடக்கும் போதும் அதற்கு ஏற்றபோல் தம்மை மாற்றிக் கொள்ள முடியாமல் போனதாலும்... அச் சொட்டாக சொல்வதனால், பலரின் + உங்களினதும் "ஸ்கோர் பசியினை" தீர்க்க முடியாமல் போனதாலும் அப்படி தெரிகின்றது

...எதுக்கும் தமிழ் நெட்டிஉன் அண்மைய செய்திகளை புரிந்து கொள்ள பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வின் போல் புதினம் செய்திகளை ஓடி ஓடி எல்லாத்தளங்களிலும் பிரதி செய்யாமையாலும் தாயகத்தில் தமக்கான செய்தியாளர்களைக் கொண்டிருந்தமையாலும், இன்றும் செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதாலும் அவர்களின் செய்தி தாமதாமாக வருகின்றது. தமழ் வின், மற்றும் புதிதாய் முளைத்த பல தளங்கள் சிறிலங்கா அரசை மிஞ்சிய புளுகு செய்திகளை கொண்டு வருவதை நீங்கள் அவதானிக்க வில்லை என்று நினைக்கின்றேன்.

ஆனாலும் தமிழ் வின் ஒரு வியாபாரம் நோக்கம் கொண்ட தனிநபர் இணையத்தளம் என்பதையும், புதினம் செய்திச் சேவையை ஓரு சேவையாக வழங்கும் ஒரு பொது ஊடகம் என்பதையும் கவனத்தில் கொள்க..!

அதனடிப்படையில் தனது இணையத்தளத்தில் வளர்ச்சிக்கா, அல்லது அதன் பார்வையாளர்கள் வரவை அதிகரிப்பதற்காக, செய்திகளை பிரதி செய்தி போடுதல் என்பது தமிழ் வின்னைப் பொறுத்தரை இன்றி அமையாதது. ஆனால் புதினம் அப்படியல்ல...!

Link to comment
Share on other sites

அச் சொட்டாக சொல்வதனால், பலரின் + உங்களினதும் "ஸ்கோர் பசியினை" தீர்க்க முடியாமல் போனதாலும் அப்படி தெரிகின்றது

இது சொல்ல தானா வந்தீங்கள். சரி :D:D:D

Link to comment
Share on other sites

தமிழ் வின் போல் புதினம் செய்திகளை ஓடி ஓடி எல்லாத்தளங்களிலும் பிரதி செய்யாமையாலும் தாயகத்தில் தமக்கான செய்தியாளர்களைக் கொண்டிருந்தமையாலும், இன்றும் செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதாலும் அவர்களின் செய்தி தாமதாமாக வருகின்றது. தமழ் வின், மற்றும் புதிதாய் முளைத்த பல தளங்கள் சிறிலங்கா அரசை மிஞ்சிய புளுகு செய்திகளை கொண்டு வருவதை நீங்கள் அவதானிக்க வில்லை என்று நினைக்கின்றேன்.

ஆனாலும் தமிழ் வின் ஒரு வியாபாரம் நோக்கம் கொண்ட தனிநபர் இணையத்தளம் என்பதையும், புதினம் செய்திச் சேவையை ஓரு சேவையாக வழங்கும் ஒரு பொது ஊடகம் என்பதையும் கவனத்தில் கொள்க..!

அதனடிப்படையில் தனது இணையத்தளத்தில் வளர்ச்சிக்கா, அல்லது அதன் பார்வையாளர்கள் வரவை அதிகரிப்பதற்காக, செய்திகளை பிரதி செய்தி போடுதல் என்பது தமிழ் வின்னைப் பொறுத்தரை இன்றி அமையாதது. ஆனால் புதினம் அப்படியல்ல...!

சரியாகச் சொன்னீர்கள்.

இன்றுவரை புதினம் சரியாகச் செய்திகளைத் தர வேண்டுமென்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றது. சில செய்தி ஊடகங்கள் போல் தம்மைப் பிரபலப்படுத்த மட்டும் பரபரப்பாக செய்திகளை தருவதுமில்லை. இது ஒரு ஊடகத்தருமமும் கூட. அது போல் புலத்தில் பல ஊடகங்களும் இன்றுவரை புதினத்தின் செய்திகளையே தமது செய்திகளாக்குகின்றாார்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் தளங்களிலிலேயே புதினம் தனித்துவமாக செய்திகளைத் தருகிறது என்பது 100 வீதம் உண்மையே. மற்றைய எந்தத் தளத்திலிருந்தும் செய்திகளை பிரதி பண்ணாமல் தனித்துவமாக செய்திகளை எழுத்துப்பிழை கருத்துப்பிழைகளின்றி வழங்குகிறார்கள்.

ஆனால் அண்மைய நாட்களில் புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது நேரம் கடந்தாகவே இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் எந்த புதிய செய்தியும் பதியப்பட்டதாகத் தெரியவில்லை. புதினம் தொடர்ந்து இப்படி தாமதமாக செய்திகளைப் பதிவு செய்வது ஊடக அறிவே இல்லாதவர்களினால் *** நடத்தப்படும் தளங்களை வளர்க்க உதவியாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் இணையத்தளத்துக்கு செய்திகள் அனுப்புபவர்களில் சிலர் இராணுவக் கட்டுப்பாட்டுள்ள பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். இராணுவத்தினாலும், ஒட்டுப்படைகளினாலும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மத்தியில் செய்திகள் வெளியிடுகிறார்கள். அத்துடன் செய்திகள் உண்மையா என்று உறுதிப்படுத்தியபின்பு செய்திகளைப் புதினம் தருகிறது. இதனால் செய்திகள் வருவதில் நேரம் ஏற்படுகிறது. தாங்கள் வழங்கிய செய்திகளில் சில தவறுகள் ஏற்பட்டால் புதினம் அச்செய்தியில் திருத்தம் என்ற அறிவித்தலுடன் செய்திகளை மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ஆனால் மற்றைய சில ஊடகங்கள் தவறுகள் விட்டால் திருத்தம் என்ற அறிவித்தலை வெளியிடுவதில்லை. தமிழ்வின் இணையத்தளத்தில் வரும் சில செய்திகள் புதினத்தில் வரும் செய்திகளை ஒரு எழுத்தும் மாறாமல் அப்படியே பிரதி பண்ணி வெளியிட்டும் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது...

எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கப் போகிறது...

ஆத்தா சொன்னா நடக்கும்... :D:D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.