Jump to content

யாழ் ஜம்முபேபியின் (ஜமுனா) காணொளி


Recommended Posts

வணக்கம் ஜமுனா ..வாழ்த்துக்கள்... நல்லாயிருக்கு ...

நானும் எனது வீடியோ புளக்கில் இணைத்திருக்கிறேன்..ஆனால் என்ன பிரச்சனை என்றால் உந்த மெகா வீடியோவில் பார்க்கிறதுக்குள்ளை உயிர் மேலை போய் கீழே வந்துட்டுது ..

என்னாலும் கானொளியைச் சென்றடைய முடியவில்லை.

இருந்தபோதும் கனகாலத்துக்குப்பின் உங்களைப் பார்த்ததில் மிகச் சந்தோஷம்.

கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். :D

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா ........ முரளி ,

ஒரு நல்ல படம் பார்த்தது போல் உள்ளது ,

உங்களிடம் இவ்வளவு திறைமையா என்று வியந்து போனேன் .

யாழ் களத்தில் உள்ளவர்களை நினைவு வைத்து பதிவது எல்லோராலும் சாத்தியப்படாது .

" அடிக்கின்ற கை தான் அணைக்கும் " என்கின்ற பழமொழிக்கேற்ப எனது ஜம்மு பேபியின் 20,000 பதிவுகளை , புதிய முறையில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். :D

அவன் எல்லாம் நல்லவடிவாய்த்தான் செய்தவன் பாக்கிற ஆக்களுக்கு மாலைக்கண் இல்லாட்டி அவையின்ரை கொம்பியூட்டரிலை வேறை சிஸ்ரம் எண்டால் அவன் பாவி என்ன செய்யுறது? :)

எதுக்கெடுத்தாலும் அந்த சின்னனை குறை சொல்லாட்டி உங்கை ஒருத்தருக்கும் விடியாது போல கிடக்கு. :D

டேய் செல்லம்! நீ வாடா என்ரை செல்லம் போச்சியிலை பால் கிடக்கு எடுத்து குடியடா உச்..உச்..உச்....உச்... :D

Link to comment
Share on other sites

எங்களுக்கு எத்தின ஆயிரம் பஞ்சுகள் சொல்லி இருப்பார். அவருக்கு ஒரு பஞ்சை திருப்பிக்குடுக்க விடுறீங்கள் இல்லை கு.சா அண்ணா. :D அதுசரி... எனக்கும் கொஞ்ச பாப்பா கிடைக்குமோ? உண்மையில நான் பாப்பா தானுங்கோ வீட்டில குடிக்கிறது. தேத்தா குடிக்கிறது இல்லை.

பி/கு: போச்சியில பால் குடுக்கிறன் எண்டு சொல்லிப்போட்டு குஞ்சுகுருமாண்களுக்கு மப்பில நீங்கள் குடிக்கிற மற்றப்பாலை ஊத்திக்குடுத்து போடாதிங்கோ. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே 18 நிமிடமென்றால் உருவாக்க எவ்வளவு நேரமோ?

பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

முரளியின் தயவில் இப்பதான் இந்த வீடியோவைப் பார்த்தன்.. அசத்திட்டாரு யம்மு பேபி! அதை உங்க கொண்டந்து உசத்திட்டாரு முரளி!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் இப்பதான் மாப்பின் புண்ணியத்தில பார்த்தேன்.பேரான்டி நல்லாத்தான் மினைக்கெட்டு இருக்கிறார்.அதுக்கு வாழத்துக்களும்,என்னையும் நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றிகளும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு, உங்கட "குரு"வின் புண்ணியத்தில் தான் இந்தக்காணொளியைக் கண்ணாரக்கண்டு மகிழ்ந்தேன்..

உண்மையில் மனதை நெகிழச்செய்துவிட்டது. உறவுகள் கிடைப்பது அரிதல்ல ஆனால் அது ஆயுள் வரை தொடர்வதே அரிது"....தொடரட்டும் நல்ல உறவுகளின் அன்பும் ஆசியும் எப்போதும் நம்மை உயர்த்தும்.

'ஆனாலும் பாருங்கோ ஜம்மு,

எதிர்பார்திரு" எண்டு ஒரு "த்"ஐ விட்டுப்போட்டீங்கள். ** எதிர்பார்த்திரு** என்றுதான் வரவேண்டும்.எழுத்து

ப்பிழைவிட்டால் தான் அது 'ஜம்மு" என்று நினைப்பினம் எனும் காரணமோ?

வாழ்த்துகள் ஜம்மு.

முரளி நன்றி.

Link to comment
Share on other sites

அட அட இது எண்ட ஒரு புண்ணியமும் இல்லை. யமுனாவிண்ட புண்ணியம்தான் பாருங்கோ. அழகான காணொளி ஒண்டை யாழுக்காக செய்து இருந்தார். பலர் இதைப்பார்த்து இருக்க சந்தப்பம் கிடைச்சு இருக்காது எண்டு அவர் ஆரம்பிச்ச கருத்தாடலில எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சபோது விளங்கிச்சிது. அதனால நான் திரும்பவும் அந்தக்காணொளியை சிட்னியில இருந்து தூக்கிஏத்தி டொரண்டோவுக்கு கொண்டு வந்து இறக்கி, சரிசெய்துபோட்டு, பிறகு திருப்பி சிட்னியில கவனமாய் கொண்டுபோய் இறக்கிவிட்டு இருக்கிறன். பார்க்கிற எல்லாரும் பாராட்டுக்கள் சொல்லிறதோட மட்டும் நிக்காமல் சிட்னி முருகன் கோயில் உண்டியலில உங்கட காணிக்கைகளை போட்டுட்டு போங்கோ. :)

நான் இன்னமும் கலியாணம் செய்யாத சின்னப்பெடியன். என்னை அங்கிள் எண்டு கூப்பிட்டால் யாருட்டப்போய் சொல்லி அழுவுறது? அழகிய காணொளியை யாழுக்காக மினக்கட்டுச் செய்த யமுனாவுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜம்மு. நல்ல ஒரு காணொளியை உருவாக்கியிருக்கிறீர்கள். அழகான ஒரு பூங்காவை சுற்றிப் பார்த்தது போன்ற களிப்பை ஏற்படுத்தினீர்கள். முரளிக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

நன்றி மல்லிகைவாசம். மொத்தமாய் இந்தகாணொளி 888 தடவைகள் இதுக்கால பார்க்கப்பட்டு இருப்பதாக தெரியுது. ஒருத்தர் பல தடவைகள் பார்த்து இருந்தாலும் ஆகக்குறைஞ்சது ஒரு 500 வேற வேற ஆக்கள் இதைப்பார்த்து இருப்பீனம் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.