Jump to content

தமிழீழம் தான் நம் கனவு.......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் தான் நம் கனவு...

சிறு கதை....

சாந்தி சரியாக் கேளுங்கோ...இதில எல்லாம் ஆயத்தம் உங்கட உடுப்பு எல்லாம் சரிதானே.. விடிய முதல் இதால வருவினம். அண்ணை சொல்லிவிட்டது ஞாபகமிருக்குத்தானே....? வந்தினமெண்டா விடாம கவனிப்பம்..சரியோ..! குழப்பமில்லை தானே

''ஒன்றும் குழப்பமில்லை பயப்படாதேங்கோ... நான் அவர் வளர்த்த ஆளல்ல...எனக்கு பத்து போனாலும் மற்றவருக்கு ஒன்று என்றாலும் போகவேணும் என்ற பொலிசியெல்லாம் எனக்கில்லை...! என்னக்கு ஒன்று போனாலும் மற்றவருக்கு பத்துப் போகவைப்பன் என்ர வளர்ப்பு அப்படி ...தெரியுமல்ல....'' சொல்லி முடித்தாள் சாந்தி.

''அண்ணையும் பாவம் தானே எங்கள் எல்லாருக்காகவும் இத்தனை வருடமா கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார்தானே.. அவரோட பாக்கேகை இதெல்லாம்...! நேற்று அவரோட சாப்பிடேக்க அவர் கண்கலங்கியதை பார்த்தனீங்களே..?

''ஓமோம் பாவம் அண்ணை.. எனக்கு என்ன சொல்லுறதென்று தெரியல்ல.... ! அண்ணை சொல்லிவிட்டது தவறாம செய்து காட்டவேணும்'' என சாந்தி கேட்க..

'' நல்லா ஞாபகமிருக்கு.... சரி வாகனத்தை ஸ்ராட் பண்னுங்கோ...தூரத்திலே வெளிச்சம் தெரியுது பாருங்கோ...'' என்றான் வசந்தன்.

அவர்களின் வாகனம் வேகம் பிடித்து அதிவேகமாகப் புறப்படத்தொடங்கியது. சரி கிட்ட வந்திட்டம் அவங்களும் கவனிக்கேல்லை.. அப்படியே பின் பக்கமாய் போங்கோ..என்று சாந்தி சொல்லவும்... சரி இப்படியே போவம் எனச்சொல்லிவிட்டு வசந்தன் சாந்தி சொன்ன வழியே போகவும்...

'' அது சரி இவைக்கு எங்கட இடத்தில என்ன வேலை...இண்டைக்கு குடுக்கிற குளிசேல இந்தப் பக்கம் இனிமேல் வர மாட்டாங்கள்...என்ன வசந்தன் ..'' என சாந்தி கேட்கவும்...

''இரண்டிலையும் ஒரு இருபத்தைஞ்சு முப்பது வரும் போல.. நல்ல அடியாத்தான் இருக்கப் போது.. அதுசரி வரேக்க வீட்ட சொன்னனீங்களே...?..'' என வசந்தன் கேட்கவும்..

''இல்ல நேர சொல்லேல்ல கடிதம் கொடுத்தனான் எங்கட அலுவல் முடிந்ததும் கிருபாண்ண கொண்டே குடுப்பார்.....'' என்று சாந்தி சொல்லிவிட்டு சரி வந்திட்டம்... இந்தக் கோணத்தில போய் அடிப்பம்.அப்பத்தான் இதுவும் முழுசாப் போய் மற்றதும் அடிபடும்...'' என்றாள் சாந்தி.

'' சரி பெரிய விஞ்ஞானிதான் ஆனா ஒரு கண்டுபிடிப்போட முடியப் போகுது....'' என்று வசந்தன் பகிடியாய் சொல்லிவிட்டு சிரிக்கவும் முகத்திலே வெக்கம் வந்தவளாக...'' சரி அடிவாங்கப் போறியள் ..'' என்று சாந்தி சொல்லிவிட்டு.. சரி வசந்தன் ஒண்டாவே வந்தோம் ஆனா போகேக்க மாத்திரம் தனியப் போகவேண்டியிருக்கு எங்கட கயில் ஒண்டுமில்ல தானே அது இயற்கையின் நியதி எனவும்....

'' சரி.... சரி....என்ன ஒரே தத்துவமாய் இருக்கு.... சாந்தி நீ புத்தகம் எழுதலாம்...அனா படிக்கத்தான் ஆக்கள் இருக்க மாட்டினம்'' என்று அவளை இறுதியாய் சீண்டிவிடட்டான் வசந்தன்.

கண்ணிலிருந்து ஒரு துளி நீரை அரைப் பூன்முறுவலுடன் பதிலாக்கிய சாந்தி.....

''சரி அவங்கள் பாத்திட்டாங்கள் போல கிடக்கு அவங்கள் ஆயத்தம் பண்ணமுதல் கெதியண்டு போ...''என்று சாந்தி சொல்லவும்.....

கடற்படை எதிர்பாராத நேரத்தில் ''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்...'' என்று இருவரும் சொல்லிய வண்ணம் அவர்கள் வந்த வாகனம்...ஆம் அந்தக் கரும்புலிப் படகு டோறாவை மோதவும் கடலே அதிர்ந்த வெடிச்சத்தத்துடன் அவர்கள் படகு வெடித்து வசந்தனின் அந்த இறுதிச் சிரிப்பும், சாந்தியின் இறுதி கண்ணீருடன் கூடிய புன்னகையுமாய் கடலிலே எரிந்து கருகிப் போயின அந்த இரு கறுப்பு ரோஜாக்களும்.

ஒரு டொறா உடனேயே தாழ அதற்குப் பக்கத்தில் வந்த டோறாவும் பலத்த சேதமுற்று மெல்ல மெல்ல தாழத்தொடங்கியது....

ஈழத்தின் விடியலுக்காய் சரித்திரத்தில் இரத்தத்தால் எழுத்தப்பட்ட இன்னொரு பக்கம் புரட்டப்பட்டதற்கு அஞ்சலி செலுத்துவதைப் போலவும் அவர்களுக்காக அழுது கண்ணெல்லாம் சிவந்ததைப் போல சூரியனும் கண்கள் சிவந்தபடி அடிவானத்தை எட்டிப் பார்த்தான்.

பல கடற்படையினரைக் கொன்ற அந்த இரு கரும்புலிகளும் தாங்களாகவே எரிந்து தாங்களாகவே கடலில் கரைந்த வீர காவியமொன்று மீண்டும் இந்த தாய் மண்ணிற்காக நம் கடற்பரப்பில் நிகழ்ந்தேறியதை கேள்விப்பட்ட அனைத்துத் தமிழ் மனங்களும் அவர்களின் வீரச் சாவுக்காக தங்கள் கண்ணீர்ப் பூக்களை அஞ்சலியாய் செலுத்திக் கொண்டனர்.

ஈழத்தின் கடற்பரப்புக்கு எதிரி இனிமேல் வர யோசிக்க வைக்கும் அந்தத் தாக்குதல் அமைந்து விட்டது. இங்கே வீர காவியமான அந்த கருப்பு ரோஜாக்களுக்கு தலைவரும் தன் அஞ்சலியை செலுத்துவதை பார்த்த தமிழீழ மக்கள்...

தலைவரே ... எந்த லட்சியத்துக்காக தங்கள் உயிரை இவர்கள் தந்தார்களோ அதே லட்சியத்தை நாம் அடையும் வரை உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என்று உறுதி மொழியெடுத்துக் கொண்டனர்....

இளங்கவி

குறிப்பு: எங்கள் நாட்டுக்காக உயிர் தியாகங்கள் பண்ணிக்கொண்டிருக்கும் கரும்புலிகளையும், எங்கள் தமிழீழ கடற்பரப்பில் நடந்து முடிந்துவிட்ட கரும்புலித் தாக்குதல்களையும் நினைவில் கொண்டு எனது கற்பனையை கதையாக்கியிருக்கிறேன். பெயர்கள் யாவும் கற்பனையே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் தான் நம் கனவு...

அருமை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிருஜாவுக்கு

கதையைப் படித்ததற்கு மிக்க நன்றி....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கவி

அருமை.. இப்படியான கவிதைகள் இன்னும் எழுதுங்கள் வாசிக்க ஆர்வமா இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சிறிது என்றாலும் காரம் .........இல்லை சாரம் மிக நன்று. மேலும் தொடர வாழ்த்துக்கள் . அக்கா நிலாமதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kuddipaiyan26

மிக்க நன்றி கதையை வாசித்து கருத்துச் சொன்னதற்கு....

நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களெல்லாம் தாய் நாடு சம்மந்தமான கதைகளையோ இல்லை கவிதைகளையோ நிச்சயம் தருவேன்....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

கதையைப் படித்து வாழ்த்துச் சொன்னதற்கு மிக்க நன்றிகள்....

கிடைத்த கொஞ்ச நேரத்துக்குள் என்னால் எழுத முடிந்த கதை.....

மீண்டும் நன்றிகள் அக்காவுக்கு....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அவர்களே,

இது 'கதை அல்ல காவியம், தினம் தினம் விடுதலைக்காற்றுக்காக தம் மூச்சையே ஆகுதியாக்கும் அற்புதப்பிறவிகளை பெற்ற தேசத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் வரலாறு.

தேசத்தின் உணர்வுமிக்க படைப்புக்காக 'நன்றியொடு வாழ்த்துகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilthangai

நாட்டுக்காக தினம் தினம் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தியாகச் சுடர்களின் தியாகங்களுக்கு எதுவுமே ஈடுணையாக முடியாது. அந்தத் தியாகமென்னும் பெருங்கடலில் ஒரு துளியை கருவாக்கி யாழ் வாசகர்களுக்காக தந்துள்ளேன்.

மேலும் உங்களின் நன்றிக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்....

இளங்கவி

Link to comment
Share on other sites

இளங்கவி உங்கள் கற்பனை கடலிலே நடந்ததை நிஜமாக காட்டியது.

இது கற்பனையல்ல, காவியங்களின் கதை.

கடலிலும் தரையிலும் ஏன் வானிலும் காவியங்கள் படைக்கும் இவர்களுக்கு நாம் செய்யப்போவதுதான் என்னவோ....

நன்றி இளங்கவி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகனுக்கு

எங்கள் மண்ணில் தினம் தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தியாகங்களுக்கு எதுவுமே ஈடில்லைத்தான் இருந்தாலும் அவர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் எல்லோரும் எங்கள் விடுதலையை வென்றெடுக்கும் போரில் ஒன்றுபட்டு செயற்படுவதே இன்றைய எமது கடமையாகும்....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

இளங்கவி

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி. தொடருங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

millikai vaasam

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

இளங்கவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.