Jump to content

நயன்தாராவுக்கும் கோயில் ? !


Recommended Posts

மல்லிகைவாசம்,

முன்னோர்களும் கண்ணால் கண்டதைத்தான் கடவுள் ஆக்கினார்கள். காட்டிலே யானையைக் கண்டார்கள். அது மிகப் பலமாக இருந்தது. எமது முன்னோர்களை அச்சமுள்ளாக்குவதாக இருந்தது. அவர்களின் சக்தியை கடந்து யானை இருந்தது.

அதைக் கடவுள் ஆக்கினார்கள். யானையை அடக்கத் தெரிந்த பின்பும் இன்றுவரை யானை பிள்ளையாராக கடவுள் என்று இருக்கின்றது.

நெருப்பைக் கண்டார்கள். அச்சமுற்றார்கள். எப்படி நெருப்பு உருவாகின்றது என்பது புரியவில்லை. புரிந்த பின்பும் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த அவர்களால் நெருப்பு இல்லாமல் அவர்களால் வாழ முடியவில்லை. நெருப்பு அவர்களின் சக்தியை கடந்த ஒன்றாய், கூடவே வருகின்ற ஒன்றாய் இருந்தது.

நெருப்பு கடவுள் ஆனது. நெருப்பைத்தான் இன்று வரை மந்திரங்களில் பூசிக்கின்றார்கள்.

காற்றைக் கண்டான், மழையைக் கண்டான், தன்னுடைய சக்தியை கடந்து நின்ற எல்லாவற்றையும் மனிதன் கடவுள் ஆக்கினான்.

சிலர் கடவுள் தமக்காக உருவாக்கிய சிறுதெய்வங்கள் இவைகள் என்று நம்பி வழிபட்டார்கள்.

இப்பொழுது சிலருக்கு நயன்தாரா ஏற்படுத்துகின்ற தாக்கம் எல்லாவற்றையும் கடந்ததாக இருக்கின்றது. சிலருக்கு நமீதா ஏற்படுத்துகின்ற தாக்கம் அப்படி இருக்கின்றது.

இவர்களுக்கு நயன்தாராவும், நமீதாவும் கடவுளாகவோ அல்லது, கடவுளால் தமக்காக படைக்கப்பட்ட சிறுதெய்வங்களாகவோ தெரிகின்றன.

இந்த நம்பிக்கையில் இவர்கள் கோயிலைக் கட்டி நயன்தாரா அம்மனையும் நமீதா அம்மனையும் வழிபடுகின்றார்கள்.

அதாவது முன்னோர்கள் என்ன காரணத்திற்காக கண்டதற்கு எல்லாம் கோயில் கட்டினார்களோ, அதே காரணத்திற்காகத்தான் இன்றைக்கு சிலர் தாம் கண்ட நயன்தாரவிற்கு கோயில் கட்டுகிறார்கள்.

இதில் இரு தரப்பிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

கடவுளை மனித உருவில் வழிபட.. ஜேசுவாக...மேரியாக.. நபியாக..வழிபட உரிமை இருக்கிறது.

மனிதனை மனிதன் வழிபடுபவது கேவலமானது மட்டுமன்றி..

:D:D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை மனித உருவில் வழிபடுவது அல்லது இயற்கையின் உருவில் வழிபடுவது என்பது வேறு..

மனிதனை மனிதன் வழிபடுவது என்பது வேறு...! அது மனித ஏற்றுத்தாழ்வுக்குரியது.

ஜேசு.. நபி.. கிருஷ்ணன் போன்ற கடவுளின் மனித வடிவங்களாக போற்றப்படுபவர்களும்.. ஒரு சினிமா நடிகையின் கவர்ச்சிக்காக அவரை கவர்ச்சி வழிபாடு செய்வதும் ஒன்றல்ல..!

மனித வடிவில் இறைதூதர்கள் மனித இனத்தின் உய்வுக்காக வந்ததாகச் சொல்லப்படுபவர்கள். நயனதாரா இளைய மனங்களின் தொய்வுக்காக ஆடைக்குறைப்புச் செய்பவர்.

எனவே கடவுளை மனித உருவில் வடிபடுவென்பது.. மனிதனை மனிதன் வழிபடுவதற்கு ஒப்பானதல்ல. கடவுள் மனித உருவில் இருப்பினும் அவரிடம் மனித இனத்தின் உய்வுக்கான நன் நடத்தைகள் காண்பிக்கப்படுகின்றன.

அதுதான் அயனுக்கு நயனுக்கும் உள்ள வேறுபாடு. கடவுளை மனித உருவில் வழிபடுவதற்கும் மனிதனை மனிதன் வழிபடுவதற்கும் உள்ள வேறுபாடு..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது முன்னோர்கள் என்ன காரணத்திற்காக கண்டதற்கு எல்லாம் கோயில் கட்டினார்களோ, அதே காரணத்திற்காகத்தான் இன்றைக்கு சிலர் தாம் கண்ட நயன்தாரவிற்கு கோயில் கட்டுகிறார்கள்.

***

நடிகையின் கவர்ச்சி விளங்க முடியாத அற்புதம் என்று நினைக்கிறவன்.. இயற்கையில் மனிதன் விளங்க முடியாதிருக்கும் விடயத்தில் கடவுளை வரையறுப்பவனை விட மோசமான முட்டாள்..! அதுதான் இங்குள்ள வேறுபாடு

தன்னைத்தானே விளங்கிக் கொண்ட மனிதன்.. சக மனிதனை வழிபடமாட்டான்...! மதிக்க மட்டும் கற்றுக் கொள்வான்..!

அந்த வகையில் நீங்கள் மோசமான முட்டாள்களின் பக்கம்..! :)

Link to comment
Share on other sites

கடவுளை மனித உருவில் வழிபடுவது அல்லது இயற்கையின் உருவில் வழிபடுவது என்பது வேறு..

மனிதனை மனிதன் வழிபடுவது என்பது வேறு...! அது மனித ஏற்றுத்தாழ்வுக்குரியது.

ஜேசு.. நபி.. கிருஷ்ணன் போன்ற கடவுளின் மனித வடிவங்களாக போற்றப்படுபவர்களும்.. ஒரு சினிமா நடிகையின் கவர்ச்சிக்காக அவரை கவர்ச்சி வழிபாடு செய்வதும் ஒன்றல்ல..!

மனித வடிவில் இறைதூதர்கள் மனித இனத்தின் உய்வுக்காக வந்ததாகச் சொல்லப்படுபவர்கள். நயனதாரா இளைய மனங்களின் தொய்வுக்காக ஆடைக்குறைப்புச் செய்பவர்.

எனவே கடவுளை மனித உருவில் வடிபடுவென்பது.. மனிதனை மனிதன் வழிபடுவதற்கு ஒப்பானதல்ல. கடவுள் மனித உருவில் இருப்பினும் அவரிடம் மனித இனத்தின் உய்வுக்கான நன் நடத்தைகள் காண்பிக்கப்படுகின்றன.

அதுதான் அயனுக்கு நயனுக்கும் உள்ள வேறுபாடு. கடவுளை மனித உருவில் வழிபடுவதற்கும் மனிதனை மனிதன் வழிபடுவதற்கும் உள்ள வேறுபாடு..! :)

புனிதமான கடவுளை ஏன் குசு விடும் மலம்/சிறு நீர் கழிக்கும் கேவலாமன மனித வடிவத்தில் வணங்க வேண்டும்?

நயந்தரா ஆடைக் குறைப்புத் தான் செய்கிறார் ஆனால் பல கடவுளர்களின் சிலைகள் ஏன் ஆடையே இல்லாமாலும் சில சிலைகள் மனிதர்களால் மறைக்கப்படும் பிறப்புறுப்பின் வடிவமாகவும் சில சிலைகள் நாக்கைத் தொங்க்கப் போட்ட வண்ணமும் மனித தலையைக் கொய்து கையில் ஏந்திய படியும், இன்னொரு மனிதனுக்கு மேல் காலை வைத்த படியும், ஆயுதங்களைக் கையில் ஏந்திய படியும் இருக்கின்றன?

Link to comment
Share on other sites

வேற்றுமதத்தவர்கள் நயன மதத்தவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் கருத்துகள் எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன் அக்கருத்துக்களை அகற்றாது வேடிக்கை பார்க்கும் யாழ்கள நிர்வாகத்தினரையும் கண்டிக்கிறேன். அநேகமாக நான் ஒதுங்கிக் கொள்ளவேண்டி வரும். :D

முன்னோர் இயற்கையையும், பலமான மிருகங்களையும் கண்டு வெருண்டதுபோல தற்கால ரசிகர்களும் நயனைக் கண்டு மிரண்டு போயுள்ளார்கள். இப்ப கோயில் கட்டிக் கும்பிட்டு சாந்தி செய்வது ஒன்றே அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு. தயவு செய்து வேற்று மதத்தவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் தயவுசெய்து அதை சுட்டிகாட்டுக....???

நாயன்தாரா அல்லது நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது பற்றிய விவாதம்தான் நடக்கின்றது

இல்லாத பொல்லாத அம்மனுக்கெல்லாம் கோவில் இருப்பது நியாயமெனில்.... நாயன் அம்மன் கோவில்காண என்ன குறையுள்ளது என்பதே கேள்வி??? அது பிழையென நீங்கள் கருதின் அதை விளக்முடன் எழுதினால் வாசிப்பவர்கள் சரியா பிழையா எனும் முடிவை எடுக்கலாம். ***

இணையவன் அண்ணா

எனது கருத்தில் நான் யாரையும் புண்படுத்தி எழுதவில்லை. தேவiயில்லா சாடல்கள் குதர்க்கம்மெனப்படும் என்ற கூறியிருந்தேன். துயவனை நான் கண்டிக்கவில்லை அந்த உரிமை எனக்குமில்லை..... ஒரு பக்குவமான கருத்தாடலுக்கு.... ஆரோக்கியமான வாதட்டத்திற்கு வாருங்கள் இல்லையேல் ஒதுங்குங்கள் என்ற பொருள்படவே அதை எழுதியிருந்தேன். இருந்தும் நீங்கள் அதை வெட்டியிருப்தன் காரணம் தெரியவில்லை. களவிதிகளுக்கு எதிரான சொற்பிரயோகம் ஏதும் அதில் இருந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட யாராவது நம்ம காந்திமதிக்கும் ஒரு சின்ன கோவிலா கட்டுங்கோவன் போற வழிக்கு புண்ணியமாப்போகும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையே காப்பற்றிக் கொள்ளத் தெரியாமல் சிலுவையில் அறைபட்ட ஜேசுநாதருக்குக் கோவில் இருக்கின்றபோது, நயன்தாரவிற்குக் கோவில் கட்டுவதில் எவ்வித தவறுமில்லைத் தான்.

இல்லாத, பொல்லாத அம்மன் என்றால் என்ன? எதை அப்படிச் சொல்ல வருகின்றீர்??

துயவன் அண்ணா

நீங்கள் ஜேசுவின் தத்துவத்தை தவறாக புரிந்துள்ளீhகள் என்று நான் நினைக்கிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு...... அதாவது காந்திகாட்டிய அகிம்சையிலும் ஒரு படி உயர்வான ஒரு மௌன மொழியை பின்பற்றுங்கள்.... வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதே அதன்பொருள். அதலால்தான் ஜேசு அத்தனை கொடுமைகளையும் தாங்கினார் தனது தத்துவத்தை வாழவைக்கவே சிலுவையை சுமந்தார். தன்னை காப்பாற்றி கொள்ளத்தெரியாமல் அல்ல..... மரணம் முடிவெனும் போது தற்கொலை செய்திருப்பார். உலகம் புரியவேண்டும் என்பதற்காவே கொடுமைகளிடம் தன்னை கொடுத்தார்.

கண்ட கண்ட அம்மன் என்றால்...

காமாட்சிஅம்மன்..... களியாட்டி அம்மன் அவர்கள்தான். என்ன துயவன் தெரிததுபோல் கேட்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா

எனது கருத்தில் நான் யாரையும் புண்படுத்தி எழுதவில்லை. தேவiயில்லா சாடல்கள் குதர்க்கம்மெனப்படும் என்ற கூறியிருந்தேன். துயவனை நான் கண்டிக்கவில்லை அந்த உரிமை எனக்குமில்லை..... ஒரு பக்குவமான கருத்தாடலுக்கு.... ஆரோக்கியமான வாதட்டத்திற்கு வாருங்கள் இல்லையேல் ஒதுங்குங்கள் என்ற பொருள்படவே அதை எழுதியிருந்தேன். இருந்தும் நீங்கள் அதை வெட்டியிருப்தன் காரணம் தெரியவில்லை. களவிதிகளுக்கு எதிரான சொற்பிரயோகம் ஏதும் அதில் இருந்ததா?

இத்தலைப்பிலும் மன்னிப்புக் கோருகின்றேன் என்று தாஙங்கள் போடாதபடியால் இணையவனுக்கு உம் மீது கோபம்...நான் ஆரோக்கியமான விவாதம் செய்வேனோ, அல்லது குதர்க்கம் கதைப்பேனா என்பது உங்களுக்குத் தேவையில்லை என நினைக்கின்றேன் மருதங்கேணி. ஒதுங்குவதும், ஒதுங்காமல் விடுவதும் என் விருப்பம். நீங்கள் யார் அது பற்றிக் கூற...??

இந்தச் சூழ்நிலையில் நயன்தராவிற்குக் கோவில் கட்டுவது என்பது, ஆக்கபூர்வ விடயம் என்பதாக மருதங்கேணியார் கருதிக் கொண்டிருப்பதன் அர்த்தம் புரியவில்லை. அப்படிக் கோவில் கட்டுவதாக இருந்தால், மேரியாகத் தான் அவர் வரமுடியும் என நினைக்கின்றேன். ஏன் என்றால் நயன்தரா பிறப்பால் கிறிஸ்தவர். அவர் பெயர் டயானா மரியா குரியன்...ஏனவே இதற்குள் அம்மனை இழுப்பதே தவறு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயவன் அண்ணா

நீங்கள் ஜேசுவின் தத்துவத்தை தவறாக புரிந்துள்ளீhகள் என்று நான் நினைக்கிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு...... அதாவது காந்திகாட்டிய அகிம்சையிலும் ஒரு படி உயர்வான ஒரு மௌன மொழியை பின்பற்றுங்கள்.... வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதே அதன்பொருள். அதலால்தான் ஜேசு அத்தனை கொடுமைகளையும் தாங்கினார் தனது தத்துவத்தை வாழவைக்கவே சிலுவையை சுமந்தார். தன்னை காப்பாற்றி கொள்ளத்தெரியாமல் அல்ல..... மரணம் முடிவெனும் போது தற்கொலை செய்திருப்பார். உலகம் புரியவேண்டும் என்பதற்காவே கொடுமைகளிடம் தன்னை கொடுத்தார்.

கண்ட கண்ட அம்மன் என்றால்...

காமாட்சிஅம்மன்..... களியாட்டி அம்மன் அவர்கள்தான். என்ன துயவன் தெரிததுபோல் கேட்கின்றீர்கள்?

பொய் தானே? அவர் பாவங்களைச் சுமந்தார் என்றார் என்றால் இப்போது உலகத்தில் ஒரு பாவமும் இல்லாமல் நிம்மதியாக அல்லவா இருக்க வேண்டும். அவருக்குத் தன்னைக் காப்பாற்றவே வழி தெரிந்திருக்கிவல்லை. அதனால் வடிவேல் மாதிரி நல்லவன் என்று சொன்னதற்காக எல்லோரிடமும் அடிவாங்கித் தொலைந்தார் போலும்.

சரி அவர் யூதர்களைத் திருத்தவென்று தானே வந்தார். (மற்றயவர்களை அல்ல) இறுதிவரை அவரால் அவர்களைத் தன் வழியைப் பின்பற்ற வைக்க முடியவில்லையே? அப்படி வந்த வேலையே முடியாமல் பாவத்தைச் சுமந்து கொண்டு போனார் என்பது, அவரின் இயலாமையை மறைக்கின்ற செயலே தவிர, வேறு ஒன்றுமில்லை...

அவர் இப்படி அகிம்சைப் பின்பற்றினார் என்றால் கர்த்தர் என்பவர் தனக்கு அடிபணியாத மக்களை ஏன் கொன்று தொலைத்தார். தன்னைப் பின்பற்றாதவர்களை அழித்தொழித்தார். இரண்டும் முரண்தானே?

ஜேசுவைப் பற்றிச் சொன்னால் உடனே சூடாகித் தத்துவம் பொழிகின்ற உங்களுக்கு மற்றவர்களின் கடவுள் என்பது கண்ட, கண்ட என்பதாகி விட்டதோ?

Link to comment
Share on other sites

நான் நமீதாக் குட்டிக்கு டொரன்டோவில் கோவில் கட்ட போறன்.... என்னுடன் சேர்ந்து பணியாற்ற ஆட்கள் தேவை. யாராவது வருகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா

எனது கருத்தில் நான் யாரையும் புண்படுத்தி எழுதவில்லை. தேவiயில்லா சாடல்கள் குதர்க்கம்மெனப்படும் என்ற கூறியிருந்தேன். துயவனை நான் கண்டிக்கவில்லை அந்த உரிமை எனக்குமில்லை..... ஒரு பக்குவமான கருத்தாடலுக்கு.... ஆரோக்கியமான வாதட்டத்திற்கு வாருங்கள் இல்லையேல் ஒதுங்குங்கள் என்ற பொருள்படவே அதை எழுதியிருந்தேன். இருந்தும் நீங்கள் அதை வெட்டியிருப்தன் காரணம் தெரியவில்லை. களவிதிகளுக்கு எதிரான சொற்பிரயோகம் ஏதும் அதில் இருந்ததா?

இது இணையவன் அவர்களுக்கா நான் எழுதியது. (துயவனின் பெயரை நான் பாவித்தேன் என்பதை நான் மறுக்கவில்லை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புனிதமான கடவுளை ஏன் குசு விடும் மலம்/சிறு நீர் கழிக்கும் கேவலாமன மனித வடிவத்தில் வணங்க வேண்டும்?

நயந்தரா ஆடைக் குறைப்புத் தான் செய்கிறார் ஆனால் பல கடவுளர்களின் சிலைகள் ஏன் ஆடையே இல்லாமாலும் சில சிலைகள் மனிதர்களால் மறைக்கப்படும் பிறப்புறுப்பின் வடிவமாகவும் சில சிலைகள் நாக்கைத் தொங்க்கப் போட்ட வண்ணமும் மனித தலையைக் கொய்து கையில் ஏந்திய படியும், இன்னொரு மனிதனுக்கு மேல் காலை வைத்த படியும், ஆயுதங்களைக் கையில் ஏந்திய படியும் இருக்கின்றன?

மனிதனில் மனிதத்தை வளர்க்க மனிதனாக வாழ்ந்து காட்டி வழிகாட்டினால் தான் மனிதன் நம்புவான். அதனால் தான் மனிதனின் நம்பிக்கையை வளர்க்க அவனை நல்வழிப்படுத்த கடவுளை மனிதனாகச் சித்தரிக்க வேண்டி வந்தது.

நயனதாராவின் கவர்ச்சியை போதிக்க.. கோவில் தேவையில்லை. தியேட்டர் போதுமே..! அவருக்கேன் கடவுள் அந்தஸ்து. ஒரு சாதாரண மனிதனாக வாழ்பவருக்கு எதற்குக் கோவில்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பிலும் மன்னிப்புக் கோருகின்றேன் என்று தாஙங்கள் போடாதபடியால் இணையவனுக்கு உம் மீது கோபம்...நான் ஆரோக்கியமான விவாதம் செய்வேனோ, அல்லது குதர்க்கம் கதைப்பேனா என்பது உங்களுக்குத் தேவையில்லை என நினைக்கின்றேன் மருதங்கேணி. ஒதுங்குவதும், ஒதுங்காமல் விடுவதும் என் விருப்பம். நீங்கள் யார் அது பற்றிக் கூற...??

இந்தச் சூழ்நிலையில் நயன்தராவிற்குக் கோவில் கட்டுவது என்பது, ஆக்கபூர்வ விடயம் என்பதாக மருதங்கேணியார் கருதிக் கொண்டிருப்பதன் அர்த்தம் புரியவில்லை. அப்படிக் கோவில் கட்டுவதாக இருந்தால், மேரியாகத் தான் அவர் வரமுடியும் என நினைக்கின்றேன். ஏன் என்றால் நயன்தரா பிறப்பால் கிறிஸ்தவர். அவர் பெயர் டயானா மரியா குரியன்...ஏனவே இதற்குள் அம்மனை இழுப்பதே தவறு...

இணையவன்அண்ணாவை நான் கேட்டு எழுதியதற்கு துயவன் என்பவர் பதில்தரவேண்டிய அசியமில்லை. ( தனது பெயரை நான் பாவித்திருப்பதால் அவர் ஒரு பதிலையோ கேள்வியையோ முன்வைப்பதில் தவறு எதுமில்லை)

என்னுடைய கேள்வி இப்போது யாதனில் .....??? மேலே உள்ள எனது கருத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாத இப்பதிலின் நோக்கம் என்ன?? பதில் எனக்கே தெரியும் துயவன் அவர்களிடம் அப்படி கபடமான எண்ணம் ஏதும் இல்லை. எனது பதிலை வாசித்து அதன் கருத்தை புரிந்து கொள்ள முன்னரே பதில் தர துடிக்கும் துடிபப்பின் வெளிப்பாடே இது. இதை பல முறை நான் சுட்டிகாட்டி இருக்கிறேன். இருப்பினும் பயன் ஏதுமில்லையென்றாலும் நேர நஸ்டம் அதிகமாகிகொண்டே போகின்றது என்பதாலேயே இதை எழுதுகிறேன். இப்போது நான் இதை எழுதிகொண்டிருக்கும் நேரமே வீணானதுதானே? ஒரு கருத்தாடல் நடக்கும்போது அது சம்மந்தமான கருத்தை முன்வையுங்கள் என்பதே எனது எண்ணம். அதையே நான் மேலையும் சுட்டி காட்டியுள்ளேன்.

உயர்திரு துயவன் அவர்களே.

தற்போதைய விவாதம் தொடர்வதன் நோக்கம். நாயன்அம்மனுக்கு இல்லது நாயன்தாராவிற்கு கோவில் வைப்பது தவறா தப்பா என்பதே. அதை ஒரு சாரர் தவறனவும் அதற்கான கரணத்தையும் முன்வைக்கிறன்றார்கள். நான் உட்பட வேறு சிலர் அது எவ்வாறு தவறாகலாம் எனும் கேள்விகளையும் ஏற்கனவே கோயில்கொண்டுள்ளவர்களின் தகுதியையும் நயன்தாராவிற்கு உள்ள தொடர்புகளையும் முன்வைக்கிறோம். ஆதலால் நான் நாயன்தாராவிற்கு கோவில்கட்ட ஆதரவளிக்கிறேன் என்று பொருள் இல்லை. அன்றி நாயன்அம்மனின் திருப்பணிகளை நானே முன்னெடுக்கிறேன் என்றும் பொருள்இல்லை. நாயன்அம்மன் கோவில்காண என்ன குறைகொண்டுள்ளார் என்பதே எனது கேள்வி?

அதற்கு ஜேசு கோவிலை கொண்டிருக்கையில் (ஜேசுவின் இயலாத்தனங்கள் என்று நீங்கள் நினைப்பதையும் சில தகுதிகளையும் நாயன்அம்மனுடன் ஒப்பிட்டு) ஜேசு கோவில் கொண்டிருக்கையில் நாயன்அம்மனும் கோவில்காண்பதில் தவறில்லை என்று நீங்களே எழுதுனீர்கள். நான் அதை வாசித்துவிட்டு நீங்களும் எனது சார்பாக எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன். இருப்பினும் ஜேசுபிரானின் சில தகுதிகளை நீங்கள் தவறாக புரிந்து வைத்திருக்கின்றீர்களோ என்று எண்ணி அதற்கான ஒரு பதிலை நான் முன்வைத்தேன். எனது ஜேசு பற்றிய விளக்கம் உங்களால் ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை. அதலால் ஜேசு பற்றி இன்னும் உங்களின் உயர்ந்த அறிவுக்கு எட்டிய சில கேள்விகளையும் முன்வைத்துள்ளீர்கள். இதை நான் வரவேற்கிறேன் எதையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது.

ஆதாரங்களுடன் அதை நிருபிக்க முயலவேண்டுமே தவர கற்பனை கதைகளை இங்கே கட்டவிழ்த்துவிடாதீர்கள் என்ற தோரணையில் நீங்கள் முன்வைத்திருக்கும் வினாக்களில் தவறேதுமில்லை.

ஆனால்......... நான் ஒதுங்குவேன்.... ஒதுங்காதுபோவேன் உனக்கென்ன அதுபற்றி ஆவல் என்ற உங்களின் கேள்விகளின் நோக்கம் என்ன? நான் சொன்னேனா உங்களை ஒதுங்குங்கள் என்று?

ஆரோக்கியமான கருத்தை முன்வையுங்கள் குதர்கம் பேசாதீர் இதைதானே நிர்வாகம் பலமுறை சொல்கின்றது அதை ஒரு முறை நான் இங்கு சுட்டிகாட்டிஇருக்கிறேன் அவ்ளவுதான்.

(துயவனை கண்டிக்கும் உரிமை எனக்கு கிடையாது என்பதை நானே எழுதினே). வேறுயாரையாவது பற்றி எழுதியிருந்தால் நான் நிற்சயமாக அந்த வசனத்தை நான் எழுதியிருக்கமாட்டேன். அதை எழுதாமலே அவர்கள் புரிந்துகொள்வார்கள் நான் என்ன எழுதவருகிறேன் என்பதை காரணம் நான் தமிழிலே எழுதுகிறேன் தமிழ்வாசிக்க தெரிந்தவர்கள் அதை வாசித்தால் பிரச்சனையில்லையே. நான் யாரைபற்றி எழுதிகொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துதான் அந்த வசனத்தையே எழுதினேன். அதை வாசித்தும் நீங்கள் ஏன் அந்த கேள்விகளை முன்வைக்கின்றீர்கள்???????????????

உங்களுக்காக எனது இன்னொரு கேள்வி நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது நீங்கள் சரி என்கின்றீர்களா? தவறு என்கின்றீர்களா?

ஜேசுவைபற்றி சொன்னால் சரியென்கின்றீர்கள்....... காமாட்சிஅம்மனை பற்றி சொன்னால் தவறென்கின்றீர்கள். ஆகவே உங்களின் நிலைபாடு பற்றி நீங்கள் விளக்கினால்தானே மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியும்?

Link to comment
Share on other sites

மனிதனில் மனிதத்தை வளர்க்க மனிதனாக வாழ்ந்து காட்டி வழிகாட்டினால் தான் மனிதன் நம்புவான். அதனால் தான் மனிதனின் நம்பிக்கையை வளர்க்க அவனை நல்வழிப்படுத்த கடவுளை மனிதனாகச் சித்தரிக்க வேண்டி வந்தது.

நயனதாராவின் கவர்ச்சியை போதிக்க.. கோவில் தேவையில்லை. தியேட்டர் போதுமே..! அவருக்கேன் கடவுள் அந்தஸ்து. ஒரு சாதாரண மனிதனாக வாழ்பவருக்கு எதற்குக் கோவில்...! :)

//மனிதனில் மனிதத்தை வளர்க்க மனிதனாக வாழ்ந்து காட்டி வழிகாட்டினால் தான் மனிதன் நம்புவான்//

கடவுள் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறார் என்றால் அவர் குசு விடுகிறாரா? மலம் சிறு நீர் கழிக்கிறாரா? அப்படியாயின் இவற்றைச் செய்யும் நயந்தர மட்டுமே ஏன் கேவலமானவர்? குசு விடுதல், மலம், சிறுனீர் கழித்தல் என்பவை மனிதக் குணாம்சியங்கள் , இவை எங்கனம் கேவலம் ஆனவை என்று எண்ணுகிறீர்கள்? கடவுள் குசு விட்டால் அது புனிதமானதா? மனிதனை நம்பவைக்க எங்கே கடவுள் மனிதனாக வந்தார்? மனிதனால் வடிவமைக்கப்பட்ட கோவில் மனித உருவிலான சிலைகளையும் மனிதனால் இயற்றப்பட்ட கதைகளையும் வைத்துக் கொண்டூ கடவுள் மனித உருவில் வந்தார் என்றால் யார் நம்புவார்கள்?

//நயனதாராவின் கவர்ச்சியை போதிக்க கோவில் தேவையில்லை. தியேட்டர் போதுமே..! அவருக்கேன் கடவுள் அந்தஸ்து.//

உண்மைதன் நயந்தரவாவின் கவர்ச்சியைப் போதிக்க கோவில் தேவையில்லை எனெனில் ஏற்கனவே அதை விடக் கவர்ச்சியான சிலைகள் கோவிலில் இருக்கின்றன.குழந்தைகளும் வந்து வழி படும் வண்ணம் குறைந்த அளிவிலான ஆடைக் குறைப்புடன் நயந்தர அம்மன் சிலைகளை வைப்பது ஒரு நோக்கமாக இருக்கலாம். கடவுளை விளக்க கேவலமான மனித வடிவமே தேவைப்படும் போது கடவுளுக்கு என்று எங்கே 'அந்தஸ்து' /புனிதம் இருக்கிறது? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'நெனரமமயடயிழழஎயn' pழளவஸ்ரீ'470673' னயவநஸ்ரீ'னுநஉ 20 2008இ 07:44 Pஆ'ஸஜஉழடழசஸ்ரீ"சூகுகு0000"

மனிதனில் மனிதத்தை வளர்க்க மனிதனாக வாழ்ந்து காட்டி வழிகாட்டினால் தான் மனிதன் நம்புவான். அதனால் தான் மனிதனின் நம்பிக்கையை வளர்க்க அவனை நல்வழிப்படுத்த கடவுளை மனிதனாகச் சித்தரிக்க வேண்டி வந்தது.

நயனதாராவின் கவர்ச்சியை போதிக்க.. கோவில் தேவையில்லை. தியேட்டர் போதுமே..! அவருக்கேன் கடவுள் அந்தஸ்து. ஒரு சாதாரண மனிதனாக வாழ்பவருக்கு எதற்குக் கோவில்...! :டழட:ஜஃஙரழவநஸ

அதைதானே நாயன்அம்மன் இப்போது செய்துகொண்டிருக்கின்றார். மனிதர்களுக்கு விழங்கும் வண்ணம் மனிதவடிவிலேயே நின்று விளக்குகின்றார். உலகில் தற்போது தியேட்டர் சென்று படம் பார்காதவரின் எண்ணிக்கை குறைவு என்பதால். தனது வாழ்வியல் தத்துவம் அனைவரையும் சென்று சேர வேண்டும் எனும் எண்ணத்தில் திரையை தேர்ந்தெடுத்துள்ளார். உங்களின் பார்வைகளை சிலவினாடிகள் ஒரிடத்தில் குவியுங்கள் இதர உலகத்தை சில நொடிகள் மறவுங்கள். உங்களின் மனதிற்குள் ஒரு சாந்தி நிலை வருமென்கிறார். அதை ஏன் தவென்கின்றீர்கள்? வன்முறைகளை தவிர்த்து ஒரு ரசனை சாஸ்திரம் காணுங்கள் என்கின்றார்.

மெய்மறக்கும் நிலையில் மனத்திற்குள் ஒரு ஒளிபரவும் அது உடல்களின் செல்களை உரச ஒரு உத்வேக உணர்வு நிலை எழும் என்கிறார். சோம்மேறிகளாக எதிலுமே அலுத்தவர்களாக வாழ்வையே வெறுத்தவர்களாக வாழும் மனிதர்களே ஒரு முறை உங்களுக்குள் ஒழிந்து இருக்கும் உணர்வின் உச்சியை புரிந்துகொள்ளுங்கள். இந்த அற்ப மனிதவாழ்வை உமதாக்கி கொள்ளுங்கள் எனும் நாயனசிர்த்தத்தங்களை உங்களால் சிந்தித்து புரிந்துகொள்ள முடியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் தானே? அவர் பாவங்களைச் சுமந்தார் என்றார் என்றால் இப்போது உலகத்தில் ஒரு பாவமும் இல்லாமல் நிம்மதியாக அல்லவா இருக்க வேண்டும். அவருக்குத் தன்னைக் காப்பாற்றவே வழி தெரிந்திருக்கிவல்லை. அதனால் வடிவேல் மாதிரி நல்லவன் என்று சொன்னதற்காக எல்லோரிடமும் அடிவாங்கித் தொலைந்தார் போலும்.

சரி அவர் யூதர்களைத் திருத்தவென்று தானே வந்தார். (மற்றயவர்களை அல்ல) இறுதிவரை அவரால் அவர்களைத் தன் வழியைப் பின்பற்ற வைக்க முடியவில்லையே? அப்படி வந்த வேலையே முடியாமல் பாவத்தைச் சுமந்து கொண்டு போனார் என்பது, அவரின் இயலாமையை மறைக்கின்ற செயலே தவிர, வேறு ஒன்றுமில்லை...

அவர் இப்படி அகிம்சைப் பின்பற்றினார் என்றால் கர்த்தர் என்பவர் தனக்கு அடிபணியாத மக்களை ஏன் கொன்று தொலைத்தார். தன்னைப் பின்பற்றாதவர்களை அழித்தொழித்தார். இரண்டும் முரண்தானே?

ஜேசுவைப் பற்றிச் சொன்னால் உடனே சூடாகித் தத்துவம் பொழிகின்ற உங்களுக்கு மற்றவர்களின் கடவுள் என்பது கண்ட, கண்ட என்பதாகி விட்டதோ?

எதையும் எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிடவும் முடியாது...... நம்பிவிடவும் முடியாது.

அதை பகுத்தாய்ந்தால்தான் அதன் உண்மை நிலை புரியும். நான் எனக்கு தெரிந்தைதான் எழுதமுடியும். உங்களுக்கு ஜேசுவின் குறைகள் மட்டும் கண்ணுக்கு தெரிவதுபோல். அதற்காக நான் என்ன ஐயோ அந்தோ பாவம் ஜேசுவைபற்றி கேள்வி கேட்டுவிட்டார் கிறிஸ்தவமதத்திற்கு எதிராக எழுதுகின்றார் உடனே வந்து அகற்றுங்கள் என்று நிர்வாகத்திடம் பிச்சையெடுக்கிறேனா? உங்களுக்கு திரும்ப திரும்ப என்ன சொல்கிறேன் எங்களின் கேள்ளிகளையும் கருத்துக்களையும் முன்வையுங்கள். அதனால்தானே இது யாழ்கருத்துகளம் என்று இருக்கின்றது. ஒரு வேளை ஜேசுவிற்கும் மேரிக்கும் தொடர்பு இருந்திருக்காத என்று கூட உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றலாம் கேள்வியாக முன்வையுங்கள் அதைதான் நான் திரும்பவும் கூறுகிறேன். அது பற்றி சரியாக தெரிந்தவர்கள் யாரும் இருப்பின் அதைபற்றி ஒரு விளக்கத்தை தருவார்கள் நாம் வாசித்து அறியலாமே. அதாவது இந்து மதம்பற்றி நீங்கள் விளக்குவதுபோல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைதானே நாயன்அம்மன் இப்போது செய்துகொண்டிருக்கின்றார். மனிதர்களுக்கு விழங்கும் வண்ணம் மனிதவடிவிலேயே நின்று விளக்குகின்றார். உலகில் தற்போது தியேட்டர் சென்று படம் பார்காதவரின் எண்ணிக்கை குறைவு என்பதால். தனது வாழ்வியல் தத்துவம் அனைவரையும் சென்று சேர வேண்டும் எனும் எண்ணத்தில் திரையை தேர்ந்தெடுத்துள்ளார். உங்களின் பார்வைகளை சிலவினாடிகள் ஒரிடத்தில் குவியுங்கள் இதர உலகத்தை சில நொடிகள் மறவுங்கள். உங்களின் மனதிற்குள் ஒரு சாந்தி நிலை வருமென்கிறார். அதை ஏன் தவென்கின்றீர்கள்? வன்முறைகளை தவிர்த்து ஒரு ரசனை சாஸ்திரம் காணுங்கள் என்கின்றார்.

மெய்மறக்கும் நிலையில் மனத்திற்குள் ஒரு ஒளிபரவும் அது உடல்களின் செல்களை உரச ஒரு உத்வேக உணர்வு நிலை எழும் என்கிறார். சோம்மேறிகளாக எதிலுமே அலுத்தவர்களாக வாழ்வையே வெறுத்தவர்களாக வாழும் மனிதர்களே ஒரு முறை உங்களுக்குள் ஒழிந்து இருக்கும் உணர்வின் உச்சியை புரிந்துகொள்ளுங்கள். இந்த அற்ப மனிதவாழ்வை உமதாக்கி கொள்ளுங்கள் எனும் சிர்த்தத்தங்களை உங்களால் சிந்தித்து புரிந்துகொள்ள முடியவில்லையா?

நயனுக்கு கோவில் என்றுதான் தலைப்பு இருக்கிறது.அது அம்மன் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாதா கோவிலாகவும் இருக்கலாம். எனவே நீங்கள் ஏன் அம்மனை இதற்குள் இழுக்கிறீர்கள். தூயவன் குறிப்பிட்டது போல.. ஏன் அவர் மேரியின் மறு அவதாரமாகி.. ஆடைக்குறைப்புச் செய்யும் நவீன மேரியாக உங்களால் இனங்காணப்படவில்லை..!

வாழ்வியல் தத்துவம் என்பது.. நயனதாராவின் அங்கங்களுக்குள்ளும்.. ஆடைக்குள்ளும் என்று கருதுபவர்களுக்காகத்தான் அவர் வெள்ளித்திரையில் தாராளமாக காட்சியளிக்கிறார். அதற்குள் அவருக்கேன் ஒரு கோவில்.

ஜேசுவும் மேரியும் அம்மனும் நபியும் ஆயிசாவும் வெள்ளித்திரையில்.. கவர்ச்சி நடனம் ஆட வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். அதுதான் வாழ்க்கையில் தத்துவம் என்றா கூற வருகிறீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் நயனை நவீன மேரியாக வரிந்து கொண்டு அவருக்கு கோவில் கட்டிக் கும்பிடுங்கோ. யாரும் கவலைப்படப் போறதில்லை. ஆனால் நயனதரா என்ற நடிகையை அம்மனா வரிந்து கொள்ள வேண்டிய அவசியம்.. இந்துக்களுக்கோ சைவர்களுக்கோ கிடையாது..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இப்போது வழிபடும் தெய்வங்கள், காலம் காலமாக எம்முன்னோரால் வணங்கப்பட்டு வந்தவை. தெய்வங்கள் நிஜமோ அல்லது கற்பனையோ என்று நாங்கள் முடிவு பண்ண இயலாது. எமது சிந்தனைக்கு எட்டியவகையில் தெய்வ வழிபாடு இவ்வாறு தோன்றியிருக்கலாம், அவ்வாறு தோன்றியிருக்கலாம் என்று வெறும் ஊகங்களை மட்டுமே கொள்ளலாமே தவிர தெய்வங்கள் உண்மையாக உண்டோ/ இல்லையோ என்று முடிவெடுக்க முடியாது.

ஆனால், நயாந்தாரா போன்றவர்கள் எமது காலத்தில் வாழ்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கோயில் கட்டுமளவுக்கு அவர்கள் தகுதியானவர்களா / இல்லையா என்று நாங்கள் ஆராய்ந்து நீங்களே ஒரு முடிவெடுங்கள். முன்னோர்களின் தெய்வ வழிபாடு மூடநம்பிக்கையோ / இல்லையோ என்று தெரியாது. ஆனால், நயனுக்கு கோயில் கட்டுவது போன்ற மூட நம்பிக்கையான செயல்களை நாம் ஏன் ஊக்குவிக்க வேண்டும். அவரது ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அது கூட படங்களில் அப்படியான நல்ல வேடங்களில் நடித்தால் (அது கூட செய்யவில்லை) மட்டும் போதாது. நிஜ வாழ்விலும் அப்படி நடக்க வேண்டும்.

நெடுக்ஸ் சொன்ன மாதிரி:

உங்களின் கருத்துதான் என்கும் நியாயமென படுகின்றது.

கோவில்கள் மூடநம்பிக்கைகள் எங்கு எந்த வடிவில் இருந்தாலும் அதை துக்கி எறிய குறைந்தபடசம் ஆறறிவு கொண்டவர்கள் ஆவது முன்வர வேண்டும். அதை விடுத்து எனது மதத்தில் இருக்கும் எல்லா மூடநம்பிக்கைக்குள்ளும் ஒரு தத்துவம் இருக்கின்றது. மற்றைய மதத்திற்குள் நாயன்அம்மன் போன்றோர்தான் கோவில்காண குறையுள்வர்கள் என்பது வீண்விரண்டாவாதம். ஆனால் அதை செய்ய விடுவார்களா பக்த்த அடியார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்துதான் என்கும் நியாயமென படுகின்றது.

கோவில்கள் மூடநம்பிக்கைகள் எங்கு எந்த வடிவில் இருந்தாலும் அதை துக்கி எறிய குறைந்தபடசம் ஆறறிவு கொண்டவர்கள் ஆவது முன்வர வேண்டும். அதை விடுத்து எனது மதத்தில் இருக்கும் எல்லா மூடநம்பிக்கைக்குள்ளும் ஒரு தத்துவம் இருக்கின்றது. மற்றைய மதத்திற்குள் நாயன்அம்மன் போன்றோர்தான் கோவில்காண குறையுள்வர்கள் என்பது வீண்விரண்டாவாதம். ஆனால் அதை செய்ய விடுவார்களா பக்த்த அடியார்கள்?

கணிதத்தைக் கற்பவனுக்குத்தான் கணிதம் புரியும்.. அறிவியலைக் கற்பவனுக்குத்தான் அறிவியல் புரியும். அதேபோலத்தான் கடவுளை ஆழ்மனதால் தேடுபனுக்குத்தான் அதன் தன்மை புரியும். நமக்கு கணிதம் படிக்க வரேல்ல என்பதற்காக.. கணிதமே ஒரு வேஸ்டு என்று கூறிடலாகாது..!

நயனதாராவுக்கு நடிகை என்ற நிலைக்கு அப்பால் ஏதும் இல்லை. அப்படி இருக்க அவருக்கு நிகராக கடவுள் நம்பிக்கையை முன்னுறுத்துவது கடவுள் நம்பிக்கை மீது பழிப்பைச் செய்வது போன்றது.

ஜேசு வாழ்ந்தார்.. புத்தன் வாழ்ந்தார்.. கிருஷ்ணர் வாழ்ந்தார்.. நபி வாழ்ந்தார்.. அதுவும் மனுக்குலம் விளங்க வாழ்ந்தனர் என்று மக்கள் படிக்கும் போது.. நயனதாராவில் எதைப்படிப்பது..! அவரின் ஆடைக்குறைப்பையும் அங்க அளவுகளையுமா..??!அதுவா வாழ்க்கைத் தத்துவம்..!

விதண்டாவாதம் செய்வது கடவுளை நம்புபவனல்ல. இல்லாதது இல்லாதது என்று சொல்லிக் கொண்டு இருப்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது நயனை வைத்து பிழைப்போட்ட நினைக்கும் முட்டாள்கள் தான்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//மனிதனில் மனிதத்தை வளர்க்க மனிதனாக வாழ்ந்து காட்டி வழிகாட்டினால் தான் மனிதன் நம்புவான்//

கடவுள் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறார் என்றால் அவர் குசு விடுகிறாரா? மலம் சிறு நீர் கழிக்கிறாரா? அப்படியாயின் இவற்றைச் செய்யும் நயந்தர மட்டுமே ஏன் கேவலமானவர்? குசு விடுதல், மலம், சிறுனீர் கழித்தல் என்பவை மனிதக் குணாம்சியங்கள் , இவை எங்கனம் கேவலம் ஆனவை என்று எண்ணுகிறீர்கள்? கடவுள் குசு விட்டால் அது புனிதமானதா? மனிதனை நம்பவைக்க எங்கே கடவுள் மனிதனாக வந்தார்? மனிதனால் வடிவமைக்கப்பட்ட கோவில் மனித உருவிலான சிலைகளையும் மனிதனால் இயற்றப்பட்ட கதைகளையும் வைத்துக் கொண்டூ கடவுள் மனித உருவில் வந்தார் என்றால் யார் நம்புவார்கள்?

//நயனதாராவின் கவர்ச்சியை போதிக்க கோவில் தேவையில்லை. தியேட்டர் போதுமே..! அவருக்கேன் கடவுள் அந்தஸ்து.//

உண்மைதன் நயந்தரவாவின் கவர்ச்சியைப் போதிக்க கோவில் தேவையில்லை எனெனில் ஏற்கனவே அதை விடக் கவர்ச்சியான சிலைகள் கோவிலில் இருக்கின்றன.குழந்தைகளும் வந்து வழி படும் வண்ணம் குறைந்த அளிவிலான ஆடைக் குறைப்புடன் நயந்தர அம்மன் சிலைகளை வைப்பது ஒரு நோக்கமாக இருக்கலாம். கடவுளை விளக்க கேவலமான மனித வடிவமே தேவைப்படும் போது கடவுளுக்கு என்று எங்கே 'அந்தஸ்து' /புனிதம் இருக்கிறது? :)

கடவுள் மனிதனாக சித்தரிக்கப்பட்டது.. கடவுள் என்பது மனிதனுக்கு எட்டாதது அல்ல என்பதை உணர்த்தத்தானே அன்றி.. கடவுள் மனிதனைப் போல.. கழிவகற்றிக் கொண்டு அசிங்கம் பண்ணிக் கொண்டு திரிகிறார் என்பதற்காக அல்ல.மனிதன் அசிங்கம் பண்ணினாலும்... மனிதன் மனிதனாக வாழவும் கடவுளைத் தேடவும் அணுகவும் வழியை பெற கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்பதை காட்டவே தான். மனித உருவில் கடவுள் இருப்பும்.. வலிகளும்.. வேதனைகளை அவர்கள் தாங்கி வாழ்ந்து காட்டுவதும்.

நயனதாரா கடவுளோ அல்லது கடவுளின் மனித வடிவமோ அல்ல. அவர் உடலைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் ஒரு நடிகை. அதை ரசிப்பதால்.. கடவுள் சிந்தனை எழாது.. மாறாக மனிதனை விலங்காக்கும் சிந்தனை தான் எழும்.

கோவில்கள் மனிதக் கட்டுமானங்கள். அவை கடவுளை மட்டும் தாங்கிக் கொண்டிருப்பவையல்ல. அதைக் கட்டியவர்கள் கட்டிடக்கலையூடு சக மனிதனுக்கு தகவல்களை..செய்திகளை விளம்பரங்களை காவிச் செல்வதையும் அதில் அடக்கியிருக்கின்றனர். கோவில்கள் மக்கள் கூடும் இடங்கள் என்பதால் அரசர்கள் அவற்றை விளம்பர மையங்களாகவும் கலையின் வெளிப்பாட்டிடமாகவும் காமக் கல்வியூட்டும் இடமாகவும் சில இடங்களில் ஆக்கிக் கொண்டனர். அன்று வெள்ளித்திரை இருந்திருப்பின்.. இன்று நயனைப் போல.. அவர்களும் அன்று அதில் காம சூத்திரங்களைக் காட்டியிருப்பர்.! கோவில்களில் அவ்வாறான சிற்பங்கள் எழுப்ப வேண்டிய தேவை வந்திராது. அது கோவில் அமைத்தவர்கள் செய்த தவறே அன்றி அதுவல்ல சைவ நீதி. இந்து தர்மம்.. வேதாகமம். குர்றான்.. என்பனவற்றின் அடிப்படை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயனுக்கு கோவில் என்றுதான் தலைப்பு இருக்கிறது.அது அம்மன் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாதா கோவிலாகவும் இருக்கலாம். எனவே நீங்கள் ஏன் அம்மனை இதற்குள் இழுக்கிறீர்கள். தூயவன் குறிப்பிட்டது போல.. ஏன் அவர் மேரியின் மறு அவதாரமாகி.. ஆடைக்குறைப்புச் செய்யும் நவீன மேரியாக உங்களால் இனங்காணப்படவில்லை..!

வாழ்வியல் தத்துவம் என்பது.. நயனதாராவின் அங்கங்களுக்குள்ளும்.. ஆடைக்குள்ளும் என்று கருதுபவர்களுக்காகத்தான் அவர் வெள்ளித்திரையில் தாராளமாக காட்சியளிக்கிறார். அதற்குள் அவருக்கேன் ஒரு கோவில்.

ஜேசுவும் மேரியும் அம்மனும் நபியும் ஆயிசாவும் வெள்ளித்திரையில்.. கவர்ச்சி நடனம் ஆட வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். அதுதான் வாழ்க்கையில் தத்துவம் என்றா கூற வருகிறீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் நயனை நவீன மேரியாக வரிந்து கொண்டு அவருக்கு கோவில் கட்டிக் கும்பிடுங்கோ. யாரும் கவலைப்படப் போறதில்லை. ஆனால் நயனதரா என்ற நடிகையை அம்மனா வரிந்து கொள்ள வேண்டிய அவசியம்.. இந்துக்களுக்கோ சைவர்களுக்கோ கிடையாது..! :)

உங்களின் கேள்வி நியாயமானதே ஏன் நாயன்அம்மனாக வர வேண்டும் மேரியின் மறுவாடிவாகவும் வரலம்தானே அன்றி இஸ்லாம் நபிகளின் காலம் கடந்த மனைவியாகவும் வரலாம்தானே?? இதை நான் மறுப்பதற்கில்லை........ ஆனாலும் நாயன்அம்மன் என்று நான் எழுதுவது தமிழிலே பெண்களில் உயர்நிலை அடைபவர்களை அம்மையார் என்று கனமாகவும் அம்மன் என்று ஒரு உரிமையோடு ஒரு குறைந்த சொற்பதமாகவும் அதைபாவிப்பார்கள். அந்த பாவனைதான் இங்கே தொடர்கின்றது. பல பெற்றோர் தமது சிறிய பெண்பிள்ளைகளையே அம்மன் என்று அழைப்பார்கள் அதன் பொருள் அவர்களுடைய பெண்பிள்ளைகள் இந்துசமய பெண்தெய்வங்கள் என்றாகிவிடாது.

ஆனால்...... இங்கே ஒரு தந்திரோபாயம் கலந்த நம்பிக்கை துரோகம் ஒன்று திரைமறைவில் நடக்கின்றதோ என்ற கேள்வியை. உங்களின் கேள்வியும் உயர்திரு தூயவனின் கேள்வியும் என்னுள் தூண்டிவிடபட்டிருக்கின்றது.

நாயன்அம்மனுக்கு கோவில் கட்டுவது என்பது செய்தி.

அது தவறா சரியா என்பது நீண்டுகொண்டிருக்கும் விவாதம். அதில் இந்து சமயத்தை முன்நிறுத்தி கருத்துவைப்பவர்கள் சிலர் நாயன்அம்மனை தமதாக்கி இந்து மதத்திற்கு எதிர்காலத்தில் பிரசார யுத்தியாக நாயன்அம்மனை பாவிக்க சதிதீட்டுவதுபோல்தான் உள்ளது.

காரணம் நாயான்அம்மனை தமது மத தெய்ங்களோடு இணைக்கும் ஒரு யுத்தியை இவர்கள் கையாள்கிறார்கள். அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதுபோல் பாவனை கருத்துக்களை முன்வைத்தால்..... நாயன்அம்மன் ஆலய பரிபாலசபை திருப்பணிகாரர்கள் இவர்களின் துண்டுதலால் தூண்டபட்டு உடனே நாயன்அம்மனும் ஓரு இந்து மத அம்மன்தான் என்று அறிவிப்பார்கள் என்று எண்ணுகின்றார்கள் போல் உள்ளது. அவர்களுக்கு அப்படி ஒரு ஆசையிருப்பின் அது வெறும் நீராசையே என்பதே எனது கருத்தாக இருக்கும்.

நாயன்அம்மன் வன்முறை கலாச்சாரம் கைகடந்து உலகில் தலைவிரித்தாடும் தருணத்தில். உலகில் ஒரு ரசனை சாஸ்திரத்தை தோற்றுவித்து வன்முறையில் ஈடுபடும் மனிதர்களின் சிந்தனையை தூண்டிவிட்டு வன்முறைக்குள் ஒரு ரசனை கலவரத்தை உருவாக்கி உலகில்நிம்மதியான நித்தியவாழ்வை கட்டியெளுப்ப தான்தோன்றி வந்தவர். அவரை எந்த மதத்தவருக்கும் தமது மத கடவுளாக கொள்ளும் உரிமையில்லை. இதை யாபரும் அறிந்துகொள்ளவேண்டும். அவர் தனியான தன்நிகரில்லா தத்துவங்களை தனதாக்கி தனியாகவந்தவர். அதை உற்றுபார்த்துகொண்டிருந்த சில ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள் இவர் வெறும் நடிகையல்ல....... எமது வாழ்வை சிறப்பிக்க வந்த தெய்வம்அய்யா தெய்வம் என்று. அதன் விளைவு அவர்கள் உடனே அவருக்கு ஒரு ஆலயமமைத்து அங்கே வாழிபாடகளை உடனேயே தொடங்கவேண்டும் என்று தொடங்கிவிட்டார்கள். அது அவர்களின் உரிமை அதை பிறரால் நிராகரிக்க முடியாது. குறிப்பாக கிட்டத்தட்ட நாயன்அம்மன்போல் பெருத்தமார்புடன் தோற்றமளித்து நாயன்அம்மனைபோலவே ஆடையணிவித்து அலங்காரம் செய்து வேறு சில பெண்களை தொழுபவர்கள். அதை தவறென சொல்வது எவ்வகையில் நியாயம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கேள்வி நியாயமானதே ஏன் நாயன்அம்மனாக வர வேண்டும் மேரியின் மறுவாடிவாகவும் வரலம்தானே அன்றி இஸ்லாம் நபிகளின் காலம் கடந்த மனைவியாகவும் வரலாம்தானே?? இதை நான் மறுப்பதற்கில்லை........ ஆனாலும் நாயன்அம்மன் என்று நான் எழுதுவது தமிழிலே பெண்களில் உயர்நிலை அடைபவர்களை அம்மையார் என்று கனமாகவும் அம்மன் என்று ஒரு உரிமையோடு ஒரு குறைந்த சொற்பதமாகவும் அதைபாவிப்பார்கள். அந்த பாவனைதான் இங்கே தொடர்கின்றது. பல பெற்றோர் தமது சிறிய பெண்பிள்ளைகளையே அம்மன் என்று அழைப்பார்கள் அதன் பொருள் அவர்களுடைய பெண்பிள்ளைகள் இந்துசமய பெண்தெய்வங்கள் என்றாகிவிடாது.

ஆனால்...... இங்கே ஒரு தந்திரோபாயம் கலந்த நம்பிக்கை துரோகம் ஒன்று திரைமறைவில் நடக்கின்றதோ என்ற கேள்வியை. உங்களின் கேள்வியும் உயர்திரு தூயவனின் கேள்வியும் என்னுள் தூண்டிவிடபட்டிருக்கின்றது.

நாயன்அம்மனுக்கு கோவில் கட்டுவது என்பது செய்தி.

அது தவறா சரியா என்பது நீண்டுகொண்டிருக்கும் விவாதம். அதில் இந்து சமயத்தை முன்நிறுத்தி கருத்துவைப்பவர்கள் சிலர் நாயன்அம்மனை தமதாக்கி இந்து மதத்திற்கு எதிர்காலத்தில் பிரசார யுத்தியாக நாயன்அம்மனை பாவிக்க சதிதீட்டுவதுபோல்தான் உள்ளது.

காரணம் நாயான்அம்மனை தமது மத தெய்ங்களோடு இணைக்கும் ஒரு யுத்தியை இவர்கள் கையாள்கிறார்கள். அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதுபோல் பாவனை கருத்துக்களை முன்வைத்தால்..... நாயன்அம்மன் ஆலய பரிபாலசபை திருப்பணிகாரர்கள் இவர்களின் துண்டுதலால் தூண்டபட்டு உடனே நாயன்அம்மனும் ஓரு இந்து மத அம்மன்தான் என்று அறிவிப்பார்கள் என்று எண்ணுகின்றார்கள் போல் உள்ளது. அவர்களுக்கு அப்படி ஒரு ஆசையிருப்பின் அது வெறும் நீராசையே என்பதே எனது கருத்தாக இருக்கும்.

நாயன்அம்மன் வன்முறை கலாச்சாரம் கைகடந்து உலகில் தலைவிரித்தாடும் தருணத்தில். உலகில் ஒரு ரசனை சாஸ்திரத்தை தோற்றுவித்து வன்முறையில் ஈடுபடும் மனிதர்களின் சிந்தனையை தூண்டிவிட்டு வன்முறைக்குள் ஒரு ரசனை கலவரத்தை உருவாக்கி உலகில்நிம்மதியான நித்தியவாழ்வை கட்டியெளுப்ப தான்தோன்றி வந்தவர். அவரை எந்த மதத்தவருக்கும் தமது மத கடவுளாக கொள்ளும் உரிமையில்லை. இதை யாபரும் அறிந்துகொள்ளவேண்டும். அவர் தனியான தன்நிகரில்லா தத்துவங்களை தனதாக்கி தனியாகவந்தவர். அதை உற்றுபார்த்துகொண்டிருந்த சில ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள் இவர் வெறும் நடிகையல்ல....... எமது வாழ்வை சிறப்பிக்க வந்த தெய்வம்அய்யா தெய்வம் என்று. அதன் விளைவு அவர்கள் உடனே அவருக்கு ஒரு ஆலயமமைத்து அங்கே வாழிபாடகளை உடனேயே தொடங்கவேண்டும் என்று தொடங்கிவிட்டார்கள். அது அவர்களின் உரிமை அதை பிறரால் நிராகரிக்க முடியாது. குறிப்பாக கிட்டத்தட்ட நாயன்அம்மன்போல் பெருத்தமார்புடன் தோற்றமளித்து நாயன்அம்மனைபோலவே ஆடையணிவித்து அலங்காரம் செய்து வேறு சில பெண்களை தொழுபவர்கள். அதை தவறென சொல்வது எவ்வகையில் நியாயம்??

நயனதாரா அருள்பாலிக்க.. கோவில் கட்டி வழிபட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் வாழும் கவர்ச்சிக்கடவுள். எனவே அடியார்கள் 21ம் நூற்றாண்டின் ஆடைக்குறைப்பு மாதாவை அவரின் இல்லத்திலேயோ தியேட்டரிலையோ சென்று தொழலாம். அருளைப் பெறலாம்.

கோவில் கட்ட செய்யும் செலவை.. ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவலாம்..!

வேண்டும் என்றால் அவர் இறந்த பின்னர் கோவில் கட்டி.. அருட்கடாட்சத்தை தொடர்ந்து பெறட்டும். ஜொள்ளர்கள்..! :)

Link to comment
Share on other sites

கடவுள் மனிதனாக சித்தரிக்கப்பட்டது..

யாரால் சித்தரிக்கப்பட்டது?

கோவில்கள் மனிதக் கட்டுமானங்கள். அவை கடவுளை மட்டும் தாங்கிக் கொண்டிருப்பவையல்ல. அதைக் கட்டியவர்கள் கட்டிடக்கலையூடு சக மனிதனுக்கு தகவல்களை..செய்திகளை விளம்பரங்களை காவிச் செல்வதையும் அதில் அடக்கியிருக்கின்றனர்.

ஆகவே கோவிலைக் கட்டியவர்கள் தான் கடவுள் சிலைகளைப் படைத்தார்கள்.சிலை வடிதவர்கள் சக மனிதனுக்கு தகவல்களைக் காவிச் சென்றார்கள்.

கோவில்கள் மக்கள் கூடும் இடங்கள் என்பதால் அரசர்கள் அவற்றை விளம்பர மையங்களாகவும் கலையின் வெளிப்பாட்டிடமாகவும் காமக் கல்வியூட்டும் இடமாகவும் சில இடங்களில் ஆக்கிக் கொண்டனர்.

அன்று அரசர்கள் செய்தைத் தான் இன்று நயந்தராவின் ரசிகர்கள் செய்கிறார்கள். மக்களுக்கு கலையின் வெளிப்பாட்டையும் கல்வியூட்டவும் செய்கிறார்கள்.

அன்று வெள்ளித்திரை இருந்திருப்பின்.. இன்று நயனைப் போல.. அவர்களும் அன்று அதில் காம சூத்திரங்களைக் காட்டியிருப்பர்.! கோவில்களில் அவ்வாறான சிற்பங்கள் எழுப்ப வேண்டிய தேவை வந்திராது. அது கோவில் அமைத்தவர்கள் செய்த தவறே அன்றி அதுவல்ல சைவ நீதி. இந்து தர்மம்.. வேதாகமம். குர்றான்.. என்பனவற்றின் அடிப்படை :)

ஆகவே அன்று கோவில் கட்டியவர்கள் தவறு இழைத்து விட்டார்கள்.அதே தவறை நாம் ஏன் தொடர்ந்து செய்வான்? இந்து/ சைவ நீதி அடிப்படையில் அமையாத அன்றைய கோவில்களை,சிலைகளை இடித்து விட வேண்டியது தானே?

அத்தோடு அன்றி வெள்ளித் திரை இல்லாததால் கோவில் சிலைகள் அன்று கட்டினார்கள்.இன்றும் நாம் ஏன் அதையே செய்வான்? கோவில் கட்டாமால் வெள்ளித் திரையிலையே கும்பிடலாமே?

கோவில் எவ்வாறு அமைப்பது என்பது பற்றி உண்மையாக எங்கே என்ன சொல்லி இருக்கிறார்கள்? மனித வடிவமைப்பில் சிலை அமைத்து வழி படுவது எல்லாம் தவறு எனில் எங்கே இருக்கிறது நீங்கள் சொல்லும் சரியான வடிவமைப்பிலான கோவில்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.