Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/

தீயினில் எரியாத தீபங்களே - நம்

தேசத்தில் உருவான ராகங்களே

தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்

தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே

தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே

தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே

புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்

பாதகர் உயிர்களை முடித்தீரே

இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்

இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்

இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்

விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்

ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ngs_track_1mp3/

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்

காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்

காதில கொஞ்சம் போட்டுப்பாரு

குட்டிக்கண்ணன் றோட்டில

வந்து நிண்டு பாட்டில

நாட்டுக்காக செய்தியொன்று

சொல்லிறன் தெருக்கூத்தில

நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம்

சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே

மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே

இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு

அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க

அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க

காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க

இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு

நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள்

நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும்

அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும்

இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி குட்டிப்பையா.

தொடருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._thoonguthamma/

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாள்

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே

பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

ஒவ்வொரு இரவும் இங்கே விடியும்

அவன் வீரம் சொல்லி நாள்தோறுமே

ஒவ்வொரு பூவும் இங்கே மலரும்

அவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே

இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்

அவன் பாதையில் பெண்ணே..!

சுடர் தீபம் ஏற்றிடு

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்

அவன் பாதையில் பெண்ணே..!

சுடர் தீபம் ஏற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே

பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

பயந்தவர் பார்வையிலே பெண்ணே

சின்னப் பனித்துளியும் கடலளவு

துணிந்தவர் மனதில் பெண்ணே

பெரும் அலைகடலும் துளியளவு

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை

புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை

புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே

பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...kannan_songs_t/

இந்த பாட்டு பாடியவர் குட்டிக் கண்ணன் அவர் இப்ப உயிருடன் இல்லை :)

ஆண்டாண்டு காலமதாய் நாம்

ஆண்டு வந்த பூமி

அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி

சுத்தி வந்த வீதி

எங்கள் அக்கா அண்ணையரே

எதிரி இங்கு வரலாமா

எங்கள் மண்ணை ஆள நினைச்சா

வேங்கை நாங்க விடலாமா

வீட்டுக்கொரு வீரன் போனா

விடுதலையும் நாளை வரும்

வீதியிலே சுத்தித் திரிஞ்சா

அடிமையாகச் சாக வரும்

ஆட்டம் போடும் ராணுவங்கள்

அலறி ஓடணும் . நாம்

அடிமை இல்லை என்று புதிய

பரணி பாடணும்

எங்கள் வேங்கைத் தலைவன் தானே

எங்களுக்கு வழிகாட்டி

எதிரிகளின் பாசறை யாவும்

எரித்திடுவோம் தீ மூட்டி

பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு

புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு

என்னினமே என் சனமே

இன்னும் என்ன மயக்கமா

எதிரிகளின் பாசறை யாவும்

எரித்திடவே தயக்கமா

பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை

பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குட்டித்தம்பி,

எத்தனையோ காலமாக இருந்த ஏக்கத்தை தீர்த்துவைத்தன இந்த தாயகவரிகள்.

சுட்டியையும் கொடுத்தது பாராட்டுதற்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...aikal_kalankum/

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்

வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்

வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வென்றிடவே கரும் வேங்கைகளாகிய

வீரக் கொழுந்துகளே!

எம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்

என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்

சாவைச் சுமந்தவரே!

உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்

ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய

அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய

தாயை நினைத்தீரோ!

உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்

கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்

நாயகனை நினைத்தீரோ!

உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்

சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...bDG/aakayathai/

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா....

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்

கவிதைகள் பொய் ஆகும்

அது இரும்பினிலில்லை அரும்பிய

முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே

யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்

சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்

வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்

அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை

யாருக்கு இங்கே இது தெரியும்

கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென

தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்

இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்

அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...l/ooradi_manna/

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே

விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே

இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார்

தாங்கியே உறங்குகிறார்

கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார்

ஆண்டுதோறும் வணங்குகிறார்

மண்ணில் இவர் சிந்திய குருதியால் நாடே சிவந்து கிடக்கிறது

சிவந்து கிடக்கிறது

இவர் கண்ணுறங்கும் கல்லறையில் தமிழ் ஈழம் எனும் ஒலி இசைந்து கேட்கிறது

இசைந்து கேட்கிறது

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

எங்களோடு நேற்று உண்டு பேசி மகிழ்ந்து வீதி உலா வந்தவர்கள்

வீதி உலா வந்தவர்கள்

எங்கள் சங்கத் தமிழ்ஈழ தேசியத் தலைவன் நீதி வழி நடந்தவர்கள்

நீதி வழி நடந்தவர்கள்

சங்ககாலம் படைத்த புறங்களை மீண்டும் புதுப்பித்துப் போனாரே

புதுப்பித்துப் போனாரே

மக்காள் உங்கள் கால் பாதம் உறைவிடம் தன்னில் மிதியாமல் பதிப்பீரே

மிதியாமல் பதிப்பீரே

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

மாலை சர்ப்பம் அணிந்த விசம் உண்ட கண்டனையும் வென்றுதான் நின்றார்கள் வென்றுதான் நின்றார்கள்

பெரும் குலையாத மலை போல் அழியாத சரிதமாய் ஞாலமதில் நிலைப்பார்கள்

ஞாலமதில் நிலைப்பார்கள்

அலைகடல் வானும் நதிக்கரை காற்றும் இவர்களை பறைசாற்றும்

இவர்களை பறைசாற்றும்

பூஞ்சோலை மாடம் சாலை சந்தி எல்லாமே இவர்களின் பேர் விளங்கும்

இவர்களின் பேர் விளங்கும்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே

விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...antha_pinpemp3/

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

நாளை சென்று வீழும்

சேதி சொல்ல

இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம்

இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

பூமியிலே சாகும் தேதி

யாருக்கிங்கு தெரியும்

கரும்புலிளுக்கு மட்டும் தானே

போகும் தேதி புரியும்

சாமிகளும் வாழ்த்தி வீழும்

சரித்திரங்கள் இவர்கள்

தமிழ் சந்ததியில் அழியாத

சத்தியத்தின் சுவர்கள்

சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

வாழ்வினிலே வசந்த காலம்

துறந்தவர்கள் சிலரே

--ம் வாசலிலே இளமை ராகம்

மறந்தவர்கள் சிலரே

கரும்புலிகள் விரும்பி இங்கு

இருப்பிழந்து போவார்

எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்

உருக்குலைந்து போவார்

உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

தோளில் ஏற்றிப் போவதற்கு

நாலு பேர்கள் வேண்டும்

இந்த தோள்கள் இன்றி கரும்புலியை

தீயின் வாய்கள் தீண்டும்

வாழும் காலம் நீள்வதிலே

வந்திடுமா பெருமை

இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட

சாவதுதான் பெருமை

சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

அச்சமின்றி குண்டடைத்து

ஆடிப்பாடிப் போவார்

எங்கள் அண்ணன் பெயர்

சொல்லிச் சொல்லி

கரும்புலிகள் சாவார்

சக்கை வண்டி தன்னில் ஏறி

சரித்திரங்கள் போவார்

வரும் சந்ததியின் வாழ்வுக்காக

தங்கள் உயிர் ஈவார்

தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதி சொல்ல

இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம்

இதை மாற்றிடவா முடியும்

வாழ்க்கை என்னும் பயணம்

இதை மாற்றிடவா முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...dw8u/vettrimp3/

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்

பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்

புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்

பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்

பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை

வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை

வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்

விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்

வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த

ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த

ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்

வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற

வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்

நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்

நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்

பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர

பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்

பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...vie_track_8mp3/

என் இனமே... என் சனமே...

என்னை உனக்குத் தெரிகிறதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு

அன்பு செய்ய உறவும் உண்டு

என்னை நம்பி உயிர்கள் உண்டு

ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...emmai_ninaithu/

காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்

காதோரம் ஒரு சேதி சொல்வோம்

காதோரம் ஒரு சேதி சொல்வோம்

கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்

புரியாத புதிராகச் சென்றோம்

புரியாத புதிராகச் சென்றோம்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

வாழும்போது மானத்தோடு

வாழ்பவன்தானே தமிழன் -தன்

வாசலில் அடிமை சேகவம் செய்து

வாழ்பவன் என்ன மனிதன்

வாழும்போது மானத்தோடு

வாழ்பவன்தானே தமிழன் -தன்

வாசலில் அடிமை சேகவம் செய்து

வாழ்பவன் என்ன மனிதன்

வழியில் இடறும் பகைகள் எரிய

வருக வருக தமிழா

வழியில் இடறும் பகைகள் எரிய

வருக வருக தமிழா

உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து

வெளியில் வருக தமிழா

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்

கைகள் கட்டுவதில்லை - நாங்கள்

போகும் திசையில் சாகும்வரையில்

புலிகள் பணிவதுமில்லை

காற்றும் நிலவும் யாருக்கெனினும்

கைகள் கட்டுவதில்லை - நாங்கள்

போகும் திசையில் சாகும்வரையில்

புலிகள் பணிவதுமில்லை

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்

முளைப்போம் இந்த மண்ணில்

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்

முளைப்போம் இந்த மண்ணில்

எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து

மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்

எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ngs_track_8mp3/

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்

வீரத்தையே தினம் பாடு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி

வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்

வீரத்துக்கே இணையில்லை - இதை

நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி

கொஞ்சும் குரல்தனில் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது

எங்கள் புலி பயந்தாரா - கொண்ட

இலட்சியத்தை மறந்தாரா - அவர்

சத்தியம் காக்க யுத்தம் புரிந்த

சங்கதியைத் தினம் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

காலைப் பொழுதினில் சோலை நடுவினில்

கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப

இராகம் இனிக்கும் உன் குரலக்கா

நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்

நாலு திசை எட்டப் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...iru_recoding09/

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்

கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை

நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை

ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்

உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில் ..ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த

வேளையில்

எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்

இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து

நீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது

காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்

களத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள்

என்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான்.

எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்

எதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன் எம் உரிமைக்காக நானும் வந்து

படையில் சேருவேன்

வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம்

இல்லை

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...liel_soriummp3/

விழியில் சொரியும் அருவிகள் -எமை

விட்டுப்பிரிந்தனர் குருவிகள்

பகைவன் கப்பலை முடித்தனர் -திரு

மலையில் வெடியாய் வெடித்தனர்.

தம்பி கதிரவன் எங்கே

தணிகை மாறனும் எங்கே

மதுசாவும் எங்கே

தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்

தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்

ஏறி நடந்தவரே -உங்கள்

ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக

கொடுத்தவரே

தமிழ் ஈழம் உமை மறக்காது

பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை

வீழும் வெடியெனவானீர்

பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்

ஈரம் கசிந்திடப் போனீர்

விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி

வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை

தீயில் எரித்துவிட்டீரே -அவன்

ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே

ஈழம் மலர வைத்தீரே

வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...Zzye/thaayamma/

போரம்மா

உனையன்றி யாரம்மா

போரம்மா

உனையன்றி யாரம்மா

போரம்மா

உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்

தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்

ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்

ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்

ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு

வீசும் காற்றின் வேகம் கொண்டு

மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா

மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்

மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு

விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி

ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...lam_thanthamp3/

அடைக்கலம் தந்த வீடுகளே

போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை

அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்

அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்

கதவு திறந்தீர்களே -எம்மை

தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி

பார்க்க மறந்தீர்களே

பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி

உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்

தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்

நினைவு நூறல்லவா

நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த

இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்

முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்

சிறகால் மறைத்தீர்களே

சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._paravaikalmp3/

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்

நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும்பறைவகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்

யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை

ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்

காலங்கள் பாடுங்கள்

(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள் சிந்திய ரத்தங்கள்

காய்ந்திடும் முன்னரே கால்களில்

வீழ் எனச் சொன்னது

வேங்கைகள் இதை தாங்குமா

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்

பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான்

சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது

பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்

அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள்

மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்

துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது

நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது

..இந்த பாட்டு வரி எழுதினது..வெண்ணிலா அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/jcbyqGdG//

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

ஈகத்தில் பூரித்து வாழும் தென் தமிழீழம்

உயிரெங்கள் தமிழென்று வாழ்வோம் வாழ்வே பொற்காலம்

காடென்ன கடலென்ன எங்கள் பயணம் உயிரோட்டம்

கனவுக்குள் உணர்வுக்குள் தேச உறுதிக்கொடியேற்றும்

உரிமைமைதானே உயிரிலும் மேன்மை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே

ஓய்வு என்பது எங்களின் வாழ்வில் இறந்த பிறகு என்றாயே

விரையும் நெஞ்சில் பயமில்லை பிரிவு என்றும் தடையில்லை

விடியும் வரையும் ஓய்வில்லை எங்கும் நாம் செல்வோம்

(சொட்டும் விரலால்.....)

தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம்

வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம்

காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம்

கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம்

உந்தன் வாழ்வின் காலத்தில் தலைவா எங்கள் விடுதலை வரவேண்டும்

உன்னைப்போல தலைமை எங்கள் வாழ்வில் வருமா நீ வேண்டும்

எத்தனை குண்டுகள் கொட்டட்டும் எத்தனை உயிர்களைக் கொல்லட்டும்

எப்படி வந்தும் முட்டட்டும் எதிலும் நாம் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...oorirandu_peer/

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை

எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்

பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்

பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு

அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்

அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.