Jump to content

பனிப்புயல் படங்கள்


Recommended Posts

பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம்.

இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம்

காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....

2921221000104558986S600x600Q85.jpg

2125094800104558986S600x600Q85.jpg

2258583720104558986S600x600Q85.jpg

2623601790104558986S600x600Q85.jpg

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பனிமழை என்றால் நல்ல விருப்பம். அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நாங்கள் சூழலை நேசிப்பவர்கள். காரை வெறுப்பவர்கள். அதனால் பனிப் புயலை சைக்கிளில் சென்று சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம். ஓடும் சைக்கிள்.. பாதையில்..சரிவில் சறுக்கி.. விழ அதனோடு கூடி விழுந்து பனிப்பொழிவுக்குள் புதையுண்ட நினைவுகள்.. மாறாத சுகங்கள்..! :)

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி நிழலி. நாளையும் பனிப்புயலாம். மேலும் தெளிவான படங்களை எடுத்து இணையுங்கள்.

Link to comment
Share on other sites

இஞ்ச பனிப்புயலோ என்ன கருமமோ... குளிர் சரியாய் கூடியிட்டுது. என்னதான் வீட்டுக்க சூடு வந்தாலும் குளிர் குளிர்தான். நேற்று பல்கலைக்கழகம் கூட நடக்கவில்ல. மூடீட்டாங்கள் 11.00 மணியோட. சினோவுக்க நீண்டதூரம் நடக்கிறது அதுவும் காத்து அடிக்கேக்க நடக்கிறது கொடுமையான அனுபவம்.

நானும் உங்களை மாதிரி சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் நான். நானும் கனடாவுக்கு வந்த ஒரு வருசத்தில கார் ஆசை வந்து $28,000 க்கு finance பண்ணி ஒண்டு வாங்கினது. பிறகு ஓடோ ஓடு எண்டு ஓடி கனடா, அமெரிக்கா பெருந்தெருக்கள் எல்லாம் அளந்து பார்த்து கடைசியில விபத்து ஒண்டுலையும் சிக்கினபிறகு (அது எண்ட பிழையில அடிபட இல்லை) காரை வித்துபோட்டு பொடிநடை பழகீட்டன். நகரத்துக்க இருகிறதால எனக்கு கார் இப்ப தேவைப்பட இல்லை. ஆனால்.. தள்ளி இருக்கிற ஆக்கள் கார் இல்லாட்டி குளிருக்க விறைச்சு சாக வேண்டியதுதான். ஒழுங்கான நேரங்களுக்கு பேருந்தும் வராது. குளிருக்க நிண்டு வழிமேல் விழி வைச்சு காத்து இருக்கவேணும்.

பழைய கார் எண்டு சொல்லி இருக்கிறீங்கள். பரவாயில்லை. அதுதான் நல்லது. புதுக்காரை வாங்கினால் ஆக்களுக்கு படம் காட்டலாம். அது தவிர வேறு பெரிசாய் உபயோகம் ஒண்டும் இல்ல. இப்ப நல்ல பழைய கார்கள் மிகவும் நல்லாய் ஓடுது. பெரிய பெரிய தலைகள் பழைய கார்தான் பாவிக்கிறது. அது பாதுகாப்பானதும் கூட. :)

Link to comment
Share on other sites

குளிர் என்றவுடன் இங்கை குளிருது ( இங்கையும் பனிகொட்டி கரைந்துவிட்டது) கொட்டுறதிலை பிரச்சினை இல்லை நடக்கேக்க வழுக்கும் பாருங்க கடவுளே நிறைய தடவை விழுந்து எழுந்திருக்கின்றேன் வழுக்கி . . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் என்றவுடன் இங்கை குளிருது ( இங்கையும் பனிகொட்டி கரைந்துவிட்டது) கொட்டுறதிலை பிரச்சினை இல்லை நடக்கேக்க வழுக்கும் பாருங்க கடவுளே நிறைய தடவை விழுந்து எழுந்திருக்கின்றேன் வழுக்கி . . .

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

Link to comment
Share on other sites

இது பரவாயில்லை. நான் வந்து சேர்ந்த அடுத்த வாரம் மனைவியின் நண்பிவீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்கள் வீடு சற்று ஏற்றத்தில் இருந்தது. போகும்போது தெரியவில்லை. இறங்கும்போது நிறைய அனுபவப்பட்டேன். கால் வைத்ததுதான் தெரியும் கண் திறந்து பார்த்தேன். எங்கேயோ விழுந்து கிடக்கின்றேன். அவ்வளவு சறுக்கல் வாழ்க்கையில் முதல் வழுக்கலே அதுதான் ( வேறை நிறைய இருக்குங்கோ ) . அன்றிலிருந்து பனி விழுகின்றது என்றாலே கால் பயப்படத்தொடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

நான் ஓரிருமுறைதான் வழுக்கி விழுந்திருக்கிறேன். அதுவும் வந்த புதிதில்தான். நான் பனியின்போது, அன்னநடையிலும் மெதுவாகத்தான் நடப்பேன். அதுவும் ஹீல்ஸ் வைச்ச பாதணியோடுகூட நடந்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

:wub::)

இதுவரைகாலமும் ஸ்காபரோவில் இருந்தபடியால், பனிப்புயல்களின்போது, பேருந்தில்தான் பயணம் செய்தேன். ஆனால், இப்ப மார்க்கம் வந்தபின்பு, காரில் போகவேண்டிய கட்டாயம். அதனால் வேலைக்கு லீவு போடுவதும் அதிகரித்து விட்டது. எங்கள் வீதி வேறு மிகவும் சிறியது. ஆகவே நேரம் சென்றுதான் வழிப்பார்கள். இன்றுகூட பனியில் என் கார் புதைந்ததால், வேலைக்கு 1 மணிநேரம் பிந்தித்தான் போனேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்வதற்கு ஸ்காபரோ போன்ற இடம்தான் சிறந்தது. எல்லாமே அருகில் இருக்கும். ஆனால் இங்கு, பால் வாங்குவதற்குக்கூடக் காரில் செல்ல வேண்டிய கட்டாயம். :):D

Link to comment
Share on other sites

கடந்த வருடம் தான் பனியையும், பனிப்புயலையும் வாழ்வில் முதல் முறையாக நான் பார்த்தது, மிக. மிக ரசித்து பார்த்தேன். ஏற்கனவே பலர் பனியில் சறுக்கி விழுவது பற்றி நன்கு பயப்படுத்தியிருந்ததால், பெரிய சப்பாத்து வாங்கி போட்டு விழாமல் தப்பிவிட்டேன். வீட்டிற்கு முன்பாகவே பேருந்து தரிப்பிடமும் இருந்ததால் போக வர இலகுவாக இருந்தது. இன்னமும் எனக்கு பனி பற்றிய ஆச்சரியமும் விருப்பமும் குறையவில்லை. கடும் பனிபுயல் வீசும் போது நேற்றும் வெளியே கொஞ்ச நேரம் நின்று அனுபவித்து பார்த்தேன்.

கார் ஓட்டுவதுதான் செரியான கஷ்டமாக இருக்குது. இங்கு வந்து தான் முதன் முறையாக கார் ஓட்ட பழகினதால முதல் அனுபவமே பனிக்காலத்தில் ஓட்டும் அனுபவமாக ஆகிப்போட்டுது. நான் பார்த்து வலது பக்கம் திருப்பினால் அது சறுக்கி கொண்டு இடது பக்கமாக திரும்புது. எனக்கு முன்பாக ஒரு கார் பனியில் சறுக்கு குந்து ஒன்றில் ஏறி விட எனக்கு வயிற்றை கலக்க தொடங்கிட்டு.

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி நிழலி. நாளையும் பனிப்புயலாம். மேலும் தெளிவான படங்களை எடுத்து இணையுங்கள்.

இந்த படங்கள் பனிபுயலின் போது எடுத்தவை. எவ்வளவோ முயன்றும் வெளிச்சத்தினை கூட்ட முடியவில்லை. பனிப்புயலின் போது இருந்த அதே இருட்டு தான் படத்திலையும் வந்து இருக்குது. நான் வேறு சில நல்லா படம் எடுக்க தெரிந்த ஆட்கள் எடுத்த பனி புயல் படங்களை பார்த்து இருக்கன். நல்லா வெளிச்சமாக இருக்கும். எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனது கமறா ஓரளவுக்கு நல்ல கமரா. Olympus DSLR (Digital SLR) 10.1 MP கமரா. ஆனால் எனக்குத்தான் சரியாக எடுக்க வருகுது இல்லை. பனியில் நல்ல துலக்கமாக வெளிச்சமாக எடுக்கும் முறை தெரிந்தால் சொல்லவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனிப்புயலின் வேகத்துக்கு எங்களால் நடக்க முடியுமா? அதுவும் காற்றுக்கு எதிர்த்திசையென்றால் காலையும் எடுத்து வைக்க முடியேல்லை. மூக்கு, காது இருக்கா என்று தொட்டுப்பார்க்க கையுக்கு உணர்ச்சியில்லை அது இரத்தம் ஏறி விறைச்சுப்போட்டுது. 'கடவுளே....தாயக நினைவுகள் தான் அப்ப வந்து சூடேற்றும்"...

ஒட்டாவாவில் அதிக குளிர், இம்முறை பனிப்பொழிவு ரொரண்டோவில் தான் அதிகம் என நினைக்கின்றேன். நாளைய வானிலை எச்சரிக்கை அறிக்கை சொல்லி இருக்கிறாங்கள்.

மகிழூந்தில் போறவை கவனமா ஓட்டுங்கோ தற்போதைக்கு தூரப்பயணங்களைத் தூரத்திலேயே வையுங்கோ 300ற்கும் மேற்பட்ட விமானப்பயணங்கள் ரத்துப்பண்ணி இருக்கினம்.

நாளைக்குத்தான் உண்மையான பனிக்காலம் தொடக்கம் அதுக்கு முதலே வாட்டு வாட்டு என்று வாட்டிப்போடுது. ஒட்டாவாவில் பேருந்துகள் வேலை நிறுத்தம் வேறு கொடுமையாக்கிடக்கு. நிலமை.

Link to comment
Share on other sites

இப்ப மார்க்கம் வந்தபின்பு, காரில் போகவேண்டிய கட்டாயம்.

அட... நானும் மார்க்கம் தான்.

Link to comment
Share on other sites

என்னவோ மார்க்கம் மார்க்கம் எண்டுறாங்க.. என்ன மார்க்கமப்பா? :wub:

Link to comment
Share on other sites

என்னவோ மார்க்கம் மார்க்கம் எண்டுறாங்க.. என்ன மார்க்கமப்பா? :wub:

இலகுவில் நரகத்திற்கு (அய்யோ இலங்கையை சொல்லவில்லை) போகும் வழியைதான் மார்க்கம் என்று சொல்லுறம்

Link to comment
Share on other sites

உலகின் மிக நீளமான சாலையான யங் வீதியின் ஒரு பகுதி பனிப்புயலின் பின்னர் இரவு 11 மணியளவில்....

img1459qe7.jpg

Link to comment
Share on other sites

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவி சாம பிசாசு தானே அதனால் அவர் இரவில் தான் வெளியில் வருவார் ஆனால் உந்த படத்தை அருவி தான் எடுத்தவர் என்பதை நான் நம்ப மாட்டன் 3 மணிக்கே வேலையில இருந்து வீடு போய் நித்திரை கொண்டவராம் நேற்று பிறகு எழும்பி 11 மணிக்கு படம் எடுத்தவர் என்பதை நம்ப முடியுமோ?

Link to comment
Share on other sites

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :wub:

அடடா டவுண்ரவுண் பகுதிக்கு இரவில போகக்கூடாதெண்டதெல்லாம் இருக்கிறதா? இரவு வேளையில் டவுண்ரவுண் வீதிகளில் காலற நடைபோவது மிகவும் இனிமையானது... :P

Yonge-Carlton/college Intersection... சரியான இடம்.

அருவி சாம பிசாசு தானே அதனால் அவர் இரவில் தான் வெளியில் வருவார் ஆனால் உந்த படத்தை அருவி தான் எடுத்தவர் என்பதை நான் நம்ப மாட்டன் 3 மணிக்கே வேலையில இருந்து வீடு போய் நித்திரை கொண்டவராம் நேற்று பிறகு எழும்பி 11 மணிக்கு படம் எடுத்தவர் என்பதை நம்ப முடியுமோ?

வேலையில இருந்து 13:30 மணியளவில் வீடு திரும்பியது உண்மை, ஆயினும் வீடு வந்து சேர 15:30 மணியாகிவிட்டது:) . அதன் பிறகெல்லாம் நித்திரைகொள்ளவில்லை (வரும்போதே நித்திரை கொண்டாச்சு >_> )

Link to comment
Share on other sites

பனிபுயலால் பாதிக்கப்பட்டோர் அதிகம் போல??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பனிமழை என்றால் நல்ல விருப்பம். அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நாங்கள் சூழலை நேசிப்பவர்கள். காரை வெறுப்பவர்கள். அதனால் பனிப் புயலை சைக்கிளில் சென்று சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம். ஓடும் சைக்கிள்.. பாதையில்..சரிவில் சறுக்கி.. விழ அதனோடு கூடி விழுந்து பனிப்பொழிவுக்குள் புதையுண்ட நினைவுகள்.. மாறாத சுகங்கள்..! :icon_mrgreen:

அவனவன் குளிருக்கு நடுங்கிச்சாகிறான்.

இஞ்சை ஒராள் சயிக்கிள் பாதையிலை சறுக்கி சுகம் கண்டதாய் புலம்புறார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் குளிருக்கு நடுங்கிச்சாகிறான்.

இஞ்சை ஒராள் சயிக்கிள் பாதையிலை சறுக்கி சுகம் கண்டதாய் புலம்புறார். :lol:

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.