Jump to content

பனிப்புயல் படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

வெள்ளை ஆக்களில மாற்றம் பெரிசா தெரியாது. அதேபோல காப்பிலிகள் கறுப்பாத்தான் இருக்குங்கள். இந்த இரண்டுக்கும் நடுவில.. இருக்கினம்.. அவைதான் கொஞ்சம் குளிருக்கு மூடிக்கட்டிறதால அவிஞ்சு சுவப்பாவினம்.. பிறகு சமருக்கு பழைய படி மாறிடுவினம்..!

அதெல்லாம் ஜீனில வரனும். அப்பதான் நிரந்தர வெள்ளை ஆகலாம்.

நானும் கறுப்புத்தான். வெள்ளையில்ல..! :icon_mrgreen:

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

ஏன் கு.சா சலிச்சுக்கிறீங்க. இப்ப நான் சொல்லித்தாரனில்ல. அதுபோல நடந்துக்கோங்க.. குளிரை மகிழ்ச்சியோட கழிக்கலாம்..! :lol:

58mu7.jpg

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வராமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஜீன்சைப் போட்டு விட்டுத் தான் கழருவதை மறைக்க பாவடை மாதிரி சேட் போடுகின்றோம் அல்லவா! அப்படி உடுப்புப் போட்டால் மட்டும் போதாது, ஏதாவது றாப் பாட்டுக் கேட்டபடி, அல்லது கேட்காவிட்டாலும், அதுக்கேற்ற மாதிரி கையை, காலைப் போட்டு ஆட்டி ஆட்டி நடக்கணும்... இதெல்லாம் பழக எவ்வளவு காலம் பிடிக்குமொ தெரியல்ல...

Link to comment
Share on other sites

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வரமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :D

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :lol::D

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

ஆஹா,,,தமிழச்சி...." நல்லா உறைக்கிற மாதிரிச்சொல்லுங்கோ. பெண்களைப்பற்றிய மட்டமான இவர்களின் அபிப்பிராயம் இவர்களாவே ஏற்படுத்திக்கொண்டதுதான்...என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

Link to comment
Share on other sites

கனடாவில் முதல் வருட அநுபவம்.

பனி வீழ்ந்த அந்த முதல் நாள் காலையில் வேலை;ககுப் போவதற்காக வெளியே வந்த எனக்கு வெண்துகள்களால் முடப்பட்டிருந்த முற்றத்தையும் வீதிகளையும் பார்த்து ஒரே ஆனந்தம்.

அந்தப் பஞ்சு போன்ற பனிப்படலத்திற்குள் என் கால்களை வைப்பதற்கே கவலையாக இருந்தது. ஆனால் இப்போது பனிப் பொழிவு என்றதுமே எரிச்சலாய் இருக்கிறது.

சில விடயங்கள் ஓய்வாக இருந்து ரசிப்பதற்கு ஆனந்தம் தான். ஆனால் அவை தரும் சிரமங்கள் அவற்றை வெறுக்க வைக்கின்றன.

Link to comment
Share on other sites

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

நிச்சயமாக மாற்றலாம். பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்து. :icon_mrgreen::lol::D

Link to comment
Share on other sites

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :D:lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :lol: :lol:

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

நான் பூமியின் வடமுனைக்கு கிட்ட போய் கூட போய் பனியில உருண்டு விளையாடினனான். அப்புறம்.. என்ன..!

நாங்கள் எல்லாம் துருவக் கரடிகள் போல.. சூழலுக்கு இசைவாக்கப்பட்டவர்கள்..! என்ன செய்யுறது இதைக் கேட்க பொறாமையாத்தான் இருக்கும்..! :D

Link to comment
Share on other sites

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :icon_mrgreen::lol:

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :icon_mrgreen::lol::D

இப்படிச் சொல்லிச் சொல்லியே உலகை ஏமாற்ற வேண்டியதுதான்..! ஆனால் செய்வதெல்லாம்...?! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
Link to comment
Share on other sites

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

இப்படி ஒரு கேள்வியைகே கேட்கப்படாது. ஏனெனில் அழகு நிலையம் போகாத ஆண்கள் அருகிவருகிறார்கள். அந்தளவுக்கு அழகில் அக்கறை.. எல்லாருக்கும்..! யாருக்குத்தான் அழகா இருக்க விருப்பமில்லாமல் இருக்கும்..!

நான் மேலே ஒரு உதாரணத்துக்காகக் கையாண்டனே தவிர பெண்கள் அழகு நிலையம் போகக் கூடாது என்பதல்ல அதன் பொருள். இக்கேள்வி எனது கருத்தைத் திரிக்காது இருக்க இதை இப்பவே சொல்லிடுறன்..! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

Link to comment
Share on other sites

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :lol::wub:

Link to comment
Share on other sites

நீங்கள் குளிர்பற்றி கதைக்கேக்க, குமாரசாமி அண்ணா சொல்லிறதையும் வாசிச்சபிறகு எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிது.

இஞ்ச ஒருத்தர் இப்பிடித்தான் இரவு பகலாய் மாடு மாதிரி வேலை செய்யுறது. பிறகு வெளியால நள்ள குளிருக்கபோயிட்டு உடம்பு விறைச்சபடி வேலையால வீட்டவந்துபோட்டு... கை சரியா விறைச்சுப்போனதால குளிரால தீவிரமா பாதிக்கப்பட்ட நிலையில, ஓடிப்போய் பைப்பை திறந்து நல்லாய் சுடுதண்ணிய திறந்து ஓடவிட்டு அதுக்க கையை வைச்சு குளிரை போக்கி இருக்கிறார். பிறகு நடந்தது என்ன தெரியுமோ? கொஞ்ச நேரத்தால 911ஐ அழைச்சு.. பிறகு வைத்தியசாலைக்கு போய் கடைசியில அவரிண்ட ஒரு கையை வெட்டி அகற்றியது. கொதிநீரால அது அவிஞ்சு செயல் இழந்துபோட்டிது. இந்தக்கதை எனக்கு சொன்னது ஓர் வழக்கறிஞர். தன்னடட்ட ஏதோ அலுவலாய் வாரவறாம். தனக்கு சோகக்கதையை சொல்லி இருந்தார் எண்டு ஏதோ கதைக்கேக்க சொன்னா.

எண்டபடியால... உந்த குளிரை சும்மா எடுக்கப்படாது. கொஞ்சம் கவலையீனமாக இருந்தால் உயிரையே பறிச்சுவிடும்.

Link to comment
Share on other sites

அதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம் முரளி. யேர்மனிக்கு வரும் பலர் ஆரம்பத்திலே செய்யும் வேலை உணவகங்களில் கோப்பை கழுவுதல்.. சிலருக்கு கழுவுதலுக்கு பாவிக்கும் மருந்தின் ஒவ்வாமையால் கை விரல்களின் தோல் வெடிக்கும்.. எனினும் தாயகத்திலே அவர்களின் குடும்பத்தின் தேவைகளையோ அல்லது அவர் யேர்மனி வந்ததற்கான கடனுக்காகவோ, அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அது வேலையைச் செய்வார்கள்.. குறிப்பிட்ட காலத்தில் வெடித்த தோல் பகுதிகளினூடாக உட்செல்லும் நீர் எலும்புகளைத் தாக்கும்வேளையில்.. சிலர் கைவிரல்களை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

பல நாடுகளிலே எம்மவர்களில் கண்ட முக்கியமான நோய் முதுகு வலி. எனது அறிவுக்கு எட்டியவரையில் அளவுக்கு மிஞ்சிய உடலுழைப்பால் இது உருவாகிறதோ என நினைக்கிறேன். எதுக்கும் நெடுக்ஸ் இந்தக் கருத்தை கவனித்தால் விளக்கம் அளியுங்கள்!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

அப்புடி சொல்லுங்கோ சோழியண்ணை :lol: ஏதோ கொஞ்சப்பேர் இப்ப தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு குலுக்கீனம் அதுவும் ஒருசில லண்டன் டமிழ்ஸ்??????

யாழில் உலாவரும் லண்டன் உறவுகள் மன்னிக்கவும்.

எனது முக்கிய உறவினர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றார்கள்.அவர்களின் வாழ்க்கையும் ஒருசில பழக்கவழக்கங்களும் பாசைகளும் பரிபாசைகளும் காறித்துப்புமளவுக்கே இருக்கின்றது.தமிழ் கதைத்தால் கேவலம் வெட்கம் என நினக்கின்றார்கள் எம்மவர்கள்.அதுவும் நெடுக்கர் இருக்கும் நாட்டில். :wub:

Link to comment
Share on other sites

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

ஒரு முடிவோட தான் இருக்கிங்களா தூய்ஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

கு.சா அண்ணா.. இதில வருத்தப்பட என்ன இருக்குது. நாங்கள் காலம் காலமா சிங்களவனை.. கள்ளத்தோணி என்றல்லையா. மோட்டுச் சிங்களவன் என்றல்லையா... மலையக தமிழ் மக்களை.. தோட்டக்காட்டான்.. கள்ளத்தோணி... வடக்கத்தையான்.. என்றல்லையா. அப்ப எல்லாம்.. அவைட மன வருத்தம் புரியல்ல.. யாழ்ப்பாணத்தாருக்கு.

இப்ப உண்மையாவே.. அவை களவா வந்து அசைலம் அடிச்ச உண்மையைச் சொன்னா மனம் நோகுதாம். நொந்தா நோகட்டும். இவை நோகடிச்ச மனங்கள் எத்தனை எத்தனை அத்தனைக்கும் யார் ஆறுதல் சொல்வது..!

வெள்ளையள் கூட அசைலம் சீக்கர் என்ற உடன இரண்டாம் பட்சமாத்தான் நடத்தினம். அப்படி இருக்கேக்க..!

அதுகிடக்கட்டும்..

என்னோட நண்பர் வட்டம்.. படிக்கிற இடம்சார்ந்ததால.. அதிகம்.. கருத்துக்களை உள்வாங்கக் கூடியதா இருக்குது. எம்மவர்கள் மீசை வைச்சுத் திரிவதை.. சிரிப்புக்குரிய விடயமாக்கி.. நக்கல் அடிச்சு மகிழ்ந்ததை நானே கண்டு.. பொங்கி எழுந்திருக்கிறன். இருந்தாலும் அவர்களின் எண்ணத்தில் நம்மவர்கள் ஜோக்கர்களாகவே காட்சி அளிக்கின்றனர். அதை மாற்ற முடியவில்லை..!

அப்படி ஏன் நாம் நடந்து கொள்ள வேண்டும்..?! ஏன் இங்கு பிறந்த நம்மவர் பிள்ளைகளுக்கே பெற்றோரின் செயற்பாடுகளில் திருப்தியில்லை. அதை பல பெற்றோர் அறிவதில்லை. தாம் செய்வது சரி என்றே நினைக்கின்றனர். காரணம்.. அவர்களுக்கு சுட்டிக்காட்டி மாற்றங்களை பரிந்துரைக்க யாரும் இல்லை என்பதுதான் முக்கிய காரணம். இப்படி வெட்கம் பார்த்தால் ஏதும் பெரிசா மாற்றங்கள் வரும் என்று நான் நினைக்கல்ல. இது வெட்கப்படுவதற்குரிய தேசங்கள் அல்ல. நாம் எம்மை தயார் செய்ய வேண்டிய தேசங்கள்..!

நாங்கள் 7/24 மணி நேரமும் குளிருக்க விளையாடச் சொல்லேல்ல. நானும் கடினமான வேலைகளுக்குப் போய் இருக்கிறேன். குளிருக்குள் நின்று வேலை செய்திருக்கிறேன். இருந்தாலும்.. இயற்கையை என்ஜோய் பண்ண வேண்டிய நேரங்களில் பண்ணி இருக்கிறோம்.

எம்மவர்கள் நிகழ்வுகளில் வெள்ளைகள் கலந்து கொள்வது மிகக் குறைவு. காரணம் எம்மவர்கள் அவர்களுடன் சேர்வதில்லை. ஆனால் படிக்கும் இடங்களில் அப்படியல்ல. நாங்கள் எல்லாம் நண்பர்களாக பகிடியாகக் கூட பல உண்மைகளை சொல்வோம். அது எமக்கு அவர்கள் எப்படி எங்களை நோக்குகின்றனர்.. அவர்களின் எண்ணத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். அந்த வகையில் அறிந்ததைக் கொண்டுதான் நான் கருத்தெழுதுகிறேன்.

சோழியண்ணன் குறிப்பிடுவது போல.. நான் எம்மவர்களை இங்கு எழுதுவதுபோல வெளியில் அகதி என்றெல்லாம் அழைப்பதில்லை. இங்கு எழுதுவது ரோசம் வரட்டும் என்றுதானே தவிர.. புண்படுத்தனும் என்பதற்காக அல்ல.

எம்மவர்களுக்கு நிறைய உதவிகளை.. எனக்கு தெரிந்த வழிகாட்டுதல்களை செய்திருக்கிறேன். அதுமட்டுமன்றி எம்மவர் பிள்ளைகளின் கல்விக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இங்கு பல பெற்றோர் அனுப்பப்படும் கடிதங்களை சரிவர வாசிச்சு விளங்க முடியாத நிலையில் பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்குரிய பாடசாலை அனுமதிகளைக் கூட இழந்து நிற்கின்றனர். பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். ஆனால் தொடர்பாடல் மொழியை விருத்தி செய்ய முயல்வதில்லை. பலருக்கு அதற்காக உள்ள வசதிகள் பற்றியே தெரியாது.

பல நோயாளிகள்.. சரியான குளிர் உடுப்பின்றி வந்துபோவதை அவதானித்திருக்கிறேன். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உபாதைகளாகக் கருதுவதாக மருத்துவ ஆலோசகர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றை இங்கு சொன்னால் அது எம்மவருக்கு.. வெட்கமாக.. பஞ்சப்பட்டினிகளாக... தெரிகிறது.

யதார்த்தம் என்பது நாம் விரும்பும் வடிவில் எப்போதும் இருப்பதில்லை. அதை அப்படியே எதிர்கொண்டால் தான் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்க முடியும். அதைவிடுத்து கற்பனையில் யதார்த்ததை தீர்மானித்துக் கொண்டு வாழ்வதால் தான் எம்மவர்களில் பலர் படும் துன்பங்களை நாமே அறியாது.. செய்திகளாக்கி வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்கான உதவும் கரங்களாக இருக்க முயலாமல். அந்த நிலை மாறி எமது மக்களும் இதர சமூகத்தினரால்..எல்லா வகையிலும் மதிப்போடு நோக்கப்படும் நிலை உருவாகனும் என்பதே எனது விருப்பம். அவா..! :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

நாங்கள் எங்களை குறைவாக எண்ணிக் கொண்டு.. இருப்பதால் தான் அடுத்தவர் சொல்லும் நியாயம் கூட எமக்கு குறையாகப்படுகிறது. அதை தமக்கு தாமே சமாதானம் சொல்லி எம்மவர்கள் சரிக்கட்ட முயல்கின்றனரே தவிர.. தேவையான மாற்றங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து அதன் படி போக நினைப்பதில்லை..! இது புலம்பெயர்ந்த எம்மவரில் இருக்கும் ஒரு குறைபாடு..!

நான் நிஜத்தில் தமிழர்களையோ.. இல்ல பிற மக்களையோ வேறு பிரித்துப் பார்த்துப் பழகுவதில்லை. யார் எம்மோடு பழக ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களோடு பழகுவேன். ஆர்வம் காட்டாதவர்களிடத்தில் வலிந்து போய் பழகமாட்டேன். தேவைகளுக்காக பேசிக் கொள்வேன்..! :wub::lol:

Link to comment
Share on other sites

படங்கள் இணைப்பிற்கு நன்றி நிழலி......!

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub: :wub:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.