Jump to content

பனிப்புயல் படங்கள்


Recommended Posts

உண்மையிலேயே குளிர்காலத்தில் நான் கொஞ்சம் கலர் மாறிடுவேன். அது ஒரு வகையில் சந்தோம்

மேலும் முன்பு விழுந்த நோ உண்டான இடத்தில் அடுத்த குளிர்காலத்திலும் கட்டாயம் வலி இருக்கும். இது எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பனிப்பொழிவு ஏற்பட்ட சற்று பின் சறுக்கி விழச் சந்தர்ப்பம் குறைவு. ஆனால் பனி உருகும் போதோ அல்லது உப்பைப் போட்டு பனியின் உருகுநிலைக்குரிய வெப்பநிலையை குறைக்கும் போதோ.. சறுக்கி விழச் சந்தர்ப்பம் அதிகம். அதற்கான எச்சரிக்கைகள் பெரும்பாலும் தரப்பட்டிருக்கும்.

பனி காலத்தில் கிறிப் கூடிய காலணிகளை அணிவது.. சறுக்கி விழுவதை ஓரளவு குறைக்கும்.

பனி உருகும் போதோ.. அல்லது உப்புப் போட்டு உருகத் தூண்டும் போதோ.. சிறிது நிதானமாக நடந்தால் பிரச்சனையில்லை. அல்லது உருகாத பனி மீது கால் வைச்சு நடக்க வேண்டும். குறிப்பாக.. வீதியின் ஓரங்களில் உருகாத பனி இருக்கும். அதில் கால் வைத்து விரைவால நடந்து போயிடலாம்..!

பனிகாலத்துக்கு உகந்த காலணி மாதிரி..

http://www.wiggle.co.uk/images/northwave%2...anion%20new.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub::rolleyes:

அவர் சரியான பிசி ஆள். அத்தோடுஅவரைக் கூட்டிட்டுக் கொண்டு போய், அவர் விழுந்தாலும், காத்தடிச்சு பறந்தாலும் நான் தான் கஸ்டப்படணும்.

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :lol:

அதுவா! கொஞ்சம் பழுப்பாக இருந்தால் தானாம் சீதனத்தை கூட்டிக் கேட்கலாமாம்.... கொழும்பில் ஒரு வீடு, கனடாவில் ஒரு நீச்சல் தொட்டி வாங்க வேண்டாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சரியான பிசி ஆள். அத்தோடுஅவரைக் கூட்டிட்டுக் கொண்டு போய், அவர் விழுந்தாலும், காத்தடிச்சு பறந்தாலும் நான் தான் கஸ்டப்படணும்.

ஏன் அருவி காத்தில பறக்கிற மாதிரியோ இருக்கிறார்?

அதுவா! கொஞ்சம் பழுப்பாக இருந்தால் தானாம் சீதனத்தை கூட்டிக் கேட்கலாமாம்.... கொழும்பில் ஒரு வீடு, கனடாவில் ஒரு நீச்சல் தொட்டி வாங்க வேண்டாமா??

பின்னர் கனடாவில வேண்டிற நீச்சல் குளத்தை மெயின்ரைன் பண்ண கொழும்பில வேண்டிற வீட்டைத்தான் விக்கவேணும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அருவி காத்தில பறக்கிற மாதிரியோ இருக்கிறார்?

இறுக்கிக் காற்று அடிச்சால் சொல்லுகின்றேன். ஒட்டாவாவில் வைத்துப் பிடிச்சுக் கொள்ளுங்கள்.

பின்னர் கனடாவில வேண்டிற நீச்சல் குளத்தை மெயின்ரைன் பண்ண கொழும்பில வேண்டிற வீட்டைத்தான் விக்கவேணும். :rolleyes:

அப்ப எதுக்கு பராமரிப்புச் செலவு குறைவு? குறைந்தபட்சம் கனடாவில் ஒரு மலசலகூடத்தையாவது செரந்தமாக வாங்கின்ற முடிவோட தான் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அப்ப எதுக்கு பராமரிப்புச் செலவு குறைவு? குறைந்தபட்சம் கனடாவில் ஒரு மலசலகூடத்தையாவது செரந்தமாக வாங்கின்ற முடிவோட தான் இருக்கின்றேன்.

நடமாடும் மலசலகூடம் என்றால் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் :lol:

Link to comment
Share on other sites

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

எப்படிச் சுத்துது? இடம் வலமோ? வலம் இடமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்பா எங்க துவங்கி எங்க எல்லாரும் வந்திருக்கிறியள்.

தலை சுத்துது

ரசிகை அக்கா' தலைப்பிலேயே இருக்கே 'பனிப்புயல்" என்று :lol:!!...

மிச்சம் விளங்கும் எண்டு நினைக்கிறன் உங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய பூர்வீக மக்கள் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு பூராவும் பரவிக்கிடக்கும் பனிப் படிவுகளோடு வெள்ளை கிறிஸ்மஸ் கொண்டாடும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

கனடிய மக்களுக்கு வெள்ளைக் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..!

_45321617_lorne_thompson1.jpg

எனக்கு இந்தப் பறவையை (Grey Partridge) பிடிச்சுப் பார்க்கனும் போல இருக்குது. கனடாவில் யாராவது.. இதை வீடுகளில் பார்த்திருக்கிறீர்கள்..!

மேலதிக படங்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது..

http://news.bbc.co.uk/1/hi/in_pictures/7796558.stm

Link to comment
Share on other sites

கழுகு/பருந்து போல இருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுகு/பருந்து போல இருக்கே!

இல்லை அது கோழி போன்ற ஒரு பறவை. அப்பாவியானது. :lol:

Link to comment
Share on other sites

இல்லை அது கோழி போன்ற ஒரு பறவை. அப்பாவியானது. :lol:

ஓ,,அப்படின்னா சரி

நான் பயந்திட்டன்...அது பார்க்க பருந்து போல இருக்கு ..அதை போய் பிடிக்க ஆசை என்கிறீர்களே என..

Link to comment
Share on other sites

என்ர அனுபவம்(பனிக்குள்ள) அதிகம் பாருங்கோ,

நான் இங்க தாபால் நிலையத்தில வேலை செய்யுறன்,

(கடிதம் குடுக்கிற வேலை இல்ல போடுற வேலை)

என்னோட வேலை செய்யிறதில 75% பழசுகள்,அதில 50% பெண்கள் (இளமைக்கு வந்த சோதனை)

(அதுக்காக சாத்திரி,கு.சா,கந்தப்பு தாத்தாக்கள் மாதிரி யோசிக்காதேங்கோ) அதனால மலைப்பகுதிகளுக்கு

அவயல் அனுப்புவது எங்களத்தான்(இங்க ஏறினா மலை இறங்கினா கடல்)எனக்கும் பனி இருக்கிற மலையில வாகனம் ஓடுறது எண்டா ஏதோ மிக்27 ஓடுற உள் உணர்வு,(அதுக்காக முந்தி மிக் எல்லாம் ஒடினதோ எண்டு கேக்கப்பாடாது மிக்கையும் கிபிரையும் பார்த்து மரத்தச்

சுத்தி ஓடின ஞாபகம்).

பலதரம் உள் உணர்வு கூடி பனீக்க கொண்டே வாகனத்தை விட்டிருக்கன்,

இருந்தும் வெள்ளையல் என்ன வேலைய விட்டு தூக்கேல (நம்ம முகராசி அப்படி)

Link to comment
Share on other sites

நெடுக்ஸின் ஆலோசனையைக் கேட்ட பெண்மணி உயிர் தப்பினார். 72 மணித்தியாலங்கள் பனியில் புதையுண்டிருந்தும்..! :)

http://www.cbc.ca/canada/toronto/story/200...r-survival.html

Young & Carlton இல் உள்ள அந்த condo க்கு பேஸ்மண்ட் கிண்ட டிசைன் குடுத்தது நானல்லோ..! :)

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :unsure:
Link to comment
Share on other sites

நான் இருக்கும் இடத்தில் பொதுவாக பனி புயல் வருவதில்லை. ஆனால் வெப்பனிலை - 20 க்கு கீழ தான் பொதுவாக இருக்கும். - 35 வரை கூட போவதுண்டு. இந்த வெப்பனிலையுடன் காற்றும் சேரும் என்றால் உடல் உணரும் வெப்பனிலை - 45 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும்.

அண்மையில் எடுத்த சில படங்கள்

winter1kq3.jpg

winter2lt8.jpg

winter3fr2.jpg

winter4zl2.jpg

winter5fs5.jpg

Link to comment
Share on other sites

அருமை குளக்காட்டான்... என்ன செட்டிங்கில் இவை எடுத்தீர்கள் என்று விபரம் தர முடியுமா? என்ன கமறா வைத்துள்ளீர்கள்? வெளிச்சம் இயற்கை வெளிச்சமா அல்லது ஏதேனும் நுட்பம் பயன் படுத்தப் பட்டதா?

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருசிறப்பு உண்டு அதில் புகைப்படங்கள் என்றாலே குளைக்காட்டான்தான் சிறப்பு படங்களிற்கென்றே தனியாக ஒரு பகுதியை வைந்திருந்தவர் குளை ஆனால் அண்மைக்காலங்களாக அவரை காண்பது குறைவு

Link to comment
Share on other sites

அருமை குளக்காட்டான்... என்ன செட்டிங்கில் இவை எடுத்தீர்கள் என்று விபரம் தர முடியுமா? என்ன கமறா வைத்துள்ளீர்கள்? வெளிச்சம் இயற்கை வெளிச்சமா அல்லது ஏதேனும் நுட்பம் பயன் படுத்தப் பட்டதா?

நிழலி என்னிடம் அப்படி சிறப்பான புகைப்பட கருவி எதுவும் இல்லை. HP photosmart தான் இருக்கிறது. இயற்கை ஒளியை பயன்படுத்தி தான் எடுத்தேன். பின்னர் பிக்காசாவில் படத்தை மெருகேற்றினேன்.

சாத்திரியார், நீங்கள் சொல்லும் அளவுக்கு புகைப்படம் எழுத்தலில் திறமையுள்ளவன் அல்ல. ஆனால் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் உண்டு. இப்போ புகைப்படம் எடுப்பதில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. அதனால் முன்னர் போல் புகைபடங்களை இணைக்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டன் உங்கள் புகைப்படங்கள் ஒரு பெரும் கலைஞன் உங்களுக்குள் ஒளிந்திருப்பதை இனங்காட்டுகிறது. உங்களுடைய இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது உள்ளத்திற்குள் ஒருவகை அமைதி ஏற்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.