Jump to content

எனது கசப்பு அனுபவம்


Recommended Posts

எனது கசப்பு அனுபவம்

புலம் பெயர்ந்து வந்தும் விலங்குகளால் சிறைப்பட்டேன் சில நிமிடங்கள். இரண்டு தினங்களிற்கு முன்னம் Hasle (OSLO)என்ற இடத்தில் வேலை முடிந்து இரவு 10.00 மணியளிவில் வீடு செல்வதற்காக நடந்து வந்தகொண்டிருந்தேன். திடீரென நான்கு வாகனங்களில் வந்த (மொத்தம் 20 அல்லது 25 பேர் ) இராணுவக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு அவர்களின் வாகனத்திற்குள் அத்துமீறி ஏற்றபட்டடேன். எனது தொலைபேசி ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து 5 நிமிடங்கள் கழிந்த பின் எல்லாவற்றையும் திரும்ப ஓப்படைத்து விட்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்தார்கள். என்னை கைது செய்த காரணத்தை ஆரம்பத்தில் இருந்து சொல்லவே இல்லை. இந்த தேசத்து மொழியிலும் நான் பெரிதாக தேர்ச்சி இல்லை இருந்தும் வாக்குவாதப்பட்டேன்.

தவறாக கைதுசெய்துவிட்டோம். மன்னித்துகொள் என்று தோளில் தட்டி அனுப்பி வைத்தார்கள். நான் மௌமான வீடு வந்து விட்டேன். மறுநாள் காவல்துறை அலுவலகம் சென்று விளக்கமாக கூறி எனக்கு நியாயம் கேட்டேன். அவர்கள் உள்ளே அழைத்து காவல்துறை மேலதிகாரியுடன் சந்திக்க வைத்தாhர்கள். அவர் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு கூறினார். அன்றைய தினம் நான் வந்துகொண்டிருந்த இடத்தில் 5 திருடர்கள் ஆயுதங்களுடன் ஓடினார்களாம். தவறாக என்னை அவர்கள் என நினைத்து கைது செய்துவிட்டார்களாம். நான் விடவில்லை வாக்குவாதப்பட்டு அவர்கள் மூலமாகவே ஒரு மன்னிப்புக்கடிதமும் வாங்கி வந்தேன்.

இலங்கையில்தான் இந்த கொடுமை என்றால் புலம்பெயர்ந்த தேசத்திலும் எமக்கான அடிமை விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒரு நோர்வேஜியனோ அல்லது பிரிட்டிஸ்காரனோ கைது செய்யப்பட்டிருந்தால் மானநஸ்ட வழக்கு அது இது என்று நிறைய கேட்டிருப்பான். நான் ஆசியன்தானே அதனால் கதைக்க முடியவில்லை. கதைத்தால் வேறு காரணங்களினால் மாட்டுப்பட வேண்டிவரும்

இதுதான் புலம்பெயர்ந்த வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணிக்கு என் அனுதாபங்கள். தமிழனின் தலைஎழுத்து இன்னும் தான் மாறவில்லை. தமிழன் இல்லா நாடில்லை தமிழனுக்கு எனறு ஒரு நாடில்லை. கேட்க ஒரு நாதியில்லா வாழ்வு. என்று தீரும் இந்த ...........அகதி வாழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பரனி இதுக்கெல்லாம் போய் டென்சன் ஆகிக்கொன்டு இருக்கிறீங்கள்.அது சரி நாங்கள் எல்லாரும் மானத்தை ஊரில விட்டுப்போட்டுத்தானே இங்கை வந்திருக்கிறம்.பின்பு எப்படி மான நட்டம் கேக்கிறது :):D

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு கசப்பான அனுபவம் நேரிட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்களால் அல்ல. சூனப் பானாக்களால். இப்போது எதுவும் விரிவாகக் கூற முடியாது. விடயம் முடிந்ததும் விரிவாகக் கூறுகிறேன். :)

Link to comment
Share on other sites

வேதனையாக இருக்கின்றது கேட்க. சம்பவம் நடக்கும் போதும் நடந்த பின்பும் மன உளைச்சல் வலியாக இருத்திருக்கும். சம்பவத்தினை வாசிக்கும் போது தவறுதலாகத் தான் உங்களை கைது பண்ணியிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. நான் நினைக்கவில்லை தமிழர் என்ற காரணத்தினால் நடந்து இருக்கும் என்று (நிலாமதி அக்கா சொல்வது போல இருக்காது)

புலம் என்பதால் வாக்குவாதப் பட்டாயினும் மன்னிப்பு கடிதம் தந்தார்கள். இதுவே இலங்கையிலும் சரி அல்லது எந்த ஒரு ஆசிய நாட்டிலும் சரி, வாக்குவாதப் பட்டிருந்தால் காவல்துறை மோசமாகவே நடத்து இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது அங்க தான் இப்படியென்டால் இங்கயுமா

Link to comment
Share on other sites

மிகவும் வேதைனையாக உள்ளது.

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.......

கடவுளை பிரார்த்திக்கின்றேன்...

Link to comment
Share on other sites

அந்த இடத்தில் ஒரு நோர்வேஜியனோ அல்லது பிரிட்டிஸ்காரனோ கைது செய்யப்பட்டிருந்தால் மானநஸ்ட வழக்கு அது இது என்று நிறைய கேட்டிருப்பான். நான் ஆசியன்தானே அதனால் கதைக்க முடியவில்லை. கதைத்தால் வேறு காரணங்களினால் மாட்டுப்பட வேண்டிவரும்

எம்மவர்களின் கஷ்டகாலம் இது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?

எனக்கு இப்படி சில அனுபவங்கள் இருக்கு ஆனால் கைது செய்யவில்லை அது மட்டும் தான் மிச்சம்! ஆனால் ஒரு விடயம் மட்டும் உண்மை அவர்களில் சொல்லி தப்பில்லை. கனடாவில் தமிழர்களும் சும்மா ஆக்கள் இல்லை. அவர்களும் பெரும் புள்ளிகள் தான்!

Link to comment
Share on other sites

மனிதனிற்கும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை வெளித்தெரியும் நேரங்களில் சில இப்படியானவை. இவ்வாறு கூறுவதன் மூலம் பரணியின் உணர்வுகளைக் களங்கப்படுத்துவதாக நினைக்கக்கூடாது.

பரணிக்கு நேர்ந்த அனுபவம் என்பது வருத்தத்திற்கு உரியதுதான். ஆயினும் ஓர் தென்னாசியாவைச் சேர்ந்தவன் என்பதற்காகத்தான் அவ்வாறு நடைபெற்றது என்று எண்ணுவது அவ்வாறான தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு வடிவம். சிலவேளைகளில் அதுவே காரணமாகவும் இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.

குற்றவாளியைப் பிடிக்கும் போது முதலில் சந்தேகத்துடன்தான் பிடிக்கிறார்கள், பின்னர் அது தொடர்பாக விசாரித்து அதன் பின்னர் அது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்படும். மற்றும் ஓர் குறிப்பிட்ட சுற்றாடலில் செய்யப்பட்ட குற்றங்கள் யாரால் செய்யப்படுகின்றன, அதற்கான காரணங்கள் என்ன என்பனவும் ஒருவரைச் சந்தேக் கண்கொண்டு பார்ப்பதற்கு உறுதுணையாகின்றன. சிலது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கசப்பான வேதனையான அனுபவம்தான். என்ன செய்வது பரணி. மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனக்கசப்பான விடயங்கள் எனக்கும் புலத்தில் நடந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் பரணிக்கு நடந்ததுபோல் சந்தேகக் கைதுகள் இன்னும் நிறையவே இடம்பெற இருக்கின்றன போல் தெரிகின்றது.

காரணம் முஸ்லீம்களின் மேற்கத்தைநாடுகளுக்கான பயங்கரவாத அத்சுறுத்தலாகும்.

அதிலும் பாக்கிஸ்தானின் மீது இப்போது அனைவரின் சந்தேகக்கண் திரும்பியுள்ளது போல் தெரிகின்றது.

நாமும் பாக்கிஸ்தானியர் உருவமைப்பில் இருப்பதால் சிலவேளைகளில் இந்த சந்தேக கைதுகள் தொடரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக கைதுசெய்துவிட்டோம். மன்னித்துகொள் என்று தோளில் தட்டி அனுப்பி வைத்தார்கள். நான் மௌமான வீடு வந்து விட்டேன். மறுநாள் காவல்துறை அலுவலகம் சென்று விளக்கமாக கூறி எனக்கு நியாயம் கேட்டேன். அவர்கள் உள்ளே அழைத்து காவல்துறை மேலதிகாரியுடன் சந்திக்க வைத்தாhர்கள். அவர் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு கூறினார். அன்றைய தினம் நான் வந்துகொண்டிருந்த இடத்தில் 5 திருடர்கள் ஆயுதங்களுடன் ஓடினார்களாம். தவறாக என்னை அவர்கள் என நினைத்து கைது செய்துவிட்டார்களாம். நான் விடவில்லை வாக்குவாதப்பட்டு அவர்கள் மூலமாகவே ஒரு மன்னிப்புக்கடிதமும் வாங்கி வந்தேன்.

என்ன பரணி , இதுக்கெல்லாம் யோசித்துக் கொண்டு ..........

காவல்துறையினர் தங்கள் கடமையை தானே செய்தார்கள் .

இந்தச் சம்பவம் , கசப்பாக இருந்தாலும் இரண்டு , மூன்று நாட்களில் நீங்களே மறந்து விடுவீர்கள் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கருத்து பகிர்ந்த உறவுகளிற்கு நன்றிகள்

மறக்கக்கூடிய நிகழ்வல்ல. அந்த கைதானது எனக்கு பழையவற்றை நினைவில் கொண்டு வந்து கொஞ்சம் கடினப்படுத்திவிட்டது.

ஒரு தடவை உள்ளே சென்று வந்தால் அது வாழ்நாள் முழுக்க வலியாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பகிர்ந்த உறவுகளிற்கு நன்றிகள்

மறக்கக்கூடிய நிகழ்வல்ல. அந்த கைதானது எனக்கு பழையவற்றை நினைவில் கொண்டு வந்து கொஞ்சம் கடினப்படுத்திவிட்டது.

ஒரு தடவை உள்ளே சென்று வந்தால் அது வாழ்நாள் முழுக்க வலியாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

உங்கள் மனவலி எனக்கு புரிகிறது

ஏனெனில் இதோபோல் ஒரு நிலை எனக்கும் ஏற்பட்டது

அது 1983இல்

அது நான் படித்துக்கொண்டிருந்தநேரம்

எமது அறையில் தற்காலிகமாக வெளிநாடு செல்வதற்காக வந்து நின்று பயணமுகவரிடம் பணம் கட்டியவரை பயணமுகவர் ஏமாற்றிவிட்டார்

நாங்கள் போய் கேட்டதற்கு அவர் காவற்துறையில் போட்டுக்கொடுத்தார் எப்படித்தெரியுமா?

இன்ன இடத்தில் 5 புலி ஏற்கனவே இருக்கிறது இன்று இரவு இன்னும் சிலபுலிகள்புகையிரதத்தில் வந்திறங்கி மிகமுக்கியமான கூட்டம் நடைபெற இருக்கிறது என்று.

கிட்டத்தட்ட 500 காவல்துறையினர்முதலில் கோட்டைப்புகையிரதநிலையத்தில

Link to comment
Share on other sites

பரணி கசப்பான விடயம் தான். ஏதோ தவறுதலாக நடைபெற்றுள்ளது போல் தெரிகிறது. மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடைதம் வேறு தந்துள்ளார்கள். ஆசிய நாடொன்றில் (பெரும்பாலான) மன்னிப்பு என்பது கிள்ளு கீரைக்கும் கிடையாத நிலையில் ஏதோ கொஞ்ச மனிதாபிமானமாது ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளில் உள்ளது என்பதை எண்ணி பெருமை படுங்கள். நடந்தவற்றை மறந்து முன்நோக்கி போக வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

பரணி

ஏதோ தவறாக நடந்துள்ளது போலும்

இருந்தாலும் மனவேதனைதான்.

இங்கென்பதால் உயிரோடு தப்பினீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கசப்பான வேதனையான அனுபவம்தான். என்ன செய்வது பரணி. மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனக்கசப்பான விடயங்கள் எனக்கும் புலத்தில் நடந்திருக்கு.

ரெஸ்கோவில சொக்கிலேட் திருடினீங்களோ..??! இல்ல திருட்டு முழிமுழிச்சுக் கொண்டு வீதியில போற பொலீஸ்காரனைப் பார்த்தீங்களோ..??! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.