Jump to content

எனது கசப்பு அனுபவம்


Recommended Posts

எனது கசப்பு அனுபவம்

புலம் பெயர்ந்து வந்தும் விலங்குகளால் சிறைப்பட்டேன் சில நிமிடங்கள். இரண்டு தினங்களிற்கு முன்னம் Hasle (OSLO)என்ற இடத்தில் வேலை முடிந்து இரவு 10.00 மணியளிவில் வீடு செல்வதற்காக நடந்து வந்தகொண்டிருந்தேன். திடீரென நான்கு வாகனங்களில் வந்த (மொத்தம் 20 அல்லது 25 பேர் ) இராணுவக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு அவர்களின் வாகனத்திற்குள் அத்துமீறி ஏற்றபட்டடேன். எனது தொலைபேசி ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து 5 நிமிடங்கள் கழிந்த பின் எல்லாவற்றையும் திரும்ப ஓப்படைத்து விட்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்தார்கள். என்னை கைது செய்த காரணத்தை ஆரம்பத்தில் இருந்து சொல்லவே இல்லை. இந்த தேசத்து மொழியிலும் நான் பெரிதாக தேர்ச்சி இல்லை இருந்தும் வாக்குவாதப்பட்டேன்.

தவறாக கைதுசெய்துவிட்டோம். மன்னித்துகொள் என்று தோளில் தட்டி அனுப்பி வைத்தார்கள். நான் மௌமான வீடு வந்து விட்டேன். மறுநாள் காவல்துறை அலுவலகம் சென்று விளக்கமாக கூறி எனக்கு நியாயம் கேட்டேன். அவர்கள் உள்ளே அழைத்து காவல்துறை மேலதிகாரியுடன் சந்திக்க வைத்தாhர்கள். அவர் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு கூறினார். அன்றைய தினம் நான் வந்துகொண்டிருந்த இடத்தில் 5 திருடர்கள் ஆயுதங்களுடன் ஓடினார்களாம். தவறாக என்னை அவர்கள் என நினைத்து கைது செய்துவிட்டார்களாம். நான் விடவில்லை வாக்குவாதப்பட்டு அவர்கள் மூலமாகவே ஒரு மன்னிப்புக்கடிதமும் வாங்கி வந்தேன்.

இலங்கையில்தான் இந்த கொடுமை என்றால் புலம்பெயர்ந்த தேசத்திலும் எமக்கான அடிமை விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒரு நோர்வேஜியனோ அல்லது பிரிட்டிஸ்காரனோ கைது செய்யப்பட்டிருந்தால் மானநஸ்ட வழக்கு அது இது என்று நிறைய கேட்டிருப்பான். நான் ஆசியன்தானே அதனால் கதைக்க முடியவில்லை. கதைத்தால் வேறு காரணங்களினால் மாட்டுப்பட வேண்டிவரும்

இதுதான் புலம்பெயர்ந்த வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணிக்கு என் அனுதாபங்கள். தமிழனின் தலைஎழுத்து இன்னும் தான் மாறவில்லை. தமிழன் இல்லா நாடில்லை தமிழனுக்கு எனறு ஒரு நாடில்லை. கேட்க ஒரு நாதியில்லா வாழ்வு. என்று தீரும் இந்த ...........அகதி வாழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பரனி இதுக்கெல்லாம் போய் டென்சன் ஆகிக்கொன்டு இருக்கிறீங்கள்.அது சரி நாங்கள் எல்லாரும் மானத்தை ஊரில விட்டுப்போட்டுத்தானே இங்கை வந்திருக்கிறம்.பின்பு எப்படி மான நட்டம் கேக்கிறது :):D

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு கசப்பான அனுபவம் நேரிட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்களால் அல்ல. சூனப் பானாக்களால். இப்போது எதுவும் விரிவாகக் கூற முடியாது. விடயம் முடிந்ததும் விரிவாகக் கூறுகிறேன். :)

Link to comment
Share on other sites

வேதனையாக இருக்கின்றது கேட்க. சம்பவம் நடக்கும் போதும் நடந்த பின்பும் மன உளைச்சல் வலியாக இருத்திருக்கும். சம்பவத்தினை வாசிக்கும் போது தவறுதலாகத் தான் உங்களை கைது பண்ணியிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. நான் நினைக்கவில்லை தமிழர் என்ற காரணத்தினால் நடந்து இருக்கும் என்று (நிலாமதி அக்கா சொல்வது போல இருக்காது)

புலம் என்பதால் வாக்குவாதப் பட்டாயினும் மன்னிப்பு கடிதம் தந்தார்கள். இதுவே இலங்கையிலும் சரி அல்லது எந்த ஒரு ஆசிய நாட்டிலும் சரி, வாக்குவாதப் பட்டிருந்தால் காவல்துறை மோசமாகவே நடத்து இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது அங்க தான் இப்படியென்டால் இங்கயுமா

Link to comment
Share on other sites

மிகவும் வேதைனையாக உள்ளது.

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.......

கடவுளை பிரார்த்திக்கின்றேன்...

Link to comment
Share on other sites

அந்த இடத்தில் ஒரு நோர்வேஜியனோ அல்லது பிரிட்டிஸ்காரனோ கைது செய்யப்பட்டிருந்தால் மானநஸ்ட வழக்கு அது இது என்று நிறைய கேட்டிருப்பான். நான் ஆசியன்தானே அதனால் கதைக்க முடியவில்லை. கதைத்தால் வேறு காரணங்களினால் மாட்டுப்பட வேண்டிவரும்

எம்மவர்களின் கஷ்டகாலம் இது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?

எனக்கு இப்படி சில அனுபவங்கள் இருக்கு ஆனால் கைது செய்யவில்லை அது மட்டும் தான் மிச்சம்! ஆனால் ஒரு விடயம் மட்டும் உண்மை அவர்களில் சொல்லி தப்பில்லை. கனடாவில் தமிழர்களும் சும்மா ஆக்கள் இல்லை. அவர்களும் பெரும் புள்ளிகள் தான்!

Link to comment
Share on other sites

மனிதனிற்கும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை வெளித்தெரியும் நேரங்களில் சில இப்படியானவை. இவ்வாறு கூறுவதன் மூலம் பரணியின் உணர்வுகளைக் களங்கப்படுத்துவதாக நினைக்கக்கூடாது.

பரணிக்கு நேர்ந்த அனுபவம் என்பது வருத்தத்திற்கு உரியதுதான். ஆயினும் ஓர் தென்னாசியாவைச் சேர்ந்தவன் என்பதற்காகத்தான் அவ்வாறு நடைபெற்றது என்று எண்ணுவது அவ்வாறான தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு வடிவம். சிலவேளைகளில் அதுவே காரணமாகவும் இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.

குற்றவாளியைப் பிடிக்கும் போது முதலில் சந்தேகத்துடன்தான் பிடிக்கிறார்கள், பின்னர் அது தொடர்பாக விசாரித்து அதன் பின்னர் அது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்படும். மற்றும் ஓர் குறிப்பிட்ட சுற்றாடலில் செய்யப்பட்ட குற்றங்கள் யாரால் செய்யப்படுகின்றன, அதற்கான காரணங்கள் என்ன என்பனவும் ஒருவரைச் சந்தேக் கண்கொண்டு பார்ப்பதற்கு உறுதுணையாகின்றன. சிலது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கசப்பான வேதனையான அனுபவம்தான். என்ன செய்வது பரணி. மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனக்கசப்பான விடயங்கள் எனக்கும் புலத்தில் நடந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் பரணிக்கு நடந்ததுபோல் சந்தேகக் கைதுகள் இன்னும் நிறையவே இடம்பெற இருக்கின்றன போல் தெரிகின்றது.

காரணம் முஸ்லீம்களின் மேற்கத்தைநாடுகளுக்கான பயங்கரவாத அத்சுறுத்தலாகும்.

அதிலும் பாக்கிஸ்தானின் மீது இப்போது அனைவரின் சந்தேகக்கண் திரும்பியுள்ளது போல் தெரிகின்றது.

நாமும் பாக்கிஸ்தானியர் உருவமைப்பில் இருப்பதால் சிலவேளைகளில் இந்த சந்தேக கைதுகள் தொடரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக கைதுசெய்துவிட்டோம். மன்னித்துகொள் என்று தோளில் தட்டி அனுப்பி வைத்தார்கள். நான் மௌமான வீடு வந்து விட்டேன். மறுநாள் காவல்துறை அலுவலகம் சென்று விளக்கமாக கூறி எனக்கு நியாயம் கேட்டேன். அவர்கள் உள்ளே அழைத்து காவல்துறை மேலதிகாரியுடன் சந்திக்க வைத்தாhர்கள். அவர் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு கூறினார். அன்றைய தினம் நான் வந்துகொண்டிருந்த இடத்தில் 5 திருடர்கள் ஆயுதங்களுடன் ஓடினார்களாம். தவறாக என்னை அவர்கள் என நினைத்து கைது செய்துவிட்டார்களாம். நான் விடவில்லை வாக்குவாதப்பட்டு அவர்கள் மூலமாகவே ஒரு மன்னிப்புக்கடிதமும் வாங்கி வந்தேன்.

என்ன பரணி , இதுக்கெல்லாம் யோசித்துக் கொண்டு ..........

காவல்துறையினர் தங்கள் கடமையை தானே செய்தார்கள் .

இந்தச் சம்பவம் , கசப்பாக இருந்தாலும் இரண்டு , மூன்று நாட்களில் நீங்களே மறந்து விடுவீர்கள் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கருத்து பகிர்ந்த உறவுகளிற்கு நன்றிகள்

மறக்கக்கூடிய நிகழ்வல்ல. அந்த கைதானது எனக்கு பழையவற்றை நினைவில் கொண்டு வந்து கொஞ்சம் கடினப்படுத்திவிட்டது.

ஒரு தடவை உள்ளே சென்று வந்தால் அது வாழ்நாள் முழுக்க வலியாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பகிர்ந்த உறவுகளிற்கு நன்றிகள்

மறக்கக்கூடிய நிகழ்வல்ல. அந்த கைதானது எனக்கு பழையவற்றை நினைவில் கொண்டு வந்து கொஞ்சம் கடினப்படுத்திவிட்டது.

ஒரு தடவை உள்ளே சென்று வந்தால் அது வாழ்நாள் முழுக்க வலியாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

உங்கள் மனவலி எனக்கு புரிகிறது

ஏனெனில் இதோபோல் ஒரு நிலை எனக்கும் ஏற்பட்டது

அது 1983இல்

அது நான் படித்துக்கொண்டிருந்தநேரம்

எமது அறையில் தற்காலிகமாக வெளிநாடு செல்வதற்காக வந்து நின்று பயணமுகவரிடம் பணம் கட்டியவரை பயணமுகவர் ஏமாற்றிவிட்டார்

நாங்கள் போய் கேட்டதற்கு அவர் காவற்துறையில் போட்டுக்கொடுத்தார் எப்படித்தெரியுமா?

இன்ன இடத்தில் 5 புலி ஏற்கனவே இருக்கிறது இன்று இரவு இன்னும் சிலபுலிகள்புகையிரதத்தில் வந்திறங்கி மிகமுக்கியமான கூட்டம் நடைபெற இருக்கிறது என்று.

கிட்டத்தட்ட 500 காவல்துறையினர்முதலில் கோட்டைப்புகையிரதநிலையத்தில

Link to comment
Share on other sites

பரணி கசப்பான விடயம் தான். ஏதோ தவறுதலாக நடைபெற்றுள்ளது போல் தெரிகிறது. மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடைதம் வேறு தந்துள்ளார்கள். ஆசிய நாடொன்றில் (பெரும்பாலான) மன்னிப்பு என்பது கிள்ளு கீரைக்கும் கிடையாத நிலையில் ஏதோ கொஞ்ச மனிதாபிமானமாது ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளில் உள்ளது என்பதை எண்ணி பெருமை படுங்கள். நடந்தவற்றை மறந்து முன்நோக்கி போக வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

பரணி

ஏதோ தவறாக நடந்துள்ளது போலும்

இருந்தாலும் மனவேதனைதான்.

இங்கென்பதால் உயிரோடு தப்பினீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கசப்பான வேதனையான அனுபவம்தான். என்ன செய்வது பரணி. மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனக்கசப்பான விடயங்கள் எனக்கும் புலத்தில் நடந்திருக்கு.

ரெஸ்கோவில சொக்கிலேட் திருடினீங்களோ..??! இல்ல திருட்டு முழிமுழிச்சுக் கொண்டு வீதியில போற பொலீஸ்காரனைப் பார்த்தீங்களோ..??! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது.  புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!! 
    • ....... என்று வந்தால் நகக்கீறல்களை பரிசாக பார்க்கணும் அண்ணை.  அவை கேடயங்கள். நீங்கள் அறியாதததா? 🤩
    • பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன்  ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான்.  ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை.  புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை.  இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. 
    • அமிர்தலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னரே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர். 1985 திம்புப் பேச்சுக்களில் அவர்கள் தம்மை மீளவும் அரங்கிற்குக் கொண்டுவரப்பார்த்தனர். ஆனால், அன்றுகூட இலங்கையினதும், இந்தியாவினதும் கைப்பிள்ளைகளாக மாறி, இலங்கையரசு கொடுக்க விரும்பிய மாவட்ட சபைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழரின் நிலையினைப் பலவீனப்படுத்தினர். 1987 இல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்களை நியாயப்படுத்தினர். அவரது கொலையினை ஆதரிக்கவில்லை. ஆனால், தனது கொலை நடைபெறுவதைத் தடுக்கும் எந்தக் காரியத்திலும் அவரும் ஈடுபட்டிருக்கவில்லை. 
    • ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம் பொது மக்களை வெளியேற்ற கூடாரங்கள் அமைப்பு maheshApril 25, 2024 காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது. இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன. ரபா மீதான படை நடவடிக்கை ஒன்றுக்கான சமிக்ஞையை இஸ்ரேல் இராணுவம் அண்மைக் காலத்தில் வெளியிட்டு வருகிறது. ‘வடக்கில் ஹமாஸ் கடுமையாக தாக்கப்பட்டது. காசா பகுதியின் மத்தியிலும் அது தீவிரமாக தாக்கப்பட்டது. ரபாவிலும் கூட விரைவில் கடுமையாக தாக்கப்படும்’ என்று காசாவில் செயற்படும் 162 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன், இஸ்ரேலின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார். ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. தெற்கு ரபா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஏற்கனவே இடம்பெயர்ந்து ரபாவை அடைந்திருக்கும் பலஸ்தீனர்கள் மற்றொரு வெளியேற்றம் கடுமையானதான அமையும் என்று அஞ்சுகின்றனர். பாடசாலை ஒன்றில் தனது குடும்பத்துடன் தற்காலிக முகாமில் இருக்கும் 30 வயதான அயா என்பவர், பெரும் ஆபத்து பற்றி அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். துறைமுகப் பகுதியான அல் மவாசியில் இருந்து அண்மையில் இந்த முகாமுக்கு வந்த சில குடும்பங்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் ஷெல் குண்டுகள் விழுந்ததை அடுத்து அவை தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஆக்கிரமிப்பு திடீரென்று இடம்பெறக் கூடும் என்பதோடு நாம் தப்பிப்பதற்கு நேரம் இருக்காது என்று நானும் எனது தாயும் அஞ்சுகிறோம்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார். ‘நாம் எங்கு போவது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காசாவில் 201 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன. அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் 200 ஆவது நாளை எட்டிய நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா கடந்த செவ்வாயன்று (23) வெளியிட்ட உரை ஒன்றில், ‘இந்த போரில் இஸ்ரேல் அவமானத்தையும் தோல்வியையும் மாத்திரமே சந்தித்துள்ளது’ என்றார். இதேவேளை இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 300ஐ தாண்டியுள்ளது. இந்த புதைகுழி தொடர்பில் அமெரிக்கா கவனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விபரத்தை தரும்படி இஸ்ரேல் அரசை அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர். காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதோடு வடக்கு ஹெப்ரூனில் நேற்றுக் காலை இஸ்ரேலிய படையினால் 20 வயது யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்தே இந்தப் பெண் சுடப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தலையில் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை தமது பிடியில் வைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/25/world/56718/ரபா-மீது-இஸ்ரேல்-விரைவில/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.