Jump to content

7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்!


Recommended Posts

7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்!

20_12_08_7countries.jpg

அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் கோபாவேசத் துடன் உறுமிக்கொண்டிருக்கிறாராம்.

கிளிநொச்சியைப் பிடிப்பதற் காக மலையாளபுரம், குஞ்சுப்பரந்தன், புளிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் கடந்த 17-ந் தேதி அதி விரைவாக முன்னேறி ராணுவத்தினர் உக்கிரமான தாக்குதலை நடத்தினர்.

அதேவேளையில் புலிகளின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், கிளாலி பகுதியிலிருந்தும் கிளிநொச்சியை நோக்கி படைகள் விரைந்தன. ஆக, 5 இடங்களிலிருந்து ஒரேசமயத்தில் தாக்குதல் நடத்தினார்கள் இலங்கை ராணுவத்தினர். ராணு வத்தின் 53, 55, 57 மற்றும் 58 ஆகிய படைப்பிரிவுகளை இந்த தாக்குதலில் களமிறக்கினார் ராஜபக்சே. இலங்கை ராணுவத்தில் இந்த படைப்பிரிவுகள் மிக முக்கிய மானவைகள்.

கிளாலி பகுதியில் 53, 55 படைப்பிரிவினைச் சேர்ந்த ராணு வத்தினரும் பூநகரி-பரந்தன் வழி யாக மலையாளபுரம், குஞ்சுப் பரந்தன், புளிக்குளம், முறிகண்டி பகுதிகளுக்கு 57 மற்றும் 58 படைப் பிரிவு ராணுவத்தினரும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த 5 முன்நகர்வு தாக்குதல் களும் ஒரேசமயத்தில் புலிகள் மீது நடத்தப்படவேண்டுமென்பதுதான் ராணுவத்தினருக்கு கொடுக்கப் பட்டிருந்த உத்தரவு.

அதன்படி, கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் இடைவிடாமல் பலமணி நேரம் நடந்தது உக்கிரமான இந்த தாக்குதல்.

தாக்குதலை முறி யடித்த புலிகள், 170 ராணுவத்தினரை இந்தத் தாக்குதலில் படுகொலை செய்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயங் களுடன் தப்பி ஓடினர்.

ஒரேசமயத்தில் 5 இடங்களி லும் பதில்தாக்குதல் நடத்தி, ராணுவத்தினருக்கு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி யிருப்பதுடன், ஆர்பி.ஜி எறிகணைகள் 49, புறப்னர்கள் என்கிற அதிநவீன லாஞ்சர்கள் 37, ஆர்பிஜி எல்.எம்.ஜி.2, ஆர்பிகே எல்.எம்.ஜி. 2, ஆர்பிஜி ரக துப்பாக்கி கள் 7, ஏ.கே.ரவைகள் 37,000, ஏ.கே. ரக ரவை இணைப்புகள் 1230, பி.கே. ரக ரவை கள் 12000 என ஏராளமான ஆயுதங்களை யும் கைப்பற்றியுள்ளனர்.

சண்டை நடந்த சூனியப்பிரதேசங் களில் சிதறிக்கிடக்கும் ராணுவத்தினரின் உடல்களை சேகரித்து செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்து வருகின்றனர் புலிகள். இப்படி ஒப்படைக்கப்பட்ட உடல்களில் சிலர் சிறுவர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளது செஞ்சிலுவை சங்கம்.

""கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த 6 மாத கால யுத்தத்தில் ராணுவத்தினர் பெரிய அளவில் உயிர் இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆனால், இதனை ஈடுகட்டுகிற அளவுக்குப் புதிதாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு என்பது பெரிய அளவில் நடக்கவில்லை. காரணம், ராணுவத்தில் சேர சிங்களர்கள் முன்வராதது தான். இதனால், சிறுவர், சிறுமிகளை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் அதிபர். சர்வதேச மனித உரிமையாளர்கள் இது பற்றி ஐ.நா.வில் குரல் எழுப்பினால் குற்றவாளிக் கூண்டில் ஏறி ராஜபக்சே விளக்கம் தரவேண்டியதிருக்கும்'' என்கின்றனர் இலங்கை ராணுவத்தினரே.

ஒரேசமயத்தில் 5 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் முறியடித்து ராணுவத்தினருக்கு பெரிய சேதங்களையும் புலிகள் ஏற்படுத்தியிருப்பதுதான் ராஜபக்சேவை தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.

புலிகளுக்கு இது எப்படி சாத்தியமானது? ஒரே சமயத்தில் அட்டாக் என்கிற ஐடியாலஜியை இலங்கை ராணுவத்துக்கு தந்தது யார்? என்கிற கேள்வி, அதிபர் அலுவலக வட்டாரங்களில் சுழன்றடித்துக்கொண்டி ருக்கிறது.

இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்த போது... ""தாக்குதலுக்கு முன், திங்களன்று அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர். அங்கு, வன்னி பகுதியின் இலங்கை ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா 7 நாடுகளின் உயரதிகாரிகளையும் வரவேற்றார்.

பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இந்தியாவின் கேப்டன் பிரதீப்சிங், அமெரிக்காவின் லெட்டினண்ட் கேனல் லாரன்ஸ் ஸ்மித், பிரிட்டனின் கேனல் ஆண்டன் கோஸ், பாகிஸ்தானின் கேனல் சையத் ஹுரம் ஹஸ்னைன் ஆலம், பங்களாதேஷின் கமாண்டர் இமாம்ஹோசைன், ஜப்பானின் கேப்டன் மசகருமுரை, மாலத்தீவின் கேனல் அக்மட் ஷநீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக எங்கெல்லாம் இலங்கை ராணுவம் நிற்கிறது, எந்த இடங்களில் சண்டை நடக்கிறது என்பதை "மேப்' வைத்து விவரித்தார் வன்னி கமாண்டர் ஜெயசூரியா.

அப்போது நடத்தப்பட்ட ஆலோசனை யில் "புலிகள் இயக்கத்தில் வெறும் 2000 பேர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் நிற்கும் நிலைகளிலிருந்து 5 இடங்களில் ஒரே சமயத்தில் அட்டாக்கை நடத்தவேண்டும். அப்போது அந்த 2000 பேரும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் 500 புலிகள் வெளிப்பட்டாலும் அவர்களை நீங்கள் எதிர்கொண்டு அழிப்பது சுலபம்தானே. ஒரேசமயத்தில் பல இடங்களில் இதுவரை அட்டாக் முயற்சியை ராணுவம் நடத்தவில்லை. இப்போது நடத்துங்கள். வெற்றி கிடைக்கும்'' என்று வியூகங்களை அமைத்துத் தந்துள்ளனர் 7 நாடுகளின் ராணுவ அதிகாரிகளும். இந்த வியூகம் அப்படியே ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சொல்லப்பட்டது. அதிபர் ராஜபக்சேவுடன் அவசரமாக இந்த வியூகத்தை பொன்சேகா விவாதித்துவிட்டு 16-ந் தேதி அதிகாலையிலேயே அந்த வியூகத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதன்படிதான் ஒரே நேரத்தில் பல இடங்களில் அட்டாக் என்கிற யுக்தியை கையிலெடுத்தது இலங்கை ராணுவம்'' என்கின்றனர்.

இந்த அட்டாகை புலிகள் எப்படி முறியடித்தனர்? ""ஏழு நாட்டு ராணுவ அதிகாரிகள் கொழும்புக்கு வந்து இறங்கியதுமே இதனை அறிந்துகொண்டது புலிகளின் உளவுப்பிரிவு. அதிகாரிகளின் ஒவ்வொரு மூவ்வையும் அறிந்து வந்துள்ளனர். வன்னி களமுனையில் ராணுவத்தின் பாதுகாப்பு தலைமையகத்தில் 7 அதிகாரிகளும் ஆலோ சனையில் ஈடுபட்டதையும் அறிந்துகொண்டனர். நிச்சயம் மறுநாள் நள்ளிரவில் இருந்தேகூட அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதையும் புலிகளின் உளவுப்பிரிவு பிரபாகரனுக்கு சொல்லியிருக்கிறது.

இதனையடுத்து நடந்த உடனடி ஆலோசனையில், கிளிநொச்சியை பிடிக்க எந்தெந்த வழிகளில் அவர்கள் முன்னேறிவர முடியும் என ஆராய்ந்தபோது, தற்போது ராணுவம் நிற்கும் 5 பகுதிகளுமே சாத்தியம்தான் என்று நினைத்தனர். அதனால் எந்த பகுதியில் தாக்குதல் நடத்துவார்கள் என்று யோசிப்பதைவிட, அவர்களால் முன்னேற வாய்ப்புள்ள 5 இடங்களிலும் பதில் தாக்குதல் நடத்த நாம் வலிமையாக தயார் நிலையில் நிற்கவேண்டுமென முடிவு செய்து அந்தந்த பகுதிகளின் தளபதிகளுக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் புதியதொரு யுத்தியையும் இதில் கையாண்டுள்ள னர். அதாவது, கிளிநொச்சியை சுற்றி மிகப்பெரிய மண் அரண் உண்டு. அந்த மண் அரணுக்கு முன்பாக மிகப்பெரிய நீள, அகல ஆழத்துடன் கூடிய அகழிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர் புலிகள். இந்த அகழியைத் தாண்டித்தான் நீண்ட தொலைவில் மண் அரண்கள். அகழிகளில் பதுங்கியிருக்கும் புலிப்போராளிகள் அங்கிருந்து விலகி, மண் அரண்களுக்குப் பின்னால் இருக்க உத்தரவிட்டது. அதன்படி புலிப்போராளிகள் மண் அரண்களுக் குப் பின்னால் பதுங்கிக்கொண்டனர். இதனை அறியாமல் 5 இடங்களிலிருந்தும் முன்னேறிய ராணுவத்தினர் அகழிகள் மீது ஏகத்துக்கும் தாக்குதல் நடத்த... பதில் தாக்குதல் ஏதும் நிகழாததால்... தைரியம் பெற்ற ராணுவத்தினர் மேலும் மேலும் முன்னேறினர். அகழிகளுக்குள் இறங்கி ஏறியபோதும், புலிகள் யாரும் தென்படாததால் "வெற்றி நமக்குத்தான், அதோ தூரத்தில் தெரியும் மண் அரண்களையும் தாண்டிவிட்டால்... கிளிநொச்சிக்குள் நுழைந்துவிடலாம்' என்கிற சந்தோஷத்தில் அதிவிரைவாக முன்னேறினர். மண் அரண்களை ராணுவத்தினர் நெருங்கிவிட்டதை அறிந்த புலிப்போராளிகள், மண் அரண்களுக்குப் பின்னால் இருந்து குபீர் என அலை அலையாக எழுந்தனர். அந்த கணத்தில் கொஞ்சம்கூட ராணுவத்தினர் சுதாரிக்க இடம் கொடுக்காமல் சரமாரியாக எதிர்தாக்குதல் நடத்த... "தொப், தொப்'பென சாய்ந்தனர் சிங்கள ராணுவத்தினர்.

புலிகளின் எதிர்பாராத இந்த தாக்குதலில் முன்வரிசை ராணுவத்தினர் செத்துக்கொண்டிருப்பதை தூரத்தில் வந்துகொண்டிருந்த ராணுவத்தினர் பார்த்து மிரண்டுபோய்... ஆயுதங்களை தூக்கிக்கொண்டு ஓடமுடியாமல் கீழே போட்டுவிட்டு உயிர் தப்பித்தனர். 5 பகுதிகளிலும் இரண்டு நாட்களில் மொத்தம் 18 மணிநேரம் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் நவீனரக பல்குழல் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியுள்ள புலிகள், 28 உயிர்களை மட்டும் இழந்து ஏழு நாடுகளின் வியூகத்தினை முறியடித்துள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்'' என்கிற தகவல்கள் ஈழத்திலிருந்து கிடைக்கின்றன.

தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாத ராஜபக்சே, உடனடியாக அப்பாவி தமிழர்கள் மீது வான்படைத் தாக்குதலை நடத்த உத்தரவிட... வான் படையினர் கண்மூடித்தனமாக வீசிய குண்டுவீச்சில் குழந்தைகள், பெண்கள் , முதியவர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விமான குண்டுவீச்சிலிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற தமிழச்சிகள் பலரும் குழந்தைகளை அணைத்தவாறு தரையோடு தரையாக பதுங்கிக்கொள்கிற கொடுமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட "கிளஸ்டர் பாம்' (கொத்தணி குண்டுகள்) களை அப்பாவி தமிழர்கள் மீது வீசி கொன்றுகுவித்து வருகிறது, புலிகளை வெல்ல முடியாத சிங்கள ராணுவம்.

-கொழும்பிலிருந்து எழில்

இப்பதிவு நக்கீரன் இணைய சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

[நன்றி நக்கீரன், www.nakkheeran.in]

Link to comment
Share on other sites

பல்குழல் வெடிகணை செலுத்தி கொண்டு தாக்கிய புலிகள்: கொழும்பு ஊடகம்

[சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2008, 09:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

கிளாலி மற்றும் கிளிநொச்சி களமுனைகளில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பலமுனை நகர்வுகளுக்கு எதிரான தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்குழல் வெடிகணை செலுத்திகளை பயன்படுத்தியுள்ளனர் என சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளேட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு:

சிறிலங்கா படையினரின் மூத்த அதிகாரிகள் பலர் கடந்த திங்கட்கிழமை இரவு பாரிய தாக்குதல் ஒன்றுக்காக வேகமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை தாக்குதல் தொடங்கவிருந்தது.

அதிகாலை 4:00 மணியளவில் 53, 55, 57, 58 ஆவது படையணிகள், அதன் கட்டளை அதிகாரிகளின் வழிநடத்தலில் களமிறக்கப்பட்டன.

57 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைந்து பூநகரி - பரந்தன் வீதி வழியாக கிளிநொச்சி நோக்கியும்

57 ஆவது படையணியின் மற்றைய பிரிகேட் அக்கராயனில் இருந்து வடக்குப் புறமாகவும்

இரணைமடு குளம் நோக்கி மற்றுமொரு அணியும் நகர்வை தொடங்கின.

கிளாலி-முகமாலை களமுனையில் 53 மற்றும் 55 ஆவது படையணிகள் நகர்வை மேற்கொண்டன. அங்கு கடும் சமர் மூண்டது.

55 ஆவது படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்தது. இந்த இழப்புக்களால் அவர்களின் திட்டம் கைகூடவில்லை. கிளிநொச்சி முனையில் விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கினார்கள். எனவே படையினரால் முன்நகர்ந்த பிரதேசங்களை தக்கவைக்க முடியவில்லை.

அதிக இழப்புக்களை தொடர்ந்து 53 மற்றும் 55 ஆவது டிவிசன்கள் தந்திரோபாய பின்நகர்வை மேற்கொண்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்களையும், பல்குழல் வெடிகணை செலுத்திகளையும் பயன்படுத்தியிருந்தனர்.

படையினரின் நகர்வுகளுக்கு வன்னியில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது. பல பகுதிகளில் படையினர் நீர் தேங்கியுள்ள பகுதிகளின் ஊடாக நகர்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இம்மோதல்களில் சிங்க றெஜிமென்ட், சிலோன் இலகு காலாட்படை றெஜிமென்ட், கெமுனுவோச், கெமுனு றெஜிமென்ட் போன்ற படை பிரிவுகள் பங்குபற்றியிருந்தன. படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதை விட இழப்புக்கள் அதிகமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

அடடா... வல்வை அண்ணா,

இது பிந்திய செய்தியல்லவா ? இதைத்தான் அவர்களும் இணைத்துள்ளார்களா!!! இவர்கள் ரொம்ப ஸ்பீட்டு...

அப்படி என்றால் முளுமையாக இங்கே இணைக்கலாம்தானே ? பிறகு ஒன்றும் சொல்லமாட்டார்களா கள நிர்வாகத்தினர் ?

அறியத்தாருங்கள், நன்றி. :wub:

Link to comment
Share on other sites

நீங்கள் இங்கேயே இணைக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன் ஆனால் ஆதாரத்துடன் இணைக்கவேண்டும், இணைக்கும் செய்தி இங்கே ஏற்கெனவே இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்தினால் சிறந்தது.

Link to comment
Share on other sites

நீங்கள் இங்கேயே இணைக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன் ஆனால் ஆதாரத்துடன் இணைக்கவேண்டும், இணைக்கும் செய்தி இங்கே ஏற்கெனவே இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்தினால் சிறந்தது.

அண்ணா உங்கள் பதிலுக்கு நன்றி.

பார்க்கும்போது இதில் உள்ள பகுதிகள் எல்லா செய்திகளினதும் தொகுப்பு மாதிரி உள்ளது.

இணைத்து விடுகிறேன்... ஆதாரம் நக்கீரன் என்றே போட்டு விடுகிறேன்.

Link to comment
Share on other sites

அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் கோபாவேசத் துடன் உறுமிக்கொண்டிருக்கிறாராம்

.

உண்மையாகவோ. பூநகரி எல்லாம் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி வரை எதிரி வந்து விட்டான். ஏன் நாங்கள் ஏது செய்யாமல் எம்மை நாமே தற்புகழ்ச்சி செய்கிறோம்? 10 டொலர் காசு கேட்டால் வீட்டை பூட்டி விட்டு பூனையாகி விடுகிறோம். எந்தவொரு பங்களிப்பும் இல்லாமல் (பெரும்பாலோர்) ஏன் அடியடா பிடியாட என உசுப்பேத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலைதீவும் இராணுவ ஆலோசனை சொல்கிறது. :wub:

புளொட்டுக்கே தாக்குப் பிடிக்கேலாத மாலைதீவு இராணுவம் அப்படி என்ன தான் கூறியிருக்கமுடியும்? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.