Jump to content

2008 இல் முதல் 10 கவனம் பெறாத நிகழ்வுகளில் தாயக அவலமும்


Recommended Posts

time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது.

1. The Pentagon's latest nuclear snafu

2. Civil war displaces a million Congolese

Top 10 Underreported News StoriesNEXTBACK

3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan

In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged largely under the radar because the government has banned from the war zone foreign journalists as well as most aid groups, which is bad news for the 300,000 Sri Lankans who have been forced out of their homes.

http://www.time.com/time/specials/2008/top...1861760,00.html

இதற்கு முதல் 2 காரணங்களும்

-1- உலகெங்கும் பலமொழித் திறமைகளோடு பரவி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

-2- நடைமுறை அரசோடு அங்கீகாரத்திற்காக போராடுவதாக சொல்லும் விடுதலைப் புலிகள் அவர்களது தேசிய ஊடக கட்டமைப்புகள், அரசியல் பிரிவு, சமாதான செயலகம் மற்றும் பேச்சாளர்கள்.

Link to comment
Share on other sites

குறுக்கு!

இது நிகழ்காலமா? அல்லது இறந்த காலமா? அண்ணளாவாக இன்றய தேதிக்கு எவ்வளவு கிட்டத்தில?......

ஏனெண்டா உப்பிடி கனக்க வந்து போயிற்று அதுதான்

Link to comment
Share on other sites

இப்ப கிட்டத்தில பிரித்தானிய அமைச்சர் எவ்வளவு சாமர்த்தியமா சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கினவரெண்டு பாத்தனிங்கள் தானே?.......

அவர் பிளேட்ட இரண்டு மாதிரியும் போடுறமாதிபோட்டு மளுப்பீட்டார்.

Link to comment
Share on other sites

அண்ணளவாக

கடந்த காலத்தில நம்புங்கள் நாளை டண்டனக்கா டண்டனக்கா எண்டு சொல்லுறவை.

நிகழ்காலத்தில பாாாாாாாாரிய வெற்றிச் செய்தியை விரைவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்புவம் எண்டு சொல்லுகினம்.

அவர்கள் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எண்ட படியாலை எதிர்காலத்தில எப்பிடியோ தெரியாது.

Link to comment
Share on other sites

time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது.

1. The Pentagon's latest nuclear snafu

2. Civil war displaces a million Congolese

Top 10 Underreported News StoriesNEXTBACK

3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan

In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged largely under the radar because the government has banned from the war zone foreign journalists as well as most aid groups, which is bad news for the 300,000 Sri Lankans who have been forced out of their homes.

http://www.time.com/time/specials/2008/top...1861760,00.html

இதற்கு முதல் காரணம்

-1- உலகெங்கும் பலமொழித் திறமைகளோடு பரவி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

:wub::):)

Link to comment
Share on other sites

அண்ணளவாக

கடந்த காலத்தில நம்புங்கள் நாளை டண்டனக்கா டண்டனக்கா எண்டு சொல்லுறவை.

நிகழ்காலத்தில பாாாாாாாாரிய வெற்றிச் செய்தியை விரைவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்புவம் எண்டு சொல்லுகினம்.

அவர்கள் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எண்ட படியாலை எதிர்காலத்தில எப்பிடியோ தெரியாது.

வழக்கம்போல் உங்கள் பதில்கள் என்னால் விளங்கி கொள்ளுமளவுக்கு இலகுவாகவும், தெளிவாகவும், விளக்கமாவும், சுருக்கமாகவும், நேரடியாகவும் இருந்தததையிட்டு நான் மிகவும் புழகாங்கிதம் அடைகிறேன்... நன்றிகள்.

Link to comment
Share on other sites

இங்கு அடிப்படையில் சில மாற்றங்கள் அவசியம்.

புலத்தில் இயங்கிய அமைப்புக்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் புலிகளுடன் தொடர்பை வைத்திருந்தார்கள். புலிகள் மீது தடை விழ இவர்கள் அடங்கிப்போனார்கள். இதனால் தாயக அவலம் உலக கவனத்தை ஈர்க்கவேண்டிய பாதைகள் மூடப்பட்டன.

100% சுதந்திரமான தமிழர் அமைப்புகளின் பேச்சை மேற்குலகம் நடுநிலமையான‌து என்று கேட்கும். சிங்களம் செய்யும் மனித உரிமை மீறல்களை மாத்திரம் வெளிக்கொண்டுவரும் இத்தகைய அமைப்புக்களால் புலிகள் ஓரங்கட்டப்படுவர் என்று நினைப்பது முட்டாள்தனம்.

இத்தகைய அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும் செயற்பாட்டிற்கும் புலம்பெயர்ந்தவர்களும் , புலிகளும் தயாரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு முதல் 2 காரணங்களும்

-1- உலகெங்கும் பலமொழித் திறமைகளோடு பரவி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

-2- நடைமுறை அரசோடு அங்கீகாரத்திற்காக போராடுவதாக சொல்லும் விடுதலைப் புலிகள் அவர்களது தேசிய ஊடக கட்டமைப்புகள், அரசியல் பிரிவு, சமாதான செயலகம் மற்றும் பேச்சாளர்கள்.

மற்றவனை மந்தை எண்டு மாரி தவக்கை மாதிரி கத்துற உங்களுக்கும் உண்மையான விளக்கம் இல்லை.

உண்மையான காரணங்கள் என்ன?

1) எமது பிரச்சனையில் தலையிடுவதால் அவர்களுக்கு எந்த வித இலாபங்களும் இல்லை.

2) சர்வதேச அரசியலில், மற்றும் ஊடகங்களில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எம்முடைய பொருளாதாரப் பலம் = 0

3) புலம்பெயர் தேசத்தில் சட்டம், ஊடகவியல், அரசியல் போன்றவற்றில் துறைசார் வல்லுனர்களை கொண்ட கட்டமைப்புகள் இன்மை.

4) எம்மவர்களிடையேயான ஒற்றுமையின்மை, சுயநலம் (95% மான எம்மவரின் வாழ்க்கை குடும்பம், பொருளியல் நலனுக்குள் முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது)

வெறும் அனுதாபம் மட்டும் உலகை ஈர்த்துவிடுமானால் ருவாண்டாவில் எவ்வளவோ மனித படுகொலைகளை தவிர்த்திருக்கலாம்.

இதை விட்டுவிட்டு யுத்த ஸ்கோர் சொல்வதுதான் எல்லாவற்றிற்கும் பிரச்சனை எண்டு சொல்வது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான சம்பந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தேசங்களில் இப்போது உடனடியாக நாம் செய்யவேண்டியது Lobying, ஊடகங்களிற்கு பணத்தை வாரி இறைப்பது, அரசியல்வாதிகளுக்கு வாரி இறைப்பது.

துட்டு தான் எல்லாத்துக்கும் மருந்து.

Bruce Fein ஒரு பேட்டியில சொல்லுவார். எல்லாம் செய்யலாம். காசு தான் வேணும் எண்டு.

Link to comment
Share on other sites

காட்டாறு...நீங்கள் சொல்வது சரி...ஆனால் முன்னுக்கு நிண்டு செய்யிறவையும் தூக்கி உள்ளுக்கைபோடுது வெளிநாட்டுச்சட்டம் இப்ப.. குடும்பகாரருக்கு என்ன சொல்றியள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டாறு...நீங்கள் சொல்வது சரி...ஆனால் முன்னுக்கு நிண்டு செய்யிறவையும் தூக்கி உள்ளுக்கைபோடுது வெளிநாட்டுச்சட்டம் இப்ப.. குடும்பகாரருக்கு என்ன சொல்றியள் ?

நீங்கள் சொல்வது சரி. உள்ளுக்கை போறவனுக்கு தான் அதன் வலி தெரியும்.

ஆனால் போராட்டம் எண்டு பார்த்தால் உள்ளுக்க போவதற்கு கூட பயப்படக் கூடாது. போராளிகள் உயிரையே துச்சமாக மதிக்கிறார்கள். கரும்புலிகள் சாவுக்கே தேதி குறிக்கிறார்கள். இவர்களின் தியாகத்தை நினைத்தால் எவரும் எதற்கும் துணியலாம்.

அதைவிட துணிந்து சிறை செல்லும் சீமான், வை.கோ, நெடுமாறன் போன்றோர் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா?

ஆனால் lobbying போன்ற உள்ளூர் அரசியல் செயற்பாடுகளுக்கு பணம் திரட்டுவது எந்தவகையிலும் குற்றமாகாது.

Link to comment
Share on other sites

எம் போராட்டம் சர்வதேசம் எங்கும் பயங்கரவாதமாக சித்திகரிக்கப்பட்டு புலிகளை அவை தடை செய்த பின் எமது செயற்பாடுகளை நாம் மீள் செதுக்கியிருக்க வேண்டும். தடை செய்தது தவறு என்பதுக்கும் அப்பால் நாம் அந் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக காத்திரமான வழிகளில் போராடவேண்டும். புலிகளினதும் கொடியையும், அதன் தலைவரின் படத்தையும் காவி கொண்டு கூட்டங்களை நடத்துவதை நிப்பாட்டி புலிகள் இயக்கம் சாராத புலம் பெயர் தமிழ் மக்களின் போராட்டம் என்று காட்டினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை விட்டு விட்டு. "நீங்கள் தடை செய்தாலும் நாங்கள் அதனையும் மீறி புலிகளின் கொடியையும் பிரபாகரனின் கொடியையும் கொண்டுதான் எம் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுதுவோம்" என்று வீம்பு காட்டினால அதன் பயன் மிக குறைவாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவை பற்றிக் கதைப்பதையோ, யாரையும் குறை கூறுவதையும் தவிர்த்து, எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதித்தால் பிரியோசனமாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் போராட்டம் சர்வதேசம் எங்கும் பயங்கரவாதமாக சித்திகரிக்கப்பட்டு புலிகளை அவை தடை செய்த பின் எமது செயற்பாடுகளை நாம் மீள் செதுக்கியிருக்க வேண்டும். தடை செய்தது தவறு என்பதுக்கும் அப்பால் நாம் அந் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக காத்திரமான வழிகளில் போராடவேண்டும். புலிகளினதும் கொடியையும், அதன் தலைவரின் படத்தையும் காவி கொண்டு கூட்டங்களை நடத்துவதை நிப்பாட்டி புலிகள் இயக்கம் சாராத புலம் பெயர் தமிழ் மக்களின் போராட்டம் என்று காட்டினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை விட்டு விட்டு. "நீங்கள் தடை செய்தாலும் நாங்கள் அதனையும் மீறி புலிகளின் கொடியையும் பிரபாகரனின் கொடியையும் கொண்டுதான் எம் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுதுவோம்" என்று வீம்பு காட்டினால அதன் பயன் மிக குறைவாகவே இருக்கும்.

இங்க தான் நீங்க பிழை விடுறீங்க.

நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் நினைக்கிறீர்களா கனடா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மட்டுந்தான் இப்படியான சட்டங்களை கொண்டுவந்திருக்கிறது என்று? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எம்மினம் இங்கு ஒரு பிறிதான இன உணர்வு கொண்ட இனக்கட்டமைப்புக்குள் வந்ததுவிடக்கூடாது என்பதுதான். தமிழர், தமிழ் தேசிய உரிமை போராட்டம் என்ற உணர்வுகளோடு இருந்தால் நீங்கள் கனடிய நீரோட்டத்தில் இணையமாட்டீர்கள்.

சரி நீங்கள் கனடிய நீரோட்டத்தில் இணைவதால் அவர்களுக்கு என்ன இலாபம்?

ஒன்றே ஒன்று: நீங்கள் செலவழிக்கும் பணம் இந்த நாட்டுக்குளே இருந்துவிடும். இந்த நாட்டின் பொருளாதாரம் வளரும். ஊர், போராட்டம் எண்டு காசுகளை வெளியில் அனுப்பமாட்டீர்கள்.

புலிக்கொடி, தலைவர் படம் போன்றவற்றை தூக்கவிடாமல் செய்வது முதல் படி. இப்படியே சென்றால் இனவுணர்வை தூண்டும் காரணிகள் எல்லாம் செத்துவிடும். நாளடைவில் எல்லாவற்றையும் நீர்த்துவிடச் செய்யலாம் என்னும் நல்லெண்ணம் தான்.

காந்தி அகிம்சை வழியாக போராடும் போது ஆயுதத்தை தூக்கவில்லையே தவிர, சட்டங்களை எதிர்த்துத் தான் போராடினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lobbying செய்யவேண்டியது அவசியம்தான். எனினும் அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களிடம் போய் எங்கள் பிரச்சினைகளைச் சொல்லி வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரமுடியாது. வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்றால் பிரதமர்/ நாட்டின் அதிகாரங்கள் நிறைந்த தலைவர் தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் அரசியல் பலத்தை உணரவேண்டும். தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் துணையினால்தான் 10 - 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலை வரவேண்டும். இவ்வாறான அரசியல் பலம் இல்லாமல் தமிழர்களால் எதுவும் செய்யமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை மட்டும் நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளும் இலங்கை இந்திய அரசியல்வாதிகள் போன்றவர்கள் தான். என்ன வித்தியாசம் அங்கு நேரடியாக ஊழல் செய்வார்கள். தாதா விளையாட்டு காட்டுவார்கள். இங்கு அது இல்லை. மற்றும்படி இங்கும் பணம் தான் ராஜா.

Link to comment
Share on other sites

புலிக்கொடி, தலைவர் படம் போன்றவற்றை தூக்கவிடாமல் செய்வது முதல் படி. இப்படியே சென்றால் இனவுணர்வை தூண்டும் காரணிகள் எல்லாம் செத்துவிடும். நாளடைவில் எல்லாவற்றையும் நீர்த்துவிடச் செய்யலாம் என்னும் நல்லெண்ணம் தான்.

இல்லை...புலிக்கொடியும் தலைவர் படமும் மட்டும் தான் இனவுணர்வை தரும் விடயங்கள் என்பதனை ஏற்க முடியாது. அப்படி நினைப்பது இந்த அரசுகளின் (தடை செய்த அரசுகளின்) சதிகளுக்குள் நாமாகவே மாட்டுப்படுவது போன்றது தான். எம் போராட்டம் பயங்கரவாதம் அல்ல என்பதனை ஏற்கனவே புரிந்தும் அதனை ஏற்க மறுக்கும் சர்வதேசம் மீது, அதனை ஏற்க வைக்கும் அளவுக்கு சட்டத்திற்குட்பட்ட ரீதியில் அழுத்தம் கொடுக்கும் போதுதான் அப் போராட்டத்தினை முன்னெடுக்கும் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அகற்றப்படும். ஒரு இயக்கத்தினதோ அல்லது கட்சியினதோ கொடியினையும் தலைவரின் படத்தினையும் காவும் போது அது அவ் இயக்கம் / கட்சி சார்ப்பான போராட்டமாகவே பார்க்கப்படும். எமக்கிருக்கும் புலிகள் மீதான ஆதரவு வேறு அதனை வெளிக்காட்டும் இடங்களும் சந்தர்ப்பங்களும் வேறு வேறு. எல்லா இடத்திலும் அதனை காட்டியே ஆகவேண்டும் என்று இல்லை

ஈராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்கா பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்துள்ளது என்பதனை நிரூபிக்கும் போராட்டங்களில் யாரும் பின்லாடனினதோ அல்லது சதாமினதோ படங்களை காவவில்லை.

Link to comment
Share on other sites

Lobbying செய்யவேண்டியது அவசியம்தான். எனினும் அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களிடம் போய் எங்கள் பிரச்சினைகளைச் சொல்லி வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரமுடியாது. வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்றால் பிரதமர்/ நாட்டின் அதிகாரங்கள் நிறைந்த தலைவர் தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் அரசியல் பலத்தை உணரவேண்டும். தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் துணையினால்தான் 10 - 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலை வரவேண்டும். இவ்வாறான அரசியல் பலம் இல்லாமல் தமிழர்களால் எதுவும் செய்யமுடியாது.

அதுக்கு மாற்றீடாக தான் மாவீரர் உரையில் தேசிய தலைவர் ஒரு திறந்த பொருளாதார கொள்கையை அறிவிக்க போய் BBC வரை முக்கிய செய்தியாக வெளியிட்டு தங்களின் கொள்கை எதை சார்ந்ததாக இருக்கிறது என்ன்பதை பறை சாற்றினார்களே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு மாற்றீடாக தான் மாவீரர் உரையில் தேசிய தலைவர் ஒரு திறந்த பொருளாதார கொள்கையை அறிவிக்க போய் BBC வரை முக்கிய செய்தியாக வெளியிட்டு தங்களின் கொள்கை எதை சார்ந்ததாக இருக்கிறது என்ன்பதை பறை சாற்றினார்களே..

இந்த அறிவித்தல் செய்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம். ஆனால் சர்வதேச நாடுகளில் பெரிதாக எடுபடவில்லை. எடுபட்டிருந்தால் சிலவேளை தாராளமாக புலிகளுக்கு இராணுவ உதவிகளை வெளிப்படையாகவோ / மறைமுகமாகவோ செய்திருப்பார்கள். :wub:

Link to comment
Share on other sites

இந்த அறிவித்தல் செய்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம். ஆனால் சர்வதேச நாடுகளில் பெரிதாக எடுபடவில்லை. எடுபட்டிருந்தால் சிலவேளை தாராளமாக புலிகளுக்கு இராணுவ உதவிகளை வெளிப்படையாகவோ / மறைமுகமாகவோ செய்திருப்பார்கள். :wub:

புலிகளுக்கு உதவி செய்வதுக்கு சாத்தியம் குறைவே.. இலங்கை அரசை நம்பி முதலீடு செய்தவர்கள், தேசிய தலைவரின் அறிவிப்பை உடனடியாக செயலுக்குள் எடுப்பார்கள் என்பதுக்கு இல்லை... நீண்டகால அளவில் சிலவேளைகளின் பலன் இருக்கலாம்... எல்லாம் இலங்கை அரசின் வருங்கால இராசதந்திர நடவடிக்கைகளில் தங்கி இருக்கிறது..

ஆனால் இலங்கை அரசை மேலும் தங்களின் கைகளுக்குள் கொண்டுவர மேற்குலகுக்கு இது போதுமானதாக இருக்கும்... எங்களுக்கு கண்கள் பற்றி போய் கொண்டுதான் இருக்கிறது... சிங்களவனுக்கு சகுனமாவது பிழைக்கட்டுமேன்...

Link to comment
Share on other sites

1) எமது பிரச்சனையில் தலையிடுவதால் அவர்களுக்கு எந்த வித இலாபங்களும் இல்லை.

2) சர்வதேச அரசியலில், மற்றும் ஊடகங்களில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எம்முடைய பொருளாதாரப் பலம் = 0

3) புலம்பெயர் தேசத்தில் சட்டம், ஊடகவியல், அரசியல் போன்றவற்றில் துறைசார் வல்லுனர்களை கொண்ட கட்டமைப்புகள் இன்மை.

4) எம்மவர்களிடையேயான ஒற்றுமையின்மை, சுயநலம் (95% மான எம்மவரின் வாழ்க்கை குடும்பம், பொருளியல் நலனுக்குள் முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது)

வெறும் அனுதாபம் மட்டும் உலகை ஈர்த்துவிடுமானால் ருவாண்டாவில் எவ்வளவோ மனித படுகொலைகளை தவிர்த்திருக்கலாம்.

எம் போராட்டம் சர்வதேசம் எங்கும் பயங்கரவாதமாக சித்திகரிக்கப்பட்டு புலிகளை அவை தடை செய்த பின் எமது செயற்பாடுகளை நாம் மீள் செதுக்கியிருக்க வேண்டும். தடை செய்தது தவறு என்பதுக்கும் அப்பால் நாம் அந் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக காத்திரமான வழிகளில் போராடவேண்டும். புலிகளினதும் கொடியையும், அதன் தலைவரின் படத்தையும் காவி கொண்டு கூட்டங்களை நடத்துவதை நிப்பாட்டி புலிகள் இயக்கம் சாராத புலம் பெயர் தமிழ் மக்களின் போராட்டம் என்று காட்டினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை விட்டு விட்டு. "நீங்கள் தடை செய்தாலும் நாங்கள் அதனையும் மீறி புலிகளின் கொடியையும் பிரபாகரனின் கொடியையும் கொண்டுதான் எம் மக்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுதுவோம்" என்று வீம்பு காட்டினால அதன் பயன் மிக குறைவாகவே இருக்கும்.

இந்த குறிப்புகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. எமது பிச்சரங்களை முன்னெடுப்பதில் எம்மிடம் அதிக திறமை இருந்ததாக தெரியவில்லை. அமரிக்கவில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு பின்னர் பயங்கர வாதம் குறித்து உலகின் பார்வை மாறியது. தற்கொலைத் தாக்குதல்களுக்கு புலிகள் முன்னோடிகள் வழிகாட்டிகள் என்ற இலங்கை அரசின் பிரச்சாரம் உலகின் கவனத்தில் மிகவும் வெற்றி பெற சந்தர்ப்பமாக அமைந்தது. இந்த நிலையில் எமது பிரச்சாரங்கள் மாற்றமடையவில்லை. தாயகத்தில் கரும்புலித் தாக்குதல்களும் அவர்களுடைய தியாகத்தை வீரத்தை வெளிப்படுத்துவதும் மிகவும் இன்றியமமையாதது. அதே நேரம் புலத்தில் இவற்றுக்கான நிர்பந்தத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அந்த நிர்பந்தத்திற்கு சர்வதேச நாடுகளின் ஆயுத உதவியையும் , மூர்க்கத்தனமான ஆயுத பாவனையையும் காரணமாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த இரு தன்மைகளினதும் முக்கியத்துவம் குறித்த புரிந்துணர்வு எம்மிடம் இருக்கவில்லை. எமது பிரச்சாரங்களி அது வெளிப்படவும் இல்லை.

எமக்குரிய அரசியல் வடிவங்கள் குறித்த தனித்துவமான முன்னெடுப்புக்கும் இராணுவ முன்னெடுப்புக்கும் உரிய வித்தியாசங்கள் புரிந்துகொள்ளும்படி இல்லை. இராணுவ முன்னெடுப்புகளையே அரசியலாக காட்சிப்படுத்த முனைந்தது ஒரு பின்னடைவே. புலத்தில் இவ்வளவு முன்னெடுப்புகள் இருந்தும் எத்தனை அந்நிய தேசத்தினருக்கு திலீபன் மற்றும் பூபதித்தாயின் அறவழிப்போராட்டங்கள் தெரியும்? எத்தனை பேருக்கு புலிகள் முன்பு அரசுகளை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்தது தெரியும்? இன்றைக்கு இலங்கை பேரினவாதத்தால் இடம்பெயர்ந்த மக்களின் விபரங்கள் தெரியும்? இன்ன நாடுகளில் இத்தனை ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்து உள்ளனர் என்றோ அகதிகளாக இவ்வளவு மக்கள் உள்ளாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர் என்றோ, ஒரே பார்வையில் எளிய முறையில் பார்க்க கூடிய புள்ளிவிபரம் மற்றும் மற்றும் கணக்குகள் தெரியாது. இன்றைக்கு பதினைந்து வருடமாக ஐம்பதாயிரம் அறுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே கணக்கையே பல செய்தி நிறுவனங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.