Jump to content

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

Link to comment
Share on other sites

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

இவரது பெயரை மாத்திரம் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் தமிழீழ நிலவரம், அரசியல் பிச்சனைகள் அல்லது அங்குள்ள இன்னல்கள் பற்றி ஏதாவது எழுதியுள்ளாரா அல்லது பேசியுள்ளாரா அல்லது அவற்றுள் ஏதாவது விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதுபற்றி அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், நானும் தெரிந்துகொள்ள உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளராகவும் மருத்துவராகவும் பணியாற்றிய டாக்டர் இந்திரகுமார் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.

இவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.

விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா? இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.

அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.

-தினக்குரல்-

Link to comment
Share on other sites

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

வானத்தின் வர்ணங்களை (எனக்குத் தெரிந்த வரையில்) முதன் முதலில் தமிழில் தந்தவர். அப்பலோ(இலக்கம் தெரியவில்லை) தாழ்வமுக்கத்தால் இரத்தம் சுண்டி இறந்து போன மூன்று விண்வெளிவீரர்களுக்காக (படங்களுடன் அவரது மண்ணிலிருந்து விண்ணிற்கு புத்தகத்தில் போட்டிருந்தார்) மனித நேயத்துடன் அழுத என் கண்களில் அவருக்காகவும் கண்ணீர்த்திவலைகள்.

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் பிரிவாலும் வாடும் அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

செல்லமுத்து வாத்தியார், உங்களுடனும், உங்கள் நண்பர் உண்டியல் ஜயதேவனுடனும் அவர் நெருங்கிப்பழகியதாக அறிகிறேன். உங்களது துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

எழுத்தாளராகவும் மருத்துவராகவும் பணியாற்றிய டாக்டர் இந்திரகுமார் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.

இவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.

விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா? இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.

அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.

-தினக்குரல்-

தகவலுக்கு நன்றி தூயவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

M17 அவர்களே! உங்களுடைய கருத்து தவறானது. என்னுடைய நண்பர்கள் யார் என்பதை அறியும் சக்தி உங்களுக்கு இல்லை. இது ஒருவருடைய துயர் பகிர்தல் பகுதி என்பதை மட்டும் மனதில் கொண்டு கருத்துக்களைப் பரிமாறுங்கள்.

தமிழின்மேல் உள்ள பற்றினால்தான் டாக்டர் இந்திரகுமார் என்னுடன் நண்பராக இருந்தார். என்னைவிட அவருக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவருடைய தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன். பல தமிழ் எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். 1999 ஆம் ஆண்டு முகத்தார் யேசுரட்னம் உட்பட பன்னிரண்டு எழுத்தாளர்களை ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்து இலண்டனுக்கு அழைத்து பன்னிருவர்களுடைய நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட வைத்த பெருமைக்குமுரியவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை வேறு, ஆனால் தமிழ் உலகிற்கு அவரின் இழப்பு ஓர் பேரிழப்பு. அவரின் இழப்பு பற்றிய செய்திகளை யாரும் வெளியிடாததின் காரணத்தால்தான் நான் இக்களத்திலே எழுதியிருந்தேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளிக்கு அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.