Jump to content

புலிகளின் 'இரை'யாண்மை - தாமிரா


Recommended Posts

pulikal.jpg

மானுட வேட்டை போலில்லை

புலிகளின் வேட்டை.

அச்சுறுத்தலின்றி அவை

தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...

தனித்து இருப்பவை...

தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...

தன் எல்லை தாண்டி வராது

புலிகள் எப்போதும்...

புலிகளுக்கும் உண்டு

எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக

யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...

காடுகளின் கம்பீரம் புலிகள்.

புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்

ஒரு வனத்தில் வாழ்வதில்லை.

சிங்கமும் புலியும்

ஒரு போரில் மோதுவதில்லை.

மோதினால்...

புலிதான் வெல்லுமென்கிறது

வனங்களின் வரலாறு.

-தாமிரா

http://forwardeded.blogspot.com/2008/11/blog-post.html

வலைப்பூவில் படித்தேன்..

பிடித்தது

உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுத்தம் திருத்தமாக உண்மையைச்சொல்லி இருக்கின்ற கவிஞருக்கு பாராட்டுக்கள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தூயா.

தாமிராவின் கவித்தாக்கம்:...எனக்குள் விதைத்த சிதறல்கள்:

இரை தனக்கு வேண்டும் போதும்

பசிக்கு மட்டுமே கொல்லும்.

தன் இனம் மட்டுமல்ல-

மற்ற இனம் அழிவதிலே கூட

அதற்கு உடன்பாடில்லை.

மறைந்திருந்துதான் தாக்கும்

ஆனாலும்-

துரத்திக் களைப்படையச்

செய்தபின்னரே.

அஞ்சி ஓடுவதில்லை புலிகள்

அஞ்சியோடுபவரையும்

ஓர் அளவுக்குமேல்

துரத்துவதுமில்லை.

காடுகளில் வாழுவதால்

அழித்துவிடலாம் என

எண்ணவேண்டா.

நாட்டுக்குள் புகுந்தும்

அழிக்க வல்லவை புலிகள்.

நினைவிருக்கட்டும்!

Link to comment
Share on other sites

நீங்கள் தரும் சமையல் கலைதான் சுவையென்றால், தேடித்தரும் கவியும் சுவைதான்.

Link to comment
Share on other sites

புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். எமது மக்களின் பாதுகாவலர்கள்.

நன்றி தூயா இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடை வேலைசெய்யுறவுக்கும் பெயர் தாமிராதான் அதுதான் விழுந்தடிச்சு இதுக்குள்ளை வந்தனான் :D:rolleyes:

தூயா உங்கடை கவிதையும் நல்லாயிருக்கு :rolleyes:இவவுக்கு வேறைபெயர் ஒண்டும் கிடைக்கேல்லையாக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pulikal.jpg

மானுட வேட்டை போலில்லை

புலிகளின் வேட்டை.

அச்சுறுத்தலின்றி அவை

தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...

தனித்து இருப்பவை...

தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...

தன் எல்லை தாண்டி வராது

புலிகள் எப்போதும்...

புலிகளுக்கும் உண்டு

எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக

யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...

காடுகளின் கம்பீரம் புலிகள்.

புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்

ஒரு வனத்தில் வாழ்வதில்லை.

சிங்கமும் புலியும்

ஒரு போரில் மோதுவதில்லை.

மோதினால்...

புலிதான் வெல்லுமென்கிறது

வனங்களின் வரலாறு.

-தாமிரா

http://forwardeded.blogspot.com/2008/11/blog-post.html

வலைப்பூவில் படித்தேன்..

பிடித்தது

உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..

எவ்வளவு யதார்த்தமான வரிகள். தாமிரா என்ற பேரை இனி எப்போதும் நான் மறக்காத நிலைக்கு மாற்றியிருக்கிறது இக்கவிதை. வனத்தில் மட்டுமல்ல என்பதை நிகழ்காலத்தில் வாழும் எமக்குள்ளும் எப்படி அற்புதமாக பொருந்துகிறது இக்கவிதை.

புலிகள் எல்லைகள் தாண்டுவதில்லை. தாண்டினால் சிங்கங்கள் தாங்காது.

Link to comment
Share on other sites

எனக்கும் படித்த உடனேயே மனதில் ஒட்டிக்கொண்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்!

மிகவும் அருமை! அழுத்தமான, யாதார்த்தமான வரிகள்!

பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கவிதை, புலியைமட்டுமல்ல புலிகளையும் சொல்கிறது!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.