Jump to content

கொண்டாடும் மனசு .............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடும் மனசு .............

நாம் பிறந்த மண்ணிலே ,

நாள்தோறும் குண்டு மழை

போதாதென்று மழை வெள்ளம்

அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் ,

தசை பிளந்து ரத்த வெள்ளம் ,

இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம்

எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும்

இவை எல்லாம் நம் சனத்தை

ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா

பட்டியல் நீளும் ,பாதை போன்று

அப்பாவை காணவில்லை ,

அண்ணாவை காணவில்லை ,

பள்ளி சென்ற அக்காவையும்

காணவில்லை ,தகவல் இல்லை

இந்நிலையில் கொண்டாட மனம் வருமா

தினசரியைபார்த்தால் தினம் தோறும்

இணைய தளத்திலும் துயர செய்தி தான்.

இத்தனையும் நடக்கும் போது

கொண்டாட மனம் வருமா ?

அமைதியின் ஏசுவை ,தரிசிக்க

கோவிலிலும் குண்டு மழை ,

கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான்

இந்நிலையில் கொண்டாட மனம் வருமா

கொண்டாட ஒரு காலம் வரும் ,அது வரை

கொண்ட கொள்கை மாறாமல் ,

புலம் பெயர் ,மண்ணில் உள்ளக்கோவிலில்

இறைவனை ,ஏசு பிறப்பை உள்ளத்தில்

மண்ணில் சமாதானம் வர மன்றாடுவோம் . ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா கொண்டாடும் மனசு எனும் தலைப்பின்கீழ் கொண்டாட மனம் வருமா? என்று கேட்டு தாயக வாழ்வின் வலிகளைக் கொட்டியிருக்கிறீர்கள்.

ஆமாம்

வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்…

ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது.

போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம்

ஒரு மூச்சில் நாற்பது செல்கள்.

கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு,

வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும்

குந்தி எழும்பினாலே ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம்.

நச்சரவம் ஒருபுறம், நாசத்திரவம் மறுபுறம்

எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்?

காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே,

நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே

பாறிச் சரியுதடா பாசத் தோள்கள்.

ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க,

பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா.

சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா?

தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது.

ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன.

ஓரவிழி கசிய தூரத்துவெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு

எனும் பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன.

எங்கள் உறவுகளுடன் கூடிக் கொண்டாடி உவகைக் கூத்தாடி வாழும் காலம் எங்கள் வாசல் வரும். இப்போது காலப்பணி எங்கள் கைகளிலே நீளக் கிடக்கிறது. நெஞ்சக் கூட்டிற்குள் நெருப்பைச் சுமந்திடுக.

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவினதும், சகாரா அக்காவினதும் உணர்வுகள் கவிவரிகளாக - தாயகத்தை மனதில மீண்டும் படம்போட்டு காட்டிது. இந்தநேரத்தில சோழியன் மாமா எழுதிய ஓர் தாயக நினைவுப்பாடலை இதில இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன். இந்தப்பாடலை நானும் தமிழ்தங்கையும் அண்மைய ஓர் ஒன்றுகூடலில இசையமைச்சு பாடி இருந்தோம்.

தலைவன்: வன்னிக்காட்டு மண்ணினிலே

வாடிநிற்கும் என் உயிரே

உன்னை எண்ணிப் பாடுகிறேன்

உன்னுருவைத் தேடுகிறேன்.

தலைவி: தமைக் கொடுத்து மண்காக்கும்

மாவீரர் வாழ் நிலத்தில்

எனையிருத்தி வாழுகின்றேன்

எம்வீரர் நிழலினிலே.

தலைவன்: மண்ணைவிட்டு இங்கு வந்து

மனம்வருந்திப் பாடுகிறேன்

எந்தன் உயிர்க் கண்மணியே

எங்கிருந்து வாடுகிறாய்?

தலைவி: சிங்களத்தின் இராணுவங்கள்

எங்கள் நிலம் சிதைத்தாலும்

பொங்கிநிற்கும் எம்மறவர்

புகழ்நிழலில் வாழுகிறேன்.

தலைவன்: ஊர்விட்டு ஊர்மாறி

சீர்கெட்டு வாழுறியோ?

வேர்விட்ட இடம் துறந்து

வீதியிலே நிற்கிறியோ?

தலைவி: ஊர்விட்டு நகர்ந்தாலும்

உறவென்று பலருண்டு - தனி

நாடென்ற உணர்வாலே

ஒன்றுபட்ட இனம் உண்டு.

தலைவன்: பஞ்சம் பிணி நிலவுதென்று

நித்தம் நித்தம் செய்திகேட்டு

வஞ்சகரின் தடையை எண்ணி

வாடுகிறேன் எந்தன் அன்பே.

தலைவி: எஞ்சி எஞ்சிப் போனாலும்

இழப்பதற்கு என்ன உண்டு?

விஞ்சி நிற்கும் உயிருமது

விடுதலைக்காய்ப் போகட்டுமே.

தலைவன்: விடியல் ஒன்று வரும்நாளில்

விரைந்து வரும் புதுவாழ்வு

அதுவரையில் நான் இங்கே

காத்திருப்பேன் உனக்காக.

தலைவி: காத்தல் மட்டும் போதாது

கடமை ஒன்று உமக்குண்டு - மண்

காக்க அங்கே நீர் இன்று

கணக்கின்றிக் கொடுத்துவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.