Jump to content

உங்கள் அனுபவங்கள்: பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல்


Recommended Posts

வணக்கம்,

2008ம் ஆண்டு யாழில எனது கடைசித் தலைப்பாக இந்த பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் பற்றி கதைக்கலாம் எண்டு நினைக்கிறன். நான் ஏற்கனவே குறிப்பாக யாழ் மூலம் இதில அதிகம் அனுபவப்பட்டு இருக்கிறதால - எனது அனுபவங்களை இதில சொல்லுறதை குறைச்சு உங்களுக்கு ஏதாவது அனுபவங்கள் இருந்தால் அதுபற்றி அறிஞ்சுகொள்ள விரும்புறன்.

பொல்லுக்கொடுத்து அடிவாங்குபவர்களில முக்கியமான ஆக்கள் எண்டு பார்த்தால் படைப்பாளிகள், மற்றது ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எண்டு சொல்லலாம்தானே? பலர் இந்த தர்ம அடியை வாங்குற பயத்திலதான் படைப்பு இலக்கியங்களில ஈடுபடுவது குறைவோ எண்டும் எண்ணவேண்டி இருக்கிது. யாழில கூட பலர் சுய ஆக்கங்கள் செய்யாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு பதில் கருத்துக்கள் எழுதாமல் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறதுக்கு இந்தவிடயம் காரணமாக இருக்கிது.

நான் முன்பு சில விசயங்களை வாசிச்சு அறிஞ்சன் என்ன எண்டால் சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்களை சிலர் செய்தபோது அதைப்பார்த்துவிட்டு வேறு ஆக்கள் இது தங்கள் பற்றிய கதை எண்டு சொல்லி அதன் தயாரிப்பாளர் / கதாசிரியரை போட்டுத்தாக்கி இருக்கின்றார்கள். கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில நையாண்டி மேளம் எண்டு ஓர் நகைச்சுவை தொடர் போறது. அதில பங்குபற்றுகின்ற கலைஞர்கள் கூட தமக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டது பற்றி சொல்லி இருந்தார்கள்.

யாழ் எண்டு பார்த்தால் சாந்தி அக்கா, சாத்திரி அண்ணா போன்றோரும் தமது ஆக்கங்கள் மூலம் தங்கள் தனிப்பட்ட வாழ்வில ஏற்பட்ட பாதிப்புக்கள், மிரட்டல்கள் பற்றி சொல்லி இருக்கிறீனம். பின்விளைவுகள் பற்றி யோசிக்காது ஒரு விசயத்தை சும்மா எழுதிப்போட்டு போறது இல்லாட்டிக்கு படைச்சுப்போட்டு போறது எண்டு நாங்கள் செயற்பட்டால் எமக்கு தர்ம அடி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

நான் கூட யாழ் இணையத்தில எழுதுவதை நிறுத்த / குறைக்க யோசிச்சதன் அல்லது யோசிப்பதன் முக்கிய காரணங்களில ஒன்று ஏன் சும்மா பொல்லுக்கொடுத்து அடிவாங்குவான் எண்டு தான். விமர்சனங்களை தாங்குவது அல்லது விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கிறது எண்டுறது வேறு, பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது என்பது வேறு எண்டு சொல்லலாம்.

நாங்கள் எல்லாரும் அடிப்படையில சாதாரண மனுசர்கள். ஒருவர் சொல்லிற ஒரு கருத்து - சிலவேளைகளில மாதக்கணக்காக அல்லது வருசக்கணக்காக எங்கட மனதில அழியாமல் நிண்டு உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கக்கூடும். ஓரிரு விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகள் மாத்திரமே மனம் கலங்காத வகையில அவர்களுக்கு கிடைக்கின்ற பொல்லடிகள் அவர்களை பாதிக்காதவகையில மனவைராக்கியம் உடையவர்களாக இருக்கக்கூடும். மிகுதி எல்லாரும் பெறுவது வேதனைகளும் மன உலைச்சல்களுமே.

ஒவ்வொருத்தர் படைப்புக்களில ஈடுபடுவதற்கு ஏதாவது எழுதுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனக்கு எண்டால் முக்கியமாக பொழுதுபோக்கு. சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். இப்படி வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இந்தவகையில பொல்லடி கிடைக்கும்போது அதை எப்படி ஒவ்வொருத்தரும் தாங்கிக்கொள்ளுறம் அல்லது முகத்தை / உடம்பை கொடுக்கிறம் எண்டுறதில வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக, பணத்தை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்பவருக்கு கிடைக்கின்ற வேதனை (பொல்லடி) பொழுதுபோக்கை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்யுறவருக்கு கிடைக்கிற வேதனையை விட குறைவாக இருக்கலாம்.

நாளாந்த வாழ்வில கூட ஓர் விசயத்தை செய்யேக்க நீங்கள் எல்லாரும் வெவ்வேறு விதமான தர்மசங்கடமான நிலைகளை அடையக்கூடும். ஏதாவது ஓர் செயலை செய்யும்போது பொல்லடி கிடைப்பதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் இருக்கிது. இதுபற்றி உங்கள் கருத்துக்கள், அனுபவங்கள் பற்றியும் சொல்லுங்கோ. நன்றி!

உங்களுக்கு இனிய 2009 புத்தாண்டு வாழ்த்துகள்! பொல்லடி வாங்காமல் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்! :rolleyes:

Link to comment
Share on other sites

முரளி,

பொல்லுக் கொடுக்கமால் எப்படி பொல்லுக் கொடுத்தல் பற்றி கட்டுரை எழுதலாம் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தக் கட்டுரை.

அதுக்காக மற்றவைய பொல்லுக் கொடுக்கச் சொல்லி எழுதிறது, அதிகம்.

Link to comment
Share on other sites

விமர்சனங்களை( நல்ல, கூடாத) ஏற்பது போல் பொல்லை கொடுத்து அடி வாங்குதல் என்பதும் ஒரு தனி அனுபவம் தானே. அனுபவங்கள் தான் பாடப்புத்தகங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கலைஞன் (சீ..முரளி) ஒரு தலைப்போட. கருத்து எண்டு பார்க்காமல் தனிப்பட்ட தாக்குதல் அடிக்கடி நடக்கிற இடமாக யாழ் களம் இருக்கிறதால இது பொருத்தமான தலைப்புத் தான். எனக்கு பொல்லுக் கொடுத்து அடி வாங்கிற அனுபவம் யாழ் களத்திலயும் அதுக்கு வெளியிலயும் நிறைய நடக்குது. ஆனால் ஒரு ஒற்றுமை என்னண்டால் உள்ளேயோ வெளியேயோ, மாற்றுக் கருத்து மாணிக்கங்களோட தான் இந்த அனுபவம் எனக்குக் கிடைக்குது. மாற்றுக் கருத்தெண்டால் எதில மாற்றுக் கருத்து எண்டு யாழ் பார்க்கிறவைக்கு விளங்கும் தானே நல்லா? உதாரணத்துக்கு இங்க ஒரு "புத்திஜீவி" (அப்படி அவர் தான் தன்னைச் சொல்லிக் கொள்கிறார், நான் "நோ கொம்மென்ற்ஸ்") யோட அடிக்கடி தமிழர் போராட்ட நியாயம் பற்றியும் தற்போது ஏன் புலிகள் சமாதானம் சரணடைதல் எண்டு போக இயலாது என்பது பற்றியும் பல சுற்றுகள் விளங்கப் படுத்தி விவாதம் செய்திருக்கிறன். ஆனால் புத்திஜீவி எப்பவும் என்னைத் தாக்குகிற பொல்லு என்னண்டால் "நீர் இங்க இருந்து வன்னிக்கு இப்பவே போய் போராட ரெடியோ? இல்லாட்டி அந்தச் சனம் போராடட்டும் எண்டு சொல்ல உமக்கென்ன அருகதையிருக்கு? என்பது தான். இதுக்கு நான் என்ன சொல்ல? இங்க பண உதவி கேட்டு வாற மின்னஞ்சல்களுக்கு கூட நான் பதில் அனுப்புறதில்ல. கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருக்கிற உறவுகளுக்கு ஏதாவது அனுப்பித் தான் பணம் குடுக்கிறது. இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அவ்வளவு கீழ்ப் படிவு (அல்லது பயம்) நான்.ஆனாலும் தூர இருக்கிறதால நாங்கள் ஆதரவுக் குரல் தராம, அடுத்த எக்ஸ்ட்றீமுக்குப் போய் உங்கள் போலத் துரோகிகளாக மாறக் கூடாது எண்டு ஒரு சின்னப் பொல்லால புத்திஜீவியத் திருப்பித் தாக்கியும் இருக்கிறன். பொல்லுக் குடுத்து வாங்கிற அடியத் தாங்கிற சக்தி எதனால வருகுது எண்டு சில காரணங்கள் முரளி சொல்லியிருந்தார். நான் எங்கயும் பொல்லடி வாங்கத் தயாராயிருக்கிறது ஒரு காரணத்தால தான் எண்டு நினைக்கிறன்: என்னில பாதி வயசே ஆன பெண் ஆண் பிள்ளைகள் அங்க பொல்லடியில்லை, செல்லடி, கிளஸ்டர் குண்டு, செத்த பிறகும் பிராண்டுகிற மன நோயாளிகளின் வக்கிரம் எண்டு எத்தினையத் தாங்குதுகள். நாங்கள் கொஞ்சம் பொல்லைக் குடுத்து அடி வாங்கினால் என்ன குறைஞ்சு போயிரும்?

வேலை துவங்க முதல் யாழ் வந்ததால எழுதிக் கொண்டிருந்திட்டன். வேலை முடிஞ்சு பார்ப்பம் மீதிய. எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

நான் கூட யாழ் இணையத்தில எழுதுவதை நிறுத்த / குறைக்க யோசிச்சதன் அல்லது யோசிப்பதன் முக்கிய காரணங்களில ஒன்று ஏன் சும்மா பொல்லுக்கொடுத்து அடிவாங்குவான் எண்டு தான். விமர்சனங்களை தாங்குவது அல்லது விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கிறது எண்டுறது வேறு, பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது என்பது வேறு எண்டு சொல்லலாம்.

ஒவ்வொருத்தர் படைப்புக்களில ஈடுபடுவதற்கு ஏதாவது எழுதுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனக்கு எண்டால் முக்கியமாக பொழுதுபோக்கு. சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். இப்படி வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இந்தவகையில பொல்லடி கிடைக்கும்போது அதை எப்படி ஒவ்வொருத்தரும் தாங்கிக்கொள்ளுறம் அல்லது முகத்தை / உடம்பை கொடுக்கிறம் எண்டுறதில வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக, பணத்தை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்பவருக்கு கிடைக்கின்ற வேதனை (பொல்லடி) பொழுதுபோக்கை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்யுறவருக்கு கிடைக்கிற வேதனையை விட குறைவாக இருக்கலாம்.

ஆவ் முரளி நல்லா பொல்லடி (சொல்லடி) யாழில வாங்கீட்டீங்களோ?? :rolleyes:

சரி சரி யாழில எழுதுறதுக்கு யோசியாதேங்கா நல்லா உங்கட படைப்புகளை

நீங்கள் எழுதுங்கோ. யாழ்ல எல்லாம் சகஜமப்பா <_<

Link to comment
Share on other sites

முரளி உங்களுக்கு மன்னிக்கவும் உங்கள் ஆக்கங்களுக்கு கிடைக்கும் சொல்லடிகள் பாராட்டுக்களுக்கு சமன்.ஆகவே துணிந்து தொடருங்கள் உங்கள் பணியை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீரடி, சிலம்படி என்று பழகி இருப்பவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி எடுக்கவேண்டும் என்பதற்காகவே பொல்லைக் கொடுத்து பொல்லடிபடவேண்டும். இதெல்லாம் சமூகசேவை! :rolleyes:

Link to comment
Share on other sites

பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் என்பது relay மட்டுமே. ஆகவே தொடர்ந்து ஓடுங்கள் எல்லைக்கே. :rolleyes:<_<

Link to comment
Share on other sites

உங்கட பொல்லடி வாங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுவீங்கள் எண்டு பார்த்தால், நான் இன்னும் பொல்லடி வாங்குறதுக்கு ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் கொடுக்கிறீங்கள். எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

உங்கட பொல்லடி வாங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுவீங்கள் எண்டு பார்த்தால், நான் இன்னும் பொல்லடி வாங்குறதுக்கு ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் கொடுக்கிறீங்கள். எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

அனுபவிச்சவனுக்குத்தான் எப்படி அதில் இருந்து தப்பலாம் என்பதும் புரியும். அதனால்தான் எந்த வேலைக்குப் போனாலும் அனுபவம் கேக்கிறார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட பொல்லடி வாங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுவீங்கள் எண்டு பார்த்தால், நான் இன்னும் பொல்லடி வாங்குறதுக்கு ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் கொடுக்கிறீங்கள். எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

முரளி,

அண்மையில் தான் யாழில் பொல்லடி வாங்கி இருந்தேன் :rolleyes:

ஆனால் அதுவும் ஒரு அனுபவமாகத்தான் இருந்தது.

'எவ்வளவு எவ்வளவு பொல்லடிகள் வாங்குகின்றோமோ அவை எல்லாம் வெற்றியின் படிகள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்(எண்ணுறது என்று எண்ணிக்கையையும் சேர்த்துத்தான் சொல்லுறன்)...

'அடிகள் எல்லாம் வெற்றியின் படிகள்'..

அதுக்காக எழுதுறதை விடலாமோ?!! !!!

Link to comment
Share on other sites

முரளி ஆரம்ப காலங்களில் பத்திரிகைகளில் மட்டுமே சில ஆக்கங்களை எழுதியபொழுது அதன் மறு தாக்கம் என்பது பெரிதாய் தெரியவில்லை காரணம் பத்திரிகையில் வருவதை படித்து விட்டு பேசாமல் அல்லது மனதிற்குள் திட்டிவிட்டு போய்விடுவான் ஆனால் அதனை யாழ்களம் போன்று கருத்துக்களை மற்றவர்களும் வைக்கும் கருத்துக்களங்களிலும்.அல்லது வலைப்பூக்களில் படைப்புக்ககைளை போடும் பொழுது தான் எம்முடைய ஆக்கம் மற்றவர்களிடம் எவ்வளது தாக்கத்தினை ஏற்றபடுத்தியிருக்கின்றது என்பது தெரியவரும். ஆனால் அவைதான் எமது எழுத்துக்களை புடம் போடும் விமர்சனங்கள் சில நேரம் விசனத்தை ஏற்படுத்தினாலும். அவை நம்மை பண்படுத்தும். உண்மையில் யாழ் களம் என்னையும் நன்றாகவே பண்படுத்தியிருக்கிறது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களை பண்படுத்தும்.அதே போலவே நீங்களும் நிறைய படைப்புக்களை தரவேண்டும் பல பொல்லுகளை கொடுத்து வாங்கவேண்டும். நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவேண்டும். என்று புதுவருட வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.