Jump to content

புது வருட சங்கல்பம் (ரெசலூஷன்) என்ன?


Recommended Posts

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

யாழ் களம் இன்னும் இன்னும் சிறக்கவும் தமிழ் மக்கள் இன்னும் உயர்வு நிலையடையவும்..

நண்பர் வீரப்பன் அற்புதமாக எழுதியிருக்கின்றார்

யாரு கதவை தட்றது? திறந்து பார்த்தேன் . அவள் நின்று கொண்டு இருந்தாள்

என்னடி என் வீட்டு கதவை தட்டுகிறாய் என்றேன் அவள் யார் என்று நினைக்கிறீர்கள் .கால தேவதை என்பார்கள் நான் அவளை பராசக்தி என்றே கூப்பிடுவேன் .

அவளை இருக்கையில் அமரசெய்து தெருக்கோடியில் உள்ள கடைக்கு சென்றேன் . ஆவின் பால் .. கோகோ கோலா இரண்டையும் வாங்கி வந்தேன். வாங்கி வந்த என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள், என்ன சொல்ல? உலகமே உன் வரவுக்காய் காத்திருக்க என் வீட்டு கதவு தட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறாள் என்ன சொல்ல நீ புதிய ஆண்டாய் ஆங்கிலத்திலும் வருவாய் என்று தெரியவில்லையே தாயே .!

என் வேண்டுதலை பிறகு சொல்கிறேன் இந்த உலகத்திற்கான ஓர் இரு விஷயங்களை கேட்கட்டுமா?

கால மகளே பராசக்தி காயப்படுத்து வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் ஆறும்காயங்களாக இருக்கட்டும் .பிள்ளைகளை மடியில் இட்டுக்கொள் . பெரியவர்களுக்கு மடியில் பிள்ளையாய் இரு . கயவர்களுக்கு கூட நீ இருட்டாய் இருப்பாய் எனக்கு தெரியும்..வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும் . ஆனாலும் தாயே நீ நேரம் கடத்துகிறாய் .

இவன் கட்டளை இடுகிறான் நல்லது நினைப்பாய் ஆக . காலம் கை கட்டி நிற்கிறது என்று யாராவது சொல்லபோகிறார்கள் .செல்வதற்கு முன்னால் ஒன்று என்ன வேண்டும் என்று கேட்டாய் நீ . நீயும் நானும் ஒன்று என்று உனக்கு தெரியும் ஆனாலும் எனக்கும் தெரிய வேண்டும் சற்று வழி விடுவாயா.

பங்கு சந்தையில் இருப்பவர்களுக்காக ஒன்று மட்டும் நீ பணம் தராவிட்டாலும் பரவாயில்லை இருப்பதை பிடுங்கி கொள்ளதிரு. உலகம் உன்னை வரவேற்க காத்திருக்கிறது போய் வா ..

காலமகள் பராசக்தி கை இரண்டில் அள்ளிக்கொள்ள நாளை வருவாள் எல்லா இடங்களிலும் பரவி நிற்கிற என் தாயே! கள்ளமில்லா எண்ணம் தா! கருணையோடு அனைவரையும் இருக்கச் செய்வாயாக! எங்கும் மங்களம் நிறையட்டம்! துன்பம் நேருமாயின் தாங்கும் சக்தி தா! இன்பத்தில் ஆடாமல் இருக்க வை!

புதிய வருடமாய் இந்த பராசக்தி உங்கள் வீடுகளில் வந்து நிறையட்டும்..புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

- வீரப்பன்.

முக்கியமாக குழப்படிக்காரர்கள்...குடிமக்??ள்...குடிப்பதாக பாவனை காட்டுபவர்கள்...முடிப்பதாக மிரட்டல் விடுபவர்கள்... சமைத்துப் போட்டே கொல்ல நினைப்பவர்கள் ..அனைவரும் உங்கள் சங்கல்பங்களை இங்கே பதிந்து விடவும்.....

(உங்கள் கல்லடி சொல்லடிகளில் இருந்து தப்பிப் பிழைக்க என் போன்ற "அப்பிராணிகளுக்கு" உதவியாய் இருக்குமே.... :rolleyes:<_<

-சங்கல்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்...எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

-சங்கல்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்...எல்லாள மஹாராஜா

ஹீம் :unsure::rolleyes:<_<

Link to comment
Share on other sites

ஹீம் :unsure::rolleyes:<_<

என்ன ரசிகைக்கு ஒரு சலிப்பூ.... இந்தச் சலிப்பைப் போக்க ஒரு சங்கல்பம் செய்வதாய் வேண்டிக்கொள்ளுங்கள் ரசிகை..... :lol::lol:

( இவரே சங்கல்பம் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்.... இதில் அட்வைஸ் வேற.... முணு முணுப்பது எனக்குக் கேட்கவில்லை... இது சத்தியம்...சத்தியம்...). :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(உங்கள் கல்லடி சொல்லடிகளில் இருந்து தப்பிப் பிழைக்க என் போன்ற "அப்பிராணிகளுக்கு" உதவியாய் இருக்குமே.... :huh::D

-சங்கல்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்...எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கான எனது சங்கல்பம்..

யாரோடும் கருத்துச் சண்டை பிடிக்கிறதில்ல. (அதற்காக அநியாயத்தை அங்கீகரிக்க மாட்டன்). பிடிக்கிற நிலை வந்தா.. மச்சி கூல் டா கூல் என்று சொல்லிடுறது. பாப்பம்.. நானே என்னை கட்டுப்பத்திக்கிறனா என்று..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு சங்கல்ப்பமும் எடுப்பதில்லை என்பதுதான் எனது சங்கல்ப்பம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கான எனது சங்கல்பம்..

யாரோடும் கருத்துச் சண்டை பிடிக்கிறதில்ல. (அதற்காக அநியாயத்தை அங்கீகரிக்க மாட்டன்). பிடிக்கிற நிலை வந்தா.. மச்சி கூல் டா கூல் என்று சொல்லிடுறது. பாப்பம்.. நானே என்னை கட்டுப்பத்திக்கிறனா என்று..! :rolleyes:

நல்ல சங்கல்பம் டா

இப்படிக்கு

மனசாட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது வருட சங்கல்பம் நிறையவே இருக்கு.

1.சிக்கனமாய் வாழ்ந்து கிடைக்கும் பணத்தை எம் உறவுகளுக்கு அனுப்புவது.

2.தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது.

3. படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலை தேடிக்கனும்.

4.பாதையில் போகும் போது டெலிபோன் கதைக்கிறதை குறைக்கனும்.

5.முன் தூங்கி முன் எழும்ப வேண்டும்.

6.கறுப்பி என்ற பெயரிலிருந்து விடுபட வேணும்.

7.நிறைய எழுதனும்.

8.சிகரட் புகைப்பதை நிறுத்த வேணும்.

தொடரும்..................

Link to comment
Share on other sites

8.சிகரட் புகைப்பதை நிறுத்த வேணும்.

தொடரும்..................

என்னா??? :rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா??? :rolleyes::huh:

ஆஆஆஆஆ...........என்னாச்சுங்க புகைக்கக் கூடாதா? வாயில் சிகரட்டை வைச்சு மூக்கால புகை விட்டா தப்பே இல்லைங்க.

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆ...........என்னாச்சுங்க புகைக்கக் கூடாதா? வாயில் சிகரட்டை வைச்சு மூக்கால புகை விட்டா தப்பே இல்லைங்க.

கறுப்பி அண்ணா நீங்கள் தாராளமாகப் புகைக்கலாம் ..சுதந்திர உலகில் இதுவும் இல்லையென்றால்..என்ன செய்வது...

நானும் உங்களைப்போலவே இந்த சங்கல்பத்தை இன்று முதல் எடுக்க யோசிக்கின்றேன்..

.தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது. :D :D

யாழுக்கான எனது சங்கல்பம்..

யாரோடும் கருத்துச் சண்டை பிடிக்கிறதில்ல. (அதற்காக அநியாயத்தை அங்கீகரிக்க மாட்டன்). பிடிக்கிற நிலை வந்தா.. மச்சி கூல் டா கூல் என்று சொல்லிடுறது. பாப்பம்.. நானே என்னை கட்டுப்பத்திக்கிறனா என்று..! :D

நெடுக்ஸ்.... நீங்க அந்த எலியைப்படுத்து பாட்டையும் பார்த்து விட்டு.....ஹூம்... நீங்கள் சொல்வதையெல்லாம் ...நம்புகின்றோம்.....தனி மடல் போடத் தெரிந்த உங்களுக்கு உங்கள் கருத்துச் சுதந்திரம் (அது சரியோ தவறோ) பறிக்கப்படக் கூடது என்று வாதிட்டவர்களுக்கு நன்றி சொல்லத் தெரியவில்லையா? <_<:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.... நீங்க அந்த எலியைப்படுத்து பாட்டையும் பார்த்து விட்டு.....ஹூம்... நீங்கள் சொல்வதையெல்லாம் ...நம்புகின்றோம்.....தனி மடல் போடத் தெரிந்த உங்களுக்கு உங்கள் கருத்துச் சுதந்திரம் (அது சரியோ தவறோ) பறிக்கப்படக் கூடது என்று வாதிட்டவர்களுக்கு நன்றி சொல்லத் தெரியவில்லையா? :lol: :lol:

எல்லாருக்கும் நன்றியும் பாராட்டும் சொன்ன பதிவைத் தானே முதலில போட்டிருக்கேன்.

எமது பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டு கருத்தியல் நியாயத்தன்மையோடு இருந்த அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry474566

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புது வருட சங்கல்பம் நிறையவே இருக்கு.

1.சிக்கனமாய் வாழ்ந்து கிடைக்கும் பணத்தை எம் உறவுகளுக்கு அனுப்புவது.

2.தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது.

3. படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலை தேடிக்கனும்.

4.பாதையில் போகும் போது டெலிபோன் கதைக்கிறதை குறைக்கனும்.

5.முன் தூங்கி முன் எழும்ப வேண்டும்.

6.கறுப்பி என்ற பெயரிலிருந்து விடுபட வேணும்.

7.நிறைய எழுதனும்.

8.சிகரட் புகைப்பதை நிறுத்த வேணும்.

தொடரும்..................

கறுப்பிக்கு எல்லாள மஹாராஜாவின் அவையில் இருந்து வரும் மடல்....

என்னான்னா இதைத்தான் சொல்லுறது 'நுணலும் தன் வாயால் தான் கெடும்.."

மஹாராஜாவின் "அட்வைஸ்" என்னான்னா.... பெண் வேஷம் போடுவதை நிருத்தி(இத்துடன்) ஆளாய் வருக... ஹி...ஹி :) :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.