Jump to content

யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது....


Recommended Posts

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

Link to comment
Share on other sites

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

மக்கள் நாளும் படுகொலை செய்யப்படும் தேசத்தில் இருந்து வந்தவர்களின் தேசம் படுகொலை மயமாகத் தான் இருக்கும்.இனவாதாம் போர் வெறி என்பன நீங்கள் இருக்கும் கொழும்பில் இருந்தே ஊற்றெடுக்கிறது.இங்கு இருப்பவர்கள் எல்லோருமே அன்பு அமைதி என்பனவற்றையே வேண்டீ நிக்கிறோம். நீங்கள் என்ன ஆக்கங்களைப் படைக்கிறீர்களோ அவற்றை வாசித்து விளங்கி கருத்து எழுதத் தான் யாழ்க்களம் இருக்கிறது.ஆகவே எழுதுங்கள், உங்கள் சாத்வீகம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

நாங்கள் வெள்ளை வேட்டி சட்டையைத்தான் விரும்பினோம்...

அதில் இரத்தக்கறை விழுந்தது எதிரிளால்... இந்த

கறை வேட்டியை கழட்டி மீண்டும் புது வேட்டி கட்டிவிட்டு நான் போய்விடலாம்..

என் குழந்தையின் சிறுவேட்டிமேலோ...என் பாப்பாவின் பட்டுச்சட்டை மேலோ.. கறை பட்டுவிடும் பயம் மட்டுமல்ல..

அந்த சிறுகுருத்துகளையே.. இழந்துவிடும் பயம்... ஈழத்தின்பின்தான் அமைதி.

அன்றுதான் சமயமும் சாத்வீகமும்..அன்றுதான் நலவாழ்வுக்கு மீள்வோம்.. அதுவரை பிணவாசமும்.. இரத்தவாடையும்.. இருக்கும்.. மூக்கை மூடிக்கொண்டு நீங்கள் போனால்.. உங்கள் நிலத்தில் வேறு யார்

சிரமதானம் செய்வாரகள்.. நாளாக நாளாக நாற்றம் கூடும்.. நாய்களும் கூடும்.. கழுகுகள் வரும்.. சுற்றி முழுவதும் சுடுகாடாய்விடும்.

குருதிக்கறைகள் குறையல்ல-மனக்

கறையே பெருங் குறை

Link to comment
Share on other sites

ஓமோம் , மௌன ஊர்வலம் போவம் , தியானம் உண்ணாவிரதம் எல்லாம் இருப்பம்,

இங்க தான் இனவாதிகளும் , போர் வெறியர்களும் இருக்கிறார்கள்

விட்டா இன்னும் சொல்லுவியள்

Link to comment
Share on other sites

ஓமோம் , மௌன ஊர்வலம் போவம் , தியானம் உண்ணாவிரதம் எல்லாம் இருப்பம்,

இங்க தான் இனவாதிகளும் , போர் வெறியர்களும் இருக்கிறார்கள்

விட்டா இன்னும் சொல்லுவியள்

:lol: :lol: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

சாத்வீகம்.... அன்பு.... அமைதி போன்றவற்றை பெற்றுக்கொள்ளவே அங்கே போர் நடக்கின்றது. நிகழ்காலத்தில் போர் நடப்பதால் போர்பற்றிய பேச்சு அதிகமாகிறது. எதிர்காலம் வெறும் கானவாக கூட போகலாம் நிகழ்காலத்தில் வாழும் எமக்கு. கிட்டத்தட்ட 22 ஆயிரம் போரளிகளின் வாழ்வில் அதுவே நிஜம். ஆகவே எதிர்காலம் பற்றியும் பேசலாமே எனும் உங்கள் கருத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் போர் பற்றியே பேசுகிறீர்கள் எனும் உங்கள் கருத்தை நிராகரிக்கிறேன். ஆதாவது கனவை பற்றி அலட்டாமல் நிஜத்தை பேசலாமே என்பதே என் நிலை......... காரணம் நிகழ்கால நிகழ்வுகளே எதிர்கால கனவுகளை உருவாக்குகின்றது.

ஆக நாம் போர்பற்றி பேசுவாதக உங்களுக்கு தோன்றுகின்றதே தவிர. நாங்கள் அமைதி பற்றியும் சாத்வீகம் பற்றியும்தான் அதிகமாக பேசுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

உங்கள் வருத்தம் புரிகிறது ஆனால் இப்போது இந்த நிலைமையில் மனிதம் அமைதி சாத்வீகம் என்டெல்லாம் கதைத்தால் எங்கள் தலைமேல் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

ஈழத்திலே மக்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் யாரும் சாத்வீகம் பற்றிக்கதைக்க மாட்டார்கள் அப்படிக்கதைத்த காலம் எல்லாம் போய்விட்டது இனி அமைதி பற்றிப்பேசவேண்டுமாயின் அது தமழழீழம் மலர்ந்தபின்தான். எங்கட நாட்டில ஆமிபோய் கிளிநொச்சியில போய் நிக்கேக்க அமைதிபற்றிப்பேசச்சொல்லுறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது...

இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் விளங்கிட்டுது, களத்துக்கு வர வெறுப்பாக இருந்தால் நெப்போலியனை கட்டிப்பிடித்துக்கொண்டு கவிண்டு படுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் விளங்கிட்டுது, களத்துக்கு வர வெறுப்பாக இருந்தால் நெப்போலியனை கட்டிப்பிடித்துக்கொண்டு கவிண்டு படுங்கோ :D

அது யாருங்கோ நெப்போலியன்.

பிரான்சை ஆண்்ட நெப்போலியன் மன்னனையா? :lol:

Link to comment
Share on other sites

ஒரு நாவிதன் அவர் தொழில் சம்பந்தமாகவே அதிகம் பேசுவான். கொத்தனார் தன் தொழில் சம்பந்தமாகவே அதிகம் பேசுவார் இது சாதாரணம்......கிணற்று தவளைகள் மாரி நேரத்தில் தான் அதுவும் கிணறு முட்டும் போது தான் வெளி உலகை பார்க்கும். மற்றும் படி உள்ளே தான் இருக்கும். அது போலவே இங்கும் கொத்தனார், நாவிதன் மாதிரி .... அப்ப அப்ப யாரும் உலக செய்திகளை வெட்டி ஒட்டினால் சரி. அப்போது தான் (மாரி தவளைகளுக்கு)உலகம் தெரியும்.

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

Link to comment
Share on other sites

:wub: பார்த்தீங்களா இதைத்தான் சொன்னான். ஒரு கருத்தை கொஞ்சம் அழுத்திச் சொன்னதும் அதுக்கும் இங்க எத்தனைபேர் கடிந்து விழுகிறார்கள். ஏட்டிக்கு போட்டியாக பேசணும் எண்டே களத்தில சிலபேர் அலையினம். அவை இருக்கு மட்டும் நாங்கள் இங்க எதையும் எதிர்பார்க்கமுடியாதுதான். பதில்களுக்கு நன்றிகள்... :)
Link to comment
Share on other sites

இதய நிலா புத்தர்,ஜெசு, காந்தி,இதய நிலா பூமியில் பிறந்தது எதற்காக..........? இதற்க்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ இதையநிலா,

நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் மனதில் பட்டவையைத்தானே கருத்துக்களாக பதியமுடியும்? உங்கள் தனியொரு நபரிக்காக மற்றவர்கள் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை (படைப்புக்களை) மாற்றவா முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் தங்களைப்போலத்தான்

நல்லவற்றைத்தான் நினைக்கின்றோம்

ஆனால் நிஐம் என்ற ஒன்றை தரிசிக்கமுற்படும்போது அது எம்மை எங்கே கொண்டுபோய்விடுகிறது பாருங்கள் தங்களின் படத்தில்.......

கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது...

இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.