Jump to content

"கிளி வீழலாம்! புலி வீழாது!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கிளி" வீழலாம் புலி வீழுமா?!!

வெற்று நிலத்தை பிடித்துவிட்டு

வென்று விட்டோமென்று கொட்டம்

அடிக்கும்! கூட்டம் ஒன்று!! எட்டி நின்று

பார்ப்பவர்க்கு உண்மை புரியாது!!

எங்கோ இருந்துகொண்டு தமிழன்

வீழ்ந்த செய்திகேட்டு எக்களித்துச்சிரிக்கின்ற

பேடியர் இனமொன்று மானத்தை எரித்து

விட்டு உயிர்வளர்க்கும் இவர்க்கும் புரியாது!!

பாடி விளையாடி பகடி விட்டு கூடிக்

களிக்கின்ற வயதில் தன் இனம் வாழ

மானமே ஆடையெனக் கட்டிக்கொண்டானே

அவனே மாவீரன்! எங்கள் புலிவீரன்

வெத்திலை சப்பிச் சிவக்கின்ற உங்கள்

வாய்களுக்கு எங்கள் நிலம் சிவக்கும்

நீண்ட கதை தெரியாது அதனால் தான்

கொக்கரித்துக் கொண்டாடுகின்றீர்கள்!

'கிளிநொச்சி மட்டுமல்ல கிழக்கிலங்கை வடக்கு

முழுவதுமே தமிழீழ மண் தான் அதை

மாற்றான் மிதிக்க என்றும் விடமாட்டோம் ஒரு

கைப்பிடி மண் கூட எதிரிக்குத் தரமாட்டோம்!!

'இதுவா வெற்றி?!!! கொட்டியா" வை அடக்க

என்று கொத்தணிக்குண்டு போட்டு அப்பாவித்

தமிழனை அங்கிருந்து விரட்டி விட்டு சுடுகாட்டு

மண்ணை பிடித்து வெடிகொளுத்துவதா வெற்றி?!!

ஒன்று சொல்கின்றேன்!! எதிரிகளே! துரோகிகளே!

ஏழு நாடுகளின் வழிநடத்தல் கேட்டு சத்தியத்தை

அடக்கிவிட முடியாது!! தமிழின இரத்தத்தின் வீரம்

அணுகுண்டுக்கெல்லாம் அசையாது!!

'வருவோம்! பொறுத்திருங்கள்!! மரணக்குழிகளை

உங்களுக்காய் வெட்டி விட்டு!! இதோ வந்து

கொண்டிருக்கின்றோம்!! எந்த நிலைவந்திடினும்

எங்கள் தலைகுனியாது!! அலைகள் என்றுமே ஓயாது!

Link to comment
Share on other sites

'வருவோம்! பொறுத்திருங்கள்!! மரணக்குழிகளை

உங்களுக்காய் வெட்டி விட்டு!! இதோ வந்து

கொண்டிருக்கின்றோம்!! எந்த நிலைவந்திடினும்

எங்கள் தலைகுனியாது!! அலைகள் என்றுமே ஓயாது!

புலிகளின் கைகளை பலப்படுத்த வேண்டும். இல்லையேல் தலைகுனிவை தவிர்க்க முடியாது. கவிதைக்கு நன்றி தமிழ்தங்கை

Link to comment
Share on other sites

அது ஓயும் அலை அல்ல

பாயும் அலை... உள்ளை புகுந்த ஊளை நரிகளை விழுங்கப்போகும் அலை..

தமிழ் சபாஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்ரோஷமான கவி நிஜத்தை சொல்கிறது என்னை பொறுத்தவரை இது தலைவரின் தேவை

கருதிய பின்வாங்கல். விழ விழ எழுவோம் ஊளை நரிகளின் கொக்கரிப்பு எத்தனை நாட்களுக்கு. ?

உங்கள் ஆக்ரோஷமான கவி நிஜத்தை சொல்கிறது என்னை பொறுத்தவரை இது தலைவரின் தேவை

கருதிய பின்வாங்கல். விழ விழ எழுவோம் ஊளை நரிகளின் கொக்கரிப்பு எத்தனை நாட்களுக்கு. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வருவோம்! பொறுத்திருங்கள்!! மரணக்குழிகளை

உங்களுக்காய் வெட்டி விட்டு!! இதோ வந்து

கொண்டிருக்கின்றோம்!! எந்த நிலைவந்திடினும்

எங்கள் தலைகுனியாது!! அலைகள் என்றுமே ஓயாது!

உங்கள் கவிதை அழகு.

நிலமிழந்தாலும் பலமிழக்காது எம் படை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கிளி" வீழலாம் புலி வீழுமா?!!

ஒன்று சொல்கின்றேன்!! எதிரிகளே! துரோகிகளே!

ஏழு நாடுகளின் வழிநடத்தல் கேட்டு சத்தியத்தை

அடக்கிவிட முடியாது!! தமிழின இரத்தத்தின் வீரம்

அணுகுண்டுக்கெல்லாம் அசையாது!!

'வருவோம்! பொறுத்திருங்கள்!! மரணக்குழிகளை

உங்களுக்காய் வெட்டி விட்டு!! இதோ வந்து

கொண்டிருக்கின்றோம்!! எந்த நிலைவந்திடினும்

எங்கள் தலைகுனியாது!! அலைகள் என்றுமே ஓயாது!

படைப்புக்கள் கூடப் பகைப்புலத்தைச் சுட்டெரிக்கு ஆயுதம். கிளி என்ன முல்லை வீழ்ந்தாலும் முடியாத எமது பயணம் தொடரும்.தமிழ்தங்கையே பாராட்டுகள். தலைனிருக்கிறான். தலைவனுடன் தமிழுலகு நிற்கிறது. விடியலைத் தொடும் வரை ஓயாது. தமிழரின் தாகங்கள் தீராது.

Link to comment
Share on other sites

அனைவரும் ஒன்று சேர்வோம்..

Link to comment
Share on other sites

ஏன்..ஒப்பாரி வைக்கவே?? :lol:

எதிரியை கண்டு ஒப்பாரி வைத்து எமக்கு பழக்கம் அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தங்கை,

ஆக்ரோசமான உங்கள் கவிவரிகள் மெய்யணைத்துச் சிலிர்ப்பூட்டுகின்றன. புலிவால் பிடித்த கதை போகப் போகத்தானே தெரியும்.

சத்திய வேள்வி சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை

சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை

இன்று கிளிநொச்சி பிடித்தோம் என்று சிங்களப்பிடாரிகள்

பட்டாசு சுட்டு பல்லிளித்துப் போகட்டும்.

ஏழுநாட்டு கூட்டெடுத்து புலிவாலை பிடித்தகதை

போகப் போகத் தெரியும்போது பொக்கையிலும் பூ மலரும்.

அகப்பட்ட மச்சினன்கள் அலறும்போது

தம்பட்டம் அடிக்கும் தவளைகள் என் செய்யும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.