Jump to content

கைமாறியது கிளிநொச்சி! பிரபாகரன் உயிருக்கு ஆபத்தா?


Recommended Posts

கைமாறியது கிளிநொச்சி! பிரபாகரன் உயிருக்கு ஆபத்தா?

[ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 04, 2009, நக்கீரன் இணைய சஞ்சிகை]

prabharan.jpg

புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது இலங்கை ராணுவம். இந்த வெற்றியை ஆக்ரோஷமாக கொண் டாடி வரும் அதிபர் மகிந்த ராஜபக்சே, ""இனி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வேறு வழி இல்லை. ஒன்று... அவர் செத்து விடவேண்டும். இல்லையேல், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விட வேண்டும். இதுதான் அவருக்கு இறுதி எச்சரிக்கை'' என்று மகிழ்ச்சியின் எல்லையில் நின்று கொண்டு அறிவித்திருக்கிறார். இந்த வெற்றி, உலகம் முழுவதும் அறியும் வகையில் கொண்டாடுவதற்கு சிங்கள ராணுவத்தினருக்கு உத்திரவிட்டுள்ளார் ராஜபக்சே.

ராஜபக்சேவின் சகோதரரும் பாதுகாப்புத்துறை செக்ரட்டரியுமான கோட்டபாய ராஜபக்சே, ""2009-ஆம் ஆண்டு புலிகளை ஒழிக்கும் ஆண்டு என்று அறிவித் திருந்தோம். இப்போது அதனை நிரூபித்திருக்கிறோம். விரைவில், பிரபாகரன் உட்பட அனைவரையும் அரெஸ்ட் செய்வோம்'' என்கிறார் ஆவேசமாக.

கிளிநொச்சியை பிடிப்பதற்காக கடந்த ஆறேழு மாதங்களாக உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டது சிங்கள ராணுவம். பூநகரியை கைப்பற்றிய நிலையில் ஏ-9 நெடுஞ்சாலையில் ஒவ்வொரு பகுதியாக முன்னேறிக் கொண்டேயிருந்தது.

4 முனைத் தாக்குதல், 5 முனைத் தாக்குதல் என்று பல வியூகங்களை அமைத்து கடுமையான யுத்தத்தினை நடத்தியது ராணுவம். ஆனால், இதற்கு பதிலடி தந்து ராணுவத்தின் முன்னகர்வுகளை முறியடித்தே வந்தனர் புலிகள்.

சமீபத்தில் பரந்தன், புதுக்குடியிருப்பு, முறிகண்டி பகுதிகளில் நடந்த சண்டையில் 300-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்து விரட்டி அடித் தனர் புலிகள். இதில் மிரண்டு போனார் ராஜபக்சே.

5 முனைகளிலும் ராணுவத்தினரின் தாக்குதலை புலிகள் முறியடித்ததால், மீண்டும் அந்த பகுதிகளில் ராணுவத்தினரை குவித்த ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் களுக்கு உதவி செய்வதற்கும் ராணுவத்தினர் முன்னேறு வதற்கும் வான்படைகளை அனுப்ப வேண்டும் என அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, கிளிநொச்சியை நோக்கி வான்படை தாக்குதல்களுக்கு உத்திரவிட்டார் ராஜபக்சே. இந்த தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்தினார் அதிபர். ஒவ்வொரு குண் டும் 1000 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தினமும் 100 டன் வெடிகுண்டுகளை தமிழர்கள் மீது வீசினர் வான்படையினர்.

prabharan1.jpg

இதில் ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் உறுப்புகள் இழந்து படுகாயங்களுடன் மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிளஸ்டர் பாம்களிலிருந்து தப்பித்துக் கொள்ள கிளிநொச்சியை விட்டு அகன்று காடுகளில் தஞ்சமடைவதை வழக்கமாக்கிக் கொண்டனர் ஈழத் தமிழர்கள்.

இந்த சூழலில்தான், தொடர்ந்து வான்படை தாக்குதல் நடக்க, அதன் உதவியினுடனேயே ஏ-9 நெடுஞ்சாலையில் ஒவ்வொரு பகுதியாக முன்னகர்ந்து, நகர்ந்து 1-ந்தேதி நள்ளிரவு பரந்தனை பிடித்தது ராணுவம். இதற்காக நடத்தப்பட்ட புலிகளின் எதிர்த் தாக்குதலை முறியடித்து முன்னேறியது. ஏற்கனவே, ஏ-9 பாதை முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக் குள் வந்திருந்ததால், பரந்தனை அடுத்து இரனைமடு பகுதியையும் கைப்பற்ற... கிளிநொச்சிக்குள் 2-ந்தேதி அதிகாலையில் நுழைந்தனர். இதற்காக நடத்தப்பட்ட புலிகளின் எதிர்த் தாக்குதலையும் ராணுவத்தினர் தங்களின் நவீனரக ஆயுதங்களைக் கொண்டு முறியடித்தனர்.

கடந்த ஒருவாரமாக, தொடர்ந்து கிளஸ்டர் பாம்களை சிங்கள ராணுவம் பயன்படுத்திய நிலையில், போராளிகளின் உயிரிழப்புகள் அதிகமாகி விடக் கூடாது என்று கருதிய பிரபாகரன், கடந்த 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவுக்கு போராளிகள் இடம் பெயர உத்திரவிட்டார்.

அதன்படி எதிர்த்தாக்குதல் நடத்திக்கொண்டே பின் நகர்ந்து, ஆனையிறவு பகுதிக்கு சென்றனர் போராளிகள். இதனைப் பயன்படுத்திக்கொண்டு கிளிநொச்சிக்குள் நுழைந்து 2-ந்தேதி மதியம் முழுமையாக கைப்பற்றிக் கொண்ட ராணுவத்தினர் தேசியக் கொடியை ஆங்காங்கே பறக்க விட்டு ஆனந்த கூத்தாடினர்.

prabharan2.jpg

கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலையும் கிளிநொச்சியை சுற்றி முற்றுகையிட்டு தரைவழித் தாக்குதலையும் சிங்கள ராணுவம் நடத்திக் கொண்டிருந்த நிலையி லேயே, புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தளபதி கள் அனைவரும் முல் லைத்தீவு பகுதிகளுக்கு சென்று விட்டனர். அங்கிருந்தபடியே தங்களின் ராணுவ, அரசியல் செயல்பாடு களை நடத்திக் கொண் டிருந்தார் பிரபாகரன். கிளிநொச்சியை புலிகள் இழந்திருப்பது அவர்களுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

""கிளிநொச்சியை இழந்தாலும் எங்களின் விடுதலை போராட்டம் என்றைக்கும் நிற்காது. இழந்தாலும் மீண்டும் அதனை மீட்போம்'' என்று சமீபத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கூறியதை சுட்டிக் காட்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், ""கிளிநொச்சியை புலிகள் இழந்திருக்கின்றனர். இதனை அடுத்து ஆணையிறவையும், முல்லைத் தீவையும் ராணுவம் குறிவைக்கும்'' என்கின்றனர்.

மேலும் இவர்கள், ""1990-களிலிருந்து கிளிநொச்சி இதுவரை 4 முறை கைமாறியுள்ளது. 1998 பிப்ரவரியில் புலிகளிடமிருந்து கிளிநொச்சியை கடைசியாக மீட்டது ராணுவம். ஆனால், அடுத்த 6 மாதங்களில் கிளிநொச்சி யை மீட்டனர் புலிகள். இந்த அதி தீவிர தாக்குதல்களுக்கு "ஓயாத அலைகள் ஒன்று' என்று பெயர் சூட்டியிருந்தார் பிரபாகரன்.

1998 செப்டம்பரில் கிளிநொச்சியை மீட்ட புலிகள், அன்றிலிருந்து இன்றுவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில்தான் கிளிநொச்சியை தங்கள் அரசியல் தலைநகரமாக அறிவித்த பிரபாகரன், தங்களின் அரசியல் செயல்பாடு களின் அனைத்து நடவடிக்கைகளையும் கிளிநொச்சியிலிருந்தே செயல்படுத்தினார். ஐ,நா.சபை செஞ்சிலுவை சங்கம் உள்பட உலகத்தின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் கிளிநொச்சிக்குள் இருந்து செயல்பட புலிகள் அனுமதித்தனர். மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீக்கியதோடல்லாமல், ஜனநாயக அமைப்புகளை கிளிநொச்சியிலிருந்து வெளியேற்றி விட்டார். தற்போது, ராஜபக்சேவிற்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான். மீண்டும் கிளிநொச்சி புலிகள் வசம் வந்தே தீரும்'' என்கின்றனர் நம்பிக்கையுடன்.

கிளிநொச்சிக்குள் ராணுவம் புகுந்த அதேநாளில், கொழும்பில் விமானப்படைத் தலைமையகத்துக்கு வெளியே நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதல், இலங்கையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்களப் பகுதிகளில் இனி அடிக்கடி இத்தகைய தாக்குதல்கள் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கை காவல்துறையினர். இதனால் தமிழர் பகுதிகளைப் போலவே சிங்களப் பகுதிகளும் அமைதியிழந்த பகுதிகளாகிவிடும் என்ற அச்சம் சிங்கள அரசியல் கட்சியினரிடம் காணப்படுகிறது. இந்த பதற்ற நிலைமையைத் தணிப்பது குறித்து, ஆலோ சனைகளை மேற்கொண்டிருக்கிறார் ராஜபக்சே.

prabharan3.jpg

இதனையடுத்து, பிரபாகரனைக் குறிவைத்து புதுவியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. ஏறத்தாழ 2 மாதங்களுக்கு மேலாக நடந்த கிளிநொச்சிக்கானப் போரில் சிங்கள ராணுவம் பலத்த உயிரிழப்பை சந்தித்தது. இனி ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகியவற்றை நெருங்கும்போது இன்னும் பலமான உயிர்ச்சேதங்கள் ஏற்படும் என்பதால் நேரடி போருக்குப் பதில், பிரபாகரனுக்கு குறி வைப்பதே இலங்கை அரசின் ஓர் அம்சத் திட்டமாக மாறியிருக்கிறது. தங்களுக்கு உதவி செய்கிற நாடுகளுடன் தொடர்ந்து பேசி வரும் இலங்கை அரசு, தற்போது இஸ்ரேல் அரசிடமிருந்து நவீன லேசர் பாம்களை வாங்கியுள்ளது.

முந்தைய லேசர் பாம்கள் குத்துமதிப்பாக ஓரிடத்தில் விழக்கூடியவை. நவீன லேசர் பாம்களை, ஒரு சிறிய பட்டனை அழுத்தி, குறிவைக்கப்பட்ட இடத்தில் வெடிக்கச் செய்ய முடியும். பூமிக்கு அடியிலும் துளைத்துச் செல்லக்கூடிய இந்த சக்தி வாய்ந்த லேசர் பாம்களை 10 கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளது சிங்கள ராணுவம்.

உலகளாவிய அளவில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப வசதிகளை, தனக்கு உதவி செய்யும் நாடுகள் மூலமாகப் பெற்றுவரும் சிங்கள ராணுவம், இந்த நவீன கருவிகள் வாயிலாக பிரபாகரனின் இருப்பிடத்தை அறிந்து, அவரது நடமாட்டத்தை கண்காணித்து லேசர் பாம்களை வீசுவது என்பதுதான் இலங்கை அரசின் கடைசிகட்ட படுபயங் கரத் திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் சிங்கள ராணு வத்தின் செய்தி தொடர்பாளர்கள். பிரபாகரன் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத் தை எளிதாக எதிர்கொண்டுவிடலாம் என நினைக்கிறதாம் இலங்கை அரசு. எனினும், புலிகளிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என அண்மையில் வெளியான தகவல், சிங்கள ராணுவத்தை மிரளச் செய்துள்ளது. முல்லைத்தீவை நெருங்கும் போது அவற்றின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் ராணுவத்திடம் இருக்கிறது.

இதனிடையே, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்துவந்த போராளிக்குழுக்களில் பலர், நமது சகோதரப் பகையைவிட தாய்மண்தான் முக்கியம். அதனை சிங்களர்களிடம் இழந்துவிடக்கூடாது என புலிகளுக்கு தார்மீக ஆதரவைத் தரத் தொடங்கி யிருப்பது ஈழப்பிரச்சினையில் மேலும் ஒரு திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது என்கிறார்கள் இலங்கையின் அரசியல் நோக்கர்கள். சிங்கள அரசுத் தரப்பிலோ, ""எங்களுக்குத் தார்மீக பலமே இந்திய அரசுதான். தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமை யில் தமிழக காங்கிரஸ், பா.ம.க. உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பும்படி வலியுறுத்தினர். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே கிளிநொச்சியைக் கைப்பற்றிய இந்த நிமிடம்வரை பிரணாப் இங்கு வரவில்லை. இந்திய அரசின் இந்த முடிவு, எங்களுக்கு துணிச்சலைக் கொடுத்தது'' என்கிறார்கள்.

-கொழும்பிலிருந்து எழில்

http://www.thayakam.net/forums/viewtopic.php?id=271

[நன்றி நக்கீரன் இணைய சஞ்சிகை, www.nakkheeran.in]

Link to comment
Share on other sites

கைமாறியது கிளிநொச்சி! பிரபாகரன் உயிருக்கு ஆபத்தா?

போய் நல்ல சாத்திரியாய் பார்த்து மை போட்டு பாருங்கள்.

Link to comment
Share on other sites

போய் நல்ல சாத்திரியாய் பார்த்து மை போட்டு பாருங்கள்.

இது எனக்கா ? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.