Jump to content

கனடாவில் கிளி. பிடித்த கொண்டாட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3zeitn45wf31bh45tgwd3m55_03.JPG

3zeitn45wf31bh45tgwd3m55_02.JPG

3zeitn45wf31bh45tgwd3m55_04.JPG

புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

படங்கள்: டெயிலிமிரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

ஸ்காபுரோவில் தானே அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள் .

அங்கு இவர்கள் கொண்டாட என்ன நெஞ்சழுத்தம் வேண்டும் . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காபுரோவில் தானே அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள் .

அங்கு இவர்கள் கொண்டாட என்ன நெஞ்சழுத்தம் வேண்டும் . :(

அவை சோகத்தில விழுந்து படுத்திருப்பினம்.. இல்ல.. அவங்களும் அவங்கட போராட்டமும்.. நாங்களாவது இஞ்ச வந்து சேர்ந்திட்டமே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்திருப்பினம். :(

Link to comment
Share on other sites

நெடுக்கு உம்மை நினைச்சாப் பாவமா இருக்கு.....

ஏன் கனடா விசயத்தில கிணத்துத் தவளையா இருக்கிறீர்?

இந்தப் படத்தில நிக்கிற கைக்கூலீஸைபத்தி அடியும் நுனியும் தெரியாதா? எல்லாம் தெரிஞ்ச ஆஅளண்டு நினைச்சன் இவ்வளவுதானா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம், மற்றும் 14வது ஒழுங்கைப் பகுதிகளில் பெரிய அளவு கத்திக் கொண்டு ஓடித் திரிந்தார்கள். அப்பகுதியிலும் அதிக தமிழ்மக்கள் இருக்கின்றார்கள் எனத் தெரிந்து.... இருப்பினும், சிங்கக் கொடி வாகனத்தின் கண்ணாடியை மறைக்கின்றது எனக் காவற்துறை அவர்களுக்கு டிக்கட் வழங்கியது

Link to comment
Share on other sites

இவ்வளவு நாளும் நாம் கொண்டாடியதை பார்த்து வயிறு எரிந்தவர்களுக்கு இப்போது தான் சந்தர்ப்பம் வந்துள்ளது. அனேகமாக லண்டன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வகையான கொண்டாட்டங்கள் நடக்கின்றன்.

இதனை பார்த்து குய்யோ முய்யோ என்று அரட்டுவதிலும், நெடுக்ஸ் போன்று புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் லண்டன், கனடா தமிழர் என வேறுபாடுகளை வளர்த்து தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்வதிலும் நேரத்தை செலவழிக்காது எமது கோபத்தையும், ஆத்திரத்தையும் காத்திரமான வழிகளில் தமிழ் தேசிய போராட்டத்திற்கு மேலும் பலம் கொடுக்கும் வகையில் வெளிப்படுத்துவோம். எம்மை சீண்டவும், எமக்கு இடையே பிரதேச வாரியாக, நாடுகள் வாரியாக கசப்புணர்வுகளை வளர்க்கவும் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் இனம் கண்டு நிதானமாக செயலாற்ற வேண்டும். எமது ஒவ்வொருவரினது கோபமும் அடைகாக்கப் பட்டு, சிங்கள கொடூர பேரினவாததினை எதிர்க்கும் ஓர்மமாக கருக் கொள்ளல் வேண்டும்.

Link to comment
Share on other sites

இவ்வளவு நாளும் நாம் கொண்டாடியதை பார்த்து வயிறு எரிந்தவர்களுக்கு இப்போது தான் சந்தர்ப்பம் வந்துள்ளது.

என்னத கொண்டாடிகொண்டு திரிஞ்சநீங்க? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது திருந்துவினமா, யாழ் கள சிறி லங்கா "சிற்றிசன்ஸ்"? ஓஹோ, அவை சுவிஸ் கொண்டாட்டத்தில பிஸியா இருந்திருப்பினம் போல. :(

Link to comment
Share on other sites

அவை சோகத்தில விழுந்து படுத்திருப்பினம்.. இல்ல.. அவங்களும் அவங்கட போராட்டமும்.. நாங்களாவது இஞ்ச வந்து சேர்ந்திட்டமே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்திருப்பினம். :icon_mrgreen:

முக்கியமாக நெடுக்கு ஒரு விசயத்தை கவனிக்கவேண்டும்;

அதாவது கனடிய இளைஞர்களை புரியாமல் பேசுகின்றீர்கள், இன்று இந்த இளைஞர்கள் இதைப்போன்ற விடயங்களை நிதானமாக அணுகுகின்றார்கள் என்றால் அதைப்பார்த்து இங்குள்ள பெரியோர்கள் பிரமித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இதைவிடச்சுருக்கமாக சொல்லப்போனால், அவர்களிடம் நீங்கள் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவுண்டு.

தயவுசெய்து இணைஞர்களைத்தூண்டும் வகையில் இதைப்போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

வெண்றவன் கொண்டாடுகின்றான் கொண்டாடட்டும். அதில் தப்பேதும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக நெடுக்கு ஒரு விசயத்தை கவனிக்கவேண்டும்;

அதாவது கனடிய இளைஞர்களை புரியாமல் பேசுகின்றீர்கள், இன்று இந்த இளைஞர்கள் இதைப்போன்ற விடயங்களை நிதானமாக அணுகுகின்றார்கள் என்றால் அதைப்பார்த்து இங்குள்ள பெரியோர்கள் பிரமித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இதைவிடச்சுருக்கமாக சொல்லப்போனால், அவர்களிடம் நீங்கள் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவுண்டு.

தயவுசெய்து இணைஞர்களைத்தூண்டும் வகையில் இதைப்போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள்.

வல்லை அண்ணா.. உங்கள் கனடிய இளைஞர்கள் மீது பெரியவர்களே அசைக்க முடியாத பிரமிப்பூட்டும் நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்லி விட்டு.. பின்னர்.. இளைஞர்களைத் தூண்டிவிடும் கருத்துக்களை வைக்க வேண்டாம் என்றீங்களே. ஒரே பந்தியில்.. உங்களின் முரண்பாட்டை பலவீனத்தை சொல்லிட்டீங்களே..!

எமது கருத்து எதிர்பார்ப்பது.. நீங்கள் உடனடியாக சிங்களவர்களுக்கு அருகில் புலிக்கொடியோடு போய் நிற்க வேண்டும் என்பதல்ல.

இந்த வெற்றியின் பின்னால் எமது தேசம் சந்தித்த அழிவுகள்.. மக்கள் இழப்புக்களை தமிழர்கள் அதிகம் வாழும் அதே அரங்கில் வெளிப்படுத்தி இருக்கலாம். அப்போதுதான் உலகுக்கு இந்த வெற்றியின் பின்னால் இருந்த இனவெறியின் உண்மை முகம் கொஞ்சம் என்றாலும் தெரிய வந்திருக்கும். குறிப்பாக கனடாவில் வாழும் குறிப்பிட்ட மக்களுக்கு தெரிய வந்திருக்கும். ஏன் அதில் கலந்து கொண்ட சிங்களவர்களுக்கே தெரிய வந்திருக்கும்.

பெரும் போரைச் செய்த அசோகன்.. மாளிகை விட்டு போர்க்களம் வந்து பேரழிவுகளைக் கண்ட பிந்தானாம்.. ஆன்மீகவாதியானான்.

இந்த வெற்றிக்களிப்பின் பின்னால் எத்தனை தமிழ் சொந்தங்களின் தசைகள்... கிழிக்கப்பட்டுள்ளன.. எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.. எத்தனை துயரங்கள் உணரப்பட்டுள்ளன.. என்பது பலருக்கும் இன்னும் தெரியாது. புதுவருடத்தன்று கூட உடல் கிழிந்து மடிந்து போயினர் மக்கள். இன்றைய இந்த கொடியாட்டத்தை முறியடிக்கச் சொல்லவில்லை நாம்.

தாயகக் கள யதார்த்தத்தை அதே ஜனநாயக வழியில் அதே களத்திற்கு கொண்டு வந்திருப்பின்.. இந்த வெற்றிப் பிரச்சாரங்களின் பின்னால் உள்ள மனித அவலங்களை வெளி உலகுக்கு இன்னும் விசாலமாகக் காட்டி இருக்கலாம் என்பதே என் கருத்து..!

இதில் ஆத்திரப்பட்டு ஆவேசப்பட்டு.. அடிதடியில் இறங்குவதல்ல.. எமது எதிர்பார்ப்பு.

வெற்றி கொண்டாட்டம் முடிந்த பின்.. படங்களைக் காவித் திரிவதிலும்.. வெற்றிக் கொண்டாட்டம் செய்பவர்களுக்கு அவர்களின் அறியாமையை இனங்காட்டுதல் அவசியம். அதையும் மீறி அவர்கள் கொண்டாடின் அவர்களின் இனவெறியை அவர்களே உலகுக்கு எடுத்துச் சொல்வதாகி விடும்..! அதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

நான் எவரும் 100% வினைத்திறனுள்ள செயற்திட்டத்தை தாயகம் நோக்கிச் செய்வதாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். வெளிநாடுகளில் வாழும் யூத தலைமுறையினர் எவ்வாறு இனப்பற்றோடு வாழ்கின்றனரோ.. அதே உணர்வு எம்மவருக்கு வர வேண்டும். எவ்வாறு வெளிநாடுகளில் பிறந்து வாழும் முஸ்லீம்கள் மதப்பற்றை அறுக்க முடியாது வாழ்கின்றனரோ அதே உணர்விலும் அதிக உணர்வு எம்மவருக்குள் வர வேண்டும்.

அவர்கள் (இளையவர்கள்) அதைச் செய்ததே பெரிய காரியம் என்று எவரின் முயற்சிக்கும் எல்லையிடவோ.. அபரிமித பரிமானமிடவோ நான் முனைய மாட்டேன். அது முயற்சிகளை மட்டுப் படுத்தும் செயலாகவே அமையும்..! கனடிய இளைஞர்கள் மட்டுமல்ல.. உலகெங்கும் வாழும் தமிழ் இளைய சமூகம் சாதிக்க இன்னும் இன்னும் இருக்கிறது..! அதற்கான முயற்சிகள் இன்னும் இன்னும் அதிகரிக்க வேண்டும். அதேவேளை முயற்சிகள்.. ஊக்கங்கள் இளைஞர்களுக்கு மட்டுமானதல்ல. எல்லாத் தமிழர்களுக்குமானதாகவும் இருக்க வேண்டும். அதுதான் இனப்பற்றை வளர்க்கும். தேசத்தின் விடிவை நமதாக்கும். தேசம் பற்றிய அறியாமையில் வாழும் இளைய சமூகம் ஒன்றும் எம்மத்தியில் உண்டு..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நெடுக்கு! நீங்க ஒரு கருத்தை முன்வைக்கின்றபோது அதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் இங்கு பலர் அவதானிப்பதுண்டு.

ஆனால் அதற்கு ஒரு நெடுநோக்கமான, ஆழ்ந்த நோக்கமுண்டு என்பதை என்னைப்போன்ற ஒருசிலரால் மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புகின்றேன்.

ஆனால் மேலே உங்களால் குறிப்பிட்ட விடயங்கள் இளைஞர்களின் மனங்களில் வேறுவிதமாக பதிந்துவிடக்கூடாது என்பது தான் எனது எதிர்பார்ப்பு.

இங்கு கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் அவதானமாக சில நடவடிக்கைகளை நகர்த்த வேண்டியிருக்கின்றது.

வெளிப்படையாக கூறுவதாயின் இளைஞர்களின் சில அசட்டுத்தனமான, அதாவது குழுக்களுக்கிடையான மோதல்களும். எமது விடுதலை சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு மிகவும் பாதகமாக இருந்துள்ளது.

ஆனால் கடந்த சில வருடங்களாக இதே இளைஞர்கள் தான் தேசியப்போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கின்றது.

பழைய இளைஞர்களாக இருந்திருந்தால், மேலே உங்களால் குறிப்பிட்ட அந்த நிகழ்வின் எதிர்தாக்கம் பயங்கர விளைவாக இருந்திருக்கும்.

ஆனால் எமது இளைஞர்கள் எங்களது தலைவரின் எதிர்பார்ப்பை புரிந்து, எம்மினத்தின் விடுதலைக்காக சில விடயங்களை சகிர்த்துக்கொள்ள பழகிவிட்டார்கள்.

ஆகவேதான் தயவுசெய்து இணைஞர்களைத்தூண்டும் வகையில் இதைப்போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள் என்று குறிட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.