Jump to content

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை


Recommended Posts

El%20Urundai.JPG

தேவையான பொருட்கள்

எள் 1/4 கிலோகிராம்

சீனி 1/4 கிலோகிராம்

மாஜரின் 2 தே.க

அப்ப சோடா 2 சிட்டிகை

செய்முறை:

1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.]

3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள்.

4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும்.

6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள். உருண்டைக்கு பதிலாக, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி அமத்தி, துண்டுகளாக வெட்டயெடுக்கலாம்.

சீனி = Sugar

பி.கு:

1. உருண்டை பிடிக்கும் போது கொஞ்சம் மாஜரினை தொட்டு பிடித்தல் கையில் ஒட்டாமல் இருக்கும்.

2. உருண்டையை உங்களுக்கு வேண்டிய அளவில் பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளு உருண்மை நல்லாவே பிடிக்கும். குறிப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உசார் உசார் [எனக்கு இந்த உருண்டைகளை கண்டால் பயம்] :(

நன்றி உங்கள் குறிப்புக்கு அது சரி நீங்கள் சாப்பிட்ட நீங்கள் தானே :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.ஆனால் எனக்கு சரிவராது.ஏன்என்றால் இது இனிக்கும்.

Link to comment
Share on other sites

எனக்கும் எள்ளுருண்டை நல்ல விருப்பம். முந்தி சின்னனில பள்ளிகூடம் போகேக்க வாங்கிச்சாப்பிடிறது. ஒரு ரூவாவுக்கு நாலு எள்ளு உருண்டைகள் தருவாங்கள். இப்பவும் இஞ்ச தமிழ்கடைகளுக்கு போகேக்க எள்ளுருண்டையை கண்டால் வாங்கிச்சாப்பிடுறது. ஒரு பக்கற்றாக விப்பீனம். ஆனால் கனக்க சாப்பிட்டால் வயிறு கட்டிப்போடும் எண்டு அம்மா அடிக்கடி சொல்லுவா. மற்றது சித்தமருத்துவத்தில இதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிது. எள்ளு உருண்டைகளை சித்தர்கள் விந்தை (Sperm) வெளியில வெளியேறாதவாறு (தங்கட உடம்பில இருந்து) கட்ட வைத்து (அடக்கி வச்சு) அதை தங்கட குண்டலினி (அது என்ன எண்டு கேட்ககூடாது) சக்தியில ஏற்றுவதற்கு பாவிப்பார்கள் எண்டு அறிஞ்சு இருக்கிறன்.

உண்மையில எள்ளுருண்டையை விட எனக்கு எள்ளுப்பாகுதான் (அந்த பெரிய உருண்டை) கூட விருப்பம். இதற்கு வடமராட்சி புகழ்பெற்றது. இதற்கு வேற ஒரு பெயர் இருக்கிது. இப்ப நினைவில வருகிது இல்லை. வடமராட்சி போற நேரம் நாங்கள் கட்டாயம் அந்த எள்ளுப்பாகை வாங்கிக்கொண்டு வாறது. மிகவும் ருசியாக இருக்கும். இப்பவும் தமிழ்கடைகளுக்கு போனால் அதை நான் வாங்கிறது. பொதுவாக எல்லா தமிழ் உணவகங்களிலையும் இருக்கும். இஞ்ச ஒரு டொலருக்கு ஒரு பாகு வாங்கலாம். யாருக்காவது இதிண்ட ஊர்ப்பெயர் தெரியுமோ? நல்லதொரு பெயர். இப்ப நினைவில வருகிது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எள்ளுருண்டைக்கு நன்றி.மிகவும் சத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில எள்ளுருண்டையை விட எனக்கு எள்ளுப்பாகுதான் (அந்த பெரிய உருண்டை) கூட விருப்பம். இதற்கு வடமராட்சி புகழ்பெற்றது. இதற்கு வேற ஒரு பெயர் இருக்கிது. இப்ப நினைவில வருகிது இல்லை. வடமராட்சி போற நேரம் நாங்கள் கட்டாயம் அந்த எள்ளுப்பாகை வாங்கிக்கொண்டு வாறது. மிகவும் ருசியாக இருக்கும். இப்பவும் தமிழ்கடைகளுக்கு போனால் அதை நான் வாங்கிறது. பொதுவாக எல்லா தமிழ் உணவகங்களிலையும் இருக்கும். இஞ்ச ஒரு டொலருக்கு ஒரு பாகு வாங்கலாம். யாருக்காவது இதிண்ட ஊர்ப்பெயர் தெரியுமோ? நல்லதொரு பெயர். இப்ப நினைவில வருகிது இல்லை.

அடடா!!! உங்களுக்குப்பிடிக்கும் என்று தெரிஞ்சிருந்தால் அண்டைக்கு கொண்டு வந்திருப்பனே! "எள்ளுப்புண்ணாக்கு" என்று சொல்லுவினம். நாங்கள் எள்ளுருண்டை எண்டுதான் சொல்லுறது. உடலுக்கு ஆரோக்கியம் ஆனது. அதில் இரும்புச்சத்து உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில் வயலில் விளைந்த எள்ளை கொண்டுவந்து உரலில் போட்டு இடி இடி என்று இடித்து எள்ளு பாவு என்று சாப்பிடுவோம்.

அதன் சுவை சொல்லி வேலையில்லை.

எள்ளு அறுவடை செய்த காலம் என்றால் எமது உடம்பை பார்க்க தெரியும்.

எந்த நேரமும் தேகம் எண்ணைத் தன்மையால் மினுமினுத்துக் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! நல்லெண்ணைக்கு செக்கில ஆட்டும்போது அந்த எள்ளுப் பிண்ணாக்கை நுரையுடன் அப்படியே எடுத்து தேங்காய்ப் பூ, சர்க்கரை எல்லாம் கலந்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும்!!!

Link to comment
Share on other sites

அடடா!!! உங்களுக்குப்பிடிக்கும் என்று தெரிஞ்சிருந்தால் அண்டைக்கு கொண்டு வந்திருப்பனே! "எள்ளுப்புண்ணாக்கு" என்று சொல்லுவினம். நாங்கள் எள்ளுருண்டை எண்டுதான் சொல்லுறது. உடலுக்கு ஆரோக்கியம் ஆனது. அதில் இரும்புச்சத்து உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது.

ஓம் புண்ணாக்கு எண்டுறது சரியான பெயர். எப்பிடி கண்டுபிடிச்சனீங்கள்? என்னை மனதுக்க மாடு எண்டு நினைச்சதாலோ? சரி அடுத்தமுறை என்னை சந்திக்கேக்க மாட்டுக்கு தவிடு, புண்ணாக்கு எல்லாம் கொண்டு வாருங்கோ. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.