Jump to content

வீரவணக்கம் - லெப் கேணல் ஈழப்பிரியன்


Recommended Posts

priyan1dh4.jpg

தமிழ் மக்களின் வாழ்வுக்காக தன்னுயிர அர்ப்பணித்த லெப் கேணல் ஈழப்பிரியனுக்கு எனது வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

தமிழ்செல்வன் அண்ணையின் மெய்பாதுகாப்பளராக இருந்து பின் வேறு பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த லெப் கேணல் ஈழப்பிரியன் தமிழ்செல்வன் அண்ணையின் இழப்புக்கு பின் அவரினால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார். இறுதியாக கிளிநொச்சியின் துணைக்கட்டளைத் தளபதியாக இருந்தார். 31.12.2008 அன்று பரந்தனுடாக முன்னேற முயன்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் தமிழ்ச்செலவன் அண்ணையின் பாதுகாப்புக்கு பொறுப்பாக போது

lrguu9.jpg

பிரிகேடியர் தமிழ்ச்செலவன் அண்ணையின் இறுதி வீரவணக்கத்தின் போது

funeral19gp4.jpg

stpvp2zv7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் ஈழப்பிரியனுக்கு எனது வீரவணக்கங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர் ஈழப்பிரியனுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

எதிரியுடன் களமாடி தாய் நாட்டுக்காக தன்னுயிரை கொடை கொடுத்த மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியைப் பந்தாடக்களமாடிய வீரனுக்கு எங்கள் அஞ்சலியோடு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் மண் காக்கும் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் ஈழப்பிரியனுக்கு எனது வீர வணக்கங்கள்....

இளங்கவி

Link to comment
Share on other sites

அன்னை மண் காக்க அண்ணன் வழி சென்று வீரகாவியமான ஈழப்பிரியனுக்கு எனது அகவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

ஒரு கணம் ஒன்றில்

எனக்கும் மரணம்

வரும்

மரங்களின் இலைகளும்

பூக்களின் இதழ்களும்

அப்படியே தானிருக்கும்

மேலெழும்பும் காற்றும்

வானும் மண்ணும்

தெருவில் போகும்

சிறுவனின் கண்களும்

கூட அப்படிதானிருக்கும்

ஒரு கண்ணாடிச் சில்லுடைதலின்

சல சலப்பு கூட என்

மரணத்தில் இருக்காது

ஆனால் உன்...?

தோழா

வன்னி மரங்களின்

அழுகை கேட்கின்றதா உனக்கு..

உன் வீரம் பார்த்த

பூக்களும் அதனை தாங்கும்

காம்புகளும் கூட

அழுது அரட்டுகின்றனவாம்

கேட்கின்றதா உனக்கு

தன் வீரப்

புதல்வனின் மூச்சு

காற்றை எனி என்று

தன்னுள் கலப்பேன்

என்று

காற்றும் தலைவிரித்து

ஓங்கி அழுகின்றது

வானம் இன்று

தொலைந்தே போய்விட்டது

உன் மரணம் பார்த்த

செய்தி கேட்டதில் இருந்து

சூரியனை கூட சுட்டெரிக்கின்றது

ஆயிரமாயிரம்

புதல்வர்களினை அடைகாத்து

விடுதலையின்

விழுதாக்கும்

மண்கூட பேச்சின்றி

கிடக்கின்றது

கேளாய் தோழா

பிறப்பும் இறப்பும்

எனும் வட்டத்தில்

சிக்கிவிட்ட சில் வண்டுகள்

என்னைப் போன்றவர்கள்

ஒவ்வொரு சொட்டு இரத்ததிலும்

அடிமைத்தனத்தின்

கண்ணிகளை உடைத்து

மீண்டும் மீண்டும்

அதே மண்ணில்

பிறப்பெடுக்கும்

ஊற்றுக் கண்கள் நீங்கள்

மரணத்தின் பின்பும்

தீயாய் தாய் மண்ணில்

கொழுந்து விடும்

அக்கினிக் குஞ்சுகள்

நீங்கள்

போய் வா தோழா...

உன் வீரத்தின்

ஒரு

சொட்டில்

கூட உரிமை கொள்ள

முடியாத

கோழைக் கவிஞனின்

கண்ணீர் அஞ்சலியை

ஏற்றுக் கொண்டு

போய் வா தோழா

***************************

நிழலி

**************************************************************

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.