Jump to content

லண்டன் வெண்புறா அமைப்பு நடத்தும் பொங்கல் விழா - 2009


Recommended Posts

இவ்வளவு நாளும் இந்த அமைப்பு தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் நடாத்தப் படும் அமைப்பு என நினைத்து இருந்தேன்.

இப்படியான நிகழ்சிகள் இப்போதைக்கு தேவையா?

Link to comment
Share on other sites

உப்பிடியான நிகழ்ச்சிகளிற்கு போவதற்கு என்று 1 கூட்டம் இருக்கு. அவர்களிற்கு உங்கள் ஒப்பாரிகள் கேப்பதில்லை. அவர்களிடம் இருந்து பங்களிப்பை இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் தான் பெற்றுக் கொள்ளலாம்.

வெண்புறா நடத்தாவிட்டால் அந்த இடைவெளியை வேறு யாரும் நிரப்பி அந்த பணத்தை சம்பாதித்துக் கொள்வார்கள். அதிலும் பார்க்க வெண்புறாவின் நிகழ்ச்சிக்கு அந்த வளம் திருப்பப்படுவது பயனுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியம்தான் புஸ்பாவிஜீ

கறுப்பியக்கா ஈழத்தில இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த கேலிக்கையான நிகழ்ச்சி தேவைதானா என்றுதான் கேட்கிறன் ஈழத்தில நடக்கிற படுகொலைகளை கன்டித்து ஊர்வலம் நடத்தலாமே இல்ல அவங்களுக்காகவாவது உதவி செய்யலாமே இப்ப இது கட்டாயம் தேவையா அது தான் தாங்கள் தாங்கள் உணர்ந்தாத்தான தெரியும் காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தாத்தான தெரியும் மற்றவனுக்கு வந்தா அது எப்படிதெரியம் தெரியாட்டியும் உணர்ந்து கொள்ளவேண்டும் அதுதான் மனிதனோட இயல்பு. வெளிநாடு எங்கள ஏற்காட்டி தெரிஞ்டசிருக்கும் இப்ப என்ன நிலையென்டு நாங்களும் பங்கர் வெட்டித்தான் இருப்பம் ஏன் நாங்கள் உயிரோட இருப்பமா என்டுகூட தெரியாது அல்லும் பகலும் சாகிற அந்த மக்களுக்காக ஒரு அரைமனித்தியாலம் ஒதுக்கினா என்ன குறைஞ்சே போடுவினம் அங்க மக்களோட வயிறு இரண்டா பிழக்கேக்க இங்க கூத்தடிச்சா எப்படி இருக்கு அங்க இருக்கிறது எல்லாம் மிருகங்களே

கறுப்பியக்கா இத நான் உங்களுக்குச் சொல்லேல தயவு செய்து கோபிக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பாவிஜி.. எனக்கும் இன்றைய சூழ்நிலையில் இவ்வளவு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஆடம்பரமா நடத்துவதில் உடன்பாடில்லைத்தான். ஆனால் எம்மவர்கள் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டைக் கொண்டு பார்த்தீர்கள் என்றால்.. இவ்வாறான நிகழ்வுகளுக்குப் போக என்று பலர் இருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது இதற்குள் கவர்ந்து அவர்கள் அறியாமலே அவர்களின் பங்களிப்பைப் பெறலாம் அல்லவா . சில கோவில்களும் இவ்வாறுதான் எம்மவர்களை கையாண்டு.. உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றன. அது தற்போதைய சூழலில் வெளிப்படைக்கு தவறாகத் தெரியினும்.. எம்மவர்களை இன உணர்வு ரீதியா எப்போதும்.. ஒருங்கிணைக்க முடியும் என்று நினைக்கவில்லை. சில பேரை.. என்ன பல பேரை அவர்களின் வழியில் சென்றுதான் வழிக்குக் கொண்டு வர வேண்டி இருக்கிறது. சிந்திக்கக் கூடியவர்களுக்கு சிந்தனையைத் தூண்டி வரவழைக்கலாம். அது முடியாதவர்களுக்கு என்ன செய்வது.

சிறுவயதில் ஒரு கதை படித்த ஞாபகம்.. ஒரு சிறுவன்.. மாம்பழத்தைக் கூடையில் வைத்து வீதியால் மாங்காய்ப் பழம் மாங்காய்ப் பழம் என்று கூவி விற்றுக் கொண்டு போவானாம். அப்போ அவன் எதிரில் வந்த ஒரு பெரியவர்.. எப்படியப்பா வியாபாரம் என்று கேட்க.. ரெம்ப டல் என்று சொன்னானாம் சிறுவன். உடனே பெரியவர் சொன்னாராம்.. மாங்காய் பழம் என்று மாம்பழத்தைக் கூவி விற்க முயன்றாயானால்.. வெம்பல் மாங்காயை விற்பதாக மக்கள் எண்ணி வாங்கமாட்டார்கள். மாம்பழம் என்று கூவி வில்.. வாங்குவார்கள் என்று சொன்னாராம். மறுநாளில் இருந்து சிறுவனும் மாங்காய் பழம் என்று சொல்வதை நிறுத்தி மாம்பழம் என்று கூவி விற்கலானான். வருமானமும் நல்லா வந்திச்சாம். அதன் பின் மீண்டும் ஒரு நாள் வீதியில் அவனைக் கண்ட அதே பெரியவர்.. கேட்டாராம். இப்போ எப்படி வியாபாரம் என்று. இப்போ நல்ல வியாபாரம் நடக்கிறது. உங்களின் புத்திமதிக்கு நன்றி என்று சொன்னானாம் சிறுவன். உடனே பெரியவர் சொன்னாராம்.. பையா.. நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். ஊருடன் கூடி வாழப் பழகிக் கொள் என்று.

இதைத்தான் சொல்வார்கள்.. வெளவாலுக்கு வாழ்க்கைப் பட்டால் கவுந்துதான் கிடக்கனும் என்று. எம்மவர்களில் வெளவால்களும் உள்ளன.. வாத்துகளும் உள்ளன.. அன்னங்களும் உள்ளன..! எல்லாரையும் அன்னமாக எடை போட்டால்.. அது எமது தவறுதானே. இதை நான் இங்கிருந்து மிகச் சமீபத்தில் தான் கற்றுக் கொண்டேன்..! :mellow::(

Link to comment
Share on other sites

இதை நான் இங்கிருந்து மிகச் சமீபத்தில் தான் கற்றுக் கொண்டேன்..! :mellow::(

இன்னும் கத்துக்குட்டியா?? அப்ப நான் பரவாயில்லைப் போல :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்பாவிஜி.. எனக்கும் இன்றைய சூழ்நிலையில் இவ்வளவு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஆடம்பரமா நடத்துவதில் உடன்பாடில்லைத்தான். ஆனால் எம்மவர்கள் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டைக் கொண்டு பார்த்தீர்கள் என்றால்.. இவ்வாறான நிகழ்வுகளுக்குப் போக என்று பலர் இருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது இதற்குள் கவர்ந்து அவர்கள் அறியாமலே அவர்களின் பங்களிப்பைப் பெறலாம் அல்லவா . சில கோவில்களும் இவ்வாறுதான் எம்மவர்களை கையாண்டு.. உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றன. அது தற்போதைய சூழலில் வெளிப்படைக்கு தவறாகத் தெரியினும்.. எம்மவர்களை இன உணர்வு ரீதியா எப்போதும்.. ஒருங்கிணைக்க முடியும் என்று நினைக்கவில்லை. சில பேரை.. என்ன பல பேரை அவர்களின் வழியில் சென்றுதான் வழிக்குக் கொண்டு வர வேண்டி இருக்கிறது. சிந்திக்கக் கூடியவர்களுக்கு சிந்தனையைத் தூண்டி வரவழைக்கலாம். அது முடியாதவர்களுக்கு என்ன செய்வது.

சிறுவயதில் ஒரு கதை படித்த ஞாபகம்.. ஒரு சிறுவன்.. மாம்பழத்தைக் கூடையில் வைத்து வீதியால் மாங்காய்ப் பழம் மாங்காய்ப் பழம் என்று கூவி விற்றுக் கொண்டு போவானாம். அப்போ அவன் எதிரில் வந்த ஒரு பெரியவர்.. எப்படியப்பா வியாபாரம் என்று கேட்க.. ரெம்ப டல் என்று சொன்னானாம் சிறுவன். உடனே பெரியவர் சொன்னாராம்.. மாங்காய் பழம் என்று மாம்பழத்தைக் கூவி விற்க முயன்றாயானால்.. வெம்பல் மாங்காயை விற்பதாக மக்கள் எண்ணி வாங்கமாட்டார்கள். மாம்பழம் என்று கூவி வில்.. வாங்குவார்கள் என்று சொன்னாராம். மறுநாளில் இருந்து சிறுவனும் மாங்காய் பழம் என்று சொல்வதை நிறுத்தி மாம்பழம் என்று கூவி விற்கலானான். வருமானமும் நல்லா வந்திச்சாம். அதன் பின் மீண்டும் ஒரு நாள் வீதியில் அவனைக் கண்ட அதே பெரியவர்.. கேட்டாராம். இப்போ எப்படி வியாபாரம் என்று. இப்போ நல்ல வியாபாரம் நடக்கிறது. உங்களின் புத்திமதிக்கு நன்றி என்று சொன்னானாம் சிறுவன். உடனே பெரியவர் சொன்னாராம்.. பையா.. நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். ஊருடன் கூடி வாழப் பழகிக் கொள் என்று.

இதைத்தான் சொல்வார்கள்.. வெளவாலுக்கு வாழ்க்கைப் பட்டால் கவுந்துதான் கிடக்கனும் என்று. எம்மவர்களில் வெளவால்களும் உள்ளன.. வாத்துகளும் உள்ளன.. அன்னங்களும் உள்ளன..! எல்லாரையும் அன்னமாக எடை போட்டால்.. அது எமது தவறுதானே. இதை நான் இங்கிருந்து மிகச் சமீபத்தில் தான் கற்றுக் கொண்டேன்..! :mellow::(

விளங்குது நெடுக்ஸ் இப'படிப'பட்டவர்களை அவர்கள் வழியில் சென்றுதான் சிந்தனையை தூன்டவேண்டும் நல்லதுதான் என்ன எங்கட மக்கள் படுகிற கஸ்ரங்களை கொஞ்சமாவது மனசிலையாவது நினைக்கட்டும்

Link to comment
Share on other sites

இப்படியான நிகழ்வுகள் குறித்து பலவித கருத்துகள் இருந்தாலும் , இந்த நேரத்தில் பார்ப்பொருக்கு இழவு வீட்டில இசை நிகழ்ச்சி போல தெரியும். இப்படியான நிகழ்ச்சிகள் பணத்தை தரலாம். மற்றவர்களைக் கவரலாம். ஆனால் அது மாங்காய்ப் பழம் விற்பது போன்றதுதான்.

Link to comment
Share on other sites

இப்படியான நிகழ்வுகள் குறித்து பலவித கருத்துகள் இருந்தாலும் , இந்த நேரத்தில் பார்ப்பொருக்கு இழவு வீட்டில இசை நிகழ்ச்சி போல தெரியும். இப்படியான நிகழ்ச்சிகள் பணத்தை தரலாம். மற்றவர்களைக் கவரலாம். ஆனால் அது மாங்காய்ப் பழம் விற்பது போன்றதுதான்.

:icon_idea:இப்படியான நிகழ்ச்சிகளை தனிப்பட்ட நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ நடாத்தினால்த் தான் அது துரோகமாம். தேசியம் பேசுவோர் பணத்திற்காக எதையும் செய்யலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:இப்படியான நிகழ்ச்சிகளை தனிப்பட்ட நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ நடாத்தினால்த் தான் அது துரோகமாம். தேசியம் பேசுவோர் பணத்திற்காக எதையும் செய்யலாம். :D

அண்ண.. தனியார் நடத்தினா அதில ஆடம்பரம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இதில.. தவிர்க்க முடியாத வகையில் ஆடம்பரம் இருந்தாலும்.. (அதற்காக இது நியாயப்படுத்தல் அல்ல) வெண்புறாவுக்கான நிதிப்பங்களிப்பு இருக்கிறது. வெண்புறாவும்.. சேடம் இழுக்கனுமா..??! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா ஈழத்தில இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த கேலிக்கையான நிகழ்ச்சி தேவைதானா என்றுதான் கேட்கிறன் ஈழத்தில நடக்கிற படுகொலைகளை கன்டித்து ஊர்வலம் நடத்தலாமே இல்ல அவங்களுக்காகவாவது உதவி செய்யலாமே இப்ப இது கட்டாயம் தேவையா அது தான் தாங்கள் தாங்கள் உணர்ந்தாத்தான தெரியும் காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தாத்தான தெரியும் மற்றவனுக்கு வந்தா அது எப்படிதெரியம் தெரியாட்டியும் உணர்ந்து கொள்ளவேண்டும் அதுதான் மனிதனோட இயல்பு. வெளிநாடு எங்கள ஏற்காட்டி தெரிஞ்டசிருக்கும் இப்ப என்ன நிலையென்டு நாங்களும் பங்கர் வெட்டித்தான் இருப்பம் ஏன் நாங்கள் உயிரோட இருப்பமா என்டுகூட தெரியாது அல்லும் பகலும் சாகிற அந்த மக்களுக்காக ஒரு அரைமனித்தியாலம் ஒதுக்கினா என்ன குறைஞ்சே போடுவினம் அங்க மக்களோட வயிறு இரண்டா பிழக்கேக்க இங்க கூத்தடிச்சா எப்படி இருக்கு அங்க இருக்கிறது எல்லாம் மிருகங்களே

கறுப்பியக்கா இத நான் உங்களுக்குச் சொல்லேல தயவு செய்து கோபிக்க வேண்டாம்

உங்கள் மனஉணர்வு புரிகிறது. உணருகிறேன். ஆனாலும் தற்போதைய காலகட்டத்தில் வெண்புறா நடத்தும் நிகழ்வு அவசியம் என்பதே என் எண்ணம்.

பங்களிப்பு செய்யாத பல உறவுகள் இருக்கினம். இப்படியான நிகழ்வுகளில்..........பொழுதுபோக

Link to comment
Share on other sites

அண்ண.. தனியார் நடத்தினா அதில ஆடம்பரம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இதில.. தவிர்க்க முடியாத வகையில் ஆடம்பரம் இருந்தாலும்.. (அதற்காக இது நியாயப்படுத்தல் அல்ல) வெண்புறாவுக்கான நிதிப்பங்களிப்பு இருக்கிறது. வெண்புறாவும்.. சேடம் இழுக்கனுமா..??! :lol::icon_idea:

தம்பி

:lol: இப்ப நான் குறிப்பிட்டது. முன்பு சில தனியார் நிகழ்ச்சிகள் நடாத்திய போது இதே களத்தில், தாயகத்தில் மக்கள் அவதிப்படும் போது இவர்கள் இப்படிக் கூத்தடிக்கின்றார்கள் என்று விமர்சித்தவர்களே தற்போது வெண்புறா நடாத்தம் போது அதற்காக வக்காலத்து வாங்குவது தான் சங்கடமாக இருக்கின்றது. நிகழ்ச்சி நடாத்துவதற்கு உரிய அடிப்படைச் செலவு எல்லாம் தள்ளி வாற மிகுதியைக் கணக்குப் பார்ப்பதிலும் பார்க்க, வன்னி மக்களுக்காக நிதியாக சேர்ப்பதில் நிறையக் கிடைக்கின்றது. அதை விட இப்படிக் கூத்தடித்து காசு சேர்த்துத் தான் வன்னி மக்களுக்கு உதவ வேணுமென்று நினைப்பதும் கேவலமாகவே இருக்கின்றது. :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி

:icon_idea: இப்ப நான் குறிப்பிட்டது. முன்பு சில தனியார் நிகழ்ச்சிகள் நடாத்திய போது இதே களத்தில், தாயகத்தில் மக்கள் அவதிப்படும் போது இவர்கள் இப்படிக் கூத்தடிக்கின்றார்கள் என்று விமர்சித்தவர்களே தற்போது வெண்புறா நடாத்தம் போது அதற்காக வக்காலத்து வாங்குவது தான் சங்கடமாக இருக்கின்றது. நிகழ்ச்சி நடாத்துவதற்கு உரிய அடிப்படைச் செலவு எல்லாம் தள்ளி வாற மிகுதியைக் கணக்குப் பார்ப்பதிலும் பார்க்க, வன்னி மக்களுக்காக நிதியாக சேர்ப்பதில் நிறையக் கிடைக்கின்றது. அதை விட இப்படிக் கூத்தடித்து காசு சேர்த்துத் தான் வன்னி மக்களுக்கு உதவ வேணுமென்று நினைப்பதும் கேவலமாகவே இருக்கின்றது. :lol::D

நான் முன்னரே சொன்னது போல் இவ்வாறான ஆடம்பர நிகழ்வுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கூட எம்மைப் போல சிந்திப்பவர்களே. அவர்கள் ஏன் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்கள் எனும் போது.. எம்மவர்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் என்று விளங்க முடிகிறது. எம்மவர்கள் பற்றிய அவர்களின் மதிப்பீடு தாயகம் நோக்கிய முழுமையான பங்களிப்புக்கு என்று அமையும் போது.. இதை மனம் வருந்தியேனும் ஏற்றுக் கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. எம்மவர்களின் இந்த நிலை வருத்தமளிப்பதாக இருப்பினும்.. அவர்களை திருத்த முயல்வதற்கும் இது சரியான நேரமாகத் தெரியவில்லை. திருத்த வெளிக்கிட்டு.. விசனப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே மிச்சமாகும். செம்மறியாட்டுக் கூட்டத்தோடு செம்மறியாடா இருந்தால் தான்.. வாழ முடியும்..! இல்ல பட்டி குழம்பிடும். பட்டி குழம்பிடும் என்பதற்காக இவ்வாறான தவறான உதாரணங்கள் அவசியமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதில் தவறே இல்லை என்று சிந்திக்கும் நிலையில் இருக்கும் நம்மவர்கள் பற்றி.. யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது.. அது முடியக் கூடிய காரியமா..??! என்ற நிகழக்கூடியது பற்றியும் சிந்திக்க வேண்டும் அல்லவா..! :lol::(

Link to comment
Share on other sites

தம்பி

:icon_idea: இப்ப நான் குறிப்பிட்டது. முன்பு சில தனியார் நிகழ்ச்சிகள் நடாத்திய போது இதே களத்தில், தாயகத்தில் மக்கள் அவதிப்படும் போது இவர்கள் இப்படிக் கூத்தடிக்கின்றார்கள் என்று விமர்சித்தவர்களே தற்போது வெண்புறா நடாத்தம் போது அதற்காக வக்காலத்து வாங்குவது தான் சங்கடமாக இருக்கின்றது. நிகழ்ச்சி நடாத்துவதற்கு உரிய அடிப்படைச் செலவு எல்லாம் தள்ளி வாற மிகுதியைக் கணக்குப் பார்ப்பதிலும் பார்க்க, வன்னி மக்களுக்காக நிதியாக சேர்ப்பதில் நிறையக் கிடைக்கின்றது. அதை விட இப்படிக் கூத்தடித்து காசு சேர்த்துத் தான் வன்னி மக்களுக்கு உதவ வேணுமென்று நினைப்பதும் கேவலமாகவே இருக்கின்றது. :lol::D

குருக்கள் **வினால் அது குற்றம் ஆகாது.

Link to comment
Share on other sites

இப்படியும் சொல்லலாம்" ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் "என்று.

Link to comment
Share on other sites

இப்படியும் சொல்லலாம்" ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் "என்று.

உண்மை தான்...ஆனால் அதே பாட்டை வேறு ஆக்கள் பாடினால் போச்சுது..தமிழ் தேசிய விரோதிகள் பட்டம் கொடுத்து ஒரு வழி பண்ணிடுவோம்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகள் குறித்து பலவித கருத்துகள் இருந்தாலும் , இந்த நேரத்தில் பார்ப்பொருக்கு இழவு வீட்டில இசை நிகழ்ச்சி போல தெரியும். இப்படியான நிகழ்ச்சிகள் பணத்தை தரலாம். மற்றவர்களைக் கவரலாம். ஆனால் அது மாங்காய்ப் பழம் விற்பது போன்றதுதான்.

இப்பவெல்லாம் இழவு வீட்டுக்கு கூட்டம் வர வேனுமென்றாலும் இசைக்கச்சேரி வைச்சாத்தான் உன்டு. :icon_idea:

Link to comment
Share on other sites

இப்படியும் சொல்லலாம்" ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் "என்று.

:icon_idea:" மொத்தத்தில் கறக்கிறது மட்டும் தான் குறி " :lol:

Link to comment
Share on other sites

:D" மொத்தத்தில் கறக்கிறது மட்டும் தான் குறி " :D

கறந்து யார் பயன் அடைகிறார்கள்?

நாளும் சாவை எதிர் நோக்கி இருக்கும் மக்களும் குண்டு பட்டுக் காயம் அடைபவர்களும், அங்கவீனராவோரும் பயன் அடைவதை இப்படிக் குரூமாகச் சித்தரித்துப் பரிகாசிப்பதில் உங்களூக்கு அப்படி என்ன திருப்தி?

Link to comment
Share on other sites

கறந்து யார் பயன் அடைகிறார்கள்?

நாளும் சாவை எதிர் நோக்கி இருக்கும் மக்களும் குண்டு பட்டுக் காயம் அடைபவர்களும், அங்கவீனராவோரும் பயன் அடைவதை இப்படிக் குரூமாகச் சித்தரித்துப் பரிகாசிப்பதில் உங்களூக்கு அப்படி என்ன திருப்தி?

யாரது ? ஓ.......ஓ.........ஓ...... நாரதரோ...... கோழிக்குருமா, ஆட்டுக்குருமா கேள்விப்பட்டிருக்கிறன். இதென்ன குரூமாக ?? புரியவில்லை !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்புறா நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான நிதி கட்டாயம் தாயகத்திற்கு தான் அனுப்பி வைக்கப்படும்.எனக்கு தெரிந்த சில பேர் இருக்கிறார்கள் அவர்கள் தாயகத்திற்கு என்று நேரடியாக கேட்டால் பணம் கொடுக்கமாட்டார்கள் ஆனால் இப்படியான நிகழ்ச்சிக்கு என்றால் எவ்வளவும் கொடுப்பார்கள்.அவர்களை அறியாமலே தாயகத்திற்கு உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

இதில் இரண்டுவிதமான விடயங்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

1: இந்த சூழ்நிலையில் இப்படியான நிகழ்வுகளை நடத்தலாமா?

2: இதை யார் ஒழுங்கு செய்கின்றார்கள்? இந்த நிதி எங்கே செல்லப்போகின்றது?

Link to comment
Share on other sites

யாரது ? ஓ.......ஓ.........ஓ...... நாரதரோ...... கோழிக்குருமா, ஆட்டுக்குருமா கேள்விப்பட்டிருக்கிறன். இதென்ன குரூமாக ?? புரியவில்லை !!

ஓ சோத்துப் பாசல் சேகரிச்சவைக்கு கோழிக்குருமா ஆட்டுக் குருமா தானே நாபகத்துக்கு வரும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.