Jump to content

காத்திருக்கும் பறவை


Recommended Posts

எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன்.

1. இடப்பெயர்வு

அவசரத்தில் அவிழ்க்காமல்

விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்

கோழியும் , குஞ்சும்

உலையில் புட்டு

வரும்போது அரையவியல்

எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்

பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி

வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்

வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்

வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட

மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்

ஊர் பெயர்ந்தால்

வீடென்ன செய்யும்.

2. மீள்குடியமர்வு

சொல்லிலடங்காத

சோகங்களின்

தொகுப்பு

பட்டவர் அன்றி

மற்றவர் புரிந்திடா

உணர்ச்சிகளின் குவியல்

கூரைபிளந்து

வானம் பார்த்திருக்கும்

வீடு

செடிகொடி வளர்ந்து

காடாய்க் கிடக்கும்

வளவு

குதுகலத்தோடு வாழ்ந்த

குடிதனின் நிலைகண்டு

குளமாகும் கண்கள்

அடியெடுத்துவைக்கையில்

அன்னியப்படும்

பயிர் நிலங்கள்

சிறப்பாய் வாழ்ந்த நாட்கள்

சிந்தையில்

வட்டமிட்டிட

சின்னதில் செய்திட்ட

குறும்பினைச் சொல்லிடும்

சுவர்கள்

இருப்புக்கும்

இழப்புக்குமிடையில்

அல்லல்ப்படும் மனம்

சிரிப்பும், அழுகையும்

சேர்ந்தேவரும் - ஆம்

மீள்குடியமர்வென்பது எங்களுக்கு

மரணிப்புக்கு

முன்னால் கிடைக்கும்

மறுபிறப்பு.

3. சிறைவைக்கப்பட்ட வீடு

நேற்றுப்போல் இருக்கிறது

நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த

பாதைவழியே தொடங்கிய எம்

நெடுந்தூரப் பயணம்.

உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில்

ஊர்பற்றிய உணர்வலைகள்

ஒருவரிடமும் இல்லை அப்போது

இப்போதுதான்,

எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில்

ஊர்,

உடைந்துபோன வீடு,

இழந்த போன உறவுகள்,

அவர்தம் நினைவுகள்

என்றெல்லாம் ஏக்கமாய்.

ஒன்றிரண்டாய் குடிவந்து

ஊருக்கும் உயிர் வந்து

ஒருவருடமாகிறது

நாங்கள் மட்டும்

நடைப்பிணமாய்

நண்பர்கள் வீட்டில்

நாள்தோறும் எதிர்பார்ப்பு

நனைந்து போகிறது கண்ணீரில்

பேச்சுக்கள்,

பேச்சுக்கான பேச்சுக்கள்,

அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,

வாக்குறுதிகள்

சமாதானத்துக்கான யுத்தம்

என்றனைத்துக்கும் அப்பால்

சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு

எப்போது உடையும்

உயர் பாதுகாப்பு வலயம்.

4. இப்படியும் ஒரு வாழ்க்கை

ஏக்கம்,துக்கம் ஏன் இந்த

வாழ்வென்ற விரக்தியோடு

விடிந்துகொள்கிறது பகல்

வீதி,வேலைத்தளங்கள்,

பாடசாலை,பயணத்திலெல்லாம் –விதி

எம்மீது ஒரு விழி வைத்திருக்கிறது

சந்தோசமான சடங்குகளில்கூட

எல்லோர் மனத்திலும் –தனித்துட்காந்திருக்கிறது

எதிர்காலம் பற்றிய பயம்

கண்ணயரும் போதலெல்லாம்

துப்பாக்கிச் சத்தங்கள்

விழித்திருக்கிறது இரவு.

5. யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார்?

மீளவும் ஆரம்பித்திருக்கிறது

அடிமுடி தேடும் படலம்

முன்னையவற்றை விடவும் சற்று மூற்கமாக

இனி யுத்த காலம்

ஒண்டிரண்டாய் உயிர்போகும்

உடமைகரியாகும்

எண்ணிக்கைபற்றிய கவலையன்றி

வேறேதும் இருக்கப்போவதில்லை

இழந்தவன் தவிர்த்து மற்றவர்க்கு

இனம்,மதம்,சாதி

இடங்களுக்கிடையே

சண்டைகள் நடக்கும்

சிலநூறுபேர் சாவார்

கர்த்தால் வரும்

கடையடைப்பு ,எரிப்பு

ஊர்வலங்கள் நிகழும்

பட்டினி மரணங்கள்

பாவையர் கதறல்கள்

பாரினை உலுக்கும் இருந்தும்

அரியணை தொடர்திடவேண்டி

அரவமின்றி இருப்பர்

அதிகாரத்தில் இருப்போர்

சண்டைகளுக்ககும், சத்தங்களுக்கும் நடுவே

சமாதானத்துக்கான போர்

சல்லடைபோட்டுத் தேடுகிறது

யுத்தத்தின் முடிவை

ஆட்சிக்கால முடிவுக்குள்

அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலோடு

இத்தனைக்கும் அப்பால்

உறங்கிக்கொண்டிருக்கிறது உண்மை

யுத்தத்தின் முடிவைக் கண்டவர்கள்

இறந்தவர்கள் மட்டுமே ……பிளேட்டோ

6. சுதந்திரம்....

விழிபிதுங்கி இருக்கிறேன் என்

எண்ணங்களை

எழுத்துருவாக்கும் வழி தெரியாது

சந்தங்கள், அர்த்தங்கள் தவிர்த்து

நிறைய

யோசிக்கவேண்டி இருக்கிறது

எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும்

ஆயிரம் கண்கள் - என் எழுத்தை

வெறித்துப் பார்ப்பதாய் ஓர் பிரமை

எப்படி வரும்?

ஈட்டிகளுக்கு நடுவில்

இயல்பான கவிதை

நாட்டு நடப்புகளை

எழுதத் தொடங்கையில்

வரண்டு கொள்கிறது – நா

நெஞ்சில் பொறுத்திருக்கிறது

எழுதி முடித்ததும்

இருப்பேனா? என்ற பயம்

பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து

என்ன சாதித்துவிட முடியும்

இருப்பதை எழுதாமல்

வெறுத்துப் போய்

எழுந்து சென்றேன்

முடிந்திருந்தது பூசை

பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார்

சலித்துப் போய் விசாரித்ததில்

திறந்திருந்தால்

திருடர் பயம் என்றார்கள்

கடவுளே என்று

எட்ட நின்று கும்பிடுகையில்

கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்

ஆன்ம விடுதலைக்காய்

வேண்டுவது போல் இருக்கிறது.

எழுத்துக்கு மட்டுமல்ல –

என்னைப் பொறுத்தமட்டில்

எல்லாவற்றுக்கும்

தேவைப்படுவது போல் இருக்கிறது

சுதந்திரம்.

பகிர்கையில் குறைகிறது துன்பம்.

Link to comment
Share on other sites

வருக ஜீவன் வரவேற்கின்றேன். வலைப்பூவில் அறிமுகமாகி தற்போது கருத்துக்களத்திலும் தங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. காத்திருக்கும் பறவை , ஜீவநதி கவிதைகள் இன்னும் நிறைய வர வாழ்த்துக்கள்.

சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணிப்புக்கு

முன்னால் கிடைக்கும்

மறுபிறப்பு.

இன்று ஈழதமிழனிம் எதிர் கொண்டு நிற்பது இது

வாழ்த்துக்கள் ஜீவராஜ்

Link to comment
Share on other sites

நன்றி சாந்தி அவர்களே

உங்கள் வாழ்த்துக்கு...

Link to comment
Share on other sites

கவிதை சூப்பர் ஜீவராஜ். இந்தக்கதை சரியாய் எனதும் கதைமாதிரி இருக்கிது. எனக்கு மீள்குடியமர்வு வெளிநாட்டில நடந்ததால அது பொருத்தம் இல்லை. ஆனால்.. மிச்சம் எல்லாம் எனது கதையாகவும் இருக்கிது. நிதர்சனமான வரிகள். பாராட்டுக்கள்.

இடப்பெயர்வு

அவசரத்தில் அவிழ்க்காமல்

விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்

கோழியும் , குஞ்சும்

உலையில் புட்டு

வரும்போது அரையவியல்

எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்

பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி

வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்

வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்

வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட

மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்

ஊர் பெயர்ந்தால்

வீடென்ன செய்யும்.

சிறைவைக்கப்பட்ட வீடு

நேற்றுப்போல் இருக்கிறது

நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த

பாதைவழியே தொடங்கிய எம்

நெடுந்தூரப் பயணம்.

உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில்

ஊர்பற்றிய உணர்வலைகள்

ஒருவரிடமும் இல்லை அப்போது

இப்போதுதான்,

எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில்

ஊர்,

உடைந்துபோன வீடு,

இழந்த போன உறவுகள்,

அவர்தம் நினைவுகள்

என்றெல்லாம் ஏக்கமாய்.

ஒன்றிரண்டாய் குடிவந்து

ஊருக்கும் உயிர் வந்து

ஒருவருடமாகிறது

நாங்கள் மட்டும்

நடைப்பிணமாய்

நண்பர்கள் வீட்டில்

நாள்தோறும் எதிர்பார்ப்பு

நனைந்து போகிறது கண்ணீரில்

பேச்சுக்கள்,

பேச்சுக்கான பேச்சுக்கள்,

அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்

குறுதிகள்

சமாதானத்துக்கான யுத்தம்

என்றனைத்துக்கும் அப்பால்

சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு

எப்போது உடையும்

உயர் பாதுகாப்பு வலயம்.

Link to comment
Share on other sites

இன்று ஈழதமிழனிம் எதிர் கொண்டு நிற்பது இது

வாழ்த்துக்கள் ஜீவராஜ்

நன்றி உங்கள் கருத்துரைக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஜீவராஜ் <_<

Link to comment
Share on other sites

கவிதை சூப்பர் ஜீவராஜ். இந்தக்கதை சரியாய் எனதும் கதைமாதிரி இருக்கிது. எனக்கு மீள்குடியமர்வு வெளிநாட்டில நடந்ததால அது பொருத்தம் இல்லை. ஆனால்.. மிச்சம் எல்லாம் எனது கதையாகவும் இருக்கிது. நிதர்சனமான வரிகள். பாராட்டுக்கள்.

மிக்க நன்றி

///மிச்சம் எல்லாம் எனது கதையாகவும் இருக்கிது///

நம்பிக்கையோடு இருப்போம் நாளைநமதாகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் ஜீவன்,

காத்திருக்கும் பறவை, உண்மையிலேயே ஒரு பறவை நமது தேசத்தில் தனிமையில் அமைதியாக மரக்கிளையில் காத்துக்கிடப்பது போன்று மனக்கண்ணில் வந்து நிற்கிறது. அற்புதமான, நிஜமான உண்மையான சம்வங்களை தாஙகி நிற்கும் நல்ல படைப்பு.

நன்றி.

பென்மன்

என்.வை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எனக்கும் பழைய நினைவுகள்

நான் இப்போதும் இரை மீட்கும் கனவுகள்

கன்னத்தில் வழிந்த கண்ணீர் உப்புக் கரிக்கிறது

வெடிக்கும் இதயமோ மலைபோல் கனக்கிறது.

நல்ல கவிதை படைத்த ஜீவராஜ் நன்றி.

தொடர வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

அன்று ஓருசிலர்தான் இழப்புகளை சந்தித்தார்கள் ஓருசிலர்தான் அழுதார்கள் இன்று உலகத்தமிழினமே அழுகின்றது காரணம் இழப்பு அனைவரையும் சூழ்ந்து நிற்கின்றது

நாள்தோறும் எதிர்பார்ப்பு

நனைந்து போகிறது கண்ணீரில்

Link to comment
Share on other sites

நன்றி ஜீவராஜ் அருமையான கவிதையை தந்தமைக்கு.

நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடப்பெயர்வின் வலியை அப்படியே சொன்ன கவிதை வரிகள் சூப்பர்

- தியா -

Link to comment
Share on other sites

அன்புடன் ஜீவன்,

காத்திருக்கும் பறவை, உண்மையிலேயே ஒரு பறவை நமது தேசத்தில் தனிமையில் அமைதியாக மரக்கிளையில் காத்துக்கிடப்பது போன்று மனக்கண்ணில் வந்து நிற்கிறது. அற்புதமான, நிஜமான உண்மையான சம்வங்களை தாஙகி நிற்கும் நல்ல படைப்பு.

நன்றி.

பென்மன்

என்.வை.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மண் வாசனையை அள்ளித்தெளித்த வரிகள்.

Link to comment
Share on other sites

இதுதான் எனக்கும் பழைய நினைவுகள்

நான் இப்போதும் இரை மீட்கும் கனவுகள்

கன்னத்தில் வழிந்த கண்ணீர் உப்புக் கரிக்கிறது

வெடிக்கும் இதயமோ மலைபோல் கனக்கிறது.

நல்ல கவிதை படைத்த ஜீவராஜ் நன்றி.

தொடர வாழ்த்துகிறேன்.

நன்றி உங்கள் கருத்துரைக்கு...

Link to comment
Share on other sites

நன்றிகள் ...Paranee , sagevan , theeya உங்கள் கருத்துரைகளுக்கு

Link to comment
Share on other sites

  • 1 month later...

7. எல்லாமே முடிந்துபோயிருந்தது…..

எல்லாமே

முடிந்து போயிருந்தது

ஊர்த்தொடக்கமே

உதிரத்தால் உறைந்திருக்க

வாழ்விழந்த மக்களது

மரண ஓலம்

வழியெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது

நீண்டு வளர்ந்த எத்தனையோ

தென்னைகள் ஏற்றிருந்தன

‘செல்’ விழுப்புண்களை - இருந்து

இலக்கின்றி விழுந்தவையெல்லாம்

எதையாவது அழித்திருந்தன.

‘மாலா’ அக்காவின்

மண்வீட்டுக் கூரைபிளந்து

கொழுவி இருந்த ‘தொட்டில்க் குஞ்சு’

தரையில் சிதறியிருந்தது

அவசோகமாற்ற யாருக்கும் திரணியில்ல

கண்ணன் மாமா

விமலன் அத்தான்

பக்கத்து வீட்டுப் பரிமளம் புரிசன்

இன்னும் எத்தனையோ

இளசுகளெல்லாம் - கிராமத்தெல்லையிலேயே

எமலோகம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்

பிணங்கள்கூட இன்னும் வயலில்தானாம்

சசி அக்கா

குண்டு மாமி

குஞ்சி மகள் என்று

நீண்ட வரிசைக்கப்பால்

என் கிராமமும் சேர்ந்து

கற்பிந்து போயிருந்தது.

பாதைகளில் ‘ரயர்’ குவியல்

வீடுகளில் இரத்தக்கறைகள்

வயல்வெளியில் பிணக்குவியல்

இன்னும் எல்லாம்

அப்படியே இருக்கிறது.

சிற்றூர் பிரளயத்தில்

நாங்கள் மட்டுமல்ல

கோணேசரும் தப்பவில்லை

கோயிலெல்லாம் குண்டுதுளைத்து

குற்றுயிராய் இருந்தது

எங்கோ ஏதோவோர்

சண்டை நடந்ததற்காய்

இங்குநாங்கள்

சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம

Link to comment
Share on other sites

ஊர் அவலங்களை கவிதையாக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

சிறிய திருத்தம்...நீங்கள் ஈழத்திலேயே பிறந்து வளந்தவரெல்லோ....

சசி அக்கா

குண்டு மாமி

குஞ்சி மகள் என்று

நீண்ட வரிசைக்கப்பால்

என் கிராமமும் சேர்ந்து

கற்பிளந்து போயிருந்தது.

கற்பிழந்த...

Link to comment
Share on other sites

  • 3 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.