Jump to content

தமிழீழத்துக்கான அங்கிகாரத்தை யாரிடம் ஈழத்தமிழர் எதிர்பார்க்கிறார்கள்?


தமிழீழத்துக்கான அங்கிகாரத்தை யாரிடம் ஈழத்தமிழர் எதிர்பார்க்கிறார்கள்?  

22 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது.

உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் நாடுகளாக சோமாலிலாந்தும், நாகமோ கரபாவும் இருக்கினறன. சோமாலிலாந்து வெளிநாட்டில் உள்ள தம் மக்களின் பணவலிமையால், தான் பிரிந்து விட்ட சோமாலியாவிலும் பார்க்க செல்வந்த நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

தமிழீழமும் இவ்வாறாக எந்த நாட்டினதும் அங்கிகாரமும் இல்லமலே சுதந்திரப்பிரகடனம் செய்து ஒரு நாடாக இயங்க முடியும் தானே? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்ட சிந்தனையை காரணமாக கொண்டதே இந்த வாக்கெடுப்பு.

Link to comment
Share on other sites

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் என்பது விசேடமாக இருக்கும்... ஆனால் இந்த தமிழீழம் என்பதை தமிழ் மக்கள் (ஈழமக்கள் தவிரவும்) அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்... அதன் தேவைகளை தமிழர்கள் தன்னிறைவாக நிறைவு செய்யும் வளிக்களை கையாள வேண்டும்...

அப்படி நடக்கும் பட்ச்சத்தில் எல்லா நாடுகளும் தமிழீழத்தை அங்கீகரிக்க முன்வரும்...

வேறு நாடுகள் ஈழத்தை எதிரி நாடாக பார்க்காமல் இருப்பது மட்டுமே எங்களுக்கு மிகவும் அவசியமானது... அங்கீகாரமோ, உதவிகளோ அல்ல...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முட்டாள் தனமான கேள்வி தான் ........

ஐக்கிய நாடுகள் சபை என்று உண்டா ....... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜீட் உங்களின் வாக்கெடுப்பு இந்நேரத்தில் அவசியமானதாகவே படுகின்றது. ஏனெனில் பெரும்பாலனவர்கள் இந்தியாவின் அங்கீகரத்தையே அங்கீகாரமாக பார்க்கின்றனர். தாயகத்தில் நடைபெறும் கொய போருக்கு முழுமையான ஆதரவைத் தந்து எம்மை கொன்று குவிக்கும் ஒரு நாடு எம்மை ஆதரிக்கும் என்று இன்றும் பலர் பகல்க்கனவு கண்டகொண்டிருக்கின்றனர்.

அதே வேளை, தன்னிச்சையாக தமிழீழம் சுதந்திர நாடக பிரகடனம் செய்யப்பட்டால் தமிழீழத்தை ஆட்சி செய்ய அது தன்னிறைவுப் பொருளாதாரத்தை உடனடியாக பெற முடியாது. அப்படி அவாதென்றால் குறைந்தது 10-15 ஆண்டுகள் எடுக்கும். எனவே அப்படியானதொரு சூழலில், 10 தொடக்கம் 15 ஆண்டுகளுக்கு தமிழீழம் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களையே சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.

அதே நேரம் தெற்காசியாவில் எமது வர்த்தக பொருளாதார முன்னெடுப்புக்களை செய்வது முடியாத காரியமாக இருக்கலாம். எனவே குறிப்பிட்ட ஒரு நாடு (எந்த நாடாக இருந்தாலும்) எம்மை அங்கீகரிக்கும் போது எமக்கான பொருளாதார, வெளியுறவுப்பாதை ஒரு பக்கமேனும் திறந்திருக்கும் என்பது எனது கருத்து.

சுதந்திர தமிழீழத்தின் நிர்வாக செலவுகளை ஏற்க புலம் பெயர்ந்த தமிழர்கள் தயாராக இருப்பார்கள் என்றாலும் நீண்டகாலத்துக்கு அவை நடைமுறைச்சாத்தியமற்றவை. இப்போது இருக்கும் சந்ததி மாற்றம் அப்படியான ஒரு சந்தர்பத்தை வழங்குமா என்பது கேள்விக்குறியே!

Link to comment
Share on other sites

எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்ட ஆக்கள் ஒருத்தரையும் காணல்ல. நாங்கள் முதல்ல எங்களையும் எங்கள் போராட்டத்தையும் அங்கீகரிக்க வேணும். அதை முதல்ல செய்யுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவு ஒரு நாடாக இருக்கும்வரை தமிழருக்கு விமோசனம் இல்லை என்பதைத்தான் முன்னைய சாத்வீகப் போராட்டமும் தற்போதைய வன்முறைப் போராட்டமும் இலங்கைத் தமிழருக்கு அளித்த பாடம். இதைத் தெளியாமல் இருப்போர் சிலராகத்தான் இருப்பார். இராணுவ நெருக்குவாரத்துக்குள் அகப்பட்டுள்ள தாயக மக்கள் தற்போது உயிராபத்தின்றி நிம்மதியாக இருக்கவிட்டாலே போதும் என்று கூறினாலும், எதிர்காலத்தில் மீண்டும் தனிநாடு தேவையென்று ஏதோ ஒரு வழியில் போராடத்தான் செய்வார்கள்.

தமிழர்கள் (தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் இருப்பவர்கள்) உலகத் தமிழினத்தை ஒன்றுபடுத்தி ஐக்கிய நாடுகள் சபைமூலம் தனிநாட்டை உருவாக்கப் போராடவேண்டிய தருணம் இது. அதைவிடுத்து இடங்கள் போய்விட்டதால், தமிழீழப் போராட்டம் அழிந்துவிட்டது என்று சும்மா இருப்பதல்ல.

Link to comment
Share on other sites

நோர்வே போன்ற சிறுபான்மை மக்கள் மேல் கரிசனை காட்டுகின்ற நாடுகள் எங்களது சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிற நிலயை ஏற்படுத்த வேண்டும்...

தமிழரின் பலம் இருந்த போது அதனை பயன் படுத்தி தமிழரது பிரச்சனையை உலகுக்கு கொண்டு வந்த முதல் நாடு என்றவகையில் தொடர்ந்து நோர்வேயின் பங்களிப்பு தேவை.

Link to comment
Share on other sites

நோர்வே போன்ற சிறுபான்மை மக்கள் மேல் கரிசனை காட்டுகின்ற நாடுகள் எங்களது சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிற நிலயை ஏற்படுத்த வேண்டும்...

தமிழரின் பலம் இருந்த போது அதனை பயன் படுத்தி தமிழரது பிரச்சனையை உலகுக்கு கொண்டு வந்த முதல் நாடு என்றவகையில் தொடர்ந்து நோர்வேயின் பங்களிப்பு தேவை.

நோர்வே தமது காலத்தை நாசமாக்கி வெறுத்து ஒதுங்கிவிட்டது போலவே இருக்கிறது. அவர்களது மூச்சைக் கூட காணல்ல.

முன்ன ஏதாவது அறிக்கையாவது வரும். இப்ப அதுவும் இல்ல

Link to comment
Share on other sites

theoritical ஆக பார்த்தால் ஐநா உறுப்புரிமை உடைய ஏலவே அங்கீகாரம் உள்ள எந்த ஒரு நாடு அங்கீகரித்தாலும் போதும்.

ஆனால் யதார்த்தத்தில் எமக்கு

-1- இந்தியாவின் எதிர்ப்பு இருக்கக் கூடாது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுக ஆதரவு தேவை.

-2- அமெரிக்கா ஐரோப்பா உட்பட்ட மேற்குலகின் எதிர்ப்பு இருக்கக் கூடாது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுக ஆதரவு தேவை.

இந்த 2 புறச்சூழ்நிலையும் உருவான பின் theoritical தேவையை பூர்த்தி செய்ய எந்த ஒரு சின்ன நாடு அங்கீகரித்தாலும் போதும். ஏன் என்றால் யதார்த்தத்தில் இந்தியாவோ ஏனைய முன்னணி மேற்குலக சக்த்திகளோ சிறீலங்காவை பகைத்த படி தமிழீழத்தை கொசவே பாணியில் அங்கீகரிக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட ஒரு இராசதந்திர தவறை அல்லது வெற்றிடத்தை சிங்களம் உருவாக்கவில்லை இனியும் உருவாக்குமா என்பது சந்தேகமே.

மேற்கூறியது UDI scenario விற்கு உரியது. அது எந்தளவிற்கு எமக்கு பொருத்தம் என்று யோசிக்க வேண்டும்.

மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரம் என்ற பாதையில் போனால் நிலமை வேறு.

இவை எல்லாத்துக்கும் முதல் உலகத்தமிழ் இனம் தமிழீழத்தை அங்கீகரித்து அதற்காக பங்களிக்க வேண்டும் உழைக்க வேண்டும். பெரும்பான்மைத் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த தமிழ் தேசிய மனித பொருளாதரா வளம் தேசிய தலமையின் பின்னால் குவிய வேண்டும். அதன் பின்னர் தான் மிகுதி எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது ஒரு நாடு அங்கிகரித்து எந்தவிதமான பலனும் இல்லை. வல்லரசுகளில் ஏதாவது ஒரு நாடு அங்கிகரிக்க வேண்டும். ஆனால் அனைத்து வல்லரசுகளும் தங்களுடைய நலனையே பார்க்கின்றன. ஈழத்தை ஆதரிப்பதால் அவர்களிற்கு எந்தவிதமான நன்மைகளும் வரப்போவதில்லை.

தன்னை வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா அங்கிகரித்தால் ஏனைய நாடுகள் அங்கிகரிக்கும். யக்கிய நாடுகள் சபை என்பது ஒரு பேச்சுக்கு தான். அங்கு அமெரிக்க வைத்தது தான் சட்டம். ஒரு உதாரணம் சொல்லப்போனால் அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்க வேண்டாம் என்று தெரிவித்தும் அமெரிக்கா அதை பொருட்படுத்தாமல் போரை தொடங்கியது. இதை பற்றிவேறு எந்த நாடும் வாய் திறக்கவில்லை. ஏன் யக்கிய நாடுகள்சபையும் இதை கணக்கிலெடுக்கவில்லை.

இந்தியா ஈழத்தை ஆதரிக்க முடியாதவாறு இலங்கை அரசாங்கம் திறமையாகவே காய்களை நகர்த்துகிறது. இது நாம் கேட்கவிப்பமில்லாவிட்டாலும் ஒரு கசப்பான உண்மை. அதாவது இந்தியாவை சுற்றி முற்றிலும் அதற்கு எதிரி நாடுகளே உள்ளன. இந்தியா ஈழத்திற்கு சார்பாக ஏதாவது செய்யவெளிக்கிட்டால் இலங்கை அரசாங்கம் உடனே பாகிதான்,சீனா என அதன் எதிரி நாடுகளிடம் ஓடுகிறது. இது இந்தியாவில் "வல்லரசு" ஆசைக்கு ஆபத்து. இதை வைத்து இலங்கை அரசாங்கமும் இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. வளர்ந்து வரும் இந்தியா எக்காரணம் கொண்டும் ஒரு போரில் குதிப்பதை விரும்பாது. போர் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் பொளாதாரம் மீண்டும் பின் தங்கி சென்றுவிடும் (தற்பொழுது அமெரிக்காவிற்கு ஈராக் போரின் பின் நடந்தது போல்).

சீனா ஒரு பொழுதும் ஈழத்தை ஆதரிக்க போவதில்லை. புத்தபிக்குகள் மதத்தை வைத்தே சீனாவை தம் பக்கம் இழுத்துவிடுவார்கள்.

தற்பொழுதுஉள்ள நிலமையில் இந்தியா அல்லது ரசியா அங்கிகரிக்கலாம். அனைத்துவல்லரசுகளுடனும் பகமை கொண்டுள்ள ரசியா தனக்கு சாதகமாக ஒரு நாடு வளர்வதை விரும்பலாம்.

இந்தியாவின் அங்கிகாரம் கிடைப்பதானால் இந்தியாவின் கடினமே. ஆனால் இந்தியாவை எதிர்த்து எந்த நாடும் அந்த பிராந்தியத்தில் தற்பொழுது வாய் திறக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட

கிழக்கு திமோர் நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு

இராஜதந்திரி ஒருவரையும் நியமிக்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக

சில நாட்களுக்குமுன் செய்தி ஒன்று வாசித்தேன்

கிழக்கு திமோர் ஈழத்தை ஆதரித்துவிடுமோ என்ற காரணத்தால்

அதனை முறியடிக்கும் நோக்கத்துடன் திமோருடன் உறவை ஏற்படுத்த

இலங்கை எண்ணியுள்ளதோ என நினைக்கத் தோன்றுகிறது

நான்நினைப்பது சரியானால் ஏதாவது ஒரு நாடு ஈழத்தை அங்கீகரித்தால் போதுமானது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

அண்மையில் சுதந்திரம் அடைந்த நாடுகள் கூட எம்மை அங்கீகரிக்கலாம். இது தான் இலகுவான வழி அல்லது ஒரே வழி போல் தென்படுகிறது . இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள் எங்களை அங்கீகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இவர்கள் சுயநலம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவையானவை எம்மிடம் இல்லை. ஆகவே எம்மை அங்கீகரிக்கும் சாத்தியக்கூறுகளும் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவோ அமெரிக்காவோ ஆதரிக்கும் என்பது பகல்கனவு ஆனால் முதலில் சிறிய அல்லது ஏதாது ஒரு நாட்டின் அங்கீகாரத்தை பெறுமுயற்ச்சிப்பதே நல்லது. ஓரேயடியாக மலையை பிளக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு நாடு என்பதைக் காட்டிலும், ஐ.நா சபையில் உள்ள ஏதாவது ஒரு நாடு அங்கீகரிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாஉறுப்பினரான ஒரு நாடு அங்கீகரிப்பது நல்லது.

இந்தியாவில் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு , அவர்களும்மனம் வைத்தால் நடக்கும்.

ஆனால் எங்கும் முட்டுக்கட்டைகளாகவும், விலைபோகக் கூடியவர்களாகவும்

ஈழத்தமிழருக்கு ஒரு கருணா

இந்தியத் தமிழருக்கு நிதியும் குறையாய் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இலங்கையிலும் புலம் பெயர் நாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாத்துக்கும் முதல் உலகத்தமிழ் இனம் தமிழீழத்தை அங்கீகரித்து அதற்காக பங்களிக்க வேண்டும் உழைக்க வேண்டும். பெரும்பான்மைத் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த தமிழ் தேசிய மனித பொருளாதரா வளம் தேசிய தலமையின் பின்னால் குவிய வேண்டும். அதன் பின்னர் தான் மிகுதி எல்லாம்.

இன்றை கள யதார்த்தத்தோடு ஒன்றி நிற்கும் கருத்தாகும். இதனையே தாயகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது, என்பதை விட அவர்கள் தமது சக்திக்கு அப்பாற்பட்டுச் சாதித்துக்கொண்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

முதலில் மற்றவர்கள் எம்மை யார் அங்கீகரிப்பார்கள் என்பதை பார்க்க இடத்தை விட்டு எம்மால் எந்த நாட்டுடன் அது பெரிய நாடாக இரந்தாலும் சரி சிறிய தற்காலப் பொழுதில் வவிடுதலையடைந்த நாடுகளாயினும் சரி எந்த நாட:டன் தமிழர் தரப்பு - விஜடுதலைப்பலிகள் அல்லது தமிழர் கூட்டமைப்பு தொடர்புகளை அல்லது உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது என்று சிந்தித்து பார்ப்பமானால் நன்றாக இருக்கும்.

அத்தடன் தென்னாபிர்க்கா மொறிசியல் சிங்கப்புர் போன்ற நாடகளுடன் தமிமர் தரப்பு கொண்டள்ள உறவுகள் என்ன என்பது கேள்விக்குறியே ? நாம் திரும்பவும் ஐNihப்பா நாடுகள் அமதரிக்கா வந்து எம்மை தூக்கிவிடும் என்றோ அல்லது இந்தியா எம்மை தூக்கிபிடிக்கும் என்றோ எதிர்பாhப்பது எவ்வளவு துரத்திற்கு என்று தெரியவில்லை நம்பிக்கைகள் இருக்காலம் தான் அதற்காக செய்படாமல் இருந்து விடமுடியாது.

வெறுமனமே ஐரோப்பிய நாடுகளை மட்டும் நம்பி நாம் பயணிப்பதை விடுத்து ஏனைய நாடகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி உறவுகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளில் எம்மை பற்றி நல்லெண்ணத்தi விதைத்து அவர்கiயாயவது எமது பக்கம் மாற்றுவது சிறந்தது.

Link to comment
Share on other sites

அடுத்த மாவீரர் தின உரையில் தமிழீழம் பிரகடனப்படுத்தப்படும் பொழுது அங்கீகரிக்க ஜேர்மனி தயாராகி வருவதாகத்தான் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடியல் வெகு தூரத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாவீரர் தின உரையில் தமிழீழம் பிரகடனப்படுத்தப்படும் பொழுது அங்கீகரிக்க ஜேர்மனி தயாராகி வருவதாகத்தான் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடியல் வெகு தூரத்தில் இல்லை.

திரைமறைவில் நடக்கும் விடயத்தை இப்படி பகிரங்கப்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல குறுக்கர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.