Jump to content

பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...


நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா?  

28 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தூயாவிற்கு !

எமது அணியில் ஒருவர் குறைவதால் அந்த இடத்தை நிரப்ப திரு.குருவி அவர்களை அன்போடு அழைத்திருந்தேன். அவரும் என் அழைப்பிற்கும் ஏற்கனவே வேறு சில உறவுகளின் வேண்டுகோளிற்கமையவும் சம்மதம் தெரிவத்துள்ளார். எனவே அவரது பெயரையும் எமது அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

எங்கும் எதிலும் எப்பவும் நீதி தவறாத நடுவர்(கள்) அவர்களே ! மௌனமாக இருந்தாலும் விழிப்பாகவும் உற்சாகமாகவும் பட்டிமன்றத்தை ரசித்துக் கொண்டிருக்கும் கள அன்பர்களே ஆதரவாளர்களே.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள். ஊரறிந்த உண்மைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை என்பதுதான் உலக நியதி.

உங்களெல்லோருக்கும் தெரிந்த உண்மை எதிரணியினர்க்கு மட்டும் தெரியாமல் போன மர்மம் என்ன. அல்லது நித்திரை கொள்பவனைப் போல் நடிக்கிறார்களா.

முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்.

பட்டிமன்றத் தலைப்பை அவையோர் எல்லோரும் கவனமாகப் பாருங்கள். ஏனெனில் எதிரணியினர் தலைப்புக்கு சம்பந்தமில்லாத பல விடயங்களை இங்கு கூறி உங்கள் கவனத்தை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள்.

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உங்களை சோம்பேறியாக்குகின்றதா அல்லது உற்சாகப்படுத்துகின்றதா?

நான் இங்கே சோம்பேறியாக்கவில்லை என்பதற்கு சில தரவுகள் தருகிறேன். ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்.

இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட விவசாயி ஒருவன் மண்வெட்டியை மட்டும் நம்பியிருந்த காலத்தில் விடியக்காலை மூன்று மணிக்கு தோட்டத்தில் இறங்கி மாலையில் இருட்டும் மட்டும் வேலைசெய்தான். உழவு இயந்திரம் வைத்திருக்கிற இபபோதைய விவசாயி ஒரு பத்து மணி வாக்கில் தோட்டத்துக்கு போய் அப்பிடியே ஒரு அரை மணித்தியாலத்தில் அந்த நிலத்தை உழுது போட்டு பிறகும் ஒரு அரை மணித்தியாலத்தில் மோட்டர் பம்ப் பாவித்து நீர் இறைத்து விட்டு மிகுதி நேரம் முழுக்க வீட்டில் படுத்து நித்திரை கொண்டிருந்தான் என்றால் நான் எதிரணிக்கு தலை வணங்குகிறேன். மாறாக அவன் இன்னும் பல ஏக்கர்களுக்கு தனது விவசாயத்தை விஸ்தரித்து தனது மூதாதையர் போலவே அதிகாலை எழுந்து தொழிலுக்கு போகிறானே அது ஏன்

அந்தக் காலத்தில் தனது கைப்பட ஒவ்வொரு வரவையும் செலவையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்துவைத்த ஒரு கணக்காளர் நவீன கணனி வசதிகளைப் பாவித்து மிகக் குறுகிய நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு சுருண்டு படுத்திருப்பாரானால் நான் எதிரணியிடம் எமது தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பேன். மாறாக அவர் இன்னும் பல கடைகளுக்கும் கணக்கெழுதி தனது வருமானத்தை பெருக்கியிருக்கிறார் இது ஏன்.

ஆகாய விமானத்தில் நாடு விட்டு நாடு சென்று தொழில் வளர்த்த தொழில் அதிபர் இப்போது விமானத்தில் பறப்தில் செலவழித்த தனது பொன்னான நேரத்தை தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் மிச்சம் பிடித்திருக்கிறார்.

எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.

மேற்குறிப்பிட்ட சில உதாரணங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையிலும் வீணாகச் செலவழிக்கப் பட்ட நேரம் நவீன தொழில் நுட்பவசதிகளால் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரமும் வீணடிக்கப்படவில்லை. இன்னும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.

இதை எதிரணியினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எதிரணியில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் புதிது புதிதாக நோய்கள் வருவதாக. வரும்தானய்யா நீங்கள் பழைய நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க புதிதாக நோய்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அதற்குப் பெயர்தான் இயற்கைச் சமநிலை. பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது இயற்கையின் விதி. நீங்கள் இறப்புத் தொகையைக் குறைக்க முயன்றால் மனிதர் போவதற்கும் வழி வேண்டுமல்லவா. அல்லது ஒரு சுனாமியோ நிலநடுக்கமோ கொண்டுபோகும் இது நவீன தொழில்நுட்பத்தின் தாக்கமல்ல என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னுமொருவர் சொன்னார் 10 கிலோவைத் தூக்கிக் கொண்டு 100 மீற்றர் நடக்கக் கஸ்ரப்படுவதாக. அது உண்மைதான் நவீனதொழில் நுட்பத்தின் பின்விளைவு அது. உங்களைப் போன்ற சில சோம்பேறிகளை மேலும் சோம்பேறியாக்கி விட்டிருக்கிறது வேதனைக்குரிய விடயம். ஆனால் நாம் பேசுவது முன்னேறத் துடிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு நவீன தொழில் நுட்பம் வைக்கும் சோதனையைப் பற்றி.

நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே.

இறுதியாக எனக்கு வாய்ப்பளித்த தூயாவுக்கும் சிறந்ததொரு முடிவை அறிவிக்கக் காத்திருக்கும் நடுவர் குழுவுக்கும் பார்வையாளர் சமூகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

Link to comment
Share on other sites

"முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்." என்ற அறிவுறுத்தலுடன் வந்துள்ளார் ஈஸ்வர் அவர்கள்.

விஞ்ஞானம் விவசாயம் போன்றவற்றில்.. உற்பத்திக்கான நேரத்தை மீதமாக்கி, ஏனைய முயற்சிகளுக்கோ அல்லது முயற்சிகளின் விஸ்தரிப்புக்கோ வழிவகுக்கிறது.. அதனால் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்கிறார் ஈஸ்வர்.

பழையது ஒன்று அற்றுப்போகும்போது, புதியது ஒன்று தோன்றத்தான் செய்யும்.. அதைப்போலத்தான் நோய்களும்.. இது இயற்கைச் சமநிலை.. இதை மறந்து எடுத்ததற்கெல்லாம் விஞ்ஞானத்தின்மீது பழிபோடாதீர்கள் என்கிறார் ஈஸ்வர்.

"நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே."

ஆக, சோம்பலும் உற்சாகமும் உன்னால்தான் வருகிறதே ஒழிய, விஞ்ஞானத்தினால் அல்ல எனும் கருத்துப்படக் கூறி தனது கருத்தை நிறைவுசெய்துள்ளார். அவருக்கு நன்றி.

அடுத்ததாக, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து ஒருவர் கருத்துகளைத் தர முன்வருவார். வாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்கள் சோழியன் மாயமான் சண்முகிக்கும் முகமூடிகளுடன் சென்றிக்கு நிற்கும் கண்காணிப்பு குளுவுக்கும் நிகழ்ச்சியை நன்கு ஒழுங்கு செய்த தூயாவுக்கும் கணனிக்கு முன்னால் சக்கர நாற்காலிகளில் கொறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி வாதிகளுக்கும் எறும்பை விட சுறுசுறுப்பாக

இயங்கிக் கொண்டிருக்கும் எமது நண்பர்களுக்கும் அமைதியுடன் இருந்து எமது வாதம்களை ரசித்துக் கொண்டிருக்கும் யாழ் கள உறுப்பினருக்கும் வணக்கம்.எதிர் தரப்பு வாதிகள் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானம் முன்னேறியதால் எல்லோருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய கூடியதாக உள்ளதாக கூறி தமது சோம்பேறித் தனத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நன்றிகள்.நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாகிறோம் என்பதற்கு நிறையவே சொல்லலாம்.நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம் என்று எண்ணுகிறேன்.அதாவது இப்போது பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்து நடக்க தொடங்க முதலே கணனியில் விளையாட கற்றுக் கொடுத்துவிடுவார்கள்.அப்படிய

Link to comment
Share on other sites

வியாசனின் உட்பட பலரின் வேண்டுகோளை ஏற்று அனைவருக்கும் பார்க்கும் வகையில் பட்டிமன்றத்தை பொழுதுபோக்கு பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

போட்டாரே ஒரு போடு! கேட்டாரே ஒரு கேள்வி!!

கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்.. அவர்தான் ஈழப்பிரியன் அவர்கள்!!

இதுதான் பரவாயில்லை என்று பார்த்தால்.. விட்டுக்கொடுப்பு.. முன்னேறவேண்டுமென்ற போட்டிமனப்பான்மை போன்ற உணர்வுகளை அறியாதவர்களாகவே மனிதனை ஆளாக்கி.. அவனது ஆயுளை ஆகக் கூடியது நாற்பது வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் வேலையை விஞ்ஞானமானது வெகுகச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது எனும் சிந்தனைக்குரிய அரிய கருத்தொன்றையும் தெரிவித்திருக்கிறார் ஈழப்பிரியன் அவர்கள்.

தாயகத்திலே 80களிலே எனது உறவினர் மத்தியிலே 'சலரோகம்' என்ற வியாதி இல்லையென்று கூறுமளவிற்கு வெகு குறைவாகவே இருந்தது.. அதனால் நான் யோசித்ததுண்டு.. அந்த காலநிலையில் சலரோகம் வெகுவிரைவில் வராது என.. ஆனால் சென்ற வருடம் போனபோது.. பெரும்பாலானவர்கள் சலரோகத்துக்கு ஆட்பட்டிருந்தனர்.. அங்கும் விஞ்ஞான சாதனங்களின் பாவனை அதிகரித்திருக்கிறதுதானே.. உதாரணமாக முன்பு சைக்கிள் இருந்த வீடுகளில் எல்லாம் மோட்டார் சைக்கிள்கள்தானே.. ஆக, ஈழப்பிரியனின் கருத்தைப் பார்க்கையில் விஞ்ஞானம் மனிதனைச் சோம்பேறியாக்கி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது..

இந்த அச்ச உணர்வைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் தற்போது 'எற்சாகப்படுத்துகிறது' என்ற அணியைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்..

விக்டோர்ப், அம்மு, வசி, குருவி... இவர்களுள் ஒருவரை தற்போது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். :D

Link to comment
Share on other sites

ம்.. தொடருங்கள் நேரடியாக பார்க்கும் பட்டி மன்றம் போல உள்ளது. அனைவரின் வதத்திறன்களும் அருமை. ஆழ்ந்து சிந்திக்கத்தூண்டுகின்றன. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுவர் மற்றும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!

மேடையில் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறோம் எதிர்தரப்பினர் எங்கே நித்திரை கொள்கிறார்களோ தெரியவில்லை 48 மணிநேரங்களுக்கு மேலாக பட்டி மன்றத்தில் இது வரை எதிர் தரப்பினர் பதிலளிக்க வில்லை எனவே அவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டர்கள் போல... இனி தீர்ப்பை வழங்குங்கள் அல்லது எமது அணியில் அடுத்த உறுப்பினர்க்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.... எனவேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய பட்டிமன்ற நடுவர்களே எதிரணி உறவுகளே எமதணிக் கருத்துக் கண்மணிகளே..எல்லோருக்கும் தமிழ் தாயின் பெயெரால் முத்தமிழ் வணக்கங்கள்..!

இப்பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள ஆரம்பத்தில் அழைத்த தமிழினியினதும் துயா பாப்பாவினதும் கோரிக்கைகளை ஏற்கத் தவறியமைக்காக அவர்களிடம் மன்னிக் கேட்பதுடன் எங்கள் கருத்துக்களையும் உள்வாங்க விரும்பிய கருத்துச்சகபாடி வசம்புவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு எமது பக்க கருத்தைத் தருகின்றோம்...!

முதலில் சோம்பேறித்தனம் என்பதற்கும் விஞ்ஞானத்துக்கும் இங்கு பட்டிமன்றக் கருப்பொருளாக வைக்கப்பட்ட அம்சத்துக்கும் இடையேயான தொடர்பு சரியா...???!

விஞ்ஞானம் என்பது இந்த பிரபஞ்சம் தோன்றிய போதே தோன்றிய ஒன்று....அதை மனிதன் தனது பகுத்தறிவால் நுண்ணறிவால் ஆராய்ந்து விளங்கிக் கொண்டு அதன் வழி தனது வசதிகளுக்கு ஏற்ப விதிகளையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் புகுத்தி நவீன விஞ்ஞானத்தின் விளைவுகளைத் தந்து வருகின்றான்...!

மனிதனே ஒரு விஞ்ஞானம்தான்...மனித உயிரியல் விஞ்ஞானம் இதைத் தெளிவாகச் சொல்கிறது...! அப்படிப்பட்ட விஞ்ஞானத்தினை கண்டறிந்து.. விளங்கித் தெளிந்து... புதுபுது வடிவங்களுக்குள் அதைப் புகுத்தி.... வளர்க்க மனிதன் என்பவன் தொடர்ந்து முயற்சித்ததன் பலனே இன்றைய நவீன விஞ்ஞானத்தின் விளைவுகள்...! அவற்றில் சில பாதகங்களும் பல நன்மைகளும் அடங்கும்...அந்த நன்மைகளையும் பாதகங்களையும் கூடச் சொல்வதும் விஞ்ஞானந்தான்...அதே விஞ்ஞானம் தான் பாதகங்களுக்கு விடையும் சொல்கிறது சொல்லிக் கொண்டும் இருக்கிறது....!

இந்த விஞ்ஞானத்தின் ஆரம்பப் படைப்பாளி யார் என்று அறியப்படாத போதிலும் புவியில் நவீன விஞ்ஞானத்தின் படைப்பாளி மனிதனே....! அப்படி விஞ்ஞான வழி வந்த மனிதன் நவீன விஞ்ஞானம் வரை அதை ஆராய்ந்து விளங்கி வளர்த்து வந்திருக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக சிந்தனை அற்றவனாக உழைப்பை அளிப்பவனல்லனவாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமா...???! இல்லை அல்லவா...! எனவே மனிதன் என்பவன் எப்பவுமே ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றானே தவிர சோம்பேறியாக செயலற்று இருக்கவில்லை...என்ற அடிப்படையை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...!

acsloth5mw.gif

(In fact it is the laziest animal in the world.It sleeps hanging from a tree and hardly even moves)

நமது எதிர்தரப்புவாதிகளையும் விஞ்சிய உலகில் வாழும் மிகவும் சோம்பேறி விலங்கு..!

இதில் என்ன வேடிக்கை என்றால் பாவம் எதிர்தரப்புவாதிகள்... அவர்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு அடங்கிக்கிடக்கும் ஒரு உள உடற் பலவீன நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளார்கள்...அதுதான் சோம்பேறித்தனத்துக்கு ஆளாகி உள்ளனர் போலும்...! அதுதான் எய்தவன் இருக்க அம்பை நோகின்றனர்....!

சோம்பேறித்தனம் என்பது இவர்களைப் போல "மனிதனுக்கு" மட்டுமல்ல...சில உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் ஒரு வகை உடற்தொழிற்பாடு மற்றும் மனோவியல் சார்ந்த நோய்.. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் அந்த உயிரினங்களுக்கும் சோம்பேறித்தன்மை என்பது... என்ன இவர்களைப் போலவே உலகில் படைக்கப்பட்டுள்ள சக மனிதர்களின் கடும் சிந்தனையாளும் உழைப்பாலும் வளர்ந்த நவீன விஞ்ஞானத்தின் விளைவால் வந்ததா..????! சில பிராணிகள் இரவில் சோம்பேறியாகத் தூங்கி பகலில் சொற்ப நேரம் தொழிற்படுங்கள்...இன்னும் சிலதுகள் மாறியும் செயற்படுங்கள்... இவை அவை அவை தனிப்படக் கொண்டுள்ள உடல், உள நிலை சார்ந்த விடயங்களின் தாக்கமே அன்றி மனிதன் படைத்த நவீன விஞ்ஞானத்தினதல்ல...!

காரணம்...இந்தச் சோம்பேறி மனிதர்களைப் போன்ற மனிதர்களால்தான் விஞ்ஞானமே ஆராய்ந்து அறியப்பட்டு புகுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது வினைத்திறனான விளைவைப் பெறுவதற்காக...! அப்படி ஒரு பகுதி மனிதர்கள் தொழிற்படும் போது இவர்கள் மட்டும் நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாவதாகக் கூறுகின்றனர்...இவர்கள் ஏன் அவர்களைப் போல.. இல்ல அதைவிட அதிகமாக சிந்திக்க்க செயலாற்ற முனையவில்லை...???! கிடைத்ததை வைத்து அனுபவித்துக் கொண்டு மூளைக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்க நினைக்கும் ஒருவகை நோய்த்தாக்கத்துக்கு உள்ளானதன் விளைவே இவர்கள் சோம்பேறிகள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்தக் காரணம்...! அது இவர்களின் தனிப்பட்ட உள உடற்குறைபாடுகளே அன்றி...வேறில்லை...! வேண்டும் என்றால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் இவர்களின் குறைபாடுகளுக்கு தீர்வு எட்ட இப்பவே செயற்பட முனைவோம்...காரணம்...இது இவர்களை மட்டுமல்ல எதிர்காலத்தில் சிந்திக்க விரும்புபவனையும் தவறாக வழிநடத்திச் சோம்பேறி வியாதிக்குள் தள்ளவே வழி செய்யும்...!

துலா மிதத்தல் போன்ற அடிப்படை விஞ்ஞானப் பொறிகளால் உடற்பயிற்சி பெற்றதாகவும் இப்ப அந்த அடிப்படை விஞ்ஞான நெம்புப் பொறிமுறை நவீனத்துவம் பெற்றதால் அந்த பயிற்சியைப் பெற முடியவில்லை என்று ஒரு வாதம் வந்தது.... முன்னர் துலா மிதித்துச் செய்த வேலையை இப்ப நவீன விஞ்ஞானம் புகுத்தப்பட்ட பொறி கொண்டு செய்யும் போது சக்தி, வள மற்றும் நேர விரயம் தவிர்க்கப்பட்டு அது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஊக்கிவிக்கப்படுகிறது..! அதுமட்டுமன்றி தேவைகள் பெருகிவிட்ட உலகில் சக்தியையும் வளத்தையும் நேரத்தையும் மீதப்படுத்துவது இன்றியமையாததாகிறது...! அதற்காக பொறியைப் பாவித்துவிட்டு மூளையை ஓய்வுக்கு விட்டுவிட்டு உறங்கச் சொல்லி நவீன விஞ்ஞானம் சொல்லவில்லை...! அப்படிச் செய்வது உடல் உள நலத்துக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் கூடாது என்று சொல்லித்தான் ஜிம் மற்றும் பலவகை விளையாட்டுக்கள் என்று உடற்பயிற்சி முறைகளையும் சாதனங்களையும் இந்தச் சோம்பேறி மனிதர்களின் பரிதாப நிலைகண்டு சிந்திக்கும் மனிதன் படைக்கின்றான்...! அதைக்கூட செய்யத் தவறும் இந்த சுய சிந்தனையையே சுமையாக எண்ணும் மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் தானா...??????!

நவீன விஞ்ஞானத்தால்...அதாவது ஒரு பகுதி மனிதனின் சிந்தனையால் பிறந்த விஞ்ஞானத்தால்... பல தீமைகள் என்று சொல்லி தமது சிந்தனைகளைக் குறுக்கி சோம்பேறிகள் ஆகும் மனிதப் பிரிவினரே...அந்தத் தீமைகளுக்கு என்ன பரிகாரம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவும் ஆராயவும் கண்டுபிடிக்கவும் அறிமுகப்படுத்தவும் முனையவில்லை..???! அதைச் செய்ய வேண்டாம் என்று என்ன நவீன விஞ்ஞானம் தடையா போடுகிறது...????! அப்படிப் தடைகள் போடப்படுவதாக எண்ணினால் அதை ஏன் உடைக்க முயலாமல்..சோம்பேறியாக்குகிறத

Link to comment
Share on other sites

அம்மு சமூகமளிக்க தவறியதால், மழலை வசி அண்ணாவின் அணியில் இடம் பெறுகிறார்,

Link to comment
Share on other sites

அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

இப் பட்டிமன்றத்தில் நானும் எனது கருத்தினை முன்வைத்திட ஆவல் கொண்டேன். இங்கே கருத்துக்களை முன்வைத்த அனத்து கள உறவுகளும் திறம்பட தமது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

எனது கருத்தினை அணித்தலைவர் வசம்புவின் அனுமதியோடு முன்வைக்கின்றேன்.

அதாவது திரு சியாம் அவர்களும் அவரின் அணியினரும் முன்வைத்த விடயங்கள் பல நவீன விஞ்ஞானமும் தொளில்னுட்பமும் மனிதனை சீரளிக்கின்றது என்கின்றார்கள். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனைப்போலவே நவீனவிஞ்ஞானமும் தொளில்நுட்பமும் எதனை செய்தாலும் எதிர்த்தரப்பினருக்கு திருப்தி ஏற்படுவது இல்லை. நண்பர் வியாசன் ஒரு கருத்தினை முன் வைக்கின்றார். அதாவது நவீன விஞ்ஞானத்தின் தாக்கத்தினால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதாம். அது என்னமோ வேதனையான விடையம்தான். அனால் அந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதென்பதை கண்டுபிடிக்கப் பயன்பட்டதுவும் ஒரு நவீன தொளில்நுட்ப கருவியே என்பதனை நண்பரைப்போன்ற பலர் அறிந்துகொள்ளல் வேண்டும். முன்னய காலங்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு அது என்ன நோயென்றே அறியாமல் இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல பல கடினமான சத்திர சிகிச்சைகளினைக்கூட நுணுக்கமாக நவீன விஞ்ஞானதொளில்நுட்ப சாதனக்களின் துணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. எயிட்ஸ் என்னும் நோய் நவீனவிஞ்ஞானதொளில்னுட்பத்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும் மதுரன் நீங்கள் அணியில் இல்லை. அடுத்ததாக நீங்கள் அணியில் இருந்தாலும் உங்கள் அணியில் ஒருவரின் வாதத்துக்கு பிறகு நீங்கள் உங்கள் வாதங்களை வைக்கமுடியாது. ஆதலால் உங்களுடைய வாதம் அகற்றப்படவேண்டும் நீங்கள் அகற்றிவிடுங்கள் அல்லது தூயா மட்டுறுத்துனர்கள் மூலம் இந்த வாதத்தை அகற்றி பட்டிமன்றத்தின் விதிமுறைகளை காப்பாற்றுங்கள்

Link to comment
Share on other sites

பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

ஏற்கெனவே கூறியது கடைப்பிடிக்கப்படும்.. ஆகவே, தயவுசெய்து அணிகளிலுள்ளவர்கள் எவரும் உணர்ச்சிவசப்படாதீர்கள் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்!

நடுக்கடல் தாண்டிவிட்டோம்.. கள உறவுகளின் (இளைஞர்களின்) ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.. மேலும் பல பட்டிமன்றங்களுக்கு இது முன்னோடியாக அமையும் என நினைக்கிறேன்.. ஆகவே, எல்லோரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து பட்டிமன்றத்துக்குள் செல்வோம்!!

Link to comment
Share on other sites

பிரபஞ்சத்தின் தோற்றத்தின்போதே விஞ்ஞானத்தின் தோற்றமும் ஆரம்பமாகிவிட்டது.. மனிதனானவன் தனது பகுத்தறிவினாலும் நுண்ணறிவினாலும் தனது வசதிகளுக்கேற்ப விஞ்ஞானத்தின் மூலம் விளைச்சலைத் தருகிறான்.

அதுமட்டுமா? மனிதனே விஞ்ஞானமென்று சொல்கிறதாம் உயிரியல் விஞ்ஞானம்.. என்றெல்லாம் தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைக்கிறார் குருவிகள். (குருவிகள் அவர்கள் என்று கூறமுடியாததால் குருவிகள் என்றே கூறுகிறேன்.. :P )

விஞ்ஞானமானது நன்மைகளுடன் சில பாதகங்களைக் கூறினாலும், அவற்றுக்கும் விடையைச் சொல்லுகிறது.. ஆனால் நீங்கள்தான் தேடிக் கண்டறிந்து பலனடையாமல் சோம்பேறிகளாக இருந்துகொண்டு, விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது என, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள் என்பதுபோல, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியைக் கேட்கிறார்.

அதுமட்டுமா?

மனிதன் ஏதோ வகையில் இயங்கிக்கொண்டு இருக்கிறான்.. அதுதான் அடிப்படை என்கிறார்.

அதுதானே.. ஆகக் குறைந்தது அவனது இதயமாவது இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது? அதற்கு சோம்பல் வந்தால் மனிதனின் கதி என்னாவது?!

அப்படியானால் சோம்பல் என்றால் என்ன? சோம்பல் மனிதனின் உறுப்புகளில் இல்லை.. அவனது மனதில் இருக்கிறது.. அவனது சிந்தனையில் இருக்கிறது.. ஆக, இவர்கள் சோம்பல் என்ற வியாதிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.. இதை இப்படியே விட்டுவிட முடியாது.. எதிர்கால சந்ததியையும் பாதித்துவிடும்.. அதனால் நவீன விஞ்ஞானத்தின்மூலம் இவர்களின் வியாதிக்கும் தீர்வு காண தற்போதே விளைவோம் என அழைப்பும்விடுக்கிறார்..

பார்த்தீர்களா குருவிகளுக்கு எவ்வளவு நல்ல மனது? எவ்வளவு பரந்த சிந்தனை? எதிர் அணியிலுள்ளவர்களை காப்பாற்றும் விசாலமான பார்வை!! இதைத்தான் மனிதாபிமானம் என்பார்களோ.. குருவிகளபிமானம்?! :D

ஆக, மொத்தத்தில் விஞ்ஞானமானது மனிதனை சோம்பேறியாக்கவில்லை என அருமையாக எடுத்துக் கூறியதோடு.. சோம்பல் என்பது வியாதி எனவும் கூறியுள்ளார்.. ஆனால் என்ன? எதிரணியினரின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில் காட்டிய அக்கறையை.. விஞ்ஞானமானது எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதிலும் கொஞ்சம் காட்டியிருந்தால்... மேலும் சில புதிய கருத்துக்கள் பிறந்திருக்கும்.. பரவாயில்லை.. இன்னும் கருத்துக்களை முன்வைக்க உறவுகள் இருக்கிறார்கள். ஆக, அதுவரை காத்திருப்போம்.

'விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, நிலவன், இளைஞன், மதன் ஆகியோரில் ஒருவர் அடுத்ததாக தனது கருத்துகளை வைப்பார் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

Link to comment
Share on other sites

முடிவை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், புதிதாக பார்வயாளர்களுக்கான வாக்கு பட்டியலை சேர்த்துள்ளோம்.அனைவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும். நன்றி.

இரு அணியிலும் 9 பேர் சரியாக இருப்பதால் இனிமேல் யாரையும் சேர்க்கவோ, விலக்கவோ முடியாது.

Link to comment
Share on other sites

நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதரை உற்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்னும் கருப்பொருளை/விவாதப்பொருளைத் தந்து "யாழ் கருத்துக்களத் தோழர்களை"யெல்லாம் ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு கருத்தாடலை ஒழுங்கமைத்த அன்புத் தோழி தூயாவிற்கு முதலில் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வணக்கங்களும். பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராக இருந்து இடையிடையே அனைவரது கருத்துக்களையும் தொகுத்து வழங்கி கருத்தாடலர்களையும் பட்டிமன்றத்தையும் சிறப்பிக்கும் சோழியான் அண்ணாவுக்கும், இன்னொரு நடுவராக அனைத்துக் கருத்துக்களையும் "ஆர்வத்தோடு" பார்த்துக்கொண்டிருக்கும் சண்முகி அக்காவிற்கும் எனது வணக்கங்கள். பட்டிமன்றத்தில் எதிரணியினர் உணர்ச்சிவசப்பட்டு குழப்பம் செய்யாமலும், பார்வையாளர்கள் அழுகிய தக்காளி, முட்டை, கல்லு போன்றவற்றை அவர்கள் மீது வீசாமலும் களத்தின் பின்னணியிலிருந்து கண்காணிக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் குறிப்பாக மோகன் அண்ணா, இராவணன் அண்ணா ஆகியோர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.இறுதியாக தம் சோம்பேறித்தனங்களையெல்லாம் மறைப்பதற்காகவும், தம்மிடம் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதரை உட்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சரியான வாதங்கள் இல்லாத காரணத்தாலும் எம்மணியினரை சோம்பேறிகள் என்று கூறிக் கூறியே அரைவாசி பக்கங்களை வீணடித்துவிட்டு சோம்பேறிகளாய் ஓய்ந்துபோயிருக்கும் எதிரணியினருக்கும் - உற்சாகமாகவும் தம் வாதத்தில் உறுதியோடும் கருத்தெடுத்துரைத்த என் அணித்தோழர்களுக்கும் எம்மையெல்லாம் வழிநடத்திக்கொண்டிருக்கும் எம்மணித் தலைவர் சியாம் அவர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம் கூறி என் தரப்பு வாதங்களை முன்வைக்கிறேன்.

1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:

ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். அதேவேளையில் உடற்செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். போராட்டங்களின் மத்தியில் பெறப்படுகின்ற ஒன்றே எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உற்சாகம் பிறக்கும். அதைவிடுத்து கணினிக்கு முன்னால் 24 மணிநேரம் அமர்ந்திருந்து, கணினித்திரையை உற்று நோக்குவதால் கண்கள் சோர்வடைகின்றன - கண்கள் சோர்வடைவதால் மூளை சோர்வடைகிறது. கணினித் திரையின் ஒளிக்கதிர்கள் பார்வைச் சக்தியையும் மெதுமெதுவாகக் குறைக்கிறது. இருக்கையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதனால் முதுகுநோ போன்றவற்றின் தாக்கத்திற்கு மனிதஉடல் ஆளாகின்றது.

2. கணினி விளையாட்டுக்கள்:

ஓடியாடி - துள்ளிக்குதித்து - சூரியஒளிபட - மெல்லிய காற்று வருடிச் செல்ல - புழுதிமண் உடல் தழுவ விளையாடிய காலம் போய் கணினித் திரைக்கு முன், அறையை இருட்டாக்கி மணிக்கணக்காக அதில் ஈர்க்கப்பட்டு குந்தியிருக்கும் நம் இளைஞர்களின் உடலில் தேவையான அசைவுகள் எப்படி ஏற்படும்? கண்கெடும் - சோர்வுண்டாகும் - உற்சாகம் எப்படிப் பிறக்கும்?

3. இணைய அரட்டை:

தூரத்திலிருப்பவர்களை சந்தித்து கதைத்து மகிழ இணையம் வழிவகுக்கிற போதிலும், இணைய அரட்டையின் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை சந்திப்பதை பலர் குறைத்துக் கொள்கிறார்கள்.இணைய அரட்டை பலரை போதைக்குள்ளாக்கி அடிமைப்படுத்தியுள்ளது. வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து வீதியோரமாய் நடந்து, ஊர்சுற்றி திரிந்தபோது அதில் உளம் களைகட்டும் - உற்சாகம் தன்னில் பிறக்கும். வீதியில் இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது? இன்று அப்படியா? கணினித் திரைக்கு முன்னால் இருந்து பொழுது இருள்வதும தெரியாமல் - என்ன செய்கிறோம் என்றும் தெரியாமல் - இருந்த இடத்தைவிட்டு அசையாமல் - உணவுகூட உட்கொள்ளாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா? இப்படி இருந்தால் உடற்பலம் என்னவாகும்? உடல் ஒழுங்காக இயங்கினால் தானே சோம்பேறித்தனம் அற்றிருக்கலாம்.

4. இணையக் காதல்:

காதலிக்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இணைய அரட்டையில் தம் காதலர் பற்றி எதுவுமே அறியாமல் மணிக்கணக்காய் காதலைப் பரிமாறுகிறார்களாம். காதலென்றால் என்னவென்றும் தெரியாது - வாழ்க்கையென்றால் என்னவென்றும் தெரியாது - தான் அரட்டையில் சந்தித்த அந்த "X" எப்படிப்பட்டவர் என்றும் அறியாது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இணையம் ஊடாக கோப்புக்களை(Files) பரிமாற முடியும், கருத்துக்களைப் பரிமாற முடியும், செய்திகளை பரிமாறமுடியும் ஆனால் மனித உணர்வுகளை , அதன் தன்மைகளையும் எப்படிப் பரிமாறமுடியும்? Smilies போடுவதாலும், Webcam காட்டுவதாலும், Micofon இல் உரையாடுவதாலும் எந்த உணர்வுகளும் உண்மையாகப் போய்ச் சேர்வதில்லை. Digital தொழில்நுட்பம் என்பதே "மாற்றியமைக்கும், திருத்தியமைக்கும்" தன்மை உடையது. அதாவது Webcam மூலமாக உங்கள் முகத்தைக் காட்டும் போது மெருகூட்டி, அழகூட்டி காண்பிக்கலாம். Microfon மூலம் உரையாடும் போது ஆண்குரல் பெண்குரலாகவும், பெண்குரலாகவும் மாற்றப்பட்டு உரையாடலாம். படங்களைக்கூட Grafic மென்பொருள்கொண்டு உருவ அமைப்புக்களை மாற்றியமைக்கலாம். இப்படி உணர்வுகளைக் கூட உண்மையாக வெளிப்படுத்த அல்லது பரிமாற முடியாது போது உற்சாகத்தை இந்த இணைக் காதல் எப்படிப் பிறப்பிக்கும்?

காதல் ஒவ்வொரு மனதருக்குள்ளும் வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கிறதென்கிறார்கள். காதலித்தால் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் உள்ளத்தில் பாயுமென்கிறார்கள் - அதாவது உற்சாகத்தைத் தான் இப்படி சொல்கிறார்கள். வாழ்வியக்கத்தின் சக்தியாகவே அதனைப் பார்க்கிறார்கள். அந்த சக்தி உண்மையாக வெளிப்படும் போதுதானே உளத்தில் உற்சாகம் என்கிற மின்சாரம் பாயும்? இப்படி இணையஊடகம் மூலமாக காதலிக்கிறோம் என்பவர்களையும், நேரில் பழகி - விரும்பிய இடங்களிற்கெல்லாம் சென்று வாழ்வு பற்றிய கனவுகளை, கருத்துக்களைப் பரிமாறி - மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

5. கணினியில் சிறு வேலைகள்:

உடல் உழைப்பின் மூலமும், மூளை உழைப்பின் மூலமும் செய்யக்கூடிய சிறிய சிறிய வேலைகளைக்கூட இன்று கணினி மூலம் செய்கிறார்கள். மனித உழைப்பின் அநாவசியமாக செலவழிக்கிற வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் மனித உழைப்பு பயன்படுத்தக்கூடிய சிறு சிறு வேலைகளைக்கூட இன்று கணினியைப் பயன்படுத்தி செய்கிறார்கள். உழவு செய்த எம் பாட்டனிடம் உற்சாகமிருந்தது - பாடியாடி வேலைசெய்த அவர்கள் மனதில் தெளிவும் தெம்பும் இருந்தது. இன்று உங்களிடம் என்ன இருக்கிறது? தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் உங்களை சோம்பேறிகளாக்குவதற்காகத்த

Link to comment
Share on other sites

1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:

பொருட்களைமட்டுமா? எதையெதையோ எல்லாம் இருந்த இடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுகிறார்கள்..

2. கணினி விளையாட்டுக்கள்:

தாச்சி (கிளித்தட்டு), கிட்டிபுள்ளு என்று விளையாடிய காலம்போய்.. தாச்சியில் உச்சும்போது தேயும் வெறுங்கால் அடைந்த உறுதிபோய்.. பலமடைந்த முள்ளந்தண்டுபோய்... கிட்டிபுள்ளில் மரத்தான் அடிக்கும்போது பாய்ந்து வரும் 'புள்'ளைப் பிடிக்கையில் உரமேறும் கரங்கள் போய்.. விஞ்ஞான விளையாட்டுகளால் எல்லா அவயங்களுமே சோர்வடைகின்றன..

3. இணைய அரட்டை:

பசுமையான சூழலில் நண்பர்களுடன் கும்மாளமடித்ததை விடுத்து... பெண்களின் பின்னால் ஆண்களும் .. ஆண்களை அலைய வைத்து பெண்களும் கண்ணாமூச்சி ஆடி அடையும் உற்சாகங்களை துறந்து.. வெறும் கட்டிடக்காட்டுக்குள் ஒரு கணனித்திரையின் முன்னே இருண்டதும் தெரியாமல் விடிஞ்சதும் தெரியாமல்.. தனக்குள் சிரித்து அழுதுகொண்டிருக்கும் சித்தப்பிரமை பிடித்தவர்களாக சோர்வடையும் மக்களை இணைய விஞ்ஞானம் உருவாக்குகிறது..

4. இணையக் காதல்:

உணர்வுகளைக்கூட உண்மையாக வெளிக்காட்ட உதவாத இணையக்காதலால் எப்படி உற்சாகப்படுத்த முடியும்?

சிறுவேலைகளைக்கூட கணனி செய்கிறது.. படியேறிச் செல்ல வேண்டிய மனிதனை படிகள் காவிச் செல்கின்றன.. பசி ஏற்படவும் மருந்து.. சமிபாடு அடைவதற்கும் மருந்து..

இப்படி எல்லாம் கூறி இறுதியாகப் போட்டாரே ஒரு போடு..

பிள்ளை பிறப்பதற்கு முதல் செய்யவேண்டிய உடல்(காம)உழைப்பை செய்யிறதை தடுத்து மனிதரை மேலும் சோம்பேறியாக்குறது நவீன விஞ்ஞானம்.

ஆக, விஞ்ஞானம் மனிதனை எதற்குமே உதவாமல் செய்துவிட்டது.. பெண்ணாவது குழந்தையை சுமக்கிறாள்.. ஆணின்நிலை அந்தோ பரிதாபம்.. எதற்குமே வேண்டாத பொருளாகிவிட்டான்..

என்ன கொடுமை இது?

வாழ்த்துக்கள் இளைஞன்.. நிறைவான ஒரு வாதத்தை தந்துள்ளீர்கள்!!

Link to comment
Share on other sites

அடுத்து.. இரு அணியிலிருந்தும் முறையே அறுவர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.. உற்சாகப்படுத்துகிறது எனும் அணியில் விக்டோர்ப், மழலை, மதுரன் ஆகியோர் கருத்துகளை முன்வைக்க உள்ளனர்..

கணணி விஞ்ஞானத்துடன் நின்றுவிடாதீர்கள்.. நீங்கள் .. பிறந்து 'ஆனா' என எழுத ஆரம்பிக்கும் போதிருந்தே விஞ்ஞானம் உங்களுடன்தான் சேர்ந்திருக்கிறது.. ஆகவே.. உற்சாகமாக கருத்துகளைக் கொண்டுவந்து கொட்டுங்கள்.. :P விக்டோர்ப் நிலை கேள்விக்குறி எனில் அடுத்து மழலை அல்லது மதுரன் கருத்துகளை முன்வையுங்கள்.. தொடர்ந்து 'சோம்பேறியாக்குகிறது' எனும் அணியில் நிலவனும் மதனும் கருத்துகளை முன்வைப்பார்கள்.. மதன் கருத்துகளை முன்வைப்பதில் சந்தேகமில்லை.. நிலவன் பற்றி அறியத் தாருங்கள்..

அணித்தலைவர்கள் புதிதாக கருத்துகளை தேடாதீர்கள்.. நீங்கள் ஒரு தொகுப்புரையையும், மாற்று அணியினருக்கான பதில்களையுமே முன்வைக்க முடியும்.. தங்களின் புதிய கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உந்தப்பட்டு இடைவிடாது உற்சாகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நடுவர் சோழியன் அவர்களே..நவீன விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வேகத்தையும் உற்சாகத்தையும் கண்டு வியந்து வாய்தனைக் கையால் மூடியபடியே அதிர்ச்சியின் விளிம்பிற்கே வந்து நிற்கும் சண்முகி அக்கா அவர்களே..விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தின் வேகத்தையும் ஈடு கொடுக்க முடியாது சோம்பேறியாகி சோம்பி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சியாம் அவர்களே.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் புரிந்து கொள்ள சோம்பி தேம்பிக் கொண்டு இருக்கும் சோம்பேறிகளாக தங்களைத் தாங்களே உருவாக்கியவர்களே.. விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் வம்பாக நினைப்பவர்களின் வீம்பை தகர்த்தெறியவெனவே உற்சாகமாக வீற்றிருக்கும் என் அணித்தலைவர் வசம்பு அவர்களே.. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தந்த வேகத்தால் வேகமாகவே கருத்துக்களை உற்சாகமாக தந்துகொண்டிருக்கும் சக தோழர்களே வணக்கம்...

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சான்றுகளை நாங்கள் எமது அன்றாட வாழ்க்கையில் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். அதாவது இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்...

மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந

Link to comment
Share on other sites

சோறூட்ட அம்மா காட்டிய நிலாவில்.. விஞ்ஞானமின்றேல் மனிதன் காலடி பதித்திருக்க முடியுமா? மனிதனின் உற்சாக வளர்ச்சிக்கு சான்றே விஞ்ஞான வளர்ச்சிதானே.. என்று ஆரம்பிக்கிறார் தனது வாதத்தை மழலை அவர்கள்.

ஆதிகாலத்திலே குழுக்களாக விலங்குகளாக அலைந்த மனிதனை உலகின் சிறந்த உயிரினமாக உயர்த்தியிருப்பதே விஞ்ஞானம்தானே? நிதமும் புதுப்புது விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகள் உருவாகிறதென்றால்.. மனிதன் உற்சாகமாக உள்ளான் என்றுதானே அர்த்தம்?

இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:

"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."

அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....

இந்த விசயம் மழலைகளுக்கெல்லாம் புரியாது.. இளைஞன்(ர்)களுக்குதான் புரியும்.. முன்னும் பின்னும் அலையோ அலையென அலைந்து திரிந்து.. ஒரு புன்முறுவல் கிடைத்தால் போதுமே.. அலுப்பெல்லாம் பறந்துபோயிடும்.. :P

நன்றி மழலை அவர்களே!! அடுத்து, நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியிலிருந்து கருத்துகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.

Link to comment
Share on other sites

பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து நடாத்தி கொண்டிருக்கும் தூயாவிற்கும் நடுவர்களாக பணியாற்றும் சோழியன் அண்ணா, சண்முகி அக்கா ஆகியாருக்கும் பட்டிமன்ற நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்.

எனக்கு பட்டிமன்றத்தில் பேசி பழக்கமில்லை. தூயா இதை ஆரம்பித்தவுடன் ஒரு ஆர்வகோளாறில் இணைந்துவிட்டேன். ஆனால் பின்பு மற்றவர்கள் எழுதிய கருத்துக்களை படித்த பின்பு இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கின்றார்களே நான் எப்படி எழுத போகின்றேனோ என்று தயங்கி நின்றேன். அது தவிர தேர்தல் உள்ளிட்ட சில வேலைகளை காரணாமாக எனது வாதத்தை வைப்பதில் தாமதமேற்பட்டது. அப்போது சோழியன் அண்ணா என்னை உற்சாகப்படுத்தி இயன்றவரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவ்ருடைய அழைப்பையும் சியாம், இளைஞன், மழலை உட்பட மற்றய நண்பர்களின் அழைப்பையும் ஏற்று இதுவரை என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பை கேட்டுக்கொண்டு எனது வாதத்தை தொடங்குகின்றேன்.

முதலில் பட்டிமன்ற தலைப்பை பற்றி ஒரு விளக்கம். அது "நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா" என்பதே. இந்த தலைப்பில் எதிரணியில் பேசும் பலரும் நவீன விஞ்ஞானதின் பயன்களை கூறுகின்றார்களே அன்றி அது எப்படி மனிதனை உற்சாகப்படுக்கின்றது என்பதை கூறாமல் தவிர்க்கின்றார்கள். பயன்களை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறி நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் மனிதனுக்கு நன்மையா தீமையா என்று தலைப்பை திசைதிருப்ப பார்க்கின்றார்கள். இதனை நடுவர் அவர்கள் கவனித்து அவர்கள் குறிப்பிட்ட பயன்களை தவிர்த்து உற்சாகப்படுத்துகின்றது என்று கூறிய (கூறி இருந்தால்) கருத்துக்களை மட்டுமே கவனித்தில் எடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

அடுத்து இந்த நவீன விஞ்ஞானம் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகின்றது என்பது பற்றி பேசுவோம். இந்த நவீன விஞ்ஞான வாரிசுகளில் ஒன்றான தொலைக்காட்சி மனிதனை எப்படி எப்படியெல்லாம் மனிதனை சோம்பேறியாக்குகின்றது. இந்த தொலைக்காட்சியின் சின்னத்திரை தொடர்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மனிதர்களை அவற்றில் முன்னால் கட்டி போடுவதை கண் கூடாக பார்த்திருப்பீர்கள். அவை எப்படி மனிதனை சோம்பேறியாக்குகின்றது என்பதை பாருங்கள் .....

> தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்ப்பதால் கண்கள், உடல் என்பன சோர்வடைவதுடன் அவை மூளையை களைப்படைய செய்து சோம்பலை உருவாக்குகின்றது. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனை நீங்களே அனுபவித்து உணர்ந்திருப்பீர்கள். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மவரை பெரிதளவு கட்டி போடும் சின்னத்திரை தொடர்களை எடுத்து பாருங்கள், அவற்றை பார்த்து கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, ஏமாற்றம், கவலை போன்ற உணர்வுகள் மனதில் உருவாகி மனிதனை சோர்வடைய செய்கின்றதே தவிர எவ்விதத்திலும் உற்சாகப்படுத்துவதில்லை, மனமும் உடலும் சோர்வடையும் மனிதன் சோம்பேறியாகாமல் என்ன செய்வான்?

> இந்த நிகழ்சிகளை பார்பதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு முன் முடங்கி கிடப்பதால் அயலவர், நண்பர்கள் உள்ளிட்ட ஏனைய மனிதர்களுடன் பேசும் நேரம் குறைகின்றது, அதனால் மனிதர்களுடனான புரிந்துணர்வு, நட்பு, கருத்து பகிர்வு என்பது குறைகின்றது. இதனால் பார்ப்பவர்கள் எல்லாம் புதியவர்களாகவும் விரோதிகளாவும் தோற்றமளித்து தன்னம்பிக்கை குறைகின்றது, அது குறைந்தால் மனிதன் சோம்பேறியாவான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

இது தவிர இந்த இடியற் பாக்ஸ் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சியுடன் முடங்குவதால் வெளியே சென்று உடல்பயிற்சி செய்வது, விளையாட செல்வது போன்ற உற்சாகமூட்டும் செயல்பாடுகள் குறைந்து மனிதன் சோம்பேறியாகின்றான் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

தொடர்ந்து வருவது நவீன விஞ்ஞானதின் குட்டி பிசாசான கணணியும் இணையமும். இதை குறித்து பலரும் பேசியிருக்கின்றார்கள் என்பதால் சுருக்கமாக இரண்டும் சம்பவங்களை மட்டும் சொல்கின்றேன்.

> பல்கலைகழகங்களிலும் பாடசாலைகளிலும் ஏதாவது ஒரு தலைப்பை தந்து அது குறித்து அலசி ஒரு கட்டுரையை எழுத சொல்வார்கள். அதன் நோக்கம் என்ன விடயமாக இருந்தாலும் அது குறித்து தெரிந்தவர்களிடம் பேசி புத்தகங்களில் அலசி ஆராய்ந்து கட்டுரையை எழுத கூடிய தன்மையை உருவாக்கி அதன்மூலம் உலகம் குறித்து ஒரு விசாலமான பார்வையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கி மனிதனை உற்சாகப்படுத்துவதுதான். ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? கட்டுரை எழுத சொல்லி கேட்டவுடன் இணையத்தில் சென்று கூகிள் போன்ற ஒரு தேடல் பொறியில் அதை தேடியவுடன் நேரடியாக பதில் கிடைக்கின்றது அந்த பிறர் உழைப்புகளை அனைத்தைய்யும் கலந்து கட்டுரையை எழுதி புள்ளிகளும் பெற்று விடுகின்றோம். இதில் அந்த கட்டுரையை எழுத சொன்ன நோக்கம் அனைத்துமே இல்லாமபோய் பிறர் உழைப்பை உபயோகிக்கும் சோம்பேறிதனத்தையே நவீன விஞ்ஞான இணையம் மூலம் பெறுகின்றோம்.

> இப்போது நவீன விஞ்ஞான வசதிகளுடன் கூடிய ஒரு மென்பொருள் தொழிற்சாலையில் கணணிக்கு முன்னால் இருந்து செய்யும் வேலைக்கு ஒருவர் போகின்றார். அவர் வீட்டுக்கு வரும்போதே களைப்பாக (டயர்டாக இருக்கு, டெட் லைன் முடியபோகுது, தலை வலிக்குது இன்ன பிற புலம்பல்கள்) வருகின்றார். இப்படி அவர் களைப்படைந்து சோம்பேறி தனத்துடன் வர காரணமேன்ன சிந்தித்து பாருங்கள். தாயகத்தில் வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் காலையிலிருந்து மாலைவரை வேலை செய்துவிட்டு வருபவர்கள் உடலை வருத்தி வேலை செய்துவிட்டு வந்தாலும் உற்சாகமாக இருக்கின்றார்கள். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும் நவீன விஞ்ஞானம் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகின்றது என்பது.

இனி சோம்பேறியாக்குகின்றது என்பதற்கான இறுதி கருத்தை பார்ப்போம். இந்த நவீன விஞ்ஞான தொழிற்நுட்பம் காரணமாக சூழல் மாசடைவதும் பூமியின் வெப்பம் அதிகரிப்பதும் ஓசோன் ஓட்டை விழுவது உங்களுக்கு தெரிந்தகதை, இது தீமைகளை தானே இவற்றால் மனிதன் எப்படி சோம்பேறியாகின்றான் என்று கேட்கிறீர்களா அதுதான் உங்களுக்கு தெரியாத கதை, இந்த சூழல் மாசாக்கம் வளிமண்டல மாசாக்கம் காரணமாக வளியில் ஒட்சிசன் அளவு குறைகின்றது. சுற்று சூழலில் ஒட்சிசன் அழுத்தம் குறைவதனால் நாம் உள்ளேடுக்கும் ஒட்சிசன் அளவும் இரத்ததில் இணையும் மற்றும் மூளைக்கு செல்லும் ஒட்சிசனும் குறைகின்றது, மூளைக்கு செல்லும் ஒட்சிசன் குறைவதால் மூளை சோர்வடைந்து சோம்பல் உருவாகி மனிதன் சோம்பேறியாகின்றான்.

இதனுடன் எனது கருத்துக்கள் நிறைவு பெறுகின்றது இனி மழலையின் கருத்துகளுக்கு பதில் கருத்து எழுதலாம் என நினைக்கின்றேன்.

மிகுதியை தொடர்ந்து எழுத முடியாமல் வெளியே செல்லவேண்டியிருக்கின்றது. ஏற்கனவே காலதாமதமாகிவிட்டதால் இவ்வளவையும் இணைத்துள்ளேன். மழலையின் வாதத்திற்குரிய பதிலை இன்றிரவு எழுதி எனது வாதத்தை நிறைவு செய்வேன் கொஞ்சம் காத்திருங்கள் நன்றி

Link to comment
Share on other sites

காத்திருக்கிறோம்..

Link to comment
Share on other sites

காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.

இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் மழலை நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது மனிதன் உற்சாகமாக இருந்ததால் தான் விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாயிற்று என்று கூறுகின்றாறே தவிர நவீன விஞ்ஞானம் எப்படி மனிதனை உற்சாகப்படுகின்றது என்பதை கூறவில்லை, மனிதன் உற்சாகமாக இருந்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அந்த உற்சாகத்துக்கு வேறு ஏதும் காரணம் இருந்திருக்கலாமல்லவா? ஆக நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது என்பதை அது எப்படி சாத்தியம் என்று கூறாதாமையின்னால் இந்த கருத்தை கவனத்தில் எழுக்க தேவையில்லை,

அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்

இதில் மனிதர்கள் அடிப்படை தேவைகளை சந்திக்கவே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள் என்றால் என்ன அர்த்தம், அப்போது உற்சாகமாக செயல்ப்பட்டார்கள் என்று தன்னையும் அறியாமல் கூறிவிட்டார் மழலை அவருக்கு எனது நன்றிகள், அடுத்து பட்டிமன்றம் வைப்பதற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தேவையில்லை இவற்றின் துணையின்றி தானே போர் சூழலில் யாழில் பட்டிமன்றங்கள் நடந்தன? ஆக இந்த கருத்த்தையும் கவனத்தில் எடுக்க தேவையில்லை,

மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந
Link to comment
Share on other sites

அது தவிர தேர்தல் உள்ளிட்ட சில வேலைகளை காரணாமாக எனது வாதத்தை வைப்பதில் தாமதமேற்பட்டது. அப்போது சோழியன் அண்ணா என்னை உற்சாகப்படுத்தி இயன்றவரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவ்ருடைய அழைப்பையும் சியாம், இளைஞன், மழலை உட்பட மற்றய நண்பர்களின் அழைப்பையும் ஏற்று இதுவரை என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பை கேட்டுக்கொண்டு எனது வாதத்தை தொடங்குகின்றேன்.

:P உற்சாகமாக வேறு விடயங்களையும் கவனித்துக்கொண்டே தனது வாதத்தை முன்வைத்திருக்கிறார் மதன் அவர்கள். வேலைப்பளுக்களிடையேயும் பட்டிமன்றம் தொடர ஒத்துழைத்ததற்கு நன்றி கூறிக்கொண்டு அவரது கருத்துகளைப் பார்ப்போம்.

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறதா? உற்சாகப்படுத்துகிறதா? என பட்டிமன்றத்தை நடாத்த வெளிக்கிட்டால்.. எதிரணிகளே! நீங்கள் என்ன நன்மை தீமைகளைப்பற்றி ஆராய்ந்து தலைப்பைத் திசை திருப்புகிறீர்கள்? என்று அதிரடியாகக் கேட்கிறார் மதன் அவர்கள்.

ஒருவன் மரத்தடியில் களைப்படைந்து தூங்குகிறானா அல்லது களிப்படைந்து தூங்குகிறானா எனப் பார்க்கவிட்டால்.. அவன் நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களே.. இது தேவையற்றது என்று சொல்கிறார் மதன் அவர்கள்.

'சின்னத்திரை' மனிதர்களைக் கட்டிப்போடுகிறது.. எப்படி? அதனால் கட்டுண்டவர்களால் சமையலில்லை.. சாப்பாடில்லை.. ஆகையால் வாயும் வயிறும் கட்டப்பட்ட நிலை.. இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ.. மதனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது..!! :lol:

இந்த நிகழ்சிகளை பார்பதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு முன் முடங்கி கிடப்பதால் அயலவர், நண்பர்கள் உள்ளிட்ட ஏனைய மனிதர்களுடன் பேசும் நேரம் குறைகின்றது, அதனால் மனிதர்களுடனான புரிந்துணர்வு, நட்பு, கருத்து பகிர்வு என்பது குறைகின்றது. இதனால் பார்ப்பவர்கள் எல்லாம் புதியவர்களாகவும் விரோதிகளாவும் தோற்றமளித்து தன்னம்பிக்கை குறைகின்றது, அது குறைந்தால் மனிதன் சோம்பேறியாவான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

இது மதனின் அனுபவம்.. எனது அனுபவம் என்னவென்றால்.. இப்போதெல்லாம் நகை, புடவை கதைகளெல்லாம் ஓடி விலகி.. சித்தி என்ன செய்யப் போகிறா.. செல்வியை ஆண்டவர் அப்படி ஏமாத்தியிருக்கவேண்டாம்.. போன்ற கதைகளே பெருகி வருவதுபோலத் தோன்றுகிறது. :P

அடுத்து.. பாடசாலையிலே பல்கலைக் கழகத்திலோ ஒரு விடயத்தை எழுதச் சொன்னால்.. உடனே கணனியிலே கூகிள் போன்ற தேடற்பொறிமூலம் மாணவர்கள் சுலபமாக எழுதி சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பிக்கிறார்கள்.. 'கூகிள்' தேடலால்.. ஒரு மாணவனது சுயதேடல் குறைந்துவிட்டதே.. தேடலில்லாத மனிதச் சோம்பேறியாகிவிட்டானே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மதன் அவர்கள்.

அடுத்து விஞ்ஞான ரீதியாகவே ஒரு கருத்தைக் கூறுகிறார்.. வளியிலுள்ள ஒட்சிசன் குறைவதால்.. மனிதன் சோம்பேறியாகிறான் என்பதே அது.

ஆக, தனது வாதத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் கருத்துகளைத் தந்த மதன் அவர்களுக்கு நன்றி கூறி.. தொடர்ந்து கருத்து கூற மதுரன் அவர்களை வரவேற்கிறோம். நன்றி.

Link to comment
Share on other sites

அனைத்து கள உறவுகளுக்கும் எனது அன்பு வனக்கங்கள்!

இந்த பட்டிமன்றத்தில் இது எனது இரண்டாவது வாதம். முடலாவது வாதத்தில் நிகள்ந்த தவறிற்கு மீண்டும் கள உறவுகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு.நான் எனதுகருத்தை இங்கு கூறிட அனுமதி அளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது வாதத்தினை முன் வைக்கின்றேன்.

நடுவரவர்களே நண்பன் மதன் தலைப்பினையே தனது கருத்திற்கு ஏற்றால் போல் திசைதுருப்பிட எண்ணுகின்றார் போல உள்ளது. (நவீன தொளில் நுட்பம் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா இல்லை சோம்போறி ஆக்குகின்றதா?) என்பதுதான் தலைப்பும் கேள்வியும். சுறுசுறுப்பு ஆக்குகின்றது என்று கூறும்பொழுது அது எவ்வாறு மனிதனை சுறுசுறுப்பு ஆக்குகின்றது என்பதனை விரிவாக சொல்லவேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. அப்படி விரிவாக சொல்லுகின்றவேளையில் அதன் நன்மை தீமைகளையும் விவாதிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம். உதாரணத்திற்கு கணனியை எடுத்துக் கொள்வோமே, கணனி மனிதனின் செயல்பாடுகளிற்கு ஊக்கபடுத்துகின்றது அதனால் மனிதன் சுறுசுறுப்பு அடைகின்றான் என்று நாம் கூறினால். எதிர்த்தரப்பினர் எவ்வாறு கணனி மனிதனை ஊக்கப்படுத்துகின்றது என்னும் கேள்வியினை எழுப்புகின்ற நேரம் நாம் அதன் பயன்பாடுகள் பற்றி கூறும் பொழுது அங்கே (நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் மனிதனுக்கு நன்மையா தீமையா என்னும் தலைப்பிற்கு உட்பட்டு கிளைவாதமாக வாதம் விரிந்து செல்கின்றது. எனவே இப்போக்கினை நடுவரவர்கள் ஏற்றுக்கொண்டு எமதணியினரின் வாத ஞாயத்தினை புரிந்து கொள்ளல் வேண்டுமென நடுவரவர்களை கேட்டுக் கொண்டு.எதிர்த்தரப்பினரின் அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்கின்றேன்.

> நடுவரவர்களே எதிரணியினர் தொலைக்காட்சியில் சின்னத்திரைகளையும் பயனற்ற விடயங்களையும் தான் பார்ப்பார்கள் போலும். ஏன் செய்திகள், விபரணங்கள்,ஆய்வுக் கண்ணோட்டங்கள் இப்படி இன்னும் பல நம் வாழ்க்கைக்கு தேவைபடக்கூடிய ந்ல்லவை தொலைக்காட்சியில் இல்லையா? அப்படி நல்ல விடயங்களை மனிதன் பார்ப்பதற்கு, நாவீன தொழில் நுட்பங்கள் சுறுசுருப்பாக மனிதனை மாற்றி அவர்களின் செயல்பாடுகளையும் நேரத்தினையும் மிச்சப்படுத்துகின்றது. இன்று பல புலம்பெயர் மக்கள் தமது நாட்டிற்கு போக ஆவலினைத்தூண்டியதில் தொலைக்காட்சியின் பங்கும் சிறியளவிலேனும் உண்டல்லவா? இதை மறுக்க முடியுமா? எனவே இங்கேயும் எதிர்த்தரப்பினரின் வாதம் நிலைக்க முடியவில்லை.

> கணனி ஆற்றினிற்கும் அளப்பரிய சேவையினை யாரும் பாராட்டாமலோ இல்லை சுறுசுருப்பு அடையாமலோ இருக்க முடியாது. சிந்தியுங்கள் கணனி எவரையும் சோம்போறிகளாக்கவில்லை. மாறாக மனிதனை சுறுசுறுப்படய வைப்பதோடு நேரத்தையும் விரயமாக்குகின்றது. காலம் பொன் போன்றது என்பார்கள். அந்தவகையில் ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கக் கூடிய பொருளை இங்கே எனது வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதனால் ஈழத்திற்கு சென்றுவரும் அனாவசிய போக்குவரத்து செலவு, நேர மிகுதி. அந்த நேர மிகுதியில் என்னும் பல வேலைகள் செய்து முடிக்கப் படுகின்றது. இங்கு நான் கூறியது கணணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் பயனே. இன்னும் எவ்வளவு மனிதனை உற்சாகப்படுத்தும் நல்ல விடயங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொண்டு நடுவரவர்கள் தீர்பினைக்கூறுவது நன்று.

> இது எதிரணியினரின் அடுத்த புலம்பல். நாட்டிலே ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து விட்டு களைத்து உடல் ஆரோக்கியத்துடன் வருகின்றாராம். இங்கே நவீன விஞ்ஞானத்துடன் கூடிய மென்பொருட்களை பாவிது வேலை செய்பவர்கள் சோம்போறிகளாகி விட்டார்களாம். இது எந்த கருத்துக் கணிப்போ தெரியவில்லை. நடுவரவர்களே எதிர்த்தரப்பு நண்பர் கூறியதை கவனித்தீர்களா? அவர் கருத்தினை உடனே எழுதமுடியாமைக்கான காரணம் தேர்தல் வேலைகளின் காரணத்தினால் என்று குறிப்பிட்டார். இங்கே ஒரு மனிதன் இருபத்தி இந்து வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதற்கும். அங்கே ஒருவேலையை மட்டும் செய்பவருக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது. பல வேலை செய்யும் இவர் நோய்வாய்ப்படுவது நவீன தொளில் நுட்பத்தின் கோளாறா? இருந்தும் பாருங்கள் நண்பர் மதன் அவர்கள் தேர்தல் வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்து. கணணியில்( நவீன விஞ்னா தொளில்நுட்பம்) நடக்கும் பட்டிமன்றத்திலும் சுறுசுறுப்புடன் கருத்துக்களை முன்வைத்தார். அப்படியாயின் அதன் பொருள்தான் என்ன? நவீன விஞ்ஞானமும் தொளில்நுட்பமும் அவரை போன்ற மானிடரை சுறுசுறுப்படய வைக்கின்றது என்பதுதானே அர்த்தம்.

மதன் அவர்களின் இறுதி கருத்தினைப் பார்ப்போம்.

நீங்கள் குறிப்பிட்டவை யாவுமே உண்மைதான். நான் மறுக்கவில்லை. ஆனால், நவீன விஞ்ஞான தொழிள்நுட்பத்தினால் ஈர்க்கப்பட்டு அதன் பின் சுறுசுறுப்படைந்த பல்வேறு மனிதர்கள் தானே நவீன விஞ்ஞான தொளில் நுட்பக் கருவிகளின் துணையுடன், ஓசோன் சூழல் மாசாக்கத்தினால் வளிமண்டல மாசாக்கத்தின் காரணமாக வளியில் ஒட்சிசன் குறைகின்றதென்பதையும், இன்னும் பல தீமைகள் இதனால் விளைகின்றதென்பதையும் கண்டுபிடித்தார்கள். இல்லையேல் இந்தவிடயம் நமக்கு தெரிந்திருக்க நிஞாயம் இல்லை.

எனவே இறுதியாக நான் கூறுவது இதைத்தான். மனிதனின் இனவிருத்தியின் செயல்ப்பாடுகள்ளால். மனிதனின் தேவை அதிகரிக்கின்றது. அன்று காட்டிற்குள் சிறு கூட்டமாக வாழ்ந்தவன். இனவிருத்தி பெருகும் பொழுது. அவர்களின் தேவைகள் அதிகமாயின ஆகையால், காடுகளுக்குள் வாழ்ந்த மனிதன் நதிக்கரையோரங்களை நாடி புதிய நவீன கருவிகளைக்கண்டுபிடுத்து விவசாயம் செய்து தமது தேவைகளை பூர்த்தி செய்ததோடு. குடும்பம் என்னும் புதிய முறைதனை உருவாக்கி இனப்பொருக்கத்தை தொடர்கையில், அவனது தேவைகளை மேலும் மேலும் விரிந்தன. காலத்திற்கு காலம் அவன் விருப்பியோ இல்லை விரும்பாமலோ புதிய கண்டுபிடிப்புக்கள் அவனுக்கு தேவைப்பட்டன. அவன் தனது தேவைகளிற்கே இவற்றினை கண்டுபிடிக்கின்றான். எனவே மனிதன் சுறுசுறுப்பு அடைவதனால்த்தான் இது போன்ற புதிய நவீன விஞ்ஞான தொளில் நுட்பங்கள் உருவாகின்றன. ஆகையால் புதிய நவீன விஞ்ஞான தொளில் நுட்பங்களால் மனிதன் சுறுசுறுப்படைகின்றான் எனக்கூறி, வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். :lol:

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.