Jump to content

பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...


நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா?  

28 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

நன்றி மதுரன் அவர்களே! இறுதி நேரத்தில் வந்து அருமையாக விளக்கங்களை முன்வைத்துள்ளீர்கள்.

மதன் அவர்களின் கூற்றுப்படி விஞ்ஞானத்தின் நன்மை தீமைகளை ஆராயவில்லை... மாறாக, விஞ்ஞானம் எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம் என்கிறார் மதுரன் அவர்கள்.

அதுமட்டுமா? ஒரு வேலையிலேயே காலத்தை அழிக்காமல்.. விஞ்ஞானத்தின் உதவியினால் உற்சாகமாகப் பல வேலைகளைச் செய்கிறீர்களே.. இது ஒன்றே விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகிறது என்பதற்குப் போதாதா என்றும் கேட்கிறார்.

சின்னத் தொடர்களைமட்டுமே ஏன் பார்க்கிறீர்கள்.. உங்கள் கண்களுக்கு நல்லனவே தொலைக்காட்சியில் தெரிவதில்லையா? உடனுக்குடன் வரும் செய்திகளைப் பார்ப்பதில்லையா.. தாயக நிகழ்வுகளைப் பார்ப்பதில்லையா.. விபரணங்களைப் பார்ப்பதில்லையா.. சின்னத் திரை சின்னத்திரை என்று கற்பனைக் கதைகளுள் காலத்தைப் போக்கிவிட்டு விஞ்ஞானத்தின் மேல் ஏன் வீண் பழி போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்?

வித்தை தெரியாதவனுக்கு மண் மண்ணாகத்தான் இருக்கும்.. வித்தை தெரிந்தவனுக்கு மண் பானையாகலாம்.. சிற்பமாகலாம்.. கட்டிடமாகலாம்.. ஆக, சோம்பல் முறித்து வித்தை தெரிந்தவர்களாய் விஞ்ஞானத்தை அணுகினால்.. அது உங்களை உற்சாகப்படுத்தும் என சொல்லாமல் சொல்கிறார் மதுரன் அவர்கள்.

வளிமண்டலத்தில் ஒட்சிசன் குறைகிறது என்பதைக் கூறி, உற்சாகமடையும் வழிவகைகளைக் கண்டுபிடி எனக் கூறுவதும் விஞ்ஞானம்தானே எனக்கூறி தனது கருத்துக்களை நிறைவு செய்து.. ஒத்துழைப்பு நல்கிய மதுரன் அவர்களுக்கு நன்றி.

உற்சாகப்படுத்துகிறது என்ற அணியில் எண்மரும், சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் எழுவரும் பங்குபற்றியுள்ளார்கள்.

சிம்ரன், நிலவன் ஆகியோர் சோம்பல் காரணமாகவோ, என்னவோ வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.

ஆகவே, இத்துடன் விவாதங்கள் நிறைவுறுகின்றன. எல்லோரும் சிறப்பாக கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

இனி வருவது அணித் தலைவர்களுக்கான நேரம்.

தற்போது தனது நிறைவு கருத்துக்களை.. அல்லது கருத்தின் தொகுப்புகளை அளிப்பதற்காக, 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணித் தலைவரான வசம்பு அவர்களை கருத்துகளுடன் எதிர்பார்க்கிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கம் !

அருமையான ஒரு பட்டிமன்றத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் நிற்கின்றோம். உண்மையில் ஒரு மனிதனுக்கு உற்சாகமோ சோம்பேறித்தனமோ உளவியலில் ரீதியாகவே ஏற்படுகின்றது. இதனை எனதருமை சகபாடி குருவிகள் மிக அருமையாக எடுத்துச் சொன்னார். உதாரணமாக புதிதாக ஒரு உணவை நாம் ருசி பார்க்கப் போகின்றோம். அந்த உணவை நாம் பார்க்கும்போது முதலிலேயே எமக்கு அருவருப்பு போல் ஏதாவது தோன்றி விட்டால் அந்த உணவு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அதன் மீது நமக்கு வெறுப்புத்தான் ஏற்படும். இன்னொன்று முன்பு நாம் படித்த நரியும் திராட்சைப் பழமும் கதைதான். சிலருக்கு சில விடயங்கள் இயலாமல் போகும் போது சீ சீ அந்தப் பழம் புளிக்கும் நிலைதான். இந்த நிலையில்த் தான் எதிரத்தரப்பினர் ஏதேதோ எல்லாம் சொல்லிச் சொல்லி சோம்பலாக உட்கார்ந்துள்ளனர்.

நடுவரவர்களே நான் சற்று தலையங்கத்தை விட்டு விலத்திச் சென்றே விளக்கமளிக்க வேண்டிய நிலையிலுள்ளேன். ஏனெனில் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.

நாம் எதையாவதொன்றை இளக்காமல் இன்னொன்றை பெறமுடியாது. அதேபோல் புதிய புதிய பல விடயங்கள் நம் வாழ்வில் புகுந்து நாமும் உற்சாகமாக வாழ வேண்டுமென்றால் சில இளப்புக்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தினால் வேலைவாய்ப்புக்கள் குறைந்து மனிதனைச் சோம்பேறி ஆக்கிவிட்டது என்று சொன்னார்கள். மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வேலைவாய்ப்புக்கள் குறைந்ததற்கு நவீன விஞ்ஞானம் மட்டுமா காரணம் ?? எங்களது தவறான நடவடிக்கைகள் காரணமில்லையா ?? உதாரணமாக ஒருவர் பலசரக்குக் கடை திறந்தால் மற்றவரும் பலசரக்குக் கடைதான் திறப்பார். வித்தியாசமாக வேறு ஏதாவது கடை திறக்கலாமா என சிந்திக்க சோம்பேறித்தனம் விடாது. நன்றாகச் சொன்னார் எதிரணி இளைஞன் நவீன விஞ்ஞானம் சோம்பேறிகளை மேன்மேலும் சோம்பேறிகளாக்குகின்றனவென்ற

Link to comment
Share on other sites

வணக்கம்!

பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கையில் உற்சாக பிறவி நான் எப்படி உடனே பதில் சொல்வது என்று ஒரே ஏக்கம் இருந்தாலும் எமதணியை விட்டு விட்டு மற்ற வேலை பார்க்க நான் தயாராய் இல்லை.... எப்படியோ வந்திட்டன்

என்ன அருமை என்ன அருமை சும்மா சொல்லக் கூடாது எங்கட எதிரணியில் இருக்கவர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருப்பதை இல்லை என்றும் மாற்ற நன்றாகத்தால் முயல்கின்றனர்...நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்பொறியாக்குகிறது.... அதற்க்கு உதராணமாக எமது அணியினர் பல கருத்துக்கரளை வெளியீட்டுள்ளனர் அவர்களின் வழியோ நானும் செல்கிறேன் .. முதலில் இன்று குடும்பத்தலைவர்களின் பெரும் தலைவலியாக உள்ள சின்னத்திரை நாடககங்கள் பற்றி பார்ப்போம் இது எதனால் வந்தது? தொழிநுட்ப வளர்ச்சியால் தானே! தமது வீட்டு வேலையை செய்து தமது கணவருக்கு கடமை செய்து பிள்ளைகளை கவனித்து வந்த பல பெண்கள் சின்னத்திரை எப்ப வந்தததோ அப்போதே எல்லாத்தையும் விட்டுவிட்டார்கள். கணவன் வருவது தெரியாமல் நாடகத்தில மூழ்கி சோம்பொறிhயய் அவள் மாறிவிட்டாள்.. அதை விட இரவு 12 1 மணி வரையும் முழித்திருந்து நாடகம் பார்த்து விட்டு காலையில் வேலைக்கு போகும் கணவன் பிள்ளைகள் என்று எதையுமு; கண்டு கொள்ளமல் சோம்பொறிதனமாய் தூங்குகின்றாள்....தற்க்கு காரணம் யார்? எது? சோம்பொறிகளாய் இருந்து கொண்டு உற்சாகப்படுத்துகின்றது என்று அவர்கள் பேசுவதில் தப்பில்லை காரணம் அவர்களின் உற்சாகம் அது தான் நாங்கள் சொல்வது 'உற்சாகத்தை பற்றி" அதற்க்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாய் எனக:கு தெரியவில்லை. ஒருவர் குறிப்பிட்டார் நீங்கள் மேடையின்றி பட்டி மன்றம் நடாத்துவதாக இங்கேயும் சோம்பொறிதனம் தானே இருக்கிறது? வீட்டிலிருந்து கணனியில் இருந்து கருத்தெழுதுவது உற்சாகமா? அல்லது மேடையில் ஒலிவாங்கி முன்னே பேசுவது சோம்பொறிதனாமா? இதில் நாம் கருத்தெழுதுவது உண்மைகளை உங்களுக்கு சொல்லவே தவிர நாங்களும் சோம்பொறிகள் ஆகிவிட்டோம் என்று சொல்லவல்ல. நாங்கள் தலைப்பு மாறி பேசுவதாக ஈஸ்வர் அவர்கள் சொன்னார் ஆனால் நாங்கள் எதை தலைப்புக்கு வெளியே பேசினோம் என்று சொல்ல அவருக்கு அவரின் சோம்பொறிதனம் விடவில்லை..

சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்

சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!

இது யாரின் கைNயுழுத்து என்று தெரியுமா? வேறு ஒருவரினதும் இல்லை தொழிநுட்பத்தைபற்றி அது ஊக்குவிப்பதாய் வாதாடிய நடா அவர்களின் கையேழுத்து தமிழர்களை மட்டுமல்ல பலரை இன்று சங்கடப்படுத்துவதுடன் நின்று விடாமல் சோம்பொறிகளாக்கி கொண்டிருக்கும் இணையம் பலரை சோம்பொறியாக்குகிறது.

தொடர்ந்து......

................................................................................

நடுவரின் கருத்துப்படி சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது

................................................................................

நவீண தொழிநுட்பம் மனிதனை சோம்பொறி யாக்குகிறது. அது ஒரு பொதம் மனிதனை உற்சாகப்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்

நன்றி வணக்கம்

நிலவன்

இடையில் எதிரணி தலைவருக்கான பதில்  நான் வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்... அதனால் மட்டுறுத்தினர்களால் விடப்பட்ட ஒரு பந்தியையும் நீக்கி விட்டென்


நிலவன்

Link to comment
Share on other sites

________________________________________

கருத்து தேவை கருதி நீக்கப்பட்டுள்ளது

________________________________________

நிலவன்

Link to comment
Share on other sites

நான் சின்னவன் ஆகையால் இதுபற்றி எழுதுவதற்கு தெரியவில்லை.

ஒருவர் நாள்முழுவதும் கணணிமுன் அமர்ந்திருந்து நவீன விஞ்ஙானம்பற்றி பட்டிமன்னறம் நடாத்திக்கொண'டிருந்தால் அது அந்த விஞஙானத்தையே உருக்குலைத்துவிடும். நன்றி

Link to comment
Share on other sites

நான் சின்னவன் ஆகையால் இதுபற்றி எழுதுவதற்கு தெரியவில்லை.

ஒருவர் நாள்முழுவதும் கணணிமுன் அமர்ந்திருந்து நவீன விஞ்ஙானம்பற்றி பட்டிமன்னறம் நடாத்திக்கொண'டிருந்தால் அது அந்த விஞஙானத்தையே உருக்குலைத்துவிடும். நன்றி

தங்களது ஆலோசனைக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் நன்றி!! விஞ்ஞானத்தை உருக்குலைக்குதோ இல்லையோ.. சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உடலையே உருக்குலைத்துவிடும்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவேண்டும் நடுவர் அவர்களே நீங்கள் சிவல வேளை ஏதாவது கோவில்; சாத்திரம் பார்த்து விட்டு நாங்கள் வரமாட்டோம் என்று முடிவெடுத்து விட்டீர்கள் போல.. அது அப்படியல்ல எமக்கு சனி ஞாயிறு தினங்களில் பதிலளிக்க முடியாது காரணம் பாடசாலையில் நின்று தான் நான் கருத்தக்களத்தில் பதிலளிப்பேன்.. அதன்காரணமாகவே என்னால் பதிலளிக்க முடியவில்லை..........

நிலவன்

உங்களுடைய கருத்துப்படி உங்களைது கருத்துகளை ஏற்கிறோம். ஆனால், எல்லோருக்கும் இறுதியாக கருத்தை முன்வைக்க அணித் தலைவர்களுக்கே உரிமையுண்டு. ஆதலால் அணித்தலைவர் வசம்பு அவர்களின் தொகுப்புரைக்கான தங்களின் பதில்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.. எனவே அவற்றை இங்கிருந்து நீக்க சம்பந்தப்பட்ட மட்டுறுத்தினர்களுக்கு அறிவிக்கிறேன்..

அதாவது.. மேற்கோள்:

உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.... என்பதில் இருந்து,... ...எதிரணிக்கு வாசிக்க முடியுமா என்று கேட்டு நழுவாதீர்கள் என்பது வரையிலான கருத்துகள் நீக்கப்படுகின்றன.

மேலும், நிலவன் அவர்களின் கருத்துக்குமட்டும் அணித்தலைவர் ஏதாவது கருத்து முன்வைக்க விரும்பினால் வையுங்கள்.

அவரைத் தொடர்ந்து அணித்தலைவர் ஷியாம் அவர்கள் கருத்தை முன்வையுங்கள்.. ஷியாம் அவர்களுக்கு 2 நாட்கள் தரப்படுகிறது.. பொறுமையாக விளக்கமாக கருத்துகளை முன்வையுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

பாடசாலையில் இருந்து ஆர்வத்துடன் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட நிலவன் அவர்களுக்கு நன்றி.

தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னத்திரை வந்தாலும் வந்தது.. வீட்டிலை கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு ஆள் இல்லை.. சின்னத்திரை இரவு பன்னிரண்டு.. ஒரு மணிவரையும் சின்னத்திரையை இரசித்துவிட்டு.. சோம்பேறியாக மனைவி தூங்க.. பாவம் கணவனும் பிள்ளைகளும்..

கருத்துகளுக்கு நன்றி நிலவன் அவர்களே! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கங்கள்;

இன்றுடன் நிறைவு பெறும் இந்தபட்டிமனறத்திற்கு எனது தொகுப்புரைக்காக பொறுமையுடன் காத்திருந்த நடுவர் அவர்களிற்கும் மற்றும் எதிரணியினர் எனதணியினர் ஆகியோருக்க்கும் நன்றிகள்.

பட்டிமன்றத்தில் எனதணியினர் மிகவும் சிறப்பாக் தலைப்பிற்கேற்பமாதிரி வாதங்களை அருமையாக முன்வைத்தனர்.

எதிரணியினர்என்ன தலைப்பு என்று சரியாக விளங்காமல் தலையை விட்டு வாலைபிடித்மாதிரி வாதங்களை முனவைத்துள்ளனர் விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறதா இல்லையா என்பதை விட்டு விஞஞான கண்டு பிடிப்புக்ளைபற்றியே எழுதிகளைத்து போனார்கள்

விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறுஇ விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்10தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!! என்றுஅவர்களிற்கு எமதணியில் இளைஞன் சரியானவிளக்கம் கொடுத்தாலும் அவர்கள் விளங்கி கொள்கிற மாதிரியில்லை ஏனெனில் அவர்களிடம் சொந்த ழூளை இல்லை ஏனெனில் அவர்களால் 2+2எத்தனையென்று கேட்டாலே கூட்டிபார்க்க கருவி வேண்டும் அவர்களிற்கு.

அடுத்ததாக எதிரணியில் மழலை சொன்னார்.அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? [/coloநிலவில்மனிதன் காலடி வைத்ததால் அண்டவெளிகளிலும் குப்பை சேர்ந்ததேதவிர மனிதகுலத்திற்கு என்ன முன்னேற்றம் ஏற்பட்டது பாவம் மழலை தானே விட்டு விடுவோம்.அம்மாவின் மடியில்இருந்து சோற்றை சாப்பிடட்டும்.

அடுத்ததாக எமதணியில் நிதர்சன் விஞ்ஞானம் மனித இயக்கத்தின் முக்கிய அங்கமான கதாலைகூட விட்டுவைக்கவில்லை உணர்வுகளோடு உயிராய் இருக்கவேண்டிய காதல் இன்று விஞ்ஞானத்தால் உருக்குலைந்து போயிருக்கிறது என்பதனை அருமையாய் சொன்னார்.

அடுத்து மதன் இன்று சின்னத்திiயினால் வரும் சீரழிவுகள் பற்றி சிந்திக்க தாண்டும் விதமாக விளக்கினார். சின்னத்திரையின் தாக்கம் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை எதிரணியினர் அவர்கள் வீட்டிலேயே பார்க்கலாம். ஞாயிற்ற கிழமையானால் காலை மத்தியானம் இரவுக்கு ழூன்றுநேரத்திற்கு சேர்த்து காலையே சமைத்து வைத்து விட்டு பெண்கள் சின்னத்திரைமுன் போய் இருந்தால் இரவுவரை அசைவதில்லைகுழந்தை கத்தினாலென்ன கணவன் செத்தாலென்ன அவர்கள் கவனம் முழுதும் நாடகத்தை பார்த்து ஊச் உச் என்று உச்சு கொட்டி கொண்டிருப்பார்கள்

எமதணியில் மற்றவர்கள் விஞஙானத்தால் மனிதன் உணர்வால் சோர்ந்து போயிருக்கிறான் என்று உண்மையை கூறிக்கொண்டிருக்க உணர்வால் மட்டுமல்ல உணவாலும் மனிதன இன்றையவிஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டு சோரந்;து போயுள்ளானென்ற வியாசன் அருமையாக இடித்துரைத்தார்.

அடுத்து இன்றைய குழந்தைகளே நாளை நாட்டின் மன்னர்கள் என்பார்கள் அந்த குளந்தைகள் விஞ்ஞானத்தால் மன்னர்கள் ஆகாமல் நாழைய சோம்பேறி மன்னர்கள் ஆகி கொண்டிருக்கிறார்கள் என்று ஈழப்பிரியன் கவலையாகவும்.புனிதமான பக்தியில் கூட விஞ்ஞானம் புகுந்து சீரழித்தவிட்டதென்று சாத்திரியும் இறுதியாக வந்தாலும் உறுதியாக தனது கருத்துக்களை நிலவனும் வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.

ஆகவே நடுவர் அவர்களே நான் உங்களை வெறும் நடுவராக மட்டும் பார்க்கவில்லை நடுநிலையாளராகவும் தான் பார்க்கிறேன்.நடுநிலையென்பது வெறுமனே இரண்டு அணிகளுக்கு நடுவில் இருந்து விட்ட போவது அல்ல உண்மையின் பக்கம் நிற்பதே நடுநிலமையாகும்.அந்த உண்மை எமது பக்கமே உள்ளது. எனவே நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என நம்புவதுடன் மேலே நடந்து கொண்டிருக்கும் வாக்கெடுப்பு தீர்ப்பை பாதிக்காது என்று நீங்கள் கூறினாலும்.அது பலரின் மன உணர்வு அவர்களின் உணர்வுகளிற்கும் மதிப்பளித்த. எமதணியின் கருத்துக்களால் செய்வதறியாமல் திகைத்து போயிருக்கும் எதிரணியினருக்கும் அதன் தவைருக்கும்.உற்சாகமாய் உங்கள் தீர்ப்பை எதிர்பாரத்து காத்திருக்கும் எமதணியினர் சார்பிலும் உங்கள் தீர்ப்பை கூறுமாறு பணிவுடன் கோட்டுகொள்கிறேன் நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் உறவுகளே! 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனைச் சோம்பேறியாக்குகிறதா? உற்சாகப்படுத்துகிறதா?' எனும் பட்டிமன்றமானது, தூயா அவர்களது முயற்சியினால் யாழ்களத்தில் சித்திரை 29ம் திகதியில் ஆரம்பித்து இன்று 20ம் திகதி நிறைவடைய உள்ளது. ஏறக்குறைய ஒரு மாதகாலம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில் ஒரு பட்டிமன்றத்துக்கு இவ்வளவு நாட்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாததெனினும், ஒவ்வொருவரது சூழ்நிலைகளையும் மனநிலைகளையும் தாமதத்தின் பொருளாகக் கொள்ளலாம். கடல் பிரிக்கும் பல தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் எல்லோரையும் பயணச் செலவுகளோ அல்லது பயண ஒழுங்குக்கான கால தாமதங்களோ இன்றி, யாழ் இணையத்தில் இணைய வைத்து, ஒரு அருமையான பட்டிமன்றத்தை நிகழ்த்த வைத்திருப்பதை நோக்கும்போது ஒரு மாதம் பெரிதாகப் பேசப்படக்கூடிய காலதாமதமல்ல என்பது எனது கருத்தாகும்.

'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனைச் சோம்பேறியாக்குகிறது' என்ற அணியில் வியாசன், ஈழப்பிரியன், நிதர்சன், நிலவன், இளைஞன், நாத்திரி, மதன் ஆகிய எழுவர் ஷியாம் அவர்களின் தலைமையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியில் குறும்பன், ஈஸ்வர், குளக்காட்டான், மழலை, மதுரன், நடா, குருவிகள் ஆகிய எழுவர் வசம்பு அவர்களின் தலைமையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

வாதத்தை ஆரம்பித்த ஷியாம் அவர்கள், 'பத்திரிகை வாங்க கடைக்குச் செல்லும்போது மனிதன் பெற்ற உற்சாகத்தை கணனி கெடுத்து சோம்பேறிழயாக்குகிறது' என்றொரு கருத்தை வைத்தார். அடுத்து வந்த வசம்பு அவர்கள், 'யாழில் நிகழும் ஒரு செய்தியை கொழும்பிலுள்ளவர்கள் அறிய முதலே வெளிநாடுகளிலுள்ளோர் அறிய தொழில்நுட்பம் உதவுகிறது', 'ஒருவரை சந்திக்க இழக்கும் பயண நேரத்தை தொலைபேசியும் கணனியும் மீதப்படுத்துகின்றன', 'ஓரிடத்தில் உள்ள மருத்துவர் நெற் மீட்டிங் மூலம் வேறு நாட்டு மருத்துவரிடம் உதவி பெறமுடியும்' என்று மனிதனை உற்சாகப்படுத்தும் மூன்று கருத்துகளை முன்வைத்தார்.

அடுத்து வசம்பு அவர்களுக்கு ஷியாம் அவர்கள் பதிலளித்தாலும்.. அவரது கருத்துக்கள் பட்டிமன்ற வழமைக்கமைய கவனத்திலெடுக்கப்படவில்லை. மன்னிக்கவும்.

அடுத்து வந்த குறும்பன் அவர்கள், 'ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்' என்ற கருத்தின் மூலம் தனது அணிக்கு பலம் சேர்த்தார்.

தொடர்ந்து வந்த வியாசன் அவர்கள்.. 25 வீத நன்மைக்காக 75வீத எதிர்வினையைப் பெறுகிறோம்.. தொலைக்காட்சி மனிதனை சோம்பேறியாக்குகிறது.. மாடிப்படிகள்கூட சோமட்பேறியாக்குகின்றன என அருமையாகக் கருத்துகளைக் கூறினார். அடுத்து வந்த நடா அவர்கள் விஞ்ஞானம் மனிதனுக்குக் காட்டும் உற்சாக வழிகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.. மலட்டுத்தன்மையை நீக்குகிறது.. மின்சாரத்தை கண்டு பிடித்தான்.. அதன்மூலம் அடுக்கடுக்காக பற்பலதை கண்டுபிடிக்கிறானே.. இது உற்சாகமில்லையா என்று கேட்ட்டார்.. மலேரியா காசநோய்.. ஏன் அம்மைநோய் போன்றன வருமுன்னே தடுப்பதற்கான வழிவகையை இந்த விஞ்ஞானம்தானே தந்தது என்கிறார்.

அடுத்து வந்த சாத்திரி அவர்கள் விஞ்ஞானத்தால் சுத்தம்.. ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் போய்விட்டனவே என்றார்.. ஆச்சார அனுஷ்டானங்களை உருவாக்கியவனும் மனிதன்.. விஞ்ஞானத்தையும் உருவாக்கியவன் மனிதன்.. ஆக, விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் சீர்கெட்டு மனிதன் சோர்வடைகிறான் என்றார்.

'விவசாயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. துலாவுடன் மல்லாடி அல்லாடிய நேரம் போய் உற்பத்தியை அதிகரித்து புதுப்புது பயிர் உற்பத்திக்கு வழிகாட்டுகிறதே விஞ்ஞானம்.. அதனால் நீங்கள் உற்சாகமடையவில்லையா.. பத்து வருடங்களுகஇகு முன் வீட்டிலிருந்து எப்போது கடிதம் வரும் என ஏங்கிநின்ற நாட்கள் எங்கே.. இன்று வேலையால் வந்தவுடன் தாயக உறவுகளின் குரலை மலிந்த விலையில் கேட்குமளவிற்கு விஞ்ஞானம் வசதி செய்து உற்சாகப்படுத்துவது உங்களுக்கு தெரியவில்லையா?' என்று கேட்டார் குளக்காட்டான்.

அடுத்து நிதர்சன் அவர்கள் வானொலிகளுடன் வருகிறார்... 'கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர்.' ஆக, விஞ்ஞானம் ஊடகங்கவியலாளர்களையும் சோம்பேறியாக்குகின்றது என்கிறார்..

தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்..

தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..

சோம்பேறித்தனத்துக்கு 'ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்' என்ற விளக்கத்துடன் வந்தார் ஈஸ்வர். அதுமட்டுமா.. எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.. என அன்றைய நிலையை தொட்டுக் காட்டினார்.. தனது வாதத்தின் இறுதியில், நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே... என அருமையான கருத்தொன்றையும் கூறினார்.

ஈழப்பிரியன் அவர்கள், கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்..

'இந்த விஞ்ஞானத்தின் ஆரம்பப் படைப்பாளி யார் என்று அறியப்படாத போதிலும் புவியில் நவீன விஞ்ஞானத்தின் படைப்பாளி மனிதனே....! அப்படி விஞ்ஞான வழி வந்த மனிதன் நவீன விஞ்ஞானம் வரை அதை ஆராய்ந்து விளங்கி வளர்த்து வந்திருக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக சிந்தனை அற்றவனாக உழைப்பை அளிப்பவனல்லனவாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமா...???! இல்லை அல்லவா...! எனவே மனிதன் என்பவன் எப்பவுமே ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றானே தவிர சோம்பேறியாக செயலற்று இருக்கவில்லை...என்ற அடிப்படையை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...!

மனிதன் என்ன எந்த உயிரிக்கும் இயற்கையாக போராடக் கற்றுத்தரப்பட்டுள்ளது...அதைக

Link to comment
Share on other sites

பட்டிமன்றம் முடிவடைந்ததால் நடுவர் சோழியன் அண்ணாவின் வேண்டுகோளின் விவாதமேடை பூட்டப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.