Jump to content

புத்தரின் பெயரால்


mathuka

Recommended Posts

நன்றி... புத்தனின் பெயரால் இடம்பெறும் படுகொலைகளையும், அவலத்தினையும் சொல்ல புலிக் கொடி எதற்கு? தமிழர் என்ற அடையாளம் போதாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் அடையாளமாக புலிக்கொடி இருப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் அடையாளமாக புலிக்கொடி இருப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை யஸ்ரின். ஆனாலும் தமிழர்கள் நாம் சற்று புத்திசாலித்தனமாக செயற்ப்படுவது இன்றியமையததாகின்றது. ஈழத்தமிழர்களின் தேசியக் கொடியாக நாம் புலிக்கொடியை ஏந்துகின்ற வேளை, ஏதோ ஒரு பக்கத்தால் நமது செயற்ப்பாடுகளுக்கு கட்டுப்பாடும், எமது செயற்ப்படுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே அந்நிலையை தவிர்க்க தற்காலிகமான புலிக்கொடிகளை கண்டதெற்கெல்லாம் பவிப்பதை தவிர்கலாம் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே அந்நிலையை தவிர்க்க தற்காலிகமான புலிக்கொடிகளை கண்டதெற்கெல்லாம் பவிப்பதை தவிர்கலாம் என்பது எனது கருத்து.

வரவேற்கிறேன். நம் கொடியை அவதூறு செய்ய நாம் இடம் கொடுக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

புத்தர் சிங்களவருக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழனுக்கும் சொந்தமானவர், அதை ஏன் தமிழன் மறந்தான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிங்களவருக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழனுக்கும் சொந்தமானவர், அதை ஏன் தமிழன் மறந்தான்?

புத்தன் எப்படி தமிழனுக்கு சொந்தம் ஆவான்?

Link to comment
Share on other sites

புத்தன் எப்படி தமிழனுக்கு சொந்தம் ஆவான்?

பௌத்த மதம் அசோக சக்கரவர்த்தி காலத்தின் பின் வேகமாக இந்தியா எங்கும் பரவியிருந்தது. இதன் விழைவாக இது இலங்கைக்கும் அசோகனின் நேரடி வாரிசுகளாலேயே பரப்பப் பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த காலத்தில் தவிர்க்க முடியாமல் தமிழர் மத்தியிலும் பௌத்த மதம் பிரசித்தி பெற்றிருந்ததாக நம்பப் படுகிறது.

பௌத்த மத கட்டடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இன்னும் யாழ் கந்தர்மடத்தில் உள்ளது. தொண்ணூறுகளில் யாழ்ப்பாணம் அரசின் கைக்கு வந்த பின் இந்த இடத்தை அவர்கள் பராமரிப்பதுடன் ஏற்கனவே இருந்த சின்னங்கள் மேல் தமது அடையாளங்களை திணித்து இலங்கை முழுவதும் சிங்களவர்களே வாழ்ந்தனர், தமிழர் வெறும் வந்தேறு குடிகள் என்று நிரூபிக்க முயல்கின்றனர். (கடைசி சமாதான காலங்களில் சிங்கள மக்கள் நயினா தீவுக்கு அடுத்து கந்தர் மடத்துக்கும் சென்று வழிபட்டிருந்தனர்)

ஆகவே பௌத்த மதம் என்பது எல்லோருக்கும் பொதுவான மதமென்பதோடு அது ஒப்பீட்டளவில் உயர்வான தத்துவவியல் வளர்ச்சி கொண்ட மதம். எமது எதிரி சிங்கள பௌத்த பேரினவாதமே தவிர சிங்கள மொழியோ பௌத்த மதமோ அல்ல.

Link to comment
Share on other sites

மதங்களில் எனக்கு மிக மிக பிடித்தமானது பெளத்தம் ... நான் நிறைய பெளத்த நூல்களை விரும்பி வாசித்தவன். கடவுள் இல்லை, தன்னை உணருபவனே கடவுள் எனும் கோட்பாட்டினை வலியுறுத்தி சக மனிதனை மதிக்க கற்றுத் தரும் உன்னத மதம்....அதனை சிங்களவர் எனும் கொடூர இனத்துடன் இணைத்து பார்க்கையில் தான் பெளத்தம் மோசமானதாக நாம் நினைப்போம்

உண்மையில் சிங்களவர்கள் பெளத்த மதத்தின் சாபக் கேடுகள்.

Link to comment
Share on other sites

நிச்சயமாக இல்லை யஸ்ரின். ஆனாலும் தமிழர்கள் நாம் சற்று புத்திசாலித்தனமாக செயற்ப்படுவது இன்றியமையததாகின்றது. ஈழத்தமிழர்களின் தேசியக் கொடியாக நாம் புலிக்கொடியை ஏந்துகின்ற வேளை, ஏதோ ஒரு பக்கத்தால் நமது செயற்ப்பாடுகளுக்கு கட்டுப்பாடும், எமது செயற்ப்படுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே அந்நிலையை தவிர்க்க தற்காலிகமான புலிக்கொடிகளை கண்டதெற்கெல்லாம் பவிப்பதை தவிர்கலாம் என்பது எனது கருத்து.

இப்படி சொல்லி சொல்லியே எங்கள் வாழ்வை நாசமாக்கி போட்டியள்,

புலிக்கொடி பறக்கதானே விடுதலை வேள்வியில் எத்தனை பேர் ஆகுதி ஆகிவிட்டார்கள்.

புலிக்கொடி ஈழத்மிழரின் தேசியக்கொடி. அது ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தமானது...

விடுதலைப்புலிகள் கூட இது ஒரு தேசத்தின் கொடியாக ஆக்கப்பட்டதனால்தான் தங்கள் வீரர்களின் உடலங்களில் அதை போர்த்தி மரியாதை செய்கிறார்கள்.

தயவு செய்து குழப்பாதீர்கள். விடுதலைப்புலிகள் தங்களது நிர்வாக சின்னமாக கறுப்பு மஞ்சள் வட்டத்தில் தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற வாசகம் பொறிக்கபட்ட முத்திரையையே பாவிக்கிறார்கள்.

படத்தில் காணும் கொடி தேசக்கொடியாக அங்கீகரிக்கபட்டு அனைவரும் எமது கொடியை அறிய வேண்டும் என்பதற்காக அனைத்து இடங்களிலும் பாவனையில் உள்ளது.

Link to comment
Share on other sites

மதங்களில் எனக்கு மிக மிக பிடித்தமானது பெளத்தம் ... நான் நிறைய பெளத்த நூல்களை விரும்பி வாசித்தவன். கடவுள் இல்லை, தன்னை உணருபவனே கடவுள் எனும் கோட்பாட்டினை வலியுறுத்தி சக மனிதனை மதிக்க கற்றுத் தரும் உன்னத மதம்....அதனை சிங்களவர் எனும் கொடூர இனத்துடன் இணைத்து பார்க்கையில் தான் பெளத்தம் மோசமானதாக நாம் நினைப்போம்

உண்மையில் சிங்களவர்கள் பெளத்த மதத்தின் சாபக் கேடுகள்.

பெளத்தம் மதமல்ல. அது ஒரு தத்துவம்.

பகுத்தறிவுவாதிகள் பலர் பெளத்த கோட்பாடுகளை பின்பற்றியவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழகத்தில் பெளத்தம் இருந்தது.

உலகம் புத்தனை போற்ற காரணம் அவர் அரச வாழ்வு நிரந்தரமில்லை என போதி மரத்தை நாடியதாலேயே.

ஆனால் போதி மரம் எங்கிருந்தாலும் சில மூடர் அது பெளத்த சின்னம் என்கின்றனர்.

அசோக சக்கிரவர்த்தி யுத்தத்தின் பின் வெறுத்துப் போய் பெளத்தனாக மாறியதற்கு காரணம்

அது யாரையும் துன்புறுத்துவதை ஏற்பதில்லை என்பதாலேயே.

இலங்கையில் பண்டாரநாயக்க போன்றோர் ஆட்சிக்கு வர பாமர மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் ஒரு இனவாதத்தை உருவாக்கியதால்

நாம் பெளத்தத்தை வெறுக்கிறோம். ஆனால் உண்மையான பெளத்தர்கள் நிலை வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை தவிர வேறு எவரும் பெளத்தனாக வாழ்த்திருக்க முடியாது.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரைப் பற்றி பிரபல எழுத்தாளர்(நான் நினைக்கிறேன் பாலகுமார்)பின்வருமாறு குறிப்பிடுகிறார். சுயம்வரம் மூலம் திருமணம் முடித்து தன்னை நம்பி வந்த மனைவியை தவிர்க்க விட்டு சொந்த மனைவியிடம் கூட நேரில் சொல்ல திரணியற்று நட்ட ராத்தியில் துறவறம் பூண வெளியேறீயவர் என்று கூறுகிறார்.

Link to comment
Share on other sites

வரவேற்கிறேன். நம் கொடியை அவதூறு செய்ய நாம் இடம் கொடுக்கக்கூடாது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.